top of page

கண்மணி... என் கண்ணின் மணி -36-3

அத்தியாயம்: 36-3


ரிஷியின் இப்போதைய புதிய அறையில் ரிஷி, கண்மணி மற்றும் ரித்விகா மட்டுமே…


ரிஷி அவன் வேலையில் மூழ்கி விட… ரித்விகாவும் கண்மணியும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க… ரித்விகா தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபடி… அதில் மாற்றங்களைச் செய்தபடி… சோஷியல் மீடியாவில் பகிர்ந்தபடி அதில் மூழ்கி இருக்க… கண்மணி அவள் செய்வதை எல்லாம் பார்த்தபடி இருந்தவள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்…


“நாம இங்க எதுக்கு வந்தோம்னு ஞாபகம் இருக்கா ரிதிம்மா” என்று ரித்விகாவின் காதில் கிசுகிசுக்க…


”ப்ச்ச்… அண்ணி… அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை… நீங்க தான் ரொம்ப பில்டப் பண்றீங்க… எங்க அண்ணாக்கு ஓவர் ஹைப் கொடுத்து… ரொம்பத்தான் பில்டப் கொடுத்து பெரிய ஆளாக்குறீங்க” என்ற படி மீண்டும் தன் வேலையில் கவனம் வைக்க…


முறைத்தபடியே எழுந்த கண்மணி…


”அப்போ நான் போறேன்…” என்றவளை இப்போது ரித்விகா நிமிர்ந்து பார்க்க… உதட்டசைவில்


“கேட்டு வை… நான் வருகிறேன்” என்று கண்மணியும் சொல்ல… சரியாக அதே நொடியில் ரிஷியும் நிமிர்ந்தான்…


கண்மணி சொல்லி விட்டு… அறை வாசலை நோக்கி நடக்க… ரிஷி இருவரின் மௌன பாஷையின் காரணம் புரியாமல்… என்னவாக இருக்கும் என்று கண்மணியையே… அதுவும் அவள் கண் மறையும் வரை வேறு பார்த்தபடியே… இருக்க… இப்போது ரிஷி சரியாக ரித்விகாவிடம் மாட்டினான்…


“ம்ஹ்ம்க்கும்…. அந்தப் பக்கம் கடைசி வரை திரும்பவே இல்லை போல… நீ இன்னும் ட்ரெயினிங் எடுக்கனும்ணா… ஹீரோ பார்த்தார்னா… ஹீரோயின் மேக்னடிக் இழுத்த மாதிரி திரும்பனும்… வேஸ்ட்ணா நீ” என்று தன் அண்ணனை மொத்தமாக பங்கம் செய்ய


அதைக் கண்டு கொள்ளாமல்…


“அப்படி என்ன விசயம்… அவளும் நீயும் சைகைளையே பேசறீங்க…” என்று நிறுத்தியவன்


“அதுனாலதான் பார்த்தேன்” என்று கூடுதல் விளக்கம் தர…


அண்ணனைப் போலத்தானே தங்கையும்… அவனின் கூடுதல் விளக்கத்தை புறம் தள்ளியவள்…


“அண்ணி என்கிட்ட சைகைல பேசுனதுனால… அவங்க வீட்டுக்காரரா பொசசிவ்னெஸ் போல” தன் அண்ணனை விடாமல் ஓட்ட…


”ஊப்ப்ப்ப்ப்ப்…. முடியல ரிதி… உன் கவுண்டர்க்குலாம் பதில் கொடுக்கிற ரிஷி அண்ணா இப்போ இல்லை… இல்லைன்றத விட எனக்கு நேரம் இல்லை… என்ன விசயம் சொல்லு…“ தோல்வியை ஒத்துக் கொண்டானா???… இல்லை கண்மணியைப் பற்றிய பேச்சை திசை மாற்றினானா???… ரித்விகாவும் இப்போது அவள் அண்ணனை ஓட்டுவதை விட்டு விட்டு…


“ஒண்ணுமில்லண்ணா… சும்மா ஒரு சின்ன விசயம்… எங்க ஸ்கூல்ல எல்லாரும் எக்ஸ்கர்ஷன் போறோம்… பேர் கொடுக்க சொல்லிருக்காங்க… நானும் பேர் கொடுக்கப் போனேன்… ஆனான் அண்ணிதான்… உங்ககிட்ட கேட்டுட்டு கொடுக்கச் சொன்னாங்க… இதுக்கெல்லாம் உங்ககிட்ட கேட்க சொல்றாங்க… நான் சொன்னேன்… பேர் கொடுத்துட்டு உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு… ஆனால் விடல அண்ணி… சொல்லுண்ணா… இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன…”


”நீ எங்கேயும் போக வேண்டாம்…”


மொபைலைப் பார்த்தபடியே இதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ரித்விகா… தன் அண்ணனின் அழுத்தமான குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…


”என்ன சொல்ற… ஏன் போகக் கூடாது…”


“போகக் கூடாதுன்னா போகக் கூடாது… நீ கெளம்பு” என்ற போதே…


“என்ன ரொம்ப பண்றண்ணா… நீ சொல்லிலாம் நான் கேட்க மாட்டேன்… நான் எங்க ஸ்கூல் டூர்க்கு போக பேர் கொடுக்கத்தான் போறேன்” என்று அலட்சியமாகச் சொல்லியபடி பார்க்க…


ரிஷிக்கு எங்கிருந்து அப்படி கோபம் வந்ததோ… நொடியில் அவன் கண்கள் சிவந்திருந்தது…


“ரிதி…” என்று எச்சரித்தான்…


அவனின் முகமாற்றத்தில் ரித்விகாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும்…


“போண்ணா… நீ என்ன வேண்டாம்னு சொல்றது” என்று எழ… அவளுக்கு முன் எதோ ஒரு பொருள் பறக்க… ரித்விகா அப்படியே நின்றாள்… ஆணி அறைந்தார் போல…


----


கண்மணி வெளியில் உள்ள வரவேற்பறையில் தான் இருந்தாள்… ரிஷியின் குரல் உயர… அதைக் கேட்ட அதே கணத்தில்… வேகமாக எழுந்து அறையை நோக்கி வர… அடுத்த அறையில் இருந்த நட்ராஜ்… பார்த்திபன் அனைவருமே அங்கு வர… அப்போதுதான்… ரிஷிகேஷ் தனசேகர்… என்ற பெயர்பலகை வெளியில் வந்து விழுந்திருந்தது…


கண்மணி அதைக் கையில் எடுத்தவளாக உள்ளே நுழைய… ரித்விகா நடுநடுங்கியபடி அழுது கொண்டிருக்க… கண்மணியோ அவளைக் கண்டு கொள்ளவில்லை… மாறாக


“என்னாச்சு ரிஷி…” என்று கணவன் அருகில் போக…


“டூருக்குனுதான் அண்ணி சொன்னேன்… எங்கன்னு கூட கேட்கலை…” ரித்விகா தானாகவே ஆரம்பித்தாள் தான்… ஆனால் அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை… அண்ணணின் ஆக்ரோஷ முகம் பார்த்தவளால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் அழ ஆரம்பித்து விட… இப்போது ரிஷி


“அது எங்க வேண்டும்னாலும் இருக்கலாம்… நீ போகக் கூடாது” ரிஷி மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல…


“நான் போவேன்” அனைவரும் இருந்த தைரியத்தில் ரித்விகாவும் அடம் பிடிக்க…


“ஏஏய்ய்ய்ய்” ரிஷி உச்சக்கட்ட ஆவேசம் கொண்டவனாக மறுபடியும் மாற… சட்டென்று கண்மணி எதையோ உணர்ந்தவளாக…. ரிஷியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்… அது மட்டுமில்லாமல்…


“அப்பா… ரிதிய கூட்டிட்டுப் போங்க… நான் இவர்கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றாள் படபடப்புடன்…


மகள் வார்த்தையை எப்போது நட்ராஜ் தட்டியிருக்கிறார்… ரித்விகாவை அழைத்துக் கொண்டு வெளியேறி விட… சில நிமிடங்கள் அந்த அறையில் அப்படி ஒரு நிசப்தம்…


அவனது கைகளை தன் ஒரு கரத்தால் இறுக்கிப் பிடித்தபடியே… அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்ட… இப்போதும் ரிஷி முறைத்தான்


“கையைப் பிடிச்சு வச்சுக்கிட்டா… எப்படி தண்ணி குடிக்கிறது” அவன் சொல்லி முடிக்கவில்லை… வேகமாக அவன் கைகளை விட்டவள்… தண்ணீர் பாட்டிலை திறந்து அவனிடம் கொடுக்க… வாங்கி மடமடவென்று முழுவதும் கொடுத்தவன்… அவளிடம் கொடுக்காமல் தூக்கி எறியப் போன நொடி சரியாக அதைக் கணித்து… அவனிடமிருந்து வாங்கி மீண்டும் மேஜையில் வைத்தவள்… மீண்டும் அவன் கையை பிடிக்கவும் தவறவில்லை.. ரிஷியும் தடுக்கவில்லை… அமைதியாக அப்படியே அமர்ந்தவன்… கண்களை மூடிக் கொண்டான்…


அவன் மணிக்கட்டைப் பிடித்திருந்தவளுக்கு…. அந்தக் கைகளின் வியர்வையும் அதன் சூடும்... அவன் மனக் குமுறலில் அளவைத் தெரிவித்திருக்க…


“ரிஷி… ரிதிம்மா டூர்க்கு வரமாட்டா போதுமா… இதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா… நான் பார்த்துக்கறேன்” என்று அவனிடம் மென்மையாக அவனுக்கு புரியும்படி தன்மையாகச் சொல்ல… ரிஷி அப்போதும் பேசவில்லை… இப்போது கண்மணியும் அவனது கைகளை மெதுவாக அழுந்த… அமைதியாய் அடங்கினான் ரிஷி… கண்மணி அப்படியே அவனை சில நிமிடங்கள் விட்டாள்…


எங்கு கல்விச்சுற்றுலா என்று கூட அவன் கேட்கவில்லை எனும் போது… ரிஷியின் கவலை ’எங்கு’ என்பது இல்லை… தங்கை எங்கும் போகக் கூடாது என்றே கவலைப்படுகிறான் என்று தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டாள் கண்மணி…


அவர்கள் பள்ளி கல்விச்சுற்றுலா… ’ஊட்டி’ என்பதாலேயே கண்மணி பயந்தது… அதனாலேயே ரிஷியிடம் சம்மதம் வாங்க ரித்விகாவை அழைத்து வந்தது…


இப்போது கண்மணிக்கு அடுத்த கவலை வந்துவிட்டது… நல்ல வேளை ’ஊட்டி’ என்று சொல்ல வில்லை… சொல்லி இருந்தால் இன்னும் இவனது கோபம் எகிறி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே


“ரித்விகாவைத்தான் நான் போக வேண்டாம்னு சொன்னேன்… உன்னை இல்ல “ என்று ரிஷி மென்மையான குரலில் சொன்னான்…


கண்மணி யோசித்துக் கொண்டிருந்த பாவனையைப் பார்த்து அப்படி சொன்னவன்… இப்போது அவளைப் பார்த்து


“எங்க டூர்” என்று கேட்க…


கண்மணியோ… இப்போது இவன் கேட்பதற்கு என்ன சொல்ல என்ற ரீதியில் அவனையே பார்த்தபடி இருந்தவள்… சொல்லி ஆக வேண்டுமே வேறு வழி இல்லையே…


“ஊ….ட்…. டி” ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னவள்… கண்டிப்பாக இப்போது தான் போவதற்கும் மறுத்துச் சொல்வான் என்று எதிர்பார்த்தபடி அவனைப் பார்க்க…


அவன் முகத்தில் பெரிதாக மாற்றம் எல்லாம் வரவில்லை…


“ஓ… எப்போ” என்று கேட்க…


“அடுத்த மாதம்” என்று சொன்னவளுக்கு ஆச்சரியமே… ஆக ’ஊட்டி’ என்பதும் அவன் பிரச்சனை இல்லை… தங்கை போகக் கூடாது அது மட்டுமே…


ஆக தான் ரிஷியை ஒழுங்காக புரிந்து கொள்ள வில்லையோ…


இந்த வருத்தம்தான் கண்மணிக்கு இப்போது வந்திருந்தது… இன்னும் அவனை புரிந்து கொள்ள பழக வேண்டுமோ தனக்குள் எண்ணிக் கொண்டாள் கண்மணி…


பத்து நிமிடம் கடந்தும் இருவருமே பேசாமல் இருக்க… ஒரு கட்டத்தில் ரிஷிதான் உணர்ந்தான்… இன்னும் கண்மணி தன் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை…


அவள் எதற்காக பிடித்து வைத்திருக்கின்றாள்… என்று உணர்ந்தவன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டவனாக…


“கையை விடும்மா… நான் ஒண்ணும் பண்ணிக்க மாட்டேன்…” என்ற சொன்னவன்… அவனாக அவளிடமிருந்து கையை விலக்கவும் முயற்சிக்க வில்லை…


கண்மணியோ…


“பரவாயில்ல… ரிஷிக் கண்ணாக்கு எப்போ கோபம் வரும்னே தெரியலையே… அது போனது மட்டும் தெரியப் போகுதா என்ன…” என்ற போது… இலேசாக ரிஷி முறைக்க…


“ரிஷிக் கண்ணு… கொஞ்சம் சிரிக் கண்ணு…” என்று இவள் கடுப்பாகச் சொல்ல… இப்போது ரிஷி சிரித்து விட்டான்…


“ஹப்பா… உங்கள ’ரிஷி’ ரிஷின்னு கூப்பிட்றேனோ இல்லையோ… கொஞ்சம் ’சிரி’ சிரின்னு சொல்லியே என் வாழ்நாள் போயிரும் போல…” அலுத்த கண்மணியிடம்… இவன் இன்னுமே சிரிக்க… கண்மணியும் மலர்ந்தவளாக


“அப்படியே இந்த மாதிரியே… முகத்தை வச்சுட்டே ரித்விக்கிட்ட வந்து பேசுங்க பார்க்கலாம்… குழந்தை பயந்துருச்சு… டூர் பற்றி பேச வேண்டாம்… நான் பார்த்துக்கறேன்” என்று ரிஷியைக் கூட்டிக் கொண்டு ரித்விகா இருக்கும் இடத்திற்கு வந்தாள் கண்மணி… அப்போதும் ரிஷியின் கைகளை விடவில்லை… மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாமும் கண்மணி கவலைப்படவில்லை…


“ரித்வி…” என்று ரிஷி அழைக்க…


“போ… நான் உன்கிட்ட பேச மாட்டேன்” என்று ரித்விகா முகத்தைத் திருப்பிக் கொள்ள… ரிஷி கவலையோடு கண்மணியைப் பார்க்க…


தான் பார்த்துக் கொள்வதாக அவனிடம் சொன்னவள்… வேலன் தினகரை அழைத்தாள்…


அவர்கள் இருவரும் அங்கு வந்து சேர…


“நான் கிளம்பறேன்…” என்றவள்…


“இவர் கொஞ்சம் டென்சனா இருக்காரு… நீங்க கொஞ்சம் பார்த்துக்கங்க” என்று சொல்ல.. வேலனும் தினகரும்… கண்மணியைப் பார்த்து முறைக்கவில்லை…. மாறாக ரிஷியைப் பார்த்தவர்கள்…


“ஏன் தல… உனக்கே இது அடுக்குமா… பச்சக் கொழந்தைய விட்டுட்டுப் போனா… பார்த்துக்கச் சொல்வாங்களே… அது மாதிரி சொல்லிட்டு இருக்காங்க… ஓ… இதுதான் நீங்க சொன்ன அந்த 24x7 சர்வீஸா” என்று வேலன் சொல்ல…


தினகரோ


“அது கூட பரவால்லடா… நம்ம அண்ணாத்த முகத்தைப் பாரு… பச்சக் கொழந்த மாதிரியே வச்சுருக்காரு… மணி அக்கா சொன்னதக் கூட தாங்கிக்கலாம்… ஆனா இவர் முகத்தைப் பார்க்கும் போதுதான் முடியலடா” என்று வம்பிழுக்க..


அதைக் கேட்ட ரித்விகாவைத் தவிர… அனைவரும் சிரித்து விட… மீண்உம் அங்கிருந்த சூழ்நிலை கொஞ்சம் இயல்புக்கு மாறியது…


என்னதான் அங்கிருந்த மற்றவர்களிடம் கண்மணி பேசிக் கொண்டிருந்தாலும்… நொடிக்கொரு தரம் ரிஷியிடம் தான் அவள் கவனம் இருந்தது…


அதன் பின்… ஓரளவு ரிஷி இயல்புக்கு வந்து விட்டான் என்பதை முடிவு செய்த கண்மணியும் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தவளாக… ரித்விகாவுடன் கிளம்பினாள்…


அப்போதுதான் அதுவரை அவள் வசம் வைத்திருந்த ரிஷியின் கைகளையும் விட்டாள்… அதன் பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவள்… இப்போது தன்னுடன் வந்த ரித்விகாவை இயல்பாக்க முயன்றாள்..


“நாம இப்போ நேரா ஐஸ்கிரீம் பார்லர் போலாம்… அங்க பேசலாம்… டூர்லாம் பெரிய விசயமா…” என்றபடி… ரித்விகாவைச் சமாதானப்படுத்தியபடி… நடந்து செல்ல…


“அடேங்கப்பா… அங்க என் அண்ணாகிட்ட பேசி சமாளிக்க முடியல… என்கிட்ட இவ்வளவு பேச்சு… ஆனால் அண்ணி நீங்க சொன்னபடி அவர் எங்க பழைய ரிஷி அண்ணாவே இல்லை” என்று சொன்னபோதே… ரித்விகாவுக்கு அவளையுமறியாமல் கண்கள் கலங்கித்தான் நின்றன…


“ரிதிம்மா.. இன்னும் ஒரு மாதம் இருக்கு… ஆனால் உங்க அண்ணா ஒரு விசயம் சொன்னா… அதுக்கு காரணம் இருக்கும்னு நம்புடா” என்று பேசியபடி போக… பைக்கைக் கிளப்ப... அப்போதும் ரித்விகா முகத்தை மாற்றவில்லை... உம்மென்றே அமர்ந்தபடிதான் அங்கிருந்து சென்றாள்...


---


இப்போது பார்த்திபனும் அங்கிருந்து கிளம்பியிருந்தான்… அதே நேரம் ரிஷியைப் பற்றிய அவனது பார்வையும் மாறி இருந்தது…



அதற்கு காரணமும் இருந்தது… கண்மணியாக ரிஷியின் கைகளை விடும் வரை அவள் கைச்சிறைக்குள் குழந்தை போல ரிஷி அடங்கியிருந்த விதமும்… அவள் அவனை கையை விட்ட போது… அவன் முகம் மாறிய விதமும்…



ரிஷி கண்மணியை விரும்புகின்றான் என்பதை விட… அவளது அவனது மீதான காதலை… அவளது அவன் மீதான பாசத்தை… எத்தனை பேர் இருந்தாலும்... யாரையுமே கண்டுகொள்ளாமல் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்... ரிஷி என்ற ஒருவன் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கின்றான் என்பதைப் போல கண்மணி காட்டும் அக்கறை... என கண்மணியின் அருகாமையை ஒவ்வொரு வினாடியும் ரிஷி அவனுக்குள் ரசிக்கின்றான்… யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் அந்த நிமிடங்களை அனுபவிக்கின்றான்..


ரிஷி மறைத்தாலும் தான் கண்டு பிடித்து விட்டோமே... தன்னையே மெச்சிக் கொண்டபடி பெருமித பாவத்துடன்.... காரை எடுத்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய புன்னகை படர… ’காதல்…’ இதுவரை இந்த வார்த்தைகளுக்கான தேடலுக்கு தயாரில்லாத பார்த்திபனுன் உள்ளமும் அந்த வார்த்தைகளைத் தேடத் தயாராக ஆனதோ!!!???

----



/*


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


அனல் மேலே வாழ்கிறாய்

நதி போலே பாய்கிறாய்

ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

இதை காதல் என்று சொல்வதா?


நிழல் காய்ந்து கொள்வதா

தினம் கொள்ளும் இந்த பூமியில்,

நீ வரும் வரும் இடம்.


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


*/

2,344 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page