top of page

கண்மணி என் கண்ணின் மணி -68-3

அத்தியாயம்-68-3

/*

ஹே..ஒரு பூஞ்சோலை ஆளானதே

ஹே.ஒரு பொன்மாலை தோள் சேருதே


சிங்கார வெண்ணிலா மண் மீதிலே

சங்கீதம் பாடுதே உன் கண்ணிலே


செந்தாடும் பொன் மயில் உன் தோளிலே

நின்றாட ஏங்குதே இந்நாளிலே


காதல் தேனாறு பாய்ந்தோடும் நேரம்

ஆசைத் தேரேறி ஊர்கோலம் போகும்


அழகிய சித்திரமே மதன் கலை புத்தகமே


இளமை எழுதும் இனிய கதையை

இரு உடல் அனுதினம் எழுதட்டுமே*/




ஷோவின் விருது விழாவில் கலந்து விட்டு… விருதோடு ஹோட்டல் அறைக்கு வந்தவர்களை வெளியிலேயே நிற்க வைத்திருந்தாள் கண்மணி…


”ஒண்ணா நில்லுங்க… ஆடாமல் நில்லுங்க… அப்படியே நில்லுங்க” ரிஷியையும் நட்ராஜையும் சேர்ந்து நிற்கச் சொன்னவள்

”ஊரு கண்ணு...

உறவு கண்ணு...

நாய் கண்ணு...

நரி கண்ணு...

நல்ல கண்ணு...

நொள்ள கண்ணு...

கொல்லி கண்ணு...”


அப்புறம் இந்தக் கண்மணிக் கண்ணு… எல்லா கண்ணும் போகனும் என்று கணவன் தந்தை இருவரையும் சுற்றிப் போட… நட்ராஜோ தன் மகளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்…


முழு நிலவாக.. கூடவே ஆயிரம் நட்சத்திரங்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது போல பிராகாசித்து ஜொலித்த தன் மகளை… அவள் துள்ளலை.. மட்டுமே


இதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன்… என்ற வலையில் மொத்த நிம்மதியும் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்திருக்க… கையில் இருந்த விருதெல்லாம்.. ஒன்றுமே இல்லை… தன் அருகில் நின்றிருந்த மருமகனை… ஆயிரமாயிரம் இல்லை கோடி கோடி நன்றியோடு நோக்க…. அவனோ அவரைப் பார்த்தால் தானே….


போலியாக முறைத்துக் கொண்டிருந்தான்… போலியான அந்த முறைப்பில் கூட… கண்மணியின் மீது அவன் வைத்திருந்த காதல் மட்டுமே தெரியுமா என்ன… மகளை ரசித்தவரின் பார்வை மருமகனையும் ரசிக்க ஆரம்பித்திருந்தது…


“என் புள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்” கண்மணி வெளியில் அவர்களுக்குள் சுற்றிக் கொண்டிருக்க… நட்ராஜோ தனக்குள் தன் மகளுக்கும் மருமகனுக்கும் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார்…


“ஹப்பா…. வாங்கினது தேர்ட் ப்ரைஸ்… அதுக்கு இவ்ளோ பில்டப்பா…” என்ற போது


“தேர்டோ... செகண்டோ... அவார்ட் வாங்குனீங்களா இல்லையா… அவ்ளோதான்…. இப்போ உள்ள போங்க…” என்று இருவரையும் உள்ளே விட்டவள் கண்களிலும் முகத்திலும் அவ்வளவு சந்தோசம்… அவள் கால் வெகுநாட்களுக்குப் பிறகு… தரையில் ஒரு இடத்தில் நில்லாமல்… உற்சாகப் பந்தாக வலம் வந்து கொண்டிருந்தாள் கண்மணி…


நட்ராஜ் மகளின் அருகே வந்தவராக…


“இந்த அவார்டெல்லாம் பெரிய விசயமில்லம்மா எனக்கு… நீ…. உன்னோட முகத்துல இருக்கிற… இந்த சந்தோசம் அதுக்கு ஈடா ஏதுமே இல்லை… “ என்று மகளிடம் நெக்குருகியவர்… ரிஷியிடமும் கை கூப்பினார்…


“இவ்ளோ தூரம் என்னை நம்பி கூட்டிட்டு வந்தது…. எனக்காக இருந்தது… இப்படி ஒரு மருமகன் யாருக்குமே கிடைக்காது ரிஷி… நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவன் போல… பவித்ரா… என் பொண்ணு… நீங்கன்னு… என் வாழ்க்கைலை எனக்குக் கிடைத்ததெல்லாம் மிகப் பெரிய வரம்தான்…” என்ற போதே… ரிஷி அவர் கைகளை விலக்கி… தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்…


“மாமா… நீங்க இதை விட மிகப் பெரிய இடத்துல இருக்க வேண்டியவங்க… அது நான் சொல்ல வேண்டியதில்லை… ஆனால் இன்னும் காலம் இருக்கு… பவித்ரா அத்தை ஆசைப்பட்ட மாதிரி கண்டிப்பா நீங்க இன்னும் அச்சீவ் பண்ணுவீங்க” இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க…


ரிஷியின் அருகில் கண்மணி அமர்ந்தவளாக… இருவரின் உரையாடல்களையும்… அதாவது இந்தியா சென்ற பிறகு அடுத்து என்ன செய்வது… என்று பேச ஆரம்பித்திருக்க… அதை…. புன்னகை முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்….


அன்றிரவே மீண்டும் இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்திருந்தபடியால்……


சில நிமிடங்களுக்குப் பிறகு….


“மணி எல்லாம் நேத்தே எனக்கு எடுத்து பேக் பண்ணி வச்சுருச்சு… எனக்கு ஏதும் வேலை இல்லை… கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன் ரிஷி… நீங்களுமே” என்றவர் கண்மணியிடம் திரும்பியவர் அவளைத் தனியே அழைத்து…


“அம்மாடா… தம்பியத் தூங்கச் சொல்லு… இங்க வந்ததிலருந்து இந்த ஷோ ஷோன்னு அல்லும் பகலும் ரிஷி ஒழுங்காவே தூங்கினாரான்னு தெரியலை… இடையில ஹாஸ்பிட்டல்ல வேற… இன்னைக்காவது நிம்மதியா தூங்கச் சொல்லு… ஊருக்கு போனா இன்னுமே ஓடனும் போல… பார்த்துக்கம்மா… ” என்று சொல்ல… கண்மணியும் தலையாட்ட… நட்ராஜும் அவர் அறைக்குச் சென்று விட்டார்…


---


“என்னடி… உங்க நைனா… தனியா கூப்பிட்டு… என்னமோ சொல்லிட்டுப் போறாரு… என்ன நடக்குது” அவளிடம் வேண்டுமென்றே… வம்பிழுத்தவனிடம்….


“ஹ்ம்ம்… அவர் எங்க நைனாவா பேசலை… உங்க முதலாளியா பேசிட்டுப் போறாரு… இந்த வளர்ந்த மீசை வைத்த குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கவாம்… “ என்ற போதே


ரிஷி காலரைத் தூக்கி விட்டபடி… கைகள் இரண்டையும் அந்த சோபாவில் நீளத்திற்கு விரித்தபடி


“என் முதலாளியே சொல்லிட்டார்ல… பத்திரமா பார்த்துக்கோ… ஹான் ரொம்ம்ம்ம்ப டயர்டா இருக்கு… உடம்பெல்லாம் ஒரே வலி… மெடிசின் அப்புறம் தெரபிலாம் கிடைக்குமா… பிரிச்ஸ்கிரிப்ஷன் நானே சொல்றேன்… அந்த மெடிசின் நேம் ‘கண்மணி’ --- காம்போஷிசன்/இன்கிரீடியண்ட்ஸ் இஸ் ஹனி லிப்ஸ் அண்ட் எக்சட்ரா எக்சட்ரா… ” கண்சிமிட்டியவனின் வாயிலேயே இவள் அடி போட…


அவளின் கைகளைப் பிடித்தபடியே… அவள் அடியில் இருந்து தப்பித்தவன்


”நோ சைட் எஃபெக்ட்ஸ்னு சொன்னாங்களேடி.. இல்லை போல” என தொடர்ந்தவன்…


“24 ஹவர்ஸும் இண்டேக் பண்ணிக்கலாம்… இப்போதைக்கு மூணு வேளையும்….” என்ற போதே…


அவன் வாயை கைகளால் மூடப் போனவளிடம் மாட்டாமல் தலையை மட்டும் விலகியவன்…


“இந்தியா போனதுக்கப்புறம்… மெடிசின் அவெயிலபிலிட்டி எப்படின்னு பார்க்கனும்” என்றவன் சொல்லி முடித்துதான் அவளைப் பார்க்க


“ஹப்பா… என்ன வாய்… இது… அடங்கவே மாட்டீங்களா ரிஷி” என்றவன்….



“தங்களுக்குத் தெரியாதது தாங்கள் அறியாதது ஏதுமில்லை தங்கள் ரிஷிக்கண்ணாவிடம்… டவுட்னா டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறியா… ஆல்வேஸ் ஆம் ரெடி” வேண்டுமென்றே… அவளை நோக்கி அவள் அருகே போக… அவனைத் தள்ளி விட்டவள்… மீண்டும் அவளே அவன் அருகில் அமர்ந்தபடி…. அவனின் ஒருகையை தன் தோள்களில் போட்டபடி….அவன் இன்னொரு கையைத் தன் கைகளில் வைத்துக் கொள்ள


தன் கைகளைப் பிடித்தபடி… தன்னையேப் பார்த்தபடி தன் அருகே அமர்ந்திருந்தவளை… சில நிமிடங்கள் இவனும் புன்னகையோடு பார்த்திருந்தவன்… அடுத்த சில நிமிடங்களிலேயே… அருகே இருந்தவளை… தன் மடிக்கு இடம் மாற்றிய இருக்க… அவளும் அவனுக்குள் அழகாக அடக்கமாக அடங்கியிருந்தாள்…


கண்மணி… அவன் கரங்களை மட்டும் தான் சிறைப் பிடித்தாற்போல வைத்திருந்தாள் தன் கரங்களுக்குள் அடக்கி வைத்திருந்தாள்…… இவனோ அவளையே மொத்தமாக தன் கரங்களுக்குள் சிறைப் பிடித்திருக்க..


“மேடம்… நாம நாளைக்கு இந்தியா போகிறோம்… ஞாபகம் இருக்கா” அவனுக்கே உரித்தான மோனக் குரலில் கேட்க


“ஹ்ம்ம்…” என்று மட்டுமே அவள் குரல் வெளிவர…


அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்… “தேங்க்ஸ்” என்று திடீரென்று கூற…


கண்மணி புரியாத கேள்விக் குறியோடு பார்வையை மட்டும் அவனிடம் வீச… அது புரிந்தவனாக


”இந்த ரிஷியை… அவனோட இம்சையா… அவனோட தொந்தரவை… எல்லாவகையிலும் பொறுத்துகிட்டதுக்கு… “ என்ற போதே…


அவன் உதடுகளில் தன் சுட்டு விரல் வைத்து…. அவனைத் தடை செய்தவள்…


“சோ… நோ… தொந்தரவா இனி… திடீர்னு தேங்க்ஸ்லாம் வருது ரிஷிக்கண்ணாகிட்ட இருந்து” கண்சிமிட்டிக் கேட்க…


”சொல்ல விடுங்க மேடம்…” என்றவன் தன் உதட்டில் இருந்த அவளது விரலில் மென்மையாக முத்தமிட்டபடி…


“பொறுக்கப் போறதுக்குனு… கண்டினியூட்டி டென்ஸ்ல சொல்ல வந்தேன்… கண்மணி-ரிஷி முடியாத தொடர்கதை….” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு எழப் போக…


“ஹேய் கிளம்பனும்…. இப்பவா… கொஞ்ச நேரம் தான் இருக்கு” என்ற போதே… அவள் பேச்சை எல்லாம் அவன் கேட்டால் தானே…. ஆனாலும் கேட்டான் தான் வேறு மாதிரி


“உனக்கு அந்தக் கொஞ்சம் நேரம் பத்தாதுதான்… ஆனால் அந்த கொஞ்ச நேரம் எனக்கு என் கண்மணியைக் கொஞ்சப் போதும்…. உன் அளவுக்குலாம் நான் பேராசைப் படுறவன்லாம் இல்லை” என்று அவள் சொன்ன வார்த்தைகளையே வைத்து அவளைச் சீண்டி முடிக்கவில்லை…


“ஆ… கிள்றாளே…” என்றவன் தன் கைகளை உதறிக் கொண்டபடியே… அடுத்த நிமிடம் அவளைத் தன் கைகளில் தூக்கியபடியே எழுந்தும் இருந்தான்…


கட்டிலை நோக்கி அடிகள் எடுத்து வைத்தபடியே…


“இவ்ளோ நாள் மாடர்ன் மங்கையா இருந்த… இன்னைக்குத்தான் புடவை கட்டி… அதுவும் நம்ம கல்யாண நாள் புடவை கட்டி… “ என்றவனின் கைகள் கண்மணியின் சேலை மறைக்காத இடையில் அழுத்தமாக பதிய… அது தந்த உணர்வில்… அவளையுமறியாமல்… கண்மணியும் இப்போது அவன் கழுத்தில் கை போட்டவளாக…


“அதே கண்மணிதான்… இந்த ரிஷிக்கண்ணாவோட கண்மணிதான்… அப்போதும் இப்போதும்… எப்போதும்” என்றபடி…


“2 ஹவர்ஸ் தான்… என்னை விட்றனும்” கண்மணி ரிஷியிடம் நேரம் நிர்ணயிக்க… அவனிடமோ பதில் இல்லாமல் போக


“3 ஹவர்ஸ்... ஓகேவா” என்றவளிடம் ரிஷி முறைத்த போதே…


“கிளம்பனும் ரிஷி” சலுகையாக சிணுங்கியவளிடம்


“அதெல்லாம் டைம்லாம் சொல்ல முடியாது… ஏன்னா… ஏன்னா…” என்று வார்த்தைகளையே முடிக்காமல் அவளிடம் சில நொடி விளையாடியவன்… அவளிடம் குறும்பாக கண் சிமிட்டியவன்…


“அது என் பொண்டாட்டி மூடைப் பொறுத்தது… அப்படித்தானே என் பொண்டாட்டியே…” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்… ரிஷி கண்மணியின் மேல் அத்தனைப் பழியையும் போட்டு போட்டதும் இல்லாமல் அவளிடமே கேள்வி கேட்க…


“அடப் பாவி…” கண்மணி வாயைத் திறக்க… வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்திருந்தவன்…


“உண்மையில்லையா… என்ன” என்று இப்போது கன்னக் குழியோடு பல்வரிசை தெரிய சிரித்து வம்பிழுத்தவனை…. கண்களால் நிரப்பியபடியே அவனிடம் இன்னும் ஒன்றினாள்…


கணவனின் இந்தச் சிரிப்பு… இந்தச் சிரிப்பு மட்டுமே அவனிடம் அவள் தேடியது… கண்கள் அவனை விட்டு விலகவே இல்லை… சந்தோஷத்தில் உறைந்திருந்தவள்… அப்படியே அந்த நிலையிலேயே இருக்க முடியுமா என்ன… இருக்க விட்டு விடுவானா என்ன… அவனின் விரல்களின் சிறு எல்லை மீறலில்… அவளையுமறியாமலேயே நெகிழ வைத்திருக்க… அவனை அடக்க முடியாமல் தடுக்க…


“ரிஷி… இறக்கி விடுங்க ஃபர்ஸ்ட்…” என்று அதிகாரமாக சொன்னபடி திமிறியவளிடம்… அடுத்த நிமிடமே… தன் அத்து மீறலின் எல்லைகளை அதிரடியாக கடந்திருக்க… கண்மணி இப்போது அடங்கியவளாக


“ப்ளீஸ்… ரிஷிக்கண்ணா… இறக்கி விடுங்களேன்… உங்க அம்மு பாவம் தானே…” கண்மணியின் கெஞ்சலை எல்லாம் இலட்சியம் செய்யாமல்… கட்டிலை நோக்கிச் சென்று…. அவளை படுக்கையில் விட்டவன்… தன் கழுத்து டையை தளர்த்தியபடி… மேல்க் கோட்டைக் கழட்டியவன்…. தன் சட்டையின் மேல் பட்டன்களை விடுவித்த படியே... அவளைப் பார்த்தபடியே அவள் அருகே போனவனை… சிறிதும் தயங்காமல் கண்மணியும் தன்னோடு தாங்கி அவன் நெற்றியில் தன் இதழ் பதிக்க… கண் மூடி ஏற்றுக் கொண்டவன்… அடுத்த நொடியே… அவளின் நெற்றியில் முத்தமிட்டு… அவளிடமிருந்து விலகி… அவள் அருகே படுத்தான் பெரும் திருப்தியோடு…


தன்னவளின் சிறு இதழ் நுதழ் பதிவுதான்… ஆனால் அவளை அவனிடம் முழுமையாக ஒப்படைத்து… தன்னை முழுமையாக அவனிடம் இழக்கப்போகும் தருணங்களின் தொடக்கமாக… சம்மதமாக... அச்சாரமாகவே அந்த நெற்றி முத்தத்தைக் கொடுத்திருக்க... வழக்கம் போல மொத்தமாக அவளிடம் தன்னை இழந்திருந்தவனோ இவனாக ஆகி இருந்தான்…


சில நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி அதே நிலையில் இருந்தவன்… மீண்டும் கண் திறந்தவன்…


“கண்மணி… உன் கிட்ட பேசனும்” என்றவனின் கண்கள் கண்மணியிடம் இல்லை…. மாறாக அந்த அறையின் மேல் கூரையை வெறித்திருக்க… கண்மணியின் பார்வை மொத்தமும் அவனிடம் மட்டுமே


”தெரியுமே… சார் இவ்ளோ பில்டப் கொடுக்கறப்பவே…..” என்று அவன் புறம் திரும்பி… அவன் மார்பில் முகத்தை வைத்தபடி அவனை தலை உயர்த்திப் பார்க்க…


இப்போதும் அவன் கண்மணியைப் பார்க்கவில்லை…


“நாம இன்னைக்கு இந்தியா போறோம்… “


“தெரியும்… ரிஷிக்கண்ணா…”


“இங்க இருந்த மாதிரி “ என்றவன் இப்போது கண்மணியின் பார்வையைச் சந்தித்து… நேராகப் பார்த்து... அவள் இப்போது இருக்கும் நிலையையும் குறிப்பாக உணர்த்துவது போல


”இப்போ இருக்கிற மாதிரியும்… அங்க இருக்க முடியாது…” அழுத்திச் சொல்ல


“அ....துவும் தெரியு...மே… ரிஷிக்க்…. கண்ண்ணா” என்று ராகம் பாடியபடியே... அவன் மீசையை முறுக்கி விளையாண்டு கொண்டிருக்க…


“அம்மு” ரிஷியின் கை அவளை இறுகப் பிடித்திருக்க…


“சொல்லுங்க” என்றவளின் குரல் ரிஷியை புரிந்தவளாக மாறி இருக்க…


“என்ன ரிஷி… இந்த மண்டைக்குள்ள எதைப் போட்டு குழப்பிக்கிட்டு… உங்கள நீங்களே கஷ்டபடுத்திக்கிறீங்க… எதுனாலும் என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லி இருக்கேன்ல…” குழந்தையாக… குமரியாக இருந்தவள்… நொடியில் தாயாக மாறியிருக்க… அவளது அரவணைப்பில் ரிஷியும் பேச ஆரம்பித்திருந்தான்


“நாம… ’கண்மணி’ இல்லம்…” தடுமாறியவன்…. அவளைப் பார்க்க முடியாமல்.. அவள் பார்வையை விட்டு தன் பார்வையை விலக்கி…… மீண்டும் மேலே வெறிக்க…


இவளோ அவன் கண்களையே பார்த்தபடி இருந்தவள்… அவன் அவளைப் பார்க்காமலேயே இருக்க... அவன் தாடையை பிடித்து திருப்பி… வலுக்கட்டாயமாகத் தன்னைப் பார்க்க வைக்க… இப்போது மீண்டும் அவளைப் பார்த்தவனிடம்


“என்னாச்சு” என்னவென்று அவன் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற கட்டளையாக மாறி மாறி இருந்தது இப்போது அவள் தொணி...


“இப்போ இருக்கிற நம்ம வீட்ல தொடர்ந்து இருக்க முடியுமான்னு தெரியலம்மு… ” எப்படியோ சொல்லி முடித்து விட்டவனின்… தொண்டைக் குழி ஏற்ற இறக்கத்திலேயே… இதைச் சொல்ல அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றான் என்பதை கண்மணியும் உணர்ந்தாள் தான்…


இப்போது கண்மணி மௌனமாக இருக்க… ரிஷி தொடர்ந்தான்... தன் வார்த்தைகளை


“போய்த்தான் ஆகனும் கண்மணி… ரித்விகா ரிதன்யா… அம்மா இவங்க வசதி… அவங்களுக்காகவெல்லாம் இல்லை… அதே போல நான், என் நேட்டிவ்… அங்க இருக்கிற வீடு இதெல்லாம் சொல்லலை… நமக்காக… நம்ம வளர்ச்சில… இதுவும் அடங்கும்டா… கம்பெனி… மட்டுமில்ல… நாம இருக்கிற இடமும் கண்டிப்பா விஸ்தாரமா ஆகத்தான் வேணும்… நாம சென்னைலயே வேற வீடு பார்த்து போவோம்…” என்றவனைப் பார்த்தபடியே கண்மணி இப்போதும் அமைதியாக இருக்க…


“அம்மா.. மாமா… நம்ம குழந்தைங்க … அப்புறம் ரித்வி ரிதன்யாவுக்கு மேரேஜ் ஆன பின்னால… அவங்க வந்து போற பிறந்த வீடா… இப்படி எல்லாருக்காகவும்” என்றவனின் கண்கள் கற்பனையில் விரிய


“அப்போ நமக்கு” என்று கண்மணி கேட்க… ரிஷியின் முகம் மென்மையானது இப்போது… அதே நேரம் அவன் நிம்மதியில் பெருமூச்சு விட்டான்... மனைவி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதை உணர்ந்து


“ஏன் ரிஷி… இதுதானா… இதுக்குப் போய்தான் இவ்வளவு குழப்பமா… இவ்வளவு தயக்கமா… நீங்க எங்க இருக்கீங்களோ… நானும் அங்கேதான் இருக்கப் போகிறேன்… நீங்க எங்க போகப் போறீங்களோ அங்கே நானும் வரப் போகிறேன்… நான் ஏன் உங்களை விட்டு… இருக்கப் போறேன்.. . வர மாட்டேன்னு சொல்லப் போகிறேன்…“ என்றவளின் குரல்… சற்று கடிமாக மாறியிருக்க


”உங்கள மேரேஜ் பண்ணும் போது இந்தக் ’கண்மணி’ இல்லத்துலதான் இருக்கனும்னு ஏதாவது அக்ரிமெண்ட் போட்டேனா… இல்லை… எங்க அப்பா போட்டாங்களா…. உங்கள யாரும் அப்படி கட்டிப் போட்டு வைக்கலையே… அப்புறம் ஏன் ரிஷி இவ்ளோ சந்தேகம்… இவ்ளோ கவலை… நான் என்னைக்குமே உங்கள கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சதில்லயே… அப்படி ஏதாவது நீங்க ஃபீல் பண்றீங்களா ரிஷி… அப்படி ஏதாவது உங்ககிட்ட நான் என்னையுமறியாமல் நடந்திருக்கேனா ரிஷி” சந்தேகமாகக் கேட்டவள்… அவன் பதில் சொல்லும் முன்னேயே


“ரித்விகா சடங்கப்போ… நான் முந்திரிக் கொட்டை மாதிரி பண்ணின வேலைல… நீங்க எவ்வளவு வருத்தப்பட்டீங்க… இனி ஒரு முறை அது மாதிரி ஏதும் ஆகக் கூடாது… ரிஷி”


“ப்ச்ச்… அதுலாம் பெரிய விசயமே இல்லை… நீ என்ன நினைக்கிறியோ… அதை என்கிட்ட சொல்லனும்… நான் மனசுக் கஷ்டப்படுவேன்னு… சொல்லாமல் மட்டும் விட்றாத… நமக்கு ஒத்து வருமா.. இல்லையா.. இக்னோர் பண்ணனுமா… வேண்டாமா…. அதுனால பிரச்சனை வருமா வராதா நாம பேசித் தீர்த்துக்கொள்வோம்… அதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ” என்று கணவனிடம் வேகமாகத் தலை ஆட்டிய இந்த கண்மணிதான்… ஒரு வார்த்தை கூட அவனிடம் சொல்லாமல்… எல்லா முடிவுகளையும் அவளே எடுத்து அவனிடமிருந்து விலகினாள்…


அவளின் வேகமான தலை ஆட்டலில்… ரிஷி சிரித்தவாறே…


“நீ சொல்லலைனாலும் நான் புரிஞ்சுக்குவேன்” சொன்ன ரிஷி… சொன்னது போலவே… வார்த்தை மாறாமல்… அவளைப் புரிந்தவளாக… கண்மணி எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும்… தவிர்த்தாலும்… பிடிவாதம் பிடித்தாலும்… அவளை விட்டு விலகாமல்… அவளைத் தன் கண் பார்வையில் இருந்து விலக விடாமல் அவளுடனே இருந்தான்… ’கண்மணி’ இல்லத்தின் அதே மாடி அறையில்…


ரிஷியின் வார்த்தைகளைப் புரிந்து அவனைப் பார்த்து புன்னகைத்தவளாகத் தொடர்ந்தாள்…


“பொதுவா ஒரு பையனோட வெற்றிக்கு பின்னால் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க… ஆனால் அது கூட உங்களுக்கு பொருந்தாது,,,, ஏன்னா… உங்களுக்காக நான் ஒண்ணுமே பண்ணினது இல்லை… பண்ண விரும்பினதும் இல்லை.. உங்க ப்ரஃபெஷனல்ல எங்கேயுமே என்னோட தலையீடு இருக்கக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன் ரிஷி…… நான் உங்கள கண்ட்ரோல் பண்ணேன்னோ… இல்லை ரிஷியோட வெற்றிக்கு கண்மணிதான் காரணம்னோ யாரும் சொல்லக் கூடாது… அது எனக்கு ரொம்ப முக்கியம்… உங்க ஒவ்வொரு வெற்றியும் உங்களுக்கானதா மட்டுமே இருக்கனும்… அதுதான் எனக்கும் பெருமையே ”


“அப்புறம் இந்த ஆஸ்திரேலியா ப்ளான்… அண்ட் இந்த ஷோ… இதைப் பற்றி சொல்றதுன்னா… அப்பாவை சம்மதிக்க வச்சது... அப்புறம் அன்னைக்கு டைப் பண்ணிக் கொடுத்தேனே அவ்ளோதான் என்னோட பங்கு தவிர… இந்த ஷோவுக்கு என்னோட பங்கு 1 பெர்சன்டேஜ் தான்… “


என்றவளை ஆச்சரியமாகவும் பெருமையாகவும் பார்த்தான் ரிஷி… எதையுமே என்னிடம் எதிர்பார்க்காமல் என்னிடம் எப்படி இவளால் நடக்க முடிகிறது… அதே நேரம் அவனை நினைத்தே கொஞ்சம் வெட்கமும் அடைந்தான் என்றே சொல்லவேண்டும்… உன்னை இதற்காகத்தான்… இந்தக் காரணத்துக்காகத்தான் திருமணம் செய்தேன் என்று அவளிடமே தான் சொன்ன விதம் எல்லாம் நினைத்து…


நடந்ததை நினைத்து இனி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை… இனி நடப்பததை மட்டுமே நினைக்க வேண்டும்… முடிவோடு நிமிர்ந்தவன்…


“இந்த ரிஷியோட வெற்றிக்கு நூறு சதவிகிதம் நீ மட்டும் தான் காரணம்… நானே சொல்வேன்… மத்தவங்க சொல்ல மாட்டாங்களா... அதை விடு... நீ என் பக்கத்தில இருக்கியே அதுதான் அந்த பலம் தான் எனக்கு எல்லாமே…… எதை வேணும்னாலும் சமாளிப்பேன்… நீ மட்டும் என் பக்கம் இருந்தால்…. நீ மட்டும் எனக்கு போதும்… எவ்ளோ தூரம்னாலும் போவேன்… சந்தோசம் துக்கம்.. எதுவா இருந்தாலும் நீ என் கூட இருக்கனும்”


“கணவன் மனைவி… தாம்பத்தியம்… இதோட அர்த்தம் இப்போதான் புரியுது... இப்போ தான் ஃபீல் பண்றேன் கண்மணி… சந்தோசமோ துக்கமோ… எல்லாமே நமக்கு சரி பாதிதான்… இது உன்கிட்ட மட்டும் தான் என்னால ஃபீல் பண்ணமுடியுது… சந்தோசமா இருந்தாலும்… நீதான் அதோட உச்சம்… துக்கமா இருந்தாலும் நீதான் அதைத் தீர்க்கிற ஆதாரம்… நீ மட்டும் எனக்கு எல்லாமே ” என்றவனிடம்


“எனக்கும் என் ரிஷிக்கண்ணா மட்டும் போதும்” என்றபோதே குழந்தையாக அவனிடம் கட்டிக் கொண்டு அவள் சரணடைந்திருக்க… அவனுமே அரவணைத்துக் கொள்ள… அடுத்த சில நிமிடங்கள் இருவருமே பேசவில்லை… மௌனமே இருவரிடமும்… நிமிடங்கள் கடந்திருக்க… கண்மணி அவனை விட்டு விலக முயற்சிக்க… ரிஷி யோசனையாகப் பார்க்க….


“ரிஷி…” என்றபடி அவன் கையணைப்பை எடுத்தவள்… அவனை விட்டு எழுந்து அமர்ந்திருந்தாள்… கூடவே அவனையும் கைப்பிடித்து எழுப்பி தன் அருகே அமர வைத்தவள்…


“உங்களுக்கு எப்போதுமே… இந்த சந்தேகம் அது ஏன்னே எனக்குத் தெரியலை… அதை இன்னைக்கு நிவர்த்தி பண்ணிறலாம்… ஹ்ம்ம்ம் அப்புறம்… உங்களுக்கு பிறந்த நாள் பரிசா எதுவும் நான் தரலைதானே… அதையும் இப்போ கொடுத்துறலாம்” என்ற போதே


“அப்போ… இந்த 12 நாள் … அது கிஃப்ட் இல்லையா அம்மு” குறும்பாகக் கேட்ட போதே


“நான் உங்களுக்கு கிஃப்ட்டா” என்று அவன் வாயிலேயே செல்லமாக அடிக்க…


“நீ இல்லை… ஆனால் “என்று அவள் உதட்டைப் செல்லமாக தன் புறமாக இழுத்தவன்…


“மிஸ் கண்மணி… மிஸ்ஸை எனக்காக மிஸ் பண்ணி,… மிஸஸ்ஸா மாறினதுக்கு” என்றவனை முறைத்தவள்…


”மிஸ் கண்மணி மிஸஸ் ரிஷிகேஷா உங்ககிட்டதான் மிஸ் ஆக முடியும்… அதெல்லாம் டிஃபால்ட்… இப்போ கண்ணை மூடறீங்களா ஆர்கே” என்றவளிடம்…


“என்னடி… திடிர்னு… ரொமாண்டிக்கா ஏதாவது பண்ணப் போறியா” என்று அவள் அருகே மெல்லப் போக… அவனைத் தள்ளிவிட்டவள்…


“பக்கத்தில வரக் கூடாது… தள்ளி உட்காருங்க… அப்புறம் என்னைத் தொடக் கூடாது” என்று இவளுமே அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள்... அவன் இன்னுமே கண்ணை மூடாமல் இருப்பதைப் பார்த்து


“ஹ்ம்ம்… கண்ணை மூடுங்க…நான் கிஃப்ட் கொடுத்து முடிக்கிறவரை கண்ணத் திறக்கக் கூடாது…” கறாராகச் சொல்ல… ரிஷியும் புன்னகையோடே கண்களை மூட


”என்ன ஃபீல் பண்றீங்க… நான் உங்களத் தொடலை… நீங்களும் என்னைத் தொடலை… நான் உங்க பக்கத்தில இருக்கிறத ஃபீல் பண்றீங்களா,,,”


”ஹ்ம்ம்…” கண்ணை மூடியபடியே ரிஷி சொல்ல..


“உங்களுக்கு கோபம் வந்தா…. எந்தக் கையை அடிக்கடி ஹர்ட் பண்ணிக்குவீங்க…. லெஃப்ட் ஆர் ரைட்… அந்தக் கையை நீட்டுங்க”


ரிஷி தன் வலது கையை நீட்ட… அவனின் முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியை… தன் சிறு விரல் கூட அவன் மீது படாமல் அவன் முழங்கை வரை மடக்கி விட்டவள்…


“நான் உங்க கண் பார்வைல இல்லை… ஆனா என்னை ஃபீல் பண்றீங்களா ரிஷி” கண்மணி கேட்க


“என்னடி… மாயஜாலம் காட்டிட்டு இருக்க” கண்களை மூடியபடியே ரிஷி நக்கலாகக் கேட்க…


“ஷ்ஷ் ஷ் ஷ்” என்று கண்மணி அவள் உதட்டில் கை வைத்து சொல்ல…


கண்மணியின் விரல் மென்மையை தன் உதட்டின் மேல் இவன் உணர்ந்தான்… அதே நேரம் அவள் இதழின் மென்மையையும் இவன் விரல் உணர்ந்தாற்ப் போலப் பிரமை… உணர்வுகளுக்கு இந்த அளவு சக்தியா...??? ஆச்சரியமாக ரிஷி கண்களை திறக்கப் போக…


”ரிஷிக்கண்ணா… கண்ணைத் திறக்கக் கூடாது…” என்ற போது ரிஷி முழுவதுமாக அவள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தான்…


”இப்போ என் கிஃப்ட்…. கையைக் காட்டுங்க… இது எப்போதும் உங்க கூடவே இருக்கும்… எப்போதுமே நீங்க ஃபீல் பண்ணுவீங்க” அவள் சொன்ன போதே ரிஷி சட்டென்று அவள் முன் நீட்டியிருந்த கையை தன் புறம் இழுத்தவன் இப்போது கண்களைத் திறந்தும் இருக்க… அவன் முகத்தில் சட்டென்று ஒரு அதிருப்தி பாவம் வந்திருந்தது… வேகமாக அவளது கையைத்தான்… அதில் இருந்த பொருளைத்தான் அவன் கண்கள் தேடின…


“ஏதாவது சாமிக் கயிறு… அந்தக் கயிறுன்னு… கட்டிவிடப் போறியா… ப்ச்ச்… அதெல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும் தானே உனக்கு” என்றபடியே அவள் கைகளைப் பார்க்க… அவள் கைகளிலோ அப்படி ஏதும் இல்லாமல் இருக்க…. ‘பிறகு என்னவாக இருக்கும் …’ இப்போது புரியாமல் விழித்தான் ரிஷி….


“கண்ணை மூடுங்க… மூடுங்கன்னா மூடுங்க” அவள் சொன்ன விதத்தில் இவன் மீண்டும் கண்களை மூட…


அவன் வலது கை மணிக்கட்டில் கயிறு கட்டுவது போலச் கைகளால் சுற்ற… அவளின் தொடுகை இல்லாமலேயே ரிஷி அதை உணர்ந்தான்…


“என்ன பண்றேன் ரிஷி….” கண்மணி கேட்க


ரிஷி பதில் சொல்லாமலேயே சில நிமிடங்கள் இருந்தவன்


“என்னடி காத்துலயே… கயிறு கட்ற…” ரிஷி இதழ் சுழிப்புடன் கேட்க


“இன்விசிபிள் டச்… நீங்க ஃபீல் பண்றீங்கதானே… அது போதும்…”


”நீங்க ஹர்ட் ஆகும் போதெல்லாம் இப்போ நான் கட்டி விடற இந்த இன்விசிபிள் பேண்ட் உங்கள கண்ட்ரோல் பண்ணும்… இதுதான் என் சார்பா உங்க பிறந்த நாள் பரிசு…”


“ஹ்ம்ம்... இது ஃபர்ஸ்ட் முடிச்சு… நான் உங்க பக்கத்தில இருந்தால் கூட… உங்களை தொடுற தூரம் இருந்தால் கூட… அப்போதும் உங்களக் கண்ட்ரோல் பண்ணும்… ”


“அடுத்து இது செகண்ட் முடிச்சும் போட்டுட்டேன்..… நான் உங்க பக்கத்தில இல்லாதப்போ…. இந்த நாட் உங்கள கண்ட்ரோல் பண்ணும்”


”அடுத்து தேர்ட் ஒன்…. இது… கொஞ்சம் ஸ்ட்ராங் ஒன்…. மே பி… இது அல்ரெடி நமக்கிட்ட இருக்கிற இன்விஸிபிள் பாண்ட் தான்…” அவள் சொல்லச் சொல்ல ரிஷியின் தேகம் இறுகியது… அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்பதையும் உணர்ந்தான் தான்…


கேட்கப் பிடிக்காத ஒன்று என்பதுமாக இருக்க.... அவன் கைகள் அவனையுமறியாமல் நடுங்க ஆரம்பித்திருக்க


கண்மணியும் அவனை உணர்ந்தவளாக… அவனை நிமிர்ந்து பார்த்தவள்…


”ரிலாக்ஸ் ரிஷிக்கண்ணா.. நெகட்டிவா நானுமே சொல்ல விரும்பலை…. பாஸிட்டிவா சொல்றேன்… இந்த ஜென்மம் இல்லாமல்… எவ்ளோ ஜென்மம் நாம எடுத்தாலும்… நான் உங்ககூட உங்க பக்கத்தில இருப்பேன்…. இந்த கனெக்‌ஷன் நிரந்தரமான ஒண்ணு…. உங்களத் தேடி வருவேன்… இல்லை நீங்க என்னைத் தேடி வருவீங்க… நாம பிரியவே மாட்டோம்… எப்போதுமே உங்க கண்மணி… அவ மனசு உங்க பக்கத்துலேதான் இருக்கும் உங்களையே சுத்திட்டு இருக்கும்னும் நம்பனும்… அதை மட்டும் நீங்க ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணனும்… மூணாவது முடிச்சும் போட்டுட்டேன்... அவ்ளோதான்... நான் எப்போதுமே உங்க கூடத்தான்... இருப்பேன்னு நம்புவீங்களா... இப்போ கண்ணைத் திறங்க” சொல்லி முடிக்கவில்லை... ரிஷி சட்டென்று கண்களைத் திறந்தவன்… அவளைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொள்ள…


அவள் வார்த்தைகளில் அவன் கண்கள் சிவந்திருக்க… இலேசாக நீர்ப்படலமும் அந்த செம்மையில் கலந்திருக்க… துடைத்துவிட்டவளாக…


“இனிமேல் நீங்க எப்போ பார்த்தாலும்… என் கூட இருப்பியா… என் கூட வருவியான்னு… இனி ஒரு தடவை கூடக் கேள்வி கேட்கக் கூடாது… எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது ரிஷி… நான் என்னைக்காவது உங்க மேல அப்படி சந்தேகப்பட்டிருப்பேனா ரிஷி…” அவனின் அணைப்பை அவளாகவே இறுக்கியவளாக…


“ஆனால் நீங்க மட்டும் ஏன் இன்செக்யூராவே ஃபீல் பண்றீங்கன்னு யோசிச்சேன்… அப்போதான் ஒண்ணு புரிந்தது… நீங்க என்னை எந்த அளவுக்கு உங்க கண்ட்ரோல்ல வச்சு சேஃபா உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துக்கிட்டீங்களோ… அதே மாதிரி நானும்… உங்கள சேஃபா ஃபில் பண்ண வைக்கலையோன்னு எனக்கு கில்ட்டியா இருக்கு” ரிஷி நம்ப முடியாத பார்வையைப் பார்க்க…


“ஆமாம் ரிஷி… உண்மைதான் ரிஷி… நீங்க இந்த ஆறு வருசமா என் பக்கத்தில இருக்கீங்க… ஆனால் அதுக்கு முன்னாடி என் கூட இருந்தீங்களா… இல்லைதானே… ஆனால் நான் பட்ட ஒவ்வொரு கஷ்டத்திலயும்… எப்படி தப்பிச்சேன்னு எனக்கே தெரியாது கடைசி நேரத்துல எப்படி நான் சேஃபா ஆனேன் அதுவும் எனக்கு தெரியாது… எப்படி ரிஷி… எந்த ஜென்மத்திலேயோ… நீங்க என்னை உங்க அன்பால கட்டிப் போட்ருக்கீங்க... அதை மீறி என்னை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு... என்னோடான உங்க பந்தம் இருந்திருக்கு... இப்போ உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்லலாம்… நான் சொல்றதுலாம் காமெடியா கூட இருக்கலாம்… ஆனால் இதுதான் உண்மை... அதுதான் இப்போ இந்த ஜென்மத்திலயும் தொடருது… இதோ இப்போ என்னை உங்களோட என்னைச் சேர்த்துக் கிட்டீங்க…


நான் பிறந்தப்போ… சின்ன வயசுல காந்தம்மா பாட்டி கூட அவங்க ஏரியால இருந்தப்போ… அப்பாகிட்ட வந்தப்போ…. அந்த மருதுவை நம்பினப்போ… அவனால ஏமாந்தப்போ… கிட்டத்தட்ட ஆபத்தோட கடைசி விளிம்பு முனைக்கு போயிட்டு வந்தப்போதெல்லாம்… ஏதோ கண்ணுக்கு தெரியாத… சக்தி என்னைக் காப்பாத்திட்டே இருந்துச்சு… என்னோட வில்பவர்னு சொல்லி நான் இது நாள் வரை எனக்குள்ள சொல்லிட்டு இருந்தேன்… அது இல்லைனு இப்போ சொல்வேன் ரிஷி…


அதே போல… அர்ஜூன்கிட்ட என்னையுமறியாமல் அவர்கிட்ட என் மனசு போனப்போ… ஜஸ்ட் 4 மணி நேரமோ இல்லை 5 மணி நேரமோ தான்… நான் உங்க கண்மணியா இருந்துருக்க மாட்டேன்… கண்டிப்பா அதை நீங்க ஃபீல் பண்ணிருப்பீங்க ரிஷி… நீங்க சொல்வீங்களே என் உயிர் உன் கண்மணில இருக்குனு… அது உண்மைனா…. ஆனால் அந்த சில மணி நேரம் நீங்க துடிச்சிருப்பீங்க ரிஷி…. ஆனால் உங்களுக்கே புரிஞ்சிருக்காது… மற்ற கஷ்டம்லாம் நானே என் வில்பவர்ல தாண்டி வந்ததுனால நீங்க ஃபீல் பண்ணியிருப்பீங்களான்னு தெரியாது… ஆனால்… இது நானே நானாக இல்லாத நிமிடங்கள்… என் ரிஷியை விட்டுட்டு வேற இடம் நோக்கி போக இருந்த நிமிடங்கள்…. அர்ஜூனோட அன்பு… அம்மாவோட ஆசை.. இந்த ஸ்ட்ராங்கான பாண்டிங் எல்லாம் உடைச்சு உங்க கூட என்னை தக்க வச்சுக்க கண்ணுக்குத் தெரியாத அப்போ புரியாத நம்ம உறவுக்காக நீங்க போராடிருப்பீங்க.. ரிஷி” கண்மணி தீவிரமான குரலில் பேசிக் கொண்டிருக்க...


இப்போது ரிஷியோ அவளுக்கு மாறான முகபாவத்தில் ….


“செமையா கதை சொல்றடி… கையைப் பாரு…. புல்லரிச்சுருச்சு… ஆர்ட்டிக்கிள்… ரொமான்ஸ் நாவல் எழுதுறதை எல்லாம் விட்டுட்டு பேசாமல்… ஃபேண்டசி நாவல் ட்ரை பண்ணு… அதுதான் உனக்கு செட் ஆகும் போல… நம்ம குழந்தைகளுக்கும் யூஸ் ஆகும்“ அவளைக் கிண்டலடிக்க ஆரம்பித்திருக்க... கணமணி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்


“என்ன வேணும்னாலும் சொல்லிக்கங்க… கிண்டல் பண்ணிக்கங்க… அதுக்கெல்லாம் நான் ஃபீல் ஆக மாட்டேன்… ஆனால் எனக்குத் தெரியாது… உங்க லவ் மாதிரி என்னோட லவ்வையும் நான் ஸ்ட்ராங்க் ஆக்கனும்… என் லவ் அந்த அளவுக்கு ஸ்ட்ராங்க் இல்லையோன்னு தோணுது…. அதுதான் அத்தைப் பொண்ணு மாமா பொண்ணுனு… அங்க இங்கன்னு… எப்படி எப்டியோ சுத்தி… என்கிட்ட வந்து சேர்ந்துருக்கீங்க… இனி அது மாதிரி ஆகக் கூடாது… புரிஞ்சுதா…” என்றவளின் உரிமைக் கோபத்தில் சிரித்தவன்... உச்சத்தலையில் தன் நாடியை வைத்தபடியே… அவளை இன்னும் இறுக்கிக் கொண்டவன்…


“போன ஜென்மத்திலயும் நீ எனக்கு... நான் உனக்குனு இருந்திருப்போமா… என்னவா இருந்திருப்போம்… அதுக்கும் ஒரு கதை சொல்லேன் அம்மு… ” அவன் கேட்ட விதமே அவன் இன்னும் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றான் என்று கண்மணிக்குப் புரிய….


“ரிஷி…” என்று இழுத்தவளிடம்


“என்ன ரிஷி… இதைலாம் உன் கதைல எழுது அம்மு… செமையா போகும்.. இப்போ என்னை ஆளை விடு… இந்தக் கதைலாம் கண்மணி இல்லத்துல வந்து சொல்லேன்... இப்போ டைம் இல்லடா”


வேண்டுமென்றே அவளைச் சீண்டினாலும்… அவனுக்குமே சில உணர்வுகள் வந்து சென்றனதான்… குடிபோதையில் கண்மணியைப் பார்த்த அன்றைய தினம்… அந்த நள்ளிரவில் நடு ரோட்டில் அவன் கண்ட அவளது பார்வை… அவளை விட்டு விலகிச் செல்ல நினைத்து தாண்டிச் சென்றவன்… மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து அவளிடமே வந்து நின்ற நினைவுகளும் வராமல் இல்லை… விக்கி போன் செய்த போதுதான் தன் நிலைக்கே வந்து நட்ராஜ் மகள்… கண்மணி… என்று உணர்ந்து காரை அவள் முன் நிறுத்தி இருந்தான்… அன்றைய ஞாபகத்தில் இப்போதும் கண்மணியைப் பார்த்தான் ரிஷி…. ரிஷியின் ஆராய்ச்சிப் பார்வையை எல்லாம் உணராதவளாக…


“நம்பலைனா போங்க… நீங்களும் ஒரு நாள் இதை ஃபீல் பண்ணுவீங்க… டெஸ்டினின்னு சும்மா சொல்லலை ரிஷி…. அன்னைக்கு கூட நான் உங்களப் பார்த்தேன்… அப்போ மகிளா கூட உங்களோட இருந்தாங்க… நான் அர்ஜூன் கூட கார்ல போனப்போ உங்கள தனியாவும் பார்த்தேன்… நீங்க ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தீங்க… கைல சிகரெட் கூட இருந்துச்சு… எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” ரிஷிக்கு அன்றைய ஞாபகம் நன்றாகவே இருந்தது… மறக்கக் கூடிய இரவா அது… ஆனால் கண்மணியினால் அல்ல… அன்றைய இரவு… சென்னையில் இருந்து அவன் தனது ஊருக்குச் சென்ற இரவு… மறக்க முடியுமா என்ன…


அன்றைய திடீர் மனக்கவலையை… அதனால் ஏற்பட்ட அவன் தலைவலியை அவன் கண்மணியோடெல்லாம் இணைத்துப் பார்க்கவில்லை… மாறாக தனக்கு… தன் தந்தைக்கு… தன் குடும்பத்துக்கு நடந்த நிகழ்வுகளோடே இணைத்துப் பார்த்திருந்தான் இதுநாள் வரை… இன்று கண்மணி சொன்னபோது உண்மையோ என்றும் தோன்றியது… காரணம் அவனைப் போட்டு பாடாய்ப்படுத்திய தலைவலி சில மணி நேரங்களுக்குப் பின் இருந்த இடம் தெரியாமல் போனது இப்போது ஞாபகத்துக்கு வந்திருக்க… அவனுக்குமே இன்று ஆச்சரியமாக இருந்தது…


ஆனால் அதை விட கண்மணியைப் பற்றிய கவலைதான் வந்திருந்தது ரிஷிக்கு…. ஒரு சின்ன விசயம்… அது கூட மறக்காமல் வைத்திருப்பவள்… எப்படி அவள் கடந்த காலத்தை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இயல்பாக இருக்கிறாள்… இருக்க முடிகிறது…


ரிஷியின் கரங்கள் அவளை விட்டு அனிச்சையாக தளர்ந்தது… அவன் முகமே மாறி இருக்க…


”இப்படி சின்னச் சின்ன விசயத்தை… அதாவது நான் அப்போ உனக்கு சின்ன விசயம் தானே… என் கைல சிகரெட் இருந்தது வரை நீ நோட் பண்ணிருக்கேன்னா… நீ எப்படி கண்மணி… ” என்று இடைவெளி விட்டவன்...


“எல்லாம் மறந்து இந்த அளவுக்கு இருக்கேன்னு… எனக்குத் தெரியலை…”


“நான் எல்லாம் மறந்துட்டேன்னு யார் சொன்னது ரிஷி… கடந்து வந்துட்டேன்னு வேணும்னா சொல்லலாம்” உடனே பேச்சையும் திசை மாற்றி இருந்தாள் கண்மணி…


“அதெல்லாம் விடுங்க…. சென்னை போன பின்னால உடனே வீடு பார்க்க வேண்டாம்… நாம கட்டுவோம்… ஓகேவா… அதுல இருக்கிற ஒவ்வொரு கல்லும்… நம்ம பேரை சேர்ந்தே சொல்லனும்… அப்புறம் நம்ம ரூம்ல டபுள் ஹார்ட் பேட்டன் தான்… மத்ததெல்லாம் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்… ஆனால் நம்ம ரூம் ப்ளான் நான் சொல்றபடிதான் இருக்கனும்…” அவனது மனநிலையை சட்டென்று மாற்றி இருந்தாள் அவன் மனைவி…


“சரிடா… என் அம்மு நீ சொல்லிட்டா அப்பீல் இருக்குமா” இப்போது ரிஷி நார்மலாகி இருக்க… கண்மணி அவனிடம்


“அப்புறம்… ரிதன்யா மேரேஜ்…. அத்தை அன்னைக்கு பேசினாங்க… ரிது நீங்க சொல்ற பையனத்தான் மேரேஜ் பண்ண ஆசைப்படுறான்னு”


ரிஷிக்கு மனதில் எச்சரிக்கை ஒலி அடிக்க ஆரம்பித்திருக்க… அந்த மோன நிலையிலும் கவனமுடன் கண்மணியைக் கையாள ஆரம்பித்திருந்தான்….


“ஹ்ம்ம்… நான் பார்க்கிற மாப்பிள்ளையானாலும்.. அவளுக்கு அதுல பரிபூரண திருப்தி இருக்கனும்… அது மட்டும் உறுதி” ரிஷி அழுத்தமாகச் சொல்ல


”புரியுது ரிஷி… ஆனால் நீங்க நம்புனா… உங்களுக்குத் திருப்தினா போதும்னு ரிது நினைக்கிறாங்க… நான் கூட அப்படி இருந்தேனான்னு சொல்ல முடியாது… எங்க அப்பா உங்கள கை காட்டினப்போ… ஜஸ்ட் ப்ளைண்டாத்தான் ஓகே சொன்னேன்… உங்க மேல நம்பிக்கை இருந்துச்சோ இல்லையோ என் மேல நம்பிக்கை இருந்துச்சு… சமாளிப்பேன்னு…” என்றவள்… அவன் முறைப்பில்


“அப்போ… அன்னைக்கு… இப்போ… அப்படி இல்லை” கிசுகிசுப்பான குரலில் சமாதான உடன்படிக்கைக்கு உடனே வர…… மீண்டும் சரி ஆனவன்…


“நம்ம கதைக்கு அப்புறமா வருகிறேன்… சொல்லு… ரிதன்யா விசயமா ஏதோ சொல்ல வந்தியே… அதைச் சொல்லி முடி” கண்மணியை நோக்க


“நம்ம ராஜம் மேடம் பையன்… சரி சரி முறைக்காதீங்க… சுற்றி வளைத்து சொல்லலை பார்த்திபன் தான்… பார்த்திபன் பற்றி என்ன நினைக்கிறீங்க… தெரிந்தோ தெரியாமலோ… உங்க அப்பாவைப் பற்றி… ஹர்ஷித் பற்றி அவருக்கு எல்லாமே தெரியும்… ரிதன்யாவுக்கும் பொருத்தமா இருப்பார்… எல்லா வகையிலும்”


ரிஷி அமைதியாக இருக்க…“இது என்னோட ஒப்பீனியன்… நாட் அ கம்பெல்ட் ஒன்…. “ அவனின் அமைதியில் கண்மணி தன் மனதையும் சொல்ல


“ஹ்ம்ம்… தேங்க்ஸ்… ஆனால் ரிதன்யாவுக்கு பார்த்திபன் ஓகேன்னு தோணலை கண்மணி… எனக்கே அப்படி ஒரு ஃபீல் வரலை… மே பி பார்த்திபனுக்கு ஹர்ஷித் பற்றி தெரிஞ்சதுனால உனக்கு தோணிருக்கலாம்… இந்தப் பேச்சை இனி எடுக்க வேண்டாமே...” என்றவனிடம் கண்மணியும் தலையாட்டினாள்....


“இப்போ ரிதன்யாவுக்கு எப்படி வரன் பார்க்கலாம்ன்றது முக்கியாமாடா அம்மு.. ” என்றவன்


“என்ன சொன்ன… உங்க அப்பா சொன்னபோது… ஜஸ்ட் ப்ளைண்டாத்தான் ஓகே சொன்னேன்னு சொன்னேல்ல…. அதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்” என்றபடி அவன் கரம் அவளிடம் தன் வேலையைக் காட்ட… வேகமாக அவனை விட்டு தள்ளி விலகியவளாக…


“ரிஷி… உண்மையைதான் சொன்னேன்… ஆனால் அப்போ அப்படி.. இப்போ இல்லைனு சொன்னேன்… ” என்ற போதே… அவன் அருகில் வந்து அவளைத் தனக்குள் கையகப்படுத்தி… அவனின் ஆளுமையை ஆரம்பிக்க


“டெஸ்டினி… அப்புறம் உங்க பாண்டிங்… இ…தெ….ல்லாம் சொன்…..னேனே….” தண்டனை என்ற பெயரில் அவன் கொடுத்துக் கொண்டிருந்த இனிமையான அவஸ்தைகளை எல்லாம் தாண்டி சொல்ல முயன்றாலும்… அடுத்த வார்த்தைகளை அவளிடமிருந்து ரிஷி வர விட்டால் தானே…. அடுத்த சில மணி நேரங்களுக்கு அவன் பெயரை மட்டுமே அவள் உச்சரிக்க அவளுக்கு அனுமதி அளித்திருந்தான் ரிஷி....


----


ஆஸ்திரேலியாவில் சந்தோசம் மட்டுமே… அந்த இரண்டு வாரங்களும்… அவர்கள் மட்டுமே… ரிஷிக்கு கண்மணி… கண்மணிக்கு ரிஷி… என இருந்தவர்கள் இங்கு வந்த போது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி இருக்க… எந்த சுணக்கமும் இல்லை வருத்தமும் இல்லாமல் ஏற்றபடி சந்தோசமாகத்தான் இருந்தனர்…


ஆனால் ரிஷி… பழைய ரிஷியாக இருந்தானா????…. கேள்விக் குறியே… கண்மணியோடு கூட இருக்கவில்லை என்றாலும்… கண்மணியிடம் மட்டுமே அவன் முழுக்கவனமும்…


ஆதவன் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டான் என்ற பிறகு… இன்னுமே மனைவியைச் சுற்றி அரண் அமைத்திருந்தான்… கண்மணி அவனின் பலவீனம் என்பது பார்க்கும் அனைவருக்குமே நன்றாகவேத் தெரிய ஆரம்பித்திருக்க… ரிஷிக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை…


குலதெய்வம் கோவிலுக்கு செல்லக் கேட்டபோது மறுக்காமல் சரி என்று சொன்னது கூட அங்கு பாதுகாப்புக்குப் பிரச்சனை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே…


இப்போது… இன்று… துரைக்கு தன் கையால் முடிவையும் கொடுத்தவனுக்கு… அவன் மனைவி அவனருகில் இருக்கவேண்டும்… அவ்வளவுதான்… காரணம் எல்லாம் அவள் கேட்கக் கூடாது…


“ரிஷிக்கண்ணா” அவன் காதருகே கண்மணியின் குரல்… நிமிர்ந்தான் ரிஷி… அதே கோபத்தோடுதான் அவளைப் பார்த்தான்



/*

ஆகாய மேகமாய் நான் மாறியே

உன் மீது வெண்பனி நான் தூவவா


விண்மீனை பூக்களாய் நான் கிள்ளியே

உன் தோளில் மாலையாய் நான் போடவா


கண்ணில் காணாத இன்பங்கள் யாவும்

மண்ணில் காண்பேனே உன்னாலே நானும்


கரும்பினில் வில்லெடுத்து அரும்பினில் அம்பெடுத்து

உருவம் இழந்த ஒருவன் எனது உருகிடும்

இதயத்தை துளைப்பதும் ஏன்


ஹே…..ஒரு பூஞ்சோலை ஆளானதே

ஹே…….ஒரு பொன்மாலை தோள் சேருதே

*/


2,383 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page