
கண்மணி... என் கண்ணின் மணி -28-2
அத்தியாயம் 28 -2
ரிஷி பேருக்கு கண்மணியின் அருகில் நின்று வேடிக்கை பார்த்தபடி நிற்க… கண்மணியோ கண் மூடி மனம் உருக அந்த அம்மனின் முன் நின்றிருந்தாள்…. ஒரு நிமிடம் இரு நிமிடம் ஐந்து நிமிடமோ இல்லை… கிட்டத்தட்ட கால் மணி நேரத்துக்கும் மேலாக கண் மூடி அம்மனைப் பிரார்தித்துக் கொண்டிருக்க… அங்கிருந்த அர்ச்சகர்…
“மணிப்பாப்பாக்கு அம்பாள்னா அவ்வளவு இஷ்டம்…” என்று ரிஷியிடம் பேசிக் கொண்டிருக்க…
ரித்விகாவே கண்மணியின் பக்தி பிரவாகத்தில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள்…
நல்ல வேளை ரிதன்யா அவர்களோடு வரவில்லை… ரிதன்யாவுக்கு தலைவலி என்று ஒதுங்கி விட்டாள்… பொய்யெல்லாம் இல்லை… உண்மையிலேயே தலைவலிதான்…. என்ன காரணம் கண்மணியாகிப் போனதுதான் அங்கு கவலைக்குரிய விசயம்…
ரிதன்யா அவர்கள் வீட்டின் ராணி…. சிறு வயதில் இருந்தே அவர்கள் பெற்றோர்களால் ரிஷியை விட புத்திசாலி, பொறுப்பானவள் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டிருந்தவளுக்கு… திடிரென்று ஒரு கூட்டம் கண்மணி கண்மணி என்று தூக்கி வைத்துக் கொண்டாட அந்த கூட்டத்துக்கு நடுவில் தன் புத்திசாலித்தனத்தையோ, இல்லை… தானும் நல்லவள் என்பதைக் காட்டவோ பிடிக்கவில்லை… ஒரு மாதிரியான ஒத்துப் போகாத ஒவ்வாத உணர்வு….. அது மொத்தமாக கண்மணியிடம் திரும்பியிருக்க… அதே நேரம் கண்மணியிடமும் தன் பிடித்தமின்மையையும் நேரடியாக காட்டப் பிடிக்கவில்லை….
இனி நடந்தது எதையும் மாற்ற முடியாது… அதே நேரம் கண்மணியையும் தன் அண்ணியாக ஏற்றுக்கொள்ள முடியாது… அவளைப் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும்… எப்படி என்று ரிதன்யா யோசிக்கத் தொடங்கி இருந்தாள்….
---
இங்கு புயலென கோவிலுக்குள் நுழைந்த அர்ஜூன் கண்களில்... கண் மூடி நின்றிருந்த கண்மணிதான் காட்சி அளித்தாள்…
தன் வாழ்க்கையை மொத்தமாக இருளாக்கி விட்டு… இங்கு மனமுருக வேண்டுதலா…. கோபத்துடன் கோவில் சன்னிதானத்துக்குள் நுழைந்தவன் அவளருகில் போய் அவள் பிரார்த்தனையை கலைக்க முயற்சிக்கப் போக…
ரிஷி அர்ஜூனைத் தன் புறம் இழுத்திருந்தான்….
“என்னைத் தாண்டி… என் மனைவிக்கிட்ட போகலாம் மிஸ்டர் அர்ஜூன்… என் வைஃப் இப்போ சாமி கும்பிட்டுட்டு இருக்காங்க… அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே…எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசலாம்” என்று அர்ஜூனை நிறுத்தி வைக்க….
நேற்று வரை… தன் உரிமை என்றிருந்தவளை இன்று யாரோ ஒருவன் உரிமையுடன் உறவாடிக் கொண்டிருக்க… நினைக்கும் போதே அர்ஜூன் மனம் துடிக்க ஆரம்பிக்க…
“கண்மணி” என்று உச்சஸ்தாயில் கத்த….
கண்மணி கண் திறந்தாள்….
ரிஷியோ….
“கண்மணின்னு…. சும்மா கூப்பிடாமல்… கண்மணி ரிஷின்னு கூப்பிட்டா இன்னும் எனக்கு காது குளிரும்…” என்று ரிஷி அர்ஜூனிடம் கண்மணிக்கான தன் உரிமையைச் சொல்லிக் காட்ட…
அப்போதுதான் அர்ஜூனுக்கே தன்னை மறந்து கண்மணி என்று அழைத்தது அவன் உணர்வுக்கு புரிந்தது… உச்சக்கட்ட ஆவேசத்தில் இருந்தவனுக்கு அவன் நிலையையே மறந்திருக்க… மற்றதெல்லாம் எங்கு ஞாபகத்திற்கு வரும்…
கண்மணி அர்ஜூன் முன் வந்து நின்றாள்…
“சொல்லுங்க அர்ஜூன்… “ என்றவளிடம்…. அவள் அருகில் போக எத்தனித்த அர்ஜூன் நெருங்காமல் கண்மணியைத் தன் புறம் கொண்டு வந்து தன் கையணைவுக்குள் வைத்தவன்….
”கண்மணி… வா… முதல்ல பெரியவங்க வந்திருக்காங்க… அவங்கள கண்டுக்காம அர்ஜூனா” என்று அழைத்துக்கொண்டு நாரயண குருக்கள் மற்றும் வைதேகி முன் சென்று அவர்கள் காலில் விழ…. நாரயண குருக்கள் இரும்பென விறைத்துப் போய் நிற்க… வைதேகி யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் முதலில் குழம்பி… பின் தன் பேத்திதான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தவராக… தங்கள் காலடியில் விழுந்த கண்மணி – ரிஷியை தொட்டுத் தூக்கி ஆசிர்வாதம் வழங்க….
அர்ஜூன் நட்ராஜிடம் எகிறிக் கொண்டிருந்தான்….
”என்னைத் தோற்கடிக்கிறதா நினைத்து…. அவளை பழி வாங்கிட்டா… உன்னை” என்று நட்ராஜின் குரல் வளையில் கை வைக்க…
“அர்ஜூன்… “ என்ற கண்மணியின் குரல் அர்ஜூனை நிறுத்த….
“என்னோட முழு சம்மதத்தோட தான் இந்த திருமணம் நடந்தது..” பிசிறில்லாமல் ஒலித்தது கண்மணியிடமிருந்து…. பதில் அர்ஜூனுக்கும் மட்டும் இல்லை அவள் தாத்தா பாட்டிக்கும் சேர்த்தே…
நட்ராஜை விட்டு விட்டான் அர்ஜூன்… கண்மணியிடம் வந்து நின்றவன்…
“என்னடி மிரட்டினான் உன்னை… இவன்லாம் ஒரு ஆளுன்னு… நினைக்கவே கேவலமா இருக்கு,…” என்று ஆவேசமாக ஆரம்பித்தவன்… தன்னைக் கட்டுப்படுத்தியபடி
“உன்னால… எமோசனல… உனக்கான முடிவுகளை ஹேண்டில் பண்ண முடியாதுன்னு எனக்குத் தெரியும் கண்மணி… ஓவர் எமோசனலா இருந்தால் உன்னால பேசவே” என்ற போதே…. நட்ராஜ் இப்போது… அர்ஜுனின் இந்த வார்த்தைகளில் உக்கிர மூர்த்தியாக மாறி இருக்க…
“டேய்.. என் பொண்ணப் பத்தி ஏதாவது இதுக்கு மேல பேசுன” நட்ராஜின் கோபம் கண்மணிக்கும் புரிய… தன் தந்தையை ஆசுவாசப்படுத்த ஆரம்பித்தாள் கண்மணி…
ரிஷி புருவம் சுருக்கினான்… மற்ற மூவருக்கும் புரிந்த ஏதோ ஒன்று அவனுக்கு புரியாதது போன்ற உணர்வு தோன்றியதுதான்… ஆனால் அதன் ஆழம் உணர முடியவில்லை
“ஏதோ உணர்ச்சி வசப்பட்டு… நீ இருந்திருக்க… அதை யூஸ் பண்ணி உன்னை இந்த முடிவெடுக்க வச்சுருக்காங்க…. இதெல்லாம்… இவங்கள்ளாம் நமக்கு வேண்டாம்… நாம பேசுவோம்… என் கூட வந்துரு …” இங்கு அர்ஜூனின் குரலில் மொத்தமாக கெஞ்சல் மட்டுமே இருக்க…
இப்போது ரிஷி
”கண்மணி கிளம்பு…. “ என்று கட்டளை போல் சொல்லியவன் ரித்விகாவிடம் திரும்பி
”ரிதி உங்க அண்ணியைக் கூட்டிட்டு நீ போகலாம்” அதட்டலாகச் சொல்ல… கண்மணி தன் தாத்தாவிடம் வந்தாள்....
”தாத்தா… அர்ஜூன் கிட்ட என்னைப் பற்றி ஒரு விசயம் கூட விடாமல் சொல்லி சொல்லிதானே இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கீங்க… இனி எனக்கு எந்த ஆபத்பாந்தவனும் வேண்டாம்னு சொல்லுங்க அர்ஜூன் கிட்ட… நான் சாதாரண பொண்ணு…. எனக்கு ரட்சகன் வேண்டாம்… சாதரண மனிதனே போதும்னு நான் முடிவெடுத்துட்டேன்… அர்ஜூன் புத்திசாலி… நீங்கதான் செண்டிமெண்டலா பேசி அவர் மனதை கலச்சு வச்சுருக்கீங்க… நான