top of page

கண்மணி... என் கண்ணின் மணி-18-2

Updated: Aug 1, 2021

அத்தியாயம் 18-2

தனசேகரின் அலுவலக அறையில்.. இவனுக்காக காத்திருந்த திருமூர்த்தியும், கேசவனும்…ரிஷி உள்ளே நுழையும் போதே இவனைப் பார்த்து முறைப்பாய் பார்வையை வீச..... அவர்களைப் பார்த்தபடியே வரவேற்கும் விதமாக அவர்கள் முன் போய் நின்று பார்வை பறிமாற்றம் நடத்தியவன் … பின் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருக்க…

திருமூர்த்தியும் கேசவனும் இன்னும் உக்கிரமாக அவனை முறைக்க…

அவர்கள் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரியாதவனா ரிஷி…... இருந்தும் வார்த்தைகள் அவர்கள் வாய் மொழியாகவே வரட்டும்…. என்பது போல ரிஷியின் புருவமுமோ நக்கல் கலந்த கேள்வியாக உயர… கண்களோ அப்பாவியாக பார்வை பார்த்து வைக்க…

கேசவன் தான் ஆரம்பித்தார்...

ஃபேக்டரி விசயம் கேள்விப்பட்டியா… உனக்குத் தெரியுமா தெரியாதா… இல்லை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறியா” என்ற போதே…

”அட அங்கிள்… என்ன இப்டி சொல்லிட்டீங்க…. அந்த கேஸ்தானே அந்த விசயம் தெரியும்… யாரோ நம்ம ஃபேக்டரி மேல ரிப்போர்ட் பண்ணிருக்காங்களாமே…ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்காங்களாமே… இனி என்ன ஆகும் அங்கிள்… ஆனால் எனக்கு வேற ஓண்ணுமே தெரியாதே… நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு அட்வைஸ் பண்ணனும்… எனக்குத்தான் ஒண்ணும் தெரியாதே” என்று அப்பாவியாகக் கேட்டு அவர்களைப் பார்க்க… இவன் லூசா என்பது போல மாறி இருந்தது இப்போது அவர்கள் பார்வை

”ப்ச்ச்… ஆனால் ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்… நாங்க பார்ட்னர் ஷிப்பை விட்டு வந்த பின்னால இந்த ஸ்டே ஆர்டர் வந்திருக்கலாம்… “ உதட்டைப் பிதுக்கியவனாக ...


பின் கவலையோடு

“இப்போ எங்க கைக்கு வர வேண்டிய கொஞ்ச நஞ்ச பணமும் போச்சு…ஃபேக்டரி ஸ்டே ஆர்டர்ல இருக்கும் வரை பார்ட்னர்ஷிப் கேன்சல் பண்ண முடியாதாமே… அதுதான் எனக்கும் வருத்தம்… என்னை விடுங்க… ஏற்கனவே அப்பா வெளில வர நினைத்த கம்பெனி தானே… உங்க ரெண்டு பேருக்கும்… அதிலும் கம்பெனிய தூக்கி நிறுத்த போராடுன உங்களுக்கு பெரிய இடிதான் இந்த கேஸ் விசயம் … நினைக்கவே கவலையா இருக்கு” இப்போது அப்பாவித்தனம் அவன் குரலில் சுத்தமாக இல்லை… கேலி செய்வது போல் மட்டுமே இருக்க… அவன் சொன்ன விதத்தில் குழம்பிப் போனவர்கள் கேசவனும்… திருமூர்த்தியும் தான்….

இந்த கம்பெனி விவகாரம்… கோர்ட் கேஸ் வரை போகும் என்று நினைத்ததுதான் …. ஆனால் அவர்கள் நினைத்தது வேறு மாதிரி…

எப்படி என்றால்..ரிஷிதான் கோபத்தில் கோர்ட்டுக்குப் போவான்… அப்படி ரிஷி கேஸ் போட்டாலும்… பார்ட்னர்ஷிப் விவாகரத்தை வைத்துதான் கேஸ் போடுவான்… அந்த வழக்கும் பெரிதாக நிற்கப் போவதில்லை…. 2 மாதம் இல்லை மூன்று மாதத்தில் வழக்கை முடித்து… தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஈஸியாக நினைத்து வைத்திருக்க கோர்ட் மூலம் வந்ததோ… வேறு விசயமாக ஸ்டே ஆர்டர்…


இவர்கள் நினைத்தது போல ரிஷி போடவில்லை… யாரோ போட்டிருந்தார்கள்… சூழ்நிலை மாசுபடும் விதமாக இவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்… என்று… அதற்கான ஆதாரங்கள் எல்லாம் அக்குவேறு ஆணி வேராக அங்கே வைக்கப்பட்டிருக்க… அதைக் காரணம் காட்டி…. ஸ்டே ஆர்டரும் போடப்பட்டிருக்க… அதனால் பார்ட்னர் ஷிப்பையும் கேன்சல் பண்ண முடியாமல் போக… ஆக தனசேகர் கம்பெனியை வைத்து அவர்கள் போட்ட அத்தனை திட்டமும் பாழாகி விட்டிருந்தது…

இதன் பின்னணியில் ரிஷி இருப்பானோ என்று நினைத்தாலும்… இத்தனை நாள் பார்த்த விதத்தில்… அவனோடு பழகிய விதத்தில்… தனசேகர் சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது… ரிஷியை அப்படி எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை… இருந்தும் கொஞ்சம் சந்தேகம் இருக்க… அதே நேரம் ஒருவேளை நீலகண்டன் ரிஷியின் பின்னால் இருந்து செயல்படுகிறாரோ… வருங்கால மருமகன் என்று அவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கின்றாரோ… சந்தேகம் இன்னும் கூடுதலாக வர… அதன் நிமித்தமே இந்த சந்திப்பு…

அதுமட்டுமல்லாமல் ரிஷியும் ஆரம்பத்தில் அப்பாவியாக பேசி வைக்க… இருவருமே குழம்பினர்… அது இருவரின் முகத்திலும் நன்றாகவே பிரதிபலிக்க… ரிஷி அவர்களின் குழப்பத்தைக் கண்டுகொண்டவனாக… இதழ் ஓர ஏளனத்தை அவர்கள் காணாமல் அடக்கியவனாக…

“அப்புறம் அங்கிள்… ” என்று அவன் அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை முடிக்கும் விதமாக கேட்டு வைக்க…

இருவராலும் ரிஷியை சந்தேகமே படமுடியவில்லை… இனி இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை… என்று தங்களுக்குள் முடிவு செய்தவர்கள்… ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடி… எழுந்தவர்களாக அவனிடம் விடைபெற்று அந்த அறை வாசலை நோக்கிப் போக… அவர்களை அறை வாசல் வரை போக விட்டான் ரிஷி...


கதவருகில் போனவர்களுக்கு…விரல் சுண்டி அழைக்கும் ஒலி காதில் விழ…. வேகமாக இருவரும் திரும்பி பார்க்க… அழைத்தது வேறு யார்… ரிஷியேதான்… கோப முகமாக அவனைப் பார்த்து திரும்பி நிற்க

“ப்ச்ச்… பதில் தெரியாமல் போறிங்களே… வயசானவங்க வேற… இவ்வளவு தூரம் வந்துட்டு… பதில் தெரியாமல் போகவிட மனசு வரலையே பாவமா இருக்கு… “ என்று பாவமாகப் பேச ஆரம்பித்தவன்…

“அந்தக் கேஸ் நான் தான் போடச் சொன்னேன்… “ என்ற போதே… இருவரும் ஆக்ரோஷமாக அவன் முன் வர…

சற்று முன் இருந்த அப்பாவித்தனமோ… கிண்டலோ சுத்தமாக ரிஷி முகத்தில் இல்லை

“ஹலோ.. ஹலோ…. பார்த்துங்க… வயசான காலத்துல… எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்… கோபம்லாம்… ஏதாவது ஆகிறப் போகுது… தண்ணி குடிங்க… “ என்றபடியே மேஜையில் இருந்த வாட்டர் பாட்டிலை அவர்களை நோக்கி தூக்கிப் போட… அதை இருவராலும் பிடிக்கமுடியாமல்… அது கீழே விழ

ரிஷி… இப்போது தன் இருக்கையில் எழுந்து அவர்கள் முன்னே வந்தவனாக... கீழே கிடந்த வாட்டர் பாட்டிலை காலில் தட்டி... கைக்கு கொண்டு வந்தவன்... அதை திருமூர்த்தியின் கையில் திணித்தான்... திமிராக... தெனாவெட்டாக... மரியாதை என்பது துளி கூட இல்லை என்ற தொணியில் இருந்தது நடவடிக்கை எல்லாமே... இருவருமே உறைந்து நிற்க

“என்ன… நான் உங்க ரெண்டு பேருக்கும் எதிரா கேஸ் போடுவேன்னு எதிர்பார்த்தீங்களா என்ன… அப்படி நினைத்திருந்தீங்கன்னா… ப்ச்ச்… அது தப்புக் கணக்கு…”

”சிம்பிள் லாஜிக்… எனக்கு ஒரு கண் போனால் கூட பரவாயில்லை… எதிரிக்கு ரெண்டு கண்ணும்… சாரி சாரி… நீங்க ரெண்டு பேர்ல… நாலு கண் போகனும்… அந்த லாஜிக் தான் அங்கிள்… “ என்றவனின் முகம் இன்னும் இறுகி இருக்க…

“என்னடா… வார்த்தை எல்லாம் வேறு மாதிரி வருதே….” திருமூர்த்தி சட்டென்று அவன் சட்டைக் காலரைப் பிடிக்க… அதையெல்லாம் ரிஷி லட்சியமே செய்யாமல்…

“இல்லையே… இதுவரை மரியாதை இல்லாமல் பேசலையே…” என்றான் நக்கல் மட்டுமே தூக்கலாக

கேசவன் அவன் அருகில் வந்து….

“சின்னைப் பையன்னு பார்த்தால்… ஓவரா ஆடற… உன் இலட்சணம்லாம் தெரியும் தம்பி… உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு … எங்களுக்கும் தெரியும்” என்றார் மிரட்டலாக…

திருமூர்த்தி இன்னும் ரிஷியை விடாமல் பற்றி இருக்க… ரிஷி இன்னும் வெகு அலட்சியமாக கேட்டான்…

“என்ன பண்ணுவீங்க…“

கேசவன் இடியெனச் சிரித்தபடி…

“நீ ஆம்பளைப் பையன்… உன்னை ஒண்ணும் பண்ண முடியாது… உனக்கு ரெண்டு தங்கைகள் இருக்காங்க… அந்த பயம் இருக்கா” என்ற போதே… ரிஷியோ கேசவன் சிரித்ததை விட அதிகமாக அவர்களைப் பார்த்து சிரித்து வைக்க…


இவன் ஏன் இப்படி சிரிக்கின்றான்... என்று புரியாமல் ... இப்போது அதிர்ச்சியில் அவனைப் பார்த்தபடியே இருவரும் நிற்க… சிரித்து முடித்தவன்… நிதானமாக

“யமுனா… வயசு 20… எத்திராஜ்... ஃபைனல் இயர்…. டாட்டர் ஆஃப்” என்று யோசனையோடு இழுக்க... இப்போது ரிஷியைப் பிடித்திருந்த திருமூர்த்தியின் கைகள் மெதுவாக அவனிடமிருந்து மெதுவாக விலக…

“ஓ… அப்போ யமுனா அப்பா… நீங்களா… கை தானா விலகுதே…” திருமூர்த்தியைப் பார்த்து நக்கலாகக் கேட்டவன்… கேசவனைப் பார்த்து…

”எங்க வீட்ல மட்டும் தான் பொண்ணுங்க இருக்காங்களாடா… உங்க ரெண்டு பேர் வீட்லலாம் பசங்க மட்டும் தானா என்ன…” கழுத்தை கைகளால் நீவி விட்டபடியே கேட்டவன்…

“நீங்கள்ளாம் ஆள் தேடனும்… எனக்கு…” என்று கண் சிமிட்டியவன்… கைகளை உயர்த்தி நெட்டி முறித்தபடியே…. திருமூர்த்தியை பார்த்து எக்காளாமாக பரிகாசமாகப் பார்த்தவன்

“நானே களத்துல இறங்கிருவேன்… என்ன… உன் பொண்ணு கொஞ்சம் சுமார்தான் போல… பரவாயில்லை… கல்யாணமா பண்ணப் போகிறேன்… மேட்டர் முடிக்க… எப்படி இருந்தால் என்ன…” என்று கூசாமல் சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம்… சாவதனமாக சொல்லி முடித்த போதே திருமூர்த்தி அவனைக் கேவலமாகப் பார்வை பார்க்க…

கேசவன் திருமூர்த்தியிடம் திரும்பி…

”திரு… இவன் எப்படிப்பட்டவன்னு தெரியாதா என்ன… இந்த வயதிலேயே … எல்லாத்தையும் பார்த்தவன்… ஊரே சொல்லுதே… அவன் அப்பன் சாவுக்கு இவன் தான் இவன் தரம் கெட்ட பழக்க வழக்கம்னு… இவன் தான் யாரு இவன் தராதரம் என்னன்னு இவன் வார்த்தையே சொல்லுதே… இனி நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்று சொல்ல...

திருமூர்த்தியோ ரிஷியிடம் திரும்பினார்…

“ரிஷி… நீ பண்ணி வச்சுருக்கிற வேலை… உன் கழுத்தில நீயே கல்லைக் கட்டிட்டு கிணத்துல இறங்குகிற மாதிரி” எனும் போதே…

“அப்டியா… நல்லா திங்க் பண்ணுங்க சார்… கல்லை என் கழுத்துல கட்டி இருக்கிறேனா… உங்க ரெண்டு பேர் கழுத்திலயும் கட்டி இருக்கிறேனான்னு” சொன்னவனின் முகத்தைப் பார்க்க… அதில் ஒரு சதவிகிதம் கூட நக்கலோ ஏளனமோ இல்லை…

”இப்போ கடைசியா நீ என்னதான் சொல்ல வருகிறாய்… உன் முடிவென்ன…”

“ஹ்ம்ம்ம்…. பேசலாம் சார்… கேஸ்லாம் முடியட்டும்… நம்ம மேல தப்பில்லைனு வரட்டும்… இப்போ என்ன முடிவெடுக்க… இப்போ நான் சின்னப் பையன் தானே… அதுக்குள்ள நானும் கொஞ்சம் ஏதோ வெளி உலகத்தை பழகிட்டு வருகிறேன்… அப்புறம் பேசலாம்… ஒரு அஞ்சு வருசம் கழிச்சு வாங்க… உயிரோட இருப்பீங்க தானே… பேசலாம்… அப்போ பேசலாம்… இப்போ “ என்றவன் அருகில் இருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்தபடி…. தன் முன் பேயறைந்தார் போல நின்றவர்களைப் பார்த்து

“ப்ச்ச்… என் முடிவை விடுங்க… இப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணலாம்னு வேண்டும் என்றால் சொல்கிறேன்… உங்களுக்கு வேற பிஸ்னஸ் எத்தனையோ இருக்கு…. அதைப் போய்ப் பார்ப்பீங்களாம்” என்றவன்…

திருமூர்த்தியிடம் மட்டும் சிரித்தபடி…

“அப்டியே யமுனா டார்லிங்குக்கும் சீக்கிரம் மேரேஜ் முடிச்சு வச்சுருங்க…” என்று நக்கலாகச் சொல்ல

முறைத்த இருவரையும் பார்த்து…

“உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறேன் சார்… நான் நல்ல பையன்லாம் இல்லை சார்… ரொம்பக் கெட்ட பையன் சார்… உங்க ரெண்டு பேருக்கும் தான் என்னைப் பற்றி நல்லா தெரியுமே… எனக்கே என் மேல நம்பிக்கை இல்லைனா பார்த்துங்கங்க…” என்றவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த கேசவன் அடிக்கப் பாய…

”கேசவா விடுடா… ” என்றபடியே

”இன்னொரு தரம் என் பொண்ணைப் பற்றி பேசின… “ என்று திருமூர்த்தி விரல் உயர்த்திப் பேச…

”அதே தான் உங்களுக்கும்… வெளிய போங்க… ” இப்போது ரிஷியின் முகம் உக்கிரமாக மாறியிருக்க… அதே கோபத்துடன் அறை வாசலை கைகாட்ட… அங்கு அறை வாசலில் நீலகண்டன் நின்றிருந்தார்… எப்போது வந்தார் என்று ரிஷிக்கும் தெரியவில்லை… எதை எல்லாம் கேட்டார் என்றும் தெரியவில்லை… அவர் என்ன கேட்டிருந்தாலும் அதைப் பற்றி ரிஷிக்கு கவலையும் இல்லை…

தன்னை முறைத்துக் கொண்டிருந்த நீலகண்டனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை ரிஷி என்பதே உண்மை….

“சோ நீ கேஸ் வாபஸ் வாங்க மாட்ட” இருவரும் முடிவோடு அவனைப் பார்க்க…

“ப்ச்ச்… ஒரு தடவைதான் சொல்ல முடியும்… கிளம்புறீங்களா… சும்மா சொன்னதையே சொல்ல வைக்காதீங்க “ எரிச்சலுடன் சொன்னவனிடம்

“ஸ்டே ஆர்டர் வாங்கினா… அங்க வேலை பார்க்கிற அத்தனை பேரும் நடுத்தெருவில நிற்கனும்… அது தெரியுமா தெரியாதா” எந்த வார்த்தைகளை வைத்து தனசேகரை மிரட்டினார்களோ அதே வார்த்தைகளை வைத்து… அவர் மகனையும் மிரட்ட… தந்தை மிரண்டால் தனையனும் மிரள்வானா என்ன… பதிலடிதான் வந்தது

“ஹா ஹா… நானே நடுத்தெருவில தான் நிற்க போகிறேன்… இதுல அடுத்தவங்கள பற்றிலாம் கவலையா… நெவர்…. மோர் ஓவர்… உங்க கைக்கு முழுசா கம்பெனி வந்துட்டா… எங்க அப்போவோட விசுவாசிகள்னு மொத்த வொர்க்கர்சையும் தூக்க மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்… இதெல்லாம் கேட்டு பயந்து பரிதாபப்பட… உங்க ஃப்ரெண்ட் தனசேகர் இங்க இல்லை ” என்றவன்

“ஒகே இதுதான் என்னோட முடிவு… வேற ஏதாவது பேசனுமா என்ன… பெருசா இல்லைனுதான் நினைக்கிறேன்… அண்ட் என்னை மிரட்டுறேன்னு லூசுத்தனமா ஏதும் பண்ணி வைக்காதீங்க… போலிஸ்லயும் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்… எங்க குடும்பத்துக்கெதிரா சின்ன இன்ஸிடெண்ட் நடந்தால் கூட உங்களத்தான் வந்து அள்ளிட்டுப் போவாங்க” என்று முடிக்க…


லட்சுமியும் இப்போது அறைக்குள் வந்து அவர்களை நோக்கி வர... சட்டென்று வாயை மூடினான் ரிஷி...

லட்சுமி வந்தவுடன்… ரிஷி அடங்கியது போல் தோன்ற… இவர்கள் தொடர்ந்தார்கள்…

“சோ... உங்க அப்பா பேரை மகனா காப்பாத்தனும்னு நீ நினைக்கலை.... உனக்கு பணம்,ஸ்டேட்டஸ் தான் பெருசா இருக்கு... அப்படித்தானே....” ரிஷியிடம் என்ன சொன்னால் அவன் பின் வாங்குவான்...என்று உணர்ந்து... தெரிந்து சொல்ல... ரிஷி அமைதியாகவே இருந்தான் பதில் சொல்லாமல் இப்போது

லட்சுமிக்கும் ஏதோ பிரச்சனை என்று புரிந்தது..... ஏனென்றால் யாரின் முகமும் சரியில்லையே...

அங்கிருந்த சோபாவில் அமந்தவர்.... அனைவரின் முகத்தையும் பார்த்தபடி இருக்க... யாருமே பேச வில்லை.... மௌனமாக இருக்க... லட்சுமி தான் ஆரம்பித்தார்.. கேசவன் குருமூர்த்தி என்ன விசயமாக வந்திருக்கிறார்கள் என்று...


திருமூர்த்து, கேசவன் இருவரும்…. ரிஷி செய்த காரியத்தை கூறி ரிஷியையே குற்றம் சாட்டினர்.... லட்சுமி.... தன் மகனையே பார்த்தபடி சில நேரம் அமைதியாக இருக்க... நீலகண்டன் தான் பேச ஆரம்பித்தார்


“விடுங்க... அவன் கேசை வாபஸ் வாங்கிருவான்... அதற்கு நான் பொறுப்பு” என்றார் ரிஷியை ஒரு வார்த்தை கூட கேட்காமல்...


லட்சுமியும் நீலகண்டனின் வார்த்தைக்கும் மறுப்பு சொல்லவில்லை....

அவர்களது வாழ்க்கையில் யார் யாரோ தலையிட்டு முடிவுகளை மாற்றுகிறார்கள் என்று புரியத்தான் செய்தது... குடும்பத்தின் ஆணிவேராகிய குடும்பத்தலைவன் இல்லாவிட்டால்... இதுதான் நிலைமை என்பதை அவரால் மட்டும் மாற்ற முடியுமா என்ன.... தவிர… மகனுக்கு ஆதரவாக பேச என்ன நம்பிக்கை அவன் கொடுத்திருக்கின்றான் இதுவரை… அமைதியாக கலங்கியபடி அமர்ந்திருந்தார் லட்சுமி


இதுதான் சரி என்று அடித்துக் கூற முடியாமலும்... அப்படியே பேச நினைத்தாலும்... அப்படி பேசினால் இப்போது கிடைக்கிற நீலகண்டனின் கொஞ்ச நஞ்ச ஆதரவும் கிடைக்காமல் போய் விடுமோ... இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு... இந்த சமூகத்தில் வாழ வேண்டுமே....

லட்சுமி... இதையெல்லாம் மனதில் நினைத்தபடி... உழன்றபடி... வாய் மூடி மௌனமாக இருக்க... ரிஷியோ தன் அன்னையைப் போல் வாயை மூடி இருக்க வில்லை...


“சாரி மாமா... உங்க வார்த்தையை மீறுகிறேன் என்று நினைக்காதீங்க.... கேசை நான் வாபஸ் வாங்க மாட்டேன்” அவரை நோக்கி... ஆணித்தரமாக சொன்னான்... அவன் சொன்ன விதத்திலேயே.... அவன் தீவிரத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்...


லட்சுமியும் இப்போது... ரிஷியிடம்... பெரியவர்கள் சொல்வதை கேட்டு நட என்று மகனிடம் பேசப் பிடிக்காவிட்டாலும்… மகனை வழக்கை திரும்ப வாங்க வைக்க… வைக்க பேச ஆரம்பிக்க...ரிஷி அன்னையின் வார்த்தைகளைக் கூட கேட்காமல் பிடிவாதமாக மறுத்துவிட்டான்...


அடுத்தடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பேச ஆரம்பிக்க

இதற்கிடையில் சத்தம் பெரிதாக கேட்டதால் ரிதன்யா.. ரித்திகா மகிளா என அங்க்கிருந்த மற்றவர்களும் அங்கு கூடி விட்டனர்...


ரிஷி யாரையும் கவனிக்க வில்லை... தன் முடிவு இதுதான் என்பது போல பேசிவிட்டு இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல.... அறையை விட்டு வெளியேறும் முடிவில்… வேக நடை எடுத்து வைக்க....


நீலகண்டன் கேட்ட கேள்வி அவனை அப்படியே....நிற்க வைத்தது.....


“இருக்கிற கொஞ்ச நஞ்ச சொத்தையும் கோர்ட்.. கேசுனு.... கரைக்கப் போறியா.... கிடைக்கிறதை வச்சு.... எப்படி முன்னேறலாம்னு நினைக்காமல்… இதுல நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு தெரிந்தும் கேஸ் போட்டு என்ன சாதிக்கப் போற நீ… தனசேகர் என்கிட்ட சொன்னான் இவங்க ரெண்டு பேர்கிட்டயும் கம்பெனிய கொடுத்துட்டு வருகிற பணத்தில வேற ஏதாவது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு…. நீ ஏன் இப்டி பண்ணுன… சும்மாவே நீ அரை குறை… உனக்கு விபரம் லாம் பத்தாது… அதிகப்பிரசிங்கித்தனமா தேவையில்லாத விசயத்தில எல்லாம் தலையிடாத…. நாங்க பார்த்துக்கிறோம்… ஏற்கனவே உன் அப்பாவைத்தான் கொன்னுட்ட… இருக்கிற உன் அம்மாவையும் விட்டு வைக்க மாட்ட போல”


அவர் வார்த்தைகளின் வீரியம் ரிஷியை உயிர் வரை ஊடுருவியது.... உயிர் வலி இருந்தும் அமைதியாக நீலகண்டனைப் பார்த்தபடியே...


“எங்களுக்கான உரிமைய இழக்கக் கூடாதுனு நினைக்கிறது தப்பா மாமா... எனக்குனு சில கடமைகள் இருக்கு மாமா” என்று தன் தங்கைகள் ரிது ரிதன்யாவை பார்த்தபடி முடித்தபோது.... அவன் குரல் தழுதழுத்தது.. அது அவமானத்திலா... இல்லை ஆற்றாமையிலா என்பது ரிஷிக்கே தெரியவில்லை....


மகிளாவுக்கு தன் தந்தையின் மேல்… அவர் பேசிய வார்த்தைகளின் மேல்… கோபம் கோபமாக வர. தன் தந்தையிடம் பேசுவதை நிறுத்தச் சொல்ல வாய் திறக்கப் போக... ரிதன்யா அவளைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினாள்...


“மகி.. நீ பேசாத.... மாமாவுக்கு இன்னும் கோபம் தான் வரும்... அப்புறம் அந்த கோபத்தை எல்லாம் அண்ணன் மேல தான் காட்டுவாரு” என்று மகியை தடுத்தவளுக்கு… தன் கண்களில் வழிந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை...

ரிஷியும்... இதற்கு மேல் இங்கு நின்றால் ஆளாளுக்கு பேசி ஏதாவது விபரீதம் ஆகி விடுமோ என்று அந்த இடத்தைக் காலி செய்யலாம் என்று நினைத்தபோது....


“அடேங்கப்பா... உரிமை... கடமை... ரிஷியா இதெல்லாம் பேசுறது....” நக்கலில் அவர் குரல் ஓங்கி ஒலித்தது....


ரிஷி-மகிளா திருமண விவாகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒப்புதல் இல்லாமல் இருந்தார்... தனசேகர் வற்புறுத்தியதால் மட்டுமே இந்த ரிஷி-மகிளா திருமணத்திற்கு மனமில்லாமல் சம்மதித்து வைத்தவர்... இன்று நிலைமையை பயன்படுத்தி... அதை ரிஷி-மகிளா உறவுக்கும் முற்றுப் புள்ளி வைக்க நினைத்தவர் இன்று தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்...


லட்சுமி என்ன சொந்த தங்கையா அவருக்கு.... தன் மைத்துனனின் மனைவிதானே.... லட்சுமியைப் பற்றி அவர் நினைக்கவில்லை... அவரின் ஒரே நோக்கம் தன் செல்ல மகளை ரிஷி போன்ற ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.... தனசேகர் என்ற ஒரு எடைக்கல் தான் ரிஷியின் தரத்தை உயர்த்தி வைத்திருந்தது... அதுவும் இப்போது இல்லை எனும் போது... ரிஷி அவரைப் பொறுத்தவரை செல்லாக் காசு போலதான்... அது அவரது வார்த்தைகளில் நன்றாக தெரிந்தது ரிஷிக்கு...


அவரை எதிர்த்து பேச வாய் திறந்தவன் கண்களில் பதபதைப்போடு நின்ற மகிளா பட... தன்னைக் கட்டுப்படுத்தியவன்


“மகிளா... உங்க அப்பாவைக் கூட்டிட்டு போ” என்று மகிளாவிடம் சொல்ல... நீலகண்டன்...


“நீ என்னடா சொல்றது... அவள கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.... “ என்று நீலகண்டன் கீழ் இறங்கிப் பேச...

“நீ யார்… உன்னோட பிகேவியர் என்ன… உன்னாலதான்… தனசேகர் இறந்து போனான் என்னமோ பெரிய இவன் மாதிரி இன்னைக்கு துள்ளுற… பெரியவங்க நல்லது எடுத்துச் சொன்னா அதைக் கேட்கக்கூட மாட்டேங்கிற… தனசேகரை நாங்க இழந்த மாதிரி… இந்தக் குடும்பத்தையும் இழக்கச் சொல்றியா… எனக்கு என் மைத்துனன் குடும்பத்து மேல அக்கறை இருக்கு… உன்னைத்தவிர மத்தவங்க மேல எனக்கு பாசம் இருக்கு… உன்னோட சிறு பிள்ளைத்தனமான முடிவுக்கெல்லாம் சரின்னு சொல்ல முடியாது.. ரெண்டு பொண்ணுங்களை வச்சுட்டு.. இப்டித்தான் முடிவெடுப்பியா நீ… அதுக்கு நாங்கள்ளாம் ஆமா சாமி போடனுமா” என்ற போதே


ரிஷி... தன் தங்கைகளைப் பார்த்து... அவர்களை உள்ளே போகச் சொல்ல.... அடுத்த நொடி…. தன் அண்ணனின் பார்வையின் வீரியம் தாங்காமல் அவர்களும் உள்ளே போய் விட... தன் அன்னையைப் பார்த்தான்… இலட்சுமி கொஞ்சம் கூட இவன் புறம் திரும்ப வில்லை… அவனை யார் யாரோ என்னென்னவோ சொல்கிறார்கள்… என் மகனைப் பற்றி நீங்கள் யாரும் பேச வேண்டாம்… என்ற ஒரு வாக்கியம்… இந்த ஒரு மாதமாக இதைத்தான் எதிர்பார்க்கின்றான்… பார்வைக்கே பஞ்சம் எனும் போது ...வார்த்தைகளா வரப் போகிறது… இதில் வாக்கியம் வேறு வேண்டும் என்ற ரிஷியின் பேராசை பலிக்குமா என்ன… நிராசைதான் மிஞ்சியது

ரிஷி அங்கிருந்த அனைவரையும் வெறித்துப் பார்த்தபடி அமைதியாக ...


“நான் என்ன பண்ணினேன்... என்னோட பிஹேவியர் என்ன... என்னோட டெஷிசன் என்ன… நான் யாரைக் கேட்டு முடிவெடுக்கனும்… இதெல்லாம்… உங்க யாருக்கும் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்ல எனக்கு... உங்க ஒப்புதல் எதிர்பார்த்து உங்க யார்கிட்டயும் நான் வந்து நிற்கலை… இது வரைக்கும் எங்க குடும்பத்துக்கு நீங்க பண்ணின உதவிக்கு நன்றி... நீங்க போகலாம்” என்று வாசலைக் கைகாட்டினான் ரிஷி... அதில் அடக்கப் பட்ட கோபம் நன்றாகத் தெரிய... அதற்கு மேல் கேசவனும் திருமூர்த்தியும் அங்கு இருக்கவில்லை… வெளியேறி இருந்தனர் …

நின்று கொண்டிருந்த நீலகண்டனையும் விடாமல்

“உங்களுக்கு கூட இனி நான் பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல மாமா... அண்ட் என்னைத் தவிர இந்தக் குடும்பத்து மேல உங்களுக்கு அக்கறை இருக்குனு சொன்னத்துக்கு ரொம்ப தேங்க்ஸ் மாமா…” சொல்லாமல் சொல்லி விட்டான்..... மருமகன் என்ற பந்தம் இனி இல்லை என்பதை... நீலகண்டனும் அதைப் புரிந்து கொண்டார்.... அடுத்த நிமிடம் தன் மகளோடு அங்கிருந்து கிளம்பியும் சென்றிருக்க… தன்னையே பார்த்தபடி நம்பிக்கையோடு செல்லும் மகிளாவின் முகம் பார்க்க முடியாமல் குற்ற உணர்வில் ரிஷி கண்களை இறுக மூடிக் கொண்டான்…

ரிஷி இப்போது தன்னைப் பற்றித்தான் சிந்தித்தான்... ஆனால் தான் என்பது அவன் மட்டும் அல்ல.. லட்சுமி... ரிதன்யா ரித்திகா இவர்களோடு சேர்த்துதான் அந்த ’தான்’ என்பது...

இவர்களைத் தவிர… தன்னைப் பலவீனப்படுத்தும் வேறு எந்த விசயமும் தனக்கு கூடவே கூடாது… அப்படி இருந்தாலும் தூர விலக்கி நிறுத்த வேண்டும்… அதன் முதல் படியாக மகிளாவை துறந்தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு…

மகிளா அவனின் நினைவின் எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்தாள்... மகிளா மட்டும் அல்ல... இனி எந்த பெண்ணுமே… இதில் அவன் தீர்மானமாக இருந்தான்

அதே நேரம் கவலைப்படவோ தொய்ந்து அமர்ந்திருப்பதோ இனி வேலைக்காகாது…. அடுத்து என்ன செய்வது…. சென்னை செல்வதா… தன் குடும்பத்தை தனியே விட்டு சென்னை செல்லத்தான் வேண்டுமா… அடுத்தகட்ட யோசனைகள் முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் வரிசை கட்டி நிற்க … யோசித்தான் யோசித்தான்… யோசித்துக் கொண்டே இருந்தான் ரிஷி

படிப்பு… இனி அது அவனுக்கு எட்டா கனி…. அதைத் தொடர முடியாது நன்றாகவே தெரிந்து விட்டது… அதே நேரம் வேலை வேண்டும்… தன் காலில் நிற்க வேண்டும்… அது மட்டுமல்ல தான் கஷ்டப்படலாம்… தன் குடும்பம் கஷ்டப்படக்கூடாது… இதுமட்டுமே அவன் எண்ணங்களில் இருந்தது

யோசித்தவனுக்கு நீலகண்டன் சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் எதிரொலித்தது…

”உன்னை மட்டும் தான் பிடிக்காது… உன் குடும்பத்து மேல அக்கறை இருக்கின்றது” என்ற வார்த்தைகள் தான் அது….

அடுத்து அவன் நின்றது நீலகண்டன் வீட்டில் தான்… நீலகண்டனை தன் வழிக்கு கொண்டு வர அவர் மகளை மகிளாவை… அவள் காதலை தன் துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்த…. விளைவு… நீலகண்டன் அவன் முடிவுக்கு சம்மதம் சொல்ல…


தன் குடும்பத்தின் பாதுகாப்புக்கு நீலகண்டனின் உதவி கிடைத்ததால்… பெருத்த நிம்மதியோடு… சென்னை செல்ல முடிவு செய்தான் ரிஷி…ணின் மணி-15

2,196 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page