top of page

என் உயிரே !!! என் உறவே ??? - 54

அத்தியாயம் 54:


திடிரென்று விழுந்த ரெட் சிக்னலில் பாலா சட்டென்று ப்ரேக் பிடிக்க………அதனால் கார் ஒர் ஆட்டத்துடன்… கீரீச் என்ற சத்த்துடன் நின்றது……. சேய்ய் என்றபடி……….பச்சை விளக்குக்காக காத்திருக்க ஆரம்பிக்க…………..

அவனது மொபைலில் அழைப்பு…………..கீர்த்தனாவாக இருக்குமோ என்று எடுத்தான்……… இப்படி அலைய விடுகிறாளே……என்று கோபமாய் எடுக்கப் போனான்………. ஆனால் போனில் ரகு……

இவன் என்ன திடீர்னு………… மதுவைப் பற்றி ஏதாவது தெரிந்து விட்டதா……….. மனம் சற்று பரபரத்த்து…………….. போனை அட்டெண்ட் செய்ய

”பாலா ஃப்ரியா இருக்கியாடா” என்று ஹலோ கூட சொல்லாமல் பேச ஆரம்பித்தான் ரகு…… மதுவைப் பற்றி விசாரிக்கும் அவன் தோழன் ரகு

”சொல்லுடா’ என்று பேச ஆரம்பித்தான்….

“என்ன பாலா…….ஒரு மாதிரி பேசுற…….” ஏதாவது பிரச்சனை என்று துப்பறியும் நிபுணனாய் அவன் கேட்க…

“இல்லைடா…. இது வேற பிரச்சனை…………..என்ன போன் பண்ணியிருக்க……….மதுவைப் பற்றி………ஏதாவது” என்று இழுத்தான்…..

“ஆமாடா……ஒரு குட் நியூஸ்” என்றபோது

பாலா சந்தோசமாக

“மது… மது இருக்கிற இடம் தெரிந்து விட்ட்தா…..இல்ல ஏதாவது நமக்கு சாதகமா விசயம்” என்று வேக வேகமாக கேட்டான்……….

“ஆமாடா………… ஊட்டில ஒரு நம்பர்ல இருந்து பேசி இருந்தாங்கன்னு சொன்னேல………. அந்த நம்பர்………. அது இப்போ திரும்ப வேண்டும் என்று ரிக்வெஸ்ட் போட்ருகாங்க….US la இருந்தானாம்…..இப்போ இங்க செட்டில் ஆகிட்டானாம் திரும்பவும்…….. அவனோட பிஸ்னஸுக்கு அவன் ஏற்கனவே வச்சிருந்த நம்பர் வேண்டும் என்று…..ஸோ நாம அத விசாரிச்சா………அந்த பொண்ணு யாருனு தெரியும்…. அத வைத்து மதுவையும் ட்ரேஸ் பண்ண்லாம டா……”

“ப்ச்ச்……. இப்போ கூட மதுவைப் பற்றி கிடைக்கவில்லை எதுவும்………. சரி பார்க்கலாம்….” என்று சொன்ன பாலாவிடம்,

”டேய் என்ன பார்க்கலாம்…….கிளம்பி வா……….அந்த அட்ரெஸில் உடனே போய் விசாரிக்கலாம்………… “ என்று அவசரப் படுத்தினான் ரகு………….

”ஹ்ம்ம்ம்… ஆனா…..கீர்த்தனா……. என் மனைவி…….. ஃப்ரெண்ட் வீட்ல இருக்கா…. அவள பிக் அப் பண்ண போய்ட்டு இருக்கேன்… .அவள வீட்ல விட்டுட்டு வருகிறேன்” என்று சொல்ல

“சரிடா……. நீ கால் பண்ணு………… இப்போ எந்த ஏரியால இருக்க…………”

”அண்ணா நகர் டா….. என்று சொன்னவன் இந்த ஏரியா தெரியுமாடா உனக்கு…. கொஞ்சம் லேண்ட் மார்க் சொல்லுடா…. சீக்கிரம் போகனும்….” கீர்த்தி அனுப்பிய முகவரியின் ஏரியாவைச் சொல்ல…………….

”தெரியுமே……. என்று லேண்ட் மார்க் எல்லாம் சொன்னான் ரகு…. ஒகேடா………… நானும் பக்கதுலதான் இருக்கேன்…………….. என்றவன்…………. துப்பறியும் மூளை அல்லவா…

”டேய்…………. அது பிரதாப் வீடு இருக்கிற பக்கத்து தெருடா………….. “ என்றான்…….

“ஆமாடா……….. அவன வேற எதுக்கு …………… இப்போ ஞாபகப் படுத்துற………….”

”சொன்னேண்டா……………………. “ என்ற படி போனை வைத்தான்

மீண்டும் கீர்த்தனாவுக்கு போன் செய்தான்………பதிலில்லை.. கீர்த்தனா மேல் உள்ள கோபம் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது அவனுக்கு

மதுவைப் பற்றி தகவல் தெரிந்தும் உடனடியாக போக முடியவில்லை …. எல்லாம் இவளால்……. போனை எடுத்தாலாவது ரகுவோடு போய் விசாரிக்கலாம்… என்றால்……….. இன்னைக்கு இருக்கு இவளுக்கு……. என்னை மட்டும் போன் எடுக்க வில்லை என்றால்……. அம்மா..அப்பா ஆக்ஸிடெண்ட்…..அது முதல் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தாலோ…. இல்லை போன் எடுக்காமல் இருந்தாலோ………..பயம் வருகிறது… அட்லீஸ்ட் ஹலோனு ஒரு வார்த்தை…. இல்லை மெஸேஜ் போடனும்னு அதிகாரம் பண்ணத் தெரியுது……… அதே மாதிரிதான் எனக்கும் இருக்கும்னு இவளுக்கு தெரியாதா……. அவ வச்சதுதான் சட்டம்…….. எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு…” என்று

கொதி நிலையில் வந்து கொண்டிருந்தான்….

----------------

கையில் வைத்திருந்த ரத்தக் கறை படிந்திருந்த அந்த கம்பியை சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்த பிரதீப்………. அதை கீழே போட்டு விட்டு……. மதுவின் அருகில் வந்தான்…………..

அழக் கூட முடியாமல் இருந்த மதுவை நிமிர்த்தினான்….

“ஏண்டி……………என்னை திரும்ப திரும்ப கொலை பண்ண வைக்கிர…. நான் என் கீர்த்தி கூட வாழனும்தானே நினைத்தேன்…………… அப்போ அவளுக்கு ஆதி கையால தாலி கட்ட வைத்து……….. அவன் கொலை பண்ண வச்ச……….இப்போ பாரு……. இன்னொரு கொலை………….. மறுபடி ஜெயிலா………. என்னை என் கீர்த்தியோட வாழவே விட மாட்டியா……………. இனி நான் எப்படி கீர்த்தியோட வாழுவேன்…………… ஆனா விட மாட்டேண்டி…… முதலில் கூட………..அவ தனியா இருந்தா……. ஆனா அவ இப்போ இன்னொருத்தனோட சுத்திட்டு இருக்கா……….. அவளுக்காக ஒருத்தன் உயிர விட்ருக்கான்……..ஆனா அவ இப்போ…………. பாவம் ஆதி…………. இவ காதல நம்பி செத்து போய்ட்டான்…….. என்று வருத்தம் வேறு பட்டான்……

கீர்த்தியைப் பற்றி அவன் சொன்னதில் சந்தோசம் தான் மதுவுக்கு ……….. ஆனால் தற்போது உள்ள சூழ்னிலையில் சந்தோசப் படக் கூட முடியவில்லை…………

“அவ மேல இருந்த காதல்ல.. இனி அவ இன்னொருவனை பார்க்க மாட்டாள்………… அது போதும்னு நினைத்து ………அவள விட்டுடேண்டி………….. என் கூட வாழலேனா கூட பரவாயில்ல……….. வேற யாரும் அவள நெருங்க முடியாதுன்னு……… ப்ச்ச்…………. ஆனா இப்போதானெ தெரியுது…… ஆதி இல்லேனா இன்னோருத்தன்,….. அவன் இல்லேனா இன்னொருத்தன்னு போற ஆளுன்னு………. இனி அவ எவன கல்யணம் பண்ணினாலும் பண்ணி இருந்தாலும்… அவள அனுபவிச்சுட்டுதாண்டி ஜெயிலுக்கு கூட போவேன்……… நான் கூட நினைத்தேன்……….. உன் ஆளு பாலா அவ கூடவே சுத்துறானே……….. நீயும் வேறு இல்லை………உன்னை கழட்டி விட்டுட்டு அவ கூட ஜாயின் அடிக்கப் போறானோனு நினைத்தேன்……… பரவாயில்லை……..உன் மேல பெரிய காதல்தான் அவனுக்கு………….. என்ன உன்னைதான் காப்பாற்ற வரவில்லை….. அதுனால அவன பெருசா கண்டுக்கலை…. ஆனா அவன் கீர்த்திக்கு ஆள் சேர்த்து விட்ருக்காண்டி……….. அவனுக்கே வழி இல்லையாம்………… அதைப் பார்ப்பானா……. என் கீர்த்திக்கு எதுக்குடி மாமா வேலை பார்த்துட்டு இருக்கான்……… என்றவன்

அருகில் கிடந்த கீர்த்தனாவின் அருகில் வந்தான்………….

“பாவம்………….. யார் பெத்த பொண்ணோ……… காலையிலதான் காப்பாற்றினேன்…………… இப்டி என்கிட்ட வந்து மாட்டிகிட்டாளே…………… ஏண்டி………… இப்டி யார் யாரோவெல்லாம் என்கிட்ட மாட்டறீங்க………………. என் கீர்த்தியைத் தவிர”

கீர்த்தனாவின் முகத்தை கையில் ஏந்தியவன் அவளையே பார்த்தான்………

”மாசமா இருக்கியா நீ……………………. எல்லாம் போச்சா………….. இந்த நிலைமையில…………… என்கிட்ட………….. பாவமாத்தான் இருக்கு உன்னை நினைத்து…………………….பாவம் உன் புருசன்……… ஆனா என்னை விட பாவம் இல்லை………. என் மேல என் கீர்த்திக்கு காதலே வரல……….. ஆனா உனக்கு………… உன் புருசன் மேல அவ்வளவு காதல்……. உன் காதல் கிடைச்சிருக்குனா……அப்போ அவன் அதிர்ஷ்டக்காரன் தானே……. இதோ இந்த மது… இவ காதலன் கூட அதிர்ஷ்டம் தான் பண்ணியிருக்கான்….. ஆனா நான் தான் அதிர்ஷ்டம் இல்லாதவன்………” என்றவன்

”எனக்கு ஏன் என் கீர்த்தி காதல் கிடைக்கவே இல்லை……….” என்று வெறிப் பிடித்தவன் போல கத்தி அவளை உலுக்க………..

கீர்த்தனாதான் பதில் சொல்லும் நிலைமையில் இல்லையே…………

”சொல்லுடி…………. சொல்லுடி” என்று அவளை ஆட்டினான்………….

“ஓ உனக்கு என்னைப் பத்தி தெரியாதுல்ல……… நான் என்னைப் பற்றி …. என் காதலைப் பற்றி சொல்றேன்………கேட்டுட்டு சொல்றியா……………..” என்று கீர்த்தனாவிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் அந்த சைக்கோ

மதுவின் கண்களில் இருந்த கண்ணீர் கரை புரண்டு வந்து கொண்டிருந்தது………….

“என் பேரு பிரதாப்…..என் செல்லக் கண்ணம்மா பேரு கீர்த்திகா………. அவ மேல எனக்கு எவ்ளோ காதல் தெரியுமா……. அவ உடம்பு மேலே எல்லாம்……….. அவ மனசு எனக்கு மட்டும் தான் வேணும்னு நினைத்தேன்……….. ஆனா அவ என்ன பண்ணுனா தெரியுமா…..ஆதியை லவ் பண்ணிட்டா……... அதுக்கு இதோ இங்க இருக்காளே இவதான்……… அதுக்கு காரணம்……….. வேக வேகமா கல்யாணம் பண்ணி வச்சுட்டா பாவி…………. நான் கொண்டு போன தாலிய வச்சே…………… அப்புறம் என்ன ஆதிய போட்டுத் தள்ளிட்டேன்………… ஜெயிலுக்கு போய்ட்டேன்……………. அந்த பாலா,மது……. என் கண்ணம்மா…..3 பெரும் சேர்ந்து எனக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டாங்க……….. பாலா யாருனு யோசிக்கிறியா……….. இதோ இங்க இருக்காள்ள இவளொட காதலன்…………… எனக்கும் அப்போ தெரியாது…. ஆதியோட ஃப்ரெண்ட் அப்டினுதான் நினைத்தேன்……… இவங்கள விடு……. ஜெயில்ல இருந்த எனக்கு………..அங்க இருந்து வெளியேறப் போன ஒருத்தனோட நட்பு கிடைத்த்து………… அவன வச்சு என் கீர்த்திய கடத்தச் சொன்னேன்………. எனக்கு தெரியாம போச்சு……………என் கீர்த்தி சென்னைலயே இல்லைனு…………… நான் அனுப்புன நாயி…….. பணத்துக்கு ஆசைப்பட்டு………………………இவள கடத்திட்டு………. என் கண்ணம்மாவைக் கடத்திட்டேன்னு சொல்லிட்டான்………… இந்த சமயத்துல………. என் கேசுல இருந்து பாலா இன்வால்வ் ஆகாம போக……. அப்போ தெரியல எனக்கு பாலா ஏன் வரலேன்னு…………. இவ காணாமல் போனதில் அவன் பைத்தியக்காரன் ஆகி விட்டான் என்று….. எனக்கும் அந்த சமயத்தில் ஈசியா பெயில் கிடைத்தது…..

என்றவன் நிறுத்தி…….

”அப்போதான் ஊட்டிக்கு வந்தேன்……….. என் கண்ணம்மாவை.. என் கீர்த்திய பார்க்க வந்தா………… அங்க இவ இருக்கா…………. நீயே சொல்லு…………….. நாம ஆசை ஆசையா தேடி வந்தவங்க இல்லாம……….. வேற யாராவது இருந்தா…. எப்டி இருக்கும்…….எனக்கும் அப்டித்தான் இருந்துச்சு…… ஆனாலும் இவ மேலயும் எனக்கு கோபம் இருந்துச்சா……………..ஆனாலும் இவ 4 மாதமா அனுபவித்ததே போதும்னு எனக்குத் தோணுச்சு……….விட்ரலாம்னுதான் நினைத்தேன்… அப்போதான் இவ சொன்னா…….

“என் பாலா உன்னை சும்மா விட மாட்டாண்டா…….ன்னு” ….அப்போதான் தெரிஞ்சது……பாலாவுக்கு இவளுக்கு உள்ள சமபந்தம் என்னவென்று…………….. எனக்கு கிடைக்காத காதல் இவங்களுக்கு கிடைக்கக் கூடாதுன்னு முடிவு செய்தேன்………….. நான்… கீர்த்தி தனியா வாழ முடியாம இருக்கும் போது …………….இவங்களுக்கு மட்டும் என்ன வாழ்க்கைனு……….இவள விடல……அப்டியும் இவ தப்பிச்சு போக ரெண்டு தடவை ட்ரை பண்ணூனா….. இவ கொஞ்சம் ஷார்ப்……….சோ இவ சுய நினைவுல இருக்கக் கூடாதுன்னு……… போதை ஊசிக்கு அடிமை ஆக்கினேன்……….. அப்போதான் இவ உன் கண்ணுல மாட்டுனா….. அவ காதலனுக்கு போன் செய்தா……. அதுவும் முடியாம போச்சு………அதுக்கப்புறம் என்ன யோசித்தாள்னு தெரியல……….தப்பிக்க ட்ரை பண்ணல…….. அந்த பாலா கொஞ்சம் சரி ஆகி வந்து…….கேசில் இன்வால்வ் ஆகி…… நான் மறுபடியும் ஜெயிலுக்கு போனேன்……….என்னைக் கூட இவ கடத்தல்ல சந்தேகப் பட்டான்…… நான் இவள இதோ இங்க இருக்காங்கள்ள………..இவங்க பாதுகாப்புல விட்டுட்டு போனேன்……. பெங்களூர்லதான் இருந்தாங்க ரெண்டு பேரும்எனக்கு 1 ½ வருடம் முன்பு விடுதலை ஆகினேன் . ……. நான் போய் இவள அடிக்கடிலாம் பார்க்க மாட்டேன்………. ஆனா என கஸ்ட்டிலதான் வச்சுருந்தேன்………. எனக்கு அதுல ஒரு திருப்தி…………. அப்போலாம் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்த சுமதி ஆண்டி……………. உன்ன கொல்ல வர்றப்ப மட்டும்………. உனக்கும் மட்டும் ஏண்டி சப்போர்ட் பண்ணினாங்க…………. ப்ச்ச் போய் சேர்ந்துட்டாங்க………… என்ன பண்றது……….அவங்க விதி அவளோதான்……….” என்றவன்…..

”சரி விடு…. எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு…… கீர்த்தி தனியா இருக்கா…. நாமளும் அவளப் பார்த்துட்டே இருப்போம்னு………. இருந்தா….. அவ சென்னைக்கே வரல………… தவிச்சுப் போயிருந்தேன்………… நானும் சென்னை வராம இருந்தேன்…….ஆறு மாசத்துக்கு முன்னால………….சென்னை வந்தப்ப…………அவள மறுபடியும் பார்த்தேன்…….. அப்போதெல்லாம் அவகிட்ட வித்தியாசம் இல்ல…. ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னால…………..ஒருநாள் மறுபடியும் தேவதை மாதிரி காட்சி தந்தா……. அதுவும் தனியா இல்லை………… இன்னொருத்தனோட….. ..இனி அவள விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி இவளையும் இங்க கூட்டிட்டு வந்தேன்…… ஏன் தெரியுமா…….. இவள வச்சு என் கீர்த்திகாவை இங்க வர வைக்கப் போறேன்………… ” என்று முடித்தவன்…..

கீர்த்தனாவை தரையில் விட்டான்…… மேலும் தொடர்ந்தான்…அவளைப் பார்த்த படியே

”இடையில் நீ வந்து மாட்டிக்கிட்ட…. இதுக்கு மேலயும் என்னால போராட முடியாது…….. கீர்த்தியை அடைய எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு……… இவள இங்க வச்சுருக்கேன்ன்னு சொல்லி… அவள மிரட்டி வர வைக்கப் போறேன்……… மதுனா என் கீர்த்திக்கு ரொம்ப இஷ்டம்…… என்று மதுவை நக்கலாகப் பார்த்தவன்…

மீண்டும் கீர்த்தனாவிடம் திரும்பினான்……

“என் கதை கேட்டுட்டியா…. சரி… பதில் சொல்லு.. ஏன் என் கீர்த்திக்கு என் மேல காதல் வரவில்லை……என்று அவளிடம் கேட்டவன்…பதில் வரவில்லை என்பதை உணர்ந்து

”அதுக்கும் முன்னாடி ஒண்ணு பண்ணனுமே..………. என் வீட்டுக்கு போய்…. உங்களை மண்ணோடு மண்ணாக்க… தேவையானதை எல்லாம் எடுத்து வருகிறேன்” என்றபடி……….

கீர்த்தனாவையும்……………. அவளருகில் இருந்த சுமதி ஆண்டி என்று சொன்ன அந்த பெண்மணியையும் இழுத்துக் கொண்டு போய் இன்னொரு ரூமில் தள்ளியவன்………… சிறிது நேரத்தில் வெளியேறியும் இருந்தான்…………….. கதவைப் பூட்டியபடி………

-----------------

அவன் வெளியேறி பத்து நிமிடங்கள் ஆகி இருக்கும்………….பாலாவும் வந்து சேர்ந்தான்……..அந்த வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கியவனுக்கு……… அந்த வீட்டின் நிசப்தமே பகீர் என்றிருந்தது……… கீர்த்தனா அனுப்பிய முகவரி இதுதானா என்று மீண்டும் ஒருமுறை சரி பார்த்தபடி கேட்டை தாண்டி வீட்டை அடைந்தான் அழைப்பு மணி இல்லாததால் கதவைத் தட்டினான்………….. மறுபடியும்…மறுபடியும்……தட்டியவன்……….. இப்போது கீர்த்தனா………கீர்த்தி……கீது… என்று பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லாமால் போக…. மீண்டும் தனது மொபைலில் இருந்து அழைத்துப் பார்க்க………… மனம் என்னென்னவோ நினைக்க ஆரம்பித்த்து………… முதலில் தடுமாறிய பாலா தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்து ……..தறிகெட்டு ஓடிய தேவை இல்லாத எண்ணங்களை அடக்கினான்………….தன்னவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது என்று……………….

கதவைத் தட்டி……………ஒன்றும் பிரயோசனமில்லை……. என்று யோசித்தவன்………… கதவை உடைக்கலாமா என்று அதனை கைவைத்துப் பார்க்க…..அதெல்லாம் அத்தனை சாதாரணமாய் இல்லை………….கனமான தேக்கு மரத்தால் இழைத்திருந்தனர்…… அப்போது சற்று தள்ளி கிடந்த கீர்த்தனாவின் காலணி கண்ணில் பட………கீர்த்தனா….அந்தப் பெண்ணைத் தள்ளி உள்ளே போனபோது ஒன்று இங்கேயும்….மற்றொன்று உள்ளேயும் போய் இருந்தது……….

பாலாவுக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது………..செருப்பைக் கூட ஒழுங்காக கழற்றி விட முடியாத சூழ்னிலை என்றால்…………. வேகமாய்……. சுற்றிலும் பார்த்தவனுக்கு அவளின் இன்னொரு காலணி கண்ணில் படவே இல்லை…….

கீர்த்தனா இங்குதான் எங்கோ இருக்கிறாள்…….அவளுக்கு என்னவோ நடந்திருக்கிறது……… அடுத்த கணமே மனம் சொல்ல……….. பாலா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான்……….. அவனையுமறியாமல் அவளுக்கு நடுங்கிய கையோடு மீண்டும் போன் செய்ய……….. இம்முறை கோபம் வர வில்லை……………..மனம் எங்கும் தவிப்பும்…… நடுக்கமும் வர ஆரம்பித்தது…………. ஆனாலும் அவன் மனம் அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது என்ற செய்தியை மூளைக்கு அனுப்பியபடியே இருந்தது

வேகமாய்……….. ரகுவுக்கு போன் செய்து விபரத்தை சொல்லி அவனை உதவிக்கு அழைத்தவன்………. வீட்டின் பக்க வாட்டில் போய்ப் பார்க்க…………அவனது நேரத்திற்கு அதில் ஒரு சன்னல் கதவு மட்டும் மூடப் படாமல் இருக்க……………. திறந்து பார்த்தான்………..முதலில் அவன் கண்ணுக்கு தெரிந்த்து கீர்த்தனாவின் கைப்பை தான்……..அது கிடந்த கோலமே கீர்த்தனாவின் நிலையை தப்பாமல் சொல்ல…………………

‘கீர்த்தி’ என்று அலறினான் பாலா…………………

கண்களை சுழழ விட்ட படி கீர்த்தி…கீர்த்தி என்று கத்தினான்

இப்போது அருகில் இன்னொரு பெண் கிடந்தது அவனுக்கு தெரிய வந்தது…………. தலை சாய்த்துக் கிடந்த அந்தப் பெண் கீர்த்தனா இல்லை என்பது தெரிய…….. உள்ளே நன்றாகத் தேட……………… இரும்புக் கம்பி………….ரத்தம் வடிந்த தரை………….. அது இழுக்கப்பட்டிருந்த கோலம்… எல்லாம் அவனின் உயிரை குடிக்க………………..

கீர்த்தி………… என்றவனின் வார்த்தைகள்……… வாயோடே நின்றன………..

“அய்யோ……………… என் கீர்த்தி……… என்னாச்சு………… யாரு………………. அவளுக்கு எதிரி…………..இல்லை என்னைச் சுத்தி இருக்கிற எதிரி தெரியாம நான் இருக்கிறேனா……மனம் பிதற்ற……….” அவனுக்கு மூளை எந்தவொரு கட்டளையும் பிறப்பிக்காமல் நிறுத்த ஆரம்பித்துக் கொண்டிருந்தது….…………..

அப்போது………………

கீர்த்தி …கீர்த்தி என்ற அவனது அலறலில்……….. மது மெதுவாய் உணர்வுக்கு வந்தாள்…………… போகும் போது பிரதாப் அவளுக்கு ஊசியை போட்டு விட்டுதான் போயிருந்தான்……. அதையும் மீறி …. ’கீர்த்தி’ என்ற வார்த்தையில் தன் நினைவுக்கு வர ஆரம்பித்தாள் மது……………

”கீர்த்தியும் இங்க இருக்காளா……அவ எப்போ இங்க வந்தா………………….கடைசியில் அவளும் வந்து மாட்டி விட்டாளா………”. என்று மனம் துடிக்க ஆரம்பித்தவளுக்கு….போதையில் இருந்ததாலோ என்னவோ………..மூளை இன்னொரு விசயத்தை தாமதமாக அனுப்பியது…………

அது………………….. கீர்த்தி என்று அழைப்பு வந்த குரல் பாலாவின் குரல் என்பது…………….

எந்த நொடி அவனின் குரலை உணர்ந்தாலோ…….. அந்த நொடி…….. அவள் உடம்பில் புது ரத்தம்……………..பாய ஆரம்பித்தது………

பாலா வந்துட்டானா… நினைத்த போதே கண்ணிர் கண்ணில் வழிந்த்து,,,,,,,,,,,,,,

பெரு முயற்சி செய்து……………..தன் தலையை அவன் குரல் வந்த பக்கம் பார்க்க…………அது பாலாவேதான்……….’

”பாலா……” கத்த முயற்சி செய்தாள்………………… வார்த்தை வெளியே வரவில்லை…… கைகளை அவனை நோக்கி ஆட்ட… அதை கண்டு கொள்ள முடியாதவன் போல நின்று கொண்டிருந்தான்… பாலா……ரத்தக்கறை இருந்த இடத்தையே பார்த்தபடி………..

“மது……..இம்முறை பாஆஆஅலாஆஅ…என்று சத்தமாக அழைக்க கீழெ கிடந்த பெண்ணைப் பார்த்தான்…..அவள் ஏதோ சொல்ல வருவது போல் தோன்றியது அவனுக்கு………… ஆனால் அவள் மது என்று அவனுக்கே தெரியவில்லை…………

மது அருகில் இருந்த சுவரைப் பிடித்தபடி எழ…முதலில் விழுந்தாள்………..பின் தன்னை ….தன் மனதின் நம்பிக்கை எல்லாம் உடலில் கொண்டு வந்து ………….எழுந்து பாலாவை நோக்கி சென்றாள்………… தடுமாறியபடி…………… சந்தோசமும்…துக்கமும் அவள் முகத்தில் இருந்தன………..

பாதி தூரம் வருகிற வரை அது யாரோ ஒரு பெண் தான் என்று நின்று கொண்டிருந்தான் பாலா………. உணர்ச்சியின்றி…………….மனைவியையே நினைத்தபடி……….. மூளை மறத்தவனாய்……..

ஆனால்……… மது அவனை நெருங்கி வரும் போது…………..அவன் மூளை அதிர்ச்சியில் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது…………

வாய்……..தானாகவே

“மது………………..”என்று குழறின………கண்களில் இருந்து கண்ணிர் அருவி போல் வழிய…………..

“மதுமா……………….” என்று அவள் அருகில் வந்து கீழே விழப் போனவளின் கைகளை பிடித்து தன்னருகில் கொண்டு வந்தான்………..

இருவருக்கும் என்ன பேசுவது என்று புரிய வில்லை… தெரியவில்லை…………

பாலா

“என்னடா……………இப்படி…….இந்தக் கோலத்துலதான் நான் உன்னை பார்க்கணுமா……….. ஏன்” என்று தட்டுத் தடுமாறி பேச……

மதுவோ………….பேச முடியாமல் மயங்கினாள்…

“மது………….என்னைப் பாரு….. மது..” என்று கத்தியவன்………… வெறிப் பிடித்தவன் போல் பின்னால் ஓடினான்… ஏதாவது வழி கிடைக்குமா என்று…..

மனைவியின் நிலை அவனை யோசிக்க விடாமல் மறத்திருக்க ஆரம்பிக்க………. மதுவைப் பார்த்து தன் நிலைக்கு வந்தான்……..

பின் பக்க கதவினை வெறிப் பிடித்தவன் போல உடைக்க……………. அது……………… அவனின் சில பல முயற்சிகளுக்கு பின் திறக்க…………… வேகமாய் மது இருந்த இடத்தை அடைந்தான்……………

உள்ளே நுழைந்தவனின் கண்கள்…. முதலில் மனைவியைத்தான்…….. நிராசையுடன் தேடியது…. மதுவின் அருகில் போகாமல்……. அவளை சில வினாடிகள் பார்த்தபடி நின்றவனின் கண்கள்……. …………..கீர்த்தனாவின் கைப்பை கண்ணில் பட நடுங்கிய படி எடுத்தான்………… அடுத்து கதவின் அருகில் கிடந்த மற்றொரு செருப்பைப் பார்த்தவனுக்கு… பைத்தியக்காரன் போல் அதை ஓடிப் போய் எடுத்தான்… இப்போது அருகில் கிடந்த ரத்தக்கறை படிந்த கம்பி கண்ணில் பட………………. அது தந்த நினைவின் வேதனையில்…… வலியில்

“கீர்த்தி” என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்……அவளின் கைப்பையையும் காலணியையும் அணைத்தபடி………….. ரத்தக் கறை அந்த ஹாலில் இருந்து இழுக்கப் பட்டிருந்தது…………… அதைத் தொடரவே பாலா பயந்தான்……………….

நீண்ட நாள் தேடிய காதலி கிடைத்தும் அவளை நினைக்க முடியாமல் மனம் மனைவியை எண்ணி கீர்த்தி…கீர்த்தி அரற்ற ஆரம்பித்தது……………. தன் உயிராய் … தன் வாழ்க்கையாய்….. மாறியவள்………. தன்னை விட்டு போய் விட்டாளோ………….. அவளில்லாத உலகத்தில் இனி என்ன…………….. அவனோடு…….. அவன் உயிரோடும் ………. உடலோடும் மனைவி என்ற உறவால்…… கலந்தவள்…………….. அவனைத் தவிக்க விட்டுப் போய் விட்டாளா……………. இங்கு எதற்கு வந்தாள்….. மதுவுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்……….. மதுவைப் பார்த்துதான் அவளைக் காப்பாற்றப் போய்…………… இப்படி ஆகி விட்டதா இவளுக்கு……………..மனம் மருகினான்… துடித்தான் ………..வேரோடு சாய்ந்த மரம் போல்………….விழுந்தான் பாலா………. மனைவியை மட்டுமே சுமந்திருந்த அவன் காதல் மனம்……. தன் துடிப்பை…… அதன் பணியை மேலும் பார்க்க ஆசையில்லாமல்……..தவிக்க ஆரம்பித்தது….. தன் துணை அதன் துடிப்பை நிறுத்தி விட்டதோ என்று………

1,277 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page