
என் உயிரே !!! என் உறவே ??? -60
அத்தியாயம்:60
காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்………
கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திகாவிடம் பேசிக் கொண்டே வந்தாள்…………
வினோத்தும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான்…..ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாலாவுக்கு…. SMS அனுப்பியே விட்டான்
“டேய் உன் பொண்டாட்டிய முன்னால திரும்ப சொல்லுடா……… அவனவன் இருக்கிற நிலை தெரியாம….. ஏண்டா….. உன்னை நான் கூப்பிட்டேனாடா… எங்களுக்கு ட்ரைவ் பண்ணுனு” என்று அனுப்ப
”இந்த அவமானம் தேவையாடா பாலா………..” என்று பாலா நொந்து போனான்
….பின்னால் திரும்பி வினோத்திடம் கண்களாலே மன்னிப்பு கேட்டுவிட்டு……..
“கீர்த்தி முன்னால் திரும்பி உட்கார்” என்க
”பேசிட்டு இருக்கேன்ல பாலா……… வினோத் தப்பா நினைச்சுக்கப் போறான்……..” என்று சொல்ல
அவனுக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல் இருக்க…… அதற்கும் வழி இன்றி….
“என் பக்கத்தில வாங்க செல்லம்… ஒண்ணு சொல்லனும் உன்கிட்ட” என்றவனிடம் ”என்ன பாலா” என்று அவனின் அருகே நெருங்கிப் போக………
அவள் மேலும் தவறு சொல்ல முடியாது……… பாலா தனிமையில்தான் சீண்டுவானே தவிர…… தங்களைத் தவிர வேறு யார் இருந்தாலும்…… கொஞ்சம் தள்ளியே இருப்பான்……….. கீர்த்தி சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதுதான அவன் மற்றவர்களை பார்க்க மாட்டான்… அதனால் பாவம் அவன் மனைவி வினோத்தையும் தன் கணவன் போல் என்று எண்ணி விட்டாள்….
“உனக்கும்……. எனக்கும் மேரேஜ் நடந்துச்சுல்ல……….. அது மாதிரி இல்ல இது…. நீயும் நானும்…… நீ வடக்கே… நான் தெற்கேனு பார்த்துட்டு இருந்தோம்……. அவங்கள விடறியா….. இங்க பாரு….” என்று வினோத் அனுப்பிய மெஸேஜை காட்ட……
”ச்செய்ய்…… கீர்த்தி……. உனக்கு அறிவுன்னு ஒண்ணு இல்லையாடி” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள்……. அதன் பின் பின்னால் திரும்புவாளா என்ன……..
அதன் பின் வினோத் பாடு கொண்டாட்டம் ஆகி இருக்க……….. கீர்த்திகாவின் பாடு திண்டாட்டம் ஆகி இருந்தது
வினோத் மற்றும் கீர்த்திகாவின் அன்றைய இரவுக்கான ஏற்பாடு பாலா- கீர்த்தியிடம் விடப் பட்டிருக்க……. கீர்த்தனா வினோத் அறையில் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு கீர்த்திகாவிடம் சென்று அவளை அனுப்பப் போக…… இடையில் பாலா வந்து
“கீர்த்தி போகலாமா……. வினோத் கீழ இருக்கான் சொல்லிட்டு போகலாம்…வா” என்று அழைக்க……
”கீர்த்திகாவா பேசி… அனுப்பி வச்சுட்டு அத்தை வரச் சொன்னாங்க பாலா” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை
“அய்ய்யோ………… நீ அவள அனுப்பி வைக்கவா………… நீயே இன்னும் ABCD விட்டு தாண்டல…. வினோத் பாவம் டி……… நீ எதுனாலும் சொல்லி……… அவ வினோத்தை விட்டு பத்தடி தூரம் தள்ளிப் போகப் போறா……. வந்துரு தாயே…. வினோத்தே அவள சமாளிச்சுக்கட்டும் வா….” என்று இழுத்தபடி வர
“என்னது” என்று விழித்தவள்……
“ABCD தாண்டமாத்தான் அம்மா ஆகி இருக்கேன் பாருங்க” என்றவளின் பேச்சை எல்லாம் கேட்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு
வினோத்திடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் பாலா …..
வினோத் கீர்த்திகாவின் இருந்த அறைக்கு செல்ல…….. அங்கு அவள் கீர்த்தியை எதிர்பார்த்து திரும்ப…………. ஆனால் வினோத் நின்றிருக்க………
“கீர்த்தி எங்க” என்று கேட்க
“ரொம்ப முக்கியம்…… இப்போ அவள் எங்க போனா என்ன………… அவ புருசனோட கிளம்பிட்டா………”… என்றவன் மோகத்தோடு அவள் அருகில் நெருங்கினான்………
அவனைப் பார்த்தபடியே…………..
“ஓ” என்றவளின் உதடுகள் என்ன சொல்ல வந்ததோ அதற்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு…………..வினோத்தால் சிறை செய்யப்பட………..
கீர்த்திகா முதலில் தயங்கி பின்………..அதில் அடங்க…....... அதன பின் அவன் அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றவன்……… துணைவனாய் பிரதாப்பினால் அவள் கொண்ட அச்சத்தை நீக்கியவன்……….. கணவனாய்…………. அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மனைவியிடம் எழுதத் தொடங்க…………….. ஆரம்பித்து இருந்தான்………….
-------------------------
வீட்டுக்கு வந்த பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது………. ராஜன் தன் மனைவி மகளோடு வந்திருந்தார்……….
வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த போதே மகள் இழந்த வாழ்க்கை அவரை உறுத்த….. மதுவோ சாதரணமாகத்தான் இருந்தாள்……….. ஆனாலும்……….. தலைகீழாய் மாறிய தன் வாழ்க்கையை இனி நினைத்து……. யாருக்கு என்ன லாபம்… துக்கம் தான் மிச்சம் ஆகும்…..
இந்த வீடு அவள் அத்தை வீடு அவ்வளவுதான்……….. அதற்கு மேல் அவளும் இனி நினைக்க முடியாது………. நினைக்கவும் கூடாது……… இதில் தெளிவாக இருந்ததால் அவள் குழம்பவில்லை…………..
பாலாவும்-கீர்த்தியும் வீட்டிற்குள் நுழையும் போது………. அனைவரும் ஹாலில் பேசிக் கொண்டிருக்க………. பாலாவும்..கீர்த்தியும் அதில் ஐக்கியமாகினர்………… பாலா இடையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பி விட….. கடைசியில் மதுவும்… கீர்த்தனாவும், மட்டுமே இருந்தனர்….
மது கீர்த்தனாவிடம்…
“நீ தூங்கப் போ கீது…. நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்து விட்டு…….. போகிறேன்…..” என்றவளிடம்
“இல்ல எனக்கும் தூக்கம் வரவில்லை……” என்று அமர்ந்து விட்டாள்………..
பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன………… இருவரின் கண்கள் தான் அதில் பதித்து இருக்க……… கீர்த்தி மனமும்…….. மதுவின் மனமும் அலை பாய்ந்து கொண்டிருந்தது………..
மௌனம் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது அங்கே………….
திடிரென கீர்த்தனாவின் மொபைல் அழைக்க……. பாலாதான்………. அழைத்திருந்தான்….
”தூக்கம் வரல பாலா………” என்றவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை
”மது இருக்காங்க ……….. தூக்கம் வந்தா வர்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கீழே வந்து விட்டான்………..
“கீர்த்தி……. தூங்க வா…….. படுத்தா தானா தூக்கம் வரும்” என்று அழைத்தவன்…………
”மது நீயும் ….. தூங்கப் போ…….. இப்டியே பழக்கப் படுத்திக்காதம்மா……” என்று சொல்ல…..