
என் உயிரே !!! என் உறவே ??? - 59
அத்தியாயம் 59:
அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்……………..
மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.………….
பாலா-கீர்த்தி வீட்டிலே வைத்து சிறிய அளவில் அதைக் கொண்டாட……….. கீர்த்திகா, வினோத் வீட்டிலும் வந்திருக்க…. கவி …சிந்து கேலியோடு விளையாட……….. ஜெகநாதன் அருந்ததியின் ஆசிர்வாதத்தோடு கீர்த்தனா-பாலா கேக் வெட்டிக் கொண்டாடினர்……….
ஒவ்வொருவரும் அங்கு சந்தோசமாய் இருக்க……. கவியும் சிந்துவும்………….. பாலா-கீர்த்திக்கு ஒரு கிஃப்டை இருவருமாக அளித்து…………. இதை இப்போதே நீங்க ரூம்ல பிரிச்சு பார்க்கனும்………….. போங்க என்று விரட்ட
இருவரும் கிளம்ப கவி மட்டும்
“அந்த கிஃப்டுக்கான டைம் 10 மினிட்ஸ் தான்” உடனே கீழ இறங்கி வந்துருக்கணும்……… என்று சொல்ல
இதப் பிரிச்சு பார்த்துட்டு வருவதற்கு இவ்ளோ டைமா…கவி……….5 மினிட்ஸ்ல வந்துருவோம்…. பேப்பர் மட்டும்தான் வச்சுருக்கீங்களா……….” என்றவளை முறைக்க
”சரி… சரி…… கவி……….. போறோம் போறோம்” என்றவள் வேகமா படி எற அதில் கொஞ்சம் தடுமாற…………. சட்டென்று பாலா பிடித்து விட்டான்…………… அதே நேரத்தில்
“உன்னை… அப்படி என்னடி அவசரம்” என்று திட்டவும் மறக்கவில்லை அவன்
”கீர்த்தி பார்த்து” என்று அனைவரும் பதற…………… சிந்துவோ……… ”கீர்த்திக்கா……… பார்த்து” அவளின் வார்த்தையும் கீர்த்தியின் காதில் விழ…….. கண் கலங்கியது கீர்த்திக்கு………… இத்தனை பேர் அன்பிலும் நெகிழ்ந்தாலும்…. கரைந்தாலும்…………….
“யார் யாரோ பாடினாலும் ஆரோரா ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா”
என்ற வரிகள் அவளைப் பொறுத்த வரை சத்தியம்,,,,,,,, அவளும் இதை உணர்ந்திருந்தாள் தன் பெற்றோரின் பிரிவில்…… உண்மைதானே அவர்களது இடத்தை யாரலும் நிரப்ப முடியவில்லையே…………
இருவரும் உள்ளே போய் கவி-சிந்து கொடுத்த கிஃப்டைப் பிரிக்க…… அது ஒரு சிடி
கவி சொன்ன 10 நிமிடம் புரிய
சிரித்தபடி பாலா அதைப் ப்ளேயரில் ஓட விட …….
“ஹாய் அக்கா……. “
ஹாய் கீர்த்தி”
உங்க ரெண்டு பேருக்கும்…………….. இப்போ ஒரு பாட்டை நாங்க டெடிகேட் பண்றோம்…. சாரி சாரி………… குட்டிப் பாப்பாக்கும்………….” இது உங்களுக்கான பாடல் மட்டும் அல்ல உங்க குழந்தைக்க்குமான பாடல் ………. சாரி சாரி…. இப்டி சொல்லாம சொல்லிட்டோம்…….. உங்க பாப்பாவுக்கான பாலகீர்த்தனம்……………. இதுதான் கரெக்ட்டா இருக்கும்
கேட்க ரெடியா…………. என்ற போதே பாடல் ஒலிக்க அதில் மெய் மறந்தனர் இருவரும்…….
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு
பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் முடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா(…..)
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடன் என் மகனே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா(…..)
மயங்கி இருந்த நிலை………. தொடர்ந்தது…………. இதை விட சிறந்த பரிசினை கணவன் மனைவிக்கு… அதுவும் அவள் தாயாகும் தருணத்தில் இருக்கும் நிலையில் வழங்க முடியுமா என்ன…………
கணவனுக்குள் அடங்கினாள் கீர்த்தனா…. அந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும்………. மனைவியைத் தன்னோடு சேர்த்து அதில் லயித்திருந்தான் பாலா
கவிதான் செய்திருப்பாள் என்று புரிந்தது கீர்த்திக்கு,,,,,,,,,,,, கவி எதார்த்தமாகத்தான் சிந்துவோடு சேர்ந்து இதைச் செய்தாள்
பாலாவும் நெகிழ்ந்திருந்தான்…………….. ஆனால் அவனுக்கு இன்னொரு சந்தேகம்…….. வந்தது,,,,,,,,,,,,, மதுவின் பாடல் இருந்த சிடியை கீர்த்தி கேட்டிருப்பாளோ……….. அதைக் கவியிடம் சொல்லி இருப்பாளோ………..என்று…………. வினோத்திடம் கூட மறைத்த தங்கள் விசயத்தை கவியிடம் கூறியவள் தானே ஒருவேளை மது பாடிய பாடலைக் கேட்டிருந்தால் கவியிடம் சொல்லி இருந்திருப்பாள்………. என நினைக்க மட்டும் செய்தவன்……… தற்போதுள்ள ரம்மியத்தை பேசி கெடுக்க நினைக்க வில்லை………… அவர்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் அவனுக்கு இதற்கு விடை கிடைக்காமலா போகும்………..
கீர்த்தியும் யோசித்தாள்………. நாம மது சீடியைப் பற்றி இவளிடம் சொல்லவே இல்லையே………..எப்படி…………கரெக்டா போடுறா…………. அப்படியே மது போலவே…. என்று யோசிக்க ஆரம்பித்து… பாலா ஏன் இன்னும் பண வ