top of page

என் உயிரே!! என் உறவே!!!-43

அத்தியாயம் 43

கடற்கரையின் அலைகள் கால்களை ஈரமாக்க. சிறிது நேரம் நின்ற கீர்த்திகா பின் ஆதியின் அருகில் அமர்ந்தாள்…

“என்ன…விளையாடி முடிச்சாச்சா…” என்று புன்னகைக்க

”நீ ஏன் வர மாட்டேங்கிற…வா என்று அவனையும் இழுத்து அலையில் நனைய வைக்க.. மது இவர்களைத் தூரத்தில் இருந்து பார்த்தபடி… பாலாவுடன் போனில் கலந்திருந்தாள்

“என்னடா பண்ற…. ” என்று கேட்க

“இந்த மரியாதை மரியாதைனு ஒண்ணு சொல்வாங்கள்ள ….அப்படின்னா என்ன மது… அது நமக்கு வரவே வராத… உன்ன விட 3 வருசம் பெரியவன் தானே நான்.. அட்லீஸ்ட் அத்தான் என்றாவது சொல்லலாமே என் மாமன் மகளே என்று கிண்டலடிக்க

”சரிடா அத்தான்… இப்போ என்னடா பண்ற அத்தான்” என்று பதிலுக்கு தாக்க

“சகிக்கலை… அம்மா தாயே நீ அத்தானும் போட வேண்டாம் … ஒண்ணும் போட வேண்டாம்… என்ன டேமெஜ் பண்றதையே பொழப்பா வச்சுருப்ப நீ…. என்ன பண்ணிட்டு இருக்கேன்னா கேட்ட..ஒரு கைல சிகரெட்…ஒரு கைல தண்ணி…என்ன சுத்தி ஒரு நாலே நாலு வெள்ளைக்காரிங்க…. இதை எல்லாம் வச்சுட்டு என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டு இருக்கேன்…என்று கடுப்பேற்ற முயல..

அவளோ…

“அப்போ நான் ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணவா… சார் முக்கியமான வேலையில இருக்கீங்க போல” என்று போனை வைக்கப் போக

பாலா மதுவிடம் சரணடைந்தான்….

அதன் பிறகு அங்கு அவர்களின் காதல் சாம்ராஜ்ஜியம் போனிலேயே நடக்க ஆரம்பித்தது…

--------------

கையில் பாதி பிரித்திருந்த நிலையில் பெரிய சாக்லேட்டை கீர்த்திகா ஆதிக்கு நீட்ட ஏதென்று கேட்க

அவனது சக வகுப்புத் தோழன் பிரதாப் பிறந்த நாள் என்றும்.. அவன் தனக்கு கொடுத்ததாகவும் கூறியவள்.. அவனிடம் மது செய்த கலாட்டாவையும் கூறினாள்

”எனக்கு கொடுத்ததை மது பறிச்சு சாப்பிடப் போனாளா ஆதி…. அவன் அழவே ஆரம்பிச்சுட்டான்… கீர்த்திக்குதான் வாங்கிட்டு வந்தேன்…. கீர்த்திதான் சாப்பிடனும்னு…. மது அவனோட மல்லுக் கட்டுனா….. ஏன் நாங்கள்லாம் உன் ஃப்ரென்ட்ஸ் இல்லையா எங்களுக்கு எல்லாம் கிடையாதான்லாம் சொல்லி கலாய்க்க ஆரம்பிச்சுட்டா…. அவனப் பார்த்தாலும் பாவமாத்தான் இருந்துச்சு……. அதுக்கப்புறம் நான் இடையில புகுந்து என்றவளை இடைமறித்து

”மதுவுக்கு இல்லாத எதுவும் எனக்கும் வேண்டாம்னு சொல்லி இருப்ப… “ கரெக்டா என்று சொன்னவனை பார்த்து வியந்த கீர்த்திகா

“எப்படி ஆதி …இப்படி நேரில் பார்த்தது மாதிரி சொல்ற” என்றவளை

பின்ன…அங்க உன் புராணம் ஓடும்…இங்க அவ புராணம் ஓடும்…இதுதானே வழக்கமா நடக்குது..

என்றவனை முறைத்தாள் கீர்த்தி…

அங்கு அப்படி நடக்க

-----

கீர்த்தியைப் பற்றிதான் மதுவும் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்…. இப்போதும் அவள் பேச்சுதானா என்று பாலா மனதினுள் நினைத்தாலும்…வெளியில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்..

காலையில் நடந்ததைக் கூறியவள்…

“பாலா..அவனோட பீஹேவியர் வித்தியாசமா இருந்துச்சு… கீர்த்தி கையில இருந்த சாக்லேட்டை நான் வாங்கியவுடனே அவன் முகம் ஒரு மாதிரி… எப்டி சொல்றது…. டோட்டலா வேற மாதிரி ஆகியிருச்சு…. அத எனக்கு சரியா சொல்லத் தெரியல… பயங்கரமா என்னை முறைத்தான்…. அவன் என்னதான் பண்றானு பார்ப்போம்னு நானும் அவனிடம் விளையாண்டேன்…. நான் மட்டும் சாப்பிட்டு இருந்தா என்னை அடித்தே போட்டிருப்பான் போல்… கீர்த்தி வந்து இடையில பேசின பின்னாடிதான் நார்மல் ஆனான்… அவன் கொஞ்சம் சாதுவான டைப் பாலா…. ஆனா அந்த நிமிசம் அவனை அப்படி நினைக்கத் தோணல… சம்திங் இஸ் ராங் இன் ஹிஸ் பிகேவியர்…. அவன் கீர்த்திய லவ் பண்றானோனு தோணுது என்ற போது…

பாலாவும்.

“ஆமாம் மது… கீர்த்திய நான் அன்னைக்கு ஆடிட்டோரியத்தில திட்டுய போது கூட அவன் தான் என்கிட்ட கீர்த்திக்கு பரிந்து பேசினான்னு நினைக்கிறேன். அவன்லாம் ஒரு ஆளுன்னு நீ பயப்படுறியா… புள்ளப் பூச்சி அவன்லாம்… என்று அவளைத் தேற்றியவன்…

“எப்போ பாரு கீர்த்தி…கீர்த்தினு…எரிச்சலா வருது… “

“ஏண்டா உனக்கும் அவளுக்கு ஒத்தே வர மாட்டேங்குது..” என்க

“சே சே அப்டிலாம் இல்ல… அவள பார்த்த முதல் சம்பவமே கொஞ்சம் எனக்கு சரியா இல்ல… எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட கோபமா பேசினாங்களா…. அது வேற… என்னதான் அவ உனக்கு முக்கியம் என்று தோணினாலும்…சில நேரம் இப்படி பேசி விடுகிறேன்…. சாரி.. ” என்றவனிடம்

”சரி விடு…. நீ என்னைக்குதான் மாறப் போறியோ….. கொஞ்சம் சுயநலமா இருக்கியோனு தோணுதுடா…. உனக்கு நீ… உன் சம்பந்தப் பட்ட விசயம்னா என்ன வேணும்னாலும் பண்ற… அடுத்தவங்க விசயத்தில அதை யோசிக்க மாட்டேங்கிற…. இதுதான் எனக்கு உன்கிட்ட பிடிக்காத விசயம்…” என்று சலிப்பாகச் சொல்ல

“ஒரே பையனா வளர்ந்திட்டேன் மது… இப்போ தான் உன்னைப் பார்த்த பின்னாடி…. உன் குணத்தைப் பார்த்த பின்னாடிதான் நானே கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் மா….என்று.. தன் குணம் புரிந்து பணிந்து அன்று சொன்னவன்தான்… பின்வரும் தன் வாழ்க்கையில்…. கீர்த்தனா என்ற பெண்ணிடம் தன் சுயநலத்தை தப்பிதம் இல்லாமல் நிறைவேற்றினான்..

------------------

கல்லூரி வளாகத்தில் கீர்த்திகாவும் மதுவும் அளவளாகிக் கொண்டிருக்க….அவர்களின் முன் பிரதாப் வந்து நின்றான்…. கீர்த்திகா அவனைச் சாதாரணமாகப் பார்த்து ஹாய் சொல்ல.. மதுவோ அவனை.. அவன் பார்வை மாற்றங்களை நோட்டம் விட ஆரம்பித்தாள்…

”கீர்த்தி நான் உன்கிட்ட தனியா பேசனும்… மதுவ போகச் சொல்லு….என்றவன்

மதுவிடம்..

“நீ கொஞ்சம் போறியா… ” என்று தைரியமாக சொன்னான்

“எப்போ பாரு அவ கூடவே ஒட்டிகிட்டு…” என்று சற்று மெல்லமாக முணுமுணுக்க

“நான் போக மாட்டேன..என்ன பண்ணுவ” என்ற அவள் குரலில் இன்றோடு அவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி இருக்க

கீர்த்தியும் அவனிடம்… ஆமா… ப்ரதாப்… அவ இல்லாம எனக்குனு ரகசியம் எதுவும் இல்லை” என்றவளை… கடுமையாகப் பார்த்தவன்

“அப்போ அந்த ஆதிகூட இருக்கும் போது மட்டும் உனக்கு இவ ஞாபகம் வராதா…. இவளும் அவன் கூட மட்டும் தான் உன்னைத் தனியா விடுவாளா…. நல்லா மாமா வேல பார்க்கிறா… நேத்துதானே பார்த்தேன்…. உன்னை அந்த ஆதி கூட…“ என்று வேக வேகமாகப் பேசியவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.. தோழியர் இருவரும்….

அமைதியாக கல்லூரிக்கு வருவான் போவான்… அவனுக்குள் இத்தனை ஆவேசமா… என்று தோன்ற…

மதுவுக்கு கீர்த்திகாவின் மீதான அவன் காதல் புரிய… அவனை சமாதானப்படுத்தும் விதமாக… முதலில் தண்மையாகத்தான் பேசினாள்

“ப்ரதாப்…. உனக்குதான் தெரியுதுள்ள அவ ஆதிய லவ் பண்ரானு…. அது தெரிந்தும் நீ இப்படி பேசுறது நல்லா இல்ல…. ”

“என்ன நல்லா இல்ல… என்ன நல்லா இல்ல… இவ என் கீர்த்தி… எனக்கு மட்டும்..எனக்கு மட்டும் தான்… எனக்கு இவ இல்லேனா…. முடியாது… இவள நான் வேற யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்.. விட்டுத் தர மாட்டேன் என்று…” அவன் சொன்ன வார்த்தைகளையே சொன்னபடி படபடத்தவனை

கீர்த்தி பயந்த விழிகளால் நோக்க.. மதுவுக்கோ சுர்ரென்று ஏரியது..

“லூசாடா நீ அவ இன்னொருத்தன லவ் பண்றான்னு தெரிஞ்சும்…. இப்படி பேசுற… அறிவு இருக்கா… இல்லையா உனக்கு…. இன்னொருத்தன நினைக்கிற அவ உன்னை எப்படி…. கண்டபடி உளர்ற… கீர்த்தி வா… நாம போகலாம்…” என்று கோபமாகப் பேசியவள் கீர்த்தியை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகல முயல…

நகன்ற கீர்த்திகாவின் கைகளை பிடித்து அவனும் இழுக்க…

“மது இவன் கைய விட மாட்டேங்கிறான்….“ என்றவளிடம் வார்த்தைகளை விட கண்ணீரே நர்த்தனமாட… மது கீர்த்தியின் கண்ணீரைத் தாங்குபவளா என்ன…

காளி அவதாரமானாள் மது

“அவ கைய விடுடா” என்று சொன்னவளின் கோப விழிகளை அலட்சியம் செய்தவனாய் தான் பிடித்த நிலையிலே இருக்க

எவ்வளவு சொல்லியும் அவன் ஒரு கல்லூரி மாணவன் போல் இல்லாமல்…. கையை விடாமல் கீர்த்திகாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவனை… ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல்

மது… கோபத்தில் தன் காலில் இருந்த செருப்பைக் கலட்டியவள்…

“நீ இப்போ விடலைனா.. இதுதான் பிய்யும்…. ஒழுங்கா விடுடா அவள…” என்ற போதும் அவன் அவள் கைய விடாமல் கீர்த்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்….

கூட்டம் வேறு கூட… அதை எல்லாம் அலட்சியம் செய்தவனாய்ப் பேசிக் கொண்டிருந்தான் பிரதாப்

“கீர்த்தி கண்ணம்மா…. நீ என்ன லவ் பண்றேனு சொல்லுடா… நான் உன்னை எவ்வளவு விரும்பறேனு தெரியுமா…. இவ என்னைப் போய் உன்னை விடச் சொல்றாடா… நீ நல்ல பொண்ணுதான்… உன்னை இவதான் மாத்தி இருப்பா…. I Love u da…” என்று கொஞ்சல் மொழிகளை எடுத்து விட

கொண்டவனின் கொஞ்சல் மொழிகள் காதில் தேனுற்றும்… கொண்டவன் இல்லாத மற்றவனின் வார்த்தைகள் தேனையா ஊற்றும் தீயைப் பாய்ச்சின…

அதுவும் தங்களைச் சுற்றி கூட்டம் கூட … அதைத் தாங்க முடியாதவளாய்….

“மதூஊஊஊ… என்ன விடச் சொல்லுடி … இவன் பேசுறத எல்லாம் என்னால் கேக்க முடியல” என்று பரிதவித்த தன் தோழியின் வார்த்தைகளில் தன் நிதானத்தை இழந்த மதுவின் கைகளில் இருந்த செருப்பு அவனை நோக்கிப் பாயப் போக

மற்ற மாணவர்களும் கொஞ்சம் நிலைமை புரிந்து … மதுவை தடுத்து… பிரதாப்பை அப்புறப்படுத்த ….விசயம் கல்லூரி சேர்மன் வரை போக… பிரதாப் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டான்……

ஆதியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் கீர்த்தி…

“ராஸ்கல்… கையப் பிடிக்கிறான் ஆதி… அதுவும் காலேஜ் கேம்பஸ்க்குள்ளயே….. அவனா அப்படினு தோனுது…. என் கீர்த்தி யாம்… கண்ணம்மாவாம்… எனக்குத் தெரியவே இல்லடா… இப்படிலாம அவன் மனசுல இருக்கும்னு…. “ அவன் பேசிய விதத்தில் ஆற்றாமையுடன் பேச

ஆதிக்கு எரிந்தது…. கையில மட்டும் அவன் கிடைத்தால் …. அவனை அடித்தே கொன்றிருப்பான் போல் அந்த அளவில் கோபத்தில் அவனும் இருக்க…

“ஒருத்தன் எந்த நோக்கத்தில் உன்கிட்ட பேசுறானு கூட தெரியாம இருந்தியா கீர்த்தி…. உனக்குதான் தெரியல… மதுவுக்குமா தெரியல…. சரி விடு…. போனது போகட்டும்… அவன் இனிமே பிரச்சனை பண்ண மாட்டானு நினைக்கிறேன்… அதுக்கு மேல எதுனாலும் தொந்தரவு பண்ணினால்… எனக்கு உடனே போன் பண்ணு….. பார்க்க அம்மாஞ்சி மாறி இருந்துட்டு என்னவெல்லாம் பண்றானுங்க…” என்ற படி…கோபத்திலும் அவளை சமாதானப் படுத்தியவன்… மதுவிடம் அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் படி சொல்லிச் சென்றான்….

மதுவுக்கு பெரிய பயமெல்லாம் இல்லை பிரதாப் மேல்…. அதனால் கீர்த்தியை தேற்றினாள்… நம்மை மீறி அவன் என்ன பண்ணப் போறான்… உன்ன விரும்பியிருப்பான் போல… அத அவன் எக்ஸ்பிரஸ் பண்ண விதம் சரி இல்ல…. மத்த படி அவன் நிதானமா இனி யோசிச்சுப் பார்த்தா.. அவன் பண்ணின தப்பு அவனுக்கு புரியும் கீர்த்தி….” என்று பிரதாப்பின் நிலையில் இருந்தும் யோசித்துப் பேச…ஓரளவு சமாதானம் ஆனாள் கீர்த்தி….

-------------------------

ஆனால் பிரதாப்போ வேறு மாதிரி யோசித்துக் கொண்டிருந்தான்…… முந்தின நாள் அவளை ஆதியுடன் சேர்ந்து பார்த்த்தில்.. அவனோடு சிரித்து கடற்கரையில அலைகளில் ஆட்டம் போட்டவளை நொந்தும் வெந்தும் போனான்…. தனக்கு முன் அவன் சொல்லியதால் தான் கீர்த்தி அவனை காதலித்து விட்டாளோ என்று எண்ணியவன் எதையும் யோசிக்காமல் தன் மனதைச் சொல்லி கீர்த்திகாவின் காதலைப் பெற அவளிடம் பேசப் போக…. அதற்குத் தண்டனையாய் கல்லூரி நிர்வாகமும் அவனை நீக்கி இருந்த்து… காதலைச் சொன்னதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று யோசிக்கும் போதே…. மதுபாலா அதிகப்பிரசிங்கியாக பண்ணிய வேலையே……. கல்லூரி நிர்வாகம் தனக்கு கொடுத்த தண்டனைக்கு காரணம் என்று நினைத்தான்….

கீர்த்தி..கீர்த்தி மட்டும் தான் அவன் நினைவில் இருக்க…. அவள் இன்னொருவனை விரும்புகிறாள் என்ற நிலையில் கூட அவனால் அதை ஏற்க முடியவில்லை…

வசதியானவன் தான் அவன்.. ஆனால் சிறு வயதிலேயே தாய் வேறொருவனுடன் போய் விட… தந்தையும் கண்டு கொள்ளாமல் … வேலைக்காரர்களின் கவனிப்பில் வளர… ஒழுங்கான தாய் தந்தை வளர்ப்பிலே ஆயிரம். ஓட்டைகள் இருக்க… இவன் எப்படி இருப்பான்… நல்லவனாகவா இருப்பான்.. தறுதலையாக மட்டுமே இருந்தான்…. அவனுக்கு அவன் தனிமை போக பள்ளி வயதிலேயே சிகரெட். தண்ணி… போதை மருந்து வரை அத்தனையும் துணையாக இருந்தன…. மாது மட்டும் தான் பாக்கியாக இருக்க.. அதில் அவனுக்கு விருப்பம் இல்லை… தன் அன்னை செய்த தவறில் பெண் மோகம் மட்டும் அவனுக்கு இல்லை… தன் கல்லூரி பருவத்தில் அடியெடுத்து வைக்க…. அங்குதான் கீர்த்திகாவிடம் தன் மனதை பறி கொடுத்தான்.. அவளின் அழகில்… அவளின் அமைதியான நடவடிக்கைகளில்…. அவளை தன் மனதில் மனைவியாகவே பாவிக்கத் தொடங்கி இருந்தான்… தன் அத்தனை கெட்ட பழக்கங்களையும் மறக்கத் தொடங்கி இருந்தான்…. வெளியில் அவன் தோற்றம் எளிமையாக… பார்த்தால் அப்பாவியாக இருந்தாலும்… மனதில் அவன் குரூரங்களின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தது யாருக்கும் புரியாமல்…தெரியாமல் போனது என்பதே உண்மை…

ஆனால் கீர்த்திகாவை அவன் நேசித்தது உண்மையாகத்தான்…. அதில் எந்த விகல்பமும் இல்லை.... அதெல்லாம் நேற்று வரை…. என்றைக்கு ஆதியுடன் அவளைப் பார்த்தானோ அப்போதே அவன் மனதின் குருரம் அவனை ஆட்க் கொண்டது…. அவள் தனக்கு வேண்டும்…. தன் காதலைச் சொல்ல ஆன தாமதத்தால் அவள் இனொருத்தனைக் காதலித்த விபரீதம்.. இனி தொடர்ந்து நடக்கக் கூடாது என்று அவளைத் தன்னவள் ஆக்க அவசரம் கொண்டது…

-----------------------

காலமும்… நேரமும் கெட்டதாக ஆனால்.. நடக்கும் அத்தனையும் கெட்டதாகத் தான் நடக்கும்.. அதை நிரூபிப்பது போல்.. மது-கீர்த்தியின் வீட்டில் அவர்களுக்குத் துணையாக இருந்த… வசந்தி அம்மாவும்… அவர்கள் வீட்டில் காவலுக்கு வேலை செய்து வந்த அவர் கணவரும்…. அன்று காலையில்தான் கிளம்பி இருந்தனர்… அவர்கள் மகளுக்கு திடிரென்று பிரசவ வலி ஏற்பட்டு விட்டது என்ற காரணத்தால்…

வழக்கம் போல… மது முன்னால் இருந்த தோட்டத்தில் நின்று மது தன் தாயுடன் பேசிக் கொண்டிருக்க… .கீர்த்தி உள்ளே படித்துக் கொண்டிருந்தாள்…..

“அம்மா…அப்பா இன்னும் என் மேல கோபமாத்தான் இருக்காரா என்ன… “ என்கின்ற போதே முகம் வெளிர பார்வை அவள் முன் நின்ற பிரதாப்பின் மீது நிலைக்க… அவசர அவச்ரமாக போனைக் கட் செய்தவள்… அவனிடம் எகிற ஆரம்பித்தாள்…

பாலா..ஆதியே வீட்டிற்குள் வந்ததில்லை… விட மாட்டார்கள் இருவரும்…. வாசல் வரைதான் இருவருக்கும் அனுமதி என்றிருக்க பிரதாப் அநாகரிகமாக நுழைந்ததை அவள் பொறுப்பாளா என்ன…

மது-கீர்த்திகா … இருவரும் இரவு உடையில் வேறு இருந்தனர்….

”டேய் …எங்க வந்த….“ என்ற அவளின் கேள்வியை எல்லாம் சட்டை செய்யாதவனாய்….

கீர்த்தியைப் பார்க்க உள்ளே போக முனைவதிலையே குறியாக இருந்தான்…. அவன் இங்கு வருவான் என்றெல்லம் நினைத்து கூட பார்க்க வில்லை…. எப்போதும் போல் கதவு வேறு திறந்துதான் இருந்தது…. அவளைத் தாண்டி உள்ளே சென்றவனை தடுத்து நிறுத்த முடியாமல் மதுவும் அவன் பின்னாலேயே ஓட ஆரம்பித்தாள்… போகும் போதே ஆதிக்கும் போன் செய்து நிலைமையை சொல்லி உடனே வரும்படியும் சொல்ல மறக்க வில்லை அவள்…

மது உள்ளே வந்த போது… பிரதாப்பைப் பார்த்தபடியே கீர்த்தி திக் பிரமை பிடித்து நின்ற கீர்த்திதான் கன்ணில் பட…. கீர்த்தியின் அந்த நிலைமை.. முன்னால் நின்றவனைப் பார்த்து மட்டும் அல்ல… அவன் கைகளில் இருந்த தாலியையும் பார்த்துதான்….

“மது” என்று மட்டும் தான் வார்த்தைகள் வந்தன…

“பிரதாப் என்ன பண்ற…. நீ …. வெளில போ…. இதெல்லாம் ஓவர் டா….. போலிஸ்க்கு போன் பண்ணினேன்.. அவ்வளவுதான் உன் வாழ்னாலே போய்டும்… “ என்று அவன் கைகளை பிடித்து அவனை முன்னேறாமல் செய்யப் பார்க்க…. அவனின் வலிமையின் முன் மதுவின் வலிமை எம்மாத்திரம்

மதுவை உதறிவிட்டு கீர்த்தியின் அருகில் சென்றான்….

மது வாசலிலும் பார்வை வைத்துக் கொண்டே… ஆதி எப்படியும் வந்து விடுவான்… அதுவரை இவனைச் சமாளித்தால் போதும் என்று முடிவுக்கு வந்தவளாய் அவனோடு பிடித்தபடி… போராட ஆரம்பித்தாள்…

“கீர்த்தி நீ வெளிய போ…. ஆதிக்கு போன் பண்ணிட்டேன்….. இவன் என்னை ஒண்ணும் பண்ண மாட்டான்…. நீ போ” என்றவளை விட்டு போக மனம் இல்லாமல் அங்கேயே நின்றாள் கீர்த்தி…

”கீர்த்தி நான் சொல்றேன்ல நீ போ” என்று மது பிரதாப்பை பிடித்தபடி கத்த….

”கீர்த்தியோ… இல்ல நான் போக மாட்டேன்.. நீயும் வா” என்ற போதே பிரதாப்பின் கைகள் கீர்த்தியை சுற்றி வளைத்தன…

“விடுடா அவள….” என்றவளை சுவரோரமாய் தள்ளியவன் கையோடு கொண்டு வந்திருந்த தாலியை கீர்த்திக்கு கட்ட வெற்றிச் சிரிப்போடு ஆயத்தமானான் பிரதாப்…

கீர்த்தியின் நிலைமையை சொல்வதென்றால்….என்ன நடக்கிறது… என்று உணரவே அவளால் முடியவில்லை…. மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது போல இருக்க… நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொள்ள வெளிரிய முகத்துடன் மதுவைப் பார்க்க…

அவன் தள்ளி விட்டதில் நெற்றியில் இருந்து ரத்தம் வேறு மதுவுக்கு வந்து கொண்டிருந்த்து…

எழவே முடியவில்லை… ஆதி இப்போதைக்கு வர மாட்டான் போல… என்று தோண்ற…

கீர்த்தியிடம் ….

”சொல்லித் தொலையுரேன்ல… அவனைத் தள்ளி விட்டுட்டு வெளில போ…. கீர்த்தி… ஏன் கீர்த்தி இப்படி நிக்கிற…..” என்று அவள் கோபத்தில் கக்கிய வார்த்தை எல்லாம் கீர்த்தியின் காதில் விழுந்தாலும் அவளுக்கு அதிர்ச்சியில் எதுவும் செய்ய இயல வில்லை…. நின்ற இடத்தில்லேயே நின்றாள் அவள்…

கீர்த்தியின் அதிர்ச்சியை உணர்ந்த மது… இதற்கு மேலும் தான் எதுவும் செய்யாமல் இருந்தால்…. விபரீதம் தன் தோழியின் வாழ்வில் நடந்தே விடும் என்பதை உணர்ந்தவளாய் …. தன் உடல் பலம் அத்தனையையும் திரட்டி…. எழுந்தவள்… ஆவேசத்துடன் அவர்கள் அருகில் சென்றாள்….

அவள் எழுந்து வந்ததை எதிர்பார்க்காத பிரதாப் சற்றுத் தடுமாற…. அதைப் பயன்படுத்தி… அவன் கையில் இருந்த தாலியை வேகமாகப் பறித்து வெளியே எறிய அது அவர்கள் அடுக்கி வைத்திருந்த செருப்பின் மேல் விழுந்தது…

அவன் தாலியைப் பறித்த கீழெ போட்ட உத்வேகத்தில் மது அவனை எகத்தாளமாகப் பார்க்க…. ப்ரதாப்பின் கோபம் தாறுமாறாக ஓட…கீர்த்தியை விட்டு விட்டு… மதுவின் கழுத்தை தன் கைகளால் நெறிக்க ஆரம்பித்தான்…. மது ஒன்று முடிவு செய்தாள்… தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை…கீர்த்தி இவனிடம் இருந்து இப்போதைக்கு தப்பிக்க வேண்டும் என்று நினைக்க… நினைக்கும் போதே பாலாவின் நினைவு வேறு வர… இனி பாலாவைப் பார்ப்போமோ என்று கூட நினைத்து விட்டாள்….

“கைகளால் கீர்த்திக்கு சைகை செய்தாள்…” போகச் சொல்லி…..

கீர்த்திக்கு இப்போதுதான் உணர்வு வர…. மதுவை அவன் கைகளில் இருந்து மீட்க போராட ஆரம்பித்தாள்…..

இரு பெண்களின் போராட்டமும் அவனிடம் எடுபடாமல் போக…. மது ஒரு கட்டத்தில் மயங்கப் போனாள்….

அதே நேரம் ஆதியும் வர … தோழியர் இருவருக்கும் நிம்மதி வர …. ஆதி வந்து மதுவை வலுக்கட்டாயாம பறிக்க…. மது அப்போது காப்பாற்றப்பட்டாள்….

கீர்த்தி ஆதியை கட்டிப் பிடித்துக் கொண்டு அழ …

“நான் வந்துட்டேன்லமா…. இவன இன்னைக்கு என்ன பண்ரேனு பாரு…” என்று பிரதாப்பை நோக்கிச் சென்றான்….

ஆதியைக் கட்டிபிடித்து அழுத கீர்த்தியைப் பார்த்த பிரதாப்புக்கு உடலெல்லாம் எறிய …. அவனை நோக்கி வெறியோடு வர…

மது இப்போது தன்னை ஆசுவாசப்படுத்தியவள்…. ஒன்றை யோசித்தாள்… கீர்த்தி ஆதியின் மனைவி ஆகினால் மட்டுமே பிரதாப் அடங்குவான் என்று தோன்ற…

உடனே ஆதியிடம்….

“ஆதி வெளில… இவன் கொண்டு வந்த தாலி கிடக்கிறது…. அதை எடுத்து கீர்த்தி கழுத்துல கட்டிடுங்க…. அப்போதான் இந்த பொறுக்கி ராஸ்கல் அடங்குவான் “ என்று சொல்ல….

ஆதி அதிர்ந்து விட்டான்…

“என்ன தாலி கட்ட வந்தானா…. நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது அவனுக்கு” என்று

ஆனாலும் மனம் மது சொன்ன வார்த்தையை கேட்க மறுத்தது… தன் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தான் அவன்…. இப்படியா நடக்க வேண்டும் என்று தோண்ற

கீர்த்தியும் கட்டாயப் படுத்த ஆரம்பிக்க… வேறு வழி இன்றி வெளியே வந்து பார்க்க அது செருப்பின் மேல் கிடந்த்து…

’மாங்கல்யம்’ … அது செய்ய பொன் உருக்கும்போதே அத்தனை சடங்கு சாங்கியம் பார்ப்பார்கள்…. அப்படிப்பட்ட தாலி செருப்பின் மேல் கிடக்க அதை எடுக்கவே பிடிக்க வில்லை அவனுக்கு… கீர்த்தியும் மதுவும் கூட அதை நினைத்துப் பார்த்தனர்….

ஆனாலும் வேறு வழி இல்லை என்று உணர்ந்த மது….

ப்ரதாப்பை உள்ளே வைத்து பூட்டியபடி கீர்த்தியை வெளியே இழுத்து வந்து ஆதியின் அருகில் நிறுத்தி

தன் கைகளில் அந்தத் தாலியை எடுத்து ஆதியிடம் நீட்டி

“கட்டுங்க ஆதி…. என்று கூற…

வாங்கத் தயங்கினான் ஆதி…. அவன் எதிலும் நல்ல நேரம்.. நல்ல சகுனம் பார்ப்பவன்…. இப்படிப்பட்ட தாலியைக் கட்ட வேண்டுமா என்று நினைக்க

அதனால் தயங்க.. மது படபடத்தாள்

“என்ன ஆதி தயங்குரீங்க… கீர்த்திய லவ் பண்றீங்கதானே… சொல்லுங்க… இல்லேணா நாங்க வேற வழிய பார்த்துக்குரோம்” என்று கூற

மதுவின் வார்த்தைகளில் கீர்த்தியும் அவனைப் பரிதாபமாகப் பார்க்க… வேறு வழி இன்றி மனதில் சஞ்சலத்துடன் மாங்கல்யத்தை அணிவித்தான்…

அதைச் சன்னல் வழியே பார்த்த பிரதாப் உக்கிரமானான்….

கீர்த்திக்கு தாலியை கட்டியவன்… அதே வேகத்தில், இதற்கெல்லாம்… காரணமான பிரதாப்பை வெளியே இழுத்து…. கோபத்தில் அடிகளை இறக்க… அடிபட்ட பாம்பாய் வெளியேறினான்… பிரதாப்…. அப்போது ஒரு பிரச்சனையும் செய்யாமல்…. நகர்ந்தான்…. ஆனால் கீர்த்தியையே பார்த்தபடி….

அவனின் பார்வையில் இன்னும் ஆதியோடு ஒன்றினாள் கீர்த்தி…

மது பிரதாப்பை வெற்றியின் எக்களிப்போடு பார்க்க… இது அத்தனைக்கும் காரணமான மதுவின் மேல் ஆறாப் பகை கொண்டான் அவன்…

ஆதியைப் பார்த்த… அவன் கைகளில் அடங்கியிருந்த கீர்த்தியைப் பார்த்து… அவர்கள் ஜோடியாக நின்றதைப் பார்த்து வஞ்சினம் கொண்டான்….

அவன் ஒண்றும் சொல்லாமல் போனதப் பார்த்தவர்கள்.. சிறிது நேரம் அப்படியே நின்றனர்… நடந்த சம்பவம் தந்த தாக்கத்தில்…

அதன்பிறகு மதுதான் சகஜ நிலைக்கு திரும்பியவளாய்

“கீர்த்தி” என்று சந்தோசமாக தோழியைக் கட்டிப்பிடித்தவள்…. ஆதியிடமும் மன்னிப்பு கேட்கத் தவறவில்லை….

இருவரையும் பத்திரமாக இருக்கச் சொன்னவன்…..அவர்களை வீட்டின் உள்ளே படுக்க வைத்து விட்டு அங்கேயே வெளியே படுத்தும் உறங்க ஆரம்பித்தான்…. ஆனால் தூக்கம்தான் வரவில்லை… பாலாவுக்கு கால் செய்து …. நடந்ததை எல்லாம் சொன்னான்….

பாலாவும் அதற்கடுத்த மறு நாளில் இந்தியாவில் இருந்தான்…

773 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page