top of page

என் உயிரே!! என் உறவே!!!-42

அத்தியாயம் 42:

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாமே அந்த இரு ஜோடிப் புறாக்களுக்குமே அவர்கள் காதலின் வசந்த காலமே…

பாலா மதுவின் காதலை ஒத்துக்கொண்ட பின்னர்…. இவர்கள் பற்றிய கவலை இல்லாமல் ஆதி-கீர்த்திகா தங்கள் காதலில் திளைத்தனர்…

பாலாவினுள் மதுவின் காதல்.. அவள் நேசம் அவன் உயிரோடும்… அவன் உள்ளத்தோடும் சீராடியது…

அவள் காதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போராடினான் என்றே சொல்ல வேண்டும். அவள் காதல் பாலாவின் ஒவ்வொரு செயலிலும் மதுவை பிரதிபலித்தது…

எதற்கெடுத்தாலும் கோபப்படும் அவன் குணம்…. கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது… எந்த ஒரு விசயத்திலும் அடுத்தவரின் நலனைப் பார்க்கும் குணமும்… அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவள் குணமும் அவனுள் வரத் தொடங்கி இருந்தன…

பாலா தன் அலுவலகத்தை அப்போதுதான் தொடங்கியிருந்த காரணத்தால்… மதுவுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திணர… மதுதான் தனக்காக அவன் சிரமப் பட வேண்டாம் என்று வாரம் ஒரு முறை வந்து பார்த்தாலே போதும் என்று சொல்ல... முடிந்த அளவு அவளைத் தினம் பார்ப்பான்…அதுவும் 10 நிமிடம்தான்…

மது அவனுக்காக…. காத்திருக்கும் நேரத்தையும்.. அருகில் உள்ள குப்பத்தில் உள்ள சிறார்களோடு உற்சாகமாகக் கழிப்பாள்… பாலா வரும் வரை…

அன்றும் அவன் தாமதமாக வர…

ஒரு கையால் தலையைக் கோதியபடி… மறு கையை அவளின் தோள் மேல் போட்டபடி அவளின் அருகில் வந்து அமர்ந்த அவனிடம்… மது….

“என்னடா…. இன்னைக்கு வருவியோ மாட்டியோனு நெனச்சேன்… வந்துட்ட..” என்று காத்திருந்த தவிப்போடு கேட்க

“கொழுப்பாடி உனக்கு… சும்மா இருந்த ஒரு நல்ல பையன காதல்ல புடிச்சு இழுத்து விட்டுட்டு… இதுவும் நீ கேட்பாய்……. இன்னமும் கேட்பாய்….” என்றவன்…

“யாரு… நீ … நல்ல பையன்…” நக்கலடிக்க

”பின்ன… தம் அடிக்க மாட்டேன்.. தண்ணி அடிக்க மாட்டேன்… மட்டன் கூட சாப்பிட மாட்டேன்…. பொண்ணுங்க விசயத்தில….உன்னத் தவிர சுத்தமாவே அலர்ஜி… அப்போ நான் நல்ல பையன் தானே…” என்று கண் சிமிட்ட

“அடப் பாவி… நீ சொன்னதில பொண்ணுங்கனு சொன்ன விசயத்தில வேணும்னா ஒத்துக்கறேன் … நல்ல பையன்னு…. ஆனா மற்றது எல்லாம் நீ டிரை பண்ணிட்டு ஒத்து வராம விட்ட விசயங்கள்…. ஒகே வா இருந்திருந்தா கண்டினியூ பண்ணியிருந்திருக்க மாட்ட.. என்கிட்டயேவா காதுல பூ சுத்தர… வேற எவனாச்சும் வருவா… அவகிட்ட சுத்து உன் கதையை எல்லாம்..”

“பாலா… நீ தப்பிச்ச… பொண்ணுங்க விசயத்திலனாலும் உன் மது உன்னை நம்புறாடா…” என்றவனை… கண்களில் பெருமை பொங்கப் பார்த்தவள்

”அது என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல சொன்னேன்… ஏதோ நானா இருக்கப் போய் நீ எவ்வளவு இன்சல்ட் பண்ணினாலும்….அதை எல்லாம் தொடச்சுட்டு… சுத்தி சுத்தி வந்து உன்னைக் கரெக்ட் பண்ணினேன்…. அது மட்டும் இல்ல… என்னைத் தவிர வேறொருத்திய உன்னை நெருங்க விடுவேனா… உன்னை சுத்தி இந்த மதுவோட காதல்… நெருப்பு வளையமா எப்போதும் இருக்கும்…. அபிமன்யூ சக்கர வியூகத்தை போல… என்னைத் தவிர வேறு யாராலும் உன்னை நெருங்க முடியாது…” என்று தன் காதலின் மீதிருந்த கரை காணா நம்பிக்கையில் பேச

பாலா அவளது காதலில் கர்வம் கொண்டான் என்பதே நிஜம்…

“சரி விடு… டாபிக் மாறுது… நம்ம ரெண்டு பேருக்கும் இடையே இன்னொருத்தினு கேக்கவே நல்லா இல்ல… எனக்கு என் மது மட்டும் போதும்…” என்று இன்னும் அருகில் அமர்ந்தவனை…. விட்டு விலகி அமர்ந்தாள் மது…

அதைப் புரிந்தவனாய்….. “அப்டியே தள்ளி தள்ளி உட்கார்ந்து… அடுத்த பென்ச் ல போய் உட்கார்ந்திடாத…. என்று கிண்டலாக கூறி அவளைத் தன் புறம் இழுக்க…

“பரவாயில்லை...” என்றபடி முணங்கிய மதுவிடம்.. கொஞ்சம் எரிச்சலாய்

”நெருப்பு வளையம்… சக்கர வியூகம் லாம்னு வாய் கிழிய பேசுற… நீயே அதை உடைத்து வர முடியாது போல…” என்றவன்.. ஞாபகம் வந்தவனாய் …அவள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தான்

”இன்னைக்கு நான் வந்தா என்ன… வரலேனா என்ன… போன் வேற அடிக்கடி பண்ணிருக்க.. ஏன்… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”

“எங்க நீ வராம போய்டுவியோனு நெனச்சுதான்…கண்டிப்பா வரச் சொல்லி போன் பண்ணினேன்….… நல்ல வேளை வந்துட்ட” என்றவள் அவன் புறம் திரும்பி நேராக அமர்ந்து ….சரி எனக்கு விஷ் பண்ணு” என்று கேட்க…

எதுக்கு… என்று புரியாமல் கேட்க

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. உன்னைப் படைத்த கடவுள்… உன்னை இம்சப் படுத்துறதுக்கும் ஒரு ஒரு இம்சையைப் படைத்தார்.. அந்த இம்சையைப் படைத்த நாள்” என்று கூற… உற்சாகத்துடன்

“ஹேய் மதும்மா…உனக்கு இன்னைக்கு பிறந்த நாளா…” .என்றபடி வாழ்த்துக் கூறியவன்

“ஏன் என்கிட்ட முன்னாலேயே சொல்லல… இந்தக் கு… கீர்த்தி கூட எனக்குச் சொல்ல வில்லை… இருக்கு அவளுக்கு” என்று கீர்த்தியை திட்ட ஆரம்பிக்க

“உனக்கு அவள திட்டலேனா…. தூக்கமே வராதாடா… நான்தான் சொல்ல வேண்டாம்” என்று சொன்னேன்…”

இதைச் சொன்னவுடன் அவன் கண்களில் வந்த கோபத்தில்

”உன் காதலியோட பிறந்த நாள் தெரியல உனக்கு… இதுல உனக்குலாம் கோபம் வேறயாடா… போடா… ஆனா உன்னை என்னைக்கு லவ் பண்ன ஆரம்பித்தேனோ அன்னைக்கே எனக்குத் தெரியும்… உன்கிட்ட எல்லாம் ரொம்ப எதிர்பார்க்கக் கூடாதுன்னு…. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா… என்னோட பிறந்த நாளே தெரியல உனக்கு.. நீ எல்லாம் ஆஃபிஸ் ல இருக்கற எம்ப்ளாயியோடா பிறந்த நாளை ஞாபகம் வைத்து பிரமோசன் கொடுக்கப் போகிறாயா… கிழிச்ச…” எனச் சொல்ல

“ஹலோ… அவங்க பிறந்த நாள் எல்லாம் பயோடேட்டால இருக்கப் போகுது…. ப்ரமோசன் கொடுக்கும் பொது அவங்களோட பயோடேட்டாவ பார்த்து கொடுக்கப் போகிறேன்… அது வேற டீல்… அவங்களும் நீயும் ஒண்ணா… நாம அப்படிப் பண்ணினா… அவங்க உற்சாகமா வேலை பார்ப்பாங்க… இது ஒரு பிஸ்னஸ் தந்திரம்… அதுனால நமக்குதான் லாபம்…அதை விடு” என்றவன்

“அடப்பாவி…. சுயநலக்காரண்டா நீ…. உன்னை எல்லாம்… டேய் லூசு…. நீ நல்லதுதான் பண்ற.. அதை வெறும் பிஸ்னஸ் மைண்டோட மட்டும் பண்ணாம…. மனப்பூர்வமா பண்ணு….புரிந்ததா….” என்று சொல்ல

“சரி… சரி.. அட்வைஸ் பண்ணியே நேரத்தை ஓட்டிடுவியே… நேத்தே சொல்லி இருக்கலாம்ல மது…” என்று யோசித்தவன்…

“இப்போ கடைக்கும் போக முடியாது… என்ன பண்ணலாம்… ஆனா நான் கிஃப்ட் குடுக்கணுமே” என்று யோசித்தவனிடம்

“ஒண்ணும் வேண்டாம்… நீ ஃபீல் பண்ற மாதிரிலாம் சீன் போடாத….”

“சத்தியமா மது….” என்று அப்பாவியாய் மாறி கூறியவனிடம்

“நம்பிட்டேண்டா… முதல்ல உன் முகத்தை மாத்து…” என்று சிரிக்க

”மது…மது டார்லிங்” என்றபோதே குரலில் பிசிறடிக்க

“என்னடா… திணறுற” என்று நிமிர்ந்த அவளுக்கு அவனின் பார்வை மாற்றம் புரிய…

“அது..அது வந்து.. நான் கிஃப்டும் வாங்கிட்டு வரல.. உனக்கு கிஃப்ட்டும் குடுக்கணும்… என்ன பண்ண… அதுனால… இப்போதைக்கு என்கிட்ட இருந்து கொடுக்க முடிஞ்ச விசயம்னா.. அது என்றவன் அவள் உதட்டைப் பார்த்தபடி…

“ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்ற போதே முறைத்த அவளிடம்

“ஹேய் மதுமா… நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல… அதெல்லாம் ரொம்ம்ம்பத் தப்பு… ஜஸ்ட் கன்னத்தில மட்டும்..” இன்னும் அவள் கோபத்தில் இருக்க..

இன்னும் இறங்கி

“அதுவும் கொஞ்சம் தப்புதான்… சரி கைல மட்டும்..ப்ளீஸ்” எனச் சிறு பிள்ளையாய்க் கெஞ்ச

”நான் தானே காதலை உன்கிட்ட சொன்னேன்… அது மாதிரி நான் தான் உனக்கு முதலில் தருவேன்… அதுவரை நீ காத்திரு… சும்மாவா… 1 ½ வருசம்… என்னை அலைய விட்ட… அது கூட ஓகே…. ஆனா உனக்கு லவ் வந்த பின்னாடி கூட 3 நாள் அலைய விட்டேல்ல…அதுக்குதாண்டா இந்த பனிஷ்மெண்ட்”

”படுத்துறடி… இதுக்குலாம் நல்லா ஒரு நாள் அனுபவிப்ப என்கிட்ட… அப்ப இருக்கு உனக்கு” என்று சொல்ல

“ஓ சார்க்கு அப்டிலாம் ஒரு எண்ணம் இருக்கா…” என்று கறாரான குரலில் கேட்க

“அம்மா தாயே… உன்கிட்ட அப்படில்லாம் நடப்பேனா… ஏதோ காதலனா கொஞ்சம் பேசிட்டேன்…. இதையும் ஞாபகம் வச்சுட்டு என்னைய காயவிட்டுராத… தாங்க மாட்டான் உன் பாலா” என்று முன்னெச்சரிக்கையாய் பேசியவனைப் பார்த்து மது வெட்க்கப்பட்டு சிரித்தபடி அடிக்க

அவளின் வெட்க்கத்தை ரசித்தவனாய்

“நீயும் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம் மதுச் செல்லம்…. காதலைத்தான் நீ முதலில் சொன்ன… ஸோ ரொமான்ஸை முதல்ல நான் ஆரம்பிக்கலாம்ல… ” என்று அவனின் ஏக்கம் நிறைந்த குரலில் இழுக்க

அவனின் ஏக்கம் நிறைந்த குரலில் மதுவும் மயங்க…. பாலாவுக்கு அதுவே ஏதுவாய் …. போக

அவளின் அருகில் நெருங்கியவன்

“மது… ப்ளீஸ்… கன்னத்தில மட்டும்… ஒண்ணே ஒண்ணுடி”

“வேண்டாம்டா…“ என்று அவள் சிணுங்கிய விதமே அவளின் சம்மத்தைச் சொல்ல

அவளை இழுத்து தன் இதழை அவள் கன்னத்தில் பதிய வைக்கப் போக..

அவன் அருகாமை ஒருபுறம் தயக்கமும்.. மறுபுறம் மயக்கமும் ஏற்படுத்த…. தன்னை மறந்தவளாய் மது மாறிக் கொண்டிருக்க

இருவருக்கும் இடையில் இருந்த மதுவின் மொபைல் திடிரென அலற… சட்டென்று தன்னிலை அடைந்து விலகிய மது.. மொபைலைப் பார்க்க அது ‘கீர்த்தி” என்று ஒளிர்ந்தது..

தோழியர் இருவரும் தனித் தனியே இப்போது மொபைல் வைத்திருந்தனர்…

அவள் விலகியது அவனுக்கு எரிச்சலைத் தர... அந்தக் கடுப்பிலேயே…. போனைப் பார்க்க அதில் இருந்த கீர்த்தியின் பெயரில் இன்னும் எரிச்சல் ஆனான்… வந்த எரிச்சலில்

“குறத்தி…. எனக்கு ஆப்பு வைக்கிறதுனா… கரெக்டா வந்துடுவாளே” என்று சத்தமாக அலுக்க

தன் மொபைலை அட்டென்ட் செய்து கீர்த்தியிடம் பேசியவள்….

“இதோ வந்துட்டே இருக்கோம்” என்று கட் செய்தவள்

“வா பாலா போகலாம்… கீர்த்தியும் ஆதியும் வெயிட் பண்றாங்களாம்”

“இருக்கட்டும்… நாம அப்புறம் போகலாம்…” என்று மீண்டும் அருகில் நெருங்க

“ஆள விடுடா… கெளம்பு….” எனும் போதே கீர்த்தியும் ஆதியும் அருகே வர வேறு வழி இன்றி எழுந்தான் பாலா…

முன்னால் ஆதி-கீர்த்திகா நடக்க

பின்னால் சற்றுத் தள்ளி அவர்கள் இருவரையும் தொடர்ந்தனர்.. மதுவும்-பாலாவும்

“ஏண்டா யார குறத்தினு சொன்ன… கீர்த்தியவா” என்று கேட்க

“ஆமாம்… அவ மட்டும் போன் பண்ணலேன்னா… ச்சேய்” என்று புலம்பியவனைப் பார்த்து சிரிக்காமல்

“அது என்ன குறத்தினு சொல்ற அவள… அதுவும் என்கிட்டயே…. ஏன் அப்டி சொல்ற” என்று கொஞ்சம் கோபமாய்க் கேட்க

“ஆதிகிட்ட சொல்லிராத… அவ்வளவுதான் தாளிச்சுடுவான்..என்ற படி…அன்று நடந்த கதையைக் கூற…

“யாரோ ஒருத்திக்கு வச்சுருக்கிற பட்டப் பேர்லாம் வச்சு கூப்பிட என் ஃப்ரெண்ட்தான் கிடச்சாளா உனக்கு….” என்று முறைக்க

”தெரியாம சொல்லிட்டேன் மா… ஆதிய விட நீ தாளிப்ப போல” என்று அவளைச் சமாதானப்படுத்தியவாறே போனான் பாலா…

பின் ஆதியும்,பாலாவும் …. கீர்த்தியும்,மதுவுமாய் தங்கள் திசைகளை நோக்கி பிரிந்தனர்…

பாலாவின் முகத்தை பார்த்தே ஆதி கண்டுகொண்டு….

“என்னடா … பெரிய பல்பா இன்னைக்கு… இதுக்கே உம்முன்னு வந்தேன்னா… 11/2 வருசம் நான் எத்தனை பல்பு கீர்த்திக்கிட்ட வாங்கியிருப்பேன்…. வா.. வா… நாம குடுத்து வைத்தது அவ்வளவுதான்…” என்று தன் நிலைமையையும் சேர்த்து சொல்லி… வருந்த…. பாலா உனக்கும் அதுதான் நிலைமையா என்பது போல் பார்த்து வைத்தான்…

ஆனால் மதுவோ… புலம்பியபடி வந்தாள்…

”பாலா ஆசை ஆசையா வந்தான் கீர்த்தி…. பாவம்ல பையன்…” என்று வருந்த…. கீர்த்தியோ முறைக்க…

“சரி..சரி முறைக்காத… உனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நான் மட்டும் எல்லை மீற விடுவேனா… ஆனாலும்… என் பாலா முகம் வாடினா இந்த மதுவுக்கு மனசு தாங்க மாட்டேங்குதே” என்று கூறியபடி அன்றைய இரவை உறங்கா இரவாய் கழித்தாள்…..

------------------------------------------------------

மது-கீர்த்திகா மூன்றாம் வருடம் காலடி எடுத்து வைக்க….. பாலாவும் ஆதியும் தங்கள் தொழிலில் ஒவ்வொரு அடியும் வெற்றிகரமாய் எடுத்து வைக்க… அதே நேரத்தில் தங்கள் காதலிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க…. விதி… பாலா-மது காதலில் முதலில் தனது விளையாட்டைத் தொடங்கியது…. மதுவின் தந்தை மூலம்…

பாலா… அன்றும் வழக்கம் போல் தாமதமாகத்தான் வந்தான்.. மது… முக்கியமான விசயம்… கண்ண்டிப்பாக பேச வேண்டும் என்று சொல்லியும் கூட

மது சற்று எரிச்சலில் …

“அவ்ளோ சொல்லியும் கூட லேட்டாத்தான் வருவியாடா” என்று கொஞ்சமே கொஞ்சம் கோபம் கூட ஆனாள்…

“என்ன மது… கொஞ்சம் அப்நார்மலா இருக்க…. என்ன பிரச்சனை சொல்லு..“ என்று அவளது கோபம் கலந்த குரலில் கலக்கமாய் கேட்க

“அப்பா..போன் பண்ணினாங்க…” என்றாள்….

“சரி.. அதில் என் மதுக் குட்டிக்கு என்ன ப்ராப்ளம்….”

“வந்தது லேட்டு.. மதுக் குட்டி… மாட்டுக் குட்டினு மட்டும் கொஞ்சு….” என்று சலித்தவள்

“அப்பா எனக்கு ஜாதகம் பார்த்தாங்களாம்…” என்று நிறுத்த….

“படிச்சுட்டு இருக்கிற உனக்கு இப்போ எதுக்கு ஜாதகம் பார்த்தாங்க….“ என்று சுள்ளென்று விழுந்தான் பாலா…

“இந்த கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… தெரியல… குடும்பத்தில் இருக்கற எல்லாரோட ஜாதகமும் பார்க்கும் போது என்னோடதும் பார்த்திருப்பாரு போல” என்று நிறுத்த

“ஓ.. அப்போ உன் கல்யாணத்துக்கான ப்ராசஸ்ல இல்லையா… பயந்தே போய்ட்டேன் மா…. ஒரு நிமிசம் ஹார்ட் அப்படியே நின்னுடுச்சு தெரியுமா…” என்றவனின் பாவனையில்

அவனை கையால் நாலு போடு போட்டவள்…

”அப்படி இருந்தால் கூட பரவாயில்ல… இது அதை விட சீரியஸ்… எனக்கு இன்னும் 3 மாதத்திற்குள் தாலி ஏறனுமாம்… இல்லேண்ணா”

இல்லைனா என்று சாதரணமாய் பாலா கேட்க

”நீ காலம் பூரா பிரமச்சாரியாம்…” என்று அதிரடியாய் போடு போட்டவளைப் பார்த்து என்னது என்று வாய் பிளந்தான் பாலா….

”உன் ஜாதகம் பார்த்து என்னைப் பற்றி கூட சொல்வாங்களா மது” என்று சத்தியமாகவே வாய் விட்டு பாவம் போல் கேட்க

மதுவோ அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்..

“டேய் லூசு…. அப்டினு டேரக்டா அவங்க சொல்லல… எனக்கு கல்யாணமே நடக்காதாம்…. அதைத்தான் இப்படி மாற்றி சொன்னேன்… சூப்பர்டா…. அதையும் நம்பிக் கேட்கிறாய் நீ…. என் அறிவுக் களஞ்சியமே“ என்று கண்களில் நீர் கசிய சிரித்தவளைப் பார்த்து

“ரணகளத்திலயும் குதுகலம் பார்க்கிறவடி நீ… நான் பிரமச்சாரியாய் இருக்கிறது அவ்ளோ சந்தோசமா என்ன…. உன் கழுத்துல தாலி ஏறலேனா கூட… நான் உன்னைக் கடத்திட்டு போய் என் பிரமச்சரிய விரதத்த முடிச்சுட மாட்டேன்… “ என்று கண் சிமிட்ட

“உடனே சைக்கிள் கேப்ல ஃப்ளைட்டே ஓட்டப் பார்ப்பியே” என்றவள்.. தீவிரமாக ”அப்பா நேற்று பேசினார் பாலா… இதைச் சொல்லி எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொன்னார்…”

“நீ என்ன சொன்ன அதுக்கு” என்ற அவன் குரலில் அனலடிக்க

“நான் சொல்லிட்டேன்…. மாப்பிள்ளை எல்லாம் தேட வேண்டாம்.. நானே பார்த்துட்டேன்.. இன்னைக்கே அவன தாலி கட்ட சொன்னாலும் ஓகென்னு “ என்று அவனைப் பார்த்து கண்ணடிக்க

“உண்மையாவா மது… சொல்லிட்டியா உங்க அப்பாகிட்ட…. அவருக்கு காதல்னாலே பிடிக்காதுன்னு சொன்ன…. அதுனால உங்க அத்தையை கூட தள்ளி வச்சுட்டார்னு எப்படி.... இத்தனை தைரியமா… அவர் என்ன சொன்னார்” என்றான் அவள் கைகளை பிடித்தபடி

“அப்பாக்கு காதல் பிடிக்காதுன்னு இல்லை…. ஆனா அத்தை அப்பாகிட்ட லவ் பண்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம… பத்திரிக்கை எல்லாம் வச்ச பின்னாடி அவங்க லவ் பண்ண பையன் கூட போய்ட்டாங்க…. அதுனால அப்பாக்கு நேர்ந்த அவமானம்.. அதுதான் அப்பாக்கு மிகவும் கோபம்… அதுல பாதிக்கப் பட்டது யாரு தெரியுமா… நானும் எங்க அம்மாவும் தான்… அத்தை மேல அத்தனை பாசமா இருந்தாராம் அப்பா…. எனக்கு என் அத்தை பெயர் கூட தெரியாது பாலா…. அப்பாக்கு அதற்கப்புறம் தான் திருமணம் நடந்ததாம்

அவங்க அப்படி பண்ணிட்டு போனதுல… அவருக்கு மனைவிக்கிட்ட… அவர் பொண்ணுக்கிட்ட கூட… பாசத்தை காண்பிக்க முடியாம போச்சு பாலா… அப்பா நல்லவர்தான்… ஆனா எங்களை அவர்கிட்ட நெருங்க விட மாட்டார்…. அம்மாக்கு அப்பாக்கு பயந்தே வாழ்க்கை… அம்மாவும் பாசம் தான் காட்டுவாங்க… ஆனாலும் எனக்கு ஏதோ குறையுற மாதிரி ஃபீல் இருக்கும்… எனக்கு அப்பா..அம்மா பாசம் சம அளவில கிடைக்கல… சில பொண்ணுங்களாம் அப்பா..அம்மா கூட எவ்வளவு ஃப்ரீயா இருப்பாங்க தெரியுமா.. சின்ன வயசுல இருந்தே எனக்கு ஏக்கம்… அப்போதான் கீர்த்தியோட பழக்கம் ஏற்பட்டுச்சு.. என்ன மாதிரி இல்லாம எல்லாம் கிடைத்திருந்தும்…. அவங்க அம்மா இறந்ததில அத்தனையும் பறி போன ஏக்கம் அவளுக்கு…. அப்போ நான் காட்டுன பாசத்தில…. அவங்க அம்மா மாதிரி நான்னு சொல்லி சொல்லி சந்தோசப் படுவா… அப்போதான் நான் ஒண்ணு புரிஞ்சுக்கிட்டேன்… நமக்கு கிடைக்காத ஒண்ண அடுத்தவங்களுக்கு கொடுத்து அவங்க சந்தோசப் பட்டா… அது நமக்கு கிடைக்கிறத விட மிகப் பெரிய சந்தோசம்னு… சோ எனக்கு கிடைக்காத பாசத்தை கீர்த்திக்கிட்ட நான் காமிச்சேன்… அவள் இழந்த பாசத்தை என் மூலம் பார்த்தா… அப்படியே இது நாள் வரை வந்துட்டோம்.. இப்போ உன்னோட காதல்தாண்டா எனக்கு கிடைச்ச மிகப் பெரிய வரம்... எனக்கு நீ எப்டியோ அதே மாதிரி கீர்த்திக்கு ஆதி…. என்று கண் கலங்க முடித்தவளை…

அவளின் மன ஏக்கங்களை புரிந்து தன்னோடு இழுத்து அணைத்த பாலா

“என் மதுக் குட்டிக்கு… இவ்ளோ ஏக்கமா… நம்ம கல்யாணம் முடியட்டும்… அதுக்கப்புறம் பாரு… என் செல்லம் ஏங்குன ஏக்கத்தை எல்லாம் போக்கடிக்கிறேன்” என்றவன் ஞாபகம் வந்தவனாய்

“உஙக அப்பா என்ன சொன்னார்….அதச் சொல்லு முதல்ல” என்று கேட்க

“அப்பா கிட்ட அவர் வழில போயே மடக்கிட்டேன் நான்… அத்தை சொல்லலைனுதானே உங்களுக்கு கோபம்…. நான் சொல்லிட்டேன்ல…… அது மட்டும் இல்லாம உன்னைத் தவிர வேற யாரயும் திருமணமும் செய்ய மாட்டேன்… உங்களுக்கு பிடிக்கலேனா கூட பரவாயில்ல… என்னை பாலாக்கு மேரேஜ் பண்ணிக் குடுத்துடுங்க… இல்லேனா அத்தை வழிதான் என் வழின்னு சொல்லிட்டேன்… முதல்ல ஒரு 10 நிமிசம் அர்ச்சனைதான்… அதெல்லாம் கேட்ப்பாளா மது.. போனை ஒரு அங்குலம் காதை விட்டு தள்ளி வச்சுட்டா… ஆனாலும்.. எங்க அப்பா நல்லவர்ப்பா… அப்புறம் அவராவே இறங்கி வந்து உன் அட்ரெஸ் கேட்டார்…. நானும் உன் கம்பெனி அட்ரெஸ் குடுத்துட்டேன்… நாளைக்கு உன்னை பார்க்க வருவார்னு நினைக்கிறேன்” என்று மிகப் பெரிய விசயத்தை சாதரணமாகச் சொல்லி முடிக்க …

“அடிப்பாவி…. எவ்ளோ பெரிய விசயத்தை சாதரணமா சொல்ற… உன்னை…” என்றவன்.. ”எதுக்கு ஆபிஸ் அட்ரெஸ் குடுத்த…” என்று யோசனையுடன் கேட்க

”அப்போதைக்கு அதுதான் ஞாபகம் வந்துச்சு.. இது ரொம்ப முக்கியாமாடா….” என்றவளிடம் அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் எல்லாம் நீங்கியவனாய்

“மாமா நம்பர் குடு…”

“எதுக்குடா…. எதுனாலும் பேசி காரியத்தைக் கெடுத்துராதடா” என்றவளை கண்டு கொள்ளாமல் அவள் மொபைலை பிடுங்கியவன்.. அதில் இருந்த அவள் தந்தையின் எண்ணை தனது மொபைலில் இருந்து அடிக்க

“டேய் என்னடா பண்ற..” என்று மது பதற

”இருடி” என்று அலட்சியப்படுத்தியபடி எதிர்முனையின் பதிலுக்காகக் காத்திருக்க

மதுவின் தந்தை போனை எடுத்தார்

“ஹலோ செல்வா அங்கிளா..” என்று கேட்க

அவனது நம்பரை மதுவிடம் பேசிய போதே வாங்கி வைத்திருந்தார் அவர்… அதனால்

“ஹ்ம்ம்ம்ம்…. சொல்லுங்க தம்பி… அதுக்குள்ளயும் விசயம் அங்க வந்துருச்சா… இந்த காலத்து பொண்ணுங்களாம்… ஹ்ம்ம்.. நாளைக்கு நான் உங்களை பார்க்க வருகிறேன்… அங்க மத்த விசயம் எல்லாம் பேசிக்கலாம்… என்று போனை வைப்பதிலே குறியாக இருக்க

“பொறுங்க மாமா…” என்றவனின் வார்த்தையில் அவரும் கொஞ்சம் காது கொடுத்து கேட்க…

“நாளைக்கு நீங்க என் ஆஃபிஸ் வர வேண்டாம்… என்றவன் தன் வீட்டு அட்ரஸினைக் கொடுத்து…

”நீங்க நாளைக்கு என் வீட்டுக்கு வாங்க மாமா…. அங்க அப்பா..அம்மா எல்லாரிடமும் சேர்ந்து பேசலாம்” என்றவனை மருமகனாக ஏற்க அவரும் தயங்குவாரா என்ன…

“தம்பி… “ என்றவர்

“என் பொண்ணு… தப்பான ஆளைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான்னு நினைத்தேன்… அது மாதிரியே நடந்திருச்சு…” என்று மறைமுகமாக தன் சம்மதத்தை சொல்லியபடி போனை வைத்தார்..

அவரது பதிலில் துள்ளிக் குதித்தான் பாலா…

“ஹேய் மது குட்டிமா… உங்க அப்பா கிட்டத்தட்ட ஒக்கேனு சொல்லிட்டார்…”

“எப்டிடா..எங்க அப்பாவ வீட்டு அட்ரெஸ குடுத்து இப்படி கார்னர் பண்ணிட்ட” என்று விழி விரித்தவளிடம்

“எல்லாம் என் செல்லம் குடுத்த ப்ராக்டிஸ் தான்… உன்கூட இத்தனை நாள் பழகி இருக்கேன்.. யாரை எங்க அடிச்சா எங்க விழுவாங்கனு கத்துக்கலேனா எப்டிடி” என்று அவளையே கலாய்க்க

சற்று நேரத்திலேயே ஆதி-கீர்த்திக்கும் விசயம் போக

ஆதி கீர்த்தியிடம்

“பாரு கீர்த்தி… என்ன ஆட்டம் போடுறான்… இன்னும் 3 மாசத்தில கல்யாணமாம்… கடுப்படிக்கிறான்… வா… நாமும் மேரேஞ் பண்ணிக்குவோம்… இப்போ லவ் பண்ணவென்லாம் ஆடுறான்….” என்று பாலாவின் சந்தோசத்தில் தன் ஏக்கத்தையும் வெளியிட

கீர்த்திகா சிரித்தபடி

“அவங்க மேரேஜ் பண்ணிகிரதுல உனக்கு என்ன பொறாமை…. “ என்று கேட்க

“பொறாமையா…எனக்கா…சும்மா சொன்னேன் கீர்த்தி டார்லி…. நம்ம மேரேஜ் பெரிய அளவில நடக்கணும்… நம்மைப் பார்த்து இந்த ஊரே வியக்கணும்… அதுவும் உன்னைப் பார்த்து… இப்படி ஒரு அழகிய இவன் மடக்கிட்டானேனு அத்தன பேரும் என்னைப் பார்த்து பொறாமைப் படனும்… அழகுடி நீ… I love u டி… என் ஏஞ்சல் டி. என் பட்டுடி.. என் அம்முடி.. ” வாயில் வந்த அத்தனை வார்த்தைகளிலும் கொஞ்சியபடி கனவில் மிதக்க

“ஹலோ பாஸ்… கனவில மிதக்காதீங்க…. கொஞ்சம் கீழ இறங்குங்க…” என்று சொல்ல

“என் ஏஞ்சல் மேடம்… கொஞ்ச நேரம் கூட கனவுல கூட டூயட் பாட விட மாட்டளே,,, மது பாலாவோட மிஸஸ் ஆகப் போறா நீ எப்ப இந்த ஆதியோட மிஸஸ் ஆகப் போற” என்றெல்லாம் பேசியவனுக்கு அப்போது தெரியவில்லை விதியின் கோர விளையாட்டைப் பற்றி…

----------------

இதற்கிடையே அன்றிரவே பாலா தன் தாய் தந்தையரிடம் மதுவை..அவளின் ஜாதகம் …தற்போதுள்ள நிலைமை பற்றிக் கூற… அவர்களே காதல் திருமணம் என்பதால் பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை….

மதுவின் தந்தை பெயர் செல்வா என்று மட்டும் சொல்ல அருந்ததிக்கும் தன் அண்ணன் ராஜன் தான் அது என்ற சந்தேகம் எல்லாம் வர வில்லை…

மதுவும் – பாலாவும் அடுத்த நாளை ஒரு வித பதட்டத்துடன் எதிர் கொண்டனர்… அதிலும் பாலாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்க.. மதுவின் தந்தையும் பாலாவின் வீட்டிற்கு வந்தார்… வந்தவர் தன்னை வரவேற்க நின்றிருந்த அருந்ததியைப் பார்க்க.. அருந்ததிக்கும் ஜெகநாதனுக்கும் மயக்கம் வராத குறைதான்

அதன் பிறகென்ன நன்றாகவா போய் இருக்கும்….. வாசல் வரை வந்தவர் வாசலுடனே திரும்பி விட்டார்….

பாலா ஒன்றும் புரியாமல் விழிக்க… ஜெகனாதன் அவர் யார் என்று விளக்க… மது தன் ’மாமா மகளா’ என்று வியந்தான்…

அங்கிருந்து நேராக மது தங்கி இருந்த வீட்டிற்கு ஆவேசத்துடன் சென்ற மதுவின் தந்தை மதுவிடம் … பாலாவை மறக்கும் படி சொல்ல… அவளோ அவர் சொல்வதைக் கேட்காமல் பிடிவாதம் பிடித்தாள்…. தந்தையிடம் இருந்து அறை வாங்கியும் கூட…

ஃஅந்ஃ22அவளுக்கும் அதிர்ச்சிதான் பாலா தன் அத்தை மகன் என்று விசயம் தெரிந்து

தன் உயிர் இருக்கும் வரை… பாலா-மது திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும்… மது பிடிவாதம் பிடித்தால்… அவள் தன் மகளாக மட்டுமே இருக்க முடியும்… அதற்காக வருந்தவும் மாட்டேன்… அதற்கு மேல் அவள் இஷ்டம்.. என்று முடிவை அவளிடம் விட்டு விட்டு என்று கிளம்பி விட்டார்…. தங்கையைப் போல் மகளையும் தள்ளி வைக்க முடிவெடுத்தார் செல்வ ராஜன் கனத்த மனதோடு …

மதுவுக்கு அவரின் வார்த்தையில் வருத்தம் தான் …என்ன செய்வது அதற்காக எல்லாம் பாலாவை அவள் விட முடியுமா என்ன…. தந்தையின் பிடிவாதமும் அவள் அறிவாள்… பாசமாய் வளர்த்த தங்கையையே இத்தனை வருடமாக தள்ளி வைத்திருப்பவர் …. தன்னை மட்டும் என்ன மன்னிக்கவா போகிறார்…

கீர்த்திதான் அவளுக்கு ஆறுதலாய் இருந்தாள் … அந்த சூழ்னிலையில்….

ஆதியிடம் பாலா புலம்பிக் கொண்டிருந்தான்…

“தன் மாமா மகள் என்ற காரணமே தங்கள் காதலுக்கு எதிரியாக மாறியதை நினைத்து…. என்ன ஆனாலும் சரி…. மதுவை அவள் சொன்ன 3 மாதம்… இல்லை அதற்குள்ளாக தன்னவள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அதே நேரத்தில்.. மதுவின் அப்பா… பெரிய எதிர்ப்பெல்லாம் செய்யாமல் மதுவை… அவள் முடிவில் விட்டுச் சென்றதும் உறுத்தியது,… அவர் ஏதாவது திட்டம் வகுத்து வைத்திருக்கிறாரோ என்றும் நினைத்தான்

மதுவுக்கோ ஏதோ தவறாக தங்களைச் சுற்றி நடக்கிறதோ என்ற சஞ்சலம் உண்டாக.. அந்த சஞ்சலம் அவளது நடவடிக்கையிலும் தெரிய வர பாலாவும்,கீர்த்திகாவும் கவலையுற்றனர்…..

வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்த மதுவை பார்த்த பாலா….

“என்ன மது… அன்னைக்கு அத்தனை தைரியமாய் பேசினாய்,….. அத்தை வழிதான் உனக்கும் என்று… உங்க அப்பாக்கு இஷ்டம் இல்லாம நம்ம திருமணம் நடக்க பிடிக்க வில்லையா…. நான் வேறு அடுத்த வாரம் வேற US போகப் போறேன்… அம்மா வேற உன்ன பாக்கனும்கிறாங்க…. நீ இப்படி டல்லா இருந்தேனா… நான் எப்படி என் வேலைல கான்சென்ட்ரேட் பண்ண முடியும்மா…. உங்க அப்பாவோட சம்மதம் வேணும்னா.. நாம போராடி கூட மேரேஜ் பண்ணிக்கலாம்டா… நீ மட்டும் இப்படி இருக்காதடா… எனக்கு மனசு வலிக்குது… என் சிந்தனையெல்லாம் நீ…நீ மட்டும்தான் இருக்க… ப்ளீஸ்டா” என்றவனைக் கண்ணில் வலியுடன் பார்த்தாள் மது…

“எனக்கு பயமா இருக்குடா…. ஏதோ சரி இல்லாதது போல் இருக்குடா.. நான்… நான் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு…. இதைச் சொல்லும் போதே அவள் கண்ணில் கர கரவென்று கண்ணீர் வடிய பதறிவிட்டான் பாலா

“என்னடா.. உன் மனசுல என்ன வச்சுட்டு இப்படி தவிக்கிற சொல்லுடா.. எவ்வளவு தைரியமான பொண்ணுனு நினைத்தேன்.. இவ்வளவு தானா உன் தைரியமெல்லாம்” என்று பாலா அவளை கெஞ்சியும்…உசுப்பேற்றியும் பேச

“இல்ல பாலா… எங்க அப்பா சம்மதம் சொல்லாததுக்கெல்லாம் வருத்தப்படல… சொல்லப் போனா நான் அதையும் எதிர்பார்த்திருந்தேன்… …ஆனால்…. நீ என் அத்தை பையன் என்ற உறவே நம் காதலுக்கு வில்லங்கமாக வந்து விட்டது… சொல்லப் போனால் நம் உறவே நமக்கு சாதகமாக அமையாமல் இப்படி நமக்கு பாதகமாகப் போய்விட்டது என்றால்… ஏதோ தவறு நடக்கப் போவது போல் தோன்றுகிறது… எனக்கு இப்பவே உன் மதுவா எல்லா விதத்திலேயும் மாறனும் போல இருக்கு.. உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா… என்று மன்றாடியவளிடம்

”சரி கண்ணைத் துடை” என்று தன் கைக் குட்டையில் துடைத்து விட்டவன்…

“ஒரு வாரம் பொறுத்துக்கோ… நானும் US ட்ரிப் முடிச்சுட்டு வந்துடறேன்.. அந்த வீக்லயே நம்ம மேரேஜ வைத்துக் கொள்வோம்” என்று தீர்மானமாகச் சொல்ல…

“உண்மையாவா பாலா…“ அப்போதும் நம்பாதவளாய்க் கேட்க

“ஆமாம்.. எனக்கு இப்படி அழுது வடியிற மதுபாலா பிடிக்கல... அதுக்காகவே” என்றவனை அடிக்க கைகளை தூக்கியவள்… முடியாமல் அவன் தோளிலே சாய்ந்தாள் மதுபாலா

”நான் உன்ன ரொம்பக் கஷ்டப் படுத்துறேனா பாலா… எனக்கும் உன்னை இப்படிலாம் கார்னர் பண்ண பிடிக்க வில்லை தான்… ஆனாலும் முடிய வில்லை…” என்று கண்கள் கசியப் போக ….. அவள் மூடை மாற்ற..

“மது… நான் நேற்று ஒரு சாங் கேட்டேன்… நீயும் கேளு…. கேட்டதில இருந்து இதுதான் என் சுப்ரபாதம் தெரியுமா… நம்ம மேரேஜ் முடிந்த பின்னால்… நமக்கே நமக்கான தனிமையான நேரத்தில் … அதை உனக்கு போட்டுக் காட்டி…அப்படியே” என்றபோதே அவளின் அக்னிப் பார்வையில்

“பேசக் கூட விட மாட்டியே… சரி கேளு… எனக்கு ஏன் இந்த பாட்டு பிடிக்கும் என்று சொல்லி தனது மொபைலில் இருந்து பாடலை போட்டான் பாலா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே

மலர் காலம் தொடர்ந்திடுமே

இளம் காதல் சபையினிலே

புது வேதம் மலர்ந்திடுமே

மதுபாலா......ஆ...ஆ...ஆ ஆ

தாயாக மாறவா.. தாலாட்டு பாடவா..

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஊரெங்குமே ஓர் வெண்ணிலா நீதானே தேவி

ஏழை மகன் என் வீட்டில் நீ செந்தூர ஜோதி

இளமை காலங்கள் ஒளி வீசும்

இன்ப வசந்தங்கள் நாமல்லவா

எளிமை கோலத்தில் இருந்தாலும்

உந்தன் இதயம் நானல்லவா

மதுபாலா.. என் மதுபாலா

உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஸ்ரீராமனின் சீதை மனம் பூ பூக்கும் நேரம்

ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்

திசைகள் எல்லாமே தடுமாறும்

இந்த திருமகள் பாதம் பட்டால்

உதயம் சொல்லாமல் இடம் மாறும்

உந்தன் விழி மலர் ஜாடை கண்டால்

மதுபாலா.. என் மதுபாலா

உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

இனி மாதம் பனிரெண்டுமே

மலர் காலம் தொடர்ந்திடுமே

இளம் காதல் சபையினிலே

புது வேதம் மலர்ந்திடுமே

மதுபாலா......ஆ...ஆ...ஆ ஆ

ஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா

மதுவை தன் தோளில் அணைத்தபடி இருவரும் சேர்ந்து ஒன்றாக கேட்டபடிக் காதலில் கரைந்திருந்தனர்..

“மது”

“ஹ்ம்ம்ம்”

”மதுபாலா”

”சொல்லுடா”

மதுபாலா.. என் மதுபாலா

உன்னை மனதுக்குள் வரைந்தேன் வெகு நாளா”

இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச லைன்…. உன்னை நான் என் மனசுக்குள்ள வரைந்து வைத்து இருக்கிறேன் மது… அத அழிக்க யாரலயும் முடியாது…என்று உருக்கமாகச் சொன்னான்…

ஆனால்…. தானே அவளை வலிக்க வலிக்க அழித்து விட்டு…. கீர்த்தனாவின் உருவத்தை அதில் பதிக்கப் போவதை உணராமல்…. வரைந்தவளை அழித்து விட்டான் வலித்த போதிலும்… பதிய வைத்தவளை அழிக்க முடியுமா…”

அவனின் சீரியஸான பேச்சினில் தன்னிலைக்கு வந்தவள்

”டேய் என்னடா செமயா உருகற… தமிழ் படம் அதிலும் காதல் படம் எதுவும் பார்த்துட்டு வந்துட்டியா.. என்ன…. என்னைய சிஸ்டம் ஆன் பண்ணும் போது பாஸ்வேர்ட்ல மட்டும் தான் வச்சுருக்கேன்னு பார்த்தா.. மனசுல வேற வரஞ்சு வச்சுருக்கியா… என்று கிண்டல் செய்ய

“அடிப்பாவி.. நான் புலம்புறது உனக்கு கிண்டலா இருக்கா? என்றவனைக் கட்டிக் கொண்டாள் மது……..

அதன்பிறகு அவளுக்கு ஆறுதல் பல சொல்லியபடி அவனும் US கிளம்பிப் போக… விதி… ஆதி-கீர்த்திகாவின் காதலில் தன் வேலையைக் காட்ட ஆயத்தமாகியது பிரதாப் ரூபத்தில்

பிரதாப் ----- கீர்த்திகாவின் அழகில் மயங்கிய அவன்… அதனால் வந்த காதல்… ஆதி-கீர்த்திகா…வாழ்க்கையை மட்டுமின்றி… அவர்களின் தோழமைகளான பாலா-மது வாழ்க்கையிலும் கோரமாக விளையாடி எங்கோ இருந்த கீர்த்தனா—வினோத் வாழ்க்கையையும் மாற்றியது…

775 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page