top of page

என் உயிரே!! என் உறவே!!!-40

அத்தியாயம் 40

ஆதி … பாலா சொன்ன வார்த்தைக்காக.. எதுவும் பேசாமல் முகத்தை உர்ரென்று வைத்தபடி பின்னே வர… பாலாவோ அவனுக்கு இன்னும் கோபம் போக வில்லை என்பதை உணர்த்துவது போல பைக்கை விரட்டினான்…..

அவன் கோபத்தை இன்னும் அதிகரிப்பது போல்… இடையிலேயே….

ஒரு பூ விற்கும் பாட்டி…. அவர்கள் செல்லும் வழி அடைக்கப் பட்டுவிட்டது என்று கூறி, அவர்களை வேறு பாதையில் செல்லச் சொல்ல…… எரிச்சலுடனே பாதையை மாற்றி பயணம் செய்தனர்….

பாலா….. சீக்கிரமாகச் செல்ல…. சாலையை விட்டு….. தெருக்களின் சாலையில் தன் வண்டியைவிட… அங்கும் போக முடியாமல் … போக்குவரத்து நெரிசலில் மாட்ட….. வேறு வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தான்… அப்போது

”ஏய் ஏய் கீர்த்தி…கீர்த்தி ப்ரேக்க புடி…. இடிச்சுறப் போற……” என்ற அலறலில் இருவரும் திரும்ப…. ஓட்டி வந்த பெண்ணோ… விட்டால் இவர்களின் கால் மேல் வண்டியை ஏற்றி விடுவாளோ என்ற பீதியில் இருவரும் ஊண்றியிருந்த காலைத் தூக்க…..

அவளுக்கு பின்னால் வந்த வாலிபனோ…..அவள் கையைப் பிடித்து அட்ஜெஸ்ட் செய்ய …இருவரின் மேல் மோதமால்….சற்று முன்னே சென்று நிறுத்தினாள்…..

“சாரி பாஸ்…. இப்போதான் கத்துக்கறா…” என்று சொல்ல…

அவனின் உடனடி மன்னிப்பில்…பாலாவும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்..

ஆனால் …. இவ பேரும் கீர்த்தியா….. கீர்த்தினு பேர் உள்ளவள்களே நமக்கு ஆப்பு வைக்கத்தான் வருவாளுங்க போல….. அவ அப்பாகிட்ட ஆப்பு வச்சான்னா… இவ நம்ம காலுக்கே ஆப்பு வச்சுருப்பா போல….. நல்ல வேளை அவ அண்ணன் ப்ரேக் புடிச்சான் என்ற மட்டில் நினைத்தான்

ஆதியோ சும்மா இருக்காமல்

“பாப்பாவை கூப்பிட்டு ஒரு கிரௌண்டுக்கு போய் சொல்லிக் குடுக்கறத விட்டுட்டு….. இப்படியா பாஸ் பண்ணுவீங்க” என்று வாய்விட

இப்போது திரும்பி அவள் ஆதியைப் பார்த்து முறைக்க… அது ஹெல்மெட்டின் வழியே தெரிந்த கண்களிலேயெ அப்பட்டமாக அது தெரிய… ஆதி வாயை மூடிக் கொண்டான்….

ஆதி சொன்ன பாப்பா என்ற வார்த்தையில் கோபமாக ஆனவள்… பின்னால் இருந்தவனின் மேல் பாய ஆரம்பித்தாள்…

நான் சொன்னேன்ல…. மெயின் ரோட்லயே போகலாம்னு…. நீதாண்டா கேக்கல… இப்போ பாரு… “

“ஏய் குறத்தி…… நீ ஒழுங்கா ப்ரேக் பிடிக்காம வந்துட்டு தெருவ கோணல்னு சொல்லாத…. யூனிபார்மல இருந்துட்டு உனக்கு மெயின் ரோட்ல வேற போகணுமா..போலிஸ் புடிச்சான்னா தெரியும்..”. எனும் போதே…….

பாலாவும்…ஆதியும் தங்களை கவனிப்பதை உணர்ந்த கீர்த்தி.. அதிலும் ஆதியின் சுவாரஸ்யமான பார்வையில் இன்னும் கோபமான கீர்த்தி

“டேய் என்று பல்லைக் கடித்தவள்…. முன்னால் மாட்டியிருந்த தன் ஸ்கூல் பேகை திறந்து அதிலிருந்து ஸ்கேலை எடுத்து அவனை 2 அடி அடித்தவள்

”ஏண்டா இப்படி என் பேர கொல்லுற…. போறவன் வர்றவன் எல்லாம் என்ன ஒரு மாதிரியா பார்க்கிறான்….” என

”சரி நான் சொல்லல…. நாளையில இருந்து நீ இப்படி என்னை ஸ்கூட்டி பழக கூப்பிட்டு வர மாட்டேனு சொல்லு….. நானும் குறத்தினு சொல்ல மாட்டேன் என்று சொல்ல..

”யாரு நீ….. நீயாவது அப்டியே சொல்லாம இருந்துட்டாலும்” என அவள் பேச…..

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்லும் திசையில் வழி கிடைக்க இருவரும் அதில் நுழைந்து பறந்து விட்டனர்…

கீர்த்தியும்…. பாலாவும் ஹெல்மெட் போட்டிருந்த படியால் இருவருக்கும் தெரியவில்லை… வினோத்தும் ஹெல்மெட் போட்டிருந்தான் என்பதால் அவனும் அடையாளம் தெரியவில்லை….

“பாருடா பாலா… இத்துனூண்டா இருந்துட்டு என்னமா கோபம் வருது அந்த பொண்ணுக்கு.. பாப்பான்னு சொன்னா மொறைக்குதுடா….”

இப்போது பாலா

“பின்ன 11த் படிக்கற பொண்ணை பார்த்து பாப்பானு சொன்ன.. முறைக்க மாட்டாங்க” என்று சொல்ல…. அதற்கு ஆதி

“அடப்பாவி….. என் கண்ணுக்கு பாப்பாவ தெரிஞ்சவ உன் கண்ணுக்கு மட்டும் எப்படி பொண்ணா… அதுவும் 11த் படிக்கிற பொண்ணா தெரிஞ்சா” என ஆச்சரியப்பட

இப்போது ஹெல்மெட்டைக் கலட்டிய பாலா… தலையில் அடித்த படி…

“டேய் எரும…. அவ ஸ்கூல் பேக் ஓபன் பண்ணுனால அப்போ அவ புக் வெளிய தெரிஞ்சது அதில பார்த்தேன்… உன்னை எல்லாம் வச்சுட்டு நானும் குப்ப கொட்டுறேன்…” என்று கூறி முறைக்க…

அசடு வழிந்தான் ஆதி….. அதுவரை ஆக்ரோஷமாக இருந்த பாலா…. சில்மிஷமாக

”டேய் மச்சான் அவ பேரு என்ன தெரியுமா” என்று ஆதியை சீண்ட

“தெரியும்…தெரியும்… நீதான் அத சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டியே” என்று சலிக்க

“அது இல்லடா… மச்சி…. அதைவிட சூப்பர் பேர்…. குறத்தி…. இன்னைக்கு இருக்குடா,,, கீர்த்தி… குறத்தி வாட் ரைமிங்…. என்னமா யோசிச்சு இருக்கான் அவன்….. “

“டேய் பாலா…. இது நல்லா இல்ல…. நீ மட்டும் என் ஆள அப்டி கூப்பிட்ட … கொலையே பண்ணிடுவேன் உன்னை” என்று ஆதி எகிற..

பாலா சுத்தமாக கோபம் எல்லாம் போய் ஜாலியாய் பேச ஆரம்பிக்க… ஆதி எதிர்மாறாய் ஆனான்…

‘அந்த குறத்திக்கு சப்போர்ட் பண்ண இன்னும் யார் வருவாங்கன்னு பார்ப்போம்…. ஆனாலும் குறத்திக்கு நம்ம காலேஜ்ல பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு போல….” என்று வார்த்தைக்கு வார்த்தை குறத்தி என்று விடாமல் பேச

ஆதி சட்டென்று வண்டியில் இருந்து இறங்கி விட்டான்…”

“ஏன் என்னடா ஆச்சு… ஏன் இறங்குற…” என்று பாலா பதற

“கீர்த்திய நான் லவ் பண்றேனு சொல்லியும் கூட நீ அவள் கிண்டல் பண்றது எனக்கு பிடிக்கலடா….” என்று தீவிரமாகச் சொல்ல…

அவனின் தீவிரத்தைப் உணர்ந்தவன், வேறு வழி இன்றி….

“சாரிடா…. நீ இந்த அளவில் சீரியஸா இருப்பேனு நான் நினைக்கல… இனிமேல் சொல்ல மாட்டேன்…. போதுமா..” என்று சமாதானப்படுத்திய பின் தான் ஆதி ஏறினான்…. ஆனால் அது ஆதிக்காக…. அப்போது சமாதானப்படுத்துவதற்காக மட்டுமே சொன்னான் .

-----

அதன் பிறகு நண்பர்கள் இருவரும் பேசியபடியே வந்து தாங்கள் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி… இறங்க…

“ஹாய் அம் மது…. மதுபாலா…..” என்று பாலாவின் முன் ஆஜரானாள் மது

“ஆஹா,,,,, இப்போதான் ரோட்டுல வந்த ஒருத்தி புண்ணியத்தில இவன மலை இறக்கினேன்…. இந்த ஆத்தா மறுபடியும் இவன மலை ஏத்த வந்துருச்சா….” என நொந்தான் ஆதி…

பாலாவோ

“இப்போ இவ யாரு…. இவ எதுக்கு வந்து அவ பேர என்கிட்ட வந்து ஏலம் விடுரா..” என்று நினைத்தவன் ஹெல்மட்டைக் கலட்டியபடி

அலட்சியமான பார்வையில்… அவளை… அவள் பார்வையை நேருக்கு நேராக சந்தித்தான்…

அவனை என்னவெல்லாமோ திட்ட வந்தவள்…. அவன் பார்வையில் அதில் இருந்த ஏதோ ஒன்று அவளை அவன் பால் இழுக்க…. எதற்கு வந்தாளோ அதை மறந்து அவனின் முகத்தையே பார்த்தபடி நிற்க…. அவள் முன்னால் விரல்களை சுண்டியவன்

“ஏய்… நீ யாரு…. இப்போ நான் உன் பேரைக் கேட்டேனா…. எந்த இயர்….. ஃப்ர்ஸ்ட் இயரா…எவனாச்சும் இன்னும் ராகிங் பண்றானா” என்று அதட்ட’

ஆதியோ….

”யாரு இவளையா… ராகிங்கா…. ஏண்டா டேய்… அவ உன்னைத்தான் திட்ட வந்துருக்கா அவ ஃப்ரென்டுக்காக” என்று நினைக்கும் போதே

பாலாவின் அதட்டலில் தன்னுணர்வு பெற்ற மது…

திட்ட வந்தவனைத் திட்ட முடியாமல்… ஆதியிடம் திரும்பினாள்

“நீதானே….. கீர்த்தி பின்னால சுத்தினது… சும்மா இருந்த பொண்ணைப்… பார்த்து பார்த்து காதல்ல விழ வச்சுட்டு…. நேத்து இவன் திட்டினப்ப பேசாமா நின்னுருக்க……என சொல்லும் போதே

பாலா…. இடையிலே குறுக்கிட்டு…

“ஏய்…என்ன ..அவன் இவன்னு மரியாதை இல்லாம இஷ்டத்துக்கு பேசுற…..” என எகிற..

நிதானமாக திரும்பியவள்

“வேணும்னா நீ என்னை வாடி ….போடினு கூப்பிடுக்கோ” நம்ம பஞ்சாயத்தை அப்புறம் பாக்கலாம்… சார்கிட்ட கொஞ்சம் பேச விடுங்க பாஸ்” என்று சாதரணமாக சொல்லியபடி ஆதியிடம் பேச ஆரம்பித்தாள்

“என்னது நம்ம பஞ்சாயத்தா… இவள இப்போதானே நானே பார்க்கிறேன்…. ஒருவேளை அந்த குறத்திய திட்டுனதுக்கு திட்டவோ” என்று அதிர்ந்த பாலா யோசிக்க ஆரம்பித்திருந்தான்

ஆதியோ மதுவின் நேரடித் தாக்குதலில் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க

“இங்க பாரு ஆதி…. என் ஃப்ரெண்ட் உன்னை லவ் பண்றான்னு பார்க்கிறேன் இல்ல நடக்கிறதே வேற…. உன் ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லி வை…. இனி கீர்த்திகிட்ட வம்பு பண்ணிணான்னு தெரிஞ்சுச்சு….. அவனக் கூட ஒண்ணும் சொல்ல மாட்டேன்…. அவள லவ் பண்றேன்னு சுத்திட்டு திரியறேல்ல உனக்குதான் கஷ்டம்” என்று எச்சரித்தபடி …. பாலாவை மட்டும் நிதானமாகப் பார்த்து விட்டு பின் நகர்ந்தாள்…

டேய் யாருடா.. இவ… என்கிட்ட பேச வந்தா…. அப்புறம் உன்கிட்ட இஷ்டத்துக்கு பேசுறா…. ஓங்கி ஒரு அறை விடறத விட்டுட்டு பார்த்துட்டு நிக்கிறான்..” என எரிச்சலில் பேச

ஆனால் ஆதியோ மது பேசியவற்றையெல்லாம்.. மனதில் ரீவைண்ட் செய்தவன்… சில நிமிடத்தில் உற்சாகமாக குதித்தான்

“டேய் கீர்த்தியும் என்ன லவ் பண்றாலாம்டா…. அப்படிதானே சொன்னா மது….” என

ஆதியின் உற்சாகம் பாலாவையும் தொற்றிக் கொள்ள

“ஆமாம்டா…. நான் நேத்தே சொன்னேன்லடா… கலக்குடா….. எப்படிடா….. இப்படி ஒரு பொண்ண கவுத்த…. அவ இருக்கற அழகுக்கு உன்னை எப்படிடா… ஒரு வேள கண்ணு சரியிருக்காதோ…” என்றவன் நண்பனின் முறைப்பில்….

“சரி சரி விடு….. அதான் தெரிஞ்சு போச்சுல…. இன்னைக்கே சொல்லிடுடா….. பார்த்தியா… நா அவள திட்டுனதுக்கு பெருசா. கோபிச்சுக்கிட்ட….என்னாலதான் உன் காதல் உறுதி ஆகியிருக்கு…. கண்டிப்பா ட்ரீட் வேணும் எனக்கு… என் நண்பன அவ லவ் பண்றானு தெரிஞ்ச ஒரே காரணத்தினால…. நான் அவளுக்கு வச்சிருந்த பட்டப் பெயரை இந்த நிமிசத்தில இருந்து என் மனசில இருந்து அழிக்கிறேண்டா” காலையில் பேசிய பாலாவா என்று ஆச்சரியப்படும் வகையில் ஜாலி பட்டாசாய் மாற

“அடப்பாவி…. அப்போ சொன்ன இனி மேல சொல்லமட்டேன்னு அது பொய்யா” என அடிக்க வர….

“டேய் நீ சொன்னவுடனேலாம் கேட்டு விடுவோமா நாங்கள்ளாம்… என்று அவனின் கைகளுக்குள் அடங்காமல் ஓடினான்…

“டேய் ஆக்சுவலா….. மது உன்னைத்தான் திட்ட வந்தா…. ஆனா நீ ஹெல்மெட் கலட்டுன கேப்ல பலியாடு மாறிப் போச்சு” என சொல்ல…

”அவ என்ன அவ்ளோ பெரிய தில்லாங்கடியா என்ன… என்னை மட்டும் திட்டி இருந்தான்னு வச்சுக்க… அவ கன்னம் இன்னைக்கு பழுத்திருக்கும்” என சொல்லியபடி இருவரும் வகுப்பறை நோக்கிச் சென்றனர்….

----------

வகுப்பறையில் கீர்த்தியின் அருகில் உட்கார்ந்திருந்த மதுவிற்கு இன்னும் நெஞ்சம் பட படத்தது… அங்கு ஒருவாறு சமாளித்து வந்து விட்டாள்….

“என்ன கண்ணு,,, டேய் பாலா… பார்த்த நொடியிலேயே இப்படி என்ன மாத்திட்ட…. பாலா… மது பாலா….. வாவ் … டேய் நான் உன்னை லவ் பண்றேனா…..” அதை உணர்ந்த நொடி… துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருக்க…. அதற்கு மேலும் தாமதிக்காமல்…

கீர்த்தியிடம் பேச ஆரம்பித்தாள்…

“கீர்த்தி…. நான் பாலாவ லவ் ப்ண்றேன்” என்று சொல்ல

“என்ன” என்று மட்டும் பார்க்க

அதை எல்லாம் உணராமல் அவள் தொடர்ந்தாள்

“அவன திட்டத்தான் போனேன் ஆனான் எப்போ அவன் கண்ணைப் பார்த்தேனோ அப்பவே தின்க் அம் இன் ல்வ் வித் ஹிம்” என்று சொல்ல

”ஆங்” கீர்த்தியோ திறந்த வாய் மூடாமல் அவளைப் பார்த்தபடி இருக்க

”இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ இப்படி இருக்க”

“அப்போ நீ அவன திட்டலையா” என

“ம்ம்ம்ம்ம்…” என்று தலை ஆட்டிய அவள்

”ஆனா சாரிடி… அவனுக்கு பதிலா.. ஆதிய திட்டிட்டு வந்துட்டேன்… இன்னொரு சாரிடி….. பாலாவைப் பார்த்து ஜொள்ளு விட்டதுல உன் லவ்வையும் ஆதிக்கிட்ட சொல்லிட்டேன்”

“கீர்த்தி அழுதே விட்டாள்

“ஏண்டி இப்டி பண்ணுன”---

“சாரிடி…செல்லம்… உன் ஆளு அனேகமா இன்னைக்கு ப்ராபோஸ் பண்ண வந்துருவான் … என்று சொல்லியவள்… இன்னைக்கு மட்டும்தான் உங்க ரெண்டு பேருக்கும் டைம்… நீங்க சொன்ன அடுத்த நிமிசம் நான் பாலாகிட்ட என் மனச சொல்லிடுவேன்… அதுவும் நீங்க எங்களுக்கு சீனியர் என்பதால்… இல்லேன்னா… காலையிலேயே சொல்லிட்டு வந்துருப்பேன்… உங்களால நான் வேற வெயிட்டிங்” என்று அலுக்க

“ஏய் மது… என்னடி…. இப்படி பேசுற… உங்க அப்பாக்கு காதலே பிடிக்காதுனு சொல்வ…. உங்க அத்தை லவ் மேரேஜ் பண்ணியதால தள்ளி வச்சுட்டார்னு சொல்லுவ…”

“அது வேற கதை…. லவ் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு…. குடும்பத்தப் பத்திலாம் லவ் வர்றதுக்கு முன்னாடி யோசிக்கனும்… வந்த பின்னால்… நாம லவ் பண்றவங்களுக்காக மட்டும்தான் யோசிக்கனும்….” என்று பேசிய தோழியிடம்

“அவன் வேற யாரையாவது லவ் பண்ணிக் கொண்டிருந்தால்…..” என்று அவளின் தீவிரத்தில் கலக்கமாகக் கேட்க

“யாரு அவனா… அவனைப் பார்த்தாலே தெரியல… இன்னும் யார்கிட்டயும் மாட்டலேனு….. அவன் பார்வையே சொல்லிடுச்சு… பட்சி எங்கேயும் இன்ன சிக்கலேனு…. ” என்று அசராமல் அடித்த தோழியிடம்

“பார்த்தியா… பாலாவ பார்த்தவுடனே நீ என்ன மறந்துட்டேல்ல” என்று கீர்த்தி சிணுங்க

“இல்ல கீர்த்தி… உன்னை உனக்கான இடத்தில சேர்த்துட்டுதான் பேசுகிறேன்… கண்டிப்பா என் அனுமானம் சரினா…. ஆதி இன்னைக்கு உன்கிட்ட வந்து பேசுவான்….. பாரு…. நான் என்ன மறந்தால் தான் கீர்த்தி உன்னை மறப்பேன்… நான் உன்னை மறந்திட்டேனு மட்டும் சொல்லாத….”

“சொல்லலம்மா…. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா மது… “ என்று மதுவிடம் சரணடைந்தவள்…. “ஆதி என்ன பண்ணக் காத்திருக்கிறானோ” என்று படபடக்க ஆரம்பித்து இருந்தது அவள் மனம்.

--------------------

கடற்கரையின் ஒரு புறமாக ஆதி… கீர்த்திகா நின்றிருந்தனர்… மது கடற்கரையில் உள்ள ஒரு பெஞ்சில் அவர்கள் இருவரும் கண்ணுக்கு தெரியும் வண்ணம் உட்கார்ந்திருக்க.. பாலாவோ…. இவன் வண்டி எடுத்துட்டு வராம நம்மள வேற இம்சை பண்றான் என்றபடி வேறொரு புறம் நின்றிருந்தான்

“தேங்க்ஸ் கீர்த்தி… நான் கூப்பிட்ட உடன் வந்தற்க்கு…” என்று சொல்ல

நான்…. நானும் ,,, என்று இழுத்தவள்….. என்ன பேசுவது என்று தெரியாமல் தான் சொல்ல வந்ததை நிறுத்தி விட்டு

“மது ரொம்பத் திட்டிட்டாளா…. தப்பா எடுத்துக்காதீங்க ஆதி … என்று மதுவைப் பற்றி பேச….

அதெல்லாம் பரவாயில்ல….. அவ அப்படி திட்டப் போய்த்தானே உன்னோட மனசு எனக்குத் தெரிந்தது,,,,, என்று அவளை மட்டுமே பார்த்தபடி நிற்க…..

கீர்த்தி தலை குனிந்தாள்….

“ஆமா… நான் நான்னு என்ன சொல்ல வந்த…. அதைச் சொல்லு… அத விட்டுட்டு என்னென்னவோ பேசி பேச்ச மாத்தாத” என்று கீர்த்தியிடம் விளையாட

இப்போதும் கீர்த்தி வெட்கப் பட….

“சொல்லு கீர்த்தி… நீ என்னை லவ் பண்ணுகிறாயா…. மது சொன்னாள் தான்.. ஆனால் உன் வாயால அதைக் கேட்கணும்…. ப்ளீஸ்” என

“லூசாப்பா நீங்க…. கூப்பிட்டவுடனே நான் வந்து நிக்கிறேனே … பார்த்தால் எப்படி தெரியுது என்று “ கொஞ்சம் வேகமாகப் பேச….

அவளின் கோபம் உணர்ந்தவன்

“அப்பா… என் ஆளு…. சைலெண்ட்னு நெனச்சா,,,, பட்டாசா வெடிக்கிறா… ” என

”என்னை கேட்டீங்கள்ள…. வந்து அரைமணி நேரம் ஆச்சு…… நீங்க என்ன விரும்பறேனு இன்னும் சொல்லவே இல்ல” என்று வருந்த….

“இரு இரு இன்னும் 3 மினிட்ஸ்… அதுக்கப்புறம் தான் நல்ல நேரம் வருது…” என்று சொன்னவனை விளங்காமல் ஒரு பார்வை பார்த்து வைத்தாள் கீர்த்தி

அவளின் பார்வை உணர்ந்தவன்….

“எனக்கு கொஞ்சம் இதில் எல்லாம் நம்பிக்கை…..” என்று சொல்லியபடி… அவன் சொன்ன 3 நிமிடங்களை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி கழிக்க

”கீர்த்திகா…. ஐ லவ் யூ ஃப்ரம் மை பாட்டம் ஆஃப் ஹார்ட்” … என்றவன்

இந்த ஆறு மாசமும் என்ன தவிக்க விட்டுட்ட…. நெக்ஸ்ட் செம் நாங்க இருக்க மாட்டோம்… எப்படியும் இங்க இருந்து போறதுக்குள்ள நானே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்… ஆனால்” என்று சொல்ல ஆரம்பித்தவனிடம்…

”ஒரு நிமிசம் ஆதி…” என்று கூறிய கீர்த்திகா

தூரத்தில் இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மதுவை நோக்கி கட்டை விரலை உயர்த்த

மதுவும் பதிலுக்கு சந்தோசமாக தன் கட்டை விரலை உயர்த்தினாள்..

தன் காதலை சொன்ன அடுத்த நொடி….. மதுவிடம் அவள் சொன்ன விதம் எரிச்சலைக் கிளப்ப… மதுவை ஏனோ அவனுக்கு பிடிக்க வில்லை… கீர்த்தி அவள் மேல் மிகுந்த பாசமாக இருப்பதாலா… இல்லை காலையில் அவள் திட்டியதாலா … காரணம் தெரிய வில்லை… ஆனால் பிடிக்கவில்லை

எரிச்சல் தோன்றிய போதும் … முதல் நாளிலேயே கீர்த்தியோடு வாக்குவாதம் வேண்டாம் என்று… விட்டுவிட்டான்….

அதன் பிறகு காதலர்களுக்கே உரிய உலகத்தில் இருவரும் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்…

இடையில் தான் கேட்டான்… அதுவும் அமைதியாக

“மது ரொம்ம்ம்ம்ம்ப க்ளோஸ் ஃப்ரெண்டோ” என்றபடி…

“அதுவும் நான் காதலைச் சொன்ன அடுத்த வினாடியே..அவளிடம் சொல்லிட்ட” என்று உள்ளே கோபம் இருந்தாலும் வெளியே சாதரணமாகக் கேட்க

அவன் உள்குத்தையெல்லாம் அவள் கவனிக்கவில்லை…..

“அதுவா ஆதி…. அவதான் நீங்க உங்க காதல என்கிட்ட சொன்னவுடனே கை காமிக்க சொன்னா…..” என்றாள் வெளிப்படையாக

“எதுக்கு…”

“அவ பாலாவ லவ் பண்றாளாம்….. காலையில் பாலாவைத்தான் அவ திட்ட வந்தா…. ஆனா அவரப் பார்த்த உடனே ஏதோ ஒரு உணர்வு…. பாலாவைத் திட்ட முடியல அதுதான் உங்கள திட்டிட்டாளாம்….அப்புறம் அதைக் காதல்னு கன்ஃபார்ம் பண்ணியவள் உடனே சொல்லலாம்ன்னு நினைத்தாளாம்… ஆனால் நாம் அவளுக்கு இந்த விசயத்துல சீனியராம்…. அதுனால நாம் கன்ஃபார்ம் பண்ணின உடனே அவளுக்கு சொல்லச் சொன்னா…. பாலாகிட்ட இந்நேரம் சொல்லி இருப்பா” என்று வெள்ளந்தியாக அத்தனையும் கூற மொத்தமாக ஆடிப் போனான் ஆதி

”கடவுளே” என்று தலையில் கைவைத்தவன்

”கீர்த்தி அவன் கோபம் உனக்குத் தெரியாது…. பொண்ணுனு கூடப் பார்க்க மாட்டான்… அறை கிறை குடுக்கப் போறான்… அவ என்ன லூசா…” என்றபடி எழ…

கீர்த்திகா…. கொஞ்சம் கூட பதறாமல்….

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது…. மது சமாளிப்பா.” என சொல்ல

”உனக்கு அவனைப் பற்றித் தெரியாது…. கோபம் வந்தா என்ன பண்ணுவான்னு தெரியாது… நேத்தே நீ பார்த்தேல்ல…” என்று கூறியவன் அவளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கிப் போக

அங்கு பாலா தீம்பிழம்பாக நின்றான்… மதுவின் திருவிளையாடலில்…..

கீர்த்தி தன் காதலை கன்ஃபார்ம் பண்ணிய அடுத்த நிமிடம் மது பாலாவின் முன் நின்றாள்…

”ஹாய்” என்று பாலவைப் பார்த்து சொல்ல…அவனும்

”வந்து அரைமணி நேரம் ஆச்சு…. இப்போ திடிர்னு என்ன ஹாய்”

என்று மட்டும் கேட்க

“இப்போதான் நான் பேசப் போறேன்….அதுதான்”

“என்கிட்ட என்ன……” என்று ஆரம்பித்தவன் நினைவு வந்து ”ஓ உன் ஃப்ரெண்ட திட்டினது பற்றியா…” என்று கேட்க

“அதைக் காலையிலேயே கேட்டிருக்க மாட்டேனா பாலா…. உன்னைத்தான் திட்ட வந்தேன் ஆனா ஆதிய திட்டிட்டேன்… ஆமா… நான் உன்ன திட்ட வந்துட்டு அவன ஏன்னு திட்ட வந்தேனு நினைத்துப் பார்த்தாயா இல்லையா…” என்றாள் மது

பாலா அவள் சொன்னதில் மற்றதை எல்லாம் விட்டு விட்டான்

“என்ன.. நானும் காலையில் இருந்து பார்க்கிறேன்….அவன் இவன்னு சொல்ற…. நாங்க ரெண்டு பெரும் உன் சீனியர் தெரியும்ல உனக்கு” என்று சீனியர் கெத்தைக் காட்ட….

“ஆதிய வேணும்னா நான் மரியாதையா கூப்பிடறேன்… என்றவள்… ஏன்னா… அவர் கீர்த்தியோட லவ்வர்… உன்னைலாம் நோ வே…. “

அவளது பதிலில் முறைத்த பாலா…

“ஏன்… மேடம் சீனியருக்கெல்லாம் மரியாதை குடுக்கக் கூடாதுன்னு கொள்கை வச்சு இருக்கீங்களா..” என்று நக்கலாக்க கேட்டான்… இருந்தும் நக்கலிலும் குரலில் கடுமை தெரிய..

அவனின் கடுமையை எல்லாம் பூ என்று ஊதித் தள்ளியபடி..

“சீனியர்னு இல்ல…. மனசுக்கு புடிச்சவங்களன்னாலும் மரியாதையா கூப்பிட மாட்டா இந்த மது” என்று அவளுக்கே புதிதான வெட்கத்துடன் சொல்ல

”என்னது..“ பாலா அதிர்ந்தான்..

”ஆமாம் பாலா… எனக்கு உன்னை பிடிச்சுருக்கு… உன்னை…. உன் கண்ணை நான் பார்த்த அந்த நொடியே…. நீ என் மனசுக்குள்ள வந்துட்ட…. என்றவளை பேச விடாமலே தடுத்து விட்டான் பாலா

”போய்டு… அடிச்சுற.. கிடிச்சுற போறேன்… காலையில பார்த்த …. இப்போ லவ்வா….. கண்ணைப் பார்த்தாளாம்..காதல் வந்திருச்சாம்… என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்னு…. காதல் வந்திருச்சுன்னு நிக்கிற… படிக்க வந்தியா…அத மட்டும் பாரு….” என்று அவனுக்கு இருந்த கொஞ்சமெ கொஞ்சம் பொறுமையை பயன்படுத்திப் பேச

“உன்னைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதா… ஒண்ணே ஒண்ணு தெரியும்… உனக்கு நல்லா கோபம் வரும்…. வேற எதுவும் தெரியாது… அதுதான் பிரச்சனைனா. இனிமே தெரிஞ்சுக்கிறேன்…. இல்லேனா. நீயே சொல்லு …. தெரிஞ்சுக்கறேன்… அதுக்கப்புறம் வந்து சொல்லவா… அப்போ உனக்கு ஒகே வா…” …… என்று மிகச் சாதாரணமாக… என்னவோ இதனால் தான் அவன் வேண்டாம் என்று சொல்வதைப் போல

ஆக்சுவலா…. உன்ன பார்த்த அடுத்த நிமிசமே சொல்லலாம்னு நினைத்தேன்… ஆனா இது வாழ்க்கை இல்லையா… அதுதான் ஒரு அரைமணி நேரம் யோசித்தேன்…. அப்போ கூட உன்கிட்ட சொல்லலாம்னு பார்த்தேன்,… ஆனா பாவம் நம்மளவிட சீனியர் அவங்க ரெண்டு பேரும்… அதுதான் அவங்களுக்கு முதல்ல சான்ஸ் குடுத்தேன்…” .என்றவளிடம்

“அடேங்கப்பா… அரைமணி நேரம் யோசிச்சியா.. ரொம்ப நேரம் தான்… இதுல… ப்ரையாரிட்டி வேற….” என்று அவளைக் கேலியாகப் பார்த்தவன்

“சரி …… நானும் சொல்றேன் கேட்டுக்கோ..எனக்கு இந்த காதல்…கத்தரிக்காய்லாம் பிடிக்காது… போதுமா,…” என்றவனிடம்

“காதல் மட்டும் தான் கேட்டேன்… கத்தரிக்காய்லாம் ஏண்டா இழுக்கற” என்று அவனிடம் காமெடி பண்ண

“ஏய்” என்று கையை ஓங்கியவன் ஏதோ நினைத்து இறக்கி விட்டான்

“உன்னைப் பிடிக்கவில்லை…. இதுதான் என் பதில்… போதுமா …..இதுக்கும் மேல ஏதாவது பேசுன…” என்று முடித்தான் பாலா

“சரி விடு… நான் மட்டும் லவ் பண்றேன் “ என்றாள் கூலாக

“நீ என்ன லூசாடி…. கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்… எதையும் காதில வாங்காம உளரிட்டு இருக்க….” எனும் போதே ஆதியும் ,கீர்த்தியும் அங்கு வர…

பாலா..ஆதியிடம் வள்ளென்று விழுந்தான்…

“நான் போறேன்டா… ஆதி….. இருந்தா என்னை மீறி எதுனாலும் பண்ணிடப் போறேன்….. எங்க இருந்துடா வந்தாளுங்க… ரெண்டு பேரும்… ஒருத்தி நேத்துல இருந்து டென்சன் ஆக்குனா,.. இவ இப்ப அவள மிஞ்சிட்டா….” என்றவனிடம்

“இருடா… பேசுவோம்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நிற்காமல் கிளம்பி விட்டான் பாலா….

ஆதிக்கோ கீர்த்தியை விட்டுப் போக மனமே இல்லை … பரிதாபமாகக் கீர்த்தியைப் பார்க்க

கீர்த்திதான்… ”நீ போ ஆதி…. நானும் கிளம்பறேன்…” என்று சொல்ல

ஆதிக்கு மதுவின் மேல் கோபம் இன்னும் அதிகமாக…. ச்சேய்…. நல்ல சூழ்னிலையை இப்படி ஆக்கிட்டாளே..என்று நொந்தபடி பாலாவை பிடிக்க ஓடினான்..

கீர்த்தி.. மதுவிடம்….

ரொம்பத் திட்டிட்டானா.. மது…. அவன் சரியான் முசுடு …. நீ கிடைக்கவெல்லாம் அவன் குடுத்து வச்சுருக்கனும்…. இடியட் மாதிரி பேசறான்…. நீ ஃபீல் பண்ணாத “ என்று தோழிக்கு ஆறுதலாகச் சொல்ல..

”நான்லாம் ஒண்ணும் ஃபீல் பண்ணல கீர்த்தி….. “

“அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி” ன்னு ரஜினி ஒரு பாட்டு பாடுவார்ல…. அந்த கேரக்டர்ல வரும் இந்த கேஸ்லாம்…. தப்பா சொல்லல….. என் காதலுக்கு அவன் அடிமையாகும் காலம் வரும்…. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… என்னமா கோபம் வருது…. ” சரி வா போகலாம்…. ஆள விட்டுப் பிடிப்போம்” என்று இப்போதும் கூலாகச் சொல்ல…

“என்னடி இப்படி லேசா எடுத்துக்கற… அவன் திட்டிட்டு போயிருக்கான்,,,, அதக் கூட விடு….அவன் உன்னை லவ் பண்ணவே மாட்டான்னா என்ன பண்ணுவ…””

”இந்த உலகத்தில எல்லாமே ரெண்டே ரெண்டு விசயம்தான்…. ஆம்…இல்லை.. இது ரென்டுலதான் நாம் முடிவெடுக்க முடியாம திணறிட்டு இருக்கோம்…. பாலா ஆமானு சொன்னா… ஹேப்பி….. இல்லேனா… ரீட்ரை… தட்ஸ் ஆல்…. நீ… ரொம்ப குழம்பாத வா… என்னாச்சு உன் விசயம்.. உன் ஆளு என்னை வில்லியப் பார்க்கிற மாதியே பார்த்துட்டு போறாரு” என்று தோழியை அணைத்தபடி அவர்கள் வண்டியை எடுக்கச் சென்றாள்…

இதுதான் மது…. எதிலும் தெளிவாக இருப்பாள்…. அதே நேரத்தில் தான் எடுத்த முடிவில் உறுதியாகவும் இருப்பாள்…..

என்னடி ஆதிக்கு மரியாதை எல்லாம் தூள் கிளப்புது… என்று கேட்க…

“என் ஆள் உன் ஆள மரியாத இல்லாம பேசக் கூடாதுன்னு சொல்லிட்டான்….”

அட்லீஸ்ட் அவன் இன்னைக்கு பேசுனதுல்ல இதையாவது கேட்ப்போம்னு தான் ஆதிக்கு மரியாதை..” என்று பாவம் போல சொல்ல.. தோழியர் இருவரும் சிரிப்போடே வெளியே வந்தனர்

------

தோழர்கள் நிலையோ கவலைக்கிடதமாய் இருந்தது….

“நல்லா லவ் பண்ணடா…. உன்னைச் சொல்லனும்…. இனி நீ பைக் இல்ல… அது இல்லைனு இந்தப் பக்கம் என்னைக் கூட்டிடு வந்துடாத.. அதோட ஃப்ரெண்ட்சிப் கட்…..”

”நான் என்னடா பண்ணினேன்… எனக்குக் கூடத்தான் அவளப் பிடிக்கல….” என்று பரிதாபமாகச் சொல்ல…

”முதல்ல அவ ஃப்ரெண்ட்சிப்ப கட் பண்ணச் சொல்லு அந்த குற….சாரி… கீர்த்திகிட்ட”

திட்டியபடியே வந்தான் பாலா…

கேட்ட படியே வந்தான் ஆதி…

பேருந்து நிலையத்தில் இறங்கியவன்

“டேய் மச்சி… இன்னைக்கு காலையிலதான் உனக்கு மனசுக்கு பிடித்தவங்கள பார்ப்பேனு சொன்னாங்க… ஒருவேளை அது மதுவா இருக்குமோ” என் வாய்விட

“நல்லா வாயில வந்துரும் பார்த்துக்கோ…. காலையில… பாட்டிலருந்து…. பாப்பா வரை பார்த்தோம்…..”

“ஆனா பாட்டியும்..பாப்பாவும் உன்கிட்ட லவ்வ சொல்ல வில்லையே… இவதானே சொன்னா என்றவனை பாலா கொலைவெறியில் நோக்க…. அவன் பார்வையினை பார்த்தவன்…. பாய் என்று சொல்லி விட்டு வந்த ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறினான் ஆதி….

…………………

கீர்த்தி நன்றாக ஆடக் கூடியவள் என்றால் மது முறையாக சங்கீதம் பயின்றவள்.. அதிலும் அவள் உற்சாகமாக இருந்தால் அவள் கித்தாரை எடுத்துக்கொன்டு பாட ஆரம்பித்து விடுவாள்… இன்று பாலாவிடம் தனக்கு வந்த காதலை எண்ணியும்…அதை அவனிடம் சொன்ன உற்சாகத்திலும்….தன் ஆருயிர் தோழி காதல் வெற்றி அடைந்த சந்தோசத்திலும் பாட ஆரம்பித்தாள்…

இது நானா இது நானா என்னை நானே ரசித்தேனா மெய் தானா மெய் தானா நான் மீண்டும் பிறந்தேனே

கண்ணாளன் வந்த நெரம் நான் காற்றில் கரைந்தேன் என் வாழ்வில் நிறம் இல்லை அவன் வண்ணம் சேர்த்தானே ஹொ... இது நானா இது நானா என்னை நானே ரசித்தேனா என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று மீண்டும் வந்து சேர்ந்ததே என் காட்டில் வெள்ளம் போட்ட வெள்ளம் வந்து வேரைத் தெடி பாய்ந்ததே பார்வையில் இனிமெல் பூ பூப்பேன் ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன் என் ஆசை கனவே எனை ஆளும் திமிரே உன் கையின் நீளம் காலின் உறுதி மார்பின் ரோமம் மன்மத மச்சம் தனிதனியே ரசிக்கவிடு தவணையிலே துடிக்கவிடு

அவளின் உற்சாகம் கீர்த்தியையும் தொற்ற அவள் அங்கு சந்தோசம் கடல் வெள்ளம் போல் ஆர்பரித்தது

கீர்த்தியுடனான சந்திப்பு முற்றுப் பெறாமல் போன ஆதி அவளுடன் பேச அந்த நேரத்தில் அவளுக்கு போன் செய்ய… அவனுக்கும் மதுவின் குரல் விழ…

கீர்த்தியிடமும் விசாரித்தான்…

அவளின் குரலின் உற்சாகமே ஆதியை அசைக்க... காலையில் வந்த காதலுக்கே இத்தனை வலிமையா என்று நினைத்தான்..

அதன் பிறகு ஆதி கீர்த்தி தங்கள் காதலில் மூழ்க…. பாலாவின் நினைவுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கீர்த்தியின் அருகில் வந்தாள் மது….

தான் ஆதியிடம் பேச வேண்டும் என்று சைகையால் சொல்ல…

போன் கைமாறியது…

போனை வாங்கியவள்….. “கீர்த்தி…. அக்கா பாடி பாடி சோ டையர்ட்… ஒரு கப் ஸ்ட்ராங் காஃபி…” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த….. தோழி தன்னைப் பற்றி ஆதியிடம் பேசத்தான் தன்னை விரட்டுகிறாள் என்று புரிந்ததால் புன்னகையுடன் நகர்ந்தாள்…

இது எல்லாம் ஆதிக்கு கேட்க… கீர்த்தி என்ன இவளுக்கு வேலைக்காரியா… இப்ப இவ என்கிட்ட என்ன பேசப் போறா… ஒரு வேளா பாலாகிட்ட பேசச் சொல்வாளோ என்றெல்லாம் யோசித்தபடி இருக்க

“சாரி ஆதி…. என்ன இருந்தாலும் நான் காலையில அப்படி பேசி இருக்கக் கூடாது…. எனக்கு உண்மையிலயே உங்க மேல கோபம்தான் …. பாலா அவளத் திட்டினப்ப நீங்க அமைதியா இருந்தீங்கனு அவ சொன்னப்ப… அழுதபோது எனக்கு திட்டின பாலாவ விட உங்க மேலதான் அதிக கோபம்….. ஏன்னா….. சின்ன வயசுல இருந்தே அவ விரக்தியா …. பாசம்… பந்தம் இது மேல எல்லாம் பற்று இல்லாம இருந்தா…. உங்க பார்வை தான்… உங்க காதல் தான் ரொம்ப வருசத்துக்கு அப்புறம் அவளை நார்மல் ஆக்கியிருக்கு…. அவ உங்கள் அந்த அளவு நினைச்சுட்டு இருக்கா… ஆனா நீங்க அப்படி இல்லேனு எனக்கு கோபம் வந்துருச்சு….

இப்போது ஆதி ..

”இல்ல மது…. அவனுக்கு என் காதல் தெரியாது,…. அது மட்டும் இல்ல… அவன் கோபம் வரம்புக்கு மீறி தாண்டுற வரை நானும் பார்த்துட்டு இருந்திருக்க மாட்டேன்… “ என்று சொல்ல

“ஒகே ஆதி… ஆனா இனி இந்த மாதிரி ஒரு சூழ்னிலை வராமா பார்த்துகறது உங்க கைலதான் இருக்கு… என் ஃப்ரென்ட உங்க கிட்ட ஒப்படைத்து விட்டேன்… இனி அவ உங்க பொறுப்பு…என்றவள்… கீர்த்தி தாயின் மரணம்… அதன் பின் அவள் தந்தையின் திருமணம்…. அதில் மனம் வெறுத்திருந்த நிலை…. தங்கள் இருவரின் நட்பு எல்லாம் சொன்னாள்….. சொன்னவள்… அவ எனக்கு ஃப்ரெண்ட் இல்ல… என்னோட பொண்ணு மாதிரி…. அவள பத்திரமா பாத்துக்குவீங்கள்ள… இனி நீங்கதான் அவளுக்கு எல்லாமே…. என்ற போது மது ஆதியின் மனதில் எங்கோ சென்று விட்டாள்…. காலையில் இருந்த அவள் மேல் இருந்த பிம்பம் எல்லாம் விலகி விட.. அவளின் வார்த்தையில் இருந்த அவளது நட்பில்…… அதிலிருந்த நேசத்தில் பிரமித்தான்… இதை எல்லாம் விட கீர்த்தியை தன் மகள் என்று சொன்னதில் மொத்தமாக அவளைப் புரிந்தவன்…. அவளின் நட்பு கீர்த்திக்கு எத்தனை தூரம் முக்கியம் என்பதினையும் உணர்ந்தான்…. அதை இப்போது மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் முடிந்தது…

”கண்டிப்பா மது…. இனி அவள் என் பொறுப்பு…. உன் பொண்ண நினச்சு கவலப்படாதம்மா.. “ என்று கிண்டலாகச் சொல்ல… மது சிரித்தாள்…

இப்போது அவனாகவே

”மது… சொல்றேனு தப்பா நினைக்காத… பாலா… கொஞ்சம் கோபக்காரன் “ என்று ஆரம்பிக்கும் போதே

“பாலாவப் பத்தி எல்லாம் தெரியும் … நான் பார்த்துக்கறேன்…. அவன் என்ன சொன்னாலும் நான் கவலைப் பட மாட்டேன்.. அதே நேரத்தில என்னோட காதலயும் நான் விட மாட்டேன்..” என்றவளிடம்…

“எப்படி மது.. ஒரே நாள்ல..” என்றவளிடம்…

“தெரியலயே….வேணும்னா உங்க ஃப்ரெண்ட் கிட்ட கேட்டுச் சொல்றீங்களா.. ஒரே நாள்ல என்னை எப்படிக் கவுத்தான்னு… “

சிரித்தவன்

“உனக்கு ஒரு விசயம் தெரியுமா…” என்று காலையில் பாலாவின் ராசி பலன் விபரம் சொல்ல”

“உண்மையா ஆதி… என்று விழி விரித்தவள்… பார்த்தீங்களா.. கரெக்டா அவனைத் தேடி வந்து சேர்ந்துட்டேனு உங்க …சாரி சாரி.. என் பாலாட்ட சொல்லிடுங்க… என்றபடி…. அருகில் அவள் எப்போது போனைத் தருவாள் என்று நகத்தைக் கடித்தபடி பேசக் காத்திருந்த தோழியிடம்.. அவள் வாயிலிருந்து அவள் கையை எடுக்குமாறு சைகை செய்து போனை ஒப்படைத்தாள் கீர்த்தி

மதுவுக்கும் ஆதி சொன்ன வார்த்தைகளில் ..

இன்னும் தன் காதலின் பிடி இறுகியது போல் தோன்ற … அது கொடுத்த சந்தோச நினைவுகளிலே அப்படியே உறங்கப் போனாள் …… ஆனால் மனம் உற்சாகத்தில் பறக்க தூக்கம் கண்ணில் வர வில்லை… பாலா மட்டுமே அவளது கண்களில் நின்றான்…

ஆனால் பாலாவோ…. மது சொன்ன வார்த்தைகளில் எல்லாம் கோப்பட்டாலும்.... ஆதியின் வார்த்தைகளும் ஞாபகம் வந்து இம்சை படுத்த….. முதல் முறை ஒரு பெண்ணால் தன் உறக்கத்தை இழந்து தவித்தான்… அது இன்னும் மதுவின் மேல் கோபம் கொள்ள வைத்தது……

அதே நாளில் தான் கீர்த்தனா என்கின்ற பெண்ணும் பாலாவின் வாழ்க்கையில் தனது வரவை மதுவிற்கு முன் நிகழ்த்தி இருந்தாள்… என்பதினை அப்போது யாரும் உணர முடியவில்லை…

993 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page