top of page

என் உயிரே!! என் உறவே!!! 29

அத்தியாயம் 29

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் கழிவது போல் போனது கீர்த்திக்கு…..

பாலாவை நினைத்தாலே … அவன் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று அவளால் அனுமானிக்க வேறு முடியவில்லை…. காரில் அன்று அப்படி நடந்தான்…வீட்டில் அவள் படுக்கையில் படுத்தான்… அதன் பிறகு அவன் வீட்டில் அந்த அளவு மோசமாக நடக்க வில்லை… அதே நேரத்தில் சீண்டாமலும் இருக்க வில்லை … அலுவலகத்தில் MD என்ற விதத்தில் இருந்து அவன் கீழிறங்கி நடக்கவில்லை…. கீர்த்திக்கு அவனை புரிந்து கொள்வதே பெரும் போராட்டமாக இருந்த்து… இப்போதெல்லாம் அதுவே தன் பெற்றோரின் நினைவைத் தாண்டி அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருந்தது…

அது மட்டும் இல்லாமல்…. முன்னர்…. கீர்த்தி பாலாவை தன் கண்களால் அவன் அறியாத வண்ணம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள்….. அவன் அதை உணராததால்… அவன் பார்ப்போனோ என்ற சிக்கல் இல்லாமல் அவனை கண்களால் சிறை பிடித்து தன் மனதினுள் பூட்டி வைப்பாள்…. அது ஒரு சுகத்தைக் கொடுத்தது… இப்போது அது கூட முடியவில்லை அவளால்…. எங்கு அவள் மேல் உள்ள பார்வையை அவன் எடுத்தால்தானே… அவனின் ஊடுருவும் பார்வையைத் தாண்டி இவள் எங்கு பார்க்க…..

சிந்து… அவளிடம் மட்டும்தான் கீர்த்தி கீர்த்தியாக இருந்தாள்… அவளுக்கு…பாடம் சொல்லிக் கொடுக்க… அவளுடன் கொஞ்சம் அரட்டை அடிக்க…. அவள் பள்ளியில் நடக்கும் போட்டியில் எல்லாம் அவளை கலந்து கொள்ளச் சொல்லி… தானே அதற்கு தயார் செய்தும் கொடுத்தாள்….. இவ்வாறாக அவளது நாட்கள் நகர……… அடுத்த வியாழன் மாலையும் வந்த்து….

போன வாரம் இருந்த்து போல் பெரிய படபடப்பெல்லாம் இல்லை…. அது மட்டும் இல்லாமல்….. பாலா வேறு மீட்டிங் இருப்பதால் அன்று இரவு வீட்டிற்கு லேட்டாக வர முடியும் ….. அவனுக்காக காத்திருக்க வேண்டாம்…. என்று அவளிடம் சொல்லி… …. சாப்பிட்டுத் தூங்கச் சொன்னவன்… மறக்காமல்.. ஸ்பேர் சாவியையும் வாங்கிக் கொண்டான்….

அதனாலோ என்னவோ கீர்த்தியும் அவனைப் பற்றி கவலை இல்லாமல்…. வீடு வந்தவள்…. சாப்பிட்டு அவனுக்கு அவளது அறையில் உள்ள கட்டிலை சுத்தம் செய்து விட்டு….. பிறகு தன் பெற்றோர் அறையில் உறங்கினாள்….

கடந்த வாரம் அவள் ஹாலில் படுத்திருந்ததிற்கு அவன் ஒன்றும் சொல்லாததால்….

இன்றும் அதே போல் படுத்தவள் உறங்க ஆரம்பித்தாள்….

ஆனால் அவன் அன்றே கோபத்தோடுதான் வந்தான்…. அவள் படுத்திருந்த நிலைமையை பார்த்தவன் தன் கோபத்தை மறந்தான் என்பதை அவள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்…. தெரிந்திருந்தால் அவளது அறையிலேயே படுத்திருந்திருப்பாளோ ??????

நள்ளிரவு 12 தாண்டி இருந்த வேளையில்…. பாலா வீட்டிற்கு வந்தான்…. அவனுக்கும் நல்ல தூக்கம் தான் … எப்போதடா படுக்கையில் விழுவோம் என்று நினைத்தபடிதான் உள்ளே வந்தான்…. அவன் மனதில் கீர்த்தியை சீண்டிப் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லைதான்…

இதெல்லாம்..அவன் அறையில் கீர்த்தி இல்லாததை பார்க்கும் வரைதான்….. ஹாலிலும் இல்லை…. தங்கள் அறையிலும் இல்லை… என்றால்…. என்று யோசித்தவன் அவள் அவள் பெற்றோரின் அறையில் படுத்திருப்பதை உணர்ந்து… அவளை பார்க்க சென்றான்…. அவன் வந்தது கூட தெரியாமல் அவள் நல்ல உறக்கத்தில் இருக்க ….

”இருக்குடி உனக்கு” என்றபடி…… தன்னை ரீஃப்ரெஷ் செய்து வந்தவனின் கண்கள் தூக்கத்திற்கு விடை கொடுத்திருந்தன….

மெதுவாக அவளது அருகில் வந்தவன்… அவளை கண்களால் அளவெடுக்க ஆரம்பித்தான்…. அதுவும் அந்த மங்கலான வெளிச்சத்தில் …. அவள் படுத்திருந்த விதம் வேறு அவனை இம்சிக்க ஆரம்பித்தது….. அவளும் ஏனோ தானொ வென்றெல்லாம் படுக்க வில்லை….. போர்வையை அவளின் கழுத்து வரை போர்த்தி இருந்தாள்தான்… இருந்தாலும் அவள் மேனியின் மேடு பள்ளங்கள் வரி வடிவமாக தெரிய அதற்கே … பாலா தடுமாறினான் …. அவன் இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் அவனை மீறி எழும்ப ஆரம்பித்தன…. இளம் காளையினை கட்டி வைத்து பின் திடிரென கட்டவிழ்த்தது போல அவனுக்கும் அவனின் இளமை உணர்ச்சிகள் கட்டவிழ அவனுக்கு மூச்சடைத்தது…. இருந்தாலும்… இது அவனின் உணர்ச்சிகளுக்கான் வடிகால் தேடும் நேரம் அல்ல என்பதை உணர்ந்து…. தன்னை அடக்க ஆரம்பித்தான்…..முழு முயற்சியுடன் தன்னை அடக்கி அதில் வெற்றியும் கண்டவன்…. அதன் பிறகே கீர்த்தியை எழுப்பினான்…..

வழக்கம் போல் உடனே எழுந்தாள் தான்..ஆனால் அவனைப் பார்த்தவள்…..அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ… என்ன நினைத்தாளோ…. அவளது கை அவளையும் அறியாமல்….அவளது உடையை எல்லா பக்கமும் சரி பார்த்து இழுத்து விட…. பாலாவிற்கு….. கோபமும்….சிரிப்பும் சரிசமமாக வந்த்து

”என்கிட்ட இருந்து எத்தனை நாளைக்கு இதையெல்லாம் மறைத்து வைப்பாய் என்று பார்க்கிறேன்…” என்று கணவனாய் கூசாமல் எண்ணியவன் அதை வெளியில் சொல்லாமல்

“கீர்த்தி வா..அங்க வந்து படு” என்று அழைத்தான்… நல்ல பிள்ளையாய்….

அதற்க்கெல்லாம் அடங்குவாளா….கீர்த்தி…..

“இல்ல பாலா… நா இங்கேயே படுத்துக் கொள்கிறேன்……. நீங்க அங்க படுத்துக்கோங்க என்று அவனுக்கு பிடிக்காத பதிலைச் சொன்னாள்…

”அங்கேதான் மற்றவர்களுக்காக ஒரே அறையில் படுக்க வேண்டிய கட்டாயம்…. இங்கு யாருக்கு நாம் பயந்து நடக்க வேண்டும்…..அதனால்….. ”

என்ற போதே… அவளது கை அவனது பிடியில் இருந்தது…

அவளின் அருகே நெருங்கி நின்று அடிக்குரலில்….

“வாடி…அது தெரியாமத்தான் உன்னை கூப்டறேனா…விளக்க வந்துட்டா….” என்று அவளின் கண்களைப் பார்த்து சொல்ல…. குரலில் இருந்த அவனின் உரிமையும்… அவனின் கோபமும்…. அவனின் நெருக்கமும்…… முதன் முதலில் அவனிடமிருந்து வெளிப்பட்ட அந்த “டி” என்ற அழைப்பும்… அவளை அவன் கணவனாக உணரத்தான் செய்தது…… அந்த அரை இருட்டில் அவளை உருக்கத்தான் செய்தது…. ஆனாலும் அவனின் அழைப்பில் உருகிய மனதை….மீட்டு எடுத்தவள்

”என்ன….. ’டி’ யா….. பாலா…. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்றாள் கடுப்பாக

”ஆமாடி…. என் பொண்டாட்டி… நான் மைண்ட் பன்றத பத்திலாம் அப்புறம் பேசலாம்.. இப்போ வா” என்று அவளின் கடுப்பிற்கெல்லாம் சளைக்காமல் அவளை இழுக்க… கைகளை வேகமாக உதறியவள்…

நீ என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக் கொள்…. நான் படுக்கப் போகிறேன்..என்பது போல் படுத்து போர்வையை தன் தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டாள்…

“ஏய் என்ன திமிராடி உனக்கு” என்று அவளின் அவமதிப்பில் அவன் ஆவேசத்துடன் அவள் போர்வையை இழுக்க….

அவனின் வார்த்தையின் ஆவேசத்தை உணர்ந்தவளுக்கு உள்ளே கிலிதான் … இதுவரை அவள் அறிந்த பாலா தன்மையுடன்… நாகரிகமாக மட்டும் தான் அவளிடம் பேசி இருக்கிறான்…. இந்த அளவு கடுமையாக……. வார்த்தைகளில் ’டி’ போட்டு பேசியது அவளுக்கு அதிர்ச்சியை தந்தது…….. இருந்தாலும் பிடிவாதமாக படுத்திருந்தாள் கீர்த்தனா….

இவளிடம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை… என்று முடிவு செய்தவன்… அவள் மேல் போர்வையை வேகமாக இழுத்தவன்.. இழுத்த வேகத்தில் அவளையும் தூக்கியிருந்தான்…

அவன் தூக்கிய நிமிடத்திலேயே பதறியவள்… துள்ளிய மீன் போல் அவனிடமிருந்து அவனை விட்டு இறங்கினாள்…. பாலா கொஞ்சம் லேசான பிடிமானத்தில் தான் அவளைத் தூக்கி இருந்ததால் அவளால் அவனை விட்டு இறங்க முடிந்தது… அவனும் அவளை விட்டு விட்டான்….அவனை விட்டு இறங்கியவள்…. வேகமாக கட்டிலின் எதிர்பக்கம் சென்றும் விட்டாள்… அந்த அறையில் கட்டில் அறையின் நடுவில் இருந்ததால்…

அவனின் அடாவடி….ஆவேசம் உணர்ந்தவளுக்கு…. பேசாமல்..தனது அறையிலேயே கீழேயே படுத்திருக்கலாமோ என்று தோன்றியது என்னவோ உண்மைதான்…. இருந்தாலும்…அவள் குணம் மாறுமா….

ஆனால் பாலாவுக்கோ….. நடு ராத்திரி…. அவளோடு கட்டிலில் சரசமாடுவதை விட்டு விட்டு இப்படி கட்டிலைச் சுற்றி கபடி ஆடிக் கொண்டிருக்கும் தன் நிலையினை எண்ணி நொந்தான்…. நோவதைத் தவிர வேறு வழியில்லை…. தவறு அவன் பக்கம் உள்ளதால்….. அவளுக்கு அவனை பிடிக்காவிட்டால் கூட அவன் அவளை நெருங்க யோசிப்பான்…. ஆனால் அவள் தான் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறாளே….. தானும் அவள் மனம் வருத்தப்படுவாள் என்று அவள் வழியிலேயெ போனால்… கண்டிப்பாக என்றும் வழிக்கு வர மாட்டாள்….. அதனால்தான் கொஞ்சம்…. வன்மையாகவும் நடக்க ஆரம்பித்தான் பாலா…. அது கூட அவளாலேதான் இன்று நடந்தது… கீர்த்தி அறையிலேயே படுத்திருந்தால் கூட இப்படி நடந்திருப்பானா என்று தெரியவில்லை….

“ஏண்டி…..என்னைப் பார்த்து ரேப் பண்ணப் போற வில்லன் மாதிரி ஆக்சன் லாம் பண்ற… கடவுளே… பாலா… உனக்கா இப்படி’” அவளை பார்த்து சொல்லி தலையில் அடித்தான்….. அவனின் இந்த செய்கையில்……

கீர்த்திக்கே தான் செய்வது கொஞ்சம் ஓவரோ என்று கூட நினைக்க வைத்தது

கீர்த்தி தன்னைத்தானே சமன்படுத்தி… தன்மையாக

“பாலா… அன்றைக்கும் நான் ஹாலில் தானே படுத்திருந்தேன்… இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்……”

“அன்னைக்கே உன்னிடம் இப்படி நடந்து கொள்ளவில்லை என்று கோபமா கீர்த்தி”

முறைத்தாள் கீர்த்தி…. அவளின் முறைப்பில்…. சிரித்தவன்…..

“டார்லிங்… அன்னைக்கும் இதே கோபத்தோடுதான் வந்தேன்…. நீ படுத்திருந்த கோலத்தில் ஒன்றும் சொல்லாமல்……. பண்ணாமல் போய் விட்டேன்… என்று விளக்கம் கொடுக்க…

“உங்களுக்கு எதுக்கு கோபம் வர வேண்டும்… நியாயமா எனக்குதான் கோபம் வர வேண்டும்…. என் பெட்ல எதுக்கு படுக்கறீங்க…. எனக்கு என் பெட்ல அடுத்தவங்க படுத்தா பிடிக்காது….. என்று அன்று பாலா சொன்ன வார்த்தைகளை பிடித்துக் கொண்டு…அன்று தன் மனதில் சாட்டையடி வாங்கிய வார்த்தைகளை…. அதே வலியுடன் திருப்பிக் கொடுத்தாள்….

பாலாவிற்கோ…. அது வலிக்கவில்லை.. மனைவியின் பதிலடியை ரசித்தபடி…. அன்னைக்கு நான் பைத்தியக்காரன இருந்துட்டேன்…. இப்போ பைத்தியம் தெளிஞ்சுடுச்சு…. என்றான் கொஞ்சம் கூட யோசிக்காமல்….

மது மேல் இருந்த பைத்தியமா… என்று கேட்கத்தான் நினைத்தாள்….. ஆனால்…. இந்த சூழ்நிலையில் கேட்டால்… அது தனக்கே ஆப்பாக முடியும் என்பதால்…. நல்லவேளை கேட்கவில்லை….. தன் கணவன் என்ற நினைவை விட….. அவன் மதுவின் காதலன் என்ற நினைவுதான் அவளுக்கு அதிகமாய் இருந்தது.... அவன் தன் மனதில் இருந்தும்…. போதாதகுறைக்கு….. அவன் அந்நியமாய் நினைத்து நடத்திய ஒதுக்கம் வேறு…. அவளை…. அவனிடம் நெருங்கவிடாமல் செய்தது…

அவள் யோசித்தபடி இருந்த போதே அவளின் அருகில் வந்து இழுத்துக் கொண்டு போனான்.. அவளும் இனி பிடிவாதம் பிடித்தால்..… இன்னும் அவன் கோபத்தை அதிகரித்து அது தனக்கே பிரச்சனை ஆகி விடும் என்பதால்… பேசாமல் அங்கு போய் கீழேயே படுத்து தொலைப்போம்…… என்று அவன் கைப்பற்றி இழுத்தவுடன் அவனோடு போனாள்…. ஆனால் அந்த எண்ணத்திற்கும் சோதனை வரப் போவது தெரியாமல்

“ப்ச்ச்ச்ச்ச்…விடுங்க நானே வருகிறேன்” என்றவளிடம் வாதம் செய்யாமல் கையை விட்டான் பாலா…..

அவனை விட வேகமாக உள்ளே நுழைந்தவள்…. அதே வேகத்தில் தன் படுக்கையை விரித்தாள்….

கதவை மூடியவன்….. திரும்பி….அவளிடம்….. கதவில் சாய்ந்தபடி….

“என்ன மேடம் பண்றீங்க…” என்று கேட்க…’

“அதான் வந்துட்டேனே… இன்னும் என்ன” என்று பட்டென்று கொடுத்தாள்….

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்… அதெல்லாம் சரிதான்…. இப்போ என்ன பன்ற….

”பார்த்தா... தெரியல…. நீங்க சொன்னபடி … படுத்து தொலைக்கப் போறேன்…. இந்த ரூம்ல….என்று அழுத்தி சொன்னாள்….

“ஓ….. நான் சொன்னபடி….. என்று இழுத்து…. நீயும் அப்டியே கேட்டு உடனே வந்துட்ட…. என்று எகத்தாளமாகப் பேசியவன்… தொடர்ந்து

”அதெல்லாம்…. நீயே எப்போதும் போல் படுத்திருந்தால்…… இல்லை நான் வந்து கூப்பிட்டவுடன்….. இல்லை அதிகப்பட்சமாக நான் வற்புறுத்தும் போது கூட வந்திருந்தால்…. இப்போது இந்த இடத்தில் படுத்திருக்கலாம்…. ஆனா… நீ என்னை கட்டிலைச் சுத்தி கபடி ஆட வச்சேல… தண்டனை வேண்டாம்….. அதுனால… மேல படு…. என் பக்கத்துல…..” என்று சாதாரணமாக சொல்லி அவளை ஆட்டம் காண வைத்தான்…..

“இவன் இதெல்லாம் ப்ளான் பண்ணி பண்றானா… இல்ல நாம செய்யறத வச்சு பண்றானா…. அவளுக்கே குழப்பமாகி விட்டது…. இப்போ என்ன பண்ணுவது…. நான் படுக்கமாட்டேன் என்று சொன்னால்..அதை நூலாகப் பிடித்துக் கொண்டு என்ன செய்வானோ என்று தோன்றியது……”

இருந்தாலும்…..

“படுக்க மாட்டேன்னா… என்ன பண்ணுவீங்க….”

“அது சரி…… தைரியம் தான் உனக்கு…. நான் என்ன பண்ணுவேன்னு தெரியனுமா…. சரி கேட்டுக்கோ… எதை நினைத்து பயந்தியோ…. இந்த ரூம்ல படுத்தா என்ன ஆகும்னு…. நினைத்தாயோ…. இல்ல என்ன நம்பாமா…. நான் என்ன பண்ணுவேன் என்று தோன்றியதோ.. அது அத்தனையும் நடக்கும்…” இப்போதும் அவன் கதவின் மேல்தான் சாய்ந்திருந்தான்…

ஆனால் …. அவன் பார்வை…… அவளின் மேல் பதிந்த விதத்திலே அவன் சொன்னதைச் செய்வான் என்று தோன்ற…..

கீர்த்திக்கும் அவன் சொன்னவுடன் படுக்க இஷ்டம் இல்லைதான்… பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தாள்…..ஆனால் வறட்டுப் பிடிவாதம் பிடித்து அவன் சொன்ன மாதிரி நடந்து விட்டால்….. எல்லாத்தையும் முடித்து விட்டு… நான் சொன்னேன் நீ கேக்கலை… அதான் இப்படி நடந்தேன் என்று கூலாகச் சொன்னாலும் சொல்வான்…..அவன் மேல் தவறே இல்லை என்பது போல….”

இவள் மட்டும் என்ன..அவன் தொட்டால்… எதிர்க்கவா முடியும்….. ஆனால் அதன் பிறகு…. மனதிலும் தெளிவில்லாமல்….மனதளவில் அவனைக் நேசிப்பதே இன்னொருவருக்கு சொந்தமான பொருளை அவருக்குத் தெரியாமல் ரசிப்பது போல் அவளைக் கொல்ல… அவனோடு உடல் அளவிலும் இணைந்து…. நினைக்கவே அவளுக்கு பயம் வந்தது… அது தனக்கு கிடைத்த அடுத்தவரின் பொருளை அவருக்கு தெரியாமல் உபயோகிக்கும் திருட்டுத்தனம் போல் தோன்றியது…. நினைக்கவே தன் மேல் அருவெறுப்பாக வந்தது…

அவளின் இந்த மனநிலையை மாற்ற பாலாவால் முடியுமா இல்லை தன்னால் முடியுமா….அப்படி முடிந்தால் மட்டுமே… அவனோடான தன் வாழ்வு நேராக சாத்தியமாகும்….. ஆனால் அது முடியுமா… முடியாதது போல்தான் தோன்றியது அப்போதைக்கு… காலம் என்ற ஒன்று எதையும் மாற்றும் என்பதை விரைவில் உணர வைக்கும் என்று அவளின் புத்தியில் அப்போது உரைக்க வில்லை

இப்பொதைக்கு அவனைத் தடுக்க….. மேலே படுப்பதுதான் சரி…. என்று தோன்ற… பாலா சொன்னால் மீற மாட்டான்… அவளிடம் வம்பு பண்ண மாட்டான்….. என்பதால்…. அவனோடான தன் வார்த்தைப் போராட்டத்தை நிறுத்தி விட்டு … தன் உணர்ச்சிகளுடன் போராடியபடி படுத்தாள்…தன் கட்டிலில்…

“good….ரொம்ப நாளைக்கப்புறம் ஸ்மார்ட் கீர்த்தினு ஃப்ரூப் பண்ணிட்ட….” என்றபடி கூலாக அவளது அருகில் படுத்தான்… அவள் கணவன்….

சற்று இடைவெளிதான் இருந்தது….. இருவருக்கும்… சொன்னபடி அவள் படுத்ததால்… பாலாவும் ஒன்றும் சீண்ட வில்லை…..

அவள் ஏதாவது மறுத்தால்… வேறு ஏதாவது சான்ஸ் கிடைத்திருக்கும்… பாவி… புரிந்து கொண்டு விட்டாள்…. ஆனாலும் இவ்வளவு புத்திசாலித்தனம் கூடாது தன் மனைவிக்கு என்றபடி படுத்திருந்தான்…. சொல்லிவிட்டோமே என்று…. அவளின் அருகாமை அவனை இம்சித்த போதும்…. ப்ர்யத்தனப்பட்டு தன்னை அடக்கியபடி படுத்திருக்க……

கீர்த்திக்கோ அவனின் அருகாமை… கணவனே என்றாலும் கூட…… அந்த உறவும் சுமூகமாக இல்லை என்ற நிலையில்… ஒரு ஆண்மகனுடன் இவ்வளவு அருகில் படுக்கின்ற நிலை புதிது என்பதாலும்…. சுத்தமாக முடியவில்லை… படுக்கையில் புரளக் கூட முடியவில்லை…. ஒரே நிலையில் 10 நிமிடம் கூட படுக்க முடியாமல்….. ஒரு கட்டத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டாள்…. அவளால் முடியவில்லை….. இவன் வேறு என்ன சொல்வானோ என்றும் நினைத்தாள்…

அவளின் அவஸ்தையை உணரத்தான் செய்தான் பாலா…ஆனால் எதுவும் அவளிடம் கேட்க வில்லை…..எங்கே எதுவும் பேசப் போய்….. தன்னை மீறி எதுவும் நடந்து விடுமோ என்ற பயம்… அவனுக்கு….. அதனால்

அவள் உட்கார்ந்திருப்பது தெரிந்தும்… தன்னை அடக்கியபடி கண் மூடியே இருந்தான்…. அதுவும் சிறிது நேரம் தான்… அவள் படுக்காமல் சுவற்றில் சாய்ந்தபடி கால்களில் கைகளை கட்டியபடி தலையை முழங்காலில் வைத்து படுத்திருந்தாள்…..

நீ சொன்னாய் மேலே வந்துவிட்டேன்…இதற்கு மேல் என் இஷ்டம் தான் என்பது போல் இருந்தது அவள் செயல்…

“”அவளின் செய்கையை மனதினுள் ரசிக்கத்தான் செய்தான்…. அதே நேரத்தில் அவளை அப்படியே விடவும் மனதில்லை….”

“என்ன படுக்கலையா” என்று அதட்டினான்…

”எனக்கு தூக்கம் வரலை.. நான் தான் உங்க மிரட்டலுக்கு பயந்து வருவேன்… தூக்கத்திற்கெல்லாம் உங்க மிரட்டலுக்கு பயந்து வரத் தெரியாது …..” என்றாள் அந்த சூழ்னிலையிலும் அவளின் குறும்புப் பேச்சு வழக்கத்தில் அவனுக்கு பதிலடி கொடுத்தாள்…’

”ஹ்ம்ம்ம்ம் அப்படியா….” கீதும்மா…. என்று அவளின் அருகே அமர்ந்தவன்….

மெதுவாக கிசுகிசுப்பாக அவள் காதில்

“அதையும் வர வச்சுடவா….” எனக் கூற … அவன் நெருக்கமே அவளுக்குள் பிரளயத்தை ஏற்படுத்த.. அவன் குரலில் இருந்த தாபம்… அவளுள் ரசாயான மாற்றத்தை விளைவித்து கொண்டிருந்த்து…

அவனிடம் மயங்கும் தன் நிலை பிடிக்காமல்… அதைத் தாளாமல்…. அவனிடம் கெஞ்சலில் இறங்கினாள்….

“ஏன் பாலா….. இப்படி எல்லாம் நடந்துக்கறீங்க.. எனக்கு பிடிக்கலை…. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… நீங்க பன்றதெல்லாம் நல்லாவே இல்லை….. எனக்கு ஒரு மாதிரி இருக்கு….. உங்களை இப்படியெல்லாம் நினைக்கவே எனக்கு பயமாய் வருகிறது….. நீங்க நல்லாத்தானே இருந்தீங்க…..ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க…….” என்று கண்ணீர் மல்க கூற அதில் எல்லாம் அவன் கொஞ்சம் கூட மசியாமல்…

நான் பண்றது நல்லா இல்லையா…. ஆமால்ல…..புருசனா நான் பண்றது நல்லா இல்லதானே….என்ன பண்ணலாம்…. நான் பண்ணிட்டு இருக்கிற காரியத்தை நல்லா ஆக்கிடலாமா…. நான் ஏற்கனவே என் உணர்ச்சியை எப்படியோ அடக்கிக் கொண்டு உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்… நீ இப்படியே உட்கார்ந்திருந்தால்…. என்னிடம் வம்பு வளர்த்துக் கொண்டே இருந்தால்…. இந்த நேரத்தில் அப்புறம்… நான் புருசனா… நல்ல காரியம் எல்லாம் பண்ண வேண்டியதுதான்… உனக்கு ஓகேவா.” என்ற சொல்லி அவள் அருகே இன்னும் நெருங்குவது போல் பாவனை காட்ட…. கீர்த்தி ….அவனைத் தள்ளிவிட்டு …. படுத்தவள் …சுவரோரம் திரும்பி அதனோடு ஒன்றினாள்……

இருவரும் ஒருவரின் அருகாமையை ஒருவருக்கொருவர் விரும்பினாலும்…. பாலா அவளை நெருங்க முடியாமல் தவிக்க… கீர்த்தி நெருங்க மனம் இல்லாதவளாய் அவனைத் தவிர்த்தாள்…..

அவள் தூங்கவே இல்லை... புரண்டபடி தான் இருந்தாள்….. வெகு நேரம் அவளின் இந்த செய்கை தொடர… மனம் தாங்காமலும்…

அவனுக்கும் அவன் உடலையும்..மனதையும் அடக்கும் வழி தெரியாமல்.....கட்டிலை விட்டு இறங்கி அவளுக்கு தனிமை கொடுத்த படி…. வெளியே வந்து படுத்தான்….

அவன் சென்றதை உணர்ந்தவள்…. இதத்தானே நானும் பண்ணினேன்… அவனுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா….. என்று …யோசித்தவளுக்கு… அவனை மாதிரியே மிரட்டி தான் இழுத்து வருவது போல் கற்பனை தோன்ற…. அவளுக்கு புன்னகை வந்தது

“இழுத்துட்டு வந்து …. என்ன கீர்த்தி மிரட்டுவ… அவன் அதுக்குதானே காத்திருக்கான்… ….இதுக்கு பேர்தான் சனியனத் தூக்கி பனியனுக்குள்ள போடுரதா….”

அவளது மனச்சாட்சி கேட்க… ’நீ சொல்றெதெல்லாம் சரிதான்…அதுக்காக… பாலாவ சனியன்னு சொல்வியா… என்று தன் மனசாட்சியை அதட்டியவள் …ஒரு மாதிரியான மனநிலையில் வெகு நாட்களுக்கு பின் நன்றாக உறங்கினாள்….

----------------------------------------------------------

ஏர்போர்ட்டில்….. வினோத்துக்காக கீர்த்தியும், பாலாவும் காத்திருந்தனர்…. கீர்த்தி கடும் கோபத்தில் இருந்தாள்…வினோத் மேல்…..15 நாட்களில் வருவதாகச் சொல்லியவன் அதற்கு முன்னமே வரும் சூழ்நிலை வர .அதை பாலாவிடம் மட்டும் சொல்லி விட்டு… கீர்த்தியிடம் சொல்ல வேண்டாம் … அவன் வரும் நாள் அன்று, ஏர்போர்ட்டுக்கு அழைத்து வரச் சொல்லி இருந்தான்….. அதனால் பாலாவும் சொல்லாமல் இருந்து விட…. .இன்றுதான் கீர்த்திக்கு தெரியும்…..

வரும் போதே வம்போடுதான் வருவானா இந்த வினோத் என்றபடி… வரட்டும் அவன் … இருக்கு கச்சேரி என்று அவனை அர்ச்சித்தபடி அவனுக்காக காத்திருந்தாள்…. இருந்தும் அவனை எப்போது பார்ப்போம் என்று ஆவலாக இருந்தாள்…

வினோத்தும் வந்தான்…. ஆனால் அவனைப் பார்த்தவுடன்..அவள் கோபமெல்லாம் …. மறந்து கீர்த்தி பேச ஆரம்பித்தாள். ..அவள் அவனோடு இயல்பாக பேசினாள்….. வாயாடினாள்….. பாலாவிற்கே இவள் இப்படியெல்லாம் பேசுவாளா என்று தோன்றியது……

வினோத்திற்கோ… கீர்த்தியின் இயல்பான பேச்சில் ஓரளவு தன்னை….தன் துக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு விட்டாள்.. எனும் போதே நிம்மதியாக இருந்தது…. அதற்கு பாலா மட்டுமே காரணம்…….என்பதால்….. அவனுக்கு பாலாவின் மேல் மிகுந்த மரியாதை எழுந்தது….

காரில் பாலாவுடன் முன்னெ வழக்கம் போல அவள் அமர்ந்திருந்தாள்….வினோத் பின்னால் அமர்ந்திருந்தான்… கீர்த்தி அவன் புறம் திரும்பியபடி பேசிக் கொண்டிருந்தாள்….

நன்றாக பேசியபடி வந்தவள்…… திடீரென்று

“ச்சேய் நான் உன்கூட போய் பேசிட்டு வரேனே….. நீ வர்ரத நீ என்கிட்ட சொல்லலேல…போடா உன்கிட்ட பேச மாட்டேன்… நீ யார்கிட்ட சொன்னியோ… அவங்க கூட மட்டும் பேசு….. என்கிட்ட பேசின…. கொலவெறி ஆகிடுவேன்“ என்று வினோத்தை முறைத்து விட்டு… திரும்பி நேராக உட்கார்ந்தாள்..

”அய்யோ… என் கீர்த்திச் செல்லம் மலை ஏறிட்டாளே… நான் என்ன பண்ண …என் கீர்த்திய என் கூட பேச வைக்க எனக்கு சப்போர்ட் பண்ண கூட ஆள் இல்லையே ” என்று வினோத் வழக்கம் போல பேச…

அவனுக்கும் அது வித்தியாசமாய் பட வில்லை…. கீர்த்திக்கும் அது வித்தியாசமாகப் படவில்லை…… இருவரும் ஒன்றை மறந்தார்கள்…

இன்று அவள் இன்னொருவனின் மனைவி…. என்பது வினோத்திற்கு ….

கீர்த்திக்கு…அவள் பாலாவின் மனைவி என்பதும்… அவன் முன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும்…

கேட்ட பாலா அதிரத்தான் செய்தான்….அதிர்ந்தவன்..

”என்னது… என் கீர்த்தியா… செல்லமா…”

மனதுக்குள்…. கோப அலை ஆர்பரித்தது…..கார் அவனது கோபத்திற்கு ஏற்ப வேகமாகச் செல்லத் தொடங்கியது

காரின் திடிரென்ற வேகத்தில் வினொத் சற்று யோசனையுடன் பாலாவை நோக்க……. அங்கு அவனது கோப முகம் கண்ணாடியில் மறையாது தெரிய….

வினோத் சுதாரித்து விட்டான்…. அவனின் கோபம் புரிந்தது…. அதன் நியாயம் உணர்ந்தவன்…. அதற்கு மேல் கீர்த்தியின் மேல் காட்டும் உரிமையில் கவனம் கொண்டான்…

கீர்த்திக்கு…. அதெல்லாம் புரியாமல் தன் சண்டையிலேயே நின்று கொண்டிருந்தாள்.. வினோத்தும் ஓரளவிற்கு அவளைச் சமாதானப் படுத்தியபடி வந்தான்…

அவனின் சமாதான முயற்சியில் ஓரளவு இறங்கி வந்தவள்…

“என்னடா வினோத்… மீசைய ஏன் எடுத்த நல்லாவே இல்ல உனக்கு…. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல…. என்னைய டென்சன் படுத்தனும்னே வந்தியா… என்ன பார்க்க வருவேனு தெரியும்… தெரிஞ்சும்…. மீசை இல்லாம வர… “ என்று கேட்க…

பாலாவின் நிலைமையோ மிகப் பரிதாபம் ஆனது…

“இப்போ அவன் மீசை வச்சா இவளுக்கு என்ன… வைக்கலேனா என்ன…… என்னப் பத்திலாம் இப்படிக் கவலைப் படுவாளா என்று இருந்தது…. தானும் ஒரு நாள் மீசையை எடுத்துவிட்டு வந்து அவள் முன் நிற்க வேண்டும்… அவள் தன்னைத் திட்டுவாளா… என்று நினைக்கத் தொடங்கியது…..

வினோத்தோ….

இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த படி கொஞ்சம் நக்கலுமாக

“அதுதான் சினிமால வர்ற மாதிரி என்னை அமெரிக்க மாப்பிள்ளை ஆக்கிட்டீங்களே… அதுனால …. அமெரிக்காலானச்ச்சும் எதுனாலும் பொண்ணு செட்டாகுமானுதான் மீசைய எடுத்துட்டு சுத்திட்டு இருக்கேன்” என்று சொல்ல….

கீர்த்தி….பாலாவை பார்த்து…பின் அமைதி ஆனாள்……

வருத்தமும் இருந்ததோ என்று பாலாவுக்கு மட்டும் தோன்றியது

பாலாவிற்கு…. அவனின் பதிலில் சிரிப்பு வந்ததோடு அசந்துதான் போனான்… அவன் நினைத்தது போல சாதரணம் ஆனவன் இல்லை என்று தோன்றியது…..

இருவரின் அமைதியைப் பார்த்தவன்…. அதைத் தானே மாற்றும் முயற்சியில்….

“ஹேய் -------------------------(டேஷ்….டேஷ்) கூல் கூல் .. சும்மா ஒரு ஃபன்க்கு சொன்னேன். நீ உம்முனு ஆகிடாதா” என்று குறத்தி என்று சொல்லாமல்…. டேஷ் என்று சொன்னதை கீர்த்தி புரிந்து முறைக்க

பாலாவின் முன் குறத்தி என்று சொல்லைத் தவிர்க்க வினோத் அவ்வாறு சொன்னான்….. பாலாவின் மனநிலை புரிந்தவனாய்….

பாலாவோ

”அது என்ன டேஷ் வினோத்….” என்று புரியாமல் கேட்க ….(அதில் என்ன இருக்கோ… அவன் கவலை அவனுக்கு)

வினோத்தோ…. தயங்கியபடியே

”அது பாலா….உங்க வைஃப.. நான் செல்லமா..கூப்பிடுவேன்… சும்மாவே அவளுக்கு அது பிடிக்காது…. நீங்க வேற இருக்கீங்க….. உங்களை வச்சே என்ன கொல பண்ணினாலும் பண்ணிடுவா..என் வாயால நான் சொல்ல மாட்டேன் பா….வேணும்னா..அவகிட்டேயே கேட்டுகோங்க….என்ன ஆள விடுங்க” என்று கீர்த்தி கோபத்திற்கு பயந்து ஜகா வாங்க… பாலா கீர்த்தியை அது என்ன அப்படி ஒரு செல்லப் பெயர் என்று அவளை நோக்க.. பார்த்த அவனே அதிர்ந்தான்… உண்மையாகவே கொலை வெறியில்தான் இருந்தாள்… வினோத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள்….

“டேய்.. நீ மட்டும் சொல்லுடா…..பார்க்கலாம்…. இன்னைக்கு கார்ல இருந்து உன்னை தள்ளி விட்டுதான் போவேன்” பாலாவின் முன் சொல்லி விடுவானோ என்று பத்ரகாளியாய் நிற்க…. அதற்கு மேல் பாலா அதற்கு விளக்கம் கேட்பானா என்ன…

வினோத்தோ

”அம்மா தாயே நான் எங்க அப்பா..அம்மாக்கு ஒரே புள்ள…. நான் சொல்லலை மா”

என்று பரிதாபமாகச் சொல்ல..

அப்போதும் கீர்த்தியின் கோபம் குறைய வில்லை…. நல்ல வேளை குறத்தி என்று நேரடியாக சொல்ல வில்லை தப்பித்தான்….என்று நினைத்தாள்…

இவர்களின் வார்த்த விளையாடலில்…. செல்ல சண்டையில்….. பாலாவிற்குதான் தலைவலி வந்தது…எப்போதடா வீடு வரும் என்றிருந்தது….

1,234 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page