
என் உயிரே!!! என் உறவே!!! 23
அத்தியாயம் 23:
நாட்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் சென்றது…. ஜெகநாதன் வீடு திரும்பியிருந்தார்…. கீர்த்தியும் அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தாள்… அவர்களது அலுவலகத்தில் அவர்கள் திருமணம் பற்றி வித விதமான பேச்சுகள் எழத்தான் செய்தன…. பாலா அவளை காதலித்ததால் தான் அவளுக்கு குறைந்த நாட்களிளேயே ப்ரமோசன் கிடைத்தது ….என்றெல்லாம் கூட… ஆனால் கீர்த்தி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேலைக்குச் சென்றாள்… இடையில் கார்த்தி கூட போன் செய்து வாழ்த்து கூறினான்….கவிக்கு கீர்த்தி சொல்ல வில்லை… அவள் போன் செய்த போதும் எடுக்க வில்லை…. மெயிலிலோ அவளுக்கு பதில் அனுப்ப வில்லை…
அன்று அலுவலகம் முடிந்து கீர்த்தி மட்டும் கிளம்பியிருந்தாள்…. பெரும்பாலும் பாலாவுடன் காலையில் மட்டுமே அலுவலகம் செல்வாள் கீர்த்தி…. மாலையில் பாலா வரத் தாமதமானால் அவள் மட்டும் கிளம்பி விடுவாள்… குமார் வந்து அழைத்துச் செல்வான்… அவளின் ஸ்கூட்டியில்தான் வர அவளுக்கு பிரியம்….ஆனால் பாலா அனுமத்திக்க வில்லை…
அன்று…. கீர்த்தியும்,சிந்துவும் மொட்டை மாடியில் வழக்கம் ஆகியிருந்த …அரட்டை + பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்….
ஜெகநாதனைப் பார்க்க சௌந்தர்யாவும்..அவரது அப்பாவும் வந்திருந்தனர்…. சௌந்தர்யா அருந்ததியிடம் கீர்த்தியைப் பற்றி விசாரித்து… அவளைப் பார்க்க ஆசைப் படுவதாகக் கூற…. அருந்ததியோ ஏற்கனவே இங்கே எல்லாம நல்லா நடக்கிறது… இவ வேற பேசி என்ன பண்ணப் போறாளோ என்றிருந்தது… இவளிடம் சொல்வோமா………. வேண்டாமா………… என்று யோசிக்க
ஜெகனாதனோ பெருமையாக….. என் மருமகள நீ பார்க்கணுமா…. மேலே மாடியில இருப்பா போய் பாரும்மா…. எங்க வீட்டு மகாலட்சுமி என்று பெருமை வேறு… சௌந்தர்யாவிற்கு எரிச்சல் வந்தாலும் அவரிடம் காண்பிக்காமல்… அது குறையாமல் கீர்த்தியை பார்க்கச் சென்றாள்…
கீர்த்தியிடம் சௌந்தர்யா பற்றியெல்லாம் பாலா சொல்லி இருக்க வில்லை… சொல்லி வைத்திருந்திருக்கலாம்… சௌந்தர்யா பாலா குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் போல என்று கீர்த்தி அவளிடம் பேச ஆரம்பிக்க…. சிந்துவும் உடன் இருந்தாள்…
“நீதான் பாலா மனைவியா” என்று எகத்தாளமாக கேட்க… கீர்த்திக்கு அவள் ஏதோ பிரச்சனை பண்ண வந்திருக்கிறாள்… என்று கண்களைப் பார்த்து தெரிந்து கொண்டாள்….
உடனடியாக சிந்துவை… கீழே போகுமாறு சொல்லி அனுப்பி விட்டாள்… சௌந்தார்யாவைப் பார்த்த உடனே சிந்துவுக்கும் புரிய… கீர்த்தியை விட்டு போக மனம் இல்லாமல் இருந்தும் சிந்து கீழே இறங்கினாள்
இறங்கியவள் பாலாவிற்கு போன் செய்து விட்டாள்…
“அண்ணா.. அந்த அக்கா… கீர்த்தி அக்காகிட்ட சண்டை போடுகிற மாதிரிதான் பேசினார்கள்.. அதுதான் அக்கா கூட என்னை கீழே போகச் சொல்லி விட்டார்கள்…சீக்கிரமா வாங்க…” என்றபடி போனை வைத்தாள்…
பாலாவும்… தான் கிளம்பி விட்டதாகவும்… இன்னும் 10 நிமிட்த்தில் தான் அங்கே இருப்பேன் என்று கூறி வேகமாக வந்தான்….
அவன் எவ்வளவு வேகமாக வந்த போதும் அவனால் விபரீத்தை தடுக்க முடியவில்லை…
அவன் மாடிக்கு சென்ற போது பார்த்து கீர்த்தி…சௌந்தர்யாவை அறைந்ததைத்தான்….
பாலாவே அதிர்ந்து விட்டான்… உடனடியாக அவர்கள் முன் நின்றான்…
கீர்த்தி கோபத்தின் உச்ச கட்டத்தில் இருந்தாள்…
சௌந்தர்யாவோ அதிர்ச்சியும் கோபமும் கலந்து நின்றாள்…
என்ன நடந்த்து என்றால்….
சிந்து போன பிறகு…
சௌந்தர்யா தன்னைப் பற்றி சொல்லியவள்…. தன்னிடம் பாலா பேசியதையும் சொன்னாள்…. எல்லாவற்றையும் சொல்லாமல்.. பாலா பேசியவற்றை மட்டும் சொன்னாள்… அவளைப் பற்றி கீர்த்திக்கு தெரியவில்லை என்ற போதே…….. பாலா-கீர்த்தியைப் பற்றி ஓரளவு அனுமானத்திற்கு வந்தாள்….ஏதோ சரி இல்லையென்று…. தீர்மானித்தவள்
பாலா… அங்கிளுக்காகத்தான் மேரேஜ் பண்ணியிருக்கிறார் போல…மதுவை அவர் மறக்க மாட்டார்…எனக்கு நன்றாகத் தெரியும்….உன்னைப் பார்த்தாலும் மிடில் கிளாஸ் போலத்தான் தெரியுது… உங்க அப்பா அம்மாவிற்கு வேறு வழி இல்லாமல் உன்னைத் தள்ளி விட்டு விட்டனரா…. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்… நான் பாலாவைத் திருமணம் செய்தால் நான் நன்றாக இருக்க மாட்டேனாம்… என் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பாலா என் மேல் அக்கறையாகச் சொன்னார்…. ஆனால்… உன்னைக் திருமணம் செய்திருக்கிறார்… பாவம் நீ என் மேல் உள்ள அக்கறை கூட உன் மேல் இல்லை… என்று போலியாக பாவம் பார்க்க
அவள் கூறியதில் எல்லாவற்றையும் தவிர்த்த கீர்த்தி…
“ஜஸ்ட் ஷட் அப்” …. என் அப்பா அம்மாவை பற்றியெல்லாம் நீ பேசாத… பேசிட்டேல்ல… கிளம்பு… .நான் போறேன் என்று கீழே இறங்க எத்தனிக்க
”ஓ………. உங்க அப்பா..அம்மாவைப் பற்றி பேசினால் கோபம் வருகிறதா… ஆமா…. இன்னொருத்திய லவ் பண்ற, அவள மறக்காமல் திரிகிற ஒருத்தனுக்கு பணத்தை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைத்தால்…. அவர்கள் எப்படிப் பட்ட கேவலமானவர்கள்…. பணத்துக்காக உன்ன விற்கக் கூட என்று சொல்லி முடிக்க வில்லை….
சௌந்தர்யா கன்னத்தில் கீர்த்தியின் கை பதிந்த்து…
”இங்க பாரு இனி ஒரு வார்த்தை அவங்களப் பற்றி வந்தது…” என்று சுட்டு விரலால் எச்சரித்தாள்…
பத்ரகாளியாய் நின்றிருந்தாள்….
பாலாவு