top of page

என் உயிரே !!! என் உறவே !!! 15

அத்தியாயம் 15

அடுத்து வந்த 2 நாட்களில் ராகவ் பம்பரமாய் சுழன்றதில் வீடு, லேண்ட் ஆகியவை விற்க ஏற்பாடு செய்து விட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்த தொகைக்கு முடியவில்லை. அதற்கும் மேல் நண்பர் ஒருவரின் மூலம் கடனுக்கு கேட்டு வைத்தார். அதுதான் பெரிய தொகை. இதைத் தவிர அவர்கள் சேமிப்பு, நகை எல்லாம் சேர்த்து ஓரளவு நம்பிக்கை யாக இருந்தனர். அன்றைய தினம் வெள்ளி என்பதால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்ற் முடிவு செய்திருந்தார் ராகவ்.

கடந்த சில நாட்களாகவே பாலா கீர்த்தியை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். முதலில் கவி போனதால் தானோ என்று பெரிதாக நினைக்க வில்லை.மெல்ல சரி ஆகி விடும் என்றுதான் நினைத்திருந்தான்.ஆனால் இப்போதெல்லம் அவள் உம்மென்று இருப்பது போல் தோன்றியது. இவனே சில சமயம் வேறு ஏதாவது பேசினால் கூட நழுவுவது போல் தெரிந்தது. அவள் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். சில சமயம் இவனுக்கே பொறாமையாய் இருக்கும் எப்போதும் இவள் எப்படி இப்ப‌டியிருக்கிறாள் என்று. அனறு அவள் வீட்டிற்கு போய் வந்த பின்னர் அதற்கு விடை தெரியாமல் இல்லை. இப்படி ஒரு குடும்பத்தில் இருப்பவளுக்கு மகிழ்ச்சிக்கு குறைவேது. ஏன் அவனுக்கு மட்டும் என்ன‌ அவனுக்கும் பாசமான பெற்றோர்தான். அவனது நிம்மதியின்மைக்கு காரண்ம் எல்லாம் இந்த காதல் என்ற ஒன்று வந்த தால் தான். இல்லா விட்டால் என்றவன் தன்னைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு மீண்டும் கீர்த்தியிடமே வந்தான். அவன் கொடுத்த வேலையினை இன்னும் அவள் முடிக்க வில்லை. அவள் அறிவிற்கு அந்த டாஸ்க் பெரிய விசயமில்லை. பின் ஏன் இப்ப‌டி என்று நினைத்த வன் அவளையே அழைத்து காரணம் கேட்கலாம் என்று அவளை அவனது அறைக்கு அழைத்தான்

அறைக்குள் நுழைந்தவளை பார்த்தவ‌னுக்கு அவள் முகத்தில் இருந்த கவலைக் கோடுகள் அப்பட்டமாய் தெரிந்தது. இருந்தாலும் உடனே அவளிடம் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், அலுவலக வேலையினைப் ப‌ற்றி விசாரித்தவன் , இன்று மாலைக்குள் அதை தன‌க்கு முடித்து தர வேண்டும் என்றவுடன் அவனைப் பார்த்து விழித்தாள்

“என்ன கீர்த்தி

“சார் இன்னைக்குள் முடிக்க முடியாது, இன்று உடனே முடிக்க வேண்டுமா “ என்று குற்ற உணர்வில் தடுமாறினாள் கீர்த்தி.

அவளின் பதிலில் முகத்தைச் சுருக்கியவன் “ நான் உங்களுக்கு கொடுக்கும் போது நேற்று முடித்து தர வேண்டுமென்று சொல்லி இருந்தேன், நீங்கள் என்னவென்றால் இன்று கூட முடியாது என்கிறீர்கள்” என்றூ முடித்த போது கம்பெனியின் MD என்ற‌ முறையில் அவனது குரலில் கொஞ்சம் அனல் அடிக்கதான் செய்தது.

பாலாவின் முகச் சுழிப்பில் சிறிது அதிர்ந்தவள்

“ சார் , இந்த ஒருதடவை மட்டும் என்னை மன்னைத்துக் கொள்ளூங்கள், நான் திங்கட்கிழமைக்குள் முடித்து விடுகிறேன்” என்று கீர்த்தி மென்று முழுங்கி சொன்னது தான் தாமதம்

“ என்ன மேடம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் , இன்று முடிக்க வேண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் உங்கள் வசதிக்கு பேசினால் எப்படி , இங்கு நான் முதலாளியா இல்லை நீங்களா , எனக்கு இன்று கூட அதிகம் தான் . உங்களிடம் கொடுத்தால் முடித்துக் கொடுப்பீர்கள் என்று நினைத்தால் நீங்களும் இப்படி செய்கிறீர்கள். எனக்குத் தெரியாது இன்று மாலைக்குள் எனக்கு முடித்தாக வேண்டும் கீர்த்தி.இப்போ நீங்கள் போகலாம் “ என்று வார்த்தைகளில் அனல் கக்கினான்

அதற்கு மேல் அங்கு நின்றால் அழுது விடுவோமோ என்று கூட கீர்த்திக்கு தோன்றியது. அவளது தவறுதான் , குடும்ப பிரச்சனையில் அவள் கொஞ்சம்ம் அவள் கவன‌ம் பிசகி விட்டாள் எனும் உண்மை உறைக்கதான் செய்தது. ஏற்கனவே அவள் இருந்த மன நிலையில் பாலாவின் வார்த்தைகள் வேறு அவளைத் தாக்க , கண்கள் கசிந்து விட்டது.

இனி நிற்கக் கூடாது என்று அவசர அவசரமாய்

“ சரி சார்” என்ற் வார்த்தைகள் கூட வெளியே வராதது தொண்டைக்குள் அடைத்தது.எப்படியோ நிமிராமல் பேசி விட்டு அவள் வெளியே வந்தாலும் கண்ணீர் துளிர்த்த அவள் கண்கள் பாலாவின் கவன‌த்தில் இருந்து தப்ப வில்லை.

அவளை அனுப்பி விட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் , அவள் அப்படி போனது உறுத்த மீண்டும் அழைத்தான்.

உள்ளே வந்தவளை நன்றாக உற்றுப் பார்த்தான். தனது அறையினை விட்டு போனதிலிருந்து அழுதி்ருக்கிறாள். இவன் அழைத்த வுடன் முகம் கழுவி வந்திருக்கிறாள் என்பது அவளைப் பார்த்த வுடனே விளங்கியது.

”சொல்லுங்க சார் “ எனும் போதே அவள் குரல் கமறியது.

”உட்காருங்க கீர்த்தி முதலில், “

” நீங்கள் திங்கட்கிழமை முடித்துக் கொடுத்தால் போதும், நான் பேசி விட்டேன், இப்போதாவது நார்மல் ஆவிற்களா “ என்று சினேக‌மாய் புன்னகைத்தான்

”தேங்க் யூ சார்” என்றபடி கிளம்ப எத்தனித்தவளை “இருங்க இருங்க‌ கீர்த்தி நான் உங்களிடம் பேச வேண்டும்” என்றூ பாலா சொன்ன வுடன் குழப்பமாய் பார்த்தாள்

“நான் கேட்பது தவறா சரியா என்று தெரியவில்லை. தவறாய் இருந்தால் மன்னத்துக் கொள்ளுங்கள். உங்களைப் ப‌ற்றி யும் , உங்கள் திறமையைப் பற்றியும் எனக்கு தெரியும்.ஒரு பணியை உங்களீடம் கொடுத்தால் குறிப்பட்ட நேரத்திற்கு முன்னமே தருவதுதான் உங்கள் வழக்கம்.

ஆனால் இப்போது கொடுத்திருந்ததோ உங்கள் அறிவுக்கு சாதாரணம் வழக்கமாக செய்யும் டேட்டாபேஸ் வொர்க்தான்.ஆனால் அதை முடிக்க முடிய வில்லை எனும் போது கம்பெனி MD என்ற முறையில் எனக்கு வருத்தம் தான். ஆனால் அதையும் தாண்டி யோசித்து பார்க்கும் போது ஏன் முடியவில்லை என்று நினைத்த போது உங்களால் ஒருமனதாக இருக்க முடியாமல் ஏதோ ஒன்றூ அலை கழிக்கிறது என்பதுதான் எனக்கு தோன்றியது. அப்படி இருந்தால் ஒரு வாரம் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள் , உங்கள் பிரச்சனை சால்வ் ஆன பிறகு மீண்டும் வேலையில் சேருங்கள், ஏனென்றால் ஒரு திற‌மையான் எம்ப்ளாயி சில காரணங்கலூக்காக பின்னடைவதை நான் விரும்ப வில்லை. இல்லை அலுவலக‌ம் வேறு , சொந்த பிரச்ச்னைகள் வேறு என்று உங்களால் இருக்க முடியுமென்றால் எனக்கு ஒன்றும் இல்லை. ஏன் என்னையே எடுத்துக் கொள்லுங்கள், என்னுடைய பிரச்சனை என்னவென்று ஓரளவு தெரியும், இருந்தும் நான் இந்தக் க‌ம்பெனியை நிர்வகிக்கிறேன் அல்லவா. சோ நீங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் என்று இழுத்தவன்

“நீங்க தவறாக‌ எடுத்துக் கொள்ள வில்லை என்றால் என்னால் ஏதாவது உதவி வேண்டும் என்றால் கூட செய்ய தயாராக இருக்கிறேன்.அதாவது பண விசயமாக இருந்தால் கூட இந்த கம்பெனி எம்ப்ளாயி என்ற முறையில் மட்டுமில்லாமல் , ஏனோ தெரிய வில்லை உங்களை இப்படி பார்க்க வருத்தமாய் இருக்கிறது. அதனால்தான் கீர்த்தி. தயங்காமல் சொல்லுங்கள் என்றான் பாலா

முதலில் இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது. அப்படியா என்றுதான் சொல்லுவன், ,அதிகமாய் போனால் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டதால் சிறிது பணமும் தரலாம்.அதற்கு மேல் என்ன செய்ய முடியும்.பின் எதற்கு சொல்ல வேண்டும். வேண்டாம் என்றுதான் நினைத்தாள்.ஆனாலும் விதி வலியது இல்லையா. அதை அவளை வேறு மாதிரியும் யோசிக்க வைத்தது.

பாலாவிடம் சொன்னால் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி வேறு யாரிடமாவாது பண‌ம் கடனாக‌ கேட்கச் சொல்ல‌லாமே என்றூ குறுக்காகவும் சிந்தித்தது. அதுவே வென்றது.அவள் சொல்லாமல் போயிருந்தால் கூட பாலா அவளது வாழ்க்கையில் நுழைந்திருக்க மாட்டானோ என்னமோ யாருக்குத் தெரியும்

கடந்த சில நாட்களாய் தான் ஏன் இப்படி ஆக காரணம் என்று அன்றிலிருந்து இன்று வரை நடந்த விசயங்களை ஒன்று கூட விடாமல் சொல்லி முடித்தாள் கீர்த்தி, இவன் யார் இவனிடம் ஏன் சொல்லுகிறோம் என்றெல்லாம் அவள் நினைக்க கூட இல்லை, அந்த எண்ணம் கூட மருந்துக்கு கூட வர வில்லை. நீண்ட நாட்களாய் பழகியிருந்தவன் போல் தன் நிலைமையினை விளக்கி அதற்கு தீர்வும் அவனிடமே கேட்டாள். அவளுக்கு யாரிடமாவது சொன்னால் பாரம் குறையும் போல் இருந்ததால் பாலா கேட்ட வுடன் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டாள்

அவள் சொல்வதை எல்லாம் நிதானமாய்க் கேட்டவன்

“கீர்த்தி உன் அப்பா சொல்வதெல்லாம் சரிதான் என்று ஒருமைக்கு தாவியிருந்ததை அவனும் உண‌ர முடியவில்லை. அவளும் உண‌ரக் கூடிய நிலைமையில் இல்லை. “ஆனால் அதோடு பிரச்சனை முடியப் போகிறதா, கடன் என்று ஒன்று உங்கள் குடும்பத்தை நெறிக்கும் தானே,” என்று வன் கேட்ட வுடன்

“இல்லை சார் அது இப்போது பிரச்சனை இல்லை. என் அப்பாவின் பேர் கெட்டுப் போய் விடக் கூடது, அதுதான் முக்கியம். கண்டிப்பாக என் அப்பாவின் பணம் கிடைக்கும் அவரது நாணயத்திற்கு பங்கம் வரக் கூடாது , அவ்வளவுதான் “என்றாள் அவசர அவசரமாய்

இவர்கள் வாங்கப் போகும் இவ்வளாவு பெரிய தொகை கொடுப்பவன் , அதுவும் உடனே என்றால் அவன் கண்டிப்பாக கொஞ்சம் கறார் ,பலம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும், அடிப்படை எதுவும் இல்லாமல் எதுவும் கொடுக்க மாட்டான். வீட்டைக் கூட விற்கப் போகிறார்கள் என்றால் எந்த அடிப்படையில் கடன் தருவான் என்று குழம்பினான்.

இருந்தாலும் அவளிடம் ஏதும் சொல்லாமல்,தானே வாங்கிக் கொடுக்கலாம் என்று உடனே முடிவு செய்தான்

“ கீர்த்தி நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் நானே வாங்கித் தருகிறேன் , உன் அப்பாவிடம் சொல்லி அவரிடம் எவ்வளாவு பணம் கடனாக வாங்கப் போகிறாரோ அதை மட்டும் சொல் நான் வங்கித் தரூகிறேன். நான் இதை வெறும் வார்த்தையாக மட்டும் சொல்ல வில்லை” என்று நிறுத்தினான்

கீர்த்திக்கு பாலா பேசுவதை நம்பவே முடியவில்லை, சார் உண்மையாகவே சொல்கிறீர்களா, என்ற போது அவளையுமறியாமல் குரல் சற்று உயர்ந்தது.

“ஆமாம் கீர்த்தி, நம்புங்கள் , திடிரென‌ தெரியாதவர்களிடம் கடன் பெறுவதெல்லாம் பாதுகாப்பான‌ ஒன்றல்ல, அதனால்தான் . நான் விசாரித்து விட்டு இன்று மாலைக்குள் சொல்கிறேன் சரியா.”

“சார் என்னால் நம்பவே முடியவில்லை” என்று மீண்டும் அதே வார்த்தையினை உதிர்த்தாள்

‘ஹலோ வேண்டுமென்றால் என்னைப் கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் பிறகாவது நம்புவீர்களா, மேலும் என்னவோ நான் என்னிடமிருக்கும் தொகையினை த‌ருவது போல் ஆச்சரியப் படுகிறீர்கள்”

என்றவுடன்

அதிகமாய் உண‌ர்ச்சி வச‌ப் படுகிறோமோ என்று தன்னைத்தானே சமாளித்தவள் , “சார் இன்றே அந்த டாஸ்க் முடித்து விடுவேன் சார். எனக்கு இப்போதைக்கு இந்த மட்டில் நிம்மதி கிடைத்த்து பெரிய ஆறுதல் சார்” என்ற போது பாலாவிற்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்த்து.

“ இப்படி சுருண்டு விட்டாளே, அவள் அதிகமாய் கஷ்டங்களை அனுபவித்தவள் இல்லை, அது மட்டும் இல்லாமல் பெற்றோர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள்,அதனால்தான் தாங்க முடியவில்லை என்பதும் அவனுக்கு அப்பட்ட‌மாகத் தெரிந்தது.

”ம்ம்ம்ம்ம் இனிமேல் எனக்கு வேலை ஆக வேண்டுமென்றால் ,இப்படி எல்லோரிடமும் க‌தை கேட்டு சால்வ் பண்ணினால் தான் போல, “ என்றான் பாலா சீண்டலாய்

அவன் சொன்ன வுடன் கீர்த்தியின் முகம் மீண்டும் சுருங்க

“ அய்யோ கீர்த்தி நான் சும்மா சொன்னேன் , இப்போதான் சரிப் படுத்தினேன் அதை நானே கெடுத்துக் கொண்டேன் போல்,” என்று வருத்தப் படுபவ‌ன் போல் கூறி கீர்த்தியைப் பார்க்க

அவள் இன்னும் அதே முகத்தோடே ”வருகிறேன் சார்” என்றதும் பாலாவிற்கு என்னவோ போல் ஆகி விட்டது

இருந்தாலும் விடாமல்

“ அப்போ மண்டே தான் வொர்க் கம்ப்ளீட் ஆகுமா” என்றவுடன் அவனை புரியாமல் பார்த்தாள் கீர்த்தி

“இல்லை மறுபடியும் ஏதோ எதிலோ ஏறி விட்டது போல் தெரிகிறது, அப்போ டாஸ்க் முடியாதுதானே, அதுதான் கேட்டேன்” என்றான் அப்பாவியாய்

கீர்த்தி இப்போது அவனைப் பார்த்து முறைத்தபடி “ வேதாளாம் என்று நேராகவே சொல்லலாம் சார், ஆனால் நான் வேலையினை முடித்த பிறகு நான் கீர்த்தனவா இல்லை வேதாளாமா என்று நீங்களே சொல்லுங்கள்” என்று அமர்த்தலாகச் சொன்னவளிடம்

டன் என்று சிரித்தப‌டி கட்டை விரலை ம‌ட்டும் உயர்த்திக் காட்டினான் பாலா

அவள் போன பிறகு இந்த மாதிரி கொடுக்கல் வாங்கலில் தொடர்புடைய அவன் நண்பன் ஒருவனுக்கு கால் செய்தான் பாலா

கீர்த்தி சொல்வதைப் பார்த்தால் ஒரு 50 லட்சத்திற்கு மேல் ஆகலாம் என்பதால் , கிட்டத்தட்ட அந்த அளவில் வைத்து கேட்டான் .

உடனடியாக என்ற‌வுடன் யோசித்த பாலாவின் நண்பன் “ உனக்கு இது தேவை இல்லை என்பது புரிகிறது பாலா. ஆனால் நீ வாங்கிக் கொடுப்பவர்கள் இந்த அரட்டல் மிரட்டலுக் கெல்லாம் ஓரளவு பதில் சொல்லத் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். அதற்காகத்தான் யோசிக்கிறேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காரணமாய் ஆகி விடக் கூடாது என்று யோசிக்கிறேன்” என்று மென்று முழுங்கினான்

”என்னடா ஆனந்த் சொல்கிறாய் , பணம் வாங்குகிறோம் சொன்ன தவனைக்குள் கட்ட போகிறோம் இதில் என்ன நடக்கும் என்றூ சொல்லுகிறாய்.”

“ இல்ல‌ பாலா உனக்கு அதெல்லாம் தெரியாது, கொடுத்து விட்டு என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள், நம்மை மாதிரி பணக்கார வர்க்கத்தினரையே விரல் விட்டும் ஆட்கள் அவ‌ர்கள் என்றால், நடுத்தர வர்க்கம் என்றால் கேட்கவே வேண்டாம் , அவ்வளவுதான், அதுதான் யோசிக்கிறேன். உனக்கென்றால் பரவாயில்லை உடனே வாங்கித் தந்து விடுவேன் அதனால் நீ யோசித்து இன்று மாலைக்குள் சொல் என்றப்டி வைத்தான்.

அவன் நண்பன் சொல்லிய பிறகு பாலாவுக்கு கொஞ்சம் தயக்கமாய் இருந்தது. அதன் பிறகு மேலும் சில இடத்தில் விசாரித்தான் பாலா. சொன்னவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

சொல்லி ஆகி விட்டது என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் ஏன் தானே அந்தத் தொகையினை கொடுக்கக் கூடது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையினை கொடுக்க போய் என்னுடன் கீர்த்தனாவை சம்பத்தப் ப‌டுத்தி பேசி விட்டால், இவனால் இன்னும் பிரச்ச‌னை பெரிதாகி விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்தவன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். இவனே கொடுத்து விட்டு வேறு யாரிடமாவது வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லி விடலாம் என்று அதற்கு ஒரு தீர்வும் கண்டு பிடித்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்.

இதெல்லாம் அவன் வீட்டிலிருந்து போன் வரும் வரைதான், அதுவரை அவன் மனதில் சுயநலமாய் எதுவும் தோன்ற வில்லை. அருந்த‌தியிடமிருந்து வந்த காலை அட்டெண்ட் செய்து பேசியவன்

“என்னம்மா சொல்லுங்க”

“ பாலா அம்மா பேசறேன்ப்பா

”சொல்லுங்கம்மா” என்றான் சற்று எரிச்சலாய் , என்று இவன் சௌந்தர்யாவினை திருமணம் செய்து கொள்வதாய் சொன்னானோ அதிலிருந்தே அருந்த‌தி அவனிடம் வேறொரு நல்ல பெண்ணாய் தான் பார்ப்பதாகவும், அவள் வேண்டாம் என்று ஜெகனாதனுக்கு தெரியாமல் இவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் வந்த எரிச்சல் அது

“ பாலா நான் பேசுவது எரிச்சலாகத்தான் இருக்கும் உனக்கு, ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன். நீ உன் அப்பாவின் நலன் கருதி செய்கிறாய் என்பதெல்லாம் எனக்கு தெரியாமல் இல்லை. நீ எடுத்திருக்கும் முடிவால் இன்று வேண்டுமென்றால் எல்லாம் சரியானதாக ஆகி விட்ட மாதிரி இருக்கலாம், ஆனால் இதுவே நம் குடும்பத்தின் நிரந்தர அழிவிற்கு கூட காரணமாய் இருக்கலாம். நீ என்று அந்தப் பெண்ணும், அவள் அப்பாவும் பேசியதைச் சொன்னாயோ அன்றே நாம் தப்பித்தோம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் இப்போது நீயே அதற்கு காரணமாவாய் போல் இருக்கிறது. உன் அப்பாவிடமும் இப்போதிருக்கும் சூழ்னிலையில் சொல்ல முடியாது. நான் உன்னை திருமணம் செய்து கொள் என்றுதான் சொன்னேன் , சௌந்தர்யாதான் என்று சொல்ல வில்லையே பாலா.

அவனுக்கு வந்த கோபத்தில் என்ன பேசுவோம் என்று கூட தெரிய வில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அருந்ததி பேசுவதை மாட்டூம் கேட்டுக் கொண்டு இருந்தான்

”சரி இப்போ என்ன பண்ண சொல்றீங்க,அவளும் வேண்டாம் என்றால் வேறென்ன‌ செய்வது, என்னைப் பற்றி தெரிந்து என்னைத் திருமணம் செய்ய யார் வருவார்கள், நீங்களே சொல்லுங்க

அவன் எப்போது இப்படிக் கேட்பான் என்று காத்திருந்தாள் போல் அருந்த்தி

“ உனக்கு பெண் கிடைக்காதா பாலா, நானே தேடி ஒரு நல்ல பெண்ணாய், உன் மனதினைப் புரிந்து நடப்பவளாயும், உன்னையும் மாற்றுபவளாயும் பார்த்து கொண்டு வந்து நிறுத்தினால் சரிதானே, அந்த வேலையினை என்னிடம் விடு “ என்றாள் அருந்ததி

தன் அம்மாவினை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை, வெட்டி விட வசதியாய் இவன் பார்த்தால் தன் தாய் ஒட்டிக் கொள்ள வசதியாய் ஆள் தேடுகிறாள், என்ன சொல்லி விளக்குவது சௌந்தர்யாதான் என் திட்டதிற்கு சரியான ஆள் என்றா சொல்வது என்று தனக்குள் நொந்தவன்

“அம்மா என்னை ஆளாளுக்கு குழப்பாதீர்கள், போதும் நீங்க ரெண்டு பேரும் என்னைப் பற்றி கவலைப் படடதெல்லாம், என் முடிவு இதுதான், ஆளாளுக்கு உங்கள் இஷ்டத்திற்கு என்னை ஆட்டி வைக்க முயலாதீர்கள் அதுவே நிம்மதி எனக்கு எனும் போதே எதிர்முனை வைக்கப் பட்டிருந்த‌து.

”ச்சேய் திருமணம் செய்கிறேன் என்றாலும் புலம்புகிறார்கள், வேண்டாம் என்றாலும் விட மாட்டேன் என்கிறார்கள், நல்ல பெண் வேறு வேண்டுமாம் இவர்களுக்கு காத்திருக்க பொறுமை இல்லாதவர்களுக்கு அது ஒன்றுதான் குறைச்சல் , நல்ல பெண் என்றால் வலை போட்டுத்தான் தேட‌ வேண்டும்,”

என்று மனதிற்குள் பொறுமியவனின் மனதில் நல்ல பெண் என்ற போது மின்னல் போல் கீர்த்தியின் நினைவு வந்து போனதை அவனால் தவிர்க்க இயல வில்லை

தன்னைத்தானே குட்டிக் கொண்ட அவன் நெஞ்சம் சிறிது நேரத்தில் பல்டி அடித்தது. ஏன் கீர்த்திக்கு இருக்கும் பிரச்சனைக்கு இது கூட நல்ல தீர்வுதானே, நானும் அவள் மேல் ஆசைப் பட வில்லையே , அவளுக்கும் பணத்தேவைதானே, கூட்டி க் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரிதான். கீர்த்தியின் தேவை பண‌ம், இவனின் தேவை இல்லை இல்லை, இவன் குடும்பதிற்கு தேவை ஒரு பெண் என்று மனம் தாறுமாறாய் யோசிக்கும் போதே கதவு தட்டப் படும் யோசனையில் கலைந்தவன் கீர்த்தியை பார்த்த வுடன் கொஞ்சம் பட பட்ப் பாகத்தான் உணர்ந்தான்.

வந்தவள் “சார் இப்போ சொல்லுங்க நான் கீர்த்தனாவா, இல்ல வேறு எதுவுமா “ என்றபடி சிரித்தாள்

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் சார் என்று கேட்டவுடன் திணறியபடி

“ ஏன் என்ன சொல்ற …சொல்றீங்க ” என்று திணறியவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்

ஏன் இந்தத் தடுமாற்றம் என்று யோசித்தவள், அவன் முகத்தில் அறையின் ஏசியினைத் தாண்டி வியர்வை முத்துக்கள் பூத்திருந்ததப் பார்த்தவள்

“ என்ன சார் என்ன வேதாளம் என்றே கன்ஃபார்ம் பன்ணி விட்டீர்கள் போல” என்றவுடன் தன்னைத்தானே முயற்சி செய்து தன் நிலைக்கு வந்தவன்

”அதெல்லாம் இல்லை, நான் வேறொரு ஞாபகத்தில் இருந்தேன் கீர்த்தி, என்ன சொல்லுங்க “ என்று மென்று முழுங்கினான் பாலா, அவனால் கீர்த்தியை நேராய் பார்த்து பேச் முடியவில்லை.

“ இன்று காலையில் தேவை இல்லாமல் டென்சன் ஆக்கியதற்கு என்னை மன்னித்து விடுங்கள், நன்றாய் பார்த்த போதுதான் இதற்கு இத்தனை நாள் இழுத்தேனா என்று எனக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. நீங்கள் இன்னும் கூட கோபப் பட்டிருந்தால் கூட‌ அதில் தவறே இல்லை சார். நான் அதை முடித்து விட்டேன்.அதைச் சொல்வதற்குதான் வந்தேன் என்றவள் அவன் ஒன்றும் பேசாமல் இருக்க‌ சற்று தயங்கி பின் மெதுவாக

“சுயநல‌மாய் இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள், என் சூழ்நிலை அப்படி, நான் காலையில கேட்ட‌தைப்பற்றி” என்று நிறுத்தினாள்

“ம்ம்ம் சொல்கிறேன், ஆனால் இப்போது இல்லை, ஆபிஸ் டைம் முடிந்து ஈவ்னிங் பேசலாமே” என்று முற்றுப் புள்ளி வைத்தான்

மற்ற நேரங்களில் எப்படியோ கீர்த்திக்கு இப்போது அவன் பொறுமையினை சோதிப்பது போல் தோன்றியது மட்டுமல்லாமல், தனக்கு வேலை ஆக வேண்டும் என்று காலையில பேசி இருப்பானோ என்றெல்லாம் நொடிப் பொழுதில் தோன்றியது. இருந்தாலும் பொறுமையினை விடாமால்,

” சார் எனக்கு சாதக‌மா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்” என்று கெஞ்சாத குறையாய் கேட்டவளிடம்

“ அது உன் பதிலில்தான் இருக்கிறது , மற்றதை மாலை பேசலாம்” என்று முடித்த போது அவன் அழுத்திய உன் என்ற வார்த்தையில் முகம் சுருக்கியவள் காலையில் இருந்து அவன் அவ்வப்போது மாறி மாறி ஒருமை பன்மையில் பேசிய‌ போது உணராத‌து இப்போது இடித்தது.

கீர்த்தியும் தைரியமாய்

“ சார் எதுவாய் இருந்தாலும் இப்போதே இங்கேயே சொல்லுங்கள் “ என்று கீர்த்தியும் விடாமல் பேசினாள்

தன் இருக்கையை விட்டு எழுந்தவன் “ சொல்கிறேன் கீர்த்தி, இன்று மாலை 5 மணிக்கு நாம் இருவரும் , பீச்சில் சென்று பேசுவோம் , முடிவெடுப்போம் இங்கு வேண்டாமே “ என்று தன் முதல் தூண்டிலை அழகாய் வீசத் தொடங்கினான்

தனியே என்றதும் சற்று மிரண்டாள்தான் கீர்த்தி, ஆனாலும் பீச் என்பதால் ஒன்றும் பயமில்லைதான் என்று யோசித்தவளின் மனம் எப்படி பாலாவிற்கு தெரிந்ததோ இல்லயோ “கீர்த்தி உன்னை எதுவும் பண்ண மாட்டேன், அரை மணி நேரம் தான், என்னை நம்பி வரலாம் என்று நினைக்கிறேன், என்ன வரலாம்தானே”

இவனிடம் சொல்லாமல் இருந்திருக்காலாமோ என்று எண்ணம் தோன்றி உதறல் எடுத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை, இருந்தாலும் மனதில் இருந்த கலக்கத்தைக் காட்டாமல்

“சரி சார்” என்று மட்டும் சொல்லி விட்டு தன் இருக்கைக்கு வந்தவள் ஏன் இப்படி பேசுகிறார் என்னாயிற்று பாலாவுக்கு,” என்று 5 மணி ஆகும் வரை அவஸ்தையாய் கட்ந்தாள் கீர்த்தி

பாலாவோ தன் திட்டத்திற்கெல்லாம் கீர்த்தியின் ரியாக்ஷன் என்னவாய் இருக்குமோ என்றூ அவன் தன் அறைக்குள் குட்டி போட்ட பூனயாய் அலைந்து கொண்டிருந்தான்.


842 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page