top of page

என் உயிரே !!! என் உறவே !!! 14

அத்தியாயம் 14:

ராகவன் சோர்வாய் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு தான் நினைத்தது போல் தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த மைதிலி கணவனின் அருகே ஓசைப் படாமல் அமர்ந்தாள்.

ஆனால் நேரிடையாகக் கேட்காமல்

என்னங்க தலைவலிக்கிறதா, இல்லை அலுவலகத்தில் மிகவும் வேலையா காஃபி போட்டு எடுத்து வரட்டுமாஎன்று மட்டும் கேட்டாள்

அவள் கேட்ட வுடன் ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவர் , சட்டென்று மைதிலியின் மடியில் படுத்து அழத் தொடங்கினார்.

இத்தனை வருட வாழ்க்கையில் ராகவ் ஒருநாளும் தன்னை மீறி இப்படி அழுததில்லை..

திடுக்கிட்ட மைதிலி

என்னங்க என்ன ஆச்சுங்க , சொல்லுங்க, , ஒண்ணுமே சொல்லாமல் இப்படி சின்னப் பிள்ளை மாதிரி அழுதால் எப்படி

மெதுவாய் தன் துக்கத்தையெல்லாம் மைதிலியிடம் இறக்கி வைக்க ஆரம்பித்தார் ராகவ்

இவரது ஒப்புதலின் பேரில் ஒரு பெரும் புள்ளிக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி அளவில் கடன் கொடுத்திருந்ததையும் இன்று அவரது கணக்கில் உள்ள‌ கடன் தொகை நிலுவையில் இருப்பதைச் சொன்ன்னவர், இது அனைத்தும் வங்கியிலும் சாதாரண் விசயம் தான். ஆனால் எங்கோ இவருக்கு தெரியாமல் அந்த தொகை தவணை வாரியாகக் தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்பது போல பொய்க் கணக்கு இருப்பதுதான் இப்போதைய பெரிய இக்கட்டு. இது எப்படி நடந்தது என்று தெரிய வில்லை. இப்போது தான் கண்டு பிடித்திருக்கின்றனர்.. கடன் கட்டிய வாடிக்கையாளரைக் காட்டிலும் இத்தனை நாள் வங்கியில் பொய்யாக பணம் இருப்பதாக மோசடி செய்ததாக ராகவ் தான் உயர் அதிகாரி என்ற முறையில் பாதிக்கப் படப் போவது.

இது எனக்கும் என் கீழே இருக்கும் மதனுக்கும் மட்டும் தான் தெரியும் மைதிலி. உடனே அந்தப் பெரும் புள்ளியை விசாரித்ததில் நடந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் இப்போது கட்ட முடியாது என்றும் நஷ்டக் கணக்கை காண்பித்து விட்டார். வங்கி விதிகளின் படி அவரை அதற்கு மேல் மிரட்ட முடியாது. போலிஸுக்கு போனாலும் அவருடன் சேர்ந்து நானும் தான் மாட்ட வேண்டும். எப்படி கணக்கில் அக்கவுண்டில் கோட்டை விட்டேன் என்றே தெரியவில்லை.நான் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் இன்று இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்க மாட்டேன். இதில் ஒரு நல்ல‌ நேரம் என்ன என்றால் அவர் கண்டிப்பாக கடனைத் திருப்பித் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

அவரும் வேண்டும் என்று ஏமாற்ற வில்லையாம். அதைக் கட்டாதது கூட இப்போது பிரச்சனை இல்லை. அதைக் கணக்கில் கொண்டு வராதுதான் இப்போதைய பிரச்சனை என்று முடித்தவர் மனைவியை பார்த்தார்.

மைதிலியோ பேச மறந்தவளாய் சில கணங்கள் அவரையே பார்த்தவள், “ இப்போ என்ன பண்ற‌துங்க என்று கேள்வியுடன் கணவனை ஏறிட்டாள்

என்ன செய்வது மைதிலி ஒன்று அவர் வாங்கிய பணத்தை செலுத்த வேண்டும்,இல்லை இருவரும் கூட்டுச் சதி செய்தததாக கைது செய்யப் படுவோம்.

இப்போது மைதிலிக்கு உலகமே சுழழ்வது போல் இருந்தது. இருந்தாலும் தலைக்கு மேல் வெள்ளம் வந்தாகி விட்டது இனி கவலை பட்டு,வேதனைப் படுவது பயனில்லாத வேலை என்றூ புரிந்தது

அந்தப் பணத்தைக் கட்டி விட்டால்இப்போதைக்கு பிரச்சனை இல்லையே,”

ம்ம்ம்ம்ம், ஆனால் அதிலும் சிக்கல் உள்ள்து மைதிலி, நாம் பணத்தை கட்டினால் அது நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. மேலும் நம்பிக்கை நாண‌யம் போகாமல் கட்டிக் காத்தாலும், நாம் பொருளாதார ரீதியில் மிகவும் துன்பப் பட நேரிடும். இவ்வளவு பெரிய தொகை நம்மை மாதிரி குடும்பங்களுக்கு மிக அதிகம் இல்லையா ஆக மொத்தம் நிம்மதி என்பது இனி எப்போதும் இல்லை நம‌க்குஎன்று தளர்ந்தார் ராகவ்

பணம் என்ன பெரிய பணம் , இன்று பணத்தை இழந்தால் நாளை கூட மீட்டுக் கொள்ளலாம்,ஆனால் நம் பேரில் இருக்கும் நம்பிக்கை ஒருமுறை போனால் மீண்டும் பெற முடியுமாஎன்ற மைதிலியின் வார்த்தையினை ஆமோதித்தவர்

தேங்க்ஸ் மைதிலி, நான் என்ன‌ நினைக்கிறேனோ அதையே நீயும் சொன்னது எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது. என்று மனைவியின் சொல்லில் ஆறுதல் கண்டவர் அதற்கு மேல் இருவருமாகச் சேர்ந்து என்ன‌வெல்லாம் செய்து பணத்தை திரட்டலாம் என்று பேச ஆரம்பித்தனர்.

சென்னையின் புறந‌கர் பகுதியில் இருக்கும் லேண்ட், இப்போது அவ‌ர்கள் இருக்கும் ப்ளாட் இதை விற்றாலே 40 ல‌ட்சம் வரும், அதன் பிற‌கு கீர்த்தியின் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருக்கும் பணம் மற்றும் மைதிலி கீர்த்தியின் நகைகள் ஒரு 10 லட்சத்திற்கு தாண்டும். மேற்கொண்டு வரும் பாதி தொகையினை வெளியில் தான் வாங்க வேண்டும். ஆனால் இதெல்லாம் இன்னும் 10 நாட்களுக்குள் முடித்தாக வேண்டும் இல்லையெனில் இவ்வளவு செய்தும் பிரயோசனமில்லை. கணக்கு முடிவு நாளைக்குள் இதெல்லாம் முடியுமா என்பதே பிரமிப்பாக இருந்தது.

அமெரிக்காவில் இருக்கும் விஸ்வம் அண்ணனிடம் சொல்லி ஏதாவது பணம் புரட்டலாம் என்றால் அங்கேயும் அவர்கள் நிலை சரி இல்லை.

ஏன் அவ‌ர்களிடம் இந்த நிலையினைக் கூட, ப்ளாட் விற்கப் போகிறோம் என்று கூட சொல்ல முடியாது. ஜாதகத்தில் இங்கு இருப்பது நல்லதல்ல என்று கூறியதால் வேறொரு வீட்டுக்கு குடியேறி விட்டோம் என்றுதான் சொல்லி சமாளிக்க வேண்டும் . அது கூட தற்காலிகமாகத்தான்,

இப்போது கீர்த்தியிடமும் சொல்லாமல் தவிர்க்கலாம் என்றெல்லாம் படுத்தவர்களுக்கு தூங்கா இரவாக‌த்தான் இருந்தது அந்த இரவு.

அதற்கு அடுத்த நாளும் ராகவ் வெகு சீக்கிரமாகவே அலுவல‌கம் சென்று விட்டார் ராகவ். முந்தைய தினத்தைப் போல் தந்தையைத் தேடாமல் அவர் கிளம்பிச் சென்றிருப்பதை உறுதி செய்தவள் மைதிலியையும் தொந்தரவு செய்யவில்லை அலுவலகம் கிளம்பும் வ‌ரையில் மைதிலியின் வெறுமை படர்ந்த வார்த்தைகளையோ கவலை தோய்ந்த முகத்தையோ கீர்த்தியால் கணிக்க முடிய வில்லை.

மைதிலியிடம் சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றாள் கீர்த்தி. கீழே வந்து வழக்கமாய் தன் தாய்க்கு கையசைப்பதற்காக நிமிர்ந்தவ‌ள், வெற்றிடத்தை மட்டும் பார்க்க என்னை மறந்து மைதிலிக்கு அப்படி என்ன வேலை என்ற‌படி ஸ்கூட்டியை ஆஃப் செய்துவிட்டு வேகமாய் படிகளில் தாவினாள் கிர்த்தி.

கீர்த்தி சென்று விட்டதும் அவள் எப்போது கிளம்புவாள் என்று பார்த்தபடியே இருந்தவள்,அவள் சென்றதுதான் தாமதம் ,தான் வழக்க‌மாய் கொடுக்கும் பால்கனி கையசைப்பைக் கூட‌ மறந்த‌வளாய் அவசர அவசரமாக் தன் தோழி அபிக்கு கால் செய்ய ஆரம்பித்தாள்

அவளிடம் தன் நகைகளை விற்றுக் கொடுக்கவும், மேலும் வ‌ட்டிக்கு க‌டன் தரும் இடங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தாள் மைதிலி

கதவைக் கூட தாழிடாமல், தான் வந்தது கூட தெரியாமல் மைதிலி பேசிக் கொண்டிருந்ததையும், அவள் பேசிய‌ விதத்தையும், விசயங்களையும் கேட்டவள் தன் அம்மாவிற்கு இப்போது எதற்கு இத்தனை பெரிய தொகை, அது மட்டுமில்லாமல் இன்னும் கடன் வேறு என்று தனக்குள்ளாக கேட்டபடி மீண்டும் தன் தாயின் தொலைபேசி உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

கீர்த்தி கேட்டுக் கொண்டு இருப்பது கூட தெரியாமல் மைதிலியும் பேசிக் கொண்டு இருந்தாள்

இல்லை அபி , எனக்கு ஒண்றும் இல்லை. கீர்த்திக்கும் திருமண வயது வந்து விட்டதல்லவா காலாகால‌த்தில் திருமணம் செய்து வைத்தால் நாமும் நிம்மதியாய் இருக்கலாம் அல்லவா. நகைகள் எல்லாம் கொஞ்சம் பழைய மாடலாக இருக்கின்றன‌. அதையெல்லாம் இன்றைய மாடலுக்கு மாற்றி புதியதாய் செய்யலாம் என்று ஒரு எண்ணம். அத‌னால்தான் என்று தோழியிடம் சமாளித்தவள் மேலும் கீர்த்திக்கு இன்னும் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை எங்களுக்கு . அவரிடமும் சம்மதம் வாங்கி விட்டேன். எனும் போதே கீர்த்தி மைதிலியின் முன் நின்றாள்.

அவளை அங்கு எதிர்பாராத மைதிலி திணறியப‌டி “சரி அபி நான் மதியம் பேசுகிறென், நீ இதை பற்றி விசாரிக்க‌ மறந்து விடாதே.” என்றப‌டி போனை வைத்தவள் கீர்த்தி எப்படி , ஏன் வீட்டிற்கு வந்தாள் என்று தனக்குள்ளாகவே கேட்ட‌வளுக்கு தான் அவசர‌த்தில் செய்த தவறு புரிந்த‌து. “அய்யோ அவசரப் பட்டு விட்டோமே , கொஞ்சம் நிதானித்து அவளை வழக்கம் போல் வழி அனுப்பி இருந்தால் இப்ப‌டி மாட்டியிருக்கத் தேவை இல்லையோ, கேட்டிருப்பாளோ என்று அவள் முகத்தை ஆராந்தவளுக்கு சந்தேகத்திற்கு இடமே இல்லாத்து போல் கீர்த்தியின் முகத்தில் கேள்விக் கணைகளும், கோபமும் எதற்காக தன் அம்மாவிற்கு இவ்வள‌வு பெரிய தொகை என்ற ஆராய்ச்சியும் அப்பட்டமாகத் தெரிந்தது.

இனி சமாளிக்கத்தான் வேண்டும் என்று கீர்த்தியை பார்த்து புன்னகையை வரவழைத்தவளாய்

சாரிடாமா, அம்மா ஏதோ ஒரு அவசர‌த்தில்என்று சமாதானம் பேசிய மைதிலியை இடையிலயே கை மறித்தாள் கீர்த்தி

இப்போ உங்களுக்கு எதுக்கு பண‌ம் அதுவும் நகைகளை வேறு விற்றுஎன்றூ கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினாள் கீர்த்தி

உன்னோட திருமணத்திற்கு தாண்டா, நீதான் அபி ஆண்டியிடம் பேசிக்கொண்டிருந்தததைக் கேட்டாயே ,அதன் பிறகு உனக்கு ஏன் இந்த கேள்விஎன்று மைதிலியும் கொஞ்சம் கீர்த்திக்கு ஈடு கொடுத்துதான் பேசினாள்

கீர்த்திக்கு மைதிலி பேசப் பேச இன்னும் கோபம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

யாருக்கு எனக்காமா எனக்கென்ன இன்னும் ஒரு வாரத்தில் திருமண‌மா, இல்லை இவ்ளோ பெரிய தொகை வரதட்சணை கேட்குமளவுக்கு மாப்பிள்ளையை எனக்குத் தெரியாமல் தேடி விட்டீர்களாஎன்று தாயின் சொல்லை வைத்தே எள்ளி நகை ஆடியவள்

அழுத்தமாய் பேச ஆரம்பித்தாள்

அபி ஆன்டியிடம் வேண்டுமென்றால் என் திருமணம் என்று சாக்கு சொல்லி இருக்கலாம். எனக்கு எதற்கு என்ற உண்மைக் காரணம் மட்டும் சொல்லுங்கள் போதும், என்னை ஏமாற்ற‌ப் பார்க்காதீர்கள்

மைதிலி எரிச்ச‌லின் உச்சத்திற்கு போய் விட்டாள். வேண்டாம் என்றால் விட வேண்டியதுதானே நாங்கள் இருவர் நிம்மதி இழந்து தவிப்பது போதாத, இவளும் வேறு அனுபவிக்க வேண்டுமா,என்று யோசித்த‌வளாய்

உனக்காகத்தான், உன் திருமணத்திற்குத்தான், வெறொன்றுமில்லை, நீ இதில் தலை இடவும் தேவை இல்லை.எங்களுகக்குத் தெரியும் எது நல்லது கெட்டது என்று, நீ உன் வேலையினை மட்டும் பார், இப்பொது ஆஃபிஸிற்கு கிளம்புகிற வழியைப் பார், தேவை இல்லாத விசயத்தில் எல்லாம் தலையிட முய‌லாதே, “ என்று கடுமையாகவே கீர்த்தியை பேசினாள்

தன் தாயிடமிருந்த்து இவ்வளவு கடுமையான வார்த்தையை எதிர்பார்க்காதவள் சற்று நிலை தடுமாறினாள்தான்.இருந்தாலும் தான் அப்படி என்ன கேட்டு விட்டோம் ஏன் இவ்வளவு அதிகமாய் கடுமையை காட்டுகிறார்கள்” என்றப‌டி மைதிலியை முறைத்தப‌டி அப்பாவின் சம்மதத்தோடுதான் என்று சொன்னார்களே என்றப‌டி ராகவுக்கு போன் செய்தாள்

அப்பா சாரிப்பா” , வேலை நேரத்தில் தொந்தரவு செய்ததற்கு என்று ஆரம்பித்து மைதிலி சொன்னதைப் பற்றி விசாரித்தாள்., மைதிலியோ அவளை தடுக்கக் கூட திராணியில்லாமல் தன் மகளை வெறித்த படி பார்த்த பார்வையில் இருப்பதைக் கூட அலட்சியம் செய்தபடி தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள் கீர்த்தி

அவள் சொன்னதை எல்லாம் கேட்ட ராகவிற்கு மைதிலி கீர்த்தியிடம் மாட்டிக் கொண்டாள் எனப‌து புரிந்த‌து,அவளும் ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறாள் என்பதை உணராமல் இல்லை ஆனால் இப்போதைக்கு அவளிடம் எதுவும் சொல்ல முடியாதல்லவா, அதனால் மனைவி சொன்ன பதிலை மாற்ற விரும்பாமல்

ஆமாடா நான் தான் கேட்கச் சொன்னேன். , நான் சொல்லிதான் மைதிலி பேசினாள். இதைப் பற்றி இரவு பேசிக் கொள்ளலாம், நீ ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறாய். ஆஃபிஸிற்கு செல்லாமல் உனக்கு ஏன் இந்த வேண்டாத‌ வேலை எல்லாம்.ரிலாக்ஸ் பண்ணி விட்டு கிளம்பு. மேலும் மைதிலியை போட்டு தொந்தரவு செய்யாதே என்றப‌டி போனை வைத்தார்

அவள் மீண்டும் ஏதோ பேச ஆரம்பித்தவள் அவள் பதிலைக் கூட கேட்காமல் போனை வைத்ததில் உதடுகள் துடித்தன். கண்களில் கண்ணீர் முத்துக்கள் இப்போதே எனும்படி உதிரக் காத்திருந்தன.

கீர்த்திக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்தது . இருவரும் சேர்ந்து மறைக்கிறார்கள். இப்போதைக்கு என்ன என்று கேட்டால் ஒன்றும் வராது. கேட்கிற முறைப்படி கேட்டால் இவர்கள் எல்லாம் சொல்வார்கள் என்று தாயை முறைத்தபடி , கண்ணீரைத் துடைத்துவிட்டு விருட்டென்று மைதிலியிடம் சொல்ல‌க் கூட தோன்றாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் .

அலுவல‌கத்திலும் இதே நினைவு அவளை அலைகழித்தது. வேலை எதிலும் கவனம் பதியவில்லை. பாலா வேறு இந்த வாரத்தின் இறுதியில் தருமாறு ஒரு டாஸ்க் அவளுக்கு அசைன் செய்திருந்தான். எதிலும் கவனம் பதிக்க முடியாமல் ஏன் இவர்களுக்கு இவ்வளவு பணம் தேவை என்று தலையை பிய்த்துக் கொண்டு பதிலைத் தேடினாலும் கிடைக்க வில்லை. அன்று இரவு வேண்டுமென்றே கீர்த்தி மிகவும் தாமதமாக கிளம்பினாள். வீட்டிலும் சொல்ல வில்லை. ராகவ் , மைதிலி இருவரிடமிருந்து வந்த போன் கால்களையும் அட்டெண்ட் செய்யாமல் தன் கோபத்தை காண்பிக்க வேண்டுமென்றே க‌ட் செய்து கொண்டே இருந்தாள்

கீர்த்தியின் பிடிவாதத்தை நன்கு புரிந்தவர்கள் ராகவும் மைதிலியும்…. அவ்வளவு எளிதாக பிடிவாதம் பிடிக்க மாட்டாள். ஆனால் பிடித்து விட்டால் அதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பது நன்றாகவே தெரியும் அவர்களுக்கு. என்றாவது ஒரு நாள் அவளுக்கு தெரியாமலா போகப் போகிறது என்று தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டவர்கள் , அதனால் அவள் வந்ததும் அவளிடம் சொல்லி விடலாம் என்றபடி அவளின் வருகைக்காக காத்திருந்தனர்.

வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த இருவரிடமும் முறைப்பை மட்டும் செலுத்தி விட்டு தன் அறைக்குள் போய் கதவை டமாரென்று அடைத்து தாளிட்டுக் கொண்டாள். அவள் செய்கைகளை எல்லாம் பார்த்த மைதிலிக்கு

பார்த்தீங்களா அவளை ,என்ன ஒரு திமிர், இத்தனை தடவை போன் பண்ணி இருக்கிறோமே ஒரு காலாவது அட்டெண்ட் செய்தாளா, இப்போ ரூமிற்குள் போய் என்ன வேகமாய் கதவை அடைக்கிறாள்.” என்று மகளைப் பார்த்து புலம்பினாள் மைதிலி

ஆனால் ராகவோ தன் மகளின் பிடிவாதத்தை ரசித்தபடி தற்போதைய தனது கவலைகளை எல்லாம் மறந்த படி

இப்போ என் பொண்ணை எதுக்கு திட்டுகிறாய், காலையில் அவள் கேட்ட போது ஒழுங்கா நடந்ததை சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கல்யாணம், நகை எடுக்க என்றெல்லாம் பூ சுத்தினால் யாருக்குதான் கோபம் வராது. அதோட நானும் உனக்கு சால்ரா போட்டேன். பிறகு என்ன செய்வாள். என் பொண்ணு சும்மாலாம் பிடிவாதம் பிடிக்க மாட்டாள். சும்மா அவளைத் திட்டாதே.

என்றபடி மகளுக்கு மறுபடியும் போனில் கால் பண்ண ஆரம்பித்தார்.

இப்போ நாம என்ன பண்ணிவிட்டோம் என்று இப்படி பண்ணுகிறாள்.அவளைக் கஷ்டப் படுத்தப் படுத்தக் கூடாது என்று நினைத்தால் இவ்வளவு அடம். இந்த நேரத்தில் இவள் வேறு…. விடுங்க கோபம் தீர்ந்தால் தானே வெளியே வருவாள்

மைதிலிக்கு கீர்த்தியின் பிடிவாதம் ஏனோ இன்று எரிச்சலாக வந்தது. ஏனென்று புரியாமல் இல்லை அவளுக்கு. அவள் கவலை அவளுக்கு

மைதிலி பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டது.ஆனால் கீர்த்தி வெளியே வர வில்லை.

முதலில் ராகவ்தான் உள்ளே சென்றார். அங்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. முகம் கோபத்தில் சிவந்திருந்தது. கண்கள் கலங்கியிருந்தது. ராகவை திரும்பி பார்த்துவிட்டு உம்மென்று மீண்டும் கம்ப்யூட்டரில் பார்வையினை திருப்பினாள்.

அவளின் அருகே மற்றொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

இத்தனை நேரத்தில் மைதிலி உள்ளே வரவில்லை. எல்லாம் அவளது அவசரத்தினால்தான் நேர்ந்தது.ஆனால் எதற்காக அவள் மறைக்கிறாள் என்பதை தன் மகள் புரிந்து கொள்ளாமல் இந்த அடம் பிடிப்பது சுத்தமாய் பிடிக்க வில்லை. இன்னும் ராகவ் மீது கோபம் வந்தது. இப்படி செல்லம் கொடுத்து வளர்த்ததால்தானே அவள் கஷ்டப்படுவாளோ என்று மனம் துடிக்கிறது

ஆனால் கீர்த்தியின் மனமோ வேறு விதமாய் சிந்தித்தது. ஏன் தன் பெற்றோர்கள் தன்னிடம் மறைக்கப் பார்க்கிறார்கள் நல்லதோ கெட்டதோ என்னிடம் சொன்னால் என்ன. கண்டிப்பாய் கெட்டதாகத்தான் இருக்க வேண்டும் . அவர்கள் இருவரும் துக்கப் பட தான் மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்க முடியும். சந்தோசம், துக்கம் என்று எது வந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொள்வர். ஆனால் இவளிடம் சந்தோசத்தை மட்டும் தான் சொல்ல வேண்டுமா. நான் இன்னும் சிறு குழந்தையா என்று மனதிற்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.

கீர்த்திமா சாரிடா அப்பா மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் பேசாமல் மட்டும் இருக்காதடா , நானும் அம்மாவும் எது பண்னினாலும் உன் நல்லதுக்குதானே செய்வோம். உனக்கு துன்பம் வேண்டாம் என்று நினைத்து நாங்கள் செய்யப் போய் அதுவே உனக்கு எங்கள் மேல் கோபம் வருத்தத்தை உருவாக்கி விட்டது என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே

அதுதான் ஏன் என்று கேட்கிறேன் அப்பா. ஏன் என்னிடம் மறைக்கிறீர்கள். ஏன் என்னை பிரித்து பார்க்கிறீர்கள். சந்தோசமான விசயத்தை மட்டும் என்னிடம் சொல்ல வேண்டுமென்றால், நான் சந்தோசமாகவே இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் , நான் மட்டும் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தேனா, நானும் மனிதப் பிறவிதானேப்பா. வாழ்க்கை என்றால் எது வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி விட்டு , என்னிடம் சொல்லக் கூட முடியாதாபடி அப்படி என்னதான் நடந்தது.எனக்கு முன்னால் ஏன் நீங்க இரண்டு பேரும் நாடகம் ஆடுகிறீர்கள். உங்க ரெண்டு பேருக்கும் நடிக்கக் கூட‌ தெரியாதுப்பா. பாருங்க ஒருநாள் கூட முடியவிலை. என்ன வென்று சொல்லுங்கள் அப்பா. எனக்கும் கோபம் இல்லை. உங்கள் இருவரிடமிருந்து ஏன் என்னைப் பிரிக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான்என்ற போதே அவளது குரல் அடைத்தது.

இருந்தாலும் சரிப் படுத்தியபடி மீண்டும் தொடர்ந்தாள்

என்னப்பா என்ன நடந்த‌து. இப்போதாதவது சொல்லுங்களேன்.எனக்கு தலை வெடிக்கிறது.நானும் சேர்ந்து எப்படி சமாளிக்கலாம் என்று யோசிக்கிறேன் எனும் போதே

அவளது குரலில் தன்னம்பிக்கையும், தைரியமும், கூடவே எது வந்தாலும் எதிர்நோக்கும் பக்குவமும் இருந்ததினை அவளாலும் உணர முடிந்த்து. ராகவனாலும் தான்

அவளின் தொடர்ச்சியான‌ பேச்சிலும், அதிலிருந்த நியாயமான உணர்வின் தாக்கத்தினாலும் அவரினுள்ளும் போராட்டம் நடந்த‌து. அவள் கேட்பதில் என்ன தவறு அவளை இன்னும் சின்னக் குழந்தையாக நினைத்ததுதான் தவறு. ஏன் நான் நினைக்க வில்லை. என் மகள் என் கவலை என்ன என்று கேட்குமளற்கு வளர்ந்து விட்டாள். ஆனால் நான் இன்னும் அவளின் குழந்தை பருவத்தில் இருக்கும் மன நிலையிலயே இருக்கிறேனோ. சொல்லப் போனால் நான்தான் பக்குவம் அடைய வில்லை போல என்றவாறு மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படியே பார்த்து கொண்டு இருப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது. ஒழுங்கா என்னனு சொல்லுங்கஎன்று சற்று நேரத்திற்கெல்லாம் பழைய கீர்த்தியாக மாறியிருந்தாள். கோபமெல்லாம் முகத்தில் வடிந்திருந்தது.

ஒண்ணுமில்லை டா என்று ராகவ் ஆரம்பித்தவுடன்

மீண்டும் தந்தையை முறைத்தவள்என்ன ஓன்றுமில்லை ஒழுங்கா நடந்ததை நடந்தது மாதிரி சொல்லுங்க என் மனசு கஷ்டப் படக் கூடாது என்று ஏதும் சென்சார் பண்ணிடாதீஙக ….. புரிந்ததாஎன்று கண்டிப்பு மாறாமால் அதிகாரமாய் கூறினாள் கீர்த்தி.

இத்தனை நிமிடங்களில் மைதிலி தனது அறைக்குள் வர வில்லை என்பதை உணர்ந்த கீர்த்தி சற்று வெளியே எட்டிப் பார்ப்பது போல் பார்த்து விட்டு தந்தையிடம் மீண்டும் திரும்பினாள்.

அதன் பிறகு ராகவ் முன்தினம் நடந்தது முதல் சற்று முன் வரை உள்ள நிலைமையினை அவளுக்கு புரியும்படி விளக்கினார்.

அவர் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டவளுக்கு இதயம் குலுங்கத்தான் செய்தது. ஏன் தன்னிடம் மறைத்தார்கள் என்பது புரிந்தது. இனி தன் தந்தை என்ன செய்யப் போகிறார் எனபது குறித்து ஒன்றும் புலப் பட வில்லை.அவளுக்கு பேச்சே வரவில்லை.

அப்பா என்…. என்ன பன்ண போறீங்க நாம் இவ்வளவு பணத்திற்கு எங்கு போவது, நம்மிடம் இருக்கும் அனைத்தையும் விற்றால் கூட முடியாதே. ஏன்பா யாரோ தவறு செய்ய நாம் போய் கஷ்டப் பட வேண்டும். என்று புலம்பியதைத் தவிர அவளால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை

பின் மைதிலியிடம் சென்று அமர்ந்தாள் கீர்த்தி.

அம்மா என்னை மன்னித்து விடுங்கள் . நான் ஏதோ தெரியாமால் கொஞ்சம் பிடிவாதமாய் நடந்து கொண்டேன். நான் சின்னப் பொண்னுதானே என்னை மன்னிக்க மாட்டீங்களா என்று தாயிடம் கெஞ்சலும், கொஞ்சலுமாய் பேச

ராகவனோ என்ன நடக்கிறது இங்கே… கீர்த்திமா…. என்கிட்ட நான் இன்னும் சின்னப் பொண்னு இல்லேனு பேசினாய், ஆனால் மைதிகிட்ட அப்படியே மாத்திட்ட… ஆளையே கவுத்திடுவடா என்று புன்னகை புரிந்தார் ராக.வ்

ஆனால் மைதிலி வழக்கம் போல் கிண்டலை ரசிக்காமல் கீர்த்தியிடம்

கீர்த்திடா இனிமேல் காரணம் தெரியாமல் இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்காதே. அடுத்தவரின் சூழ்நிலையையும் புரிந்து நடந்து கொள்ளப் பழகிக் கொள். இன்று உன் பிடிவாதத்தால் ஜெயித்து விட்டதாய் நினைத்து இதே வழிமுறையினை மீண்டும் முயற்சிக்காதே. இதை என்னுடைய அறிவுறையாக எடுத்துக் கொள்.”

மைதிலியின் முகத்தில் இருந்த தீவிரம் அவளுக்கு சற்று கலக்க மூட்டினாலும் ”சரிமா, இப்போ எனக்கு பசிக்கிறது வாங்க போலாம்என்று நிலைமையினை சற்று மீட்டாள்.

கீர்த்தி பெற்றோர் முன் ஓரளவு பேசிச் சிரித்தாலும் உள்ளே என்ன பண்ணப் போகிறார் தன் தந்தை. இன்னு 10 நாட்களுக்குள் ஏதாவது வழி பிறக்குமா என்று சிந்தித்தபடி சாப்ப்ட்டுக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமில்லை மற்ற இருவரின் நிலைமையும் அதுதான் என்பது கீர்த்திக்கு தெரியாமல் இல்லை.

அப்பா மாமவிற்கு கால் பண்ணினால் என்ன அவர் ஏதாவது செய்ய மாட்டாரா, அவரோட தங்கை மைதிலி கஷ்டப் படுகிறாள் என்றால் செய்ய மாட்டாரா என்ன கிண்டல் பாதி கவலை பாதி கலந்து கேட்க

ராகவும் மைதிலியும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.

கீர்த்திடா சாரி” என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல ,

இப்போது கீர்த்தி புரியாமல் விழித்தாள்.

மாமாகிட்ட பணம் கேட்க சொன்னால் ஏன் சாரி என்கிறார்கள் , ஒருவேளை அவரிடம் கேட்டு இல்லையென்று சொல்லி விட்டாராஎன்று யோசித்தவள்

இப்போ எதுக்கு சாரி கேட்கிறீர்கள்

இப்போது அவளிடம் மறைத்த வினோத் மேட்டர் முதல் அனைத்தும் சொல்வது மைதிலியின் முறை ஆனது .

கேட்டு முடித்தவள்

இன்னும் என்னென்ன மறைத்திருக்கிறீர்கள்,ஏதாவது இருந்தால் சொல்லி விடுங்கள்“- முகத்தில் கொஞசம் கோபம் இருக்கதான் செய்தது கீர்த்திக்கு.

இனிமேல் உன்னிடம் எதையும் மறைக்க வில்லை போதுமா. சாப்பிடு.”

என்று மைதிலி சொல்ல அதற்குமேல் வேறொன்றும் பேசவில்லை. பேசவும் முடிய வில்லை.

மாமா வீட்டிலும் கேட்க முடியாது, அப்பா என்ன செய்வார் என்ன செய்வார்,என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவளை பந்தாடியது.

அதிகாலை வரை அவளால் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தாள். அதன் பின் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரிய வில்லை.


903 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page