top of page

என் உயிரே !!! என் உறவே !!! 13

அத்தியாயம்: 13

அன்று வழக்கம்போல்தான் காலையில் எழுந்தாள் கீர்த்தி. ஆனால் எழும் போதே ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை எச்சரிக்கை செய்ததோடு ,என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று அவளது மனதைப் பிசைந்தது. அப்படியும் இப்படியுமாக அலைபாய்ந்த மனதைச் சமாதானப் படுத்தியவள் சோர்வாகத் தன் தாயிடம் வந்தாள்.

கிச்சனில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம் ஏனோ தன் இயல்பான குறும்பைக் காட்ட நாட்டமின்றி மீண்டும் ஹாலுக்கே வந்து பேப்பரில் ஆழ்ந்தவள் சற்று நேரத்தில் இன்னும் கண்ணில் படாத தனது தந்தையைத் தேடி, சிந்தித்தபடி இந்நேரம் வாக்கிங் முடிந்து வந்திருக்க வேண்டுமே என்று மைதிலியிடம் வினவினாள்.

அம்மா அப்பா எங்கே வழக்கம் போல வாக்கிங்னு டேரா போட்டுடாராஎன்று ஆரம்பித்தவள் காபி எடுத்து வந்த தன் தாயின் முறைப்பில் சட்டென்று அடக்கி வாசித்தாள்

இல்ல… என்ன ராகவ் நடமாட்டத்தையே காணோமே… என்று கேட்டேன். என் பட்டு அம்மாவிற்கு ஆத்துக் காரரைச் சொன்னவுடன் கோபம் மூக்கில் வருதா” என்றபடி தாய் கொடுத்த காபியை பருகினாள்.

மேற்கொண்டு அவளிடம் பதில் ஏதும் வாராமல் போக

அம்மா அப்பா எங்கேனு கேட்கிறேன்ல அதற்கு பதில் காணவே இல்லை. நீங்க பாட்டுக்கு போனால் எப்படி? ,”

இப்போ என்ன மாதம். அதனால் அவருக்கு பேங்கில் கணக்கு வழக்குகள் எல்லம் முடித்து அடுத்த வருடத்திற்கான் கணக்கீடுகளை ஆரம்பிக்க வேண்டும் . ஒவ்வொரு வருடமும் உனக்கு இதைத் தனியாகச் சொல்ல வேண்டும்என்றபடி உள்ளே போனாள் மைதிலி.

அவள போன பிறகு தனக்குத்தானே தலையில் தட்டியவள் , இது மார்ச் மாதம் அல்லவோ இன்னும் 10 நாட்களுக்கு அப்பாவிடம் கலாட்டவெல்லாம் பண்ண முடியாது.. அவர் அலுவலக டென்சனில் இருப்பார். என்றபடி தன் தந்தையின் தொழிலை நொந்தபடி அலுவலகம் செல்லத் தாயாரானாள் கீர்த்தி.

------------------------------------

பாலா மெதுவாக விசிலடித்தபடி டைனிங் டேபிளை நெருங்கினான். அவனது உற்சாகம் ஜெகனாதனையும் தொற்றிக் கொள்ள

வாப்பா என்றபடி

அருந்ததியிடம்” பாலா வந்துவிட்டான் அவனுக்கும் சாப்பாடு எடுத்து வை” என்றபடி மனைவியை சத்தமாக அழைத்தவரை

நான் போட்டுக் கொள்கிறேன் பா”. என்றபடி தானே எடுத்து வைத்துக் கொண்டவன்

தந்தையினை ஓரக் கண்ணால் பார்த்தபடி

அப்பா உஙக வருங்கால மருமகள் எங்கேயோ வெளிநாடு ட்ரிப் போய் இருக்காளாமே.வர இன்னும் ஒரு வாரம் ஆகும் போல் . நேற்று அவர்கள் வீட்டில் சென்று சௌந்தர்யாவை பார்க்க போயிருந்தேன்.அவள் இல்லை என்றதால் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். ஏனெனில் அவளிடம்தான் முதலில் பேச நினைத்திருந்தேன். அவள் வந்த பிறகு அவளிடம் சம்மதம் கேட்ட பின்னரே உங்க நண்பர்கிட்டே நீங்க பேச வேண்டும் என்று உள்ளூர இருந்த எரிச்சலை மறைத்தபடி உதட்டில் புன்னகையினை தடவினான்.

அவர்களைப் பற்றி அறிந்தவன் அவன்தானே. அவன் அப்பாவுக்கு என்ன தெரியும். கண்டிப்பாக சௌந்தர்யா மறுப்பு சொல்ல மாட்டாள்தான். ஒரு வேளை சொல்லி விட்டால் வேறொரு பெண்ணிற்கு எங்கு போவது. அவள் அப்படி எதுவும் சொல்லி விட்டால் ஏதாவது ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை தன்னால் பாழாகின்ற அளவிற்கு போய் விடுமோ என்று சிந்தித்தவன் கொஞ்சம் குழம்பித்தான் போனான். அப்படி ஏதும் ஆகிவிடக் கூடது கடவுளே என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அன்று சௌந்தர்யாவிடம் பேசும்போது அன்றே தோன்றியிருக்கலாம். இப்படி ஒரு திட்டத்தோடு பேசி இருந்தால் அவள் ஒத்துக் கொண்டிருப்பாள் என்பதில் கூட ஆச்சரியம் இல்லைதான். என்றெல்லாம் சிந்தித்தபடி தன் தந்தையின் மலர்ச்சியான முகத்திற்கு இப்போதைக்கு தன் வாழ்க்கைதான் விலையென்றால் வேறென்ன செய்ய முடியும் என்றவாறு சிந்தனையிலேயே சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரிடமும் விடைபெற்று சென்றான் பாலா.

அவன் சென்ற பிறகு தன் மகனைப் பற்றி ஓரளவு சந்தேகமாயிருந்தார் ஜெகனாதன். இப்போது அது முற்றிலுமாய் இப்போது போய் விட்டது. சௌந்தர்யாவினை பார்க்கச் சென்றிருக்கிறான் என்றால் அவளைத திருமணம் செய்ய தயாராகி விட்டான் என்றுதானே அர்த்தம். அவன் அவளிடம் பேசும் வரையில் இந்த விவகாரத்தைப் பற்றி சௌந்தர்யாவின் தந்தையிடம் திருமண விசயம் பற்றி வாய் திறக்கக் கூடாது என்று அவரும் முடிவு செய்து விட்டார். மகிழ்ச்சியில் பறப்பது போல் இருந்தது ஜெகனாதனுக்கு.

ஆனால் அருந்ததிக்கோ தன் மகன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் செய்து கொண்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை. அவன் அவளவு சீக்கிரத்தில் மதுவை மறப்பானா? . விசாரித்து கூட பார்த்து விட்டாள். அவன் வாயிலிருந்து எதையும் வரவழைக்க முடியவில்லை. கேட்டால் என்ன செய்வது விதிப்படிதான் நடக்கும் என்ற போது நான் என்ன பண்ண முடியும். இதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் .

அப்பா ஆசைப்பட்டபடி திருமணம் செய்துகொள்கிறேன். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால்தானே ஏதாவது நடக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.இபோது மட்டும் என்னைப் பற்றி என்ன கவலை . என் தலைவிதி அவ்வளவுதான் என்று நினைத்தபடி என் காலத்தினை ஓட்டிக் கொள்கிறேன். என்று விட்டேற்றியாகப் பேசுபவனிடம் என்ன சொல்வது.என்ன கேட்பது….

கண்டிப்பாய் ஏதோ ஒரு மிகப் பெரிய தவறு நடக்கப் போகிறது என்று உள்மனம் எச்சரித்தது .ஆனாலும் என்ன செய்வது. தன் மகன் என்று தன் முடிவைச் சொன்னானோ அப்போதிருந்தே வேண்டிக் கொண்டிருந்தாள் அந்த சௌந்தர்யாவினால் தன் மகனுக்கு ஏதும் பிரச்சனைகள் வராமலிருக்க வேண்டும் என்று மனம் மருகிக் கொண்டிருந்தாள் அருந்ததி.

------------------------------------

வழக்கத்திற்கும் மாறாக மிகச் சீக்கிரமாகவே அலுவலகத்தை விட்டு கிளம்பிய கீர்த்திக்கு ஏனோ வீட்டிற்கு போகவும் பிடிக்க வில்லை. அவளது தெருவில் அமைந்திருந்த ஒரு நூலகத்திற்கு சென்று அமர்ந்து படிக்க ஆரம்பித்தவளுக்கு மனம் ஏனோ அதில் ஒன்றாதது போல் இருந்தது. எரிச்சலுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தவள் வீட்டிற்கு சென்றாலும் அம்மாவுடன் பேசி கொண்டிருக்கலாம். மனதின் வெறுமையாவது குறையும் அப்பா வரவும் தாமதமாகும் தனியே இருப்பார்கள் என்று நினைத்தபடி வீட்டை அடைந்தாள் கீர்த்தி.

வழக்கமாய் வீட்டிற்கு வரும் நேரத்தை விட சீக்கிரமாக வீட்டிற்கு வந்த மகளை பார்த்த மைதிலி மகளை ஆச்சரியப் பார்வையுடன் புருவத்தை உயர்த்த அவளின் புருவச் சுழிப்பிற்கு தன் உதட்டுச் சுழிப்பால் பதில் சொன்னபடி உள்ளே நுழைந்தாள் .

என்னடா கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டாய் போல், ட்ராஃபிக் இல்லையா

இல்லைமா நா சீக்கிரமாகவே கிளம்பி வந்து விட்டேன். வர வர வேலை இல்லை என்றால் ஆபிஸில் இருக்கவே பிடிக்கவில்லை.கவி இல்லாதது என்னவோ மாதிரி இருக்கு. கவியை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் மா. கார்த்தியும் இல்லை. ஏதோ மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்” என்றவளிடம்

ஏன் உங்க பாலா சார் இல்லையா போரடித்தால் அவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதானே என்று விளையாட்டாக சொன்னவளிடம் கீர்த்தியும் விளையாட்டாகவே

அம்மா நான் இப்போது சொன்னதெல்லாம் அவரிடம் பேசிய நேரம் போக மீதி நேரத்தைதான். இன்று அவரும் ஏதோ மீட்டிங் என்று கிளம்பி விட்டார். இல்லையென்றால் நானும் சீக்கிரமாகவே வந்திருக்க மாட்டேன்.”

என்றவள் தாயின் தெளிவில்லாத முகத்தினை பார்த்தவுடன் இன்னும் சீண்டிப் பார்க்க வேண்டும் போல் தோண்றியது.

ஆக்சுவலா மைதிலி நானும் பாலாவும் இன்னைக்கு நைட் டின்னர்க்கு வெளியே போகலாம் என்றுதான் ப்ளான் பண்ணியிருந்தோம்.திடிரென்று இந்த மீட்டிங் வந்து சொதப்பி விட்டது.”

என்று அலுத்தபடி அறைக்குள் வந்து அம்மா இந்நேரம் என்னவெல்லாம் கற்பனை பண்ணியிருப்பாள் என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளே கவி இல்லையென்று அலுவலகத்தில் இருக்க முடியாமல் , மனம் நொந்து வீட்டிற்கு வந்தால் பாலாவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதானே என்று கிண்டல் வேறு. வெளியே போனதும் அம்மாவிடம் விளையாண்டதை சொல்லி விடலாம். என்றபடி யோசித்தவளுக்கு காலையில் இருந்த இறுக்கம் தாயுடன் பேசியதில் குறைந்தது போல் இருந்தது. உடை மாற்றி வெளியே வந்தவள் மைதிலி கொடுத்த சூடான காபியினை சுவைத்தபடி

எதிரில் டீவியில் கவனத்தினை பதித்திருந்த மைதிலியிடம் ”என்ன மைதிலி பேச்சையே காணோம்

என்றதும் அவளை முறைத்து விட்டு மீண்டும் டிவியில் கவனம் செலுத்தினாள் மைதிலி

ஆகா அம்மா மலை ஏறி விட்டார்கள் போல” என்றபடி டீவியினை அணைத்தவள் அதன் முன்னே நின்றபடி

இங்கு வீற்றிருக்கும் ராகவனின் திருமதி மைதிலி அவர்களுக்கும் , அவர்கள் அமர்ந்ததால் சொர்க்க வாசல் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர்கள் சோபவிற்கும் , நான் அமர்வதயே சொர்க்கமாக நினைக்கும் எனதருமை சோபாவிற்கும் , அதன் முன் வீற்றிருக்கும் டீபாய்

என்று பேச்சாளர் போல் கையினை வாய் முன்னால் வைத்து பேசிக் கொண்டிருந்தவளை , இதற்கு மேல் விட்டால் இந்த வீட்டிலிருக்கும் எல்லா பொருள்களையும் லிஸ்ட் போட்டுவிடுவாள் என்று நினைத்தபடி

கையெடுத்து கும்பிட்ட மைதிலி அம்மா தாயே ஆளை விடுமா , உனக்கு என்ன வேண்டும் இப்போ, நீ என்ன கேட்டாலும் தருகிறேன், தயவு செய்து உங்க அப்பா இல்லாத சமயத்தில் என்னைக் இப்படியெல்லாம் போட்டு கொல்லாதே. உங்க அப்பாவுக்கு என்னை விட்டால் வேறு ஆளும் கிடையாது. அவர் முகத்துக்காகவது என்னை விட்டு விடுடா” என்றவளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த கீர்த்தி

:”வழிக்கு வந்து விட்டீர்களா , இந்த கீர்த்தியா கொக்காவா என்று சொல்லி விட்டு சரி சரி பிழைத்து போங்கள் இதுவும் என்னோட அப்பாவுகாகத்தான். என்று அவள் தோள் மேல் சாய்ந்தவள் , நான் அப்போ சொன்னதெல்லாம் சும்மா அம்மா ,உங்களை சீண்டிப் பாக்கத்தான். வேற ஓன்றுமில்லை.

எனக்கும் தெரியும் கீர்த்தி. எங்களுக்கு மருமகன் என்றால் அது வினோத் தான் . அந்த இடத்தில் வேறு யாருக்கும் இடமில்லை.

அப்படியா ,வேறு ஒருவர் வந்தால் என்று கொக்கி போட்டவளிடம்

என் மகள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, அது போதும் எனக்கு

தன் தாய் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் கொஞ்சம் தன் மேல் அவளுக்கே பெருமையாய் வந்தது. மெதுவாய் தன் தாயிடம்

அப்படியா அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு என் மேலே ,அம்மா உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே ,இப்போ என்ன பண்ணுவது” என்று போலியாக வருத்தப்பட்டு பின் கண் சிமிட்டினாள்.

அவள் நடிப்பதை உணர்ந்த மைதிலி கையில் வைத்திருந்த ரிமோட்டால் அவள் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டு , அப்பாவுக்கு கால் பண்ணு ,எப்போ வருவார் என்று கேள். அவர் வர லேட்டாகும் என்றால் நாம் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்லலாம். என்றபோதே கீர்த்தியும் கால் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

ஆனால் ராகவன் அதை எடுக்கவே இல்லை. முழுதாய் ரிங் போயும் அவர் எடுக்காததால் மைதிலியே

வேண்டாம் கீர்த்தி அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரே செய்வார்.ஏற்கனவே அவருக்கு அங்கு டென்சன் அதிகமாய் இருக்கும் . நாம் வேறு” என்று மைதிலி சொன்னவுடன் கணவனைப் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறாள் தன் தாய் என்று தன் அம்மாவினை பெருமையாக நினைத்தபடி அணைத்திருந்த டீவியை ஆன் செய்ய போனாள். அவள் எழும்போதே காலிங்பெல் அடிக்க கதவைத் திறந்தாள் கீர்த்தி.

அப்பா இப்பொதான் உங்களுக்கு கால் பண்ணி வைத்தோம். உங்களுக்கு ஆயுசு நூறு போங்க.”

என்று தொடர்ச்சியாக பேசிக் கொண்டிடிருந்தவளிடம் சின்னதாக புன்னகையினை சிந்தியபடி உள்ளே நுழைந்த கணவனைப் பார்த்த மனைவிக்கு அவரது முகத்தில் இருந்தே ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதும், மகள் முன் மறைக்க முயல்கிறார் என்பதினை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டாள். மனதிலும் வயிற்றிலும் ஏதோ பிசைந்தது.

சாப்பிட்டு வந்து விட்டதாக கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து விட்டார். இப்போது கீர்த்தி தன் தந்தை அலுவலகத்தில் வேலை பார்த்த களைப்பில் போகிறார்.. நாம் வேறு கேட்டு அவரைத் தொல்லை படுத்தக் கூடாது. என்றபடி நினைத்தவளுக்கு தன் தாய் மாதிரியே அப்பாவின் மனதினை பற்றி யோசிக்கிறோம். அம்மாவுக்கு மட்டும்தான் அப்பா பற்றி சரியாக தீர்மானிக்க முடியுமா தன்னாலும் முடியும் என்றபடி ராகவை அதன் பிறகு தொந்தரவு செய்ய வில்லை.

என்ன இருந்தாலும் 25 வருட தாம்பத்திய வாழ்க்கையினை கீர்த்தியின் தந்தை பாசம் போட்டி போட முடியுமா. தோற்றுதான் போனாள். ஆனால் மைதிலி கீர்த்தி அறைக்குள் நுழையும் வரை தனக்குள்ளாகவே கணவனின் வாட்டத்திற்கு காரணம் என்ன தெரியாமல் மன்றாடிக் கொண்டிருந்தாள்

எப்போது கீர்த்தி அறைக்குள் நுழைவாள் என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு காத்தவள் கீர்த்தி அறைக்குள் நுழைந்ததும் வேக வேகமாய் அறைக்குள் நுழைந்தாள்…..

983 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page