top of page

அன்பே நீ இன்றி 52

அத்தியாயம் 52:

காரை விட்டு இறங்கிய தீக்‌ஷா…. தன்னை எதிர்பார்த்து காத்திருந்த 2 குடும்பத்தினரையும் சந்தோஷத்தோடு பார்த்தவள்…. தன் அன்னையைப் பார்க்க……. ஆனந்தம் முகமெங்கும் ஜொலிக்க நின்ற தன் அன்னையைக் கண்டவளுக்கு அவளின் மடியில் புதைய வேண்டும் போல் இருக்க…. விஜய்யை விட்டு தன் அன்னையை நோக்கி வேக நடை நடந்தவளை விஜய்யின் கைகளின் அழுத்தம் தடுத்து நிறுத்தியது….

கணவனைப் புரியாத பார்வை பார்க்க….. அவனது அழுத்தமான பார்வையோ….

“உன் குடும்பத்தை பார்த்த உடனே கழட்டி விட்டுட்டு ஓடப் பார்க்கிறியா… ஒழுங்கா என் கூட வா” என்று சொல்லாமல் சொல்ல… அதைப் புரிந்தவளாய் தீக்‌ஷா அவனோடு நடந்தாள்…

ஆனால் 2 அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள்….. கால் தடுக்கி மடங்கி உட்கார…. விஜய் வேகமாய்ப் பிடித்து விட்டான் தான்… ஆனாலும் அவள் வலியில் முகம் சுருக்க…. இரு குடும்பத்தினரும் அவர்கள் அருகே ஓடி வந்து விட்டனர்… பதறியபடி…

ஓடி வந்த ஜெயந்தி… தன் மகளின் அருகே உட்கார்ந்தபடி…

“என்னடா பார்த்து வரக் கூடாது என்ன அவசரம்…. “ என்று மகளின் காலைப் பிடித்து தேய்த்து விட்டவளுக்கு மனதிலோ…

“இப்படி விழுந்து விட்டாளே” என்ற சஞ்சலம் வந்து போக… அதே கவலையோடு தன் மகளைப் பார்க்க….

தன் தாயை தன் அருகில் வர வைத்து விட்ட துள்ளலில்….

“அம்மா…. ஒண்ணும் பிரச்ச்னையில்லை.. லைட்டா வலிக்குது அவ்வளவுதான்…” என்று தடுமாறியபடி எழுந்து… ஒரு காலைத் தூக்கியபடி…. ஒரு அடி எடுத்து வைக்க… விஜய் மற்றவர்களிடம்….

“நீங்க எல்லோரும் முன்னே போங்க… இவள நான் தூக்கிட்டு வருகிறேன்…” என்று சொல்ல… அதன் படி அனைவரும் முன்னே… போக… மற்றவர்கள் சில அடி தூரம் போனபின்… முறைத்தான் தீக்‌ஷாவை…

“உன்னை…” என்றபடி ஒரே அள்ளளில் தன் கைக்குள் கொண்டு வந்தவன்…

“எங்கருந்துடி கத்துகிட்ட இந்த நடிப்ப …. ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் உனக்கு…. தூக்குடான்னா தூக்கப் போறேன்… அதுக்கு இத்தனை சீன்… இத்தனை ஆர்ப்பாட்டமா….. ”

கண் சிமிட்டினாள் தீக்‌ஷா…

”கண்டுபிடிச்சுட்டீங்களா….. அம்மாகிட்ட என்னால போக முடியலை…. அம்மாவை என் பக்கத்தில் வரவச்சுட்டேன் பார்த்தீங்களா” என்றவள்……

“அத்தான் எல்லோர் முன்னாலயும் என்னை உங்கள தூக்க வைக்கிறேனு சொன்னேன்ல… எப்புடி… அதிலயும் ஜெயிச்சுட்டேன்ல” சிறு குழந்தை போல் சவாலில் ஜெயித்ததைச் சொல்லிக் காட்ட…

“நீ ஏற்கனவே ஜெயிச்சுட்டடி….” என்று மனதுக்குள் மட்டும் சொல்லிக் கொண்டவன்….. ஆனால் தீக்‌ஷாவைப் பார்த்து புன்முறுவல் மட்டும் செய்தான்…..

”பாவம் உங்க அம்மா… நீ பண்ணிய வேலையில அவங்க முகமே மாறிப் போயிருச்சு… இனிமேலும் கோவில் கோவிலா போறதை நிறுத்த மாட்டாங்க போ…” என்றவன்… ஏக்கமாய்

”என்ன ஒரு குறை…. சேலையில் இல்லாமல்… சல்வார்ல இருக்க…. நேத்து போல புடவையிலே இருந்திருந்தால்….” என்றவனின் கை அவனின் ஆதங்கத்தை காட்டுவது போல்… அழுத்தம் கூட்ட….

“ஹேய் புருசா…. ரொமான்சை எல்லாம் ரூம்ல வச்சுக்கலாம்…” என்ற போதே வாயிலும் வர….. தீக்‌ஷாவை இறக்கி விடப் போனான் விஜய்….

கலைச்செல்வி..

“வேண்டாம் விஜய்….. உள்ள வந்தே இறக்கி விடு… “ என்று தன் மகனையும் தன் மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்றவள்… உங்களுக்கு வந்த சோதனை எல்லாம் இதோட போய்டனும்… என்று நெட்டி முறித்து உள்ளே அனுப்ப…

“இந்த உலகத்தில் என் நாடகத்தையும் நம்புற ஜீவன் இருக்காங்க விஜய் அத்தான்…. இப்படி ஒரு அத்தை எனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்…. என்ன பண்ணினாலும் நம்புறாங்க” என்று தன் கணவனிடம் அவன் அம்மாவைப் பற்றி கிண்டல் அடிக்க….. அதை விஜய் முறைத்து ரசிக்க என… தம்பதி சகிதமாய் உள் நுழைந்தனர்….. நமது நாயகனும் நாயகியும்

உள்ளே வந்த தீக்‌ஷாவை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவன்…. தானும் அவள் அருகில் அமர்ந்தபடி ”அரை மணி நேரம் தான் உனக்கு டைம்… ஏதாவது சாக்கு சொல்லிட்டு ஒழுங்கா மேல வந்து சேரு…” என்று யாரும் அறியாமல்…. கட்டளை போல் சொல்ல….

”வரலேன்னா” என்று தீக்‌ஷா புருவம் சுருக்க

‘1 மணி நேரம் ” என்று அவள் வழிக்கே விஜய் வந்தான்…. இப்போது அவன் குரலில் கெஞ்சலே இருக்க….. தீக்‌ஷாவுக்கு அது போதாது…..

“அதுக்கும் மேல போனதுனா” உதட்டில் புன்னகையை மறைத்தபடி… அப்பாவியாய் விஜய்யை பார்க்க…

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்.. நீ வரவே வேண்டாம்” என்றவன் வேகமாய் எழுந்து…. அதே வேகத்தோடு மாடி ஏறி தன் அறைக்குள் புகுந்தான்….

தீக்‌ஷா சிரித்தபடி…. தன் கணவனையே கண் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்…

அதன் பின்…. ஒரே அன்பு மழைதான்…. கண்ணீர் மழைதான்… தாய் தந்தை .. அண்ணன்… அண்ணி… என அனைவரின் பாச மழையில் நனைந்தவள்…. அவர்களை தனது வழக்கமான துள்ளளான பேச்சில் குதுகலப்படுத்தியவள்…. தன் புகுந்த வீட்டினரையும் மறக்க வில்லை… விஜய் தீக்‌ஷா வந்த நேரம், கிட்டத்தட்ட நண்பகல் 3 மணி.. அனைத்துப் பரிசோதனைகளும் முடித்து வர…. இத்தனை மணி ஆகி இருந்தது…..

கணவன் சொன்ன அரை மணி முடியும் தருவாயில்… கலைசெல்வியிடம்

“அத்தை… ஹாஸ்பிட்டல்ல குளிச்சது….. நான் குளிச்சுட்டு வருகிறேன்… பூஜை ரூம்ல விளக்கேத்தனும்..” என்று அந்த வீட்டின் மருமகளாய் மாறி அவர்களுக்கு ஐஸ் வைத்தவள்…. வேகமாய் எழப் போக…

அருகில் அமர்ந்திருந்த யுகேந்தர் …..

“தீக்‌ஷா… அண்ணனை வரச் சொல்லவா’” என்று இழுக்க….

“எதுக்குடா அவர்” என்று புரியாமல் பார்வை பார்க்க…

“உனக்குதான் கால் ஸ்லிப் ஆகிருச்சே…. உன்னால நடக்க முடியுமா” என்று எதிர் கேள்வி கேட்டவனைப் பார்த்து… ’ ஈ ‘ என்று இளித்தவள்..

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை….” என்று சமாளித்தபடி…

“இல்ல அந்த அளவு வலி இல்லை….….. நீ வேணும்னா… எனக்கு ஹெல்ப் பண்ணு..” என்று அவனை எழுப்பி அவன் தோளைப் பிடித்தபடி… லேசாய் கால் சாய்த்தபடி நடக்க…

மாடிப்படி ஏறும்போது யுகி பெருமையாக

“பார்த்தியா… நீ போட்ட நாடகத்தை நான் எப்படி கண்டினியூட்டி மிஸ் ஆகாம மெயிண்டைன் பண்றேனு பார்த்தியா” என்க

”பார்த்துடா… எனக்கு கண்டின்யூட்டி மெயிண்டைன் பண்றத விடு…… உன் நாடகத்தோட கண்டினியூட்டி என்னாச்சு….. என்று கேட்க

“ஹா… அதெல்லாம் செம சூப்பரா போகுது…………… என் ஹீரோயினோட என்னைச் சேர்த்து வைக்கிறதுக்கு எல்லா வில்லன்களும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க…” தெனாவெட்டாகச் சொன்னான் யுகி…. அவன் சொல்லி முடிக்கவும்… மாடிப்படியின் கடைசிப் படியும் வர சரியாக இருந்தது…

“ஓ… ஹீரோ ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல….. வில்லன்களை எல்லாம் விடு…. ரொம்ப ஆடுன….. உன் ஹீரோயின விட்டே சிகப்பு கொடி காட்ட வச்சுருவேன்….. ” என்று கண்களை உருட்டி… யுகியை மிரட்ட…..

யுகி உண்மையிலேயே அதிர்ந்து விழித்தான்…. வழக்கம் போல் தன் தோழியிடம்….. தன்னடக்கமாய் மாறி,,,

“ஏன்… ஏன் தீக்‌ஷா… உனக்கு இந்த கொல வெறி….. எப்போது இருந்து உனக்கு இந்த வில்லத்தனம்” அப்பாவியாய்க் கேட்க…

“வில்லன் என் புருசன்னா… நான் வில்லிதானேடா…. “

“அடிப்பாவி….” என்றவன்…

“போம்மா போ…. உங்க சங்காத்தமே எனக்கு வேண்டாம்…..” என்று அவளின் அறையை நோக்கி கை காட்ட…

”அது… இப்போ சொல்லு பார்க்கலாம்…. உங்க அண்ணன் ஹீரோவா… வில்லனா…” என்று மிரட்டிச் சிரிக்க…

“நீ ஹீரோயின்மா… உன்னைக் மேரேஜ் பண்ணினதுனால…. அவர் ஹீரோம்மா… இது போதுமா… இன்னும் வேற ஏதாவது சொல்லனுமா” என்றவன் விட்டால் போதுமென்று படி இறங்கிப் போயே போய் விட்டான்…

யுகியை ஒரு வழி பண்ணிவிட்டு…. தங்கள் அறையினுள் நுழைந்த தீக்‌ஷா… விஜய் குளியலறையில் இருப்பதை உணர்ந்தவள்… கட்டிலில் அமர்ந்து … அறையை விழி சுழற்றி நோட்டமிட்டாள்……….. அவளின் சுவர் கிறுக்கல்கள்.. அவளது புகைப்படம்…….. மட்டுமே இருக்க… தாங்கள் இருவருமாய் சேர்ந்த புகைப்படம் எதுவும் இல்லை….. அது ஏனென்று ஓரளவு யூகித்தவளுக்கு…. பார்வதி சாரகேஷ் நினைவுகளும் வந்து போயின…..

காரில் வரும் போதே விஜய், பார்வதி- சுரேன் திருமணம் பற்றி சொல்லி இருந்தான்…. பார்வதியைப் பற்றி சொல்லும் போதே சாரகேஷ் – அகல்யா திருமண விபரமும் தெரிந்து கொண்டாள்….

ஆனால் விஜய்…. இவள் வீட்டைப் விட்டுப் போன நிகழ்வுகளை எல்லாம் சொல்லவில்லை… தேவையானவற்றை மட்டும் சொல்லி… அதிலிருந்தே அவளை யோசிக்க வைத்தான்…..

அவள் இந்த யோசனையில் இருக்கும் போதே…. விஜய்…. வெளியில் வர…… அவனைப் பார்த்தபடியே நின்று கொண்டிருதாள்…..

ஈர மேனியுடன்….. ஒரு கையால் தலைக் கேசத்தை கோதியபடி வந்தவன்.. மனைவி கொடுத்த மணி நேரத்திற்குள் வந்ததை மனதுக்குள் மெச்சியபடி….. அவளின் அருகே வந்தவன்…. அவளை இழுத்து பின்னால் திருப்பி தன்னோடு சேர்த்து அணைக்க…. தீக்‌ஷா அளவாய் அடங்கினாள்.. அவனுக்குள்…

கணவன் என்ற உரிமையும்…. அவன் மேலிருந்து வந்த சோப்பின் சோப்பின் மனமும்…. குளிப்பதற்கு முன் செய்த சவரத்தால்… ஆஃப்டர் சேவ் லோசனின் மணமும் தீக்‌ஷாவுக்குள் தானாகவே மயக்கத்தைக் கொடுக்க…… அவனுக்கு வசதியாக…. தன் வலது கரத்தை விஜய்யின் பின் கழுத்தில் போட்டபடி…. அவனின் வெற்று மார்பில் சாய……. அவளின் சரணடைதலில் அவளின் கணவன் வேகமாய் முன்னேறினான்…….. அவளது கழுத்து வளைவில் தன் இதழால் பயணம் செய்ய ஆரம்பித்தவன்…….. அவளின் காதில்.. அவளின்றிய தன் ஏக்கத்தை பாடலாக சொல்ல ஆரம்பித்தான்,……

“I can't win, I can't reign.

I will never win this game without you, without you.

I am lost, I am vain. I will never be the same without you, without you.

I won't run, I won't fly. I will never make it by without you, without you.

I can't rest, I can't fight . All I need is you, & I without you, without you.

Oh oh oh, you, you, you, without you.

You, you, you

without you.

Can't erase, so I'll take blame.

But I can't accept that we're estranged, without you, without you.

I can't quit now, this can't be right.

I can't take one more sleepless night, without you, without you.

I won't soar, I won't climb.

If you're not here, I'm paralyzed. Without you, without you.

I can't look, I'm so blind.

Lost my heart, lost my mind without you, without you.

Oh oh oh, you, you, you. Without you, you, you.

Without you.

I am lost, I am vain. I will never be the same without

அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் உருகிப் போனாள் தீக்‌ஷா……..

வேகமாய் அவனை நோக்கித் திரும்பியவள்……

எனக்கு கவிதைலாம் வராது அத்தான்,…. உங்கள மாதிரி பாடிக் காண்பித்தும் எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியாது…. ஆனால்.. ஒரே வார்த்தைல சொல்றேன்… ஏற்கனவே சொன்னதுதான்…

”என் இந்தர் இன்றி…………. நான் இல்லை… நல்லாருக்கா….. வேணும்னா அன்பே… கண்ணேனு முன்னால பின்னால சேர்த்துக்கங்க…. என் கவிதை எப்படி” என்றாள் தன் வழக்கமான குறும்போடு…. ஆனால் கண்களில் கண்ணீர் முத்துக்களோடும்…. உதடுகளில் புன்னகையோடும்….

சிரித்த விஜய்…..

“நான் கஷ்டப்பட்டு பக்கம் பக்கமா சொன்னால்… ஒரே லைன்ல ஸ்கோர் பண்ணிட்டடி…. இவ்வளவு சூப்பரா கவிதை சொன்ன………… என் பொண்டாட்டிக்கு என்னன்னவோ தரனும் போல இருக்கு…………… ” என்று மோகமாய் மொழிந்தவன்………

அவளின் இதழில் தன் இதழை அழுத்தமாக பதிக்க…………. ஆனந்தமாக அவனுக்கு தன் இதழை பரிசளித்தாள் அவனின் மனைவி………

அவன் உடலின் ஒவ்வொரு அணுவும்….. அனுபவித்த சுகம் வேண்டி……… ஒரே நேரத்தில் போரட்டத்தில் ஈடுபட….. விஜய்யால் அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்க முடியவில்லை……………. அவனின் கைகளும்……. இதழும் தேகமும்………… தன் மனைவியின் தேகத்தில் எல்லை மீறி தன் ஆக்கிரமிப்பை….…. உரிமையோடும் ஆரம்பிக்க……..

அவனைத் தடுக்க முடியாமலும்.. தடுக்கும் திராணியின்றியும்…. அவனின் தேடலில் தீக்‌ஷாவின் தன் இந்தருக்கான ஏக்கம் தீர்ந்து…. இவள் தேகமும் அவனோடு வளைந்து கொடுக்க ஆரம்பிக்க…. விஜய் அவளை தீண்டிய ஓவ்வொரு தீண்டலிலும்…. அதன் வேகத்தில்…. அதன் அழுத்தத்தில் அவனின் இத்தனை நாள் ஏக்கங்களை….. தீக்‌ஷாவால் புரிந்து கொள்ள முடிந்தது,……… அவனின் வேகத்தை அவள் குறைக்கவே இல்லை……….. அவனின் ஏக்கத்தின் வேட்கைக்கு முடிந்த அளவு தன்னைத் தயார்படுத்த ஆரம்பிக்க… அப்போதுதான் அவளுக்கு தன் அத்தையிடம் சொல்லிவிட்டு வந்த ஞாபகம் வர…..

இருந்தும் அவனை உடனடியாக விலக்காமல்….

“இந்தர்”………. என்றாள்… அவளுக்கே தன் குரல் வெளியே விழுந்ததா என்று தெரியவில்லை.. அந்த அளவு அவளும் அவன் கணவன் தீண்டலில் ஆழ்ந்திருக்க….

“ஹ்,,,,,,,,,,,ம்ம்ம்ம்ம்ம்” என்றான் விஜய் …….

“நா… நான் குளிக்கணும்… ட்ரெஸ்ல ஹாஸ்பிட்டல் ஸ்மெல்…..” என்று தட்டுத்தடுமாறி…. கணவனிடமிருந்து விலக ஏதுவாய்….. காரணம் கண்டுபிடித்துச் சொல்ல… அவனுக்கோ அது இன்னும் வசதியாகப் போனது

“ட்ரெஸ்லதானே…. இது ஒரு பிரச்சனையா…..” என்றவன்…. அவளின் துப்பட்டாவை அவளிடமிருந்து உருவி…. தூரப் போட்டவன்…. அடுத்து……… என்று அவன் ஆரம்பிக்கப் போக…. போன் அடித்தது….

சுரேந்தர் தான்….

“என்னடா” என்றவன் குரலில் அப்பட்டமாய் கடுப்பு முதலில் விழ…. பின் தன்னைச் சமாளித்தவன்….

”சொல்லு… பார்வதி வீட்ல வந்துருக்காங்காங்களா …. கீழ வரணுமா” என்று பொறுமையாய்க் கேட்க…

“ஆமாண்ணா… ’பாரு’ வீட்ல இருந்து தீக்‌ஷாவைப் பார்க்க வந்திருக்காங்க…. தீக்‌ஷா மேல ஏறும் போதே வந்துட்டாங்க…. இவ்வளவு நேரம் வெயிட்டிங்” தயங்கிச் சொல்ல…

”நீ எதுக்குடா இருக்க…. அவங்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டியதுதானே….. உன் ஆளு வந்திருக்காள்ள.. அவள பார்க்க வேண்டியதுதானே… “ என்று மனதுக்குள் சுரேனுக்கு வசைபாடியபடி… வெளியிலோ

“குளிச்சுட்டு இருக்கா.. வருகிறோம்” என்று போனைக் கட் செய்ய………..

இதுதான் சமயமென்று..

“அத்தான்… ’பாரு’… வந்திருக்காளா… நான் பார்க்கனுமே…. என்னை விடுங்க… நான் குளிக்கப் போறேன்….” என்று விலாங்கு மீனாய் நழுவியள் வேகமாய் குளியலறைக்குள் புகுந்து… உடனே வர… விஜய்…. குளித்து முடித்து கட்டியிருந்த டவலைக் கூட மாற்றாமல் படுத்திருந்தான்…

அவனின் பிடிவாதத்தைத் ரசித்தவள்

”இந்தர்…. இது என்ன சின்னப் பிள்ளையாட்டம்…. கிளம்புங்க…’ என்றபடி… தனக்கான ஆடையைத் தேட ஆரம்பிக்க…….மீண்டும் விஜய் அவளிடம் தன் வேலையைக் காட்டப் போக….

“அத்தான்…. சும்மா இருங்க… விளக்கேத்தனும்….. “ என்று கைகளைத் தட்டியவள்… அவனுக்குமான உடையை எடுத்து… அவனிடம் கொடுத்து….. போடச் சொல்லிவிட்டு… தனக்கான புடவை தேடலில் மீண்டும் இறங்கினாள்..

அவளை முறைத்தபடியே உடை மாற்றியவன்… மீண்டும் கட்டிலிலேயே அமர…

“போங்க பாஸ்… சாரி கட்டனும்….” என்று அவனைத் துரத்தினாள் தீக்‌ஷா

”கட்டு…. என்னை எதுக்கு வெளிய போகச் சொல்ற…. வேணும்னா நான் ஹெல்ப் கூட பண்றேன்“ என்று சாவகாசமாய் அவளைப் பார்த்தபடியே உட்கார….

தீக்‌ஷா முறைத்தாள்… அவளின் முறைப்பான பார்வையில்

“என்னடி ஓவரா பண்ற…. உண்மையிலேயே குணமாகிட்டதான… என்னமோ… புதுசா கல்யாணம் பண்ணின மாதிரி சீன் போடற…. உனக்கு எங்கங்க மச்சம் இருக்குனு உனக்கு கூட தெரியாது…. சொல்லவா…….” என்று சீண்டலோடு சீறியவனாய்….. அவளை இழுக்க….

“கடவுளே “ என்று தலையில் கை வைத்தவள்…

“உங்ககிட்ட மறைக்கிறதுக்கு எனக்கு எதுவும் இல்லை….. கீழ வெயிட் பண்ணிட்டு இருக்காங்கள்ள…. போங்க செல்லம்ல……….. நான் எங்க போகப் போறேன்” என்று கெஞ்சலாய்ச் சொல்ல….

”புரிஞ்சுக்கடி….. ….. தனியா இந்த ரூம்ல….. செத்துப் போயிட்டேண்டி…..” என்று….. நிதானமான நிறுத்தல்களில் தன் அவன் பட்ட வேதனைகளை அவளிடம் வெளிப்படுத்த…

தீக்‌ஷாவுக்கு அவனின் வேதனை புரிந்தும்…. அதைத் தொடராமல்….

”டெலிவரிக்கு பொண்டாட்டி போய்ட்டு வந்துருக்கானு நெனச்சுக்கங்க பாஸ்’ என்று விளையாட்டுப் போல் சொல்லி… தன் கணவனைப் பார்க்க…

விஜய்…. அதிர்ச்சியுடன் பார்த்தான் தன் மனைவியை…..

அவள் கர்ப்பமாகி இருந்த விஷயம்…. தீக்‌ஷாவுக்கும் தெரிந்திருக்குமோ…. என்ற சிந்தனைக்குப் போனவன்…. நேரடியாக கேட்காமல்…

”தீக்‌ஷா.. நீ ரெண்டு சர்ப்ரைஸ்னு சொன்னேல… ஒன்று உன் பிறந்த நாள்… இன்னொன்று…” கேள்வியாய் நிறுத்தினான்… படபடத்த இதயத்துடிப்பை அடக்கியபடி

தீக்‌ஷாவுக்கு முதலில் உடனே ஞாபகம் வரவில்லை… யோசனைக்குப் போக….

விஜய் அவளை யோசிக்க விடாமல்…

‘ஞாபகம் வரலைனா… விடு…. குழப்பிக்காத” எனும் போதே

பிரகாசமான தீக்‌ஷா..

‘ஞாபகம் வந்துருச்சு….. ஆனால்… நான் சொன்னா திட்டக் கூடாது…. ப்ராமிஸ்” என்று கை நீட்ட

நீட்டிய உள்ளங்கையில்…. சத்தியம் வைக்காமல்… தன் இதழ் பதித்தவன்….

”உன்னை ஏன் நான் திட்டப் போகிறேன்….. சொல்லு” என்று ஊக்குவிக்க….

‘நீங்களும் என்னை திட்டாத பையன்தான் அத்தான்…. அதெல்லாம் வண்டி வண்டியா வாங்கிக் கட்டிட்டுதான் வந்திருக்கேன்…. ” என்று தன் ஆதங்கத்தை விடாமல் சொல்லியவள்…

”அது அது….” இழுத்தவள்….

”நம்ம மேரேஜ் முடிஞ்சு… 100 வது நாள் அதுதான் நான் சொன்ன 2வது சர்ப்ரைஸ்”

வேகமாக….

‘அத்தான்…. திட்டாதீங்க….. இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸாடினு…..” என்று…. மொழிந்தவளிடம்

அவள் கணவனோ

”100 வது நாள் போனால் என்னடி…. நாம 100 வது வாரம் , 100 வது மாதம்….. 100 வது வருஷம் இதெல்லாம் கொண்டாடுவோம்….” காதல் கணவனாய் பிதற்ற…

அதில்

தீக்‌ஷா மெய் மறந்து அவனையே பார்த்தபடி இருந்தவள்…. பின் சமாளித்து

”ஹை அத்தான்…. நீங்க கூட உருப்படாத டையலாக் பேசுற சங்கத்தில சேர்ந்துட்டீங்க போல… அதுவும் மெம்பர் கூட இல்லாமல்….. நேரடியா தலைவர் போஸ்ட்டுக்கே” என்று நக்கலடித்தவள்… கீழே போக வேண்டுமென்று ஞாபகப்படுத்தி… அவனைக் கிளப்ப….…..

விஜய்யும் விருப்பமின்றி வெளியேறப் போக… அவனின் கைப்பிடித்து நிறுத்தியவள்..

“என் இந்தர்க்கு கோபமா…” என்று….. அவன் உணர்வுகளை மனைவியாக புரிந்து….. சமாதானமாய் வினவியவள்

”புடவை கட்டி விட ஹெல்ப் வேண்டாம்……….. ஆனால்” என்று கண் சிமிட்ட

அவளின் முடிக்காத வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவன்… அவளை மீண்டும் தன் வசம் கொண்டு வந்து….

“அது எதுக்குடி… நீ கட்ட… நான் கழ..” என்ற போது… தீக்‌ஷா அவன் வாயை மூடி முறைக்க…

அவளின் கையை எடுத்தபடி

”இல்ல…. டைம்தானே வேஸ்ட்” என்று அவள் காதுகளில் சில்மிஷமாய் கிசுகிசுத்தவன்…..மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கே வர….

அவனை விட்டு விலகியவள்… முதுகைப் பிடித்து தள்ளாத குறையாக…. வெளியில் தள்ளிக் கதவைச் சாத்தினாள்…..

தன் சில்மிஷம் எல்லாம் தன் மனைவியிடம் எடுபடாமல் போக….. மூடிய கதவையே வெறிக்க முடிந்தது விஜயேந்தரால்…

“இருக்குடி உனக்கு” என்றபடி படிகளில் இறங்கியவன்…. தேவகியை வரவேற்று…. சுரேந்தர் அருகில் இருந்த சாரகேஷோடு பேச்சில் கலந்தான்… அடுத்த சில நிமிடங்களிலே தீக்‌ஷாவும்…. இறங்கி வந்தவள்….. பார்வதியை பார்த்த உடனே… துள்ளளாக இறங்கி ஓடி வர…

“பார்த்து வாம்மா…. “ என்று கலைச்செல்வி அவள் காலையே பார்க்க..

“அது அப்போதே சரி ஆகிடுச்சு அத்தை” என்றவளை….

“விஜய்யோடு வந்து…. விளக்கேத்திட்டு போம்மா” என்று தன் மகனையும் மருமகளையும் அழைத்துப் போய்… பூஜை அறையில் 10 நிமிடம் நிறுத்தி அதன் பின்னர் தான் விட்டார்…

பார்வதி… தீக்‌ஷாவைப் பார்த்து

“என்னை ஞாபகம் இருக்கா தீக்‌ஷா…. இல்லை ஏதாவது ஞாபகப் படுத்தனுமா” என்று உண்மையிலேயே கலக்கமான குரலில் கேட்க…

அவளின் கையைப் பிடித்தபடி… ”விஜய் அத்தான் சொன்னாங்க……” என்றவள்…

தன் யோசனைக்கெல்லாம் போகாமல்…. அவளிடம் பேச ஆரம்பித்தாள்… நீண்ட நாள் கழித்து பார்த்த தோழியிடம் பேசுவதைப் போலவே……

சாரகேஷிடமும் பேசினாள்…. அகல்யாவோடு அவன் திருமண விபரம் அறிந்ததால் வாழ்த்தும் கூறினாள்…

ஒருவாறாக பார்வதி,யுகி… என இவர்களோடு தனியே பிரிந்து வந்த தீக்‌ஷா

“என்னை விடு…. சுரேந்தர் அத்தான் எப்படிடி… ஆளு செம உஷார் பார்ட்டில... அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டாரே… முதலில் அந்தக் கதையச் சொல்லு ….. கேட்கலாம்… என்று வம்பிழுக்க ஆரம்பிக்க…

அவள் சொன்ன உடனே பார்வதியின் விழிகள் சுரேந்தரை நோக்கி அலைபாய…. அங்கும் அதே நிலைமை தான்…. அவன் விஜய்யின் அருகில் அமர்ந்திருந்தாலும்….. அவனின் பார்வை அவ்வப்போது பார்வதியை உரசியபடி இருக்க…

தீக்‌ஷா…. கள்ளப் புன்னகை புரிந்தாள்…………. பார்வதியைப் பார்த்து….

“உண்மையச் சொல்லு… என்னைப் பார்க்க வந்தியா உன் ஆளைப் பார்க்க வந்தியா…” என்று ஆரம்பித்தவள்தான்…. களை கட்டியது அந்த இடம்…. பார்வதி விழி பிதுங்காத குறையாக அமர்ந்திருக்க…. அப்போது…. ஆர்த்தியும் தீனாவும் அங்கு வந்தனர்….

இதுவரை தீக்‌ஷா பெரிதாக தன் ஞாபக மறதியை எடுத்துக் கொள்ளவில்லை…. ஆனால் அவளால் தீனாவை யார் என்றே தெரியவில்லை…. ஆர்த்தியைப் பார்த்ததும் யுகியின் முகம் பிரகாசமாக….. அதை வைத்து ஆர்த்தியை அனுமானித்து விட்டாள்…… அவள் முகம் பரிச்சயமானதாகவே இருந்தது….

அவளோடு வந்தவன் தீனா என்றவுடன் தீக்‌ஷா முகம் சிறுத்தது…. அவளுக்குள் அன்று தன்னைக் கடத்தச் சொன்னது தீனாதானே என்பதுதான் ஞாபகம் வர….முகம் கன்றினாள்…

இருந்தும் விஜய் சுரேந்தரோடு தீனா சர்வ சாதரணமாகப் பேசியபடி இருக்க…. தன் எண்ணங்களை பின்னுக்கு தள்ளினாள்….

ஆர்த்தியும் அவள் அருகில் இருந்ததால் தீக்‌ஷா அப்போது அதை விட்டு விட்டாள்….

தீக்‌ஷா, இப்போது பார்வதியுடன் சேர்ந்து யுகி ஆர்த்தியை ஓட்டிக் கொண்டிருக்க…. அந்த வரவேற்பறை எங்கும் இவர்களின் சிரிப்புச் சத்தம் மட்டுமே எதிரொலிக்க…. ராதாவும் இவர்களின் கூட்டத்தில் ஐக்கியமாகி இருந்தாள்…..


யுகி தன் அண்ணன்களை பார்த்தெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாமல்….. ஆர்த்தியை தன் அருகே வைத்துக் கொண்டவன்… அவள் தோள் மேல் கை போட்டபடி… தன் அண்ணிகளுடன் வழக்கடித்துக் கொண்டிருந்தான்…

விஜய் சுரேந்தரைப் பார்த்து…

“இவன் சும்மாவே ஆடுவான்… இத்தனைப் பேர் இருக்கோம்னு கூட அவன் பார்க்கலைடா…. அட்லீஸ்ட் தீனா இருக்கான்னு கூட நினைக்கலைடா… ” என்று யுகியை வசைபாட…

“ஆமாம்ணா…. என்ன தைரியம்…. “ என்று அண்ணனின் வசைபாடலுக்கு ஒத்திசைத்தவன் கண்களின் ஏக்கம் பார்வதியிடம் தான் இருந்தது….

விஜய் தீனாவைப் பார்த்தபடி…

“எங்கடா…. உன் வைஃப்…. “ என்று கேட்க….

”அவ அம்மா வீட்ல இருக்காடா…. 7 மன்ந்த்ஸ்…. அதுனாலதான் ஆர்த்திய கூட்டிட்டு வந்தேன்” என்ற போதே மனைவியைப் பிரிந்திருக்கும் வருத்தம் அவன் குரலிலும் வர…

விஜய் சிரித்தபடி…

“நீ ஏண்டா மச்சி… இவ்வளோ ஃபீல் பண்ற….. “ என்று மற்ற யாருக்கும் கேட்காமல் அவன் காதில் மட்டும் கிசுகிசுக்க…

“உனக்கு என்னடா… இனி தீபாவளிதான்…. உனக்கு என்னைப் பார்த்தால் நக்கலாத்தான் இருக்கும்” என்றவன்

“என்னைக் கிண்டல் பண்றதெல்லாம் சரி…. இப்போதான் எல்லாம் சரி ஆகி விட்டது… இனியாவது உன் மனைவிக்கு பாடிகார்ட் வேலை பார்க்கிறத விட்டுட்டு… தொழிலைக் கவனிக்க வருவாயா இல்லையா…. “ என்று விஜய்யை அந்த நேரத்திலும் விடாமல் கேட்க…

அவன் தோள் மேல் கை போட்டவன்…..

“சுரேந்தர் மேரேஜ் இருக்கு…. ராதா மேரேஜப்போ நான் கழண்டுகிட்டேன் சுரேந்தர் தான் எல்லாவற்றையும் பார்த்தான்… என்னோட மேரேஜ் நடந்தப்போதும் அவன் தான் பொறுப்பெடுத்துக்கிட்டான்… இப்போ அவனுக்கு நான் தான் எல்லாம் பண்ணனும்… அதை முடிச்சுட்டு…. தீக்‌ஷாவும் நானும் வெளிநாடு போக ப்ளான் பண்ணி இருக்கேன்…” என்றவன்…

தீனாவின் இதழ் ஓரத்தின் புன்னகை முடிச்சில் இருந்த கள்ளத்தனத்தில்

”டேய்…. உனக்கு என்னைப் பார்த்தால் சிரிப்பா வருதா…. ஹனிமூன் கூட போகாமல்… இந்த ப்ராஜெக்டே குறினு இருந்தவன்டா…. “ என்று பெருமூச்சு விட்டவன்…

“அதுமட்டும் இல்லை… தீக்‌ஷாவுக்கு ஃப்ளைட் சத்தம் கேட்டால் என்ன பண்ணுவாளோனு வேற பயமா இருக்கு… அதுனாலதான்…. சுரேந்தர் மேரேஜ் முடிச்சுட்டே போறேன்…. தேவையான்னு கூடத் தோணுது இந்த விஷப்பரிட்ச்சை… பட் அவள அப்படியெ விட்டு விடக் கூடாதுனுதா இந்த ப்ளான்… இதெல்லாம் முடிச்சுட்டு உனக்கு நான் பதில் சொல்கிறேன்” என்று முடிக்க…. தீனாவும் சம்மதித்தான் தன் நண்பனின் நிலை உணர்ந்து…

ராகேஷ் கூட அவன் குடும்பத்தோடு மீண்டும் வந்து தீக்‌ஷாவைப் பார்த்து விட்டுத்தான் நிம்மதியாகக் கிளம்பிப் போனான்….

கிட்டத்தட்ட 7 மணி அளவில் சாரகேஷ் தேவகியை அழைத்து… கிளம்பலாமா என்று அழைக்க….

சுரேந்தர் அதிர்ந்து பார்வதியைப் பார்த்தான்…..

பார்வதியோ “

கிளம்பட்டுமா “ என்று கண்களாலே கேட்க…

முறைத்த சுரேந்தர்.. கோபமாய் வேறு புறம் திரும்பிக் கொண்டான்… இவ்வளவு தூரம் வந்தவள்…. தனக்கு நேரம் ஒதுக்காமல்… தன்னைச் சந்திக்காமல் போகப் போகிறாளா என்ற கோபத்தில் அவன் இருக்க… பார்வதிக்கு அவனின் கோபம்….அதுவரை அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியை எடுத்துக் கொள்ள…. தீக்‌ஷா அதைக் கவனித்தவாறே…..

“என்ன மேடம் டல்லாகிட்டீங்க…ரெட் சிக்னல் அதுவும் ஹாட்டா இருக்கா” என்றவள்..

“இரு வழி பண்ணலாம்…கிரீன் சிக்னலா மாற்றி சில்லுனு உன்னைய நனைய வைக்கனுமே” என்று யோசித்தவள்….

யுகி.. ’பாரு’ அண்ணாவை மட்டும் இங்க இருந்து போக வைக்க வழி பண்ண ஏதாவது ஐடியா இருக்காடா..

“ப்பூ இவ்வளவுதானே” என்ற யுகி…. போனைக் கையில் எடுத்தபடி வெளியேறியவன்… மீண்டும் வந்து அமர்ந்தபோது….

“இப்போ பாரு தீக்‌ஷா…..டாக்டர் சார் மட்டும் தனியா எஸ்கேப் ஆவாரு பாரு” என்று சிரிக்க….

அதேபோல் சாரகேஷ்… அனைவரிடமும் விடைபெற்றபடி… இவர்களின் அருகில் வந்தான்…

“பாரு…. அகல்யா வீட்டுக்கு வரச் சொன்னாள்…. நான் கிளம்புகிறேன்….சுரேந்தர் கூட நீயும் அம்மாவும் வீட்டுக்கு போங்க” என்றவன்

தீக்‌ஷாவிடம்

‘டேக் கேர் தீக்‌ஷா…. டேப்லட்ஸ்லாம் கண்டினியூ பண்ணு…. அசால்ட்டா இருக்காத” என்றவனிடம் தலையாட்டி அவனை வழி அனுப்பி வைத்தவள்…

”யுகி எப்படிடா…. “ என்று விழி விரிக்க….

“ஒண்ணுமில்லை…. டாக்டரம்மாகிட்ட போன் பண்ணி… எல்லோரும் இங்க இருக்கோம்… நீங்க மட்டும் அங்க இருக்கீங்களேனு…. வாங்கனு சொன்னேன்…. இது மட்டும் தான் சொன்னேன்… அகல்யா இனி இங்க வர முடியுமா… என்ன நடந்துச்சுனு நமக்கு தெரியாதுப்பா…. ஆனால் டாக்டர் சார் கிளம்பிட்டாரு” என்று ஒன்றுமே தெரியாத அப்பாவி போல தோளைக் குலுக்கியவனை… பார்த்து அவனருகில் இருந்த அந்த வீட்டின் 3 மருமகள்களும் சிரிக்க…

பார்வதி மட்டும்….

“தேங்க்ஸ் யுகி” என்றபோது….

தீக்‌ஷா அவளிடம்…

”பாரு… நீ என்ன அவனுக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு இருக்க… அவனே ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால்…அவன் காதல் தானா வளரும்னு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்…. இதெல்லாம் எதுக்கு… நாளைக்கு அவனுக்கு ஒரு பிரச்சனைனா…. நாமதான் வழி பண்ணனும்… அதுக்கு முன்னேற்பாடு தான் இந்த ஹெல்ப்லாம்..” ஆர்த்தியைப் பார்த்து சிரித்தபடி பேச… ஆர்த்தியும் யுகியும் ஹைஃபை கொடுத்துக் கொள்ள….

யுகி பார்வதியிடம்…

“ஆமாம் அண்ணி…. தீக்‌ஷா எங்க காதலை வளர்த்துதான்…. அதோ அந்த மனுசனை ஃப்ளாட் ஆக்கினாள்…’” என்று தீக்‌ஷாவை பார்த்து கண் சிமிட்ட….

அத்தனை பேரின் பார்வையும் ஒரே சமயத்தில் விஜய்யைத் தீண்டியபடி…. ஒரு சேர சிரிக்க…. விஜய்யும் அவர்களை நோக்கினான்…

யுகியைப் பார்த்து முறைக்கப் போனவள்…. அது முடியாமல்… முகம் சிவந்து நாணம் என்னும் ஆடை போர்த்தியவள்…. உடனடியாக தன்னைச் சமாளித்தபடி சிரித்து வைத்தாள் தீக்‌ஷா…

அடுத்து தீனா…. ஆர்த்தியை அழைக்க…

யுகியோ….

“ஆர்த்தியை நான் கூட்டிட்டு வருகிறேன்… நீங்க போங்க தீனா” என்று கொஞ்சம் கூட தாமதிக்காமல் சொல்ல…. தீனா வேறு வழியின்றி கிளம்பி விட்டான்…

தீனா விஜய்யிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை… விஜய் யுகியிடம்…

“யுகி… ஆர்த்திய வீட்ல விட்டுட்டு வா…. லேட்டாகி விட்டது” எனச் சொல்ல… தீனாவிடம் தைரியமாகச் சொன்ன யுகி…. தன் அண்ணனிடம் தயங்க…

“உடனே கிளம்பினால்… நீ கூட்டிப் போய் விடலாம்… இல்லை காத்தமுத்துவை காரை எடுக்கச் சொல்லவா” என்று கட்டளை போல் விஜய் கூற…

தீக்‌ஷா யுகியிடம்….

“ஆர்த்தி அண்ணன் கிட்ட வாய் கிழிய பேசுனா…. இப்போ ஏன் பம்முறா…. கெளம்பு… கெளம்பு,…. இல்ல விருமாண்டி… காத்தமுத்துவை காரை எடுக்கச் சொல்லிருவார்… அட்லீஸ்ட்… ஆர்த்தியை ட்ராப் பண்ணவாது சொல்றாரே…” என்க… யுகியும் ஆர்த்தியோடு கிளம்ப….

சுரேந்தர் பார்வதியும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து நகர…. விஜய் தீக்‌ஷா மட்டுமே…. அந்த ஹாலில் இருந்தனர்…. எதிர் எதிரே அமர்ந்திருந்தவர்கள்… பார்வைகளை மட்டும் பறிமாறியபடி இருக்க… அப்போது

இருவரின் பெற்றோர்களும் அங்கு வந்தனர்… தேவகியும் அவர்களோடு தான் இருந்தார்….

விஜய்க்கு அப்போதே புரிந்து விட்டது…. அவர்கள் ஏதோ பேசி முடிவோடு வந்திருக்கின்றனர் என்று… எதுவும் சொல்லாமல் அமைதியாக அவர்களைப் பார்க்க…

கலைச்செல்வி….. தயங்கியபடி…

‘”விஜய்…. ஏதோ போதாத நேரம்…. என்னவெல்லாமோ நடந்திருச்சு… இப்போதைக்கு தீக்‌ஷா அவங்க வீட்டுக்கு போகட்டும்….” என்ற போதே விஜய் எழுந்து விட்டான்…..

ராகவேந்தர் உடனே

”இல்லப்பா எடுத்தோம் கவிழ்த்தோம்னு,,,,, இருக்காமல் ஒரு நல்ல நாள் பார்த்து… ஏதாவது ஒரு கோவிலில்…. மறுபடியும் தாலி கட்டி” என்று முடிக்கவில்லை

“அதுதான் முடிவு பண்ணிட்டீங்கள்ள… என்னை எதுக்கு கேட்கறீங்க” என்றவனின் கோப வார்த்தைகளில்…

ஜெயந்தியும், வைத்தீஸ்வரனும் பதறி விட்டனர்…

“இல்ல தம்பி… இன்னைக்கு கூட உள்ள வரும்போது இவ அபசகுனமா கீழ விழுந்துட்டா… அதுனாலதான் எங்க மனசே கேட்கலை” என்று ஜெயந்தி அழாத குறையாக சொல்ல….

விஜய்….. தீக்‌ஷாவை முறைத்த முறைப்பில் தீக்‌ஷா அதன் உக்கிரம் தாங்காமல் தலை குனிந்தாள்…

அவளுக்கு யார் பக்கம் பேசுவது என்றே தெரியவில்லை… கணவன் பக்கமா… இல்லை அந்த வீட்டின் பெரியவர்கள் பக்கமா… அமைதியாகவே பார்த்துக் கொண்டிருக்க… விஜய்…. விடு விடுவென்று மாடி ஏறிப் போய் விட்டான்…….

எரிச்சலாக வந்தது தீச்ஷாவிற்கு…

ஒருபுறம்… சகுனம் சாங்கியம் என்று பார்க்க்கும் பெரியவர்களை நினைத்தும்…. இன்னொரு புறம்… இத்தனை பேர் சொல்கிறார்களே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல்… அவர்களை மதிக்காமல் கோபத்தில் போகும்… தன் கணவனை நினைத்தும்….


2,768 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page