top of page

அன்பே நீ இன்றி 46

அத்தியாயம் 46

விஜய் கண் விழித்த போது அருகில் சுரேந்தர் மற்றும் தீனா இருவரும் நின்றிருக்க…… இருவரையுல் இலட்சியம் செய்யாமல் எழ முயற்சித்த விஜய் லேசாய்த் தடுமாற… சுரேந்தர் அவனைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்தான்

ஆனால் விஜய்யோ அவன் கைகளை தட்டி விட்டு தானே எழுந்து அமர்ந்தவன்…வேகமாய் சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க அது மூன்று மணியைக் காட்டியது… சுரேந்தரைப் பார்த்த விஜய்யின் கண்களின் நரம்புகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோபத்தின் சிவப்பு……

விஜய்யின் செயலில்… அதிர்ந்த சுரேன்..

“அண்ணா……” என்ற போது

“என்ன சொல்லப் போற….. தீக்‌ஷாவுக்கு நாம…. இல்ல இல்ல நீங்க நினைத்த மாதிரி….. எதுவும் இல்ல….. இதுதானே சொல்ல வருகிறாய்…” என்று இருவரையும் பார்க்காமல் சுவரை வெறித்தபடி சொல்ல….

விஜய்க்கு எப்படி தெரியும் என்று தீனா சுரேந்தர் இருவரும் ஒருவரை ஒருவர்…. கேள்வியாய் பார்த்துக் கொண்டனர்….

அவர்களுக்கு அவன் பதில் சொல்லவில்லை……… அவனுக்கான பதிலை அவன் மனைவி சிந்திய ரத்த துளிகள் அவள் இன்னும்….. உணர்வுகளோடு இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லி சென்றதை இவர்கள் அறிவார்களோ???…..

தட்டுத் தடுமாறி எழுந்தவன் நின்றிருந்த சுரேந்தர் மற்றும் தீனாவிடம்..

“என்னை விரோதியா நினைத்த போதே அவ என்னை பழி வாங்க நினைக்க வில்லை…. என்னை அவளோட உயிரா நினைக்கும் போதுதான் என்னை பழி வாங்கப் போறாளா… என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டாடா….. கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் வாழுவோம்… நீங்க பார்க்கத்தான் போறீங்க……” என்று சொல்லியபடி நடந்து போக

”அண்ணா…….. சக்திக்கு திடீர்னு சீரியஸாகி….. “ என்று நிறுத்திய சுரேந்தர்…

“டாக்டர்ஸ் எவ்வளவோ டிரை பண்ணியும் முடியலண்ணா” என்ற வார்த்தைகளில் விஜய் ஆணி அடித்தவன் போல் நின்றவன்………… மீண்டும் கட்டிலில் வந்து கண் மூடி அமர்ந்தவன்தான்….சற்று நேரம் எதுவுமே பேச வில்லை…

அவனிடம் இவர்களும் பேச்சுக் கொடுக்க வில்லை… சிறிது நேரம் கழித்து

”நேற்று அந்த பொண்ணு கிட்ட என்னடா பேசுனீங்க….. ஏற்கனவே இதய பலகீனமுள்ள பொண்ணு…. நான் அவ அம்மா அப்பா முகத்தில் எப்படி விழிப்பேன்….. பாவம் ஒரே பொண்ணு…. அவளால ஏகப்படட்தை அனுபவிச்சுட்டாங்க….. அவள எப்படியாவது காப்பாற்றி கொடுக்கலாம்னு நெனச்சேன்…… ” என்று புலம்பிய விஜய்….. நேராய் போனது சக்தியின் பெற்றோரை நோக்கித்தான்….. அவன் மனைவியைக் கூடப் பார்க்க வில்லை…..

இவனைப் பார்த்த சக்தியின் பெற்றோர்கள்… துக்கம் தாளாமல் கதறி அழ…. விஜயேந்தருக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்றே தெரியவில்லை…

இறந்தவர்கள் நிம்மதியுடன் போய் விடுவர்…… ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களின் நிலை…. கொடுமையாக இருந்தது விஜய்க்கு….. விஜய் கூட அதன் வாசலில் சில மணி நேரத்திற்கு முன் தான் நின்றிருந்தான்…… நேசிப்பவர்களை இழப்பதென்பது…… எவ்வளவு வலி என்பதைக் கூட அவள் மனைவி அவனிடம் காட்டியிருந்தாள்….

இருவரிடமும் பேசாமல்…. அவர்களை தன்னோடு அணைத்தவன்….

“உங்க பொண்ணு…. உங்களை தனியா விட்டுப் போகல….. உங்களுக்கு ஒரு மகனை விட்டுட்டு போயிருக்கான்னு நெனச்சுக்கங்க…. அம்மா” என்று சொல்ல…

இல்லப்பா….மகள்னு சொல்லு…. சக்தி சொன்னா… கண்டிப்பா விஜய் சாரோட மனைவி தீக்‌ஷா சுய நினைவுக்கு வந்து…. ரெண்டு பேரும் சந்தோசமா உங்ககிட்ட வருவாங்க….. தீக்‌ஷா மேடம் கண்டிப்பா…. சக்திய விட உங்கள நல்லா பார்த்துப்பாங்கனு சொன்னா….” என்று அந்த சூழ்னிலையிலும் விஜய்யிடம் சொல்லி தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டவர்கள்…

“சக்தி ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டா தம்பி… தீக்‌ஷா ஏத்துக்கிறுதோ இல்லையோ…..இனி எங்க வேண்டுதல் எல்லாம்… தீக்‌ஷாவும் நீங்களும் நல்லா வாழனும் என்பது தான்…. என் பொண்ணு மனசும் அப்போதான் சாந்தி அடையும் தம்பி….. உயிரோட இருக்கிற வரை… தப்பான ஒருத்தனை நேசிச்சுட்டோம்னு…. மனசு வெறுத்துதான் வாழ்ந்துச்சு,…… “ என்று கண்கலங்க….

காத்தமுத்துவும்..முருகேசனும்… அவர்களின் அருகில் வந்து….

“கவலப்படாதீங்க ரெண்டு பேரும்… நம்ம தீக்‌ஷா கண் முழிச்சு…விஜய் சார் கூட சீக்கிரம் வாழும்…. உங்களக் கூட சக்திய மறக்க வைக்கும் பாருங்க” என்று சொல்லி ஆறுதல் படுத்த

விஜய்…. அதை ஆமோதிப்பது போல தலை ஆட்டினான்… அந்த ஆறுதல் அவனுக்கும் தெம்பூட்டுவது போல் தான் இருந்த்து….

அதன் பிறகு…. சக்தி சம்பந்தபட்ட… எல்லா விசயங்களையும் விஜய் தானே எடுத்துக் கொண்டான்…. அவளின் ஈமக் காரியங்களிலில் இருந்து….. அவளின் காதலன் இல்லையில்லை அந்த கயவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை அவன் ஓயவில்லை…

சக்தியின் பெற்றோரே அவனுக்கும் …. காத்தமுத்து,முருகேசனுக்கு சமையல் செய்து தர… விஜய்… தன் குடும்பத்தை விட்டே தனித்திருந்தான்………….. யாரிடமும் பேசவில்லை…. பேசவும் விரும்ப வில்லை…. இந்த வாழ்க்கைக்கு ஒருமாதிரி தன்னை பழக்கிக் கொண்டான் என்றே சொல்ல்லாம்….

கலைச்செல்வி எவ்வளவு கெஞ்சியும்….. வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை…. தீக்‌ஷாவோடுதான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்தான் விஜய்….

சுரேந்தரோடு பேசுவதே கிடையாது… அவன் ஏதாவது தொழில் ரீதியாக சந்தேகம் கேட்டால் கூட

“சார்தான் பெரிய ஆளாகிட்டீங்க இல்ல….. எல்லா முடிவும் நீங்களே எடுத்து தன்னிச்சையா பண்ற அளவுக்கு பெரிய ஆளாகிட்டீங்க… நீங்களே பார்த்துக்கங்க…. இவன் பைத்தியக்காரன் ஆகிட்டான்னு முடிவு பண்ணிதானே பைத்தியத்தை சக்தி மூலமா தெளிய வைக்க நெனச்சீங்க……அப்படி மட்டும் ஏதாவது பண்ணி இருந்தீங்க” என்று சுரேந்தரை சாடியவன்….. சுரேந்தரிடம் மட்டும் இன்றி…. தீனாவிடமும் பேச மறுத்து விட்டான்…

யுகியைக் கூட தேற்ற ஆர்த்தி இருந்தாள்…. சுரேந்தர்தான் சுத்தமாய் நொந்து போனது….

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது வருமோ என்று ஒவ்வொருவரும்……. காலத்தின் கையில் போட்டு விட்டு… அன்றாட வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தனர்…

அந்த நாளும் வந்தது… விடிவு காலமா என்பது தெரியவில்லை…. தீக்‌ஷா கண் விழித்தாள்தான்…. ஆனால் நிலைமை தான் வேறாய் இருந்த்து…. விஜய்க்கு விடிவு காலம் என்பது கேள்விக் குறியாகவே இன்னும் நின்றது என்றே சொல்லலாம்…

ஜெயந்தி மற்றும் விஜய் மட்டுமே தீக்‌ஷா இருந்த அறையில் இருப்பனர்…

அன்றைய இரவும்.. தீக்‌ஷா அருகில் தலைவைத்து படுத்திருந்தான் விஜய் …. அவளின் கைகளைப் பிடித்தபடியே…

நிசப்தமான இரவின் மத்தியில்…….. தீக்‌ஷா கடினப்பட்டு இமைகளைப் பிரித்தாள்…. 2 மாதம் ஒரே நிலையில் இருந்ததால்…. அவளின் உடல்… அவள் மூளையின் கட்டளைக்கு ஏற்று செயல்பட சிரமப்பட…. கண்களைச் சுழற்றினாள் தீக்‌ஷா…..

எழுந்து அமர முயற்சி செய்தாள் ஆனால் முடிய வில்லை……….. வறண்டு போன உதடுகளை ஈரமாக்கியவள்…. பேச நினைத்தாள் தான் முடியவில்லை…. தன் கைகளின் மேல் இருந்த ஆண் கரத்தினை உணர்ந்தவள்… வேகமாய் பறிக்க முயற்சித்தவளுக்கு….. அது முடியவில்லை

தான் யார் என்பதே தெரியாத போது… அவள் தன் கணவனை அறிவாளோ…..

தான் யார்… எங்கிருக்கிறோம் என்று தன் ஞாபகங்களின் அடுக்கில் தேட முயற்சித்தவளுக்கு…. விமான தரை இறங்கிய போது வெடித்து சிதறிய காட்சி மட்டுமே எஞ்சி இருக்க…. அவளுக்கு அது தலையில் பெரும் இடி இடித்த வலியின் வேதனை தர…. வேகமாய் தன்னை சுற்றி பின்னபட்டிருந்த வயர்களை எல்லாம் பிய்த்து எறிந்தபடி எழ முயற்சி செய்ய… விஜய் …. திடுக்கிட்டு எழுந்தான்…. எழுந்தவன் கண்களில் சந்தோசமா… ஏக்கமா…. எதைக் காட்டுவதென என்றே தெரியவில்லை..

தன்னவள் கோமா நிலையிலிருந்து வெளி வந்து விட்டாள் என்பதே அவனுக்கு உற்சாகத்தினை தர…

தீக்‌ஷா என்றபடி தன் புறம் பற்றி இழுத்தவனை……….. உணர்ச்சி இல்லாமல் பார்த்தவள்…. அவனைத் தள்ளி விட்டு எழ முயற்சிக்க…. விஜய் முதலில் பெரிதாக எடுக்க வில்லை… அவளைத் தன்னோடு அணைத்து அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட போராடிக் கொண்டிருக்க… இப்போது ஜெயந்தியும் கண் விழிக்க… தன் மகளிடம் சந்தோசமாய் ஓடி வந்தாள்…

முதலில் போராடிய தீக்‌ஷா…. விஜய்யின் அரவணைப்பில் ஒன்றிய பின்னோ….. தான் யார் என்றறியாத நிலையிலும்…. இந்தர் என்று அலறினாள்…..

“என் இந்தர்…….. என்னை விட்டு ஏன் போனார்……” என்று விஜய்யிடமே கேள்வி கேட்டவள்…. தன் கழுத்தில் தொங்கிய தாலியை தூக்கி எறிய….

ஜெயந்தி அதிர்ச்சியில்….

“என்னடி ஆச்சு உனக்க்கு…. மாப்பிள்ளை உன் பக்கத்தில தான் நிற்கிறார்..” என்று பதறிச் சொல்ல….

“நான் அவர்கிட்ட போகனும்..” என்று விஜய்யிடமிருந்து விடுபட்டாள்……. தீக்‌ஷா எப்போது தாலியை தூக்கி எறிந்தாளோ அப்போதே விஜய் தன்னிலையில் இல்லை…

அவனிடமிருந்து தள்ளிப் போன தீக்‌ஷா… தன்னவனின் இழப்பைத் தாங்க முடியாத தீக்‌ஷா தன்னைத் தானே அழிக்க முயற்சிக்கும் வண்ணம்….. அதற்கு ஏதுவாக அங்கிருந்த பொருட்களை எல்லாம் தேட… எதுவும் கைக்கு கிடைக்காமல் போக….. பைத்தியக்காரி போல அங்கிருந்த நீடில்களைப் பிரிக்க ஆரம்பித்தாள் தன் கைகளை கீறுவதற்காக… விஜய்க்கு முதலில் அவளின் செயல்கள் புரியாமல் விழித்தவன்…. இப்போது அவள் செய்யப் போவதை உணர்ந்தவன்…

தீக்‌ஷா என்று கத்தியபடி அவற்றை எல்லாம் அவளிடமிருந்து பறிக்க……… அவளோ வெறித்தனமாய்ப் பிடிவாதம் பிடித்தாள்…

எப்படியோ சமாளித்து அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன்… அவளை அணைத்தபடி…. அவசர உதவி எண்ணை அழைத்தும் விட்டான்….

விஜய்யின் இதயத் துடிப்பை உணர்ந்த தீக்‌ஷா….. தனக்குள்…. பேசியவளாய்…….. இந்தரின் நினைவுகளை தனக்குள் கொண்டு வர முயற்சிக்க… அவளால் முடியாமல்…. அவளின் கண் முன்… விமான விபத்தின் காட்சிகளே பிம்பம் ஆக வர…. அவளால் அதை ஏற்க முடியாமல்…. போராட ஆரம்பித்தவள்…. அது முடியாமல்….. அழுத்தம் அதிகம் ஆக… அதிக அழுத்தத்தில்………….. அவள் கண்கள் இரத்தமாய் சிவக்க ஆரம்பிக்க…. இப்போது மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது… சிறிது நேரத்தில் மயங்கியும் போனாள் தீக்‌ஷா

விஜய்க்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை…. அவள் முற்றிலும் நினைவுடன் எழவில்லை என்பது அவனுக்கு புரியவே நிமிடங்கள் கடந்தது…..

ரத்தம் வழிவதைப் பார்த்த பின் தான் தன் உணர்வுக்கு வந்தான்…. வேகமாய் தன் கைகளை வைத்து துடைக்க… நின்ற பாடில்லை.. தீக்‌ஷாவின் நடவடிக்கைகளைப் பார்த்த ஜெயந்தி அலறியே… தான் ஒரு புறம் மயங்கிப் போனாள்….

அதன் பின் அன்றைய பணியில் இருந்த செவிலி உடனடியாக தீக்‌ஷாவுக்கு முதலுதவி செய்ய… ஓரளவு தீக்‌ஷா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாள்….

தன்னிலைக்கு வந்திருந்த ஜெயந்தி ஒருபுறம் புலம்பிக் கொண்டிருந்தாள்…

தரையில் கிடந்த மாங்கல்யத்தினை கை நடுங்க எடுத்த விஜய்யை…. பார்த்த ஜெயந்தி….. மயக்க நிலையில் இருக்கும் தீக்‌ஷாவின் கழுத்தில் மீண்டும் போட்டு விடச் சொல்ல….. விஜய் மறுத்தபடி…. அதை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவன்…. தீக்‌ஷாவின் காலில் இருந்த மெட்டியையும் அவளிடமிருந்து தன் கையாலே கழட்ட… ஜெயந்திக்கு தாயாய் உள்ளம் தூக்கி வாரிப் போட்ட்து…

ஒருபுறம் ஜெயந்தியின் மனம் சஞ்சலப்பட்டது என்றே சொல்லலாம்… எங்கு தன் மகள் பைத்தியக்காரி என்று முடிவு செய்து விட்டானோ…. இதை சாக்காக வைத்து தன மகளைத் தள்ளி வைத்து விடுவானோ… வசதி படைத்தவர்கள் அவர்கள்…. இந்த நிலைமையில் இருக்கும் தன் மகளை வைத்து வாழுவார்களா… தன் மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகுமோ பத்றியவளுக்கு விஜய்யிடம் பேச தைரியம் வராமல் உள்ளுக்குள் மனம் குமைந்தாள்….

-----------------

சில மணித் துளிகளிலேயே மீண்டும் எழுந்த தீக்‌ஷா….. மீண்டும் பிதற்ற… வேறு வழியின்றி மயக்க மருந்தின் உதவியுடன் மீண்டும் அடக்கி வைக்கப் பட்டாள்…

அவள் நிலைப் பார்த்த மொத்த குடும்பமும் நரக வேதனையில் துடிக்க… விஜய் இப்போது அவள் அருகில் இல்லை…… சற்று தள்ளியே நின்று கொண்டான்…. அவனால் அவளின் வேதனையைக் காணவே சகிக்க முடியவில்லை….

மீண்டும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானாள் தீக்‌ஷா…….

அவளுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஆரம்பிக்க…. தீக்‌ஷா ஓரளவு நார்மலானாள்…

மருத்துவர்களின்…. சிகிச்சைக்கும் ஓரளவு ஒத்துழைப்புக் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்….

சொன்னதெல்லாம் கேட்டுக் கொண்டாளே தவிர… எங்கோ வெறித்த பார்வை…. கண்களில் விரக்தி…. என்றிருந்தவளை மருத்துவக் குழு முதல் ஒரு வாரம் யாரையும் நெருங்க விட வில்லை…. ஜெயந்தி மட்டுமே இப்போது அவள் துணையாய் இருக்க… விஜய்யைக் கூட இப்போது அந்த அறையில் இப்போது அனுமதிக்க வில்லை…..

இதுவரை விஜய் அவள் அருகில் இருந்த நிலை போய்… இப்போது சற்று தள்ளி நிற்கும் நிலை ஏற்ப்பட்டது….

அது மட்டும் இல்லாமல்….

2 மாதங்களாய் ஏற்றப்பட்ட மருந்தின் தாக்கம் குறைய… ஓரளவு வெளிக்காற்றும் பட…. தீக்‌ஷா வின் மன நிலையிலும் சிறிது சிறிதாக தன்னை உணர ஆரம்பித்தாள்…. உணர ஆரம்பித்தாள் என்பதை விட மருத்துவர்களால் அந்த நிலைக்கு உந்தப்பட…… இந்த காலகட்டங்களில் அவளின் தேடலில் அவளின் இந்தரைப் பற்றிய நினைவுகள்… அடியில் போக… ஓரளவு தான் யார் என்று தனக்குள்ளே ஆராய ஆரம்பித்தாள்….

நினைவடுக்குகள் முன்னுக்கு வர ஆரம்பிக்க…. அவளின் முதல் நிலை நினைவகம் வேலை செய்யத் தொடங்க…. தானாகவே பேச ஆரம்பித்தாள்… அவளின் தேவைகளை அவளாகவே கேட்க ஆரம்பித்தாள்…. அது கூட மிகவும் யோசித்து யோசித்து பேச ஆரம்பிக்க… மருத்துவர்களுக்கு அவளின் முன்னேற்றம் மிகவும் திருப்தியை அளிக்க ஆரம்பித்தது…..

ஜெயந்தி… தீபன் வைத்தீஸ்வரன் இவர்களை அறியும் வரை தடுமாற ஆரம்பித்த தீக்‌ஷா…. அதன் பிறகு வெகு வேகமாய் குணமடையத் தொடங்கினாள்…..

கொஞ்ச கொஞ்சமாய் அவளுக்கு நிகழ்ச்சிகள் சொல்ல ஆரம்பிக்கப்பட……. தீக்‌ஷாவும் மெது மெதுவாய் உள்வாங்கி….. தன் நினைவுகளையும் பகிறத் தொடங்க ஆரம்பித்திருக்க…

தீக்‌ஷாவின் நினைவுத்திறனை ராதாவை வைத்துதான் அடுத்தகட்டத்திற்கு கொண்டு போக முடியும் என்பதால்…….

இதுவும் ஒரு சிகிச்சை என்பதால்… ராதா மற்றும் அவளின் குடும்பத்தினர் அனுமதி அளிக்கப்படவில்லை…..

பின் தீக்‌ஷாவாகவே ஒரு நாள் கேட்டாள்…

”அண்ணி எங்கே… எனக்கு ஏன் இப்படி ஆச்சு என்று வரிசையாய் கேட்க ஆரம்பிக்க…

சந்தோசத்தில்…. தீபன் விஜய்யிடம் தான் வந்தான்…

“விஜய்…. இன்னைக்கு அவ ராதாவை கேட்டாள்…” என்ற போதே……… விரக்தியாய் சிரித்தான்….

அவன் நிலை புரியாமல் இல்லை….தீபனுக்கும்…..

“கண்டிப்பா…. உங்கள நாளைக்கே தேடுவா பாருங்க…..” என்றவன்… இன்னைக்கு ஒரு கவுன்சிலிங் இருக்கு…… அதை முடிந்த பின்னால் பார்க்கலாம் விஜய் என்று தேற்றியவன்….

“இனியாவது நீங்க வீட்டுக்கு போகலாம்ல விஜய்…. அத்தை ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்…” என்று விஜய்யின் வீட்டிலிருப்பவர்களின் நிலையை எடுத்துச் சொல்ல…

வாய் திறந்தான் விஜய்…

“அப்போ உங்க தங்கச்சிய என் மனைவியா அனுப்புங்க….அவ இல்லாமல் நான் போக மாட்டேன்” என்றவன் அங்கு நிற்காமல் அவனைக் கடந்தும் போக…. தீபனுக்கு அவனையே பார்த்தபடி நிற்பதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை….

ஜெயந்திக்கோ தன் மகள் ராதாவைக் கேட்டவுடன் வந்த சந்தோசத்திற்கே அளவே இல்லை எனலாம்…

தீபன் அந்தப் பக்கம் போன உடன்,…. வேகமாய்…………. ஏற்கனவே வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த தன் மகளின் திருமணப் படத்தை எடுத்தவள்…. அதை முதலில் காட்டாமல்….

தீபன் - ராதா திருமண ஆல்பத்தைக் காட்ட….

ஆவலாய் பார்த்த தீக்‌ஷா… உற்சாகமாய்….. பேச ஆரம்பித்தாள்….. சில தகவல்கள் அவளாக சொல்ல…. ஜெயந்தியும் உற்சாகமானாள்…. முற்றிலும் ஞாபகம் வந்திருந்தால் விஜய்யை பற்றி கேட்காமல் இருப்பாளா என்று தோன்ற வில்லை….

இவ்வளவு தூரம் பேசுகிறாள் என்ற உந்தலில் மட்டுமே ஜெயந்தி இருக்க…

பக்கங்களைத் திருப்பிய தீக்‌ஷா…. ராதா அவர்களின் சகோதரர்களோடு இருந்த புகைப்படத்தினைப் பார்த்தவளின் கண்களில் விஜய் முதலாய்ப்பட…. அதுவரை முகம் மலர்ந்து பார்த்தவள்……….

அப்படியே மூடி வைத்தவள்…

சில வினாடிகள் அமைதியாக இருந்தவள்…

“அம்மா… எனக்கு ஆக்ஸிடெண்ட்னு சொன்னீங்கள்ள …. எப்போ நடந்தது….. “ என்றவள்…

“நாம வேற வீட்டுக்கு போய்ட்டோமா அம்மா…. அவன் கொடுத்த வீட்ல இல்லேல்ல…. அதற்கு ஏதாவது பிரச்சனை பண்ணினாம்மா…. யுகி ஏன்மா என்னைப் பார்க்கவே வரலை….” தொடர்ந்து கேள்வி கேட்க..

ஜெயந்தி தான் குழம்பினாள்..

“என்னம்மா சொல்ற… அவன்னு யாரைச் சொல்ற” நடுக்கமாய்க் கேட்டாள்..

“ப்ச்ச்ச்…………… எனக்குத்தானே எல்லாம் மறந்து போச்சுன்னு சொன்னீங்க… உங்களுக்குமா”…. எரிச்சலாய்க் கேட்டாள் தீக்‌ஷா…

“இத்தனை நாள் அண்ணியையும் நான் பார்க்கலை… ஏதாவது பெரிய பிரச்சனையாம்மா…. அண்ணிக்கு குழந்தை பிறந்திடுச்சாம்மா” என்று கேட்க..

தீக்‌ஷா முன்னுக்கு பின்னாக முரணாக பேச….

ஜெயந்தி விழித்தாள்….

“சுனந்தா தெரியலையா தீக்‌ஷா… அவ பிறந்த நாள் கொண்டாடினது ஞாபகம் இல்லையா உனக்கு” படபடப்பாய் பேச….

தலையைப் பிடித்தாள் தீக்‌ஷா… அப்படியே தன் தாயின் மடி மீது தலை வைத்து படுத்தவள்…

“எனக்கு என்னம்மா ஆச்சு…. இதுனாலதான் ராகேஷ் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டாரா…………….” என்று இழுத்தவள்…

“இல்ல…இல்லை………….அவன் தான் லெட்டர் எழுதி வச்சுட்டு போய்ட்டான்ல…….. இந்தர்” என்று தன் நிலை மறக்க ஆரம்பிக்கும் போதே ஜெயந்தி வேகமாய்…

தான் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை எடுத்த ஜெயந்தி….

”ஏண்டி இப்படி கொல்லுற…. எவனப் பத்தியெல்லாமோ ஞாபகம் வச்சு பேசுற… உனக்குத் தாலி கட்டிவனைத் தெரியலையாடி…. கட்டின தாலியையும் தொலச்சுட்டு…. உன்னையும் தொலச்சுட்டு நிக்கிறியே…. இப்படி ஒரு நிலைல பார்க்கத்தான் உன்னைப் பெத்தேனாடி என்று அவளின் முன் புகைப்படத்தை ஆவெசமாய்த் தூக்கிப் போட… அதைக் கையில் எடுத்த தீக்‌ஷா……..

சட்டென்று எழுந்து அமர்ந்தவள்…. அதையே பார்த்தபடி இருந்தவள்….

“இந்தர்…………” என்று நிராசையாய்த் தழுவியவள்…………..

ஜெயந்தி ஆர்வமாய் அவளையே பார்த்தபடி இருக்க………..

அவள் மகளோ……………. மயங்கிச் சரிந்தாள்….

---------------

விஜய் தீக்‌ஷாவின் மருத்துவரின் முன் அமர்ந்திருந்தான்…

“என்ன டாக்டர் அவளுக்கு பிரச்சனை…. ஓரளவு எல்லா ஞாபகமும் வந்து விட்டது….. என்னைக் கூட உணர முடியுது….. இந்தர்னு சொல்றான்னா… என்னை ஞாபகம் இருக்குதானே டாக்டர்…. என்னால முடியல…. ஏதாவது பண்ணுங்க… ” கெஞ்சல் பாதி… ஆத்திரம் பாதி என கலந்து கேட்க….

‘விஜய்…., உங்க மனைவி இந்த அளவுக்கு வந்ததே பெரிய விசயம்…. இவ்வளவு சீக்கிரம் ரெக்கவர் ஆவாங்கனு நெனச்சு கூட பார்க்கலை…. ஆனால் உங்க நினைவுகள்….” என்று அமைதியானவர்…

”இப்போதைக்கு அவங்க அண்ணியோட அண்ணனா மட்டுமே உங்களை உணர்கிறாங்க…. உங்க நினைவுகள் வராமல் இல்லை…. வரும் போதே உங்களோட விபத்துதான் அவங்க கண் முன்னால நிற்குது…… அதை அவங்களால ஏத்துக்க முடியலை… அந்த நினைவுகளை மறக்கனும்னா…. உங்களோடான நினைவுகளையே அவங்க மறக்க முயற்சிக்கிறாங்க………சரியா சொல்லனும்னா…. மனதளவில்…. உங்க இறப்பை ஏத்துக்க முடியலை….. உடலளவில் தன்னை அழிச்சுக்க நினைத்தவங்க….. இப்போ தன் உணர்வுகளை…. உங்க நினைவுகளை அழிச்சுக்கிட்டாங்க….. நீங்க இல்லவே இல்லைன்ற மன துக்கத்தை…. இந்த வகையில போக்கிறாங்க…. யெஸ் மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க…. அம்னீஷியானு சொல்வதைக் காட்டிலும்… மனதளவில் தனக்குள்ளாகாவே அடங்கி இருக்காங்க…. அதையும் மீறி சில விசயங்கள் உங்களை ஞாபகப் படுத்தும் போது… ஐ மீன் உங்க திருமண புகைப்படம் பார்த்து இப்போ அதிர்ச்சி ஆனாங்கள்ள… அதுபோல…. அந்த நிலை வரும் போது…. அவங்களால மன அழுத்தத்தை கட்டுபடுத்தமுடியாமல் போராட ஆரம்பிக்கும் போது வருவதுதான் இந்த மூக்கில் இருந்து இரத்தம்…” என்று நிறுத்தியவர்….

”இதுகூட தற்கொலைதான் உடல் ரீதியா…. இல்லாமல் மன ரீதியா…. தன்னை அழிச்சுக்க ட்ரை பண்றாங்க…. அவங்க இப்போ இருக்கிற நிலைமையில் இது கூட பாதுகாப்பான நிலைதான் விஜய்…. இல்லை உடல் ரீதியா தன்னை அழிச்சுக்குவாங்க….. ஆனால் இதையும் நீடிக்க விடக் கூடாது…. மனச்சிதைவுக்கு முற்றிலும் ஆளாக நேரிடலாம்….. பார்க்கலாம் … கண்டிப்பா மாத்திடலாம் விஜய்….. கொஞ்சம் பொறுமை வேண்டும்….” என்றவரிடம்

“இதுக்கு என்னதான் தீர்வு டாக்டர்…. நான் என்ன பண்ண வேண்டும்….” பாரம் தாங்காமல் கேட்டான்..

ஆறுதலாக புன்னகைத்தவர்..

“இப்போ கூட நீங்கதான் அவர் கணவர்னு சொன்னா உங்க கூட வாழுவாங்கதான்….. ஆனால் எதெல்லாம் உங்கள ஞாபகப் படுத்துற விசயங்கள்னு தெரியல….. கொஞ்ச நாள் நீங்க அவங்கள விட்டு தள்ளி இருக்கிறது ரொம்ப நல்லதுனு நினைக்கிறேன்…. இதற்கு தீர்வு என்னவென்றால்.. நடந்ததை ஏத்துக்கிற மனப்பக்குவம் அவங்களுக்கு வர வேண்டும்…. நீங்க இறந்து போய்ட்டீங்கன்னு நம்புற அவங்க….. அதை உணர்ந்து அவங்க வாழ்க்கைய வாழ ஆரம்பிக்க வேண்டும்….. அது என்று நடக்குதோ….. அன்றைக்கு”‘ என்று முடித்தார்

--------------

தீக்‌ஷாவை தொலைவில் இருந்தே,…… அவள் அறியா வண்ணம் பார்க்கும் வழக்கத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டான் விஜய்…..

முதலில் போல் இல்லாமல் தீக்‌ஷா கலகலப்பாக பேச ஆரம்பித்து இருந்தாலும்….. அவளோடு யாராவது இருக்கும் போதே அவள் அப்படி இருந்தாள்…. தனிமையில் ஏதையோ இழந்தது போல் தேடுவதை போல் இருந்த மன உணர்வை அவளால் தடுக்க முடியாமல் போக… தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கூட அது ஏன் என்று தீக்‌ஷா கேட்டாள்…

அந்த மாதிரியான சமயங்களில்…. உட்கொள்ளும் மாத்திரைகளையும் அவர் கொடுக்க…. நாட்களை எப்படியோ தள்ளிக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா…

இதற்கிடையே தன்னை வந்து அடிக்கடி பார்த்து போகும் யுகி, சுரேந்தர், மற்றும் ராதாவின் பெற்றோர் அனைவரிடமும் மனதில் எதுவும் இல்லாமல் கலகலப்பாகவே பேசினாள்… விஜய்யை அவள் தேடவும் இல்லை…. அவனைப் பற்றி கேட்கவும் இல்லை…..

யுகியிடம் பேசும் போது கூட….. மறந்தும் விஜய்யைப் பறி எந்த விசயமும் வராமல் பார்த்துக் கொண்டாள்…

சுனந்தாவை அடிக்கடி வர வைத்து தன்னோடு வைத்துக் கொண்ட தீக்‌ஷாவுக்கு… தனக்கு மிகவும் பிரியமான தன் அண்ணன் மகளை மறந்து போய் விட்டோமே என்றுதான் அவ்வப்போது தன் தாயிடம் சொல்லி மனம் கலங்குவாள்….

அன்றும் சுனந்தாவை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தவள்….. யுகி மற்றும் ராதாவோடு பேசிக் கொண்டிருந்தாள்… அப்போதுதான் அறையினுள் நுழைந்த முருகேசனைக் கவனித்தாள்….

முருகேசன் , காத்தமுத்து இருவரையும் பார்த்த தீக்‌ஷாவுக்கு அவர்களைப் பார்த்த ஞாபகமே இல்ல என்பதை உறுதி செய்த விஜய்….. இருவரையும் அவள் முன் நடமாட விட்டான்….

ஆனால் சக்தியின் பெற்றோர்களிடம் மட்டும் மறுத்து விட்டான்…. அவர்கள் யாரென்று சொல்லி… அதைக் கேட்கும் நிலைக்கு இன்னும் அவள் பக்குவப்படவில்லை… அது மட்டும் இல்லாமல் ஏதாவது தீக்‌ஷா பேசி விட்டால்…. இருக்கும் சூழ்னிலையில் அதுவும் கஷ்டம் என்று சக்தியின் பெற்றோர்களை அப்போதைக்கு அனுமதிக்க மறுத்து விட்டான்…

தீக்‌ஷாவின் அருகில் இல்லை என்றாலும்… அவளைச் சுற்றி வேறு யாரும்… தீக்‌ஷாவைப் பாதிக்கும் எதையும் நினைவுபடுத்தா வண்ணம் பார்த்துக் கொண்டான் விஜய்…

முருகேசன் உணவு கொண்டு வரும்போதெல்லாம் அவனைப் பற்றி கேட்க நினைப்பாள்.. விட்டு விடுவாள்… அன்றோ…. ஜெயந்தியிடம்

“யாரும்மா இது… புதுசா இருக்காங்க…” என்று சந்தேகத்துடன் இழுக்க…

ஜெயந்தி பதில் சொல்லும் முன்னே முருகேசனே பேசினான் …

“நான் உங்க வீட்டு வாட்ச்மேன்…… தங்கச்சி” என்று வேகமாய்ச் சொல்ல…

”புது வாட்ச்மேனா…” என்று இழுத்தவள்….

சந்தோசமாய்…

“அம்மா… நாம வேற வீட்டுக்கு போய்ட்டோமா….” என்று கட்டி அணைத்து துள்ள…

ராதாவும் யுகியும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டனர்…

ஜெயந்தி தயங்கியபடி…

“இல்லடா….அங்கேயேதான் இருக்கோம்……..” என்று எச்சில் விழுங்கிப் பேச

“ஏம்மா………… உங்களுக்கு இவ்வளோ பட்டும் திருந்தலையா…. இல்லை இந்த சுக போக வாழ்க்கைய விட்டு போக மனசில்லையா…. அவன் அவ்வளவு அவமானப்படுத்தியும் என்று ஆரம்பித்தவள்…

யுகி மற்றும் ராதா இருப்பதை உணர்ந்தவள்… தன்னை அடக்கிக் கொண்டவள்…

எரிச்சலுடன்…

“ஏதாவது மாத்திரை இருக்கா…. போட்டுட்டு நிம்மதியா கண்ண மூடறேன்…. கண்டதையெல்லாம் நினைக்கிறதுக்கு…. தூங்குவது எவ்வளாவோ பெட்டர்…. வைஜெயந்தி உன் புள்ள வந்தா அவனுக்கு இருக்கு கச்சேரி….” என்ற போதே தீபனும் வர….

”என்ன தீக்‌ஷா…. என்ன சத்தம் போட்டுட்டு இருக்க” என்று கேட்டபடியே வேறு வர….

”ஒண்ணுமில்லை…. பாசமலர் அண்ணனை என் கண்ணு தேடுச்சு… அதுதான்” என்று நொடித்தவள்… வேறு எதுவும் பேசவில்லை…

பேசினால் விருமாண்டியைப் பற்றி வார்த்தைகளை விடுவாள்… அது கண்டிப்பாக யுகியையும் தன் அண்ணியையும் பாதிக்கும் என்று அமைதி ஆனாள்….

யுகியும் ராதாவும் முகம் கோணுவதை அவளால் தாங்க முடியாது… அதனால் அப்போதைய விவாதத்தை முடித்தவளுக்கு…. வீட்டிற்கு போவதே பிடிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்… ஏன் தன் வீட்டினர் வீட்டை மாற்ற வில்லை என்ற புது ஆராய்ச்சியில் இறங்க… தீபன் அதற்கெல்லாம் விடாமல்…

“இன்னைக்கு நீ உயிரோட இருக்க காரணமே ராதாவோட அண்ணன் தான்…. தப்பு செய்தார் தான்… அதற்கு வருந்தி மன்னிப்பும் கேட்டுட்டார்மா” என்று விஜய்யை அவள் மனதில் நல்லவிதமாய் பதிய வைக்க முயன்றான் தீபன்…

அதையெல்லாம் விட்டு விட்டாள் தீக்‌ஷா…

“ஏன்….. என்னைக் ஹாஸ்பிட்டல்ல வச்சு பார்க்கக் கூட உனக்கு வசதி இல்லையா ….. தப்பு செஞ்சதுனாலதான என்னை பார்க்க கூட வர முடியலயா…. தப்பு பண்ணிட்டோம்னு ஃபீலெல்லாம் பண்றாரா அந்த விருமாண்டி…”. என்றவள்…

“யுகி நீ கெளம்பு….. அண்ணி நீங்களும் கெளம்புங்க…” என்று சுனந்தாவை கொடுத்து போகச் சொல்ல….

தீபன் சுதாரித்து…. ”நானும் போக வேண்டும் தீக்‌ஷா… நாளைக்கு உனக்கு டிஸ்சார்ஜ் அதுனாலதாண்டா” என்றபடி வெளியேறியவனை கசந்த பார்வையுடன் எதிர்கொண்டவள்… ஜெயந்தியைப் பார்த்து முறைத்து விட்டு… பேசாமல் படுக்க…. மாத்திரையை நீட்டினாள் அவள் அன்னை…

அவள் இருந்த ஆத்திரத்தில்… மாத்திரையை வாங்கி தூர எறிந்தவள்…..

இதை மட்டும் தான் தூக்கி எறிய முடியும் என்னால…. உங்கள எல்லாம் தூக்கி எறிய மனசு வரல… அதுதான் இதையாவது… தூக்கி எறிஞ்சு என் மனசை தேத்திக்கிறேன்…. மகன் சந்தோசமா வாழ்ந்தா போதும்னு நினைச்சுட்டீங்க அப்படித்தானேம்மா…. என்று பொருமியவள்…

”விஜய்……..” என்று ஆரம்பித்து ஜெயந்தி ஏதோ பேச ஆரம்பிக்க…. உடனே காதை மூடிய தீக்‌ஷா

“தயவுசெஞ்சு அவனப் பத்தி பேசி என்னை நோகடிக்காதீங்கம்மா…. என்னை விட்ருங்க… ப்ளீஸ்” என்று கண்களை மூடியவளை…. வேதனையுடன் பார்த்தாள் ஜெயந்தி….

-----------

அடுத்த நாள் காலை தீக்‌ஷாவுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் எடுக்கப்பட….. தீக்‌ஷாவும் அதில் பிஸி ஆகி விட்டாள்…

எல்லாம் முடிந்து தலைமை மருத்துவரின்… அறைக்குள் இருந்தாள் தீக்‌ஷா…. அங்கு உள்ளறையில் அவள் இருக்க…. விஜய் அதை அறியாமல் அவரின் அறைக்குச் செல்ல…. மருத்துவர்…. தீக்‌ஷா இருக்கும் விபரம் சொல்லும் முன்னே தீக்‌ஷாவும் வெளியே வர….

விஜய்க்கு அவளைப் பார்த்து என்ன விதமான உணர்ச்சியைக் காண்பிப்பது என்று தெரியவில்லை…. சிரித்தும் சிரிக்காமலும் அவளைப் பார்க்க…

அந்த மருத்துவர் தான் நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு…

“உட்காரும்மா… உன்னோட ரிப்போர்ட்ஸ் தான்…. விஜய் வாங்க வந்திருக்கிறார்…. என்றபடி…. நர்சிடம் அவளை அங்கிருந்து அழைத்துப் போகச் சொல்ல….. தீக்‌ஷா அங்கு எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்….

ஆனால் வெளியிலேயே விஜய் வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தாள்…. “இவன் எதுக்கு என் ரிப்போர்ட்டை வாங்க வந்திருக்கான்…. வரட்டும்” என்ற ஆத்திரத்தோடு…

விஜய் மருத்துவரின் ஆலோசனை எல்லாம் கேட்டபடி….அடுத்து ஒரு அரை மணி நேரத்தில் வெளியே வர… தீக்‌ஷா அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன்… அவளை விட்டுப் போக மனம் இல்லாமல்…

அவளின் அருகே வந்து….

“நீ ஏன் இங்க வெயிட் பண்ற… நான் பில் கட்டிட்டு வருகிறேன்…. நீ ருமுக்கு போ” என்று அவளைப் பார்த்தும் பார்க்காமலும் பேசியவன்…

“ஜெயந்திக்கு போன் செய்து… ”அத்தை…. தீக்‌ஷாவை தனியா விட்டுட்டு என்ன பண்றீங்க” என்ற ஜெயந்தியை சாட…. அதைப் பார்த்த தீக்‌ஷா

இதழைச் சுழித்தாள் தீக்‌ஷா…

விஜய் போனை வைத்த உடன் கை நீட்டினாள்… ரிப்போர்ட்டைத் தருமாறு….

விஜய் முதலில் அவள் எதற்கு கை நீட்டுகிறான் என்று தெரியாமல் விழித்தவன்…. புருவம் சுருக்க…

“என் ரிப்போர்ட்…” என்று சுட்டிக் காட்ட…

“அது எதுக்கு…. நான் கொண்டு வருகிறேன் …. நீ போ தீக்‌ஷா” என்றவனிடம்…

“ஹலோ… என் ரிப்போர்ட் அது…. கொடுங்க” என்று பிடிவாதமாய் நிற்க…

“தீக்‌ஷா…. பிடிவாதம் பிடிக்காத….போ….” என்க…. அவளோ அதை எட்டிப் பறிக்க முயற்சித்தாள்

ஃபைலில் இருந்த டாக்குமெண்ட்ஸெல்லாம் மிஸ்ஸஸ். தீக்‌ஷா விஜயேந்தர்…. என்று கொடுக்கப்பட்டிருந்தது…. அதனால் விஜய்க்கு முகம் வெளிறியது…

“தீக்‌ஷா” என்று பல்லைக் கடித்தான் விஜய்…அதில் உரிமையும் கோபமும் சரிவிகிதத்தில் இருக்க….

”என் பேரைச் சொல்லாதடா….. “ என்றவளின் உக்கிரமான வார்த்தையில்…. துடித்து நிமிர்ந்தான்….

”என்ன பார்க்கிற…. என் அண்ணியோட அண்ணன்ற மரியாதை எல்லாம் எப்பவோ போய்டுச்சு… தேவையில்லாமல் என் விசயத்தில் தலையிட்ட…. “ விரல் நீட்டி எச்சரிக்க…

விஜய்க்கு தலை சுற்றியது… ஏதோ சரித்திரம் மீண்டும் திரும்புவது போல….

இருந்தும் தன்னைச் சமாளித்தவன்….

வேகமாய் ரிப்போர்ட்டைத் தன்புறம் இழுத்தபடி…

“உன் பேர் சொல்லக் கூடாது அவ்ளோதானே… சரி சொல்ல வில்லை…” என்று முன்னே போக….

வேகமாய் அவன் முன் நின்றாள்…

“ரிப்போர்ட்டைக் குடுடா” பத்ரகாளியாய் தீக்‌ஷா நிற்க…..

விஜய் தனக்குள் மூச்சை இழுத்துவிட்டவன்…..

“ஏற்கனவே என் கூட மோதி என்ன ஆனதுனு ஞாபகம் இருக்குதானே… என்றவன்…. இகழ்ச்சியாக..

”அதுமட்டும் தானே என்னைப் பற்றி உனக்கு ஞாபகம் இருக்கு….. வழிய விடு…. என்று சொல்லிவிட்டு… அவள் திகைப்போடு இருக்கும் போதே… அதைப் பயன்படுத்தி…. வேகமாய் அவளை விட்டு நகர்ந்தான்…

விஜய்யும் அந்த நிகழ்வை இழுக்க விரும்பவில்லை தான்…. ரிப்போர்ட்ஸை அவள் கைப்பற்றாமலும்… அந்த லாபியில் இருவரும் வாக்குவாதம் நடத்தும் நிலை பிடிக்காமலும்…. வேறு வழி இன்றி சொல்லி விட்டு அவளை விட்டு அகன்றவன்…தீபனிடம் சொல்லி…… அவளை அறைக்குக் கூட்டிச் செல்லச் சொல்லியும் சென்றான்………..

ஒருபுறம் தீக்‌ஷா….. தன் வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருக்க…. விஜய்யிடம் , கலைச்செல்வியும் ராகவேந்தர் வந்தனர்….

”விஜய் நீயும் எங்க கூட இன்னைக்கு வருகிறாய் தானே…” கலைச்செல்வி ஆவலாய்க் கேட்க…

மறுப்பாய் தலை அசைத்தான் விஜய்….

இதுவரை பொறுமையாய் இருந்த ராகவேந்தர் பொங்கி விட்டார்…

“என்னடா…. என்ன…. எதுவும் கேட்க கூடாது… நம்ம பையனுக்கு எல்லாம் தெரியும்னு ஒதுங்கி இருந்தா இஷ்ட்டத்துக்கு ஆட்டம் போடுற… இப்போ நீ வீட்டுக்கு வரல…. தீக்‌ஷாகிட்ட எல்லா விசயத்தையும் சொல்லி உன்கூட வர வச்சுடுவேன்… உனக்கு உன் பொண்டாட்டி கூட வரணும் அவ்வளவுதானே…” என்று சத்தம் போட ஆரம்பிக்க…

“அப்பா… நீங்க கூட என்னை படுத்தாதீங்க” என்று கெஞ்ச ஆரம்பிக்க…. அவன் பெற்றோரோ விடாப்பிடியாய் நிற்க… வேறு வழியின்றி விஜய்யும் தன் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தான்…

கிளம்பும் முன்னர்…. விஜய் ஜெயந்தியிடமும் வைத்தீஸ்வரனிடமும் வந்தவன்,…..

“அத்தை…. உங்க பொண்ணு தெரிஞ்சோ தெரியாமலோ தாலிய கழட்டி வீசிட்டா…. அது கூட நல்லதுக்குதான்…. இத அவ கழுத்தில போட்டு விட்ருங்க…. என்று அவள் கழுத்தில் அவள் அணிவித்த அந்த ஜெயினை நீட்ட….. அதில் VD என்ற தங்கத்தில் பொறிக்கப்பட்ட டாலருடன் இருந்த்து அந்த சங்கிலி…

வைத்தீஸ்வரன்…. வேகமாய்..

“அவ தூங்கும் போது நீங்களே போட்டு விடுங்க தம்பி’” என்று சொல்ல…

“ப்ச்ச்…… அப்படி போட்டா மட்டும் என்ன ஆகப் போகுது…. இதோட மதிப்பு உங்க பொண்ணா இப்போ இருக்கிற அவளுக்கு தெரியாது… ஆனால் என் மனைவியா அவளுக்கு தெரியும்… “ என்றவன்

“சரி லேட்டாகிருச்சு…. கிளம்பணும்… “ என்று சொல்லிக் கொண்டு கிளம்ப…..

“தம்பி… என்ன சொல்லி இதை அவகிட்ட கொடுப்பேன்….. என்று ஜெயந்தி கேள்வியாய்க் கேட்க….

“இந்த ஜெயின்… என் மன திருப்திக்கோ…. இல்லை உங்க பொண்ணு மேல எனக்கு இருக்கிற உரிமையிலோ நான் போடல அத்தை…. கொஞ்ச நாளா… உங்களுக்கு ஒரு சஞ்சலம் வந்திருக்கு… அது உங்க கண்ணுல இருக்கு….. அதைப் போக்கத்தான்… உங்க நம்பிக்கைக்காகத்தான்…. இதைக் கொடுக்கிறேன்…. இதை அவள போட வைக்கிறது உங்க பாடு….. இப்படி எல்லாம் போட்டுதான் அவ என் மனைவின்னு நான் ஞாபகப்படுத்திக்கிற அளவுக்கு நான் அவள விட்டு தள்ளிப் போக.ல…. என்னை விட்டும் அவளும் தள்ளிப் போகல….

சொல்லி விட்டு விஜய் சென்று விட்டான்..

ஜெயந்தி எப்படியோ பாடுபட்டு… அந்த ஜெயினையும் போட்டு விட்டாள்…. அம்மன் சன்னிதியில் வைத்து பூஜை பண்ணிக் கொடுத்தது என்று பொய் சொல்லி… தீக்‌ஷாவின் கழுத்தில் போட்டு விட்டு விட்ட பின்னர்தான் ஜெயந்தி நிம்மதி ஆனாள்,…

ஒருவழியாக 3 மாத மருத்துவமனை வாசம் முடித்தவர்கள்….. அதை விட்டு வீடு திரும்பினர்…

தீக்‌ஷா காரில் தன் பெற்றோரோடு அமர…. தீக்‌ஷா அமர்ந்த பின் அவள் அமர்ந்த காரில் ஏறிய விஜய்….. காத்தமுத்துவை அழைத்து காரினை ஓட்டச் சொல்ல..

தீக்‌ஷா பார்வையால் எரித்தாள்…. விஜய்யை…அல்ல…. தன் பெற்றோரை…

இருந்தும் காரை விட்டு இறங்கும் முட்டாள் தனம் எல்லாம் செய்யாமல்….. அமைதியாக வந்தவள்……

வழக்கம் போல தன் வாய்த் துடுக்கில்….

“நீங்களும் புதுசா… உங்க பேர் என்ன” என்று காத்தமுத்துவைக் கேட்க…

காத்தமுத்து விஜய்யைப் பார்க்க…

விஜய் அவனுக்கு மட்டும் கேட்கும்படி….

“சீக்கிரம் சொல்லுங்க… இல்ல இன்னொரு பேர் வச்சிறப் போற… அது அவளுக்கு தண்ணி பட்ட பாடு” என்று புன்னகையுடன் சொல்ல….

”காத்தமுத்து” என்று வேகமாகய்த் தன் பெயர் சொல்ல…

“ஓ…. என்று இழுத்தவள்… காத்தமுத்துவின் தோற்றத்தை ஆராய்ந்தவள்….

”உங்கள பார்த்தால் டிரைவர் மாதிரியே தெரியல…. என்றவள்…. சீட்டை விட்டு சற்று முன்னோக்கி வந்து…

“டூ இன் ஒன் பர்போஸா….. ட்ரைவர்… அப்புறம்… உங்க பாஸ் ஏதாவது ஆளக் கடத்தனும்ணா அதற்கும் வசதியா ஆள் பார்த்திருக்கார் போல” விஜய்க்கும் கேட்டதுதான்…. பதில் பேசவில்லை….

தன் மனைவியை அவளின் பிறந்த வீட்டில் இறக்கி விட்டவன்….. வீட்டிற்குள் கூட நுழையாமல்…. வந்த துக்கத்தை தனக்குள் அடக்கியவன்… அங்கிருந்து வெளியேறினான்

வெகு நாட்களுக்குப் பிறகு… தன் வீட்டிற்கு வந்தவன்….. தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு… அதற்கு மேல் தன் துக்கத்தை அடக்க முடியவில்லை….

தீக்‌ஷாவின் பிரிவு…. அந்த அறைக்குள் வந்த போதுதான் விஸ்வரூபமாய்த் தாக்க…. அவளின் புடவையை தனது சட்டையோடு சேர்த்து வைத்தவன்… தன் மனைவியாக தீக்‌ஷா தன்னோடு சேரும் நாளுக்காக தவிக்க ஆரம்பித்தான்………………………. வேதனையோடு

2,603 views2 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page