top of page

அன்பே நீ இன்றி-43

அத்தியாயம்:43:

தீக்ஷா வெளியில் அச்சம் சிறிதும் இல்லாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும்…. மனதுக்குள்…. எண்ண ஓட்டங்கள் சுழல ஆரம்பித்தன….. விஜய்க்கு இம்மென்றாலே கோபம் வரும்…….. தீனா தன்னைக் கடத்தியிருக்கிறான் என்று தெரிந்தால்…. என்ன ஆகுமோ… அவனின் காதல் மட்டும் உணர்ந்தவள் அல்ல…. அவனின் கோபமும் இவள் அறிவாள் அல்லவா…

தீனாவின் மேல் இன்னும் கோபம்தான் வளரும் என்று கூட வருத்தம் வந்து விட்டது….தான் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருக்காவிட்டால்…. இந்த சூழ்நிலையே வந்திருக்காது…. இப்போது இந்த ப்ராஜெக்ட் மட்டும் கைவிட்டுப் போனால்…. விஜய்யை நினைக்கவே பயம் வந்து விட்டது…. நம்மை வேறு திட்டித் தொலைப்பானே என்று கூட நினைத்தாள்….

“எல்லாவற்றிலும் விளையாட்டுத்தனம்…. உன்னைக் கல்யாணம் பண்ணி…. என் தொழில் போனதுதான் மிச்சம்னு வேற கத்துவானே…. “ என்று வேறு கலங்கியவள்… அடுத்த நிமிடமே…

“தீக்ஷா உன் வாய் சாமர்த்தியத்தை எல்லாம் காமிச்சு… விருமாண்டிய மலை இறக்கணும்….” என்று தனக்குள் சொல்லி பெருமூச்சு விட்டவள்…

“இனிமேல் கொஞ்சமாவது அவனுக்கு தகுந்த மனைவியாக இருக்க வேண்டும்…. தன் விளையாட்டுத் தனத்தினை எல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்” என்று உறுதி கொண்டவள்….. அமைதியாகவே வந்து கொண்டிருக்க… அப்போது கேக் வேர்ல்ட் அவளைத் தாண்ட……..

சற்று முன் தான் எடுத்த உறுதியை எல்லாம் காற்றில் பறக்க விட்டவளாய்

“அண்ணா அண்ணா.. காரை நிறுத்துங்க” என்று கத்த…….. காரின் வேகம் குறையவில்லை….

“காத்தமுத்து அண்ணா…. உங்களுக்கு காது கேக்காதா” என்று சத்தமாகச் சொல்ல…..

காத்தமுத்து என்று தீக்ஷாவால் நாமகரணம் சூட்டப்பட்டவன்………. திடுக்கிட்டான் தான் ஆனாலும்…. காரை நிறுத்தாமல் வர….

“அந்த கடையில எனக்கு ஒண்ணு வாங்கனும்…. “ என்று வேகமாய்க் கண்ணாடியைப் பார்த்துச் சொல்ல…. காரின் வேகம் குறைந்தது….

அவனின் வேகம் குறைந்ததைப் பார்த்தவன்…

“எனக்கு நாளைக்கு பிறந்த நாள்… ஒரு பிறந்த நாள் கூட கேக் வெட்டாமல் விட்டதில்லை…. இன்னைக்கு பாருங்க இப்படி மாட்டிக்கிட்டேன்… யாரைக் கேட்டு இன்னைக்கு கடத்துனீங்க….. நேத்து இல்லை நாளைக்கு கடத்தி இருக்கலாம்ல… சோ தப்பு செஞ்சது நீங்கதான்……… ஒழுங்கா கேக் வாங்கிட்டு வாங்க… நான் வெட்டனும்…. இதுக்குதான் எதைச் செஞ்சாலும் நேரம் காலம் பார்த்து செய்யனும்…. “ என்று தன் பாட்டில் பேசிக் கொண்டே போக…

காத்தமுத்து காரையே நிறுத்தி விட்டான்… கேக் வாங்க அல்ல…

தாங்கள் இருவரும் சரியான நபரைத்தான் கடத்தி வந்திருக்கிறோமா என்று அவனுக்கே சந்தேகம் முற்றிலும் வர…. தன் சட்டைப் பையில் இருந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தவன்… தீக்ஷா தான் அது உறுதியாக தெரிந்த போதும்…. சந்தேகமாய்க் கேட்டான் அவளிடமே..

“உன் பேரு தீக்சா தானே….” என்றூ கேட்க

“இல்லயே” என்று சட்டென்று சொன்னாள் தீக்ஷா

காத்தமுத்து விழிக்க ஆரம்பிக்க…

“தீக்ஷா…. நாட் தீக்சா…” என்று திருத்த

முறைத்த காத்தமுத்து காரை ஓட்ட ஆரம்பித்தான்…

“நீங்களா என்னைக் கடத்துனீங்க… நானேதானே வந்தேன்…. அதுக்காகவாது … என் பிறந்த நாளைக் கொண்டாடலாம்ல…. ப்ச்ச்… உங்கள என் அண்ணனா நெனச்சுதானே கேட்கிறேன்” பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு பேச… அவனுக்கும் இப்போது ஒரு நெகிழ்வு வர… அதைக் கவனமாக பிடித்துக் கொண்டா தீக்ஷா…

“சொல்லுங்க காத்தமுத்து அண்ணா… என்னைக் கட்டின புண்ணியவான்தான் தான் தொழில் பிராஜெக்ட் முக்கியம்னு போய்ட்டார்…. உங்க தங்கச்சிய பார்த்தா பாவமா இல்லை…. “ என்று உரிமையாகப் பேச…

”ஆமா அது யாரு காத்தமுத்து…” என்று தன் இவன் தன் சந்தேகத்தைக் கேட்டான்…

“ஒரிஜினல் பேர் சொன்னாலே இந்த தீக்ஷா பட்டப் பேர் வைப்பா… நீங்க பேரே சொல்லலை... அதனால நானே உங்களுக்கு பொருத்தமா பேர் வச்சுட்டேன்… இனி நீங்களே உங்க பேர் சொன்னாலும் நான் மாத்த மாட்டேன்… காத்தமுத்து அண்ணா” என்று சொல்ல…

”அப்போ அவனுக்கு….” தன் கூட்டாளியைப் பார்த்து சுட்டிக் கேட்டான்

“அவர் முறுக்கு மீசை வச்சிருக்காரா… அதுனால முருகேசன்….” என்றவள்

”ஷார்ட்டா முருக்குனு கூட சொல்லலாம்… எப்புடி…. சூப்பரா இருக்குல” சத்தம் குறைத்து பெருமையாகச் சொல்ல…. காத்தமுத்து தாங்க முடியாமல் சிரிக்க ஆரம்பிக்க……

“சூப்பர் தங்கச்சி……. இப்போ பாரு” என்றபடி….

முருகேசன் என்று இவனும் அழைத்தான்… விபரத்தைச் சொல்ல….

தீக்ஷாவின் பைக்கில் வந்தவன்… முதலில் திகைத்தாலும்…. சரி இவன் தன் பேரை இனி இவள் முன்னால் இப்படித்தான் கூப்பிடுவான் போல… என்று பேர் காரணத்தை விட்டவன்….கேக் வாங்கி வரச்சொன்னதில் கோபமாகி….. காத்தமுத்துவை திட்டி தீர்த்து விட்டான்…

“காசு யாருடா… உன் அப்பனா வந்து கொடுப்பான்….. நாம அந்தப் பொண்ணைக் கடத்தி இருகிறோம்…. ஞாபகம் இருக்கா” என்று பைக்கில் இருந்தபடியே… கார் சன்னலில் அருகில் வந்து உள் நோக்கி உறும…

“ஹலோ நீங்க கடத்தல… இந்த தீக்ஷாவ வந்துருக்கா… அண்ணே சொல்லுங்கண்ணே…” என்றவள்

“காசு என்னைக் கடத்தச் சொன்ன தீனா தருவான் வாங்கிகங்க… விஜய் மனைவினா சும்மாவா…. பட்ஜெட் கொஞ்சம் அதிகமாத்தான் ஆகும் பாஸ்” என்ற அவள் சொன்ன போது…

”தீனாவா அது யாரு…” என்று காத்தமுத்துவும்…. முருகேசனும் புரியாமல் பார்வை பார்க்க..

“டேய் வாங்கிட்டு வாடா….“ என்று காத்தமுத்து சொல்லி விட….

முருகேசன் இறங்கினான்…

அப்போது… தனக்கு பிடித்த ஃப்ளேவர் பெயர் சொல்லி அதை வாங்கி வருமாறு தீக்ஷா சொல்ல…. முருகேசன்…. அவளை முறைக்க வில்லை… ஆனால் காத்தமுத்துவைப் பார்த்து உறும… தீக்ஷாவோ…. அதற்கெல்லாம் கலங்க வில்லை…..

“இதைவிடவெல்லாம் நான் பார்த்துட்டேன் என் விருமாண்டியிடம்” என்ற ரேஞ்சில் இருக்க…

“டேய்….. அந்த ஐட்டம் இல்லேண்ணா… திரும்பி வந்துருவேன்… வாங்கிட்டு வருவதே அதிகம்… இந்தப் பொண்ணு என்னடான்ன… இந்தப் பேச்சு பேசுது” என்று சொல்ல… அவனின் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல்

“அண்ணா உங்களுக்கு பிடிச்ச கேக் எது சொல்லுங்க….“ என்றதும் காத்தமுத்து சொல்ல. முருகேசன் முகம் இன்னும் கொடுரமாக மாறியது….…

இப்போது தீக்ஷா…..

“உங்களுக்கு என்ன பிடிக்கும்…“ என்று முருகேசனைப் பார்க்க… அவன் பதில் சொல்லாமல் இருக்க… தோளைக் குலுக்கியபடி…. “ஓகே…. முதல் சாய்ஸ்… என்னோடது… ரெண்டாவது ஜாய்ஸ் முருக்கு அண்ணாவோட சாய்ஸ்… மூணாவது காத்தா அண்ணாவோட ஜாய்ஸ்.. போய் வாங்கிட்டு வாங்க… நம்ம 3 பேருக்கும் பிடிச்ச அயிட்டம் ஒண்ணு கூட இல்லைனா…. இந்தக் கடையே வேண்டாம்… நாம வேற கடை பார்த்துப்போம்” - தீக்ஷா பெரிய நாட்டாமை போல முடித்து வைக்க

முருகேசன் அசந்தே போனான்…

“அப்போ கூட கேக் வேண்டாம்னு சொல்லுதா இந்த பொண்ணு” என்று யோசித்தபடி… கடைக்குள் நுழைய…. இங்கோ காத்தமுத்து உம்மென்று அமர்ந்திருந்தான்..

”ஏன் இப்டி பண்ணுன…. நான் தானே உனக்கு கேக் வாங்கிட்டு வரச் சொன்னேன்… கடைசி ஜாய்சா என்னைத் தள்ளிட்ட” என்று தான் யார்… என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து…. தன் குமுறலைக் கொட்ட.. சிரித்த தீக்ஷா

“அய்யோ அண்ணா…. அது ஏன்னா… வாங்கப் போறது அவர்தானே…. அதுனால அப்படி சொன்னேன்…” என்றவள்…

ரகசியம் கூறுவது போல்…

”எல்லா வகையும் இருந்தாலும்…. அவருக்கு பிடிச்ச ஐட்டம் தான் வாங்கிட்டு வருவாரு பாருங்க… எனக்கு சைக்காலஜி தெரியும்….“ என்ற போதே முருகேசனும் வந்திருந்தான்…

”இந்த ஃப்ளேவர்தான் இருக்குனு சொன்னாங்க” என்று அவனுக்கு பிடித்த ஃப்ளேவரின் பெயரைச் சொல்லியபடி…. அலட்சியமாய் காரின் முன் சீட்டில் வைக்க…. காத்தமுத்து தீக்ஷாவைப் பார்த்து புன்னகைக்க… தீக்ஷா வேகமாய் ஹைஃபை கொடுப்பது போல் அவன் முன்.. கைகள் கட்டியிருந்த நிலையிலே கொடுத்தபடி…

”சொன்னேன்ல….. எப்புடி” என்று புருவம் உயர்த்த

“எப்படி தங்கச்சி…” என்றான் காத்தமுத்து வாய்விட்டே

முருகேசன் ஆச்சரியமாகப் பார்த்தான்… இவன் தங்கச்சி என்று அழைத்ததும்…. இருந்தும் எதுவும் பேசாமல் இருக்க….

முருகேசனுக்கும் ஐஸ் வைத்தாள் தீக்ஷா…

“நீங்க ரொம்ப ஸ்பெஷல்ண்ணா….” என்ற போது முருகேசன் புரியாமல் பார்க்க…

“என் பிங்கிய தொடுறதுக்கு என் இந்தர்க்கு கூட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஆனால் நீங்க…. எங்கயோ போய்ட்டீங்க…. “ என்ற போது…. முருகேசனின் முகத்திலுல் லேசாய் இதம் பரவ…. நகர்ந்தான்…. அவர்களின் பயணம் தொடர்ந்தது…..

தீக்ஷாவுக்கோ இந்தர் என்று சொன்னதும் அவள் மனம் அவளின் இந்தரை நோக்கிச் செல்ல….முகம் வாட்டமாய் மாறியது…

“எல்லோரும் என்னைத் தேடிட்டு இருப்பாங்களோ……… இந்நேரம் விஜய் அத்தான் காதுக்கு போயிருக்கும்…..“ மனம் தவிக்க ஆரம்பிக்க…. மௌனமானாள் தீக்ஷா………….. இப்போது காத்தமுத்து பேசிக் கொண்டே வர… சிறிது நேரத்தில் தன் நிலை தெளிந்து தீக்ஷாவும் அவனோடு பேசியபடி வந்தவள்…. ஓரளவு அவனைப் பற்றி தெரிந்து கொண்டாள்… அவனோடு வந்த முருகேசனையும் தெரிந்து கொண்டாள்…. இதில் அவர்களின் இயற் பெயர்களும் அறிந்தாள்தான்….

ஆனாலும் இனிமேல் அதை வைத்தெல்லாம் கூப்பிடுவாளா… நம் நாயகி…. காத்தமுத்து…. முருகேசன் என்பதிலேயே அவள் நிலைத்து நின்று விட்டாள்…. நாமும் நாயகியை பின் தொடர்வோம்….

அடுத்த சில மணி நேரங்களில்…….. அவர்கள் நின்றது சென்னையின் புறநகர் பகுதியைத் தாண்டித்தான்…

மணி இரவு 8 க்கும் மேல் ஆகி இருக்க… தீக்ஷா மிரட்சியான விழிகளுடன் தான் இறங்கினாள்… அதைப் பார்த்த காத்தமுத்துவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது…

“இந்தப் பொண்ணை எதுக்காக கடத்திட்டு வரச் சொல்லிருக்காங்க….” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே முருகேசன் அவனிடம்

“இன்ஃபார்ம் பண்ணிட்டேண்டா…” என்றபடி கதவைத் திறக்க…. காத்தமுத்துவுக்கு தீக்ஷாவைப் பார்க்க பாவமாக இருந்தது…

அவனோ முருகேசனோ….

கட்டளைப்படி, அவர்கள் தொழில் நியாய தர்மப்படி கடத்தி வந்து விட்டார்கள்… இன்னும் சற்று நேரத்தில் அவர்களிடம் ஒப்படைத்தும் விட்டு கிளம்பியும் விடுவர்….

ஆனால் அதன் பிறகு இந்த சிறு பெண்ணை என்ன செய்வார்களோ கலக்கமாக இருந்தது… அவனுக்கே அந்த உணர்வு புதிதுதான்…. எத்தனையோ நபர்களை கடத்தி இருக்கிறான்… இந்த மாதிரி எல்லாம் ஒரு முறை கூட யோசித்தது இல்லை…. இன்று ஏனோ இப்படியெல்லாம் யோசிப்பது அவனுக்கே புது மாதிரியாக இருக்க… அங்கேயே தேங்கி நின்றான் காத்தமுத்து..

முருகேசன் முன்னே செல்ல … காத்தமுத்து காரின் அருகில் நிற்க இருவருக்கும் இடையில் நின்ற தீக்ஷா…. அவனிடம்…

“என்ன உங்களுக்கே பயமா இருக்கா….” என்று காத்தமுத்துவின் அருகில் போய்க் கேலியாகச் சொல்ல….

சட்டென்று முகத்தை இறுக்கமாய் மாற்றிய காத்தமுத்து…. தீக்ஷாவை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்…………

இதுவரை கடத்தியவர்களை எல்லாம் இழுத்துக் கொண்டுதான் போயிருக்கிறான்… முதல் முறை அழைத்துக் கொண்டு போகிறான்… வித்தியாசமாகத்தான் இருந்தது இந்த அனுபவம்……….

சுற்றிலும் வீடு எதுவும் இல்லாமல்…. ஆள் அரவம் இல்லாமல் தன்னந்தனியாக இருந்த அந்த வீட்டினுள் நுழைந்த போதே…. துணுக்கென்று இருந்தது தீக்ஷாவிற்கு…. இதயம் பட படவென்று அடிக்க ஆரம்பிக்க…. இருந்தும் வேறு வழி இல்லையே அவளுக்கு….…..

ஹாலில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது… வேறொன்றுமில்லை… எட்டி அங்கிருந்த அறைகளை நோட்டமிட………. கட்டில் …. நாற்காலி எல்லாம் இருந்தது…….

அருகில் சமையலறை… அங்கேயும் பார்க்க… சாப்பாடு பொட்டலங்கள்…. மது பாட்டில்கள்… அது மட்டுமில்லாமல்………….. விலை மாதுக்களின் வரவும் இருந்தது என்பதை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த பொருட்கள் அவளுக்கு…………….. சொல்லாமல் சொல்ல….

அந்த இடத்தின் தோற்றம்…… பெண்ணாய் தீக்ஷாவின் மனதில் கலவரத்தை உருவாக்க ஆரம்பிக்க…. அவளின் முகத்திலும் பயம் அப்பட்டமாய் வெளியே தெரிய ஆரம்பித்து வெளுக்க ஆரம்பித்தது….

தன் கணவன் வேறு ஊரில் இல்லை என்பதே அவளுக்கு இப்போது பெரும் வருத்தத்தை தர…. அமைதியாக அமர்ந்து விட்டாள்….. தான் இங்கிருந்து வெளியேறும் நிமிடம் உடனே வராதா என்றிருக்க…. கண்ணீர் கசிய ஆரம்பித்தது….…

தன்னைக் கடத்தி இருவரும் பார்க்கும் முன்னரே தன் கைகளால் துடைத்தவளுக்கு………….. அந்த நிலையில் ஒன்று தோன்றியது…

“நல்ல வேளை இவனுங்க முன்னால கைய கட்டினானுங்க…. என் ஆளு மாதிரி பின்னாடி கட்டி என் சாபத்தை வாங்கிக் கட்டிக்கலை… பொழச்சானுங்க” என்பதுதான் அது..

அதுவரை பேசிக் கொண்டிருந்த தீக்ஷா சட்டென்று அமைதியானதை முருகேசன் உணரவில்லை… ஆனால் காத்தமுத்து உணர..

“இதெல்லாம் பார்த்து பயந்துட்டியா என்ன………இப்போதான் எங்களப் பார்த்தால் ரவுடி மாதிரி தெரியுதா “ என்று சிரிக்க…

அவனிடம் பேசாமல்….. தீக்ஷா முருகேசனிடம்….

”எத்தனை மணி நேரம் இங்க வச்சுருப்பீங்க……….. எனக்கு இந்த இடமே பிடிக்கலை….” உண்மையிலேயே பீதியாகக் கேட்டாள்….

”ஏன் மேடமுக்கு ஸ்டார் ஹோட்டல் தான் வேணுமா…” நக்கலாய் கேட்டான் முருகேசன்

மௌனித்தாள் தீக்ஷா…..பதில் சொல்ல வில்லை…. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது…. கடைசியாய் அவளது தாய் வீட்டில் தண்ணீர் அருந்தியதுதான்………. ஆனால் வீட்டுக்கு பத்திரமாய்ப் போய் சேரும்வரை…. இந்த இடத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது என்று தீர்மானத்துடன் தான் இருந்தாள்…..

அவர்கள் கொடுத்த சாப்பாட்டைக் கூட மறுத்து விட்டாள் தீக்ஷா…,… அவளுக்கு பசியில் மயக்கமே வருவது போல் தான் இருந்தது… இருந்தும் வீம்பாய் இருந்தாள்….

உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்தது போல் இருக்க….. மனம் கணவனின் அருகாமையைத் தேடியது…. அதில் முகம் வாட்டம் அதிகம் ஆகியது தீக்ஷாவுக்கு…………….

காத்தமுத்து முருகேசனை அழைத்துக் கொண்டு தனியே சென்றான்….

”டேய் பாவமா இருக்குடா அந்தப் பொண்ணப் பார்த்தா…. நாளைக்கு வீட்டுக்கு போயிரலாமானு கேட்குது…. யாரோ தீனான்ற பேர்லாம் சொல்லுது….. யாருடா கடத்தச் சொன்னது…. “

”தெரியல… இப்போ வந்துட்டு இருக்காங்களாம்….. அவங்ககிட்ட ஒப்ப்படைச்சுட்டு நாம கிளம்பனும்…” என்ற போதே…

“அவனுங்க யார்டா… நம்ம ஆளுங்களா… என்று இன்னும் விசாரித்தான் காத்தமுத்து…

உதடைப் பிதுக்கியபடி…

“காச வாங்கிட்டு இடத்தை காலி பண்ண வேண்டியதுதான் நம்ம வேலை… நீ ஏண்டா இந்த அளவுக்கு உருகுற” என்றபடி உள்ளே போக….

காத்தமுத்துவுக்கோ

தீக்ஷாவை வருபவர்களிடம் விட்டுப் போக மனமே வர வில்லை…. என்ன செய்யப் போகிறார்களோ என்று அப்போதே மனம் கணக்கிடத் தொடங்க ஆரம்பிக்க…. முதலில் இந்தப் பெண்ணின் விபரங்களை கேட்டு வைப்போம் என்று தீக்ஷாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்…

முருகேசனோ………….. எதைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளறைக்குள் சென்று விட்டான்….

”உன் வீட்டுக்காரர் பேர் என்னம்மா…” அக்கறையாய்க் கேட்டான் காத்தமுத்து……………

”விஜயேந்தர்…….”. என்று ஒற்றை வார்த்தை மட்டும் தான் வந்தது…. காரணம் அவளால் பேசவே முடியவில்லை என்பதுதான் நிஜம்….….

அவளின் நிலை தாங்க முடியாமல்…. தண்ணீர் பாட்டிலை கொடுத்த காத்தமுத்து…

“சத்தியமா இதில் எல்லாம் ஒண்ணும் கலக்கலம்மா.. என்னை உன் அண்ணனா நெனச்சுக்க….” என்றபோது சிரித்தவள்….

”பரவாயில்லண்ணா….. எனக்கு எதுவும் வே……..ண்டாம்……….. சமாளிச்சு…..ருவேன்….” என்ற போதே அவள் குரல் தடுமாறியது….

”மயங்கிருவ போல இருக்குமா…” என்றபோதே… அவளுக்கு அப்படித்தான் இருந்தது…

வேகமாய் தன்னைச் சுதாரித்தவள்..தன் கவனத்தை வேறெதிலாவாது மூழ்கடிக்க விரும்பியவள்..

“அண்ணா ஜெயிலுக்குலாம் போயிருக்கீங்கள்ள…. போரடிக்கும் போது என்ன விளையாடுவீங்க…. “ என்றபடி அவனோடு மீண்டும் பேச ஆரம்பிக்க.. பழைய தீக்ஷாவாக வந்திருந்தாள்..

காத்தமுத்துவும் அவளின் யோசனைப்படி…. ஆடுபுலி ஆட்டம் என்று ஏதோ காய்களை வைத்து சொல்லிக் கொடுக்க…. அதில் தீக்ஷா ஆர்வமாய் தன்னை மூழ்கடித்தாள்………….

“உன் வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்திலதான் உன்னைக் கடத்தச் சொல்லி இருக்காங்களா” என்றபடி இப்போது காத்தமுத்து தொடர்ந்தான்..

விளையாடில் கவனம் வைத்தபடியே இவளும் பேச ஆரம்பித்தாள்….

“ஹ்ம்ம்ம்ம்………… அவருக்கு தொழில்ல நிறைய போட்டி.ண்ணா……இப்போ முக்கியமான ஒரு ப்ராஜெக்ட்…. அதுனாலதான் என்னைக் கடத்துனா அவர் விலகிடுவார்னு…. கடத்தியிருக்காங்க போல….. ஆனால் அவருக்கு தேவைதான் இது……….. இப்போ தெரியும் கடத்துனவங்களச் சார்ந்தவங்க….. எந்த மாதிரி கஷ்டப்படுவாங்கனு… ஈசியா சொன்னார்ல…. அனுபவிக்கட்டும்”” என்று தனக்குள் புலம்பியவள்..

“ப்ச்ச்… பாவம் என் இந்தர்……. எவ்வளவு கஷ்டப்படுறாரோ…. ஊரில் கூட இல்லை…. “ என்று கணவனை நினைத்து மருகியவள்…

“என் மேல அவருக்கு பிரியம் அதிகம்…. கோபம்.. பிடிவாதம்…. பாசம்…. போட்டி…. ஈகோ… எல்லாமே எக்ஸ்ட்ரீம் லெவல் தான்… என் மேல இருக்கிற காதலும்……” சிரித்தபடி தன் கணவனின் நேசத்தினை நினைத்தவள்…. விளையாட்டைக் கூட கோட்டை விட்டு விட்டாள்…………

சில மணித்துளிகள் கடக்க…

மணி என்ன என்று தீக்ஷா கேட்க…. 11.50 என்று பதில் சொன்ன காத்தமுத்து

“கேக் வெட்டலாமா…. அத சாப்பிடுவேல்ல…. “ என்று அக்கறையாய்க் கேட்டவனைப் பார்த்து…. குறும்பாய்ச் சிரித்தவள்…

அப்போது முருகேசனும் அவர்கள் இருந்த முன்னறைக்கு வர…..

“இவர் தொழிலுக்கு புதுசா என்ன…… கடத்திட்டு வந்தவங்ககிட்ட பேசற மாதிரியே தெரியலயே… தொழிலுக்கு பழகனும் போல இருக்கே” தான் இருந்த நிலையிலும் கிண்டலடிக்க… காத்தமுத்து முருகேசனைப் பார்க்க.

அவனோ…. இது உனக்குத் தேவைதான் என்பது போல் காத்தமுத்துவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தபடி… தீக்ஷாவின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான்…………

தீக்ஷா இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி…. கேக்கை வெட்ட ஆரம்பிக்க…

பேர்த் டே சாங் பாடத் தெரியுமா…. 5 4 3 2 1 கவுண்டவுன் சொல்வேன் பாடுங்க… என்றபடி………… அவர்களையும் பாடவைத்து கேக்கை வெட்டியவள்…

முதல் பீஸ்…….. என் விருமாண்டி இந்தருக்கு………… 2 வது நிறுத்தி என்று இருவரையும் பார்க்க……… கண் சிமிட்டியபடி …. 2 வது பேர்த்டே பேபி தெ க்ரெட் தீக்ஷா விஜய்க்கு என்று ஒதுக்கியவள்……… 3 வது 4 வது என்னோட புது அண்ணனுங்களுக்கு என்று ஒரே நேரத்தில் கொடுக்க..... அந்த இரும்பு மனிதர்களுக்கும்………கண்களில் நீர் கசிந்தது….

தீக்ஷா வெட்டிய கேக்கையும் சாப்பிடவில்லை……….. இதைக் கவனித்த முருகேசன்… ”இப்போ கூட நம்பல…….. வாய்தான் அண்ணன்னு சொல்லுது…….. அப்படித்தானே…. என்ற போதே கேக் அவள் வாயில் இருக்க…..

முருகேசனும்……..காத்தமுத்துவும் சந்தோசமாய் சிரித்தனர்….

காத்தமுத்து அவளிடம்………..

“ரொம்ப டல் ஆகிட்ட….. ஒரு வாய் சாப்டுமா……” என்றபடி பார்சலை நீட்டியவன்….. உனக்கு சந்தேகம்னா நான் சாப்பிட்டு கூட காண்பிக்கிறேன்… அப்போதாவது நம்புவியா…. என்று கெஞ்சாத குறையாகக் கேட்க….

“இல்லண்ணா………. என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க ஒருவேளை சாப்பிட வில்லை என்றால் ஒண்றும் ஆகாது” என்றாள்…… நாளை வீட்டுக்கு போய் விடலாம் என்ற எண்ணத்தில்..

பின் வேகமாய்

“உடனே அண்ணன் தங்கைனு செண்ட்டி டைலாக்லாம் விடக் கூடாது… தீக்ஷாவுக்கும் செண்டிமெண்ட்டுக்கும் ரொம்ப தூரம்….” என்றவளை சாப்பிட வைக்க முடியாமல் தோற்றனர் இருவரும்….

---

விஜய் கண்டிப்பாக தன்னைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருப்பான் என்று தீக்ஷாவுக்குத் தோன்ற…. அணைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் இருந்த தன் கைப்பையை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்….

அவளின் பார்வை உணர்ந்த முருகேசன்…. “உன் வீட்டுக்காரரு தேடிட்டு இருப்பாருனு ஃபீலிங்க்ஸா” என்று கிண்டல் செய்ய

“பேசுங்க பேசுங்க…. என்கிட்ட ஈசியா பேசுற மாதிரி…. என் இந்தர் கிட்ட பேச முடியாது பாஸ்….. நீங்க மட்டும் கைல மாட்டுனீங்க ரெண்டு பேரும் கைமாதான்…. ஆனால் நான் உங்கள மாட்டி விட மாட்டேன்…..”

”பார்க்கலாம் பார்க்கலாம்” என்றபடி முருகேசன் தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்ய….ரிமோட்டை பறித்து வைத்துக் கொண்டவள்…

உங்க ஃபேவரேட் சேனல் என்ன…. என்று இருவரிடமும் கேட்க… இருவரும் ஆர்வமுடன் சொல்லிவிட்டு அவளைப் பார்க்க…

ஒகே… கண்டிப்பா அதை வைக்க மாட்டா இந்த தீக்ஷா… என்னோட ஃபேவைரைட் மட்டும் தான்…. ஏனென்றால்…. நான்தான் இன்னைக்கு பேர்த்டே பேபி என்று தனக்குப் பிடித்த சேனலை போட ஆரம்பிக்க..

“பாவம் தங்கச்சி அந்த தம்பி” என்று நிஜமாகவே உணர்ந்து சொன்னான் காத்தமுத்து… இத்தனை மணி நேரத்திற்குள்ளாகவே புரிந்து கொண்டு விட்டான் தீக்ஷாவை…..

‘யாரு அவரா…. அவருக்கெல்லாம் என்னை மாதிரி ஆள்தான் கரெக்ட்.. இல்ல…. அவ்ளோதான்… ஆனாலும் பாவம்தான்… என்னயெல்லாம் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்…..” என்று சிரித்தவள்…

“அழுத்தக்காரர்……. வாயத் திறந்து எதையும் சொல்ல மாட்டார்…. பெரிய கெத்தொடவே திரிவார்… இப்போ இந்த நிமிசம் யார்கிட்டயும் மனச திறந்திருக்க மாட்டார்….. துக்கத்தை கூட வெளிய சொல்ல மாட்டார்… சந்தோசமோ அதை விட… கள்ளுளிமங்கன்னு சொல்லலாம் அண்ணன்” அவள் சொன்ன நிமிடங்களில் தான் விஜய் தன் நண்பனிடம் அவள் நினைவில் தனக்குள் உடைந்து கொண்டிருந்தான்

”அவர நாலு வார்த்தை பேச வைக்கிறதுகுள்ள நான் படுற பாடு இருக்கே… ஏதோ இப்போதான் ஆளத் தேத்தி கொண்டு வந்துட்டு இருக்கேன்……..”

கடத்தி வந்த இருவருமோ கதை போல் அவள் சொல்லிக் கொண்டிருந்ததினைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்,….

”ரொம்ப பிரியமோ உன் மேல அந்தத் தம்பிக்கு…” முருகேசன் இழுக்க

”அதை அந்த தம்பிக்கிட்டதான் கேட்கணும்…. கேட்டு சொல்றீங்களா….“ முருகேசன் போலவே சொல்லிக் காட்டி….. கண் சிமிட்டினாள் தீக்ஷா…….

மூவருக்குமே கவனம் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளில் இல்லை… இவள் அவளின் இந்தரைப் பற்றி பேசியதால் அதில் கவனம் வைக்க வில்லை… அவர்கள் இருவரும் இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த்தால் கவனம் வைக்க வில்லை…

“லவ் மேரேஜா…” காத்தமுத்து சந்தேகம் கேட்ட போதே அவன் முகத்தில் அவ்வளவு அபிநயம்….. அவனைப் பார்த்து சிரித்த தீக்ஷா…

“அதுக்கு நீங்க ஏன் இவ்ளோ வெட்கப்படறீங்க…..” என்று அவனை ஓட்ட…. காத்தமுத்து நெளிந்தான்….

“லவ் மேரேஜா…” என்று இழுத்த தீக்ஷா….

“விருமாண்டியும் என்னை லவ் பண்ணி…. மேரேஜ் பண்ணிட்டாலும்….. அட நீங்க வேற….” என்று சலித்தவளாய்…

”அதெல்லாம் பெரிய கதை……….. என் விருமாண்டிய இந்தரா மாத்துறதுக்குள்ள….” என்றவள் அப்போதுதான்…………திரையில் ஓடிய ஃப்ளாஸ் நியூஸை வாசிக்க ஆரம்பித்தாள்…..

“சென்னையிலிருந்து துபாய் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது”…. வாசிக்கும்போதே தீக்ஷாவுக்குள் படபடப்பு ஆரம்பிக்க….. அவளின் பார்வையில் பீதி பரவியது……… அவளின் பார்வை போன திசையில் மற்ற இருவரின் கவனமும் அனிச்சையாய் திரும்பியது….

விஜயேந்தர் சென்ற விமானம் பற்றி விபரம் தெரியவில்லை என்றாலும்…. தீக்ஷாவுக்கு அதிர்ச்சிதான்.. இருந்தும் தன்னைத்தானே சமாளிக்க முயன்றாள்….

வார்த்தைகள் எல்லாம் அவளை விட்டு… போனது போல் உணர்வு…. விபத்து நடந்த விமானத்தில் தன் இந்தர் போயிருந்திருக்க மாட்டான் என்ற ஒரு நம்பிக்கையை தனக்குள் கொண்டு வந்தாள் என்பதை விட… கொண்டு வர முயற்சித்தாள்……………

யாரிடம் கேட்பது… எப்படி உறுதி செய்வது…. மனம் யோசிக்க ஆரம்பிக்க… கண்களில் நீர் ததும்பியது….

எதிலும் வேகம் இருக்கும்…. தீக்ஷாவிடம்… விவேகம் என்பது பெரும்பாலான சமயங்களில் இருக்காது…. ஆனால் இன்று அவளின் குணத்திற்கு மாறாய் நிதானமாய் இருக்க முயற்சி செய்தாள்….. தன்னவன் தன்னைவிட்டு அத்தனை சீக்கிரம் போக மாட்டான் என்ற நம்பிக்கையே அவளது அந்த நிதானத்திற்கு கூட காரணம்….

ஆனாலும் அவளை மீறி படபடப்பும் இருக்க… வேகமாய் தன் கைப்பையை எடுத்தாள்……… இதற்கிடையே… காத்தமுத்து முருகேசன் இருவரும்… நியூஸ் சேனல் மாற்றி பார்க்க ஆரம்பித்தனர்

இவளோ தன் மொபைலை எடுத்து ஆன் செய்ய ஆரம்பித்தாள்…. அப்போது கதவு தட்டும் ஓசை கேட்க முருகேசன் தான் திறந்தான்….

தீக்ஷாவின் கவனம் எல்லாம் அங்கு இல்லை… தன் மொபைலை ஆன் செய்வதிலே இருக்க…

முருகேசனையும்… காத்தமுத்துவையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள் வந்த ஐவரும்…..

வந்திருந்ததில் மூன்று பேர் போதையில் நிதானத்திலே இல்லை….

பணத்தை எடுத்து முருகேசனின் கைகளில் ஒருவன் கொடுக்க, மற்றொருவனோ………… தீக்ஷாவின் அருகில் போய் நின்றிருந்தான்… தீக்ஷாவோ அவனின் அருகாமையையோ… இல்லை அவனின் போதையின் நெடியையோ எதையும் உணரும் நிலையில் இல்லை……….

அவளின் கையைப் பற்றி இழுத்தான் அருகில் வந்தவன்………

அப்போதுதான் தீக்ஷா அங்கிருந்தவர்களைப் பார்த்தாள்…. ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் யோசிக்காமல்……… அவனிடமிருந்து கையைப் பறிக்க முயற்சித்தபடி போனிலேயே கவனம் வைக்க….

அங்கு வந்தவர்களின் நோக்கம் தெளிவாகப் காத்தமுத்துவுக்கு புரிய… பதறி தீக்ஷாவின் அருகில் வந்திருந்தான்…

“இங்க பாருங்க அந்தப் பொண்ணோட புருசன்…. விமான விபத்தில இறந்து போய்ட்டார்னு அந்தப் பொண்ணே மனசொடிஞ்சு போய் இருக்கு…. விட்ருங்கடா” என்று கெஞ்சியவன் அவள் கைகளை அவனிடமிருந்து விடுவிக்க போராட…

தீக்ஷா பட்டென்று நிமிர்ந்து……………

“என் இந்தர் என்னை விட்டு போகலை……….. அப்படி சொல்லாதீங்க…. உங்களுக்கு தெரியுமா அவர் இந்த ஃப்ளைட்ல போனார்னு,… அவர் என்னை விட்டுட்டு போக மாட்டார்” ஆவேசமாகப் பதில் சொன்னவள்… தன் மொபைலில் கைவைக்க போனாள்….

ஆனால் அவனோ காத்தமுத்துவை தள்ளியபடி… மொபைலையும் பறித்து தூர எறிந்தபடி….

“அவ புருசன் போனா என்னடா… நாங்க இருக்கோம் எல்லாத்துக்கும்” என்றபோதுதான் தீக்ஷாவுக்கு தான் எந்த நிலைமையில் நிற்கிறோம் என்று மூளைக்குப் பதிய…. கைகள் நடுங்கியது….

”தன் கணவன் இருக்கும் வரை…. அவன் மூச்சுக் காற்று தன்னைச் சுற்றும் வரை ஆபத்து ஒருபோதும் தன்னை அணுகாது….” என்று எப்போதும் நம்பும் அந்த பேதையின் உள்ளம்… இப்போது தனக்கு வந்த ஆபத்தை தன் கணவனின் உயிரோடு ஒப்பீடு செய்ய ஆரம்பித்த்து,….

”நீங்க இருக்கும் போது எனக்கு ஆபத்து நெருங்காதுதானே அத்தான்….” ஆனால் …. அவள் உள்ளம் தனக்கு வந்த ஆபத்தை எண்ணி… நேரப் போகும் மானபங்கத்தை எண்ணி எல்லாம் துடிக்க வில்லை….

“தன்னவன் தன்னை விட்டு போய் விட்டானோ” என்றுதான் பத பதைத்தது,…. அந்த நினைவே அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க… அசையாமல் நின்றாள்…. காத்த முத்துவும்… முருகேசனும்… வந்த கயவர்களோடு போராடிக் கொண்டிருந்தனர்….

”நீ இங்கயிருந்து போம்மா” என்று அவர்களின் குரல் எல்லாம் அவள் காதில் விழவே இல்லை… ப்ரமை பிடித்தது போல் தீக்ஷா நிற்க…..

அவள் அருகில் நின்றவன்…. காம வெறியோடு தீக்ஷாவின் அருகில் நெருங்கினான்…

தீக்ஷா அவனைப் பார்த்து விலகவில்லை…….. அவளின் நினைவுகள் எல்லாம் தன் கணவனின் நினைவோடு கலந்து போயிருக்க…… அவன் இழுத்துக் கொண்டு போன போதும்……… அவள் எதிர்க்கவில்லை……. அவன் இழுத்த திசைக்கு போய்க் கொண்டிருந்தாள் தன்னை மறந்த நிலையில்………..ஆனால்…அவளின் பார்வை எல்லாம் திரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் வெடித்து சிதறிய காட்சியில் தான் இருந்தது……. அதைப் பார்த்தபடியே நின்றவளை…. அருகில் இருந்த அறையை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போக…. பார்வையின் திசையை மாற்றாமல்…… தன்னை இழுத்தவனைக் கூட உணராமல்… எதிர்க்காமல்…..தீக்ஷா சென்று கொண்டிருக்க….

முருகேசன் தான் சுதாரித்து,…. தன்னோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை தள்ளி விட்டு… தீக்ஷாவின் பின் ஓட ஆரம்பித்தான்… தீக்ஷாவை இழுத்தபடி போனவனிடமிருந்து…. தீக்ஷாவைக் காப்பாற்றி… அவனை அறைக்குள் தள்ளி அறைக்கதவைச் சாத்தியவன்… தீக்ஷாவின் நிலை அறிந்து….

“தீக்ஷா தீக்ஷா” என்று சத்தமாய் அழைக்க…………... அவளோ அதை எல்லாம் உணராமல்

அவளது மொபைலுக்கு உயிர் எப்போது போனது தெரியவில்லை… கீழே சுக்கல் சுக்கலாய் கிடக்க…………அதைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள் குனிந்து…. அதுதான் முக்கியம் என்பது போல…

முருகேசனுக்கு ஒன்றுமே புரியவில்லை… வேறு வழியும் தெரியவில்லை… வேகமாய் தீக்ஷாவையும் கைகளை பற்றியபடி…… அவளது கைப்பையை எடுத்தபடி….

காத்தமுத்துவை அழைத்து…

நான் இந்தப் பொண்ண கூட்டிட்டு போறேன்… நீ எப்படியாவது இங்கயிருந்து வந்திரு..” என்றபடி… வெளியேறினான்…

அங்கிருந்தவர்களைச் சமாளித்து….. அவர்கள் இருவரும் காரில் ஏறவும்…… காத்தமுத்துவும்… அங்கு வர…. சரியாய் இருக்க…

இருவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் காரை வேகமாக எடுக்க…….. கார் அருகில் இருந்த தீக்ஷாவின் ஸ்கூட்டியின் மேல் இடித்து…….. அவளின் வண்டி அவளைப் போலவே நிலைகுலைந்து கீழே விழுந்தது

தீக்ஷாவின் கண்கள் நிலைகுத்திட்டு நின்றன………….. பார்வை அவளின் பிங்கியின் மீது இருக்க…. பதறவில்லை….. துடிக்கவில்லை……….. அவள் மனம்……… அவள் எண்ணமெல்லாம் அவளின் இந்தரிடம் தான் இருந்தது…. முதன் முதலில் இதே போல் நடந்த மோதல் ஆரம்பித்த இடத்தில் இருக்க………… அவளை மறந்து அவளின் எண்ணங்களில் பயணித்துக் கொண்டிருந்தாள்….

காத்தமுத்து விஜய் பில்டர்ஸை நோக்கி காரைச் செலுத்த ஆரம்பித்தான்,,,,, முருகேசன் தீக்ஷாவின் கைப்பையை ஆராய அதில் இன்னொரு போனும் இருக்க….. வேகமாய் ஆன் செய்தான்………. ஆனால் ஆன் மட்டுமே செய்ய முடிந்தது….அதற்கு மேல் அதை உபயோகப்படுத்த பாஸ்வேர்ட் தெரிந்திருந்தால் மட்டுமே முடியும்….

டேய்…. இதுல ஒரு போன் இருக்குடா… ஆனால் பாஸ்வேர்ட் தெரியலடா…..” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே தீக்ஷாவைப் பார்க்க….. தீக்ஷா அதெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை…. வெறித்தபார்வையோடு மட்டுமே வந்தாள்….

முருகேசனால் தாங்கவே முடியவில்லை…

வரும்போது இருந்த உயிர்ப்புடன் இருந்த அவளின் விழிகள்………. இப்போது அதன் ஜீவனை இழந்திருந்தது…

இருவரும்…. முகவரி என்ன…. என்று ஆரம்பித்து என்னென்னவோ கேள்விகள் கேட்க… தீக்ஷாவின் இதழோ அதற்கான மறுமொழிகளை சொல்ல திறக்கவேயில்லை….

தீக்ஷாவோ…………. அவளது நினைவுகளில் புதைய ஆரம்பித்து இருந்தாள்….

அவளது இந்தர்………….. அவளிடம் தன் பார்வையில் தன் காதலை வெளிப்படுத்திய தருணங்களில் இருக்க………. அப்போது முருகேசனின் கையில் இருந்த போன் அலற ஆரம்பிக்க… காத்தமுத்து அவனிடம்

”டேய் எடுத்து பேசுடா…. விஜய் சார்க்கு என்னாச்சுனு கேளு” என்று அவசரப்படுத்த முருகேசன் எடுத்து பேச….. இப்போது தீக்ஷாவின் கண்பாவை லேசாய் அசைந்தது…..

சிக்னல் கிடைக்காமல் அழைப்பு கட் ஆக….

“டேய் கட் ஆகிருச்சுடா” சிக்னல் இல்லை…” என்று சொல்லியபடி.. மீண்டும் போன் காலுக்காக காத்திருக்க ஆரம்பிக்க….. அதுவும் அடிக்க…

முருகேசன் இந்த முறை ஹலோவெல்லாம் சொல்ல வில்லை… நேரிடையாக பேச ஆரம்பிக்க… ஆனால் மீண்டும் கட் ஆக.. கடுப்பானான் முருகேசன்…

சிக்னல் இருக்கும் இடம் பார்த்து…. காரை நிறுத்துவிட்டு காத்திருக்க ஆரம்பித்தனர்….

மீண்டும் போன் வர…. பேசிய முருகேசன்…….. பதற்றத்தில் வார்த்தைகளை விட்டான்….

”டேய் விஜய் சார் பேசற நிலைமையில இல்லைனு சொல்றாங்கடா…. ” என்ற போதே தீக்ஷா போனைப் பறிக்க….

முருகேசனும்….. தீக்ஷாவிடம் கொடுப்பதாய் சொல்லி அவளிடம் கொடுக்க

”இன்னைக்கு நடந்த ப்ளைட் ஆக்சிடெண்ட்ல….” என்ற சுரேந்தரின் குரலைத்தான் கேட்டாள் தீக்ஷா…. கையிலிருந்த போன் தானாய் நழுவ..

அதுவரை அவள் பிடித்து வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் அவளை விட்டு ஓடியது சுரேந்தரின் வார்த்தைகளில்………..

அவளின் உடலும்… மனமும் தன்னவனின் குரலையும்…. அவன் ஸ்பரிசத்தையும்………… நினைவிலே கொண்டு வர முயற்சிக்க……… அவளால் முடியாமல்……….. எதிலோ மூழ்குவது போல் … எதுவோ அவளின் மனதினை அழுத்துவது போல் திணற ஆரம்பித்தவளின் காதுகளில் சுரேனின் குரல் கேட்க……… அவள் மனமோ அவனவளின் குரலுக்காக ஏங்க ஆரம்பித்தது.…………….. அடுத்த நொடியே விஜய்யின் குரல் அவள் காதுகளில் விழ.. ஆனால் கேட்ட தீக்சா வின் நிலைமைதான் வேறாய் இருந்த்து………..

நிஜமாய் ஒலித்த அவளின் இந்தரின் குரலை…………. கற்பனையாகவே அனுமானித்தாள்…. தன்னவன் குரல் கற்பனை ஆகிப் போனதை அவள் மனம் ஏற்க முடியாமல் போராட ஆரம்பிக்க… ஒரு கட்டத்தில் அந்தக் கற்பனையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்……… அவளின் மனம் சோர்ந்து…………. அடங்கத் தொடங்கியது……………. எதிர்முனையில் துடித்த விஜய்யின் குரலில்… அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் மனைவி……….. தனக்குள் தன்னை அழிக்கத் தொடங்கியிருந்தாள்…………… நிஜம் அங்கு நிழலாகி…………… அந்த நிழலை தனக்குள் ஏற்க முடியாமல் தீக்ஷா………….. போராட ஆரம்பித்தாள்….. காற்றோடு கலந்த குரலில் கலக்க நினைத்தவள்….. காரின் கதவைத் திறந்து வெளியே குதிக்க எண்ணினாள்தான்…. ஆனால் செயலாற்ற முடியவில்லை… ஏனெனில் அவளின் உறுப்புகள் எப்போதோ வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தன……….

மருத்துவமனையின் முன் வந்து நின்ற போது………….. தன் முன் நின்ற தன் கணவனை அவளால் உணர முடிந்தது…………….. அதில் இருந்த சோகம் அவளைத் தாக்கியதுதான் என்றாலும்…………… இதுவரை அவள் பார்த்தறியாத அவன் பார்வை மொழியினை… அதன் வலியினை உணர்ந்தாள் தீக்ஷா…..

தன் முன் நின்றவனின் துக்கம் தாளாதவள்………… அதைத் துடைக்க எண்ணியவள்……. அவனோடு அவன் கண்களோடு கலந்து…. அவன் இருக்குமிடம் போகத் துடித்தபடி கண் மூடினாள்…….. அது விண்ணுலம் என்றாலும்…………….

1,390 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page