top of page

அன்பே… நீ இன்றி??? 7

அத்அத்தியாயம் 7:

அதன் பிறகு விஜய் முறைப்பை எல்லாம் அவள் கண்டு கொள்ளவேயில்லை…………….… யுகேந்தர்……… சுரேந்தர் என்று இருவரிடமும் பேசியபடியே அன்றைய பொழுதை அவள் ஜாலியாகவும்………… விஜய்யை……………..எரிச்சலாகவும் கழிக்க வைத்தாள்

அன்றைய மாலை………….. பெண்ணை அழைத்துக் கொண்டு……….. மணமகன் வீடு செல்ல வேண்டும் என்பதால் தீக்‌ஷா மணப்பெண்ணோடு தங்கி விட………… அவள் பெற்றோர் முன்னரே சென்றிருந்தனர்………… சுரேந்தரும் முன்னே சென்று விட்டிருந்தான்

மணமகனும் மணமகளும் வேறொரு காரில் வர………..

வேறு வழி இல்லாமல் தீக்‌ஷா கலைச்செல்வியோடு வந்தாள்……

ஓட்டுநர் இருக்கையில்………. விஜய் அமர்ந்திருக்க…………..

பின்னால் கலைச்செல்வி, தீக்‌ஷாவோடு அமர………… ப்ச்ச் என்ற ஒலியோடு தன் வண்டியின் ஓட்டுநரை அழைத்து காரை ஓட்டச் சொன்னவன்………….. ட்ரைவர் அருகே அமர்ந்து விட்டான்………..

தீக்‌ஷா…………………… அவன் செயலில் சற்று அவமானம் அடைந்தாலும்…… அது……………… அவள் முகத்தில் இரு புருவங்களின் முடிச்சில் விழுந்து அந்த நொடியே மாற்றினாள்………….. மற்றவர் அறியாமல்………….

ஆனால் அவள் அருகே இருந்த யுகேந்தர் கண்களில் தப்ப வில்லை……….. யுகேந்தர் அவளை மாற்றும் வகையில்

“தீக்‌ஷா…… அண்ணாக்கு ட்ரைவ் பண்ணப் பிடிக்காது” என்று சொல்ல

சொன்ன யுகேந்தரை கேலியாக பார்த்தாள்……..

”நம்பிட்டேன் யுகேந்தர்” என்று அவள் அவனின் முழுப் பேயரோடு சொன்ன விதமே அவள் கோபத்தைக் காட்ட

“அண்ணா மேல ரொம்ப பாசமோ…………. இப்போ நான் இந்தக் காரை விட்டு இறங்குனா என்ன பண்ணுவாரு உங்க அண்ணா…………” என்றவள்

”ஆனா வருத்தப்படமாட்டாருதான்…….. நம்ம மேல அக்கறை உள்ளவங்ககிட்ட கோபம் காட்டினாத்தான் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்……………. இல்ல அதுக்கு வேல்யுவே இருக்காது……….. அதுனால……………. கோபம் உள்ளே இருக்கு………. பட் வேஸ்ட் பண்ணலை” என்று பேசியவள் யுகேந்தர் முகம் மாற………… அவனைப் பார்த்து கண் சிமிட்டி தன் நிலை மீண்டவள்

“ஏன் நான் வந்தா துரை ஓட்ட மாட்டாராமா……… எதுக்கு இந்த வெட்டி பந்தா இந்தக் கருவாயனுக்கு” என்று கிசுகிசுக்க

இப்போது யுகேந்தர் முறைக்க ஆரம்பித்தான்…………… அவள் தன் அண்ணனை கருவாயன் என்று சொல்லியதால்

“சும்மா வா………… எங்க அண்ணா கருவாயனா உனக்கு…………” என்றவனிடம்

“ஆமாம்……… என்னை விட கலர் கம்மினாலே எனக்கு கருப்புதான் போதுமா………….. நீயும் உங்க அண்ணா கலர்தான்…………… அது எப்படி ராதா அண்ணியும்………..சுரேந்தர் அத்தானும் அத்தை மாதிரி கலரா இருக்காங்க……………….” என்றவளிடம்

”நாங்க ரெண்டு பேரும் அப்பா மாதிரி மாநிறம்…….” என்று திருத்தியவன்

“.அவர் ஒரு பார்வை பார்க்க மாட்டாரானு எத்தனை பொண்ணுங்க ஏங்கிருக்காங்க தெரியுமா…………..” என்று சொல்ல

நக்கலாய் தலையாட்டினாள்

“இவர்கிட்ட…………. “ என்று இடைவெளி விட்டவள்

ஒரு பார்வை…………. “ என்று மீண்டும் இடைவெளி விட்டவள்….. அடுத்த நிமிடம்

“யாரு அந்தப் பொண்ணுங்கள்ளாம்…………. ஒருவேளை கண்ணு தெரியாதவங்களோ” என்று நக்கலடித்தபடி…….

“கஷ்டம்டா சாமி……………. என்றவளிடம்

“யாருக்கு…………. ” என்று யுகேந்தர் வினவ

”வேற யாரு…………. உனக்கு அண்ணியா வரப் போறவளுக்குதான்” என்று முடிக்க…………

”அப்டீன்ற…”…………. என்று அவன் எதிர்கேள்வி கேட்க

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… கண்டிப்பா” என்று அப்பாவியாய்……..

“எந்த மகராசி இந்த சிடுமூஞ்சி மகராசன்ட்ட மாட்டப் போறாளோ………. கடவுளே அவள காப்பாத்து” என்று சொல்லிவிட்டு சிரிக்க அவளுடைய பாவனையில் யுகியும் சத்தமாய் சிரிக்க….

விஜயேந்தர் இருவரின் சிரிப்பின் ஒலியில் பின்னால் திரும்பி

“என்னடா சிரிப்பு………………. காலையில தானே சொன்னேன்……….. காதுல ஏறுச்சா இல்லையா” என்று யுகேந்தரை பார்த்து முறைக்க

“விஜய் அத்தான் கார்ல ஒரு பாட்டப் போட்டா நாங்க பேசுற வெட்டிப் பேச்செல்லாம் கேக்காதுல்ல…………… உங்க பிபியும் எகிராதுல” என்று தோரணையாச் சொல்லி இன்னும் அவனின் பிபியை உண்மையிலே ஏற்றினாள்…….

“அம்மா………….” என்று கத்தியவன்……. ”நான் இறங்கிறவா…………….” என்று கலைச்செல்வியிடம் முறுக்க………

“தீக்‌ஷா அவனுக்கு பாட்டெல்லாம் பிடிக்காதும்மா……………” என்ற செல்வி சொல்ல

கடவுளே என்று தலையில் கைவைத்தவள்….. அதே வேகத்தில் யுகியிடம் அவன் காதில்….

“கஷ்டம்னு சொன்னேன்ல அது இதுதான்……………….. பாட்டே பிடிக்காதாம்…………….. இதெல்லாம் குடும்பம் நடத்தி………… என்னமோ போ….. சூ ல வைக்கிறதையெல்லாம்………. ஊர்ல சுத்த விட்டா இப்டித்தான் இருக்கும்……………..” என்ற போது யுகேந்தர் உண்மையிலேயே முறைத்தான் தான்………

”சரி சரி உண்மையச் சொன்னா………….. மொறைக்காத………… எனக்கெதுக்கு விருமாண்டி குடும்ப வம்பு………….. ஆனாலும் உங்க அண்ணாவுக்கு நீ கொஞ்சம் டியூசன் எடுக்கலாம் இல்ல…. உனக்கு பயமா இருந்த என்கிட்ட வரச் சொல்லு………… தேத்திரலாம்……………..” என்று யுகேந்தரிடம் சொல்லியவள் அப்போது விஜய்யை விரோதியாகவெல்லாம் நினைக்க வில்லை………

“எப்போ பாரு………….. வள் வள்ளுனு குரைச்சுகிட்டு” என்று மனதில் மட்டும் சொல்லிக் கொண்டாள்……. யுகேந்தரிடம் இதைச் சொல்ல வில்லை………………

தான் மனதில் சொல்லியதை யுகேந்தரிடம் சொல்லி இருந்தால்…… தன் அண்ணனை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்ன தீக்‌ஷாவுக்கு அன்றே யுகேந்தரின் கோப முகம் தெரிந்திருக்குமோ…….. விஜய்யின் மீதான யுகேந்தரின் பாசம் புரிந்திருக்குமோ…………. என்னமோ…………….”

யுகேந்தர் இவள் சொல்வதெற்கெல்லாம் சிரித்து………….. ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்ததால்………………. அவனின் அண்ணன் மேல் உள்ள பாசம் அவளுக்கு தெரியவில்லை…………… அவன் தன் அண்ணனை எப்போதும்… யாருக்காவும் விட்டுக் கொடுக்காத தம்பி என்று………………..

---------------------

தன் வீட்டில் எல்லா சடங்கும் முடிய……….. மாலை 7 மணி ஆக……….. தன் வீட்டின் மாடிப்படி வாசலில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தாள் தீக்‌ஷா.

உள்ளே ஏதோ விவாதம் போய்க் கொண்டிருந்தது……………..

“ரமா……… இன்னைக்கு நைட் உங்க வீட்லதான் நான் வந்து படுக்கனும் பா………….. அம்மா ஆர்டர்………..’

“ஏனாம்……… “ என்று அதே குவார்ட்டர்சில் அவளின் தோழி எதிர்முனையில் கேட்க

“அண்ணா……..அண்ணிக்கு……… ஃபர்ஸ்ட் நைட்டாம்……. நான் பச்சப் புள்ளையாம்……….. இங்க இருக்கக் கூடாதாம்……… இந்த வைஜெயந்தி தொல்லை இருக்கே……….. தாங்க முடியல………… “ என்றவள்…… சற்று அடங்கிய குரலில்

‘இன்னும் நம்மள……. அறியா புள்ளைனு….. இந்த உலகம் நம்பிட்டு இருக்கு….. ரமா……….டூ பேட்……….” எனும் போதே

“வழி விடுறியா”………….. என்ற குரலில் திடுக்கிட்டு தீக்‌ஷா திரும்ப

“சாட்சாத் விஜயேதான்…………………………”

விஜய் கடந்த போது அவள்….. காதின் அருகில்

“வெளங்கிடும்……….உருப்ட்டுருவ” என்ற அவன் குரலும் கடந்து சென்றது…….

பூனை மாதிரியே இவன் நடந்தால்…… சத்தமே கேக்கவே மாட்டேங்குது………. எப்போ வர்றான்………. எப்போ போறானு தெரிய மாட்டேங்குது….. எப்போ வந்தானோ………… என்னத்த கேட்டானோ……….. ஓவரா எதுவும் பேசுனோமா…….என்று ஓட்டிப் பார்க்க………. தப்பா ஒண்ணும் சொல்லலைல……. என்று தனக்குள் ஆறுதல் தேடிக் கொண்டவள்…… அவன் சொல்லிப் போன வார்த்தைகளை நினைத்து

“நாங்களாம் உருப்பட்டுருவோம்டா……. நீ முதல்ல உருப்படுவியானு யோசிடா……… எப்போ பாரு வெறச்சுக்கிட்டெ போறது………….. சிரிச்சா என்ன…… உன் முத்தா விழுந்துரும்…………. வீட்லயே சிரிக்காதவன் வெளியிலயா சிரிக்கப் போற………… என்று வசை பாடியவள்

“அய்யோ தீக்‌ஷா இந்த ட்ராஜெடி பீஸ ஸ்கிப் பண்ணுடி………….. இவன்லாம் ஒரு ஆளுனு…….. அவன் சிரிச்சா எனக்கென்ன….. சிரிக்கலைனா எனக்கென்ன……………… இவன் பற்றி யோசிக்கிறதயே நிறுத்தனும்…….. எனக்கு வாழ்கைல ஒருநாள் கம்மியாகப் போகுது……….” என்று புலம்பியவளாய் உள்ளே போக

அங்கு பிரதீபன் உம்மென்று அமர்ந்திருந்தான்….

“இவனுக்கு என்ன ஆச்சு……….. கல்யாணம் ஆன உடனே அந்த வீட்டு உம்மாணாமூஞ்சி குணம் இவனுக்கும் ஒட்டிருச்சா” என்று யோசித்தபடி

“அம்மா……. நான் ரமா வீட்டுக்கு போறேன்……….” என்று கிளம்ப

“ஒண்ணும் வேண்டாம்………. நீ இங்கேயே இரு…………….” என்று தாய் சொல்ல

“ஏன்மா…………” என்றபடி……………….கிச்சனுக்குள் நுழைந்தாள்….. ஆனால்

தன் அன்னையின் முக மாற்றம் அவளை பாதிக்க தனது விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டிய தீக்‌ஷா………. 22 வயது பெண்ணின் பக்குவமாக தன்னை மாற்றிக் கொண்டவளாய்

ஜெயந்தியின் முகம் பார்க்க……. சிவந்த விழிகள் வேறு அவள் அன்னை அழுதிருக்கிறாள் என்பதை சொல்லாமல் விளக்க

“அம்மா…. ” என்று நெகிழ்வாய் பேச ஆரம்பித்தவள்

“அழுதீங்களா…….. எதுக்குமா………. அண்ணா வேற உம்முனு இருக்கான்….” என்று கேட்க

அப்போது அவள் தந்தையும் வந்து சேர

“ஜெயந்தி…………… என் முடிவு இதுதான்…… அவங்க பொண்ணுக்கு கொடுத்த வீட்டுக்கு…….. நம்ம பையன் போகட்டும்………… அப்போப்ப போய் பார்த்துக்கலாம்…….. ஒண்ணா இருந்தால் தான் பாசம்………….. இல்லைனா……….. பாசம் போய்டுமா என்ன?” என்று சொல்ல

தீக்‌ஷா மனதில்

“ஒஹோ………… இதுதான் பிரச்சனையா பணக்கார புத்திய காட்டிடாங்களா………..” என்று சொல்லியவள்……… தந்தையின் பதிலில் நிம்மதி அடைந்தாலும்

“தன் அண்ணன் தனியே போய் விடுவானே என்று மனம் கனத்தது……… இருந்தும்…… எப்போதுமே அவன் கூடவா நாம இருக்கப் போகிறோம்………. என்று மனம் ஒருபுறம் ஆறுதல் சொன்னாலும்…

“தாய் தந்தைக்கு அது மிகவும் கஷ்டம் என்பதும் ஒருபுறம் வேதனை தர………”

வழக்கமான தன் வாயை ஓரம் கட்டி……. அடுப்பு மேடையில் அமைதியாக ஏறி அமர்ந்து…. அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…….

“இந்தா ஒண்ணு பெத்து வச்சுருக்கேனே……. எதைப் பண்ணினாலும் தரித்திரமாகவே பண்றது…… இறங்குடி……….. அடுப்பு மேடைல ஏறாத ஏறாதனு சொன்னா…………. கேட்க மாட்டியா………….“ என்று அந்தக் கவலையிலும் அவள் தாய் ரௌத்திரம் ஆக…………

“ஆத்தா………… யாரு….. எந்தப் பக்கம் மலையேறினாலும்…….. வேப்பிலை அடிப்பது என்னை மட்டும் தான்’” என்றபடி இறங்கினாள்….. இப்போது

“என்னப்பா பிரச்சனை………….. “ என்று அவள் கேட்க

“ஒண்ணும் இல்லை…….. பெரியவங்க பேசும் போது உனக்கென்ன வேலை இங்க………. நீ போ” என்றபடி……. அவரும் அவளை கடிய

அந்த நேரத்தில் பிரதீபன் உள்ளே வந்தான்…… வந்தவன்

“அம்மா……….. நீங்க எல்லோரும் வந்தா…….. ராதாவோட அங்க போவேன்………… இல்ல…… இங்கதான்…….. அவ என்னை காதலிக்கும் போது இதையெல்லாம் தெரிஞ்சுதானே காதலித்தாள்” என்று முடிவைச் சொல்லியபடி மீண்டும் வெளியேற

“அண்ணா…….. நீ ஹீரோதாண்டா…….. அன்னைக்கு எதுவும் பேசாம இந்த தங்கையை டீல்ல விட்ட………… இன்னைக்கு சுதாரிச்சுட்ட போல” என்று சந்தோசத்தில் தீக்‌ஷாவும் வெளியே வந்தாள்.

“எப்படியோ…….. நாம இந்த வீட்டை விட்டு போகப் போவதில்லை” என்று நிம்மதி அடைந்தவளின் நிம்மதி அடுத்த அரை மணி நேரத்தில் பறிக்கப் பட்டது.

---------------

கலைச்செல்வி அருகில் போய் அமர்ந்தபடி……….

“அண்ணா…….. அண்ணிக்கு வீடா அத்தை……. எங்கே அத்தை” என்று மனதில் கோபம் இருந்தும்………..நயமாய்க் கேட்டவளைப் பார்த்து….

“இந்த பெரியவன் பண்ணின வேலைமா…………. எங்களுக்கே காலைலதான் தெரியும்…… அவனுக்கு தங்கைனா கொஞ்சம் பாசம் அதிகம்……….. இங்க அவ கஷ்டப் படக்கூடாதாம்…….. அதுதான்……….. “ என்று கலைச்செல்வியும் சாதாரணமாக பேசினாள்.

தீக்‌ஷா மனம் எங்கும் எரிந்தது……………

”கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா இவங்களுக்கு எல்லாம்….. இவங்க பையன இவங்ககிட்ட இருந்து பிரிச்சா…… அதுவும் கல்யாணமான அன்னைக்கே பிரிச்சா……. இப்படித்தான் சாதாரணமா இருப்பாங்களா…. இவங்களுக்கு ஒண்ணு போனால் கூட இன்னும் ரெண்டு இருக்கு…………. எங்க அம்மா அப்பாக்கு அப்படியா……..” என்று நொந்தபடி எழுந்து விட்டாள்…….. அதன் பிறகு அவளுக்கு கலைச் செல்வியிடம் பேசவே பிடிக்க வில்லை……………

உள்ளே அமர்ந்திருந்த ராதாவிடம் போய் உட்கார்ந்து விட்டாள்………….. சிரித்தபடி அவள் அருகில் அமர்ந்தவள்……..

“என்ன அண்ணி ஹேப்பியா………. இப்போ………” என்று மனதிற்குள் வருத்தத்தை வைத்தபடி மலர்ந்து பேச

“சாரி தீக்‌ஷா………. அண்ணா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே இல்லை………… எனக்கே இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தெரியும்மா………. உனக்கு இதில் எத்தனை வருத்தம் இருக்குமுனு தெரியும்………. ஏனென்றால்….. நானும் ஒண்ணு இல்ல… 3 பேர்க்கு தங்கை………. கண்டிப்பா………. உங்க யாரையும் பிரிக்க மாட்டேன்………. நம்புமா….” என்றபோதே ராதாவின் சொற்களில்…………….. மனம் லேசானது……….. அவளைப் போய் தப்பாக எண்ணிய மனதைக் குட்டியவள்……..

“அண்ணி………. நீங்க க்ரேட் அண்ணி………… ஒரு நிமிசம் தப்பா நினைச்சுட்டேன்……… ” என்றவளின் கண் ஈரமாக….

ராதா அவளைப் பார்த்து

“தீக்‌ஷா…….. ஸ்ட்ராங் பேபினு சொன்னாங்க…………. எல்லோரையும் சிரிக்க மட்டும் தான் வைப்பாங்கனு சொன்னாங்க” என்று கேலி பேச

சட்டென்று கண்ணைத் துடைத்தவள்

“ஆமாம்………… என்னைச் சுத்தி இருக்கிறவங்க செண்டிமெண்ட் பேசுனா எனக்கு பிடிக்காது அண்ணி………… தீக்‌ஷா இருந்தா……. கலகலப்பு……… ஜாலி…… அதுதான் இருக்கணும்…….” என்றபடி………

“ஆனா உங்க அண்ணனை மட்டும் என்ன பண்ணினாலும் சிரிக்க வைக்கவே முடியல………. ஏன் சிரிக்கவே மாட்டேங்கிறார்………….” என்றவளிடம்

“அண்ணா அப்படித்தான் தீக்‌ஷா…… சிரிப்பாங்க……………. ஆனா அளவா…” என்று ராதா சொன்ன போதே

“என்னால சிரிக்க வைக்க முடியல……….. அப்புறம் அழ வச்சுடுவேன்னு சொல்லி வைங்க……. அந்த விரு,,,,,,,,,,, என்றவள்……..

யுகேந்தரிடம் மட்டுமே அவள் விருமாண்டி என்று சொல்லி கேலி செய்யும் காரணத்தால்…

நாக்கைக் கடித்தபடி…….. உங்க அண்ணன்கிட்ட என்று முடிக்க….

“விருமாண்டிதானே………. அது நீ வச்ச ஆள் வரை போய் சேர்ந்துருச்சு” என்று சொன்னபோது

“ஒக்கே…….. நோ ப்ராப்ஸ்…… அப்போ இனி அவர்கிட்டயே டேரக்டா சொல்லலாம் ” என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவள் வெளியே வர……..

விஜய் மீண்டும் உள்ளே வந்திருந்தான்

பிரதீபன் விஜயிடம்

“இல்லை விஜய்……………. இது சரிப்படாது……………. என் வசதி இதுதான்…….. இது தெரிஞ்சுதானே மேரேஜ் பண்ணி வச்சீங்க” என்ற போது

“தெரியும்……….. ஆனா எங்க வீட்டுப் பொண்ணுக்கு இதை சீராகத்தான் தருகிறோம்……. அது மட்டும் இல்லை……………. உங்க குடும்பத்தோட அங்க போய் தங்க என்ன பிரச்சனை என்ன தீபன்….” என்று கேட்க

இப்போது……… தீபன் அருகில் அருகே அமர்ந்தபடி…. தன் அண்ணனை பெருமையாக பார்த்தபடி இருந்தாள் தீக்‌ஷா….

“அவ உங்க தங்கை இல்ல………… என் மனைவி……… இதுதான் அவள் வாழ்க்கை…………. விட்ருங்க விஜய்…… இதுதான் எங்க தராதரம்.” என்று விஜய் அன்று தன் தங்கையைப் பார்த்து சொன்ன வார்த்தைகளைச் சொல்லி…… அவனைப் பார்க்க

தீக்‌ஷாவும் விஜய்யை எள்ளளாகப் பார்க்க

ஜெயந்தி உள்ளிருந்து வந்தாள்………….. கூடவே வைத்தீஸ்வரனும் வர…………

“விஜய் தம்பி….. நீங்க கவலைப்படாதீங்க அவன அங்க அனுப்பி வைக்கிறது எங்க பொறுப்பு ”என்ற போது…………

தீபனும் தீக்‌ஷாவும் தீப்பார்வை பார்க்க

தீபனின் வார்த்தைகளில்………… தீபன் தன் அண்ணனை குத்தலாக பேசியதில்…………. பிரச்சனை பெரியதாக ஆகி விடுமோ என்ற பயத்தில்………….

உள்ளிருந்த ராதா வெளியே வந்தாள்…… வந்தவள்….. விஜய்யிடம்

“அண்ணா…………. உங்க மனசு……. உங்க பாசம் எல்லாம் புரியுது……… ஆனா………. அவர் மனசு கஷ்டபட்டுதான் நான் வசதியா வாழனும்னா…… அது எதுவும் தேவையில்லை………… என்று கண் கலங்கக் கூற………

வைத்தீஸ்வரனுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை

“என்னமா………. நல்ல நாள் அதுவுமா…….. கண் கலங்குற………………. ” என்றவர்

“ப்ரதீபா……… நாங்களும் உன்னோட வருகிறோம்……. போதுமா……. அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொல்லி வச்ச………” என்று முடிக்க

தீக்‌ஷா அதிர்ந்தாள்…………..

“அப்பா……….. என்னப்பா………….. நான் அங்கெல்லாம் வர மாட்டேன்……… என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா” என்று கத்த

அவள் வார்த்தைக்கெல்லாம் அங்கு மரியாதை இருக்குமா என்ன……….. அதை யாரும் காது கொடுத்தே கேட்க வில்லை……………

“சுரேந்தர்” மட்டும் அவளிடம்

“சின்ன புள்ளைங்க கிட்டலாம் கேட்க மாட்டாங்களாம் தீக்‌ஷா………..” என்று வார

”அண்ணா அது சின்னப் புள்ள கூட இல்ல……….. பாப்பா” என்று யுகி இன்னும் ஓட்ட

விஜய் முதன் முதலாய் சிரித்தான் வாய் திறந்து……….. அதுவும் தீக்ஷாவைப் பார்த்து…………

அது அவளைப் பார்த்து வெற்றிச் சிரிப்பாக…….. அற்பச் சிரிப்பாக…… நீ யெல்லாம் ஒரு ஆளா எனக்கு…….. என்கிட்டேயாவா என்ற எக்களிப்பாக தீக்‌ஷாவுக்குப் பட

அவனது சிரிப்பில் உடம்பெல்லாம் எரிந்தது…………

அன்று இரவு…… ப்ரதீபன் – ராதா முதல் இரவு….. விஜய் அவன் தங்கைக்காக வாங்கிய வீட்டில் ஏற்பாடு செய்யப் பட்டு அவர்கள் அங்கு செல்ல…….. தீக்‌ஷா மனம் குமுறியபடி தனது அறையைச் சுற்றி வந்தாள்

சுவரெங்கும் தீக்‌ஷா என்ற பெயர் ஆங்கங்கு பொறிக்கப்பட்டிருக்க……… அவற்றை எல்லாம் தடவிப் பார்த்தபடியே…….. அவள் திருச்சியை விட்டு வந்த போதும் இப்படித்தான் கலங்கினாள்…

“இன்றும்………. அதே வேதனை………… நாளைக்கு திருமணமாகி இன்னொரு வீட்டிற்கு செல்லும் போதும்……. .இனியும்…… ஆக மொத்தம் பெண்களுக்கு எதுதான் நிரந்தரம்…” என்று யோசித்தவளுக்கு அன்றைய இரவு உறங்கா இரவாக அமைய……..

அதிகாலை சீக்கிரமே எழுந்து விட்டாள்……… அதாவது…… 8 மணிக்கெல்லாம்…………… கதவைத் திறக்க…… அது முடியாமல் போக…… யார் பூட்டி வைத்தார்கள் என்ற படி அம்மா என்று கத்த……. இப்போது கதவு திறக்கப் பட…… தன் தாய்தான் திறப்பாள் என்று அலட்சியமாக நினைத்து

“ஏம்மா…….பூட்” என்று ஆரம்பித்தவள்…….. திறந்த விஜய்யைப் பார்த்து அதிர்ந்து விழிக்க

“ட்ரஸ்ஸ மாத்திட்டு வெளில வா” என்று சொல்லி திறந்த வேகத்திலேயே மீண்டும் கதவை மூடினான் விஜய்…..

கண்ணாடியில் தன்னைப் பார்க்க………… உடை லேசாக கொஞ்சம் இறங்கி இருக்க……….. கொஞ்சம் நல்ல பையன் தான் என்ற படி………… பார்த்திருப்பானோ… வேகமா ட்ரெஸ்ஸ மாத்த சொல்றான் என்று யோசித்தபடியே……. ச்சேசேய்…… இருக்காது” என்று தனக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டாள்…….

இரவு உடையில் இருந்து……… சுடிதாருக்கு மாறியபடி……. வெளியே வந்தாள்…………….

வீட்டைப் பார்த்து அதிர்ந்தாள்….. வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை………. சோபா மற்றும் ஒரு நாற்காலி இருக்க……. விஜய் மட்டுமே இருந்தான்……… அவனோடு இன்னும் சில பேர் இருக்க…………

“அம்மா அப்பாலாம் எங்க” என்ற போது………….

“அங்க போய்ட்டாங்க…………… உன்னோட ரூம் தான் இன்னும் காலி பண்ணனும்………… ” என்றபடி நகர்ந்தான் விஜய்……….

”அப்போ டீ கூட கிடையாதா……… என்று தலையில் கை வைத்தபடி அமர்ந்த போதே

சுரேந்தரும் வந்து சேர………..

“இந்தா…………..” என்றபடி ஒரு டிபன் பாக்ஸை கையில் வைக்க……….”

“தேங்க்ஸ் அத்தான்” என்று சொல்லியபடி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் தீக்‌ஷா…………

சுரேந்தர் வேலை ஆட்களோடு………….. மீண்டும் கீழே போக

விஜய் மீண்டும் அவள் எதிரில் வந்து அமர்ந்தான்……… ஆனால் எதுவும் பேசவில்லை

இவளுக்கும் பசி இருக்க………. வேக வேகமாக சாப்பிட்டவளுக்கு திடீரென்று விக்கல் வர…………. தண்ணியைத் தேட…….. அது கிடைக்காமல் போக………… விஜய்யைப் பரிதாபமாகப் பார்க்க

“சாப்பிட மட்டும் அவசரம் காட்டக் கூடாது… தண்ணி இருக்கானு முதலில் பார்க்க வேண்டும்” என்றபடி அந்த வீட்டு கிச்சனுக்குள் நுழைந்தான் விஜய்……..

“அதேதாண்டா உனக்கும்…… அட்வைஸ் வேணாம்டா….. முதலில் தண்ணியைக் குடுடா…. செத்துகித்து போகப் போறேன்……….. அந்த பழி வேற உனக்கு வந்து சேர போகுது” என்று திட்டியபடியே அவன் தண்ணீர் எடுத்து வருவான் என்று பார்த்துக் கொண்டே இருக்க….

அவனோ அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை………. அதற்கு பதில்

யுகேந்தர் வாட்டர் பாட்டிலோடு மேலே ஏறி வந்தான்……..

“இந்தா சுரேந்தர் அண்ணா மறந்துட்டாங்க” என்றபடியே கொடுத்தவன்

விஜய் கிச்சனில் இருந்து வெளியே வருவதைப் பார்த்து

“நானும்………. சுரேந்தர் அண்ணாவும் அங்க போகிறோம்……….. நீங்க எப்போ வற்ரீங்க” என்று கேட்க

நான் கடைசியா வருகிறேன் என்றபடி வெளியேறி கீழே போனான்……..

“யுகி நானும் வர்றேன்………. உன் கூடவே” என்று எழ

“ஹலோ மேடம்……….. அப்போ 5 மணிக்கெல்லாம் எழுந்திருத்திருக்க வேண்டும்………… நீ மட்டும் மவளே வழக்கம் போல எழுந்திருச்சுருந்த………. உன் விருமாண்டி……… உன்னையும் சேர்த்து பேக் பண்ணச் சொல்லி இருப்பார்………. என்று சொல்லியபடி……….. உன்னோடதெல்லாம் பத்திரமா எடுத்து வச்சுட்டு அண்ணா கூட வா” என்று சொல்ல

“உங்க அண்ணா………….. எனக்கெல்லாம் ட்ரைவர் வேலை பார்ப்பாரா…………” என்று கேள்வி கேட்க

“அது நேத்து……….. இது இன்னைக்கு………… எங்க அண்ணா ரொம்ப ஹேப்பியா இருக்காரு………… எங்க செல்ல தங்கை இந்த வீட்டில் கஷ்டப் படமாட்டாள்னு…………. சோ ஹேப்பி…… அதுக்கு சம்மதம் சொன்ன தீபன் குடும்பமும் இனி அவர் குடும்பம் தானாம்……………. சார் வீட்டைக் காலி பண்ண ஆளோட 5 மணிக்கெல்லாம் வந்துட்டாரு தெரியுமா…………. தங்கச்சி பாசம்மா…… தங்கச்சி பாசம்……………..” என்றவனைப் பார்த்து

“என்னமோ போ…………. எதுனாலும் அட்வைஸ்னு சொல்லி என்னக் கொன்னாரு…………. அப்புறம் பார்த்துக்கோ…..“ என்று தீக்‌ஷா அலுக்க

“நீ உன் திருவாயை மூடிட்டு பேசாம வந்தாலே போதும்………… என் அண்ணன் பேச மாட்டாரு………. “ என்றபடி வெளியேறினான்

வீட்டை விட்டு போகிறோம் என்று மனம் சுணங்கியவளாய் தன் பொருட்களை அங்கு வந்த ஆட்களோடு பேக் செய்து வீட்டை விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவளுக்கு அங்கு நின்ற மற்ற குடித்தனக் காரர்கள் பாசமுடன் விடை அனுப்ப… அவர்களிடம் தைரியமாகப் பேசியபடி வெளியே வந்தவள்… கீழே நின்றிருந்த அவளின் இளம் தோழகர்களைப் பார்த்தவளுக்கு அழுகையே வந்து விட்டது

“டேய் சிவா…………. அக்கா இனி வர மாட்டேண்டா” என்ற போதே தொண்டை அடைக்க

“அந்தக் குழந்தைகளும் அழ”

“அக்கா டைம் கிடைக்கும் போதெல்லாம் வாங்க” என்று பிரியா விடை கொடுத்து அனுப்ப

அப்போது அங்கு வந்த விஜய் லேசாகச் சிரித்தபடி…….

“அடேங்கப்பா…………. இந்த அக்கா போறாங்கனு…… இத்தனை பேருக்கு வருத்தமா” என்று கேட்க

“இந்த மாதிரி நிலை உங்களுக்கு வந்தா தெரியும்……… நமக்கு பிடிச்சவங்க நம்மை விட்டு போகும் போது வருகிற வலிதான் இந்த உலகத்திலேயே பெரிய வலி” என்று சொல்லி அழுதபடியே அவனை முறைத்தவளை இவனும் முறைக்க…………. தன் முறைப்பை மாற்றியபடி

“ஏன் அத்தான் இப்டி பண்ணுனீங்க……..ஒரே நாளில் வீட்டை மாற்றி…………” என்ற போதே…………. அவள் பேச்சை காதிலே வாங்காதவன் போல்

”காரில் ஏறி உட்கார்………….. கொஞ்சம் விட்டா………. நீ பேசியே கொன்னுடுவ…………..” என்ற படி காரில் அமர்ந்தவன்………

தீக்‌ஷா அவன் அருகில் அமராமல் பின்னால் போக

“ஏய்… உனக்கு நான் என்ன ட்ரைவரா………….. முன்னால வா……………..” என்று சொன்னவனிடம்

“முன்னால உட்கார்ந்த மட்டும் நீங்க ட்ரைவர் இல்லையா………… அப்பவும் ட்ரைவர்தான்” என்று போட்டுத் தாக்க

”ரொம்ப பேசுன………… அந்த பேக்கேஜ் அனுப்புற வண்டிலேயே அனுப்பிடுவேன்………. பார்த்துக்க….. அதுவே உனக்கு அதிகம்…………… ” என்று சொன்னபடி காரை எடுக்க

”உன்கூட பக்கத்தில உட்கார்ந்திட்டாலும்………… அப்டியே விளங்கிடும்……….“ என்று சன்னல் அருகே அமர்ந்தவள்……… பேசாமல் வந்தால் தீக்‌ஷா ஆவாளா…………

“ஏன் அத்தான் எனக்கு ஒரு டவுட்……….. உங்க வைஃப் வந்தா நம்ம ரெண்டு பேருக்கு நடுவிலயா உட்கார வைப்பீங்க…. என்றவளை

“இவளுக்கு இப்போ எதுக்கு இந்தக் கேள்வி என்ற அர்த்தத்தில் பார்க்க… அது புரிந்தவள் போல

“’இல்ல சும்மா…. கேட்டேன்………ஏன்னா……… என்னை பின்னாடி வச்சு ட்ரைவ் பண்ண மாட்டீங்க………… நான் முன்னாலயும் வர முடியாது…….. ஒரு வேளை அப்படி ஒரு சிச்சுவேசன் வந்தா அப்போ என்ன பண்ணுவீங்க”

”அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா பார்த்துக்கலாம்…….. இப்போ நீ பேசாம வருகிறாயா…….” என்று பேசாமல் காரை ஓட்ட”

“ஆன்சர் தெரியலையா…………” என்று சிரிக்க

“யார் சொன்னது ஆன்சர் தெரியாதுனு……………. நீ சின்னப் பொண்ணு……………. அதுதான்……….. சொல்லல” என்றவனின் முகம் களையாக தெரிய

“என்ன பண்ணி இருப்பான்” என்ற யோசித்தவளாய் அவன் முகத்தைப் பார்க்க அதில் இருந்த பிரகாசம்

“வைஃப்புனு சொன்னவுடனே மூஞ்சில பல்பு எரியுது……….. லவ் பண்றானோ…………… என்று நினைக்கும் போதே அவன் குரல் அவள் செவியை அடைந்தது…………….

”ரொம்ப யோசிக்காத…………… உன் மூளை கண்டதை எல்லாம் யோசிக்குமே ட்ரைவர வரச் சொல்லி இருப்பேன்…………. போதுமா………….” என்று சொல்ல……….. இன்னும் அவள் தெளியாமல் அவனைப் பார்க்க

“இல்ல….. உன்னை விட்டுட்டு போயிருப்பேன்…….. எனக்கு என் வைஃப் தான் முக்கியம்……… நீயா முக்கியம்” என்று சொல்ல…… இப்போது திருப்தி அடையாமல்

”இதச் சொல்லத்தான் நான் சின்ன பொண்ணுனு சொல்லலையா…… இதுதான் யோசிச்சீங்களா……………. வேற என்னவோ நினைச்சீங்க..….. பொய் சொல்றீங்க” என்று சொல்லியவளிடம்

“தயவு செஞ்சு என்னையும்……. உன்னை மாதிரியே லூசு மாதிரி பேச வச்சுறாத” என்றவன் அதற்குப் பிறகு அவளிடம் பேச்சைக் குறைத்தான்

”அப்போ நான் லூசா” என்றவளிடம் பேசமாலேயே… ஓட்டி வர பதில் எதுவும் வராமல் போக……….. தீக்‌ஷாவும் வெளியில் பார்வையைச் செலுத்த ஆரம்பித்தாள்…….

---------------

புதிய வீட்டில் கார் நிற்க…….. கொஞ்சம் திகைத்தாள் தீக்‌ஷா………… ராதாவின் பிறந்த வீடு அளவு இல்லை என்றாலும்………. தீக்‌ஷா குடும்ப வாழ்க்கைத் தரத்திற்கு சற்று அதிகமாய்ப் பட………

இறங்கி வெறித்தவளை………….. விஜய்யின் ’தீக்‌ஷா’ என்ற குரல் கலைக்க

அவனைக் கீழே குனிந்து பார்க்க

“உன் பேர் எங்க எல்லோருக்கும் தெரியும்……………… இங்கயும் உன் பேரை சுவரெல்லாம் எழுதி அசிங்கப் படுத்திராத…………. இது நீ இருந்த கவர்ன்மெண்ட் குவார்ட்ரெஸ் இல்லை” என்று சொல்ல………….

திகைத்தாள் தீக்‌ஷா

சத்தியமாக இதை அவள் எதிர்பார்க்கவில்லை………….. தன் அறையைப் பார்த்திருப்பான் போல் என்று நினைத்தவள்………… அவனுக்கு பதிலடியும் தந்தாள்…….

“கண்டிப்பா….. விஜய் அத்தான்………… எனக்கு பிடிச்ச இடத்தை மட்டும் தான் என் பெயர் அலங்கரிக்கும்……………. சோ இந்த வீட்டுக்கு அந்த அலங்காரம் கிடைக்காதுதான்….. சாரி சாரி…………. உங்க பாஷைல சொல்றேன்…… நீங்க உங்க தங்கைக்காக கொடுத்த வீட்டை அசிங்கப்படுத்த மாட்டேன்… ” என்ற படி

அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல்….. விடுவிடுவென்று உள்ளே நுழைந்தாள்….. தீக்‌ஷா….

அவன் இப்படிச் சொல்லிய பின்… அவன் கொடுத்த இந்த வீடு அவளுக்கு பிடித்திருக்குமா என்ன…………. அதற்காக இதை விட்டு வேறு எங்கு போக……………… இவளும் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லைதானே………… வேறு ஒரு வீட்டுக்கு வாழப் போகும் பெண்………… அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டு இந்த வீட்டில் இருப்போம்” என்று விட்டு விட்டாள்………….

இதை மட்டும் தன் அண்ணாவிடம் நாம் சொன்னோம்… இந்த விஜய் தங்கை தான் புறாக்கூண்டு போல் வாழ வேண்டும்………. பாவம் அண்ணி….. இவன் திமிருக்கு அவங்க பலிகடாவா…… என்று நினைத்தவள் விஜய்யை அவள் மனதில் இருந்து சற்று தள்ளி வைத்தாள் என்பதே உண்மை……………

விஜய்யின் மேல் கோபம் ஒரு புறம் இருக்க…….. இன்னொரு புறம்

ஏனோ சட்டென்று….. அவளால் அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை நினைத்தும் பார்க்க முடியவில்லை………………. எல்லாவற்றிர்க்கும் வேலையாள் இருந்தது சவுகரியமாய் இருந்தாலும்…………. ஏனோ பிரைவசி போனது போல் இருந்தது தீக்‌ஷாவிற்கு…… 2 பெட்ரூம் அறையில்………. சிறு குருவிக்கூடு போல் தாங்கள் மட்டுமே வாழும் வாழ்க்கை முறைக்கு இப்போதைய வாழ்க்கை தங்கக் கூண்டில் கிளியை அடைத்து வைத்தது போல் இருந்தது என்பதுதான் உண்மை……………. இதை விட்டு வெளியே எப்போது பறக்கலாம் என்று அப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்………..

உள்ளே வந்தவள் ஹாலைச் சுற்றிப் பார்க்க……………. அங்கு ராதாவின் புகைப்படம் நிறைந்திருந்தது………. நேற்று முடிந்த திருமணத்தின் போது எடுத்த போட்டோ கூட லேமினேட் செய்யப்பட்டு மாற்றப்பட்டிருந்தது…………

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்………. பாசமலர்தான்” என்று திரும்பும் போது அவள் அண்ணன் பிரதீபன்………….. அவளது புகைப்படத்தை மாட்டிக் கொண்டிருந்தான்………………”

மாட்டி முடித்து இறங்கியவன்……………… தன் தங்கையைப் பார்த்து சிரிக்க

பதிலுக்கு………. சிரித்தபடியே அவனைப் பார்த்தவள்……….. சற்று முன் விஜய் சொன்ன வார்த்தைகளை யோசித்துப் பார்க்க………… தன் புகைப்பட்த்தை கழட்டி விடச் சொல்வோமா என்று கூட நினைத்தாள்……..

ஏனோ விட்டு விட்டாள்

அங்கிருந்த சோபாவில் அமர அவள் புகைப்படம் நேராக தெரிந்தது…………..

“அண்ணா இங்க இருந்து பார்த்தா………… தீக்‌ஷா சூப்பரா தெரியுறேன்……….”. என்றவள்….. அப்போது ராதாவும் அருகில் வந்து அமர……

”இந்த பிளேஸ என் வருங்கால கணவருக்கு ரிசெர்வ் பண்ணி வைக்கனும் அண்ணி…………. இந்த இடம் தான் ரொம்ப வசதி………….. என்னை சைட் அடிக்கிறதுக்கு” என்றவளிடம்

“நீ இருக்கும் போது……….. அவர் எதுக்கு நிழல பார்த்து சைட் அடிக்கப் போறாரு” என்று ராதா கேட்க

“ஹ்ம்ம்ம்… கரெக்ட்தான்………… “ என்றபடி தன் அண்ணனைப் பார்த்தவள்……… விஜய் உள்ளே நுழைவதை பார்த்து… சத்தமாக

“அண்ணா…………… நீ இவ்ளோ பெரிய வீட்டை எல்லாம் எனக்கு தர முடியாது………… ஆனா இங்க இருக்கிற ராதா அண்ணி போட்டோவை எல்லாம் விட பெரிய போட்டோவா எடுத்து எனக்கு சீதனமா கொடு………… என் புகுந்த வீட்ல மாட்ட.” என்ற போது ஜெயந்தியும் அங்கு வந்தாள்

“உனக்கு வாய் ஏன் தான் இப்டி இருக்கோ……………… நல்ல விதமாவே பேச மாட்டியா” என்று திட்ட

“போட்டோ மாட்டனும்னு சொன்னது தப்பா அண்ணி………….. இந்த அம்மா இருக்காங்களே” என்று ராதாவிடம் சொன்னவள்

ஜெயந்தியிடம்………..………

“அம்மா… உங்களுக்கும்…… அடுப்படியிலிருந்து கரண்டி பிடிக்கும் வேலைக்கு ஓய்வு கிடைத்து விட்டது போல………… அப்பாடா எனக்கும் தோசைக் கரண்டி பயம் விட்டது” என்று சிரிக்க

ஜெயந்தி பார்வையாலே முறைக்க………….. அவளை விட்டு நகர்ந்தாள் தீக்‌ஷா…. அதன் பின்

அன்று தனியாய் சிக்கிய யுகியிடம்….

“யுகி உங்க அண்ணா லவ் பண்றாரா என்ன” என்று கேட்டு வைக்க……..

“அவர்தானே நல்லா பண்ணுவாரு……… எனக்குத் தெரிஞ்சு இல்ல………..

”சோ உனக்குத் தெரிஞ்சு இல்லை……….. நீ பண்றது கூடத்தான் உங்க வீட்டு மூத்த பேக்குங்க ரெண்டுக்கும் தெரியல……….. உனக்குத் தெரியாம கூட இருக்கலாம்…..” என்றவளை

”சந்தடி சாக்கில….. நல்லா திட்டு அவங்க ரெண்டு பேரையும்…………..என்றபடி”

“அண்ணாவுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க….. அப்டினு சொல்றதை விட,……… கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க………. ”

அப்டியா என்று விழி விரித்தவள்………… யாரு…..யாரு……… என்று ஆர்வமுடன் கேட்க

“இளமாறன்… அண்ணா வோட ஃப்ரெண்ட்………. அவங்க சிஸ்டர்………. படிச்சுட்டு இருக்காங்க….. லண்டன்ல……… இளாவுக்கு ராதாவையும்…….. அண்ணாக்கு அந்தப் பொண்ணையும் எடுக்கலாம்னு ஒரு எண்ணம்……… ராதா பிரச்சனை பண்ணிட்டா……” என்று புதுக்கதை சொல்ல

“இன்ட்ரெஸ்ட்………….. ஸ்டேட்டஸ் = ஸ்டேட்டஸ்…… “ என்று சிரித்தபடி கேட்டவள்…

”அவங்க…… உன்னோட பெரியவங்களா……. மரியாதையா பேசுற” என்ற போது

“சின்னப் பொண்ணுதான்……… அண்ணியா வரப் போறது அவங்கதானே…….. சோ இப்போதிருந்தே மரியாதை…. அப்புறம் வராது “ என்று சொல்ல

”ஓஓஓஓஓ” என்று ராகம் இழுத்தவள்

“இதுக்காகவே உங்க வீட்டுக்கு மூத்த மருமகளா வரலாம் போல இருக்கே…… நீ கூட…. உன்னை விடு,,,, சுரேந்தர் அத்தான் கூட மரியாதையாத்தான் பேசுவாங்களா” என்று கேட்க

”ஆமாம்…… இதுல என்ன ஆச்சரியம்………” என்றபடி கடந்து செல்ல…….. புருவம் உயர்த்தினாள்……… தீக்‌ஷா……

”டேய் மரியாதைக் குடும்பத்தோட சின்ன ராஜாவா நீ………….” என்று அவன் பின் சத்தமாகக் கேட்க………

”அடங்க மாட்டியா நீ………….. உன்னை” என்று அவன் ஒற்றை விரலால் மிரட்ட……

“ஆர்த்தி” என்று கத்த………….. அவன் கையெடுத்து கும்பிட

“அது……. அந்த பயம் இருக்கட்டும்” என்றபடி மாடியின் மேல் கைப்பிடிச் சுவரில் வெளிப்புறமாய் திரும்பி உட்கார்ந்தாள்……… அப்போது……

கீழே விஜய் காரை எடுத்தபடி மேலே பார்க்க…… சட்டென்று உள்புறம் திரும்பி இறங்கி விட்டாள்……….

“மேல வந்து பொண்ணா நீன்னு லெக்சர் எடுப்பான் இவன்” என்றவள் மாடியை விட்டும் இறங்கியிருந்தாள் ……………………….

1,343 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page