top of page

அன்பே நீ இன்றி-45

அத்தியாயம்:45

அடுத்த 2 நாட்களிலும் அதேபோல் விஜய்யின் தூக்கம் தொடர….. அதிலும் அவன் உணராமலே எப்படி அவன் தூங்குகிறான் என்பது கூட அவனுக்கு ஆச்சரியம் இல்லை… அருகில் இருந்த படுக்கையில் சென்று உறங்குவதைக் கூட உணர முடியாத அளவிற்கு தூக்கம் நம்மை ஆட்கொள்கிறதா என்பதுதான் அவன் ஆச்சரியம்….

அன்று ராதா இரவுச் சாப்பாடு கொடுக்கும் போது………….ஏனோ பசிக்காமல் இருப்பது போல தோன்ற மறுத்தவன்….. அப்படியே மனைவியின் அருகில் தலை சாய… பாலையாவது குடிக்குமாறு….. ராதா கட்டாயப்படுத்த ஆரம்பித்தாள்…

ஒரு கட்டத்தில் விஜய் அவளின் கட்டாயம் தாங்காமல் வாங்கப் போக… ராதாவின் கை லேசாய் ஆடியது…..

தமக்கையை யோசனையோடு பார்க்க… அவன் பார்வையின் தீர்க்கம் தாங்க முடியாமல்…………ராதாவின் கண்களில் நீர் வழிய… விஜய்க்கு அப்போதுதான் புரிந்தது…. தன்னை மறந்த தூக்கத்தின் காரணம்…

விஜய் கோபமெல்லாம் படவில்லை…………… கையில் வைத்திருந்த டம்ளரையே வெறித்துப் பார்த்தவன்……….

ராதாவின் கைகளில் மீண்டும் கொடுத்தபடி…

“ராதா………. உன் அண்ணன்…………. அவன் பொண்டாட்டி பக்கத்தில் இப்படி பைத்தியக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கானேனு பார்க்கிறியா….. இது அவ கண் விழிக்கிற நொடிக்காக மட்டும் இல்லம்மா…… ஒருவேளை…. நான் கண் மூடி இருக்கிற நேரத்தில் என்னை விட்டு போய்ருவாளானு கூட……………என்று அவன் முடிக்கவில்லை…………

வார்த்தைகளை முடிக்க விடாமல்… ராதா அவனின் வாயை……கைகளால் மறித்தாள்…..

“நம்ம தீக்ஷாவுக்கு ஒண்ணும் ஆகாதுண்ணா….” என்று கலங்கிய விழிகளாய்ச் சொல்ல………

விஜய் விரக்தியாய் சிரித்தான்……………..விதி ஆடும் ஆட்டத்தில் கைப்பாவையாய் இருக்கும் அவனின் நிலையை அவன் ஓரளவு உணர்ந்து கொண்டு விட்டான்……………. ஆனால் அதன் சுழலில் சிக்கிக் கொண்ட நிலையைத் தாண்டி வரும் நிலை அவனுக்கு புலப்படவே இல்லை…. அந்த சுழலோடு போராடிக் கொண்டிருந்தான்…. போராட பழக ஆரம்பித்தான்

----

அதன் பிறகு தன் வீட்டில் இருந்து வந்த எந்த உணவையும் சாப்பிடப் பயந்த விஜய்….. காத்தமுத்து முருகேசன் வாங்கி வந்த உணவை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டான்……………

மாதம் ஒன்றைக் கடக்க… சக்தி….. நடமாட ஆரம்பிக்க….. விஜய்யின் நிலை அறிந்து…. தீக்ஷாவையும் பார்த்து வந்தாள்….. சக்தி நன்றாக தேறி விட்டாள்…. அவளுக்கு இருக்கும் ஒரே அபாயக்கட்டம்… அவளின் இதயத்தில் உள்ள குறை தான்…

அதற்கான சிகிச்சைக்கு….. விஜய் ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தான்….

சக்தியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வது…. காத்தமுத்து….. முருகேசனிடம் தீக்ஷாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது…. என்று தன் வட்டத்தை சுருக்கிய விஜய்……………

சுரேந்தர்…. தீனா…. இருவரும் தொழில் ரீதியாக பேச வந்தால் கூட தவிர்த்தான்………. இவனைப் பார்க்க….. தீக்ஷாவைப் பார்க்க என யார் வந்தாலும்….. மௌனம் தான்……….. கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தை,, உருவத்தில் மட்டுமில்லாமல்………. பழக்க வழக்கங்களிலும் மாற்ற ஆரம்பித்திருந்தான் விஜய்…………………

கலைச்செல்வியும்… ராகவேந்தரும்………… தன் மகனின் நிலை தாங்காமல் துடிக்க ஆரம்பிக்க….

கலைச்செல்வி ஒருகட்டத்தில் ராதாவை திட்ட ஆரம்பித்து விட்டாள்… அவளால் தான் தன் மகனுக்கு இந்த நிலைமை என்று…. இவள் தீபனை திருமணம் செய்திருக்காவிட்டால்…. இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று… அன்னையாய் அவள் வேதனை…

ஜெயந்திக்கோ…. யார் கண் பட்டதோ ………. இப்படி ஆகி விட்டதே தன் மகளின் நிலை என்று துக்கத்தில் உழள…. இரு குடும்பத்தின் நிம்மதியையும் தீக்ஷா-விஜய் சேர்ந்தே பறித்தனர் என்று சொல்லலாம்…. அவள் தன் உணர்வு மறந்திருக்க…. இவனோ……………… விஜயேந்தர் என்னும் அடையாளத்தையே இழக்க ஆரம்பித்திருந்தான்………….

-----------

அன்று சுரேந்தர் தீனாவின் வீட்டை அடைந்த போது மாலை 6 மணி…… தீனா திடிரென்று சுரேந்தருக்கு போன் தன் செய்து வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்……. என்ன விசயம் என்று கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை தீனா….

விஜய் மருத்துவமனையே கதி என்றிருக்க, யுகிக்கும் அனுபவம் இல்லாததால் தடுமாற சுரேந்தருக்குத்தான் வேலைப்பளு தாக்கியது….. ஒருபுறம் அலுவலகம் மற்றும் கட்டிடங்கள்…. மறுபுறம் குடும்பம் என ஒரே நேரத்தில் சுரேந்தரை தாக்க ஆரம்பிக்க….. சமாளிக்க முடியாமல் தவித்தான் சுரேந்தர்….

விஜய் இருந்தவரை…. அவன் கண்காணிப்பில் இவன் எடுத்துச் செய்வானே தவிர…. இத்தனை தூரம் இவன் மெனக்கெட்டதில்லை…… வீடு, மருத்துவமனை….. அலுவலக, என கிடைக்கும் நேரம் போதாமல் இருக்க….. சுரேந்தரே இப்படி எனும் போது….. யுகியின் நிலைமை அதை விட…. இத்தனை நாளும் விளையாட்டாய் சுற்றித் திரிந்தவனால் திடிரென்று பொறுப்புகளை ஏற்க முடியாமல்……. திணறினான்….

அவர்கள் குடும்பத்திற்கு இடையில் வந்த தீபனுக்கு இவர்களின் குடும்ப வழக்கத்திற்குள்… திடிரென்று நுழைய முடியவில்லை…. இருந்தும் அவனும் முடிந்தவரை இவர்களுக்கு தோள் கொடுத்தான் தான்….

ஆக மொத்தம்…. புயலின் அமைதியில்…. அவளின் திருவாளன் தேங்கிப் போக…. இரு குடும்பங்களும் திணறின… புயலின் சீற்றத்தில் தான் அழிவும் சேதராமும் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்…. இங்கு தீக்ஷா என்னும் புயலின் அமைதியில் அது நடந்தது…..

தீனா ஏன் அழைத்திருக்கிறான்….. என்ற யோசனையில் சுரேந்தர் அமர்ந்திருக்க…. சுரேந்தரிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தீனா யோசித்துக் கொண்டிருந்தான்…. இருந்தும் சுரேந்தரிடம் சொல்லி ஆக வேண்டுமே……

“சுரேன்…. எப்படி சொல்றதுனு தெரியவில்லை… ஆனால் உன் குடும்பம் இருக்கிற சூழ்நிலையில் உன்னிடம் மட்டும் தான் சொல்ல முடியும் என்று…. ஆரம்பித்தான்…

“தீனா….. சுத்தி வளச்சுலாம் பேசாதா…. ப்ளீஸ்… நான் இருக்கிற நிலைமையில சத்தியமா யோசிக்கிற அளவுக்கு கூட எனக்கு தெம்பு இல்ல..” என்ற போது தீனாவுக்கும் அவன் நிலை பரிதாபமாக இருந்தது….

“நரேன் மீட் பண்ணினான் என்னை…”

நரேன்…. விஜய் தீனா இருவரின் தோழனும் ஆவான், அவன் மனைவி ரேவதி, தீக்ஷாவைக் கண்காணிக்கும் மருத்துவக் குழுவில் அவளும் இருந்தாள்….

“ரேவதி, தீக்ஷா பற்றி அவன்கிட்ட சொல்லி இருப்பா போல…. ரொம்ப கஷ்ட்டமா இருக்குடா… தீக்ஷாவோட நிலைமை இப்படியே போனது என்றால்….” என்று ஆரம்பிக்க

சுரேந்தர் மனம் கலங்க

“என்ன சொன்னாங்க…. தீக்ஷாவுக்கு வேற ஏதாவது ப்ராப்ளமா… இங்க முடியாதுனா…. நாங்க வேற எங்கேயாவது பார்த்துக் கொள்கிறோம்… “ வேகமாய்ச் சொல்ல

“சொல்றதைக் கேளு…. என்று அவனைச் சமாதானப்படுத்தியவன்… நரேன் சொன்ன தகவலைச் சொன்னான்…

தீக்ஷா எதற்கும் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை என்பதால் மூளைச்சாவிற்கான பரிசோதனைகள் அவளுக்கு எடுக்கப்படப்போவதாக ரேவதி சொல்லி இருந்ததாகவும்… அப்படி அவர்களின் சந்தேகம் முடிவாகி விட்டால்…. யோசனையுடன் கவலையாய் நோக்கினான் தீனா

அதன் பிறகு தீக்ஷா….. விஜய் இவர்களின் குடும்பம்…. நிலைமை யோசிக்கவே முடியவில்லை அவனால்

சுரேன் இடிந்து போனான்…………….. இதை எப்படி தன் அண்ணனிடம் எப்படி சொல்வது…. தவித்தவனை தீனாதான் தேற்றினான்…

“சுரேன்… இப்போதைக்கு நாம யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… முடிவு வரட்டும்…. அதுவரை குறிப்பாக விஜய்க்கு தெரிய வேண்டாம் என்று சொன்னவன்

சுரேன் டெஸ்ட் ரிஸல்ட் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை இப்போதே உருவாக்கிக்கோ….. ஏனென்றால் நீதான் திடமா இருக்க வேண்டும் இந்த சிச்சுவேஷன்ல…. என்ற போதே சுரேன் உடைந்திருந்தான்….

“எப்படி தீனா…. எங்க அண்ணா இதைத் தாங்குவாரு,… என்னாலயே முடியல… வாழ வேண்டிய பொண்ணு அவ…. அவளுக்கு ஏன் இந்த நிலைமை தீனா….. என் கண்ணு முன்னால பம்பரமா சுத்திட்டு இருந்த பொண்ண இப்படி படுத்த படுக்கையா பார்க்கிறதே கொடுமையா இருக்கு…. இன்னும் நாங்க என்னவெல்லாம் படனும்,… எங்க அண்ணா என்ன பண்ணினார்…. அவருக்கு ஏன் இந்த வேதனை…. நாங்க எப்படி அவர மீட்டெடுக்கிறது என்று புலம்ப ஆரம்பிக்க…

சுரேன்… இந்த உலகத்தில பிறக்கிற எல்லோரும் ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும்…. விஜய்க்கு இது கஷ்டம் தான்…. ஆனாலும் இப்படியே இருந்து விடப் போகிறானா….. கண்டிப்பாக இதை எல்லாம் சமாளிச்சு வெளிய வருவான்…. எனும் போதே

தன் அண்ணனை நினைத்து கவலையில் மூழ்கிய சுரேந்தர்…. அப்படியே அமர்ந்திருக்க….

“சுரேன் நாளைக்குதான் எல்லா டெஸ்ட்டும் எடுக்கப் போறாங்க…. நீ அதுவரை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ.. உன்கிட்ட மட்டும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது” என்றவன்

“தென் சக்திக்கு கூட இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு டோனார் தேடிட்டு இருக்காங்கள்ள” என்று சந்தேகமாய் இழுக்க…

அவனின் உள் நோக்கம் புரிந்த சுரேந்தர் அடி வரை ஆடிப் போனான்

“ப்ளீஸ் தீனா… இது மாதிரிலாம் பேசாத…. எங்க தீக்ஷாக்கு ஒண்ணும் ஆகாது என்றவன்…. குரல் கம்ம ஆரம்பிக்க

“சுரேன்….. கவலைப்படுவதை விட்டுவிட்டு இனி என்ன பண்ணினால் நல்லது நடக்கும்னு யோசி…. அந்தப் பொண்ணு சக்தி மேல விஜய்க்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு…. அது மட்டும் இல்லாமல் சக்திக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொன்னாங்க… எல்லாத்தையும் யோசிச்சு பாரு… சக்திய ஏன் இந்த மாதிரி சூழ்நிலையில் விஜய் கண்ணில் காட்ட வேண்டும்,……தீனா பேசிக் கொண்டே போக…

சுரேனின் மனதில் குழப்பம்…ஏற்கனவே குழம்பிய நிலையில் இருந்தவன் இப்போது முற்றிலும் குழம்ப... தீக்ஷாவின் நிலையில் இருந்து மாறி.. தன் அண்ணனின் நிலையை எண்ணி கலங்கியவனுக்கு…. சக்தியை வைத்து தன் அண்ணனின் வாழ்க்கையை சரி செய்யலாம் என்று முடிவெடுத்தான்…………….

ஓரளவு அவனைச் சமாதானப்படுத்திய தீனா… உடனடியாக அவனுக்கு தெரிந்த மருத்துவ தோழியிடம் விபரங்க:ளை அனுப்பச் சொல்ல.. சொன்னதைச் செய்யுமாம் கிளிப்பிள்ளை என்பதைப் போல சுரேனும் தீனா சொல்வதை எல்லாம் செய்தான்….

எப்போதும் சுரேந்தர் எதைச் செய்தாலும் கொஞ்சம் யோசிப்பான்….. ஆனால் அன்று எதையும் யோசிக்காமல் செய்து விட்ட பின்தான் சிந்தித்தான்…. சக்தியின் மனநிலையை….

தீனா… சக்திய வைத்து அண்ணன சரி பண்ணலாம்னு சொல்றீங்க …. ஆனா. சக்தி இதற்கு சம்மதம் சொல்வாளா… அவள் ஒப்புதல் இல்லாமல் இப்படி செய்து விட்டேனே என்று கலங்க ஆரம்பிக்க… தீனாக்கும் உள்ளூர நெருடலாக இருந்தாலும்….

“சக்திக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கனவுல கூட கிடைக்காதுடா…. கண்டிப்பாக சம்மதம் சொல்வாள் என்று சுரேந்தரை சமாதானப் படுத்தினான்…. சக்தியிடமும் சென்றனர்

ஆனால்… நிலைமையோ தலைகீழாய் இருந்தது…

சக்தியிடம் இருந்து வந்த எதிர்ப்பில் சுரேனும் தீனாவும் அதிர்ந்தனர்….

இருவரின் அதிர்ந்த முகத்தினைப் பார்த்த சக்தி…

“சாரி சார்…. என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க…. விஜய் சார்க்கு இப்படி ஒரு கஷ்டம்னு நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது…. ஆனால் நீங்க சொல்வது எதுவுமே நடக்காது சார்…. ஏனென்றால்… விஜய் சார் என்னைக் காப்பாற்றிய போது…. பரிதவித்து நின்ற பாஞ்சாலியைக் காப்பாற்றிய அந்த கண்ணன் போலத்தான் எனக்கும் தோன்றினார்….. பாஞ்சாலிக்கு கிருஷ்ணர் ஆபத்பாந்தவன் மட்டுமல்ல… அண்ணன் என்ற உறவுமுறையும் தான்…. அந்த முறையில் தான் நானும் விஜய் சாரை நினைக்கிறேன்…. அவர் மனைவிக்காக நான் வேண்டிக்கிறேன்... அவரோட நல்ல மனதுக்கு அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது..” என்று முடிக்க

சக்தியிடமிருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை….. இருவரும்…. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்… பேச முடியாமல் சென்றனர்… இருவரும்…

ஏன் சக்தியின் பெற்றோர்களே அதிர்ந்து தான் போனர்.... சுரேன் தீனா சொன்ன தகவலில்…..

---

தனிமையில் சக்தி மன்றாட ஆரம்பித்தாள்… தன்னை நினைத்து அல்ல…. விஜய்யின் மனைவியை நினைத்து….

சக்திக்கு தீக்ஷாவின் நிலைமை தாங்கவே முடியவில்லை…. அவள் விஜய்க்காகாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று மனதார வேண்ட ஆரம்பித்தாள்….

தன் உயிர் போனால் கூட பரவாயில்லை…. தன் மானத்தினைக் காப்பாற்றிய விஜய் நன்றாக இருக்க வேண்டும்…. தான் வாழ்ந்து என்ன பிரயோசனம்… தன் பெற்றோர்களுக்குதான் பாரம்… ஆனால் தீக்ஷா பிழைத்தால்….. எத்தனை பேருக்கு சந்தோசம்…. பிரார்த்திக்க ஆரம்பித்தாள் சக்தி….

தீக்ஷாவின் நிலை எதுவும் அறியாத விஜய்……… தீக்ஷாவின் அருகில் விழிகள் மூடி விழித்திருந்தான்… வழக்கம்போல்…

ஒழுங்கான தூக்கம் இல்லாமல்….. அடுத்த நிமிடம் என்ன ஆகுமோ என்று நேரத்தையும் நாட்களையும் கடத்திக் கொண்டிருந்தான்….. துக்கம் ஒருபுறம்… மற்றவர்களின் பரிதாபம் என விஜய்யை அலைகழித்தன என்றாலும் ….எப்படியும் தன் மனைவியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற உந்துதல் அவனை ஓரளவுக்கு மனிதனாய் நடமாட வைத்தது…. இதற்கிடையே சக்தியின் உடல்நிலையையும் அவ்வப்போது மருத்துவர்களிடம் விசாரித்துக் கொண்டான்……

எப்போது கண் அயர்ந்தான் என்றே தெரியவில்லை…. திடிரென்று அடித்த அலார்ம் சத்தத்தில் விழித்தவன்…………… அதை அணைக்காமலே தீக்ஷாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்…………….. சாதரண நாட்களிலேயே தீக்ஷா எழுந்து அணைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்… இப்போது அவள் அதை எடுத்து அணைப்பாளா… இருந்தும் அதை எதிர்பார்த்தான்……………. அவளின் அப்பாவி கணவனாய்….

அவளது கைகளின் வெம்மையை தன் கன்னங்களில் சிறிது நேரம் வைத்திருந்தவன்…… இறுக அழுத்தமாய் மூடியிருந்த அவளின் இதழ்களில்……….. தன் கன்னம் வைத்து ஒற்றியவன்…..

“குட்மார்னிங் தீக்ஷா” என்றபடி அவளின் பதிலை எதிர்பாரமால் தன் அன்றைய நாளை தொடங்கினான்……….

சக்தியை பரிசோதிக்கும் மருத்துவர்…. சக்தி ஓரளவு தேறி விட்டதாகவும்..,,,வழக்கம் போல்….. எடுக்கும் மாத்திரைகளை அவள் எடுத்துக் கொண்டாலே போதும் என்றும்… விரைவில் வீடு திரும்பலாம் என்று சொல்லி இருந்தார்….

ஆனாலும் சக்தி தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்ற நிலையில் மாற்றம் இல்லைதான்… அதனால் விஜய் அவளின் இதய நோய்க்கான சிகிச்சையை விரைவில் ஏற்பாடு செய்யவும் சொல்லி இருந்தான்….

இன்று அல்லது நாளை சக்தி வீடு திரும்பலாம் என்று சொல்லி இருந்ததால் சக்தியை பார்த்து விட்டு வருவோம் என்று தீக்ஷாவை அவளது தாயின் கண்காணிப்பில் விட்டு விட்டு சக்தியின் அறைக்குச் சென்றான்…..

ஆனால் சக்தி வழக்கமாய் இருந்த அறையில் இல்லாமல் போக…. அவள் சற்று முன் தான் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தி கிடைக்க…. அங்கு விரைந்தான்….

அங்கு சக்தி மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில்….. தன் உயிரை பிடித்து வைத்திருக்க…. விஜய்க்கு துக்கம் தொண்டையை அடைத்தது….

நேற்று மாலை வரை…. நன்றாகத்தானே இருந்தாள் என்று நினைத்தபடி விஜய் அவள் அருகில் போனான்….

இவன் எப்போது வருவான் என்று அவள் காத்திருந்தாள் போல…

விஜய்யைப் பார்த்த உடன் புன்னகைத்து….. தன் அருகே வரச் சொன்னவள்…

“விஜய் அண்ணா………..” என்று அழைக்க…. விஜய்க்கும் கண்ணிர் அரும்பியது…

”நான் உங்க மனைவி தீக்ஷா ஆக முடியுமான்னு உங்க தம்பி சுரேன் சார் கேட்டாங்க….. அவர்கிட்ட சொல்லிடுங்க…. இந்த சக்தி என்னைக்கும் தீக்ஷா ஆக முடியாது….. அவங்க இதயத்தை… அவங்க முகத்தை எனக்கு மாற்றினால் கூட நான் அவங்களா ஆக முடியாது…” என்ற போதே விஜய் எதுவும் புரியாமல் பார்க்க….

“உங்க மனைவிக்கு ஒன்றும் ஆகாது….. கேடு கெட்ட ஒருத்தனை நேசித்ததினாலோ என்னமோ… அவனைச் சுமந்த இதயம் கூட வீணாகிருச்சு….. ஆனா உங்க மனைவி உங்கள அவங்க இதயத்தில வச்சிருக்காங்க…. அவங்க உங்கள விட்டு எங்கயும் போக மாட்டாங்க” என்ற போதே அவள் கண்களில் கண்ணீர் இறங்கியது….

“தீக்ஷா மேடம் உங்கள விட்டு போய்டுவாங்கனுதான் கடவுள் என்னைக் காட்டி இருக்கிறார்னு தீனா சார் சொன்னாங்க….. அது உண்மை இல்ல…. சாகப் போற என் மூலமா….. உங்க இக்கட்டான சூழ்னிலையில் கடவுள் உங்களுக்கு பரிட்ச்சை வைத்திருக்கிறார்…. அதில் நீங்க பாஸ் பண்ணீட்டீங்க…. உங்க மனைவிய கூடிய சீக்கிரம் உங்களுக்கு தந்து விடுவார் பாருங்க…. நான் உங்க தீக்ஷா ஆக முடியாது… ஆனால் உங்க மனைவி என் அப்பா அம்மாவுக்கு சக்தியா இருப்பா” என்று தன் பெற்றோரைப் பார்த்து சொல்ல….

அவளின் பெற்றோர் துக்கம் தாளாமல் விசும்ப ஆரம்பித்தனர்…..

விஜய்க்கு ஒன்றுமே புரியாமல் அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க …. சுரேந்தர் மற்றும் தீனா வந்து போன விசயத்தை சொன்னார்கள்…. இருவரும்.........

விஜய்க்கு பூமி சுற்றுவது போல் இருந்தது……………… தீக்ஷா என்று மனம் கதறத் தொடங்க ஆரம்பிக்க….. அங்கிருந்து வெளியேறினான்…. அவனின் மொத்த சக்தியும் அவனை விட்டு போனாற்போல் போல் இருக்க…. பிரம்மை பிடித்தவனாய் தன்னவளை நோக்கிப் போனான்….

அங்கோ….. தீக்ஷா பரிசோதனையின் நிமித்தம்… அதற்கு ஆயத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க…. ஜெயந்தி எதுவும் தெரியாமல்

“என்ன தம்பி…. நம்ம தீக்ஷாக்கு ஏதோ டெஸ்ட் எடுக்கனுமாம்…. சுரேன் தம்பியும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிறாங்க….. எனக்கு பயமா இருக்கு… என் புள்ளைக்கு ஒண்ணும் இல்லைல…” என்று அழ ஆரம்பிக்க…. விஜய்யின் பார்வையில் சுரேந்தர் தீனா இருவரும் தலை குனிந்தனர்………………

“அண்ணா ஒரு சின்ன டெஸ்ட்…. “ என நின்று கொண்டிருந்த சுரேந்தர் சொல்ல ஆரம்பிக்க…..

சுரேந்தருக்கும் தீனாவுக்கும் சூரியனின் உக்கிரத்தை தன் பார்வையாலே காட்டினான் விஜய்…

இவர்களின் உணர்வுகள் எல்லாம் தெரியாமல்…. தீக்ஷாவை ஸ்ட்ரெக்சரில் ஏற்ற…. விஜய் எதையும் தடுக்க வில்லை…………. தடுக்கும் நிலைமையிலும் இல்லை…. தன்னைத் நோக்கி கொண்டு வரப்பட்ட தீக்ஷாவை வெறித்தபடி நின்று கொண்டிருக்க…. ஜெயந்திக்கு இப்போது ஏதோ சரியில்லை என்று தெளிவாய்த் தெரிய ஆரம்பிக்க

“அய்யோ என் பொண்ண எங்க கொண்டு போறீங்க…… “ என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க…………. விஜய்யைத் தாண்டி தீக்ஷா கொண்டு செல்லப்பட்டாள்…. விஜய் கல்லாய் சமைந்து நின்றான்…………… திரும்பிக் கூட பார்க்காமல்….

அப்போது……………. எதிர்பாராமல் பணியாளர் ஒருவர் தடுமாற…. ஸ்ட்ரெக்சர் லேசாய்க் கதவில் மோத… விஜய் அப்போதுதான் திரும்பினான்……………

வழக்கமாய் அவள் மனைவிதான் அவனைத் திரும்பிப் பார்ப்பாள்… இன்றும் பார்ப்பாளா என்று பார்க்க……… அவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருந்தாள் தீக்ஷா……ஆம்….அங்கு நடந்த மோதலில் விழி திறக்காமல் தீக்ஷாவின் தலை மட்டும் இவன் புறம் திரும்பி இருந்தது…….

இறுகிய சிலையாய் அவளின் அருகே வந்த விஜய்…. தன் மனைவியைக் கைகளில் அள்ளியபடி….. எங்கே போக வேண்டும் என்று கேட்டதோடு சரி வேறு எதுவும் பேச வில்லை…. வெளியே ஜடமாய் தெரிந்தாலும்… அவனின் இதயம்………….பேராழியின் கொந்தளிப்போடு குமுறிக் கொண்டிருக்க…………… பரிசோதனைக்கான அறையில் தன் மனைவியைக் கிடத்தி வந்தவன் மனதில்…. அவளின் நாவண்ணம் இன்று பல கேள்விகளுக்கான விடைகளை சொல்லியது…

“மூச்சு இல்லாம கூட தீக்ஷா இருப்பா பேச்சு இல்லாம இருக்க மாட்டாள்…”

“நமக்கு பிடிச்சவங்க நம்மை விட்டுப் போறதுதான் பெரிய வலி”

“இந்த தீக்ஷாவுக்காக நல்ல காரியம் பண்ணினால் சந்தோசப் படுவா”

“உனக்கு அழிவு காலம் ஆரம்பிச்சுருச்சுடா”

“தீக்ஷா டூ சக்தி… சக்தி டூ தீக்ஷா”

“நான் உயிரோட இருக்கும் போதே என்னை நாலு பேர் முன்னால தூக்க வைக்கிறேன்”

அவன் காதில் ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியால் அடித்த்து போல் அடிக்க…. தாங்க முடியாமல் விஜய் தள்ளாட ஆரம்பித்தான் ..

சுரேந்தர் ஓடி வந்து தன் அண்ணனைத் தாங்கிப் பிடித்தான்

”விடுடா என்னை…. அவ என்னை விட்டு போக நெனச்சுட்டா….. மூச்சை விட்டுட்டு யாரோடோ பேச்சா போகப் போறாடா…… என்னை மொத்தமா மூழ்கடிச்சுட்டு போகப் போறாளாடா….லூசுத்தனமா பேசுறானு சொல்வேண்டா…. உருப்படியா பேசுன்னு சொல்வேன்…. அவ எல்லாம் தெரிஞ்சுதான் பேசி இருக்கா…. நான்தான் எதையும் புரிஞ்சுக்க முடியாத லூசா இருந்திருக்கேன்…. எல்லாத்தையும் உணர்த்திட்டாடா…. “ என்று சுவரோடு சாய்ந்தவன்…

தீனாவைப் பார்த்து வெறித்தான்…

“என்னைப் பழி வாங்க… உனக்கு வேற வழியே தெரியலையாடா….. என் தம்பியவே எனக்கு எதிரா மாத்திட்டியாடா” என்று கோபத்திலும் துக்கத்திலும் வார்த்தைகளை விட….

என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஜெயந்தி …. விஜய்யின் அருகில் அழுதபடி அமர…

“உங்க பொண்ணா இருக்கிற வரை அவளுக்கு ஒண்ணும் ஆகலை அத்தை… இந்தப் பாவப்பட்டவன கைப்பிடிச்சு…………. இப்போ என்னை விட்டு போகப் போறா அத்தை” என்றவனின் புலம்பல் வார்த்தைகள் தொடர…. ஜெயந்தி உறைந்து போனாள்….

விஜய் இருக்கும் நிலையில்…. தீக்ஷாவின் பரிசோதன் முடிவுகள் வரும் வரை அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போக….. வேறு வழியின்றி அவனுக்கு மயக்க மருந்து…. ஊசி மூலம் செலுத்தப்பட…

விஜய் திமிறினான்…

“விடுடா…. நான் திரும்ப முழிக்கும் போது அவள பார்க்க முடியுமாடா…. எனக்கு இது வேண்டாம்……………” என்றவனின் வார்த்தைகள் காற்றில் பறக்க… அவன் திமிற திமிற அவனுக்கு மருந்து செலுத்தப்பட விஜய் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கினான்………….

அடங்கியவனின் பார்வை அவன் எதிரில் இருந்த கண்ணாடியில் பட்டு….. அவன் நெஞ்சத்தில் நிலைகுத்தி நின்றது………. அன்று உதட்டின் சாயத்தால் அச்சாரம் இட்டிருந்தாள் அவன் மனைவி………. இன்று…….. அந்த இடத்தில் அவளின் இரத்தம் கறையாய் வழிந்து கொண்டிருக்க……………. விஜய் அதைப் பார்த்தபடியே மயங்கினான்…………. இதழில் புன்னகையோடு……………

தன் மனைவி………. தன்னை விட்டு போக மாட்டாள் என்ற நம்பிக்கையோடு………….. தன்னை உணர்கிறாள் என்ற உவப்போடு……. அவளின் உடலில் உணர்வுகள் அவளை விட்டு அற்று போகவில்லை என்ற உறுதியோடு………………………. நிம்மதியாக கண் மூடினான்…….. வெகு நாட்களுக்குப் பிறகு

2,196 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page