top of page

அன்பே நீ இன்றி-41

அத்தியாயம் 41:

ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த இளமாறன்….. கையில் இருந்த ப்ரீஃப்கேஸில்… விஜய்யின் ப்ளான் மற்றும் இதர தகவல்களை பார்த்தபடி…. மனமெங்கும் வெற்றி எக்காளத்துடன் அமர்ந்திருந்தான்… விஜய்யின் திட்டமெல்லாம்…. இனி இவன் திட்டமே….. அக்ரிமெண்ட்டில்… இவனை 2 வது பார்ட்னராக மட்டுமே விஜய் போட்டிருக்க…. விஜய் வருவதற்குள்….

வருவதற்குள் என்ன வருவதற்குள்…. வரவே போவதில்லை…. தன் மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழவே அவனுக்கு நேரம் போதாது…… அவனாவது வருவதாவது….

அக்ரிமெண்ட்டை தன் பேருக்கு முழுவதுமாக மாற்ற முடியாது…. ஏனெனில் விஜய் பில்டர்ஸ் பேரை வைத்துதான் அங்கு போகவே முடியும்…. பெரும்பான்மையான லாபங்கள் இவன் வசம் கையகப்படுத்துவது போல மட்டுமே அகிரிமெண்ட்டை மாற்ற முடியும்… எப்படியோ…. தன் கையில் தான் இனி அந்த ப்ராஜெக்ட்….

அதே சந்தோஷத்தோடு.. வெளிநாட்டில் இருக்கும் தங்கைக்கு போன் செய்ய….

”சொல்லுங்கண்ணா” எரிச்சலோடு பதில் வந்தது…. இளமதியிடமிருந்து….

“இளமதி… உங்க அண்ணாக்கு அந்த பெரிய ப்ராஜெக்ட் கிடைக்கப் போகுது….” என்றவனின் வார்த்தைகள் அவனின் தங்கைக்கும் சந்தோஷம் தந்தாலும்… அதை எல்லாம் விட்டவள்…

“அதெல்லாம் விடுங்க அண்ணா… அண்ணியோட சேர்ந்து வாழவே முடியாதா…. டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிட்டாங்கனு… அம்மாவும் அப்பாவும் ரொம்ப ஃபீல் பண்றாங்கண்ணா….” என்று தன் வருத்தத்தை வெளியிட…

””நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசுற…..” என்றவனின் குரலில் இருந்த எரிச்சலும் கோபமும் அவளைச் சென்றடைய… அவளும் அதே கோபத்தில் பேச ஆரம்பித்தாள்….

“அண்ணிகிட்ட நான் பேசினேன்….. நீ பண்ணிய வேலைக்கெல்லாம் அவங்க உன்னை ஜெயில்ல தள்ளாம விட்டாங்கனு சந்தோசப்பட்டுட்டு இருக்கேன்… அவங்களை எத்தனை தூரம் கொடுமைப் படுத்தி இருக்க….. அவங்களை கருவைக் கலைக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணிருக்க… எல்லாமே என்கிட்ட சொல்லிட்டாங்க… இப்போ கூட பரவாயில்லை அண்ணா…. அவங்க கிட்ட பேசு அண்ணா”

“இளமதி………………. அவ எவனையோ லவ் பண்ணிட்டு….” என்று பல்லைக் கடித்தவன்….

“அந்தக் குழந்தைக்கு என் பேரை இனிஷியலா போட நான் சம்மதிக்கனுமா” என்று நாக்கில் நரம்பே இல்லாமல் பேச…

“ச்சேய் எப்டிண்ணா இப்படிலாம்…. இன்னைக்கு இவ்வளவு தூரம் பேசுறவன்…. அந்த விஜயேந்தர் தங்கச்சி ராதா…. அவளும் எவனையோ விரும்பினாள் தானே… அன்னைக்கு மட்டும் ஏன் சம்மதம் சொன்ன” என்று சூடாய்க் கேட்க

“அதெல்லாம் இதோ இந்த ப்ராஜெக்டுக்காகத்தான்…. “ என்று கூசாமல் சொன்னவனின் குரலில் இளமதி அதிர்ந்து…

“உன்கிட்ட எனக்கு பேசவே விருப்பம் இல்லை…. நீயா போன் பண்ணினதால் நானும் பேசிட்டேன்…. எப்டியோ போ…. நான் போனை வைக்கிறேன்…. உன் வாழ்க்கை உன் கைலதான்” என்றபடி போனை வைக்கப் போக….

“உனக்கு ஒரு நல்ல விசயம் சொல்லலாம்னு போன் பண்ணினால்… நீ என்னையே எரிச்சல் படுத்துற….” என்று சலிப்பாய் சொல்ல..

இளமதிக்கு கேட்கப் பிடிக்காவிட்டாலும்…. ” என்ன ” என்று விருப்பமில்லாத தன்மையோடு கேட்க

”விஜய் பில்டர்சுக்கு கிடைக்க வேண்டிய லாபம் எல்லாம் இனி நமக்குதான்…. ” என்றவனின் வார்த்தைகளில் மிகவும் கடுப்பானாள் இளமதி…

விஜயேந்தர்… தீக்ஷா என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவளுக்கு பற்றிதான் எரியும்…. இருந்தும் தன் வாழ்க்கையில் அவர்களைக் கடந்தும் வந்து விட்டாள் தான்…… இந்த இளமாறனால் தான் அவ்வப்போது… விஜய்யைப் பற்றி காதில் விழுந்து தொலைக்கும்…. இவளும் எரிவாள்…. இன்றும் அதே எரிச்சலோடு

“அந்த விஜய்க்கு லாபம் கிடைத்தால் என்ன கிடைக்கவில்லைனா என்ன…. அதை எதுக்கு என்கிட்ட சொல்ற…. என்னண்ணா ஆச்சு…உனக்கு…. அவனப் பத்தி என்கிட்ட ஏன் பேசுற…. எத்தனை தடவ சொன்னாலும் கேட்க மாட்டியா….” என்று பொறிய ஆரம்பிக்க…

“ஹேய் ஹேய் கூல் கூல்….. அவன சுத்த வச்சுட்டுதான் உன் அண்ணன் இப்போ சந்தோசமா பேசிட்டு இருக்கான்..”

“புரியல….” என்றபடி இளமதி இழுக்க

“உன்னை கேவலமா பேசுனான்னு சொன்ன…. அந்த தீக்ஷா இப்போ நம்ம ஆளுங்க கஸ்டடில….. உனக்கு இதச் சொல்லத்தான் போன் பண்ணினேன்……”

“அவள வச்சு நீ என்ன பண்ணப் போற” வேக வேகமாய் வார்த்தைகள் விழ….

”அது கூடிய சீக்கிரம் உனக்கே தெரியும்…. சரி நான் வைக்கிறேன்…. ஃப்ளைட்டுக்கு லேட் ஆகிருச்சு…” என்றபடி விடைபெற்றவனை இந்த உலகமும் சற்று நேரத்தில் விடை கொடுத்து அனுப்பப் போவது தெரியாமல்…. தன் முடிவை நோக்கி நடந்தான் இளமாறன்…

அவரவர்க்கான பாவ தண்டனைகள்…. ஜென்ம ஜென்மமாய் தொடரும்… என்பதெல்லாம் போய்…..அவ்வப்போதே இப்போதெல்லாம் தீர்மானிக்கப்படுகிறது போல… இளமாறனின் மரணமும் அதை நிரூபித்தது….

----------------

நகைக் கடையின் வைரங்கள் பிரிவில் இருந்தான் விஜய்….. இந்த நகைத் தேர்வெல்லாம் அவனுக்கு பழக்கமே இல்லை…. தாயோடும் தங்கையோடும் அவ்வப்போது வந்திருந்தாலும்…. தேர்வெல்லாம் செய்ததில்லை… எடுத்த பொருள்களுக்கு பில் கட்டுவதோடு சரி….

இன்று தன் மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசளிக்க விரும்பிய விஜய்க்கு எதை எடுப்பது… எப்படி எடுப்பது என்று தெரியவில்லை….

”இதெல்லாம் தேவையா…..தீக்ஷாவையே கூட்டி வந்து எடுத்து கொடுக்கலாம்” என்றெல்லாம் நினைத்தவன்….பின் அந்த எண்ணத்தை எல்லாம் கைவிட்டு விட்டு…. பெரிய கம்ப சூத்திரமா…. டேய் விஜய் செலெக்ட் பண்ற… உன் பொண்டாட்டிகிட்ட பாராட்டு வாங்குற” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்…. நகைத் தேர்வில் இறங்கினான்…

தான் எவ்வளவு விலை மதிப்பு உயர்ந்த பொருளை எடுத்துக் கொடுத்தாலும்…. அதை எல்லாம் விட…. இன்று அவள் முன் எதிர்பாராமல் போய் நிற்கப் போவதுதான்….. அவள் பிறந்த நாளின் மிகப் பெரிய சர்ப்ரைஸாக தன்னவளுக்கு இருக்கும் என்று நினைத்தபடியே தேர்வு செய்து கொண்டிருந்தவனின் கண்களில்…. அந்த பென்டண்ட் தென்பட்டது… இதய வடிவில் அமைந்திருந்த அதன் நடுவில் மற்றொரு இதயம்… வைரங்களால் பதிக்கப்பட்டிருக்க…. அவனையுமறியாமல் கைகள் அதை நோக்கி செல்ல…அடுத்த சில நிமிடங்களில் அவன் கைகளில் அவன் சொந்தமாக இருந்தது.. அந்த பென்டண்ட்….. பில் போடும் முன் தன் கைகளில் அதை வைத்துப் பார்த்தான்….

வெளியில் தங்கத்தால் இருக்கும் இதயம் அவனதுடையதாகவும்….. உள்ளே வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த அந்த சிறிய இதயம்… தன்னவளுடையாதாகவும் கற்பனை செய்து பார்த்தவன்….. தங்கள் திருமணத்தின் முந்தைய இரவில் அவளுக்கு அணிவித்த செயினோடு சேர்த்து இதை அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்தவன்…. அந்த வைர பென்டண்டை தன் உள்ளங்கையில் வைத்து பார்த்தபடி தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்….. சாதரண கரிதான் வைரமாய் உருமாறுகிறது………. அதுபோல.. தன் நிலை மாற்றத்தினை வைரத்தின் நிலைமாற்றத்தோடு ஒப்பிட்டவனுக்கு சிரிப்புதான் வந்த்து…..

ஆனால் விஜயேந்தர் என்னும் வைரம் இன்னும் ஜொலிக்க பட்டை தீட்டப்பட வேண்டும் போல….. அவனின் உறுதியை அவன் மனைவி மூலமே சோதிக்கப்படப் போகிறது என்பதை உணராமல் அப்போது சிரித்தான்….….

ஆனால் இன்னும் சில மணித் துளிகளில் அவன் சிரிப்பெல்லாம்…………. அவன் மனைவியின் நிலை போலவே அடங்கப் போகிறது என்று தெரியாமல்…………. உள்ளம் நிறைந்த காதலோடு………… தன் மனைவியை சந்திக்கும் நேரத்திற்காக ஏங்க ஆரம்பித்தான் விஜய்

அடுத்த ஒரு மணி நேரத்தில்…. தன் வேலையெல்லாம் முடித்தவன் அலுவலகத்திற்குச் சென்று விட்டு….… அதன் பிறகு கொஞ்சம் தாமதமாகத்தான் வீடு கிளம்ப முடிவு செய்தான்…. கிட்டத்தட்ட 12 மணி அளவில்…. போனில் தன் வாழ்த்தை எதிர்ப்பார்ந்திருக்கும் அவனது மனைவிக்கு…. நேரில் சென்று வாழ்த்தைக் கூறி…. அவள் முக மலர்ச்சியை தன் மனதில் பதிவு செய்யும் எண்ணத்தில்தான் தாமதமாக போக முடிவு செய்ததே… ஆனால் அதற்கு முன்னமே கிட்டத்தட்ட 8 மணி அளவில் சுரேந்தர் கால் செய்தான்…

எடுக்கும் போதே குரலில் இருந்த பதட்டம்…… விஜய்க்கு தூக்கி வாரிப் போட…..

“என்ன சுரேன்….” என்றபோது விஜய்யின் குரலில் லேசான நடுக்கம் வரத்தான் செய்தது….

”அண்ணா………. இளமாறன் போன ஃப்ளைட்…. ஆக்ஸிடெண்ட்…..” என்றவனால் அதற்கு மேல் பேசவே முடியவில்லை….

ஒன்று இளமாறன் இறப்புச் செய்தி… மற்றொன்று…. தன் அண்ணனும் இதே ஃப்ளைட்டில் போக முடிவு செய்திருந்ததும் தான்…… அவனின் இந்த பதட்டத்திற்கு காரணம்….

விஜய்க்கு ஒரு நிமிடம் …….. அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை….. அவன் பயணத்தினை ரத்து செய்த காரணமே….. தீக்ஷாதான்…

தீக்ஷாவைப் பார்த்த விஜய்க்கு… அதிலும் அந்தப் புடவையில் தன்னவளைக் கண்ட பின்னர்….. ஏனோ மனம் மனைவியையே சுற்றி வந்து கொண்டிருக்க…. தனது இன்றைய பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்தான்…. இளமாறனிடம்…. முக்கிய கோப்புகளை எல்லாம் கொடுத்து…. பார்க்க வேண்டிய நபரின் விபரங்களை எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்திருந்தான்…. ஆனால்… நடந்ததோ…

விஜய் போய் இருந்தால்… அதை நினைக்கையிலே அவனின் முகம் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது…… ஆக தீக்ஷாவின் காதல் தான் அவளது காதல் மட்டுமே அவள் கணவனைக் காப்பாற்றியது என்பதே உண்மை……….

சுரேந்தருக்கு…. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை….. தொலைக்காட்சியில் ஃப்ளாஸ் நியூஸ் பிரிவில் விமான விபத்துச் செய்தி ஓடிக் கொண்டிருக்க… வீட்டில் அனைவருக்கும் அது ஒரு செய்தியாக இருக்க… சுரேந்தருக்கு மட்டுமே உள்ளம் பத பதைத்தது… தன் அண்ணன் மட்டும் இந்த விமானத்தில் போயிருந்தால்….. அது நடக்கவில்லை என்ற உளநிறைவில் தன்னை மீட்டெடுத்தவனுக்கு… இளமாறனைப் பிடிக்காதபோதும் அவனுக்காக அவன் மனம் சாந்தியடைய வேண்டிக்கொண்டான்….

அதன் பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்…. இன்னும் தகவல்களைச் சேகரித்து… இளமாறன் இறந்ததையும் உறுதி செய்தவன்.. உடனடியாக தன் சகோதரனிடமும் தெரிவிக்க…

விஜய்யும்…. இளமாறனுக்காக….. பரிதவிக்க ஆரம்பித்தான்…. எல்லாம் தன்னால் தானோ… என்று தன் தம்பியிடம்…. புலம்ப ஆரம்பித்தவனை… குற்ற உணர்ச்சியில் தவிக்க ஆரம்பித்தவனை….. என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் தவித்தான்… அவனின் தம்பி

சுரேந்தருக்கும்… இளமாறன் மேல் பரிதாபம் தான்… இப்படி அல்ப ஆயுளில் அவன் வாழ்க்கை முடிந்து விட்டதே…. என்ற வேதனை அவனையும் வாட்ட….

“அண்ணா வீட்டுக்கு வாங்க… இளமாறன் வீட்ல நேரடியாகத்தான் சொல்ல வேண்டும்…” என்று போனை வைக்கப் போனவனிடம்…

விஜய்…

‘தீக்ஷா எங்க” என்ற போது…..

”தீக்ஷா…. ராதா வீட்டுக்கு போயிருக்காண்ணா…. நைட் வீட்டுக்கு வந்துருவாள்னு அம்மா சொன்னாங்க” என்று சுரேன் சொல்ல…

“டேய்…. அவளுக்கும் நான் துபாய் போறது தெரியும்ல… ஃப்ளாஸ் நியூஸ் பார்த்து…. டென்ஷனாகப் போறா….” என்றவன்

“சரி….. நானே போன் பண்றேன்…. அவளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வருகிறேன்…” என்று போனை வைத்தவன்…. தீக்ஷாவுக்குப் போன் செய்ய….

அதுவோ…. அணைக்கப்பட்டு இருக்க……….. உடனே ராதாவிற்கு கால் செய்தான்…

ராதாவோ… தீக்ஷா வந்த விபரத்தைச் சொல்லிவிட்டு… தாங்கள் கோவிலுக்கு போய் விட்டு வருவதற்கு முன்னரே…. கிளம்பி விட்டதாகக் கூற… விஜய் நெஞ்சில் சுரீர் என்று வலித்தது……. தீக்ஷாவைப் பற்றி அறியும் முன்னரே…..

அடுத்த 1 மணி நேரத்தில்………. தீக்ஷாவைக் காணவில்லை…………… என்று இரு குடும்பத்தாருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரிய…. அங்கு கலக்கம் சூழ்ந்தது….

விஜய்க்கு ஒரு புறம் இளமாறனின் இறப்பு… மறுபுறம் தீக்ஷா…. அப்படியே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன்….. மனக் கண்ணில்… தீனா முன் வந்து நிற்க….. காரை எடுத்தவன்………. ஆவேசத்துடன் அவன் வீட்டின் முன் தான் நிறுத்தினான்…

இறந்த இளமாறனின் வேலை என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்ன…. தீனா மாட்டினான்……

வேலை ஆட்கள் தடுத்தும்…. தீனா வீட்டினுள் நுழைந்தவன்…. ’தீனா’ என்று பெருங் குரலில் கர்ஜிக்க.. தீனாவுக்கு என்ன ஏதென்று கூட தெரியவில்லை…..

விஜய் ஏன் வீட்டிற்கு வந்து இப்படி கத்துகிறான் என்று கூட புரியவில்லை…..

இருவருமே தொழில் ரீதியான பிரச்சனை என்றால்.. அலுவலகத்தில்… பொது இடங்களில் தான் தங்கள் வெறுப்பைக் காட்டுவார்களே தவிர….. வீட்டிற்கு வர மாட்டார்கள்..

தீனா குழம்பிய முகத்தோடு வர… விஜய் பாய்ந்து அவனின் சட்டையைப் பிடித்தான்….

“இங்க பாரு… உனக்கு இந்த ப்ராஜெக்ட் தானே வேண்டும்.. நான் தலையிடல…. என் தீக்ஷாவை விட்ரு… உன் தங்கைய கடத்தினது தப்புதான்டா…. நீயும் அதே தப்பை செய்யாத…..“ என்றபடி பேசிக் கொண்டே போனவனை……….. விசித்திரமாகப் பார்த்தவன்….

“விஜய்… நீ என்ன சொல்ற.. உன் மனைவியை நான் கடத்தினேனா….” என்ற போதே விஜய்யின் உள்ளம் திடுக்கென்றது……….

தீனா கடத்தி இருப்பான்.. என்று தான் விஜய் நினைத்தான்…. அதனால்… தீனா மேல் கோபம் கொண்டானே தவிர.. தீக்ஷாவின் பாதுகாப்பில்…. அவனுக்கு பயம் வர வில்லை… தீனாவினைப் பற்றி அவனுக்குத் தெரியும்,….

விஜய்க்கு குரலும் உள்ளமும் ஒரு சேர உடைய………

”பொய் சொல்லாதடா….நீ தானடா கடத்தி வச்சுருக்க… உண்மையை சொல்லுடா….’ என்ற போது தீனாவுக்கும் கொஞ்சம் பதற்றம் வந்திருந்தது….

தங்கள் இருவருக்கும் இடையில்… இன்னொரு எதிரியா…. …. நினைத்த தீனா…

“விஜய் ரிலாக்ஸ்டா….. நான் உன் மனைவியைக் கடத்தலைடா…. அப்படியே பண்ணி இருந்தால் கூட உனக்கு போன் செய்திருப்பேன்…. “ என்று அவன் கூறும் போதே…. சுரேந்தர், யுகி…. தீபனும் அங்கு வந்து சேர….

தீனாவும் கடத்த வில்லை என்பது உணர்ந்த போது அனைவரின் முகமும் வெளுக்க ஆரம்பித்திருக்க…………. விஜய்க்கு என்ன செய்வது… ஏது செய்வது ஒன்றுமே புரியவில்லை…. தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டான்…

காவல் துறையில்…. தனக்குத் தெரிந்த உயரதிகாரியுடன் ரகசியமாக விசாரிக்கச் சொன்ன சுரேந்தர்….. தீக்ஷா பற்றிய விபரங்களை அவரிடம் கொடுக்க உடனடியாக கிளம்பியும் சென்றான்

யுகியும் தீபனும் … தீக்ஷா வழக்கமாய்ச் செல்லும் அவள் தோழிகளின் வீட்டில் விசாரிக்கச் செல்ல…

விஜய் தீனா வீட்டிலேயே அமர்ந்திருந்தான்………….இறுகிய பாறையாய்…………

தீக்ஷாவினைப் பற்றிய எண்ண ஓட்டமே……… விஜய்க்குள் ஓடிக் கொண்டிருக்க……………. தலையெல்லாம் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது……….

யாரிடம் மாட்டினாளோ…. அவளை என்னவெல்லாம் கஷ்டப்படுத்துகிறார்களோ…. இவள் வாயை வைத்துக் கொண்டும் சும்மா இருக்க மாட்டாள்… ஏதாவது பேசி…. நினைக்க நினைக்க…. அவனின் ஊனும் உயிரும் கருகியது………………..

தீனாவுக்கு… என்ன சொல்வது என்றே தெரியவில்லை……

“விஜய்…. வா…. வீட்டிற்கு போகலாம்..” என்று அவனை அழைத்துச் சென்றபோது…. பதில் கூட பேசாமல்…. அவனோடு சென்றான் இயந்திரமாய் விஜயேந்தர்….

தீனாவுக்கு…………… தன் நண்பனின் நிலைமையைப் பார்த்த போது… கண்ணுக்குத் தெரியாத அந்த மூன்றாம் எதிரியின் மேல் கொலை வெறி தான் வந்து போனது எனலாம்….

அவனின் நோக்கம் என்ன?.... தொழிலில் சிக்கல் ஏற்படுத்துவதா….. இல்லை விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுத்துவதா?

விஜய்……….. கண் மூடி அமர்ந்திருந்தான்…………….. கண்ணுக்குள்… அவள் மனைவியின் நிழலே துரத்த…. வீட்டில் நுழையும் போது….. தன்னிடம் விளையாட்டிற்காக கண்ணாமூச்சி ஆடினேன் என்று தன் மனைவி தன்னை தேடி ஒடி வர மாட்டாளா…. என்று ஏங்கினான்……… அதைத் தாண்டி அவனால் சிந்திக்கவே முடியவில்லை…. அவளுக்கு ஒன்றும் ஆகாது…. ஆகி இருக்காது…. தான்தான் விஷயத்தினை பெரிதாக்குகிறோமோ என்று கூட நினைத்தபடி எல்லாம் வீடு வந்து சேர்ந்தவனின் காதில் ஜெயந்தியின் அழுகுரல் தான் காதில் விழுந்தது….

இவனைப் பார்த்த ஜெயந்தி…. இன்னும் பெருங்குரலெடுத்து அழ…. தீக்ஷாவின் தந்தை ஜெயந்தியை ஆறுதல்படுத்தியபடி இருந்தவர்… விஜய்யை பார்த்தவுடன்.. அவரும் உடைந்தார்…..

“தம்பி…. என் பொண்ணு பற்றி ஏதாவது” வைத்தீஸ்வரனால் பேசக் கூட முடியவில்லை…

ராதா…. கலைச்செல்வி… ராகவேந்தர் அனைவரும்…. இவனை துக்கத்தோடு கேள்விக்கணையால் தாக்க….

எவருக்கும் பதில் சொல்லக் கூடிய நிலைமையிலா விஜய் இருந்தான்…. விஜய்யால் அங்கு நிற்கவே முடியவில்லை…. வேகமாய் தன் அறைக்குள் நுழைந்தவனின் பார்வையில்…. கட்டிலில் கிடந்த…விஜய்யின் பிங் வண்ண சட்டை கண்ணில் பட…… அதைக் கைகள் நடுங்க எடுத்துப் பார்த்தவனின் கண்களில்… அவளின் இதழ் ஒற்றல் …. அதுவும் அழுத்தமாய் இரத்த சிவப்பு நிற சாயத்தில்… விஜய்யின் கண்கள் அவனையுமறியாமல்….. நீரை வடிக்க…. அதைக் கூட அவன் துடைக்க நினைக்க வில்லை…..

“எங்கடி… போய்ட்ட… இப்படி என்னைத் துடிக்க வைக்கிற….. நீ மட்டும் இன்னைக்கு ஆபிஸ் வரலேனா…. நான் துடிக்கிற மாதிரி நீ துடிச்சுருப்படி…. நான் இப்போ உயிரோட இருக்கேன் என்றால்… நீ நீ மட்டும் தான் காரணம்… நீ என்மேல வைத்திருக்கிற காதல் தான் காரணம்… நீ என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்ட…. உன்னால போக முடியாது…. உன்னைப் போக விட மாட்டேன் “ என்று தனக்குள் புலம்பியபோதே… தீக்ஷாவின் பழைய குவார்ட்டர்ஸ் ஞாபகம் வந்தது…. அவள் அவ்வப்போது அந்த சிறுவர்களைப் பார்க்கச் செல்லுவாளே… அங்கு போயிருப்பாளோ……” மனதில் எண்ணம் ஓடியது…

ஆனால் விஜய்யின் போன் தீக்ஷா கையில் சிக்கி இருந்ததால்…. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போக… நேரிலேயே போய்ப் பார்க்கலாம் என்று அங்கு விரைந்தான் விஜய்….

அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்ச……. விஜய்க்குள் கலவரம் சுழல….. காரை ஓட்டி வந்தவன் கைகளில் நடுக்கமும் வர…. திக்குத் தெரியாமல்……….. எங்கு போகிறோம் என்று கூட அறியாமல்….. தன் போக்கில் சென்று கொண்டிருந்தான்….

எங்கும் இருள் சூழ்ந்திருக்க…. எங்கு இருக்கிறான் என்று அவனுக்கே தெரிய வில்லை….. ஒரு கட்டத்தில் தான் இப்போதுதான் தைரியமாக இருக்க வேண்டும்…. தானே நம்பிக்கையை இழந்தால்…. தன்னவளை யார் காப்பாற்றுவது… ஓரளவு திடமாய் யோசிக்க ஆரம்பித்தான் விஜய்….

தன் எதிரிகள்…. தீக்ஷா தன்னிடம் பேசினதில் இருந்து அவளுக்கு யாராவது தொல்லை கொடுப்பவர்கள்… என்று மனம் படுவேகத்தில்… பல கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருக்க…. மணி இரவு 12 ஐ நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்.. சுரேன் அழைக்க….. வேகமாய் போனை எடுத்தான் விஜய்…. சுரேன் பேசும் முன்னே

“தீக்ஷா வந்துட்டாளாடா” வார்த்தைகளில்…………. அவனின் ஏக்கம் வெளிப்பட… எதிர்முனை மௌனிக்க….

சுரேந்தரின் மௌனம்…. விஜய்க்கான பதிலைச் சொல்லாமல் சொல்ல…………. விஜய்யின் கரம்……….அவனையுமறியாமல் போனைக் கட் செய்தது,….

அதன் பிறகு…. காரை ஒட்டிய கை….. வேலை நிறுத்தம் செய்ய….. அப்படியே அமர்ந்திருந்தான் விஜய்……. மணி 11.55 என்று இருக்க…………… 12 மணிக்கு… இவன் போன் செய்யும் வரை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருப்பாளோ….. என்று ஒரு நப்பாசையில்………. போன் செய்ய…. ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றமே….

வீட்டிற்கே போகப் பிடிக்கவில்லை அவனுக்கு……. விமான விபத்தில் இறந்தே போயிருக்கலாம் போல் இருந்தது இப்போது….

இளமாறன் விமான விபத்தில் இறந்த செய்தியைக் கேட்ட போது…. அவனின் இறப்பில் மனம் துடித்த போதும்…. தான் மட்டும் இளமாறனோடு போயிருந்திருந்தால்…. தன் மனைவியை இந்த உலகத்தில்……….. தனியே விட்டுப் போயிருந்திருப்பேனே என்று தன் உயிரைப் பற்றி கூட அவன் நினைக்கவில்லை…. தன் மனைவியின் நிலைமைதான் அவன் கண் முன் நின்றது…..

இப்போது தன்னை தவிக்க விட்டு அவள் எங்கு போனாள்…..தன் புயலின் நினைவுச் சூறாவளியில் தொலைந்து கொண்டிருந்தான் விஜய்…

அப்போது… அவனையும் தாண்டி…. படு வேகத்தில்….. டாடா சுமோ போக… விஜய் கவனத்தை முதலில் அது எந்த ஒரு வித்தியாசத்தையும்…. விளைவிக்க வில்லை….

ஆனால் அதில் இருந்து…………..ஒரு கரம் வெளியில்………… வந்து உதவி கேட்பது போல் அசைக்க…. விஜய்க்கு அந்த இருளிலும்…. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில்…. நன்றாக விழ…. தன் உணர்வுக்கு வந்த விஜய்…… வேகமாய் அந்தக் காரைத் தொடர்ந்தான்……….

முன்னே சென்ற கார்…. எவ்வளவுதான் வேகமாய்ப் போனாலும்…. இவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக… அந்தக் காரைத் தாண்டி முன்னே சென்று…. சாலையை வழிமறித்து தன் காரை குறுக்காக நிறுத்திய விஜய்…. இறங்கி நிற்க…..

அந்த டாடா சுமோ தயங்கி நின்றது…………. அதில் இருந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை…. அதில் இருந்து ஒரு பெண்ணைத் தள்ளி விட……….. பதறி ஓடிய விஜய்யின் கண் முன்னாலே… அந்த பயங்கரம் நடந்தது….

காரில் இருந்த ஒருவன்………. எதையோ அந்தப் பெண்ணின் மேல் வீச………. அலறித் துடித்த அந்தப் பெண்ணின் குரல் விஜய்க்கு………….நன்றாக காதில் விழ…. அவன் அவளை நோக்கிப் போவதற்குள்…. அந்த வண்டி………பின் வாங்கி வேகமாய்க் கடந்து செல்ல…. விஜய்க்கு என்ன நடக்கிறதென்று ஒன்றுமே புரியவில்லை…………

வண்டி எண்ணை ஏற்கனவே நோட் செய்திருந்ததால் அவர்களை விட்டு விட்டான்….

கதறித் துடித்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் வந்தான் விஜய்….

முகத்தில் வீசப்பட்டிருந்த ஆசிட்டின் வீரியம் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவளுக்கு….. அருகில் யாரோ வரும் உணர்வில்…….. அந்தச் சூழ்நிலையிலும் தன் மானத்தை மறைக்கப் போராட…… அதை உணர்ந்த விஜயேந்தர் தான் அணிந்திருந்த சட்டையக் கழட்டி…. அவள் மீது போட்டு…. கலைக்கப்பட்டிருந்த ஆடையைச் சரி செய்தவன்….. அவளைத் தூக்கப் போக… முதலில் மறுப்பது போல் விறைத்தவள்…….. அதன் பின் தளர்ந்தாள்….

இதுவரை… தன்னைச் சூறையாடிய கைகள் போல் இல்லாமல்…. தன் அபயத்தை போக்கியது போல்…. அரவணைத்த கரங்களை உணர்ந்த அந்தப் பெண்ணின் கண்கள் விஜய்யை நன்றியோடு பார்த்து பின் மயங்க… விஜய்யோ அவசரத்தில் அதை எல்லாம் பார்க்கும் நிலையில் இல்லை…….

தன் மனைவியையே… தன் வாழ்க்கையையே…. தவற விட்டு விட்டு நின்ற அந்த நிலையிலும் விஜய்.......... தன் கண்ணில் பட்ட அந்தப் பெண்ணை காப்பாற்ற போராடினான் விஜய்….நேராய் நின்றது மருத்துவமனையில் தான்…..

முதலில் மறுத்த மருத்தவர்… விஜய்யின் கட்டாயத்தால்…. சிகிச்சை அளிக்கும் பொறுப்பை ஏற்க….. விஜய் அவரிடம்….

”மேடம்…. யார் கேட்டாலும் இந்த பொண்ணுக்கு…. ஆசீட்…. லேப்ல பட்ருச்சுனு….ஏதாவது காரணம் சொல்லிருங்க… உண்மையான காரணம் தெரிய வேண்டாம்…. “ என்றபடி கீழே இறங்கி வந்தான்…

------

மருத்துவமனையின் அந்த வளாகத்தில்…. சுரேந்தர்… தீனா… தீபன் யுகி வந்திருக்க…. கூடவே போலிஸ் அதிகாரியும் நின்றிருந்தார்..

“யாருண்ணா அது” என்று சுரேன் விசாரிக்க… நடந்ததைச் சொன்னவன்…..

“தெரியலைடா….. அந்தப் பொண்ணால பேசவே முடியலை….. என்ன நடந்துச்சுனு தெரியலைடா…..” என்றவன்…. மருத்துவமனை சூழல் அவனையுமறியால் அந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது போலிஸ் அதிகாரியிடம்…..

‘சார்…. என் வைஃப் தீக்ஷாக்கு… ஏதாவது ஆக்சி…டெண்ட்…….” என்று தடுமாற்றமாய்க் கேட்க

இல்ல விஜய்….. ஆக்ஸிடெண்ட் லிஸ்ட்லாம் பார்த்துட்டோம்… அது மட்டும் இல்லை…உங்க மனைவியோட ஸ்கூட்டி கூட கிடைக்க வில்லை…. அவங்கள யாராவது கடத்தி இருந்தால்… ஸ்கூட்டி கூட கிடைக்காமலா போயிருக்கும்…. சேஃபாத்தான் இருப்பாங்க…. கவலைப்படாதீங்க…” என்று ஆறுதல் படுத்தியவர்….

“உங்க மிஸ்ஸஸ்சுக்கும் உங்களுக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் எதுவுமில்லையே விஜய்…” என்று காவல் துறை அதிகாரியாய் கேள்வியை வீச…

தன் உதடுகளை அழுந்தி தன் உணர்வுகளை அடக்கியவன்…. தலையை மட்டும் இட வலமாய் ஆட்டினான்…………

அதன்பிறகு…..

விஜய்யால் காப்பாற்றப்பட்ட பெண்ணிற்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு செய்ய சுரேந்தர் செல்ல…….. யுகியும் காவல் துறை அதிகாரியுடன் சென்று விட… தீனா மற்றும் தீபன் விஜய்யின் அருகில் இருந்தனர்….

விஜய்…. வெட்ட வெளியை வெறித்தபடி இருக்க……. தீபன்… அவனிடம்

“விஜய் இங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க… வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்க….

விஜய்…. பதிலே பேச வில்லை… கடத்தியது தீனா இல்லை என்று எப்போது அவன் உணர்ந்தானோ அப்போது உடைந்தவன்தான்…. இன்னும் அதிலிருந்து மீள வில்லை……………

யாரிடம் என்ன பேச…. என்ன பதில் சொல்ல… அவன் மனைவி போல அவனைப் பேச வைப்பவர்கள் யார் இங்கே இருக்கிறார்கள்… 6 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது… அவள் குரலைக் கேட்டு…. வாய் ஓயாமல்… அவள் பேசும் பேச்சினைக் கேட்க அவன் உள்ளம் துடித்தது….. பேச்சுக்கு பேச்சு… பதிலுக்கு பதில்… கேள்விக்கு கேள்வி…. என்று வாய் மூடாமல் பேசியவள் அவள் மனைவி… இப்போது அவள் நிலை ……………

இறுகிக் கொண்டிருந்தான்… விஜய்….

தீபனும் தங்கையின் நினைவில் ஒரு புறம் வேதனையில் மூழ்க… தீனாதான் தீபனை சமாதானப்படுத்தி…. வீட்டிற்கு அனுப்பி வைத்தான்………..

விஜய்யை அமைதியாக விட்ட தீனா…. ஒரு கட்டத்தில் அவன் நிலை தாங்க முடியாமல் அவனின் அருகே போனவன்

“டேய்….. உன் மனைவி மேல நீ இந்த அளவு அன்பு வச்சுருக்கேல்லடா… கண்டிப்பா… உன்கிட்ட வந்துருவாடா….” என்று விஜய்யை தன் தோளோடு சேர்த்து ஆறுதல் படுத்த

தன் தோழனின் தோள் சாய்ந்த விஜய் உடைந்து கதறினான்…. துக்கம் தாளாமல்…………. தன்னவளின் நிலை அறியாத வேதனையில்

1,384 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page