top of page

அன்பே நீ இன்றி-31

அத்தியாயம் 31:

தீக்ஷா மிகுந்த சந்தோசத்தில் இருக்க………………. விஜய்யோ கொஞ்சம் குழப்பத்தில் இருந்தான்…… தீக்ஷா எப்படி தன்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள்…. விஜய்யால்.. தன் மீது அவளும் காதல் கொண்ட காரணத்தினாலே அவள் சம்மதித்திக்கிறாள்…. என்ற கோணத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை….. அந்த அளவிற்கா அவன் அவளிடம் நடந்திருக்கிறான்… முதல் சந்திப்பில் இருந்து…… அன்றைய மாடியறை நிகழ்ச்சி வரை…. அவனுக்கும் தீக்ஷாவுக்கும் எந்த நிகழ்வுமே சுமூகமாக இருந்தது இல்லை….

எப்படி அவள் சம்மதித்தாள்??????….

காரை ஓட்டியபடி வந்த விஜய்க்குள் இந்த எண்ண ஓட்டமே இருக்க…..அப்போது…. அவனின் மொபைல் திடிரென்று ஒலி எழுப்ப… விஜய் வேகமாய்ப் பார்க்க…………..அது ’தீக்ஷா’ என்றிருந்தது….…………

விஜய்யின் சந்தோசத்திற்கு அளவே இல்லை………….. இருவரிடமும் போன் நம்பர்கள் இருந்தாலும் இதுவரை எந்த வித தொடர்பு பறிமாற்றங்களும் இல்லை…………….. விஜய்க்கு அந்த மெஸேஜை திறந்து பார்க்கும் முன்னே ஒரு மாதிரி படபடப்பாய் வந்து விட்டது…..

அவனுக்கே அவனது இந்த நிலை…………. ஒரு மாதிரி அதிகப்படியாகத்தான் தோன்றியது…………. இருந்தாலும் அதை சந்தோசமாக அனுபவித்தான்……. காதலில் தகித்துக் கொண்டிருந்த அவனுக்கு……………. அவன் மனம் நிறைந்தவளின் சம்மதம்………… இதமாக இருந்த போதும்…… அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை…………. . எந்த வித சமாதானமும் இல்லாமல்….. தான் அவளுக்கு செய்த கேவலமான காரியங்களைக் கூட மறந்து…. மன்னித்து தன்னை ஏற்றுக் கொண்டதே அவனைக் கொன்றது…. இப்போது தீக்ஷாவின் குறுஞ்செய்தி வர…. அது அவன் மனதை மழைச்சாறலாய் குளிர்விக்கத் தான் செய்தது….

அதே சந்தோசத்தோடு…… வேகமாக படித்துப் பார்க்க…. அதுவோ இன்னும் அதிக குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது….

”அவள் தனக்காக படைக்கப்பட்ட புயல் என்ற வார்த்தைகளில் அவன் மனம் ஆகாயத்திற்கு பறந்த அதே வேளையில்… ‘புயல்’…. ’தாக்குதல்’… ’சேதாரம்’….. என்ற சொற்களில்…………… காற்றிறங்கிய பலூனாக மீண்டும் அவனது இதயம் பூமியை வந்தடைந்தது…………. நல்லா மெஸேஜ் அனுப்பி இருக்கா………… லவ்வருக்கு அனுப்புற மெஸேஜ் மாதிரியா அனுப்பி இருக்கா….…. சேதாரம்…. தாக்குதல்னு எதிரி நாட்டுக்கு செய்தி அனுப்புகிற மாதிரி அனுப்பி இருக்கா…….. என்றெல்லாம் தன்னைக் குழப்பிக் கொண்டவன்…. தன் வீட்டைக் கடந்து செல்கிறோம் என்ற நினைவில்லாமல் கடந்து போக………….. யுகி போன் அழைப்பில் தான்… தன் நினைவு வந்து… திரும்பிப் பார்க்க………. அப்போதுதான் தான் தன் வீட்டைக் கடந்து வந்ததைப் புரிந்த விஜய்…….. காரை மீண்டும் வீட்டை நோக்கி திருப்பினான்……………..

வீட்டிற்குள் நுழையும் போதே விஜய்க்கு………… கடவுளே யாரும் ஹாலில் இருக்கக் கூடாது…. முக்கியமா யுகி இருக்கவே கூடாது…. ஓட்டியே தள்ளிடுவானே என்று நினைத்தபடி உள்ளே போக……… யுகேந்தராவது விடுவதாவது….. யுகியே தவறாமல் அவனுக்கு காட்சி தந்தான்……..

அனைவரையும் பார்த்தும் பார்க்காதது போல்…… வேகமாய் மாடி ஏறிய விஜய்யை யுகி

“அண்ணா” என்று அழைக்க

“விட மாட்டானே” என்று மனதுக்குள் அர்ச்சித்தபடி…. “என்னடா” என்று சாதரணமாகக் கேட்க… யுகியோ அதை விட…..

“தெரியாம கால் பண்ணிட்டேன் அண்ணா………. ஏதாவது முக்கியமான வேலையா போய்ட்டு இருந்தீங்களா அண்ணா……… நீங்க வீட்டை மறந்துட்டுதான் போய்ட்டீங்களோனு தப்பா நினைத்து போன் பண்ணிட்டேன்………. சாரிண்ணா” என்று அப்பாவி போல் மன்னிப்புக் கேட்ட யுகியைப் பார்த்து விஜய் முறைக்க……..


ராகவேந்தர்…. கலைச்செல்வி , சுரேந்தர் மூவரும் யுகியின் குறும்பில் சிரிக்க……….. விஜய் பல்லைக் கடிக்க…………. அவனின் கோபத்தைப் பார்த்த யுகி……… வேகமாய் அவன் பார்வையில் இருந்து மறைந்து தனது அறைக்குள் நழுவிவிட………..விஜய்யும் தனது அறைக்குள் நுழைந்தான்….

அவனது மொபைலை எடுத்து தன்னவள் அனுப்பிய செய்தியை மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தவனுக்கு………… ஏனோ மீண்டும் பதில் செய்தி அனுப்ப மனம் வரவில்லை……… மனம் வரவில்லை என்பதை விட…….. பயம் தான் முக்கிய காரணம்………….. திருமணம் முடியும் வரை முடிந்த வரை தீக்ஷாவிடமிருந்து தள்ளி இருக்கவே முடிவு செய்தான் விஜய்……… ஏனென்றால் இருவரின் குண இயல்பைப் பற்றி புரிந்திருந்ததாலே இந்த முடிவுக்கு வந்திருந்தான்……… இவன் அவளிடம் பேசப்போய்……… ஏதாவது ஒருகட்டத்தில் எந்தப் பிரச்சனையிலாவது கொண்டு வந்து விட்டால்………. விஜய்யால் இனி தீக்ஷாவின் பிரிவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை…….. தானாய் தன் கையில் கிடைத்த வரத்தை அவன் தன் குண இயல்புகளால், தன் கோபத்தால் இழக்க விரும்பவில்லை………….. தன் மனைவியாக அவள் தன்னைச் சேரும்வரை அவளிடம் அதிகப்படியான பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்க நினைத்த விஜய் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்…….

விஜய் அங்கு அப்படி ஒரு முடிவெடுக்க……….. தீக்ஷாவோ……….

‘விஜய் அத்தான் நம்மை காதலிக்கிறாரா………. இன்னும் நம்பவே முடியவில்லை அவளால்…………. அது ஒரு புறம் என்றால்………… நான் விஜய் அத்தானை நேசிக்கிறேனா…………எப்படி……இது சாத்தியம்…… இப்படி அவரின் ஒரு பார்வையிலேயே நான் மண்ணைக் கவ்விட்டேனா” தீக்ஷா சந்தோஷமாக குழம்பினாள்….

“ஏய் தீக்ஷா……. நல்லா யோசிடி…………… ஒத்து வருமா……….” என்று தனக்குள் நினைத்தவள்….

“விஜய் அவளிடம் நேரில் வந்து காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பாளா என்பது சந்தேகம்தான்……….. ஆனால் அவனின் பார்வை மூலம் உணர்ந்த காதலை அவளால் மறுக்க முடியாமல்….. அவனுக்குள்… அவனின் காதலுக்குள் கலந்து விடத் துடிக்கிறாள்” என்பதே உண்மை….

காலையில் ராகேஷுடன் ஏதோ நிச்சயதார்த்தம்… பின் திருமணம் என்றிருந்தவள்…. இப்போது காதல் என்ற உணர்வில் விழுந்த பின்…. அன்றைய தினத்தின் ஒவ்வொரு நொடியையும் தனக்குள்…….சேகரித்துக் கொண்டிருந்தாள் அவள் ……….. தன் வாழ்க்கையின் மறக்க முடியாத நாள்…. இந்த தினம்தான் என்றால் மறக்க முடியாத நிமிடம் தன்னவனின் கண்களில் காதல் உணர்ந்த நிமிடம் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும்……. அந்த அளவிற்கு அவனின் காதலில் அவள் முற்றிலும் அடித்துச் செல்லபட…… அவனை விட்டு அவளால் இருக்கவே முடியவில்லை………….. அவனின் நினைவுகளாலேயே அவள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த தீக்ஷாவுக்கு விஜய்யை அப்போதே காணவேண்டும் போலவே இருந்தது………..

அவனை இனி பார்க்க முடியாது…… போனில் மெஸேஜ் அனுப்பியும் இன்னும் பதில் இல்லை…………. என்ன செய்யலாம் என்று நினைத்தவளுக்கு……….. தன் அண்ணனின் திருமண ஆல்பம் நினைவுக்கு வர………….. வேகமாய் தீபனின் அறையைத் தட்ட ஆரம்பித்தாள்……. மணி 11 என்பது கூட மறந்தவளாய்………..

தீபனின் நிலையோ அங்கு ராதாவின் மௌனம் என்னும் சவுக்கடியில் பரிதாபமாய் இருப்பதை உணராமல் தீக்ஷா கதவைத் தட்ட….. ராதாதான் திறந்தாள்…. தீக்ஷாவைப் பார்த்த ராதா…………..

”ஸ்னோ தூங்கிட்டா தீக்ஷா…. இவ்ளோ நேரம் அத்தை அத்தை னு உன்கிட்ட வரணும்னு பிடிவாதம் பிடிச்சா…. நான் தான் உன் அத்தை உன்னோட இனி விளையாட மாட்டானு சொல்லி தூங்க வச்சேன்….. கரெக்ட்தானே தீக்ஷா” என்று சீண்டலாய்ச் சொல்லி தீக்ஷாவைப் பார்க்க…

ராதா தன்னைக் கேலி செய்வதை உணர்ந்த தீக்ஷா

“கண்டிப்பா அண்ணி… அனுபவசாலி நீங்க…. காதல்ல கரை கண்டவங்க…. ” என்று பதிலடி கொடுத்தவளாய்….

”அண்ணா நீ சொல்லு..… அண்ணி சொல்றது தப்பா ஆகுமா…..” என்று தீபனிடம் கேட்க

தீபனோ பதில் சொல்லாமல் விழித்தான்…

அங்கு நிலவரம் சரி இல்லை என்பதை உணர்ந்த தீக்ஷாவும்….………..

“அண்ணிகிட்ட இருந்து நம்ம அண்ணாவுக்கு பயங்கர டோஸ் போல…இப்டி பேயடிச்ச மாதிரி நிற்கிறான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள்…

”அண்ணி….. சாரி அண்ணி…. நேரம் கெட்ட நேரத்தில வந்துட்டேன்னு நினைக்கிறேன்…எனக்கு ஒரே ஒரு ஹெல்ப்…. உங்க மேரேஜ் ஆல்பம் மட்டும் எடுத்துக் கொடுங்க… அதை வாங்கிட்டு நான் இந்த இடத்தைக் காலி பண்ணிடறேன்… நீங்க விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பிக்க…” என்று கண்ணடிக்க

தீபனோ…அவளிடம்

“எதுக்கு எங்க ஆல்பம்” என்று விசாரணை செய்ய………….

“ப்ச்ச் என் ஆளைப் பார்க்கனும்… கொடுன்னா கொடு” என்றபடி ராதா கொண்டுவந்த ஆல்பத்தை வாங்கியவள்…… கதவு வரை சென்றுவிட்டு பின் மீண்டும் திரும்பி………..

“அண்ணி……….. மறந்துடாதீங்க…… கணக்குல ஒரு அடி கூட தப்பக் கூடாது…………. என்று சொல்லிவிட்டு தீபனைப் பார்த்து கேலி செய்ய………….

“ஏய்…….உன்னை” என்று தீபன் துரத்த ஆரம்பிக்க………. .தங்கையை துரத்த ஓடிய கணவனை பார்த்த ராதாவின் கண்களில் வெறுமை மட்டுமே இருந்தது….. அவளால் அன்று தன் கணவன் தன்னை விட்டு விட்டு வந்ததை… ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… அதை மறந்து அவனோடு சுமூகமாக வாழவும் முடியவில்லை… அதே நேரத்தில் அவன் இல்லாமலும் இருக்க முடியவில்லை…. இத்தனை நாள் தீபனும் முகத்தினை திருப்பிக் கொண்டிருக்க…. ராதாவும் ஒன்றும் கண்டு கொள்ள வில்லை….. ஆனால் இப்போது அவன் எதேதோ காரணம் சொல்லி தன்னை நியாயப்படுத்த முற்சித்தாலும் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை….

தன் நினைவுகளில் சுழன்று கொண்டிருந்த ராதாவை…. தீபன் தான் கலைத்தான்

“ராதா பாரு ராதா……….அவளுக்காக உன்னைக் கூட உங்க வீட்ல அப்டியே விட்டுட்டு வந்தால் எப்டி பேசிட்டு போறா………… என்றவன்…………… அவளைத் தனது கைகளால் அணைத்து தன்னோடு சேர்க்க…………… இப்போது…. சுதாரித்தபடி ராதா திமிறினாள்…….

“விடுங்க தீபன்……….. என்கிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்க………..” என்று அவனை விட்டு தள்ளிப் போக எத்தனிக்க…….

தீபன் அவளின் கோபம் உணர்ந்து………

“சாரிம்மா………….சத்தியமா அன்னைக்கு வந்த வார்த்தைகள் எல்லாம் என் மனசில் இருந்து வரலை…. ஏதோ ஒரு வேகம் ..உன் அண்ணன் மேல உள்ள கோபம்…. வார்த்தைய விட்டுட்டேன்…. உன்னை விட்டு என்னால இருக்க முடியுமா நீயே சொல்லு……… ஆனாலும் நான் பேசுனது தப்புதான்..ராதா………….. “ என்று அணைத்தவனின் இறுக்கமே அவனது காதலைச் சொல்ல……… ராதா அமைதியாக இருந்தாள்…………. அவளின் மௌனம் இன்னும் கொல்ல..

“என்னை நாலு அடி கூட அடிச்சுடு ராதும்மா………….ப்ளீஸ்.. ஆனால் பேசாம மட்டும் என்னைக் கொல்லாத…… இந்த 2 வாரமும் செத்துட்டு இருக்கேண்டி….”

இப்போதும் அமைதியாகவே இருந்தாள் ராதா….. அன்றைய அவனின் வார்த்தைகளை தாங்க முடியாத பேதையாக அவள் இருக்க…. அவளைத் தேற்றும் வழி தெரியாமல் தவித்தான் அவள் கணவன்……

இருவரும் கட்டிலை விட்டு கதவின் அருகே நின்று கொண்டிருக்க…. உறங்கிக் கொண்டிருந்த சுனந்தா…. உறக்கத்திலே கட்டிலின் விளிம்பருகே புரண்டு வர………… ராதா தான் கவனித்தாள் முதலில்… அதனால் தன்னையுமறியாமல்…

“தீபன் ஸ்னோ” என்று அலற

அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தீபன் வேகமாய் ஓடி வந்து சுனந்தாவை பிடித்து விட்டான்………. அதிர்ச்சியில் ஸ்னோவும் அழ ஆரம்பிக்க………. தீபனின் கையில் இருந்த குழந்தையை ராதா சமாதானப்படுத்த………. தீபன் இதுதான் தனக்கு கிடைத்த சாக்கென்று…………. ராதாவையும் அணைத்துக் கொண்டவன்…. சற்று முன் வரை மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவன்………..இப்போது தன் மகளோடு மனைவியையும் சேர்த்து கொஞ்ச ஆரம்பிக்க…… ராதா அப்போதும் அவனை ஒதுக்கியவளாய் அவனை விட்டு விலகினாள்……

விலகிய தன் மனைவியை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் தீபன் தவிக்க ஆரம்பிக்க… தன் மனைவியின் கோபம் தீரும் வரை அவளுக்காக காத்திருக்க முடிவு செய்தான்…

அடுத்த நாள் காலை இரு வீட்டாருக்கும் அழகாய் விடிந்தது……….

வழக்கம் போல் ஹாலில் காலை டிபன் சாப்பிட விஜய் குடும்பத்தினர் கூடி இருக்க………. யுகியின் மொபைல் ஒலித்தது……

வேறு யாருமில்லை…………… தீக்ஷாதான்…

தன் அண்ணனைப் பார்த்தபடியே மொபைலை எடுத்து ஆன் செய்து காதில் வைத்த யுகியிடம்…

“குட் மார்னிங்டா யுகி” என்ற உற்சாகமான குரலில் தீக்ஷாவும் பேச ஆரம்பிக்க…. யுகியை விடாமலே

“டேய் நான் உன்கிட்ட பேசுற மாதிரி காட்டிக்க வேண்டாம்… எப்டியும் இந்த டைம்ல…. என் ஆளு உன் முன்னாடி இருப்பாரு” என்ற போதே யுகி மனதுக்குள் சிரித்தபடி

“சரி சொல்லு…. என்ன திடிர்னு….” என்று கேட்க

“உங்க வீட்டு ஆலமரத்தோட நிலவரம் என்ன? நேத்து வீசுன தீக்ஷான்ற புயல் காத்துல ஆடிப்போயிருச்சு போல”

”அடிப்பாவி….” என்று மெதுவாய் முணங்கிய யுகியை…. விஜய்யும் கவனித்து கொண்டே தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…

தன் அண்ணனை ஓரப்பார்வை பார்த்தபடியே யுகியும் சொன்னான்

“ஆலமரம் ஆடிப் போகல…. ஒரே அடியா சாஞ்சுடுச்சு…. நிலவரம் அப்டித்தான் இருக்கு” என்று அவனும் தீக்ஷா உபயோகித்த வார்த்தைகளைக் கொண்டே பதில் அனுப்ப….

மறுமுனையில் அதைக் கேட்ட தீக்ஷா………… யுகியின் வார்த்தைகளை அனுபவித்தபடி அமைதியாக இருந்தாள்….

”ஹலோ ஹலோ” என்று யுகி கத்தினான் இந்த முனையில் இருந்து….

இவனின் சத்தத்தில்…. சுரேந்தர்…. வேகமாய் அவனிடம்

“டேய்…. ஏண்டா இந்த கத்து கத்துற…. சிக்னல் கிடைக்கலேனா வெளில போய் பேசு” என்று அவனைக் கிளப்ப… யுகியும் எழ

விஜய் கைகளாலே அவனை அமரச் சொன்னான்… அவனுக்கு யுகியின் வார்த்தைகள்….. கொஞ்சம் புரிய…. பேசுவது தீக்ஷா என்று கொஞ்சம் அனுமானித்தான் தான்…. ஆனாலு அவனால் அதை உறுதி செய்ய முடியவில்லை… அதனால் யுகியை எழுந்து செல்ல அனுமதிக்க வில்லை….

”இங்கயே உட்கார்ந்து பேசு….. “ விஜய் கட்டளை இட

விஜய்யின் குரலை அந்தப்பக்கமாய் கேட்ட தீக்ஷா…

”இந்த மிரட்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…” என்று யுகியிடம் சொன்னபடியே…

“எப்டிடா ஆலமரம் சாஞ்சுடுச்சுனு அக்யூரட்டா அடிக்கிற”

யுகியும் இப்போது அவள் பேச்சுக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தான்…

“யூ நோ…. யெஸ்டெர்டே நைட் வெஸ்ட் மாம்பலம் நிற்க வேண்டிய…. ட்ரெய்ன்…. ஸ்டாப் ஆகாம…. கோடம்பாக்கத்தில் போய் நின்னுருச்சு.. தெரியுமா.. அதை வச்சுதான் சொல்றேன்…” என்ற போதுதான் போனில் யுகியோடு பேசிக் கொண்டிருப்பது தீக்ஷா என்று நிச்சயமாய் உறுதி செய்தான் விஜய்………….

இப்போது புரையே ஏறி விட்டது விஜய்க்கு..

சுரேந்தர் யுகியிடம் கேட்டான்…

”என்னடா ட்ரெய்ன்.. ஆலமரம்னு… மார்னிங் நியூஸ் ரீடர் மாதிரியே பேசிட்டு இருக்க…” என்றவனிடம்

“இனிமே நான் அந்த வேலைதான் பார்க்கணும் போல” என்று சுரேந்தருக்கு பதிலளித்தவன்…

தான் பேசுவது தீக்ஷாவுடன் என்பது விஜய்க்கும் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த யுகி…. வேகமாய் அந்த இடத்தை காலி செய்தபடி….. வெளியேறினான்…

விஜய்….. அவனை அழைக்க அழைக்க…. யுகி காதே கேட்காதது போல் நழுவ…

“என்னடா… விருமான்டி டெர்ர்ர் லுக் விட்டுட்டாரா…” என்று சிரித்தவளிடம்

“உனக்கு ஏன் தீக்ஷா இந்த கொலவெறி… என் அண்ணன்கிட்ட மாட்டி விடறதே உனக்கு வேலையா போச்சு..” என்று சலிக்க

“ஹலோ… இந்த தீக்ஷாவை பகைச்சுக்கிட்ட…. அப்புறம் ஆர்த்தியலாம் மறந்துர வேண்டியதுதான்… உனக்காக உன் டெர்ரர் அண்ணாகிட்ட பேசப்போறது இந்த தீக்ஷாதான் ஞாபகம் வச்சுக்கோ” என்றதுதான் தாமதம்….. யுகி அதற்கு மேலும் சரணடையாமல் இருப்பானா..

“அம்மா தாயே.. பர தேவதையே… உன் ஆளு… என் அண்ணன்… நீ என்ன பண்ணினாலும் தாங்குவாரு…. நீ உன் புயல் வேலையை எல்லாம் அவர்கிட்ட காட்டு….என்னை விட்ரு…. நான் உன் நண்பன்ல…” என்றவனிடம்…

”அது… அந்த பயம் இருக்கட்டும். ” என்றவள்….

“எனக்கு ஒரு வேலை பண்ணனும்…. யுகி….” என்று தன் திட்டங்களை அவனிடம் சொல்ல…. முதலில் மறுத்த யுகி பின் தீக்ஷாவின் மிரட்டலில் பணிந்தான்…

-----------

மாலை 5 மணி….. தன் அலுவலகத்தை விட்டு இறங்கிய விஜய்….. காரின் அருகே செல்ல…. அங்கு அவனின் ட்ரைவர் இல்லாமல் யுகி இருக்க…. அவனை ஆச்சரியமாகவும்.. கேள்விக்குறியாகவும் விஜய் பார்த்தான்

“என்னடா நீ இருக்க…….ட்ரைவர் எங்க” என்றபடி காரில் அமர…. அவர என் காரை எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டேன்.. என்றபடி யுகி காரை எடுத்தான்

”ஹ்ம்ம்ம்ம்ம் பெருசா எதுவோ சொல்லப்போறான் போல” என்றபடி விஜய்யும் அவனை பார்க்க

அவன் பார்வை புரிந்த யுகி……..

“அண்ணா…. என் வேலை விசயமா பேசனும்” அதுதான் ” என்று தயக்கமாய்த் தொடங்கினான்

“உனக்கு என்கிட்ட பேசுறதுக்கு டைமே கிடைக்கலையா…. இல்ல வேற இடமே கிடைக்கலையா…………..” என்று அலுத்தவனாய்….

“ஆனா எனக்கு என்னமோ நீ வேலை விசயமா பேச வந்த மாதிரி தெரியலையே” என்று அவன் முகத்தைப் பார்க்க… யுகேந்தர் வேகமாய்

“இல்லண்ணா…. அது” என்று இழுத்தபோதே… திடிரென்று கார் நிற்க…. இருவரும் தாங்கள் பேசிக் கொண்டிருந்த விசயத்தை விட்டு விட்டு…. கார் ஏன் திடிரென்று நின்று விட்டது என ஒருவரை ஒருவர் பார்க்கத் தொடங்க…. யுகி வேகமாய்….

“கார் ஏன் திடீர்னு ஸ்டாப் ஆச்சு…. நீங்க கார்லயே இருங்கண்ணா… என்னாச்சுனு பார்க்கிறேன்” என்று யுகி இறங்கினான்…

“இப்டிலாம் என் கார் மக்கர் பண்ணாதே…… என்ன திடிர்னு….” என்று விஜய் சந்தேகமாய் இழுக்க

“விடுங்கண்ணா… இப்போ மனுசங்க கூட திடிர் திடிர்னு மாறிடறாங்க…… யாரையும் புரிஞ்சுக்க முடியல… அப்டி இருக்கிறப்ப இந்த கார்லாம் பெரிய விசயமா” என்றவன்… தன் அண்ணனின் முறைப்புக்கு முன்னே….. வேகமாய் இறங்கி விட்டான்….

முன்னால் பேனட்டை திறந்து ஆராய ஆரம்பிக்க….விஜய்யும் இறங்கி அவனருகில் வந்தான்…

“அண்ணா……………….. என்ன ஆச்சுனே தெரியலையே….. மெக்கானிக் ஷாப்புக்கு கால் பண்றேன்” என்று காரை ஆராய்ச்சி செய்து கொண்டே…. சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஜய்யின் முன் தீக்ஷா வந்து நின்றாள்… தன் ஸ்கூட்டியுடன்

வந்தவள்.. விஜய்யைப் பார்க்காமல்…. அவனிடம் பேசாமல் யுகியைப் பார்த்தபடி

“ஓய்… யுகி என்னடா பண்ற…” என்று சத்தமாய் பேச…. யுகி…. திரும்பிப் பார்த்தான்

“ஹேய் தீக்ஷா நீ என்ன இந்தப் பக்கம்” என்று யுகியும் பேச ஆரம்பிக்க………….. விஜய்க்கு இருவரின் திருவிளையாடலும் புரிந்து………….. யுகியை முறைக்க ஆரம்பிக்க….. யுகி தன் அண்ணன் பக்கம் திரும்பவே இல்லை….

“அண்ணன் கார் ரிப்பேர் தீக்ஷா….. மெக்கானிக் பாய் வருகிற வரைக்கும் வெயிட் பண்ணனும்…. அண்ணாவை எங்க வீட்டில ட்ராப் பண்ணிடறியா” என்று அண்ணனின் அக்கறை கொண்ட தம்பியாக நடிக்க

”அவருக்கு ஓகேனா எனக்கும் என் பிங்கிக்கும் ப்ராப்ளம் இல்லப்பா” என்று விஜய்யின் முகத்தைப் பார்த்தபடி தோளைக் குலுக்கியபடி அலட்சியமாகப் பேச… விஜய்க்கு எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது… தன்னவள் மற்றும் தன் தம்பி நடத்தும் நாடகத்தைப் பார்த்து

இருந்தும் தன்னவளின் குறும்புத்தனத்தை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை….. பழைய விஜய்யாக இருந்தால் இந்நேரம் இருவரையும் கடித்துக் குதறியிருப்பான்…. இப்போது காதல் கொண்ட மனதோ அதை ரசித்துக் கொண்டிருந்தது….

விஜய் இன்னும் பதில் சொல்லாமல் இருப்பதை உணர்ந்த தீக்ஷா

“யுகி…. எனக்கு டைம் ஆகிருச்சுடா….. சீக்கிரம் அங்க பதிலைக் கேட்டுச் சொல்லு….. இல்லை… எனக்கு கோபம் வராது… என் பிங்கிக்கு கோபம் வந்துரும்” என்றபோதே விஜய்…………. அவளருகில் வந்து நின்றிருந்தான்….

”தள்ளி உட்காரு…… நான் ட்ரைவ் பண்றேன் ” என்றபடி பைக்கில் ட்ரைவ் பண்ணப் போக…

“பாஸ்…… பின்னால உட்காருங்க….. என் பிங்கிய ஓட்டுறதுக்கெல்லாம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு” என்றவளிடம்… யுகி இருந்ததால் மேலும் வாயாடாமல் விஜய் விட்டு விட்டான்………………

“வீட்டுக்கு வாடா…. ட்ராமாவா பண்ற இவ கூட சேர்ந்துக்கிட்டு.. உனக்கு இருக்கு” என்று மனதுக்குள் யுகியை அர்ச்சித்தபடி பின்னால் அவளின் மேல் படாமல் தள்ளி உட்கார……….. தீக்ஷா உள்ளுக்குள் சிரித்தபடி… யுகியிடம் கண் சிமிட்டியபடி பாய் சொல்லி விட்டு தன் பிங்கியை ஸ்டார்ட் செய்தாள்……

விஜய் தீக்ஷாவின் அருகாமையை ரசித்தவாறே செல்ல…. தீக்ஷாவோ அலாதி உற்சாகத்துடன் …………. மிக வேகமாக பைக்கை ஓட்டியபடி வந்தாள்….

விஜய் அமைதியாக வருவதை உணர்ந்த தீக்ஷா தானே அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்

“விஜய் அத்தான்”

“ஹ்ம்ம்… சொல்லு…” என்று மட்டும் சொன்னான்….. பேச அவனுக்கும் பேச ஆசைதான்….. அவனுக்கு சுய கௌரவம் என்பதெல்லாம் இல்லை….. ஏதாவது பேசி எதிலாவது கொண்டு போய் விட்டு விட்டால்…. அதனால் பேச தயங்கினான் விஜய்….

தீக்ஷாவோ….

”ம்ஹுக்கும்… இவன் வாயத் திறக்கவே மாட்டானே….“ என்று நினைத்தவள்….

”என்னத்தான் பயமா இருக்கா…………. பயமா இருந்தா என்னைப் பிடிச்சுக்கங்க…. ஏன்னா… நீங்க இந்த மாதிரி பைக்லலாம் போய் பழக்கமிருக்காது அதுனாலதான் சொல்றேன்….. ……….” என்றவள்…… தொடர்ந்து

“பயமாருக்குனு ஸ்லோவாலாம் ஓட்ட சொல்லக்கூடாது….. புரிஞ்சதா…..” என்றபடி… இன்னும் வேகமாய் ஓட்ட…. விஜய்க்கோ அவளின் அருகாமை அவனை இம்சித்தது….………..

“நல்லவனாவே இருக்க விட மாட்டாளே……… டேய் விஜய்.… அவ உன்னை வச்சு ஏதோ ப்ளான் பண்றாடா…… மாட்டிராதடா….. இப்டியே வீடு வரைக்கும் நல்ல புள்ள இமேஜை மெயிண்டெயின் பண்ணு…… வீடு வரைக்கும் இல்ல… அவ கழுத்துல மூணு முடிச்சு போடுற வரைக்கும் மெயின்டைன் பண்ணு” என்று தனக்குள் கட்டுப்பாடுகளை பிறப்பித்தவன்………… தன்னைக் கட்டுப்படுத்தி பேசாமலே வர…………… தீக்ஷா அவனின் நிலை எல்லாம் உணராமல்……… சாலையின் மேடு பள்ளங்கள் எல்லாம் நன்றாய்ப் பார்த்து அதில் ஏற்றியும் இறக்கியும் வந்து……….. விஜய்யை ஒரு வழி பண்ணித்தான்………… விஜய்யின் வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தினாள்….

இறங்கிய விஜய்யிடம்………“பை” என்று சொன்ன தீக்ஷாவை பார்த்தபடியே நின்று கொண்டிருந்த விஜய்யிடம்

“அத்தான் பைனு சொன்னேன்…. என்ன நின்னுட்டே கனவு கண்டுட்டே இருக்கீங்க…” என்று கண் சிமிட்டிய தீக்ஷாவிடம்

“பைனு ஏன் சொல்ற…. வீட்டுக்கு வா” என்று சொன்ன விஜய்…… ஒரளவு சாதாரணமாகி இருந்தான்…..

தீக்ஷா அவனிடம் சந்தோசமாய்ப் பேசிக் கொண்டே வந்ததால் அவனுக்கும் குழப்பம் எல்லாம் போய் இருக்க அவனுக்கு அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது……. அதனால் தீக்ஷாவை அழைக்க…

தீக்ஷாவோ அவனின் அழைப்பில் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்தாள்…..

அவளின் வெறித்த பார்வையை விஜய்யும் கவனிக்க… இப்போது அவன் மனதில் பய அலை அடிக்க ஆரம்பித்தது….

“என்ன தீக்ஷா… ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாய்” என்றவனிடம்,

”ப்ச்ச்… ஒண்ணுமில்ல” என்று தலை ஆட்டியவளின் குரல் உள்ளடங்கியிருந்தது இப்போது……………

“இந்த வீட்ல இருந்து ஒருமுறை கேவலமான முறையில் வெளிய வந்தேன்......... அது மனசுக்குள்ள இருந்து போகனும்னா………… அதை மறக்குற மாதிரி நான் மரியாதையோட உள்ள வரணும்….. அப்டி வந்த பின்னால………… இறந்த பின்னால தான் இந்த வீட்டை விட்டு போகனும்………… அதனால் இப்போ வரலை அத்தான்” என்று சொன்னவளின் வார்த்தைகளில் விஜய் பலமாய் அடி வாங்கினான்……..

அவள் ஒருபோதும் தன் கேவலமான நடத்தையை…. அன்று நடந்த நிகழ்ந்த நிகழ்வை மறக்கப் போவதில்லை என்று உணர்ந்த விஜய்க்கு..மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்தினாற் போன்று வலி எடுத்தது,,,….

விஜய் கண்ணில் வலியோடு தீக்ஷாவைப் பார்க்க….. தீக்ஷா அவனின் பார்வையைக் கவனிக்க வில்லை… வேகமாய் அவனை விட்டு தன் பைக்கைக் கிளப்ப…

விஜய் அவள் கிளம்புவதை உணர்ந்து…… வேகமாய் அவளின் ஸ்கூட்டியின் கீயை கைகளில் எடுத்தான்…..

“டைம் என்ன………. தனியாவா போகப் போற…. இரு…. நான் வந்து விடறேன்… என்றவனிடம்

“அடேங்கப்பா………….பெரிய அக்கறைதான்” என்று சலிக்க……

“ஏன் என் அக்கறைக்கென்ன குறைச்சல்” என்றவனின் குரலிலும் இப்போது கோபம் இருக்க

“சார்க்கு…. தங்கை மேலதான் அக்கறை….. எங்க மேலல்லாம் இருக்குமா……. இன்னைக்கும் மட்டும் என்ன திடிர்னு அக்கறை” என்று சொல்ல… அவள் என்ன சொல்கிறாள் என்பது விஜய்க்கும் புரிந்தது….

அன்றொரு நாள்….. ராதாவை தீனா ஆட்கள் கடத்த திட்டம் தீட்டி இருப்பதை தெரிந்து ராதாவை மட்டும் கூட்டிச் சென்றதை சொல்கிறாள் என்பது விஜய்க்கும் புரிய திகைத்து நின்றான்…

அவன் திகைத்து நின்றதை சாதகமாய்ப் பயன்படுத்தி அவனிடமிருந்த சாவியை தன் கைகளுக்குள் கொண்டு வந்த தீக்ஷா………….. அவனை விட்டுக் கடந்தும் சென்றாள்…..

விஜய்யோ அவள் போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்…………..

சிறிது தூரம் சென்ற தீக்ஷா வழக்கம் போல் தன் இயல்பில் திரும்பிப் பார்க்க…. விஜய் நின்று கொண்டிருக்க………..

வண்டியை நிறுத்தியவள்…

“என்ன “ என்பது போல் தலை அசைத்துக் கேட்க…. விஜய்யோ ஜீவனே இல்லாமல் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் அவனும் தலை ஆட்ட…. மீண்டும் யூ டேர்ன் அடித்து திரும்பியவள்…. அவனருகில் வந்து நின்றாள்….. அவளுக்கும் அவனை விட்டு போக மனமில்லை… அதனால் தன் ஸ்கூட்டியை சாக்காய் வைத்து அவனிடம் மீண்டும் வந்தாள்….

“அத்தான்………….. என் பிங்கிய தொடுறதுக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் லாம் இருக்குனு சொன்னேன்ல…. அதைச் சொல்ல மறந்துட்டேன்… அது வேற ஒண்ணுமில்லை…. நீங்க தம் அடிப்பீங்கள்ள…. அதுனாலதான் சொன்னேன்… பிங்கியோட எஜமானிக்குதான் ரோசம் இல்ல…. எதையும் பார்க்க மாட்டா…. ஆனா என் பிங்கிக்கு அதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி… என்றவள் அவனைப் பார்க்க…. அவனோ அவள் வந்த ஸ்கூட்டியை பார்த்துக் கொண்டிருந்தான்….

தீக்ஷா மனதுக்குள்ளேயே

“டேய் மரமண்டை…. நீ தம்மடிக்கிற…. வீட்டை விட்டு வெளிய அனுப்புன…. உன்னோட பணக்காரத் திமிர் எனக்கு பிடிக்காது… இப்டி எத்தனையோ உன்கிட்ட பிடிக்கலைனாலும் உன்கிட்ட விழுந்திட்டேனு சொல்றேன்… என்னைப் பார்க்காமல் பெரிய இவனாட்டம் என் ஸ்கூட்டிய பார்க்கிற…. என்னை மட்டும் நேருக்கு நேர் பார்த்துறாத….. உன் அந்தஸ்து மண்ணாங்கட்டி லாம் உடஞ்சு தூள் தூளா போய்டுமாடா….. தாலியக் கட்டுனாத்தான்.. உன் பொண்ட்டாடியா மாறுனாத்தான் சார் பார்ப்பீங்களோ… அதுக்கும் முன்னாடியே உன் காதலை என் கிட்ட சொல்ல வைக்கலை என் பேர் தீக்ஷா இல்லை……. இல்ல இல்ல… தீக்ஷா விஜயேந்தர் இல்லை…… நினைத்தவள்… இப்போதைக்கு அவன் தன்னைப் பார்க்க மாட்டான் என்று மீண்டும் அவனிடமிருந்து விடைபெற்று பறந்தாள்…

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியபோதிலும்….. இருவருக்கும் அதை பகிர முடியாதபடி அவர்களுக்குள் நடந்த சம்பங்கள் அவர்களை விலக்கி நிறுத்தியது என்றே சொல்ல வேண்டும்…

தீக்ஷா தலை மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு….

தீக்ஷா வந்த ஸ்கூட்டி கூட ஒரு கதாபாத்திரமாகி….“நீதானடா.. என்னைப் பார்த்த ஃபர்ஸ்ட் நாளே ஆள் வச்சு தூக்க சொன்னது” என்று அவனிடம் கேள்வி கேட்பது போல் காட்சி தோன்றி மறைந்தது….

விஜய்யின் உயரம் எல்லாம், தீக்ஷா மேல் கொண்ட காதலால்…………. கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவது போல் இருந்தாலும்.. அவளின் முழுமையாக காதலைப் பெற மட்டுமே அவன் நினைக்க… மற்றதை எல்லாம் புறம் தள்ளினான்….

வீட்டுக்குள் வந்தவன் யுகியைத் தேட… அவன் இன்னும் வீட்டிற்கே வர வில்லை…..

“வரட்டும் இன்னைக்கு ….. என்ன வச்சு ரெண்டு பேரும் காமெடியா பண்றீங்க” என்று மனதுக்குள் நினைத்தபடி மாடி ஏறப் போனவனை கலைச்செல்வி அழைப்பு தடுத்து நிறுத்த…………… திரும்பிப் பார்த்தான்

கலைசெல்வி அவனிடம் இளமாறன் வீட்டில் போய் பேசி…. தீக்ஷாவுடனான விஜய்யின் திருமணத்தை அவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்ல விஜய்யோ தன் அன்னையிடம்

“அம்மா… இது நானும் இளாவும் பேசி டிசைட் பண்ணியது… அவங்க அம்மா அப்பாவோ.. இல்லை நீங்களோ இதில் இன்வால்வ் ஆகலை….….. இளா ஊர்ல இல்லை… வந்த பின்னால் அவனிடம் சொல்லிக் கொள்ளலாம்” என்ற ரீதியில் கூலாகச் சொல்ல

கலைச்செல்வி அதிர்ந்தார்…

“என்ன விஜய்… இப்டி பேசுற….. இது தப்பு விஜய்….. அந்தப் பொண்ணு இளமதி ஏதாச்சும் மனசுல ஆசைய வளர்த்து வச்சுருக்கப் போறா” என்று தவிப்போடு சொல்ல…

“அம்மா…. அந்தப் பொண்ணு லண்டன் ல படிச்ச பொண்ணு…. இதெல்லாம் டேக் இட் ஈசியா எடுத்துக்குவா” என்றவனிடம் கலைச்செல்வி கேட்டாள்…

கலைச்செல்வி ஏதோ ஒருவேகத்தில் தன்னை மறந்து வார்த்தைகளை விட்டு விட்டார்…

“எப்டி…. தீக்ஷா மாதிரியா…. ராகேஷ் வராமல் போயிட்டானு சொன்னப்பகூட கூலா இருந்தாளே அது மாதிரியா” என்றவளை ஆத்திரமாக நிமிர்ந்து பார்த்தான் விஜய்….

“அம்மா… அவ உங்க மருமகள்.. கொஞ்சம் வார்த்தைகளை பார்த்துப் பேசுங்க” என்று கோபத்தை இழுத்துப் பிடித்துச் சொன்னவன்… அதற்கு மேல் அங்கு நின்றால் தாயிடம் வார்த்தைகளை விட்டு விடுவோம் என்று வேகமாய் தன் அறைக்குச் சென்றவனின் கோபத்திற்கு… பலிகடா ஆனான் யுகேந்தர்.

தீக்ஷாவின் வார்த்தைகள் ஒருபுறம் அவனை வேதனையில் தள்ளியது என்றால்…. அவன் அன்னையின் வார்த்தைகள் அவனுக்கு கடுங்கோபத்தை தர…. மன உளைச்சலுக்கு ஆளான விஜய்…. மொத்தக் கோபத்தை எல்லாம் யுகியிடம் கொட்டித் தீர்த்தான்…

1,944 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page