
அன்பே… நீ இன்றி??? 3
அத்தியாயம் 3:
சிறிது நேரம் கழித்து தீக்ஷா தன் தோழியைப் பார்த்தவள்……….. என்னடி பேசி பேசி கொல்றேனா…. என்று சொல்லியவாறே பாட்டு கேட்கிறாயா என்று கேட்டவள்…..
“ச்செய்… இங்க பாட்டுக்கு கூட வழி இல்ல” என்று அலுத்தபடி… மொபைல்ல கேட்ப்போம்…” என்றபடி தனது மொபைலில் பாட்டைப் போட்டவள்… ஹெட் செட்டின் ஒரு முனையை தன் காதிலும் அடுத்த முனையை தோழி காதிலும் மாட்ட
“ஏண்டி இவ்ளோ காஸ்ட்லியான கார்ல பாட்டு போட வழி இல்லையா” என்று பார்வதி சந்தேகமாய்க் கேட்டாள்….
”கார்ல பிரச்சனை இல்லை…. எங்க விருமாண்டிக்கு சாங்க்ஸ்லாம் பிடிக்காதுடி” என்று மெதுவாய்ச் சொல்ல… அவளைப் பொறுத்தவரை அது மெதுவாய்…. ஆனால் காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் சத்தமாக வெளி வர……… திரும்பிப் பார்த்தான் விஜய்…. அவளின் சத்தமான பேச்சில் பார்வதியும் கொஞ்சம் அதிர்ந்து விஜய்யைப் பார்த்தாள்…….. அவன் என்ன நினைப்பானோ என்று
பார்த்தவன் உடனே திரும்பியும் விட்டான்……..அவ்வளவுதான் அதற்கு மேல் அவனிடமும் எந்த வித ரியாக்சனும் இல்லை….. பார்வதி நிம்மதி பெருமூச்சு விட்டாள்………… ஏற்கனவே அவள் அவன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனுக்காக காத்திருக்காமல் வந்த விதம் வேறு மனசாட்சி குத்தியது…………. தவறு தானே…………….. அலுவலக விதிகளை மீறி………….. யாரிடமும் சொல்லாமல் கிளம்பியது………… அதனாலே அமைதி காத்தாள்…………
தீக்ஷா வீட்டின் முன் கார் நிற்க
இறங்கிய பார்வதி மலைத்தாள்…………. தீக்ஷாவின் பொருளாதார நிலையைப் பார்த்து…. தங்களை போல மிடில் கிளாஸ் குடும்பம் தான் தீக்ஷாவினுடையதும்……. எப்படி இந்த அளவு?………. அதிலும் 7 வருடத்தில் என்று யோசித்தபடி நிற்க
வீட்டைப் பார்த்துதான் தோழியும் அதிர்ந்து நிற்கிறாள் என்று உணர்ந்த தீக்ஷா………… ”உள்ள வா பாரு” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்…..
காரை விட்டு இறங்கிய விஜய்………….. வாசல் கேட்டில் நின்ற முருகேசனிடம்……
“உங்க தங்கச்சிக்கு தெரிஞ்சவர் வருவார்…….. பேர் சாரகேஷ்னு சொல்வாங்க……… உள்ள விடுங்க” என்று உள்ளே போக
முருகேசன் காத்துமுத்துவிடம்…….
“யாருடா……… அது ………. நம்ம தங்கச்சிக்கு தெரிஞ்சவங்க” என்று வினவ
“தெரியல காத்தா…………” என்றவன்
“இன்னைக்கு தீக்ஷா தங்கச்சி என்னை திட்டிடுச்சு” என்று வருந்த
”விடுடா……….. அது நிலைமை அப்படி…………… நம்ம கண்ணுதாண்டா அந்த பிள்ளைக்கு பட்டுடுச்சு” என்று புலம்பியவாறே அகன்றனர்…………
அம்மா என்று கத்தியபடியே உள்ளே நுழைந்தாள் தீக்ஷா………… அது எந்த பிரதிபலிப்பையும் கொடுக்காமல் போக………….. அண்ணி என்று அடுத்து கத்த……….
தீக்ஷாவின் கத்தலில்
என்னவோ ஏதோ என்று பதறியவளாய் சுனந்தாவை ராதா தூக்கியபடி பரிதவித்து இறங்க…… அங்கு சாதரணாமாய் நின்ற தீக்ஷாவைப் பார்த்து நிம்மதி அடைந்தாள்…..
”சுனோ” குட்டி என்று அவளை தூக்கிக் கொண்டவள்
“அண்ணி………. அம்மா இல்லையா” என்று சுனந்தாவைக் கொஞ்சியபடியே கேட்டவளுக்கு
“கோவிலுக்கு போயிருக்காங்க………..” என்று பதிலாய்ச் சொல்ல
‘இவங்களுக்கு வேற வேலையே கிடையாது……….. ஆவுனா கோவில்ல போய் உக்காந்துருவாங்க………. என்று சலித்தவள்………. ராதாவிடம் திரும்பி
“அண்ணி இது ’பாரு’……… பார்வதி அலைஸ் சாருமதி….. வீட்ல ரெண்டு சாரு வர்றதுனால…. மேடமுக்கு பார்வதினு பாட்டி பேர்…….. என்றவள்…..
“யாரு தேவதாஸோ????” என்று தோழியைப் பார்த்துக் கண்ணடித்தவள்…. ராதாவும் அருகில் இருந்ததால் அவள் என்ன நினைப்பாளோ என்று பார்வதி முறைக்க
”அண்ணி ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க……. நம்மை விட 1 வயதுதான் பெரியவங்க…… அது மட்டும் இல்லாமல்……… அவங்களே காதலுக்கு மரியாதை செஞ்சுதான் எங்க வீட்டுக்கே வந்தாங்க…….” என்று தன் அண்ணியையும் கிண்டல் செய்தவளை….. இப்போது ராதா முறைக்க
“ஒகே ஒகே தீக்ஷாவை மொறச்சே கொல்லாதீங்க……… அதுக்கெல்லாம் ரெடிமேட் பீஸ் ஒண்ணு அல்ரெடி இருக்கு” என்றாள் உள்ளே நுழைந்த விஜய்யைப் பார்த்தபடியே… பின் தன் அண்ணியிடம் திரும்பி
”சொல்லி இருக்கேன்ல……… என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்……… திருச்சி……… 7 வருசத்துக்கு அப்புறம் இப்போதான் பார்க்கிறேன்…………….“ என்று சொன்னபடி பாருவிடம்
”பாரு இது எங்க அண்ணி…. சோ ஸ்வீட் அண்ணி தெரியுமா…….. என் அண்ணாக்கு இவங்க கொஞ்சம் அதிகம் தான்……. இப்டி ஒரு நல்ல…… அழகான அண்ணிய எனக்கு கொடுத்ததுக்காகவே இப்போலாம் அவன் கூட சண்டை போடறது இல்லை தெரியுமா.” என்று சிரித்தபடியே சொல்ல
ராதா மென்னகை புரிந்தாள்………… பார்வதியைப் பார்த்து……….. பார்வதியும் அவளைப் பார்த்து அறிமுகப் புன்னகை புரிந்தாள்
”பாரு உனக்கு என்ன வேண்டும்……… டீ…காபி…பால் தென் நைட் டின்னர் முடிச்சிட்டுதான் போகனும்…….. உங்க அண்ணாக்கு என்ன பிடிக்கும்…… இப்போதே லட்சுமிகிட்ட சொல்லி ப்ரிபேர் பண்ணச் சொல்றேன்…… இப்போ உனக்கு என் கையால காபி ஒக்கேவா…………. உனக்கு காபிதானே பிடிக்கும்” என்று கேள்வியும் அவளே பதிலும் அவளேயாகி சுனந்தாவோடு கிச்சனில் நுழைய
அந்த ஹாலில் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது
பார்வதி சோபாவில் அமர்ந்திருக்க விஜய் அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்தான்…
ராதா பார்வதியின் அருகில் அமர்ந்தபடி அவளை பார்த்து பேச ஆரம்பித்தாள்
”தீக்ஷா உன்னைப் பற்றி அடிக்கடி சொல்வா பாரு………. “ என்ற போது
புன்னகைத்த பார்வதி……….
” ’விடி’ ப்ரோமோட்டர்ஸ்ல இன்றுதான் ஜாயின் பண்ணினேன்…….. எதிர்பாராத விதமா சந்திப்பு……… மறந்துருப்பாளோனு நினைச்சுட்டு இருந்தேன்…….” என்று சொல்லியவள்…. காலையில் தீக்ஷாவைப் பார்த்ததை சொல்லியபடி இருவரும் பேச்சினைத் தொடர…….. சற்று நேரம் கழித்து ராதா தன் அண்ணனை உணர்ந்து
“அண்ணா……….. நீங்க கிளம்பலையா…… உடனே கிளம்பியிருவீங்க…. வேலை இல்லையா“ என்று கேட்க
“இல்லமா…… இன்னைக்கு இங்கேயே சாப்பிட்டு விட்டு………… கிளம்புகிறேன்” என்று சொல்ல….. அவனின் தளர்வான பேச்சில்
தன் சகோதரனையே ஒரு நொடி பார்த்தவள்…… அதில் தெரிந்த கவலைக் கோடுகள் மனதை வருத்த
“அண்ணா சூடா காஃபி சாப்பிடறீங்களா…………. களைப்பா இருக்கிற மாதிரி இருக்கு” என்றவளிடம்
”வேண்டாம் என்ற தலை ஆட்டலில் மட்டும் பதில் சொன்னவன்…….. சோபாவில் சாய்ந்து அவனின் எதிரே உள்ள சுவரில் பார்வையைப் பதித்தான்……………….. ராதாவும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் பார்வதியிடம் பேச ஆரம்பிக்க………. இப்போது பார்வதி விஜய்யிடம்
“சாரி சார்…………தீக்ஷா என்னைக் கம்பெல் பண்ணிணா………… அதுனாலதான்………. என்று தயங்கியவன்
எதிரே இருந்த சுவரில் இருந்த பார்வையை திருப்பி பார்வதியை பார்த்த விஜய்
“அவ இப்டி பண்ணுவானுதான்………… நான் உன்னை இருக்கச் சொன்னேன்……….. ஆனாலும் உன்னைக் கிளம்ப வச்சிட்டா…………. நோ பிராப்ளம்………….. ஆனா……….. இது மாதிரி இன்னொரு தடவை நடக்காம பார்த்துக்கோ………..” என்று சொல்லி முடிக்க…….
அபோது ஜெயந்தி….. தீக்ஷாவின் தாய் உள்ளே வர….. உள்ளே நுழைந்த போதே விஜய் கண்களில் பட
விஜய்யை பார்த்த வினாடியே
”வாங்க தம்பி…….” என்றபடியே
‘அம்மா ராதா….. அண்ணாக்கு எதுவும் கொடுத்தியா” என்று கேட்க ஆரம்பித்தவள்
தீக்ஷா ஒரு கையில் காபிக் கப்பையும் மறு கையில் சுனந்தாவையும் வைத்துக் கர்ம சிரத்தையாய் பார்த்து பார்த்து நடந்து வர………. விஜய்க்கா கொண்டு வருகிறாள் என்று வியந்து பார்க்க
அவளோ அதை பார்வதிக்கு கொடுக்க…. ஜெயந்தியும் ராதாவை அடுத்து உட்கார்ந்து இருந்த பார்வதியை அப்போதுதான் பார்த்தாள்……..
“அடடே பாருதானம்மா நீ…………….. நல்லா இருக்கியாமா” என்று அவளை விசாரித்தபடியே…………….
“ஏண்டி……………. தம்பிக்கு எதுவும் கொடுக்கலையா” என்று தீக்ஷாவை கேட்க
“நீங்களே போட்டுக் கொடுங்க………… என் ஃப்ரெண்ட் நான் எப்டிக் கொடுத்த்தாலும் சாப்பிடுவா……… உங்க தம்பி சாப்பிடுவாரா…..” என்ற சொல்லியபடியே………
”வா பாரு நாம மேல போகலாம்” என்று சுனந்தாவை தூக்கியபடி பார்வதியுடன் மாடியேறியவளை கவலையோடு இரண்டு ஜோடி விழிகள் தொடர
ஒரு ஜோடி விழியோ அவளைத் தொடராமல் கண்களை மூடிக் கொண்டது………..
-----------------
தீக்ஷாவும் பாருவும் தீக்ஷா அறையில் இருக்க………….
தீக்ஷா ஆரம்பித்தாள்
”என்னடி ஆச்சரியமா இருக்கா…… இவ்ளோ பெரிய பங்களா…….. எங்க நிலை பார்த்து மிரண்டுட்டியா………. இதெல்லாம் எனக்கு நிரந்தரமில்லை பாரு……… என் அண்ணி எங்க வீட்டுக்கு வந்ததால வந்தது………….. நான் எப்போதுமே…………. அதே பழைய தீக்ஷாதான்……. என்ன இந்த பிரச்சனை இல்லைனா நானும் நம்மை மாதிரி இருக்கிற ஒருத்தவன் வீட்ல வாழப் போயிருந்திருப்பேன்……. இப்போ அதுக்கும் வழி இல்லை“ என்று சொல்ல
”ப்ளீஸ் டி………. அதையே சொல்லாத தீக்ஷா……… உன்னை எல்லோரும் பரிதாபப் பார்வை பார்க்கிறாங்கனு சொல்லிட்டு…… நீயே அதைச் சொல்லிட்டு இருக்க”
“ஒகே ஒகே………….. திக்ஷா வுக்கு ஒண்ணும் இல்லை……….. இப்போ பாரு” என்றவள் முகத்தை மாற்ற
“ஹை” அவளின் முக பாவனையில் சுனந்தா கைதட்ட
“செல்லக் குட்டி” என்று உச்சி முகர்ந்தவள்
”உன் பேர் என்ன… குட்டிமா “ என்று கேட்க….
சுனந்தா என்று சொல்லாமல் “குட்டி தீக்ஷா” என்று சொன்னாள்