top of page

அன்பே நீ இன்றி-29

அத்தியாயம் 29:

தீக்‌ஷா காரில் வரும்போதே அவளுக்கு விஜய்யைப் பார்க்கப் போகிறோம் என்ற பதட்டமும்…… பயமும் தான் வந்ததே தவிர….. அவளுக்கு அவன் மேல் காதல் என்ற உணர்வெல்லாம் தோன்ற வில்லை… அவனின் கோபம் உணர்ந்தவள் அவள்……. இன்று தான் பண்ணிய காரியத்திற்கெல்லாம் கோபப்படுவானோ என்பதில் தான் அவள் சிந்தனை சுற்றி வந்தது….

இன்னும் அவளுக்கு விஜய்யுடன் தன் திருமணம் முடிந்து விட்டது என்பது நம்ப முடியாமல் தான் இருந்தது……… நம்ப முடியவில்லை என்றாலும்….. அவனின் இன்றைய தோற்றம்……….. அவனின் அக்கறை…. ஆம் அக்கறை என்றுதான் அவளால் சொல்ல முடியும்…. இந்த ஆறு மாதத்தில் அவனின் பார்வையிலோ இல்லை நடவடிக்கையிலோ அக்கறையை மீறிய எதுவும் இதுவரை அவள் உணர்ந்ததில்லை……. உணமையிலேயே தன்னோடு கணவனாக மனம் ஒத்து வாழ்ந்திருந்தால் அவன் இப்படி இருந்திருப்பானா….. என்று மனதில் நெருடல் தோன்றிய போதும்…………… அவனை விட்டு பிரியக் கூடாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள் தீக்‌ஷா……….

எதைப் பற்றியும் சிந்திக்காமல், பார்வதி சொன்ன தகவலை வைத்து……….. முடிவெடுத்தது சரியா என்று யோசித்த போது………. அவனின் பாஸ்போர்ட்டில் மனைவியாக தன் பெயர் இருந்ததை வைத்து…………. அவன் தன் கணவன் என்று நம்பினாலும்…………. தன் கழுத்தில் தமிழ்ப்பெண்ணிற்க்கு உரிய தாலி இல்லாமல் இருப்பதும் அவளின் உறுதியை லேசாக அசைக்க……….. தன்னை அறியாமல் தன் கழுத்தில் கை வைத்துப் பார்த்தவளின் மனதில்…. அவள் அணிந்திருந்த சங்கிலி முதன் முதலாக உறுத்தியது……….. …… அதில் இருந்த VD என்று பெயர் பொறித்த டாலர் அவளுக்கு இன்று அதன் காரணத்தை சொல்ல….…. அதையே பார்த்தவளுக்கு…………. அது விஜய்யின் ஜெயின் என்பது புரிந்தது…… அவன் கழுத்தில் அவன் அணிந்திருந்த ஜெயின் இப்போது ஞாபகம் வர…….. கண் கலங்கி விட்டது தீக்‌ஷாவுக்கு….. அவன் கழுத்தில் ஒட்டினாற்போல் இருந்த ஜெயின் இவள் கழுத்துக்கு சற்று பெரியதாக இருந்தது….. கண் கலங்கியவளாய்…. அதையே பிடித்தபடி வந்தவள்……. சாரகேஷிடமோ,பார்வதியிடமோ எதுவும் பேசவில்லை………… விஜய்யின் ஞாபகங்களிலே வந்து கொண்டிருந்த அவளுக்கு ………. VD promotors ஞாபகமும் அவளைத் தாக்க…. தனக்காகவே ஆரம்பிக்கப்பட்டதா அந்த அலுவலகம்….. என்று உள்ளம் துடித்தாள் தீக்‌ஷா….. விஜய்யை எப்போது பார்ப்போம்………….. என்று மனம் முழுவதும் ஏங்க ஆரம்பித்தவள்……….. அவனுக்கும் தனக்குமான மண வாழ்க்கை நினைவுகளை மீண்டும் எண்ண ஆரம்பித்தவளுக்கு………….. அவர்கள் இருவரின் கடந்த கால மோதல்களே ஞாபகம் வர………. கடந்த காலங்களில் தங்கள் இருவருக்குமான கசப்பான நினைவுகளையும் மற்றும் தாங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்ததாய் சொல்லப்படும் தன் மண வாழ்க்கையின் நினைவுகளையும் விட்டு விட்டு…. தற்போதைய விஜய்யை மட்டும் நினைக்க ஆரம்பித்தாள்…………

அவனின் ஒவ்வொரு செயலும் தனக்காக இருந்தது இப்போது புரிய…. அன்று அவன் பார்வதியைப் பார்க்கிறான் என்று நினைத்து பொறாமைப்பட்டதை நினைத்துப் பார்க்க……. அவளுக்கு அவள் இருந்த நிலைமையையும் மீறி புன்னகை வந்தது………….

“என்னைத்தான் அத்த்தான் பார்த்தீங்களா……… நீங்க என்னை பார்க்கிறது கூட தெரியாம சுத்திட்டு இருந்திருக்கேனே………. நான் லூசு தான் என்று மனதோடு நினைத்தவள்

“இல்ல இல்லை நான் லூசு இல்ல….. அவர் எனக்குத் தெரியாமல் பார்த்தால் எனக்கு எப்படி தெரியும்….. விஜய் அத்தானுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா………… ஆனால் எப்படி இது நடந்தது…… எனக்கு எப்படி அவரைப் பிடித்தது…..” என்ற ஆச்சரியமும்,கேள்வியும் தான் அவளுக்கு மிஞ்சியது…

தீக்‌ஷாவின் மௌனத்தை உணர்ந்த பார்வதி……….. அவளை பார்வையாலே சமாதானப்படுத்த………. தீக்‌ஷா அவளிடம் வெற்று புன்னகையினை மட்டும் பதிலாக தந்தாள்…………. சாரகேஷும் மௌனமாக காரை ஓட்டி வர…………….. அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய …… விஜய் வீட்டை அடைந்தனர் மூவரும்…..

கார் விஜய்யின் வீட்டு வாசலில் நிற்க………. தீக்‌ஷா இறங்கி விஜய் வீட்டைப் பார்க்க………….. இன்று அவளுக்குள் பல வித உணர்ச்சிகள் ஓடியது………….. கிட்டத்தட்ட 1 வருடங்களுக்குப் பிறகு… இங்கு வருகிறோம் என்று தோன்ற…. ச்சேய்….. இடையிலேயே மேரேஜ் ஆகி வந்து விட்டோம் ஞாபகம்தான் இல்லையே என்று தன்னைத்தானே நொந்தபடி உள்ளே வர………… அங்கு தீக்‌ஷா வீட்டினரும் இருந்தனர்…. தீக்‌ஷாவைப் பார்த்த ஜெயந்தி… தன் மகளைக் கண்டு வேகமாய் வர………தீக்‌ஷா ஓடிப் போய் தன் அன்னையினைக் கட்டிக் கொண்டாள்…. அங்கு யாருமே தீக்‌ஷாவின் வரவை எதிர்பார்க்கவில்லை போல்…. சோகம் மட்டுமே நிறைந்திருந்த அனைவரின் முகத்திலும் இப்போது….. தீக்‌ஷா மீண்டும்…. அதுவும் விஜய் வீட்டுக்கே வந்த சந்தோசம் விரவியிருந்தது…..

சாரகேஷும்,பார்வதியும்………. வாசலிலேயே நிற்க…………. சுரேந்தர் பார்வதியின் அருகில் வந்தான்……….

பார்வதியும் அங்கு யாருக்கும் எதையும் தெரிவிக்காமல் தீக்‌ஷாவை வீட்டிற்கு கூட்டி வந்ததால்….. உண்மையிலேயே யாருக்கும் எதுவும் புரியவில்லை…. ஏனென்றால் யுகேந்தர் வந்த விசயம் யாருக்குமே அங்கு தெரியாது….. யுகேந்தர் இன்னும் வீட்டிற்கே வரவில்லை…. என்பதால் அங்கு சந்தோசத்திலும் குழப்பமே நிலவியது….

“என்ன நடந்தது. என்று சாரகேஷிடம் சுரேந்தர் கேட்க…. பார்வதியின் அருகில் வந்து நின்றாலும்…. பார்வதியிடம் பேசாமல் சாரகேஷிடம் கேட்டான் அவன்….

நடந்த விசயங்களைக் சாரகேஷ் சுருக்கமாக சொல்ல…………. சுரேந்தருக்கு யுகி வந்த விசயமே அப்போதுதான் தெரிய வர………… இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று மனதுக்குள் நினைத்தபடி………….

“உள்ள வாங்க சாரகேஷ்” என்று அழைக்க….. அவனும் தன் தங்கையோடு உள்ளே நுழைந்தான்……… பார்வதிக்கு சுரேந்தர் தன் மீது கோபமாய் இருக்கிறான் என்று புரிந்தாலும்………… அவனை சமாதானப்படுத்தும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து…..அமைதியாக இருந்தாள்….

உள்ளே தீக்‌ஷாவோ……………… தன் அன்னையிடம் குமுறிக் கொண்டிருந்தாள்…………. வேறு யாரிடமும் அவள் பேசவில்லை……….. அது மட்டும் இல்லை…. தனக்கு நோய் இருப்பதாக தன் அன்னை சொல்லியதை எல்லாம் விட்டு விட்டாள் தீக்‌ஷா… இப்போது அவளின் மன வேதனை எல்லாம் தான் மறந்த தன் வாழ்க்கை பற்றியே இருக்க,

“அம்மா… ஏன்மா…. என்கிட்ட மறைச்சீங்க……….. என்கிட்ட உண்மையைச் சொல்லி இருக்கலாம்ல……. இப்போ நம்ம குடும்பமே தலை குனியற அளவுக்கு நான் வீட்டை விட்டு வெளியேறி………… தப்பு பண்ணிட்டேன்மா…. அத்தான் என்னைச் சும்மாவே திட்டுவார்மா…. இப்போ இன்னும் திட்டுவாராம்மா” என்று அழுதவளின் அருகில் வந்த ராதா

“என் அண்ணாவோட உயிரே உன்கிட்ட தான் இருக்கு தீக்‌ஷா……………. உன்னைப் போய்த் திட்டுவாரா” என்று சொல்லும் போதே ராதா…. அழுதுவிட…. கலைச்செல்வியும் அழ ஆரம்பித்து விட….. தீக்‌ஷா தன்னைச் சமாளித்தபடி….

தீக்‌ஷா சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்………… அவள் தேடி வந்த அவளின் விஜய் அத்தான் மட்டும் அங்கு இல்லை……….. தன் அண்ணியிடம்……….. மெதுவாய்

”அண்ணி……… விஜய் அத்தான் எங்க………. நான் அவரைப் பார்க்க வேண்டும்….. அவர்கிட்ட பேசனும்…” என்றபோதே அவளுக்கு கண்ணிர் வலிய….. அத்தனை பேருக்கும் அவளின் அழுகையில் மனம் சந்தோசமாகியது….. இனி விஜய் என்ன பிடிவாதம் பிடித்தாலும் தீக்‌ஷா பார்த்துக் கொள்வாள்….. என்று அனைவரின் மனமும் நிம்மதி அடைந்தது….

”அண்ணா மேல இருக்காரு தீக்‌ஷா போய்ப் பாரு…………… வீட்டுக்கு வந்து ரூம் கதவை பூட்டியவர்…. இன்னும் திறக்கலை…” என்று ராதா சொல்ல….

சட்டென்று எழுந்தவள்…………விஜய்யின் அறை நோக்கி வேகமாய் படி ஏற……… உள்ளம் மீண்டும் படபடப்பாகியது….. விஜய் அறை அவளுக்குத் தெரியும்…. ஆனால் உள்ளே போனதில்லை……. அவனின் மனைவியாக அந்த அறையில் வாழ்ந்ததும் நினைவில் இல்லை……….. தன் நிலையை மீண்டும் மீண்டும் நொந்தபடி………விஜய்யின் அறைக் கதவை மெலிதாகத் தட்ட………. அவன் திறக்கவே இல்லை….

இப்போது கொஞ்சம் வேகமாகத் தட்டப் போனவள்………….. தயங்கினாள்…. ஏனென்றால் விஜய்க்கு அவள் இப்படித் தட்டுவதெல்லாம் பிடிக்காது…… அவளின் ஹீல் சத்தத்திற்கே ஒருமுறை திட்டு வாங்கியவள் அவள்…. அதனால் அவனுக்கு கோபம் வரக் கூடாது என்பதற்காக………. மீண்டும் மெதுவாய்த் தட்ட…….. அவன் இன்னும் திறக்காமல் இருக்க……… அவனுக்காகத் தயங்கியவள்……….இப்போது தன் இயல்பின் படி வேகமாய்த் தட்ட………… இப்போது விஜய் கதவைத் திறந்தான்……………..

அவன் திறந்த போதே…………. அவன் அவளை வருகையை எதிர்பார்த்து இருந்தது போல் ஒரு பார்வையை வைக்க…. அவன் பார்த்த பார்வையில்……..தீக்‌ஷாவுக்கு அதுவரை இருந்த தைரியம் எல்லாம் எங்கோ போய்……… வாயில் வார்த்தைகள் கூட வரவில்லை…………… தன் கணவனாக அவனை உணர்ந்தாலும் அவனோடு உரிமையோடு ஒன்ற முடியவில்லை…. எதுவோ அவளைத் தடுக்க…. அவனையே மலங்க மலங்க பார்த்தபடி இருக்க….

அவள் கணவனோ அதற்கு மேல்….. அவன் என்ன நினைக்கிறான் என்றே தீக்‌ஷாவால் அறிந்து கொள்ள முடியவில்லை………….

விஜய் அவளை பார்த்தபடியே தன் அறையை விட்டு முற்றிலும் வெளியே வர………… தீக்‌ஷாவோ அவன் வெளியே வந்ததினை உணர்ந்து உள்ளே போக எத்தனிக்க………… விஜய் சட்டென்று தன் அறைக்கதவை வெளியில் இருந்து பூட்டினான்

அவனின் செய்கையில் தீக்‌ஷா அதிர்ந்து அவனை நோக்க……

அவன் எதுவுமே பேசாமல் அவளைப் பார்த்தபடி இருந்தான்…. அவன் முகம் இறுகியிருக்க…. தான் அவனை அவமானப்படுத்தி விட்டோம் என்று கோபமாய் இருக்கிறானோ………… என்ற எண்ணம் தான் தீக்‌ஷாவுக்கு தோன்றியது….

தனக்குத்தான்….. எந்த நினைவுமில்லை……. அவனுக்கு எல்லாமே தெரியும் தானே……….. என்னைப் பார்த்து எந்த உணர்ச்சியும் இல்லாமல்…………… மரம் போல நிற்கிறான்……. அதுவும் அறைக்கதவை வேறு பூட்டுகிறான்………. இவன் என்ன நினைக்கிறான்……… வீட்டை விட்டு போனது தவறுதான்……. அதற்கு நாலு திட்டு திட்டி நாலு அறை விட்டால் கூட பரவாயில்லை….. ஆனால் இப்படி ஒன்றுமே பேசாமல் நிற்கிறானே……..” என்று அவள் நினைக்கும் போதே கண்கள் அருவியைப் பொழிய…………… விஜய் அவளைப் பார்த்து

“எதுக்கு அழற” என்று கேட்டதுதான் தாமதம்……. அவனிடம் இருந்து வந்த உரிமையான அதட்டலில்….. தீக்‌ஷா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் குலுங்கி அழ………

அதற்கு மேல் விஜய் எதுவுமே பேசவில்லை……….. அவளைச் சமாதானப்படுத்தவும் முயற்சிக்காமல் நிற்க….

தீக்‌ஷாதான் ”விஜய் அத்தான்” என்று அழைத்தாள்…………

அவன் கண்களை மூடி இருந்தான் இப்போது………….. அவனின் இமையோரம் நீர் கசிந்திருக்க……….. அவனைப் பார்த்தபடியே அவன் புறம் வந்தவளுக்கு………. அவன் கண்ணீரே அவன் காதலைச் சொல்ல………… அவள் நினைவில் மறந்திருந்த அவள் காதல் அவளுக்குத் தோன்றவில்லை……… இப்போது அவனைக் காதலிக்கத் தொடங்க ஆரம்பித்து இருந்தாள்…… அவனையே பார்த்தபடி சில நிமிடங்கள் இருந்தவள்………….

அவன் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைக்கப் மனம் துடித்தாலும்.……….. அவளால் அதைச் செய்ய முடியவில்லை…. அவளின் அருகாமை உணர்ந்த விஜய் கண்களை மூடியபடியே பேச ஆரம்பித்தான்

“என்னைப் பற்றி யார் சொன்னது உனக்கு………………” என்று கேட்க

தீக்‌ஷா அவனிடம்…….

“எனக்கு ஞாபக வரக்கூடாதா அத்தான்……….. அதனால்தான் வந்தேன்” என்று சொல்லிப் பார்க்க

உதடுகளை வளைத்து சிரித்தான் அவன்…….. அப்போதும் அவன் கண்களைப் திறக்கவில்லை……..

“அப்படியா………… என் ஞாபகம் உனக்கு வந்ததா……….” என்று வேதனையாய்ச் சிரித்தவன்……

“அது உனக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும்…. சொல்லு நீ யார் சொல்லி வந்த…” என்றவனின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்த தீக்‌ஷாவுக்குள்ளும் அவன் வலி மனமெங்கும் விரவ…… வாயிலிருந்து ”அத்தான்” என்று மட்டுமே வார்த்தைகள் வந்தன……… வார்த்தைகள் தான் அவளுக்கு வற்றிப் போயிருந்தன……. கண்களிலோ கண்ணீர் வற்றாத ஜீவ நதி போல் வந்து நிற்காமல் வந்து கொண்டே இருக்க………

தன்னை அவன் மனைவியாக உணரச் செய்வது எப்படி என்றும் அவளுக்குப் தெரியவில்லை……….. அவனை கணவனாக உணர்ந்து தான் என்ன செய்வதென்றும் புரியவில்லை………. என்ன செய்வது…….. எதைச் செய்வது என்று தெரியாமல் தன் கணவனைப் பார்த்தவள்……….

இப்படி வெளியே வைத்து பேசிக் கொல்கிறானே என்று தோன்ற…….. ”அத்தான்………ப்ளிஸ் உள்ள போகலாம்………”. என்று கெஞ்ச

இப்போது கண்களைத் திறந்த விஜய்………….. அவளிடம் எதுவும் பேசாமல்…… உள்ளே போவதற்குப் பதில்…………. கீழே இறங்க………… தீக்‌ஷா அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தாள்…….

“அத்தான்………… நான் செஞ்சது எல்லாம் தப்புதான்………….. அதற்கு எவ்ளோ தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்க……….. ஆனா பேசாம ஏன் இப்டி கொல்றீங்க………. எனக்கு முடியல………… நம்ம வாழ்ந்த வாழ்க்கை எதுவும் எனக்குச் சுத்தமா ஞாபகம் வரவில்லை தான்… ஒத்துக் கொள்கிறேன்….. ஆனால் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்க அத்தான்…………….. நாம் புதிதாய் வாழ்க்கையை ஆரம்பிப்போம்” என்றவளிடம்

அவள் புறம் திரும்பாமல்…… அவள் பற்றியிருந்த கைகளை விலக்கியவன்

“புதிய வாழ்க்கையா……… எனக்கு என் பழைய வாழ்க்கைதான் வேண்டும்…… என் மனைவியா உனக்கே ஞாபகம் வரும்…………. வரும் போது என்கிட்ட வா…………. இப்போ இந்த அளவு தெரிஞ்சுருக்குல அது போதும் எனக்கு………… நீ உங்க வீட்டுக்குப் போ………….” என்றபடி அவளைப் பார்க்காமலே சொல்லியபடி இறங்க…………

தீக்‌ஷா அதிர்ச்சியில் உறைந்தாள்……… தன்னை அவன் உதாசீனப்படுத்துகிறானா இல்லை தன் உடல் நிலையில் உள்ள அக்கறையிலா……….. மனம் வலிக்க ஆரம்பித்து இருக்க…………எது நடந்தாலும் சரி இனி இந்த வீட்டை விட்டு………… அவனை விட்டு ஒரு நொடி கூட பிரிந்து இருக்கக் கூடாது என்ற தீர்மானத்தோடு அவளும் அவன் பின்னே கீழே இறங்கினாள்………..

இப்போது அவளின் தயக்கமெல்லாம் போய்…………. அவளிடம் தன் வாழ்க்கையின் மீதான பயத்தில்………… அவளுக்குள் ஒரு தீவிரம் வர…….. அது அவளுக்குள் ஒரு பிடிவாதத்தை கொடுக்க……. தீக்‌ஷா என்ற குறும்புத் தனம் உள்ள பெண்…….. தனக்கான வாழ்க்கைப் போராட்டத்தில்.......... அந்தப் போர்களத்தை வெல்லும் பெண்ணாக……….. மாற……….. அவள் மனம் எல்லாவற்றையும் எல்லாபுறமும் யோசிக்க ஆரம்பித்தது……… விஜய்யும் தன்னை விரும்பி இருக்கிறான்……….. விரும்புகிறான் என்பதை அவன் கண்ணீரே சொல்ல…….. அவன் என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும் அவனை விட்டு பிரியக்கூடாது என்று முடிவுடன் அவளைத் தொடர்ந்தான்………..

இப்போது அவளுக்கு கண்ணீர் எல்லாம் வரவில்லை………. அன்றும் விஜய்யோடு போராடினாள் விளையாட்டுத் தனமாக………… இன்றும் விஜய்யோடு போராடத் தொடங்கினாள்………. அவர்களின் வாழ்க்கைக்காக…

கீழே இறங்கிய விஜய்…………. சாரகேசிடம் திரும்பி….. ”நன்றி சாரகேஷ்….” அதற்கு மேல் அவனிடம் வேறு எதுவும் பேசத் தோன்றவில்லை………அமைதியாக அமர்ந்தவன்……… தன்னைச் சுற்றி இருந்தவர்களை பெருமையாகப் பார்த்தவன்……….. தீக்‌ஷாவின் தாயிடம்

“சொன்னேன்ல அத்தை…. உங்க பொண்ணு இன்னைக்கே வருவாள்னு….. என்ன…..உங்க வீட்டுக்கு வருவான்னு நினைத்தேன்…. ஆனால்….. என்னைத் தேடியே வந்து விட்டாள்…. உங்க பொண்ணு எல்லாத்திலும் அவசரம்தான்.” என்றவன்….

அங்கு யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை………….. தீபன் தான் விஜய்யிடம் ஆரம்பித்தான்

”விஜய்…………… இத்தனை நாள் தீக்‌ஷாவை எங்க பொறுப்பில் விட்ருந்தீங்க…………… தீக்‌ஷாவுக்கும் விசயம் தெரிந்து விட்டது… இனி அவ இங்க…. உங்க கூட இருப்பதுதான் நல்லது” என்று சொல்லி முடிக்கவில்லை…………… விஜய் உடனடியாக மறுத்தபடி

“இல்லை தீபன்…………. அவ உங்க கூடவே இருக்கட்டும்…………… ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா இருவருக்குமே மன வலிதான் மிச்சம்” என்று சொல்ல……….

அனைவருமே மின்சாரம் தாக்கியதைப் போல் உணர…….. தீக்‌ஷாவோ……………….அமைதியாக நின்றாள்……….. யாரிடமும் எதுவும் பேசவில்லை………….

பார்வதியும் சாரகேஷும்…. இதை எதிர்பார்க்கவே இல்லை…. அதிலும் பார்வதிக்கு விஜய்யின் இந்த முடிவு அதிர்ச்சியாகவே இருந்தது…..

தீக்‌ஷாவுக்கு உண்மை தெரிந்து வந்ததில் விஜய் மிகவும் சந்தோசப்படுவான்…. அவளோடு வாழ ஆரம்பிப்பான்… அவன் மனைவியை அவனிடம் கொண்டு வந்து ஒப்படைத்ததில் மிகவும் ஆனந்தப்படுவான் என்று நினைக்க………..அவனோ எந்த வித உணர்ச்சியுமில்லாமல்…. சரி உண்மை தெரிஞ்சுருச்சா…. உன் வீட்டில் போய் இருன்னு சாதாரணமா சொல்றான்…. இதுதான் இவன் தன் தோழியின் மேல் கொண்ட காதலின் இலட்சணமா……….. இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்று நினைத்தவள்…. தீக்‌ஷாவைப் பார்க்க….அவள் அமைதியாக சிலையாக நிற்க….. அங்கு அவளின் குடும்பத்தினரும்….. விஜய்யின் குடும்பத்தினரும் பேசவே இல்லை….. ஜெயந்தி மட்டும் அழுது கொண்டிருக்க….. பார்வதிக்கு இப்போது உண்மையிலேயே ஆத்திரமும் கோபமும் வர… சுரேந்தரைப் பார்க்க…அவனும் அமைதியாக இருக்க…. விஜய்யிடம் ஏதும் கோபப்படாமல் சுரேந்தரை நோக்கி பேச ஆரம்பித்தாள்…

“என்ன சுரேந்தர் உங்க அண்ணா என்ன செய்தாலும் வாய மூடிட்டுதான் இருப்பீங்களா…. தீக்‌ஷா தன் நினைவுகளை மறந்து… தன் வாழ்க்கையைத் தொலைத்து…. நினைவு வராத போதும்… இதுதான் தன் வாழ்க்கை என்று யாரிடமும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் உங்க அண்ணனைத் தேடி வந்தால்…அவளுக்கு இதுதான் பதிலா….. சொல்லுங்க” என்று தன் தோழிக்காக ஆவேசப்பட்டவளை……. பார்த்து சுரேந்தர்….

“பார்வதி…. உன் ஃப்ரெண்ட் வாழ்க்கைல உனக்கு இருக்கிற அக்கறைய விட அதிகமான அக்கறை எங்க எல்லாருக்கும் இங்க இருக்குது..அதை ஞாபகம் வச்சு பேசு” என்ற போது அவன் குரலிலும் கடுமை இருக்க

“ஆமா பெரிய அக்கறை….. பார்த்தாலே தெரிகிறதே…… என் ஃப்ரெண்டுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கிற வரை நானும் ஓய மாட்டேன்…” என்றவளைப் பார்த்த விஜய்….

“உன் ஃப்ரெண்ட் நல்லா இருக்கனும்னு தான்” என்று விஜய் பேச ஆரம்பித்தபோதே பார்வதி..

“என்ன சார் என் ஃப்ரெண்ட்…. உங்க மனைவினு சொல்லுங்க….. உங்களுக்கு அவ உங்க மனைவினு தெரிந்தும்….. உங்களால் உரிமையா மனைவினு சொல்ல முடியலை….. ஆனா தீக்‌ஷா உங்களை…. அவ கணவன்னு வாய் வார்த்தைல நாங்க சொன்னதை உணர்ந்து இன்னைக்கு உங்க முன்னால் வந்து நிற்கிறாளே…. அவளுக்கு… உங்க மனைவிக்கு இதுதான் நீங்க கொடுக்கிற மரியாதையா” என்று விஜய்யையும் எதிர்த்து பேச ஆரம்பிக்க…. பார்வதியின் பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள் தீக்‌ஷா …

“ ‘பாரு’ ….. டென்சன் ஆகாதா………… அது மட்டுமில்லை…. அவரை நீ எதிர்த்துப் பேசுவது எனக்குப் பிடிக்கலைடி…. சாரி. ’பாரு’…. என் வாழ்க்கைக்காக நீ போராட வேண்டாம்…. இது என் வாழ்க்கை…. அவங்கவங்க வாழ்க்கைக்காக அவங்கவங்கதான் போராடனும் ’பாரு’…. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ……… உனக்கு மட்டுமில்லை… என் குடும்பத்துக்கும் சேர்த்துதான்……….. இது எனக்கும் என் கணவனுக்கும் இடையில் உள்ள பிரச்சனை…. நாங்க பார்த்துக்கிறோம்… வேறு யாரும் தலையிட வேண்டாம்” என்றவள் யாரிடமும் எதுவும் பேசாமால் விஜய்யின் அறையை நோக்கிப் போக…. பார்வதி மலைத்து நின்றாள்

தன் தோழியின் பேச்சில் அதிர்ந்தாலும்…அவளின் மன உறுதி பார்வதிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க…. இனி தன் தோழி அவள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வாள் என்ற மன தைரியம் வர…. சாரகேஷை அழைத்துக் கொண்டு வெளியேற…….. சுரேந்தர் சாரகேஷிடம் பேச வந்தான்.. ஆனால் பார்வதியோ…… அவனைப் பேச விடாமல்…

“வாண்ணா…. இங்க யார்கிட்டயும் பேசி பிரயோஜனமில்லை… நாம பண்ணிய தவறுக்கு…. நம்மால் முடிந்த வரை ப்ராயசித்தம் பன்ணிட்டோம்… இனி அவங்கவங்க கையில் எல்லாமே” என்று தன் அண்ணனைப் பார்த்து சொல்லிவிட்டு….வேகமாக தன் அண்ணனைக் கூட்டிக் கொண்டும் வெளியேற……………. அதே நேரம் யுகேந்தரும் வீட்டினுள் வர…. பார்வதி அவனையும் ஒரு முறை முறைத்து விட்டுத்தான் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்…..

யுகி வீட்டுக்குள் வந்த போது…….

தீக்‌ஷா…..விஜய்யின் அறைக்குக்கு செல்ல படி ஏறிக் கொண்டிருக்க…………விஜய் வேகமாய் அவளுக்கு முன் படி ஏறிச்சென்று…. அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க………… அதைப் பார்த்த யுகி மனம் கனத்து நின்றான்….

தீக்‌ஷாவை பார்க்காமலே வந்து விட்டதும்.. அவளை பார்வதி என்ற முன் பின் தெரியாத ஒரு பெண்ணிடம்…. அதிகப்படியாக விமர்சித்து விட்டு வந்ததும் அவன் மனதைக் கொல்ல………… தன் நண்பனின் அறைக்கு சென்று விட்டான்…. அங்கு தங்கி இருந்துவிட்டு கிளம்பியவன்…. இப்போதுதான் வந்து சேர்ந்தான்…………….. வந்தவனின் கண்களில்… அவன் அண்ணன் தீக்‌ஷாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த காட்சிதான் பார்வையில் பட…. விஜய்யைப் பார்த்தபடியே நின்று விட்டான் யுகி……………… விஜய்யோ யுகி வந்ததைக் கூட அறியாமல் …

“ப்ளீஸ் நான் நம்ம நல்லதுக்குதான்மா சொல்றேன்…………. “ என்று கெஞ்சிக் கொண்டிருக்க….…………. .தீக்‌ஷா விஜய்யிடம்…………… பேசாமல்

கீழே இருப்பவர்களிடம் திரும்பி பேச ஆரம்பித்தாள்

“இனி இந்த தீக்‌ஷா இந்த வீட்டை விட்டு வர மாட்டா……………. அப்படி என்னைக் கூட்டிட்டு போறதா இருந்தால்………….. பொணமாத்தான் கூட்டிட்டு போக முடியும்…………..” என்று சொல்லியவள் அப்படியே கீழே அமர………….. விஜய் உட்பட அத்தனை பேரும் அதிர்ந்து அவளைப் பார்த்த வண்ணம் இருக்க………….

விஜய்யின் பிடிவாதத்தை வேறு யாராலும் மாற்ற முடியாது….. ஆனால் தீக்‌ஷாவால் மாற்ற முடியாததா….. அவன் குடும்பத்தவரும்…. தீக்‌ஷா குடும்பத்தில் இருப்பவர்களும்…. எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் கேட்காத விஜய்………….. தீக்‌ஷாவின் பிடிவாதத்தில் வேறு வழியின்றி…..

விஜய் அவளையே பார்த்தபடி சற்று நேரம் இருந்த விஜய்……….. முடிவு செய்தவனாய் வேகமாய் தன் அறைக்குள் வந்தான்………. தாங்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படத்தை வேகமாய்க் கழட்டியவன்……………. அதை வேறொரு அறையில் மாற்றச் சொல்லி விட்டு………….. தீக்‌ஷாவின் பெற்றோரிடம் வந்தான்………….

மாமா…. அவ இங்கேயே இருக்கட்டும்………………… என்று சொல்ல………… தீக்‌ஷா விழி நிறைந்த சந்தோசத்தோடு தன் கணவனைப் பார்க்க……………. சந்தோசத்தை கொடுத்த அடுத்த நிமிடமே…………அவளைத் துன்பக் கடலில் தள்ளினான் அவன் ………..

ஆனா…………. அவ கழுத்தில தாலினு ஒண்ணு மறுபடியும் ஏறனும்னா…………… எனக்கு என் மனைவியா திரும்பி வர வேண்டும்……… இதற்கு சரி என்றால் இங்கே இருக்கலாம் என்று கல்லாய் மாறிப் பேச………….. தீக்‌ஷா துடித்துப் போனாள்……………..

இப்படிச் சொன்னாலாவது அவள் தன்னை விட்டு போவாள் என்று நினைத்து விஜய் இப்படி சொல்லிப் பார்க்க……. அதில் கூட தீக்‌ஷா மனம் மாறவில்லை…..

இன்று மறந்த நிலையில் இருக்கும் தன்னை….. அவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள அவன் மறுக்கிறான் என்பது அவன் வார்த்தைகளில் புரிய தீக்‌ஷா பரிதவித்து நின்றாள்…………. இருந்தும் அவள் மனம் தளரவில்லை…………….. அவள் கணவனின் வார்த்தைகளை வைத்தே அங்கிருந்த அனைவரையும் நோக்கினாள்

“அப்பா……….. எனக்கு அவர் தரும் தாலி தேவையில்லை…………….. ஆனால் இந்த வீட்டை விட்டு நான் வர மாட்டேன்………… அதேபோல்” என்று நிறுத்தியவள்………….. எனக்கு ஞாபகம் வருகிறதோ இல்லையோ அவரின் மனைவி நான் தானே…………. அதை அவருக்கு புரிய வைக்காமலும் விட மாட்டேன்………….. அவர் கையால் தாலி வாங்காமலும் விட மாட்டேன் என்று சொன்னவளின் குரலில் இருந்த தீவிரத்தில் அனைவரும் அவளை நிம்மதியுடன் பார்க்க…………. விஜய்யோ அவளைக் கலவரத்துடன் பார்த்தான்…………..

அதன் பிறகு தீக்‌ஷா பிறந்த வீட்டினர் தங்கள் வீட்டிற்குச் சென்றனர்…. விஜய் கைகளால் மீண்டும் தீக்‌ஷா கழுத்தில் கண்டிப்பாக ஏறும்….. என்பது அவர்களுக்கும் தெரியும் என்றாலும்…. பெண்ணைப் பெற்றவர்களாய்….. அது அவர்களுக்கு குறையே…… இருந்தாலும் தன் மகள் வாழ்க்கையில் முழுவதுமாய் மீண்டும் வசந்தம் வீசும் என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டபடி அங்கிருந்து சென்றனர்….

யுகி வந்த சந்தோசம் ஒரு புறம்….. தீக்‌ஷா மீண்டும் வந்த சந்தோசம் என விஜய் வீட்டினர் சந்தோசமாய் இருக்க…. யுகியிடம் விஜய்

“பார்வதி வீட்டில் என்னடா சொன்ன….” என்று கேட்க…………

”சத்தியமா……….. நான் தீக்‌ஷாவிடம் ஏதும் சொல்லலை…. ஆனா அதுக்கு முன்னாடியே பார்வதிக்கு உங்க திருமண விசயம் தெரிஞ்சுருக்கு….. ” என்று தன் நிலையை விளக்கப் போக….

“ஆனால் பார்வதியை கட்டாயப்படுத்தி தீக்‌ஷா சொல்ல வச்சுட்டாளே யுகி…… அதற்கு காரணம் நீதானே” என்று கடிந்தவன்………. எவ்வளவோ முயன்றும்… தான் தீக்‌ஷாவிடம் மறைக்க நினைத்த விசயம்…. அவளுக்கு தெரிந்து விட்டதை உணர்ந்த விஜய்…. விதி வலியது என்பதை மீண்டும் தன் வாழ்க்கையில் உணர…. யுகியிடம் பெரிதாக விசாரிக்க வில்லை………. அவனை விட்டு விட்டான்

----------

தீக்‌ஷா யாரிடமும் எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குள் அதாவது விஜய்யின் அறைக்குள் வந்து விட்டாள்……………. நுழையும் போதே அதிர்ந்தாள்…………… அந்த அறை முழுக்க அவளின் புகைப்படங்கள் வெவ்வேறு கோணங்களில் மாற்றப்பட்டிருக்க…………… அதை எல்லாம் விட……… அவளை விட 2 மடங்கு பெரியதாக உள்ள புகைப்படம் அந்த அறையின் ஒரு சுவர் முழுக்க ஆக்கிரமித்து இருக்க………… அதற்கு எதிரே இருந்த சுவரின் வெற்றிடமாய் இருக்க, அதை வெறித்தாள் தீக்‌ஷா….

சற்று முன் அந்த வெற்றிடம்தான்…. தீக்‌ஷா-விஜய் மணக்கோலத்தில் இருந்த புகைப்படத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது… என்று அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்….. ஆனால் அந்த வெற்றிடத்தின் சிறுபகுதி…. தீக்‌ஷா விஜய் என்று எழுத்துக்களால் நிரப்பபட்டிருக்க… அதை பார்த்தபடி சிறிது நேரம் இருந்தவளுக்கு…………… அவளும் தன் கணவனை ஏற்று கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள் என்பதற்கு அது ஆதாரமாய் இருக்க………….. சற்று நிம்மதி ஆனாள்……….. அது மட்டும் இல்லாமல் அந்த சுவரின் இன்னும் சில இடங்களில் கூட தீக்‌ஷா விஜய் என்று தான் எழுதியிருப்பதை பார்த்த தீக்‌ஷா உணர்ச்சிகளின் பிடியில் தன்னை மறந்து நின்று கொண்டிருக்க….

அப்போது விஜய் உள்ளே வரும் சத்தமும் பின் கதவை அடைக்கும் சத்தமும் கேட்க……………….. என்னதான் கணவன் என்ற உரிமையில்.. எதைப்பற்றியும் யோசிக்காமல்…. அவன் வீட்டிற்கு வந்து….. இப்போது அவனது அறைக்குள் வந்து விட்டாலும்… அவளின் ஞாபகங்களில் அவனின் நினைவு பூச்சியமாக இருக்க… தனியே விஜய்யோடு என்று நினைக்கவே அவளுக்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கத்தான் செய்தது,……….. இருந்தும் அவனோடு பேசியாக வேண்டும்… தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற உந்துதல் வர தனக்குள் தைரியத்தை வரவழைத்தவள்………….. நிமிர்ந்து அவனைப் பார்க்க…………. அவனோ

அவளைப் பார்க்காமல் கடந்து செல்ல…………..

“விஜய் அத்தான்…………….” என்று அழைத்தாள்…………… அவனும் நின்றான் அவளின் அழைப்பில்…………. ஆனால் அவள் புறம் திரும்பவில்லை…………..

“சொல்லு” என்று மட்டும் சொன்னான் விஜய்…..

அவன் சொல்லு என்ற விதமே தீக்‌ஷாவுக்கு தொண்டை அடைத்தது….. ஏனோ தெரியவில்லை….. அவளின் விஜய் அத்தானாக இருந்த போதெல்லாம் அவனோடு பதிலுக்கு பதில் வாயடியவளுக்கு இப்போது வார்த்தைகள் தந்தி அடித்தன…

“சா….சாரி அத்தான்” என்று மட்டும் சொல்ல

“எதுக்கு”

“இன்னைக்கு நான் பண்ணின எல்லாக் காரியத்துக்கும்…………… அதுமட்டும் இல்லை…………. நீங்க யாருனு தெரியாமல் பண்ணிய எல்லா விசயங்களுக்கும்………… “ என்ற மூச்சை இழுத்துப் பிடித்து எப்படியோ சொல்லி முடித்து இப்போது மூச்சை இழுத்து விட

“ம்ஹ்ம்ம்ம்ம்………… சரி………… ” என்றபடி செல்ல………….

தீக்‌ஷாவுக்கோ “அவ்வளவுதானா” என்றிருந்தது……………. அவன் ஏதாவது பேசமாட்டானா என்றிருக்க………. இவளுக்கும் தயக்கமாய் இருக்க…………. இருந்தும் மீண்டும் ’விஜய் அத்தான்’ என்று அழைக்க….

“தூங்கு………. நாளைக்கு பேசலாம்……..” என்றபடி……. அவளிடம் கட்டிலை நோக்கி கை காட்டியவன்…. அருகில் இருந்த சோபாவில் படுக்கப் போக………..

அவனைப் புரிந்து கொள்ள முடியாமக் தீக்‌ஷா தடுமாறினாள் என்றுதான் சொல்ல வேண்டும்…..

கட்டிலில் அமர்ந்தவாறே…. “அடப்பாவி…. எனக்குதான் எல்லாம் மறந்து போச்சு…….. இவனுக்கு என்ன வந்துச்சு……. இப்போ என்ன பண்றது………. இவன் பிடிவாதக்கார்ன் ஆயிற்றே……….. எனக்கு ஏன் இந்த அம்னீசியா வந்துச்சு…………. கடவுளே………….. ”

என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தவளுக்கு………. திடிரென்று…. இன்னும் மாத்திரை போடாதது ஞாபகம் வர……….. ஆனால் அடுத்த நிமிடமே………. நமக்குதான் ஒண்ணும் இல்லையே…….. தேவையில்லையோ அந்த மாத்திரைகள் எல்லாம்………… சும்மா போட வச்சானா…….. என்றெல்லாம் அவனைக் கொஞ்சம் திட்டியபடியே குழம்ப ஆரம்பித்தவள்… தன் வழக்கத்தில்

“விஜய் அத்தான்“ என்று கத்தி அழைக்கப் போக………. தனக்குள் அடக்கிக் கொண்டாள்…………. ”சத்தமா பேசினால் திட்டிருவானோ………” என்று பயம் வர அமைதியாக அமர்ந்து விட்டாள்…

அவள் தீக்‌ஷாவாக இல்லாமல்… விஜய்யின் மனைவியாக தன்னை..தன் குணங்களை மாற்றிக் கொள்ள நினைத்தாள்….

இவள் இப்படி தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே………… அவள் முன் விஜய் வந்து நின்றான்………. தன் அருகில் வந்து நின்றவனைப் எதிர்பார்க்காத தீக்‌ஷா ……. அவனைப் பார்த்து வேகமாய் எழ…….. அதில் சற்றுத் தடுமாற……….. அவனோ அவளை பிடித்து நிறுத்த முயற்சிக்கவில்லை……… அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள் அடங்கிய பெட்டி எல்லாம் அவன் கையில் இருக்க………. அதை அவளிடம் நீட்டியவன்……. அங்கிருந்து நகல………….. தீக்‌ஷா மெலிதான குரலில்… தயங்கியபடி….

”ஆனால் இதில் இப்போ எதைப் போடுவதுனு……….. எனக்குத் தெரியாதே….. அம்மாதான் தருவாங்க….” என்று சொல்லும் போதே அவன் முறைக்க….

“இவனுக்கு முறைக்கிறதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா………..கடவுளே………….. தீக்‌ஷா இவன் கூட எப்டிடி குப்பை கொட்டுன………..” என்று மனதுக்குள் சொல்லியவள்…. வேகமாய்

“இன்னைக்கு ஒருநாள் மட்டும் சொல்லுங்க….. நாளை முதல்……… அம்மாகிட்ட கேட்டு………. எல்லா விபரமும் வாங்கிக்கிறேன்” என்று அவனது முறைப்பில் அவசரம் அவசரமாக சொல்ல….. அதில் விஜய்க்கு சிரிப்பு வந்து விட………… அதில் அவன் முகமும் மாற………. தீக்‌ஷா அவனையே பார்க்க……….

“யாரு நீ………… நீயா போட்ருவ….……….. பார்க்கலாம்” என்றவன்……… அவள் போட வேண்டிய மாத்திரைகளை தனியாக பிரித்து கொடுக்க……..

இப்போது………… தீக்‌ஷாவுக்கு…….. இன்னொரு நினைவும் வந்தது…. மாத்திரை கவரை எல்லாம் ஜெயந்திதான் பிரித்துக் கொடுப்பாள்……. இதை வேற பிரிச்சு போடனுமா………. என்று நினைத்தவள்…

கேட்கலாமா இவன்கிட்ட…. என்று தோன்ற

”ஆனா பிரிச்சுக் கொடுக்க மாட்டானே இவன்…. உனக்கெல்லாம் வேலை பார்க்க நான் ஆளானு கேட்டுத் தொலைவானே” என்று நினைக்க……… அவள் மனதில் நினைத்தது அவள் கணவனுக்கு எப்படிக் கேட்டதோ………. சட்டென்று மீண்டும் வாங்கியவன்………. அவற்றை எல்லாம் பிரித்துக் கொடுத்தவன்……. தண்ணிர் பாட்டிலையும் அவளிடம் நீட்ட……… தீக்‌ஷாவுக்கு அழுகையே வரும் போல் இருக்க……. அடுத்த நிமிடம் அவள் கண்களும் அவள் கணவனைப் போல் அவள் மனம் நினைத்ததை செயல்படுத்தியது…………..

விஜய் அவள் கண்ணீரை உணர்ந்த போதும் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தினை விட்டு அவர்களின் அறையின் பால்கனிக்குச் செல்ல…. அப்படியே படுத்தவளுக்கு உறங்க விருப்பம் இல்லைதான்……… ஆனாலும் அடுத்த சில நிமிடத்தில் அவள் போட்ட மாத்திரைகளின் விளைவால்…. உறங்கி விட்டாள்…………… சற்று நேரம் கழித்து உள்ளே வந்த விஜய்…………… அவள் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன்…….. அப்படியே சோபாவில் அமர்ந்தபடி….. உறங்கிக் கொண்டிருந்த அவளின் முகத்தை தன் விழிகளால் ரசித்துப் பார்த்தபடி இருந்தவன்………….

இனி என்ன ஆகுமோ என்ற அவர்கள் வாழ்க்கை பற்றிய சிந்தனை அவனுக்குள் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருந்த நிலையிலும்….தன் முன் இருந்தவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை….

சுத்தமாய்த் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க ஆரம்பிக்க………. அவளைப் பார்க்காமல் தன் எதிரில் இருந்த புகைப்படத்தினைப் பார்க்க ஆரம்பித்தவன்

“முடியலடி……….. ஏண்டி இப்படி படுத்தி எடுக்கிற………… எப்போதாண்டி உன் சாபம் எல்லாம் எனக்கு தீரும்………” என்றபடி பேச ஆரம்பித்தவனுக்கு அன்றும் உறங்கா இரவே ஆனது…………..

அந்த அறைக்குள் படுக்க முடியாமல் வெளியே பால்கனிக்கு வந்தவன் அங்கேயே படுத்தவனுக்கு….. உறக்கம் எப்போதும் போல்………. அவனை மீறி பின்னிரவில் தான் வந்தது……

………………………………………..

அடுத்த நாள் காலை அவன் உள்ளே வரும் போது திக்‌ஷா உறக்கத்திலேயே இருக்க……….. அவள் படுத்திருந்த கோலம் அவனுக்கு அவளை நோக்கி இழுக்க….. சட்டென்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்……….. அவளின் மேல் போர்வையை போர்த்தி விட்டு…………அதன் பின் குளியலைறைக்குள் நுழைந்து அடுத்த அரைமணி நேரத்தில்… கீழேயும் இறங்கியும் இருக்க……. அங்கு தீக்‌ஷா வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்…………..

கிட்டத்தட்ட 8 மணி அளவில் எழுந்த தீக்‌ஷா அவனைத் தேட………. ஆளே இல்லை………. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜெயந்தி உள்ளே வர………… தன் அம்மாவை பார்த்த சந்தோசத்தில்……….. வேகமாய் அவளிடம் ஓடி வந்தவள்………….. அவளைக் கட்டிக்கொண்டாள்……….

மகளை ஆராயும் நோக்கில் பார்த்த… தாயை சங்கடமாய்ப் பார்த்தவள்……………

“அம்மா……… நான் அத்தானோட சந்தோசமா வாழ்ந்தேனாமா” என்று கேட்க வேண்டும் போல் இருக்க………. இருந்தும் அதைத் தாயிடம் கேட்க முடியாமல்.………….

“அவர் என்கிட்ட ஒழுங்காவே பேசலம்மா…………” என்று சொல்லும் போதே அவள் குரல் அடைக்க…. அழக் கூடாது என்று நினைத்தாலும் அவளுக்கு அன்னையைப் பார்த்தவுடன் அழுகை வந்து விட……… இப்போது ஜெயந்தி அவளை பார்த்து அழ ஆரம்பிக்க

தன் அன்னை அழுவதைப் பார்த்த தீக்‌ஷாவுக்கு………… உள்ளம் பதறி விட்டது…..

“அம்மா………. அழாதீங்கம்மா……. நான் அத்தான் மனசை மாத்திருவேன்மா……… நான் உங்க பொண்ணும்மா……” என்று அவளை சமாதானப்படுத்த……….. ஜெயந்தி…… தீக்‌ஷாவின் திருமண நாளை அவளுக்கு நினைவு படுத்தி…..

“இந்தாம்மா….. விஜய் தம்பி வாங்கிட்டு வந்தது….. என்கிட்ட கொடுத்து உன்கிட்ட கட்டச் சொன்னார்………….” என்றபடி தன் கையில் இருந்த கவரை நீட்ட………… தீக்‌ஷா தன் குறும்பான வார்த்தைகளை வெகு நாளைக்குப் பிறகு அவள் தாயிடத்தில் வெளிப்படுத்தினாள்…..

”ஏன் அவர் என்கிட்ட கொடுக்க மாட்டாராமா……….. ரொம்ப பண்ணிட்டு இருக்கார் விரு……… இல்லை இல்லை உங்க மருமகன்………… “ என்று சொல்லும் போதே விஜய்யும் உள்ளே வர……….. சட்டென்று நாக்கைக் கடித்தவள்…..

“அடக்கி வாசிடி தீக்‌ஷா………….” என்றபடி……….. அந்தக் கவரை பேசாமல் வாங்கிக் கொள்ள………. ஜெயந்தி அங்கிருந்து போக………

விஜய்……… தீக்‌ஷா மட்டும் உள்ளே இருக்க……………

“சீக்கிரம் கிளம்பி வா……….. ஏற்கனவே லேட்…………….” என்று விஜய் சொல்ல……….

”சரி” என்று தலையை மட்டும் நல்ல பிள்ளை போல் ஆட்டிய தீக்‌ஷா……….. ஓரளவு தன்னை… தனக்கும் தன் கணவனுக்கும் உள்ள உறவின் சிக்கலை உணர்ந்தாலும்…. விஜய்யைப் பற்றி எதையும் அனுமானிக்க முடியால்…. இன்னும் குழப்பம் தெளியாத நிலையில்… தன் நிலை புரிந்த அதிர்ச்சி விலகாமல்தான் இருந்தாள்…..

1,996 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page