top of page

அன்பே! நீ இன்றி!! 21

அத்தியாயம் 21

புதுமணத்தம்பதியினர் ஒரு காரில் சுரேந்தருடன் சென்று விட……………. விஜய் தன் காரில் குடும்பத்துடன் செல்ல முடிவெடுத்தான்.............. கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவனுக்கு…………. காரணம்… இனிமேல்தான்……..தீபனிடம் ராதாவுக்காக தான் வாங்கியிருந்த பங்களாவின் சாவியை ஒப்படைக்க முடிவு செய்திருந்தான்………… அவன் தாய்…………… தந்தையிடமே இன்று காலையில் தான் சொன்னான்…………..

கலைச்செல்விக்கு இதில் மிகுந்த சந்தோசம்……………. தன் மகள் புறாக்கூண்டு போன்ற வீட்டில் இனி இருக்கப் போவதில்லை என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் அவள்…………….. ஆனால் விஜய்யோ… தீபன் என்ன சொல்வானோ என்று கொஞ்சம் சஞ்சலத்துடன் இருந்தான்………….

இவனின் பதட்டத்தைப் பார்த்த அவனது தந்தை……………….

“விஜய்……… எதுக்கு இவ்வளவு டென்சனா இருக்க…………… ரிலாக்ஸ்டா இருடா…………… மாப்பிள்ளை கண்டிப்பா ஒத்துக்குவாரு……………. என்றபடி………… விஜய்யிடம் தன் சந்தேகத்தை கேட்டார்

“இன்னொரு விசயம்….. தீபன் தங்கை தீக்‌ஷா மேல் உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு……………. அவ நாத்தானார் முடிச்சு போடக்கூடாது என்ற அளவிற்கு…………. என்றபோது………….

“டேய் விஜய்……………… வாய் விட்டேல……………. உங்க அப்பா கேட்கிறாரு சொல்லுடா… சொல்லு” என்று மனசாட்சி அவனை நக்கலடிக்க……………… தன் மனதை அடக்கியவன் தன் தந்தையிடம்

“இல்லப்பா…………. அப்டிலாம் இல்லை…………” என்று அவசரமாக மறுத்தவன்….

”நான் ஏன் அவகிட்ட வெறுப்பா இருக்கனும்...... ராதா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப…………… அவ ராதாவை கொஞ்சம் தப்பா பேசிட்டா…………….. அதுனாலதான் எனக்கும் கொஞ்சம் பிடிக்க வில்லை…………….. அதனாலதான்……… ஆனா அப்பா… இப்போ அந்த அளவு கோபம் எல்லாம் இல்லை…………….. என்ன கொஞ்சம் வாயடிக்கிறா………….. அதுதான் பிடிக்கலை…………” என்று தன் தற்போதையை நிலையைச் சொல்லியபடி…..

”ஆனால்……. இன்னும் என்னால தீபனையும் ஏத்துக்க முடியலை…………….. அவர் குடும்பத்தையும் ஏத்துக்க முடியலைப்பா………………. அதுதான் உண்மை….. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கப்பா………….. சரி ஆகி விடுவேன் “ என்றவாறு வெளியேறியவன்……….. தன் காரில் சென்று அமர்ந்தான்

அப்போது கலைச்செல்வி……….. தீக்‌ஷாவுடன் வர………….. இவ நம்மளோடா வரப் போகிறாள் என்று யோசனையுடன் பார்த்தான்…………

அவன் யோசனை சரி என்பது போல தீக்‌ஷாவும் காரில் ஏறி அமர………………….. சட்டென்று விஜய் இறங்கிவிட்டான்……………. அவனுக்கு தன் குடும்ப உறுப்பினர்களைத் தவிர……… வேறு யாருக்கும் கார் ஓட்டப் பிடிக்காது……….. என்னவோ அது அவன் பழக்கமாகி விட………………. இப்போதும் அந்தப் பழக்கத்தில் இறங்கி விட……………… தீக்‌ஷா அவன் முகத்தையே பார்க்க……………..இப்போது அவனும் பார்க்க………….. தீக்‌ஷா முகமே இவன் செயலில் செத்துப் போய்விட்டிருந்தது……….. அவள் முகத்தில் தெரிந்த அவமான உணர்ச்சி……………… விஜய் மனதை ஏதோ செய்ய…………………..

”தான் கொஞ்சம் ஓவராக பண்ணுகிறோமோ” என்று மனம் எண்ண ஆரம்பித்த போதே……….. தீக்‌ஷா நொடியிலேயே தன்னை மாற்றி…………… யுகேந்தரோடு பேச ஆரம்பித்து விட………….

அவளுக்காக கவலைப் பட ஆரம்பித்த விஜய்யின் மனம்…………………

“இப்போதெல்லாம் வேண்டாம்…….. பிற்காலத்தில் அவளுக்காக தான் நிறைய துடிக்க வேண்டி இருக்கிறது…” என்பதால்……… அன்று தன் கவலையை நிறுத்திக் கொண்டது…………….. என்றே சொல்லலாம்…..

அதன் பிறகு தீக்‌ஷாவோ விஜய்யின் கவலையெல்லாம் தவறு என்பது போல………… இவனையும் வம்பிழுத்துக்கொண்டு……. யுகேந்தரோடு சேர்ந்து சிரித்தபடி வர…………….. விஜய்க்கு எரிச்சல் தான் மிச்சம் ஆகியது……………..

அன்று மாலை………… பொதுவாக…. திருமணம் நடந்த வீட்டில்…. மாலை வர வர மணமகன் மணமகளுக்குத்தான் ஒரு வித படபடப்பு வரும்…………… இங்கு விஜய் பதட்டத்தில் இருந்தான்……………. தீபனிடம் பேச வேண்டுமே என்று………………

6 மணிக்கு மேல் தீக்‌ஷா வீட்டின் ஹாலில் விஜய் வீட்டினரும்…………. தீபன் வீட்டினரும் இருந்தனர்…………… அந்த வீட்டின் இளவரசிகளைத் தவிர…………

அந்த வீட்டில் பிறந்த இளவரசி………….. வெளியே பேச்சரசியாய் மாறி போனில் யாருடனோ பேசியபடி இருக்க……….. அந்த வீட்டுக்கு புதிதாய் வந்த அரசி……………. தீபன் அறையினுள் இருந்தாள்………

விஜய் தான் ஆரம்பித்தான்….

”சாவியையும்…………….. வீட்டுப் பத்திரத்தையும்… தீபன் முன் வைத்தவன்

“தீபன்…………… இது……………… என் தங்கைக்காக நான் கொடுக்கும் பரிசு………………” என்று சொல்லி தீபனை அமைதியாக நோக்க……………..

தீபன் ரௌத்திரமானான்…………..

“என்ன விஜய்…………. உங்க பணக்காரப் புத்திய காட்டறீங்களா…………. இதைக் கொடுத்து என்னை வாங்கப் பார்க்கிறீர்களா………… இல்லை என் குடும்பத்தில் இருந்து பிரிக்கப் பார்க்கிறீர்களா…………. உங்க வீட்ல கூட 3 பேர்…………. ஆனா நான் இந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு என்றபடி……………… வீட்டுப் பத்திரத்தைத் தூக்கி எறிய………….” விஜய் கோபத்துடன் அவனைப் பார்க்க……………

விஜய்யின் கோபத்தைப் பார்த்த ராகவேந்தர்…………. மகனுக்காக பேச முன் வர…….. கோபம் வந்தபோதும்….. தன்னை அடக்கிய விஜய்……… தன் தந்தையை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு…….. முடிந்தவரை அமைதியாக பேசி தன் கருத்தை தீபனுக்கு புரிய வைக்க முயன்றான்

“தீபன்…………… புரிஞ்சுக்கங்க……………. நான் யாரையும் பிரிக்கவில்லை……….. பிரிக்கவும் நினைக்கவில்லை…. உங்களுக்கு கொடுக்கும் போது …… அதை பயன்படுத்தும் முழு உரிமையும் உங்களுக்கு மட்டுமே………. நான் வீடு மட்டும் தான் தந்தேன்…………….. நீங்க மட்டும் தான் போக வேண்டுமென்றா சொன்னேன்………… ஏன் இப்டி பேசறீங்க………. என் தங்கையை இந்த வீட்டில் சத்தியமாய் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை………………….. சொல்லப் போனால்…. அவளால முடியாது தீபன்……………. அவளுக்கு எந்த வேலையுமே தெரியாது………………. இன்னைக்கு காதல் மயக்கத்தில் அவளுக்கு எதுவும் பெரிதாக தெரியாது…………….. ஆனால் போகப் போக பிரச்சனைகள் தான் வரும்……………. அதை எல்லாம் தவிர்க்கத்தான்………. நான் சொல்கிறேன்…… அது மட்டும் இல்லை…………. வீடு விசயத்தை தவிர………………உங்க குடும்பத்தில்…. நான் வேறு எந்த விசயத்திலும் தலையிட மாட்டேன்.……………….” என்ற போது

வைத்தீஸ்வரன்………….

“இல்லை தம்பி அது சரிப்படாது…………….. உங்க தங்கைக்கு அது நீங்க வாங்கிக் கொடுத்தது……………. நாங்க வந்து தங்கினால் சரியா இருக்காது……………… அதற்காக…………. தீபன் – ராதா வருவார்களா என்றெல்லாம் கவலைப் பட வேண்டாம்………………. தீபன் நீங்க கொடுத்த வீட்டில் என் மருமகளோடு வாழுவான் ” என்ற போது வைத்தீஸ்வரன் குரலே பிசிறடிக்க………….. ஜெயந்தியின் நிலைமையைக் கேட்கவா வேண்டும்………….. சமையலறையில் நின்று அழுது கொண்டிருந்தாள்……….இங்கு நடப்பது எதுவும் தெரியாமல்………….. தீக்‌ஷா வெளியில் அரட்டை அடித்துக் கொண்டிருக்க……….. மகள் மேலும் ஒருபுறம் ஆத்திரம் வந்தது….

“அப்பா……………ப்ளீஸ்…………………..” என்று அவரைத் தன்னோடு அணைத்த தீபன்

விஜய்யிடம் திரும்பி

“இந்தப் பேச்சை இதோடு விடலாம் விஜய்….………….” என்று தான் தூக்கி எறிந்த பத்திரத்தை தானே எடுத்து விஜய் கையில் கொடுத்தவன்….

”சாரி………..கோபத்தில் தூக்கி எறிஞ்சுட்டேன்…………………” என்ற போது………. விஜய் தீபனின் தன்மானத்தில் மிகவும் பெருமை கொண்டான்………. தன் தங்கை சரியான ஒருவனைத்தான் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்…………… என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்………..

“ப்ளீஸ் தீபன்…………….. ராதாவுக்காக பாருங்க………………. அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க…………… அவ சந்தோசமா வாழணும் தீபன்……………… அவ பிறந்ததில் இருந்து…………. அவளை ராஜகுமாரி மாதிரி வளர்த்துட்டோம்…. இப்போ இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை…………… உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்…………… என்றவனின் குரலில் உள்ளே அமர்ந்திருந்த ராதாவே கலங்கி விட்டாள் தான்…………….. தன் அண்ணன் தன் மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பதை அவளே இன்றுதான் உணர…………… அறையிலிருந்து வெளியே ஓடி வந்தவள்………வந்து தன் அண்ணனின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பிக்க……………

“ஏய் ராதா எதுக்குடா அழற………….. கல்யாணப் பொண்ணு அழக்கூடாது…..” என்று தன் மீது சாய்ந்த…… தன் தங்கையை அணைத்தபடி…… விஜய் அவள் கண்களைத் துடைக்க…………..

“அண்ணா………………. நீங்க என் மேல வைத்திருக்கிற இந்த பாசம் மட்டும் போதும்…….. வேற எதுவும் வேண்டாம்…. தீபனோட சந்தோசம்தான் என் சந்தோசம் அண்ணா………………” என்றவளை……………

”இல்லம்மா…………………. நான்… உன் புகுந்த வீட்ல இருக்கிறவங்க யாரையும் உன் தீபன் கிட்ட இருந்து பிரிக்கலை………………” என்ற போது தீபன்

“அந்த பத்திரம் யார் பேர்ல இருக்கு விஜய்…. சொல்லுங்க” என்று ஆவேசமாகக் கேட்க….. விஜய்யும்

“உங்க பேர்லயும்………… ராதா பேர்லயும்” என்று தன் பதிலைச் சொல்ல………..

தீபன் கேலியாக………………

“இதுக்கு என்ன அர்த்தம்……………………. என்னை என் குடும்பத்தில இருந்து பிரிச்சுட்டீங்கனுதானே அர்த்தம்” என்று சொல்ல…………….. விஜய் வேகமாக……….

“இதுதான் பிரச்சனையா…………….உங்க அப்பா பேர்ல மாற்றிக் கொடுத்தா உங்களுக்கு ஓகேவா” என்று முகம் பிரகாசமாக கேட்க…………….. தீபன் விஜய் முகத்தையே பார்த்தான்……..

”அதில் தன் தங்கை……………. இந்த வீட்டில் இருக்கக் கூடாது…. அவளால் அது முடியவும் முடியாது……….. தான் வாங்கிக் கொடுத்த பங்களாவிற்கு…… அவள் தன் கணவன் குடும்பத்தோடு சென்று வாழ வேண்டும்” என்ற ஆதங்கமே இருக்க

தீபனும் அண்ணன் ஸ்தானத்தில் உள்ளவன் தானே………….. அவனுக்கும் விஜய் உணர்வுகள் புரிய………….. சங்கடமாய் தன் பெற்றோரைப் பார்க்க…………….. அது அவர்களின் பதிலை எதிர்நோக்கி இருக்க…. வைத்தீஸ்வரனோ ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் விட்டார்

விஜய்…………… தீபனிடம் வந்து……………….

“நல்ல முடிவா எடுங்க” என்று சொல்லியபடி அவர்களுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து வெளியேறினான்……………

அவன் கொஞ்சம் பதட்டம் ஆகிற சூழ்னிலை ஏற்பட்டால்……………… சிகெரெட்டின் துணை நாடுவான்…………… அதனால் கீழே போக எத்தனிக்க…….. அப்போது

உள்ளே நடந்த கலவரம் எதுவும் உணராமல் தீக்‌ஷா போனில் பேசிக் கொண்டிருந்தாள்…………

“யாருக்கு என்ன ஆனால்…………….. இவளுக்கென்ன…………….. வாயடிக்கிறதுக்கு மட்டும் யாராவது வேண்டும்……………….” என்று மனதுக்குள் நினைத்தபடி………. தன் காலணியை அணிய ஆரம்பித்தான்

அவளோ இவன் வந்தததைக் கூட கவனிக்காமல் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க……… அவள் பேசியது இவன் காதுகளில் விழுந்தது…….

“அண்ணா……..அண்ணிக்கு……… ஃபர்ஸ்ட் நைட்டாம்……. நான் பச்சப் புள்ளையாம்……….. இங்க இருக்கக் கூடாதாம்……… இந்த வைஜெயந்தி தொல்லை இருக்கே……….. தாங்க முடியல…………‘இன்னும் நம்மள உலகம்….. அறியா புள்ளைனு நம்பிட்டு இருக்கு ரமா………. டூ பேட்……….” அவள் பாட்டுக்கு சுற்றி முற்றி பார்க்காமல் பேசிக் கொண்டிருக்க….

அவள் பேச்சில் திகைத்து ஒரு நிமிடம் நின்றவன்……… பின் தானாகவே…… …….

“இந்தக் காலத்து பெண்களுக்கு……………. எதுவும் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்” என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவன்……

”அடிப்பாவி…………….. உன்னை அறியாப் புள்ளைனு… இந்த உலகம் நம்பலாம்………….. ஆனா நான் நம்ப மாட்டேன்டி” என்று மனதில் சொல்லியபடி……

“இன்னும் இங்கே நின்னோம் …………… உட்கார வைத்து……….. தனக்கே விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவாள்…………. செய்தாலும் செய்வாள்…………. என்ன பேசுறோம்னு தெரிஞ்சே பேச மாட்டா……………..இவள்ள்ள்ள்ள்ளலாம்……..” என்று நினைக்கும் போதே

”டேய் விஜய்……………… இவள பற்றி எல்லாம் நீ எதுக்குடா யோசிக்கிற… விட்டுத்தள்ளு………. நீ வந்த வேலையைப் பாரு……. ” மனம் சொல்ல……. தலையைச் சிலுப்பியவன்……………. அவளிடம்

““வழி விடுறியா” என்று மட்டும் சொல்ல………..

தீக்‌ஷா அதிர்ச்சியான விழிகளுடன் அவனைப் பார்த்து………. போனை காதில் இருந்து இறக்கியபடி எழுந்தாள்………….. அவளின் அதிர்ச்சியான விழிகளில்…………… ”இவன் என்ன கேட்டிருப்பானோ” என்ற கலக்கம்…………. விஜய்க்கு நன்றாகப் புரிய…………..

“பேசுறதெல்லாம் பேசிட்டு…………… ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி……………….. எப்டி முழிக்கிறா…………. எல்லாத்தையும் கேட்டுட்டேண்டி………..“ என்று உரிமையோடு மனதுக்குள் பேசியவனுக்கு……………… அந்த உரிமை மூளைக்கும் எட்ட வில்லை……………. அவன் மனதுக்கும் எட்டவில்லை………………

எதையும் உணராதபடி………….. மனதுக்குள் மட்டும் அவளுக்கு கவுண்டர் விட்டுக் கோண்டிருந்தவன்…………. கொஞ்சம் நக்கலாக அவளிடம்………………

““வெளங்கிடும்……….உருப்ட்டுருவ”” என்று அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி……….. மெல்லிய குரலில் சொல்லி………………. தான் கேட்டு விட்டேன் என்பதை அவளுக்கு உணர்த்திச் சென்றவன்……………… நான்கு படி கடந்து மீண்டும் திரும்பிப் பார்க்க………….. அப்படியே நின்று கொண்டிருக்க…………….

“அவள் ‘ஞே” என்று நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்து………… சிரித்தபடி துள்ளளாக இறங்கியவனுக்கு…….. சற்று முன் இருந்த தன் தங்கை கவலை கூட மறந்துவிட………….. அதனால் சிகரெட்டின் துணையும் தேவைப்படாமல் போய் விட…………….. கீழே காரின் அருகே நின்றபடி…. நேரத்தைக் கடத்த வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்……………….

கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து அவன் வரும்போது நிலைமை…… அவன் விட்டுப் போன இடத்தில் தான் இருந்தது……………… வைத்தீஸ்வரன் இன்னும் ஒத்துக் கொள்ள வில்லை…………… என்று தீபன் சொல்ல………. விஜய்க்கு தன் தங்கையை நினைத்து மீண்டும் கலக்கம் வர…………. தீபனிடம் மீண்டும் வற்புறுத்த

அப்போதுதான் விஜய் தீக்‌ஷாவைப் பார்த்தான்………………… அதிலும் அவள் தன் அண்ணன் மேல் கை போட்டபடி உட்கார்ந்து…. தன்னை ஏளனமாக பார்த்துக் கோண்டிருப்பது……… நன்றாகத் தெரிய…………… இப்போது தீக்‌ஷாவின் நிலை விஜய்க்கு இன்னும் எரிச்சலைக் கிளப்பியது…………………

கடைசியில்…………….. ஒருவழியாய் தீபன் பெற்றோர்கள் சம்மதிக்க விஜய் பெருமூச்சு விட்டு நிமிர…………….. அப்போது தீக்‌ஷா

““அப்பா……….. என்னப்பா………….. நான் வர மாட்டேன்……… என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா” என்று கத்த

சுரேந்தரும் யுகேந்தரும்….. தீக்‌ஷாவை கிண்டல் செய்ய……………….. விஜய்க்கும் சிரிப்பு வர…………….. அவளிடம் முதன் முதலாக தன் புன்னகையை………. அவள் முகத்தை நோக்கி சிந்த…………….. அவள் அதை எரித்து விடுவது போல் பார்த்தாள்………………….

அவளின் பார்வையை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை……….. அப்படியே கண்டுகொண்டிருந்தாலும் இவன் ஒன்றும் பாதிக்கப்படப் போவதில்லைதான்…….. ஏனென்றால்………….

ராதா தன் தங்கை…………… இனி இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை என்ற ஆனந்தமே இருக்க………… அதற்கு ஒத்துக் கொண்ட தீபனையும் அவன் குடும்பத்தையும் அந்தக் கணத்தில் இருந்து தன் மனதார ஏற்றுக் கொண்டான் விஜய்……

-----------------

தீபன் சம்மதித்து விட்ட ஒரே காரணத்தால் ……… தானே அவர்கள் குடும்பத்தின் வீடு மாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட விஜய்…………. அவன் தங்கை சந்தோசம் மட்டுமே அவனின் சந்தோசமாக இருக்க……………. அவள் காதலித்து மணந்ததெல்லாம் பின்னுக்குப் போக………. அன்று அதிகாலையே தீக்‌ஷாவின் வீட்டிற்கு ஆட்களோடு……….. போய்விட்டான்……………. வீட்டைக் காலி பண்ண………..

வீட்டில் இருந்த பொருட்களெல்லாம் காலி செய்யப் பட்டுக் கோண்டிருக்க…………….. தீக்‌ஷா அறையில் உறங்கிக் கொண்டிருக்க…………விஜய் ஜெயந்தியிடம்

“நான் பார்த்துக் கொள்கிறேன்…………….. அவ ரூமைக் கடைசியில் காலி பண்ணிக் கொள்ளலாம்…………… நீங்க போங்க………… நான் பார்த்துக் கொள்கிறேன்“ என்று ஜெயந்தியிடம் கூற………

ஜெயந்தி தயங்க………. அவளின் தயக்கம் புரிந்தவனாய்

அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அவளின் அறையை வெளியில் தாழிட்டபடி…….

”நானும் ஒரு பொண்ணுக்கு அண்ணன் தான் அத்தை” என்றபடி அங்கிருந்து போக……………… அவனது செயலில்………….. சஞ்சலமின்றி கிளம்பினாள் தீக்‌ஷாவின் தாய்………..

கிட்டத்தட்ட 7 மணி அளவில் ஓரளவு பேக்கிங் எல்லாம் முடிக்க……………. வீடும் ஓரளவு காலியாகிக் கொண்டிருக்க………… ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தபடி அவள் அறையினையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்

“மகாராணி எப்போ எழுந்து….. எப்போ இங்கேயிருந்து கூட்டிக் கொண்டு போக………… எழுப்பலாமா………….” என்று கூட யோசித்தவன்………..

“அந்த விஷப்பரிட்சையெல்லாம் வேணாம்டா…………….. அவளே எழுந்து வருகிற வரை வெயிட் பண்ணு……..” என்று தீர்மானித்தவனாய்

”ச்சேய் ஒரு தங்கை யோட பிறந்து……….. அவ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரோ ஒருத்தி……….. இந்த தீக்‌ஷா……….. அவள் எழுவதற்காகவெல்லாம காத்திருக்க வேண்டிய தன் நிலையை எண்ணி” தலையிலடித்துக் கொள்ளாத குறையாக உட்கார்ந்திருந்தான்……………………

அவன் பொறுமையை எல்லாம்………….. இன்னும் ஒரு அரை மணி நேரம் பறக்க விட்டவளாய்…….. தீக்‌ஷா தன் அறைக் கதவைத் தட்ட……….. விஜய் வேகமாய் எழுந்து அறைக்கதவை….. திறக்க……. திறந்தவன் கொஞ்சம் அதிர்ந்து பின் தனக்குள் சமாளித்தான் தான்………… அவள் இரவு உடை கொஞ்சம் இறங்கியிருக்க………….. பார்த்தும் விட்டான் தான்………… ஆனாலும் சட்டென்று பார்வையை மாற்றியும் விட்டான் தான்…………….

வாய் தானாகவே அவள் உடையை மாற்றி வரும்படி அவளுக்கு உத்தரவிட……. கைகள் அனிச்சையாகவே அவள் அறைக் கதவை மூடின…………..

அதன் பின் தான் பார்த்த தீக்‌ஷாவின் கோலம் பற்றி பெரியதாக எண்ண ஓட்டமெல்லாம் அவனுக்குள் இல்லைதான்……………. இருந்தாலும்………………………… ???????

பின் உடை மாற்றி வந்த தீக்‌ஷா………………. தன் வீட்டைப் பார்த்து……….. கொஞ்சம் கண் கலங்கி……… பின் நிலைமை புரிந்து………… தன் பெற்றோரைத் கேட்க……………..

”யாருமே இல்லை…………. எல்லோரும் அங்க போய்ட்டாங்க…………… ”

”அப்போ டீ கூட கிடையாதா” என்று தீக்‌ஷா தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டாள்………….

அவளிடம் பதில் சொல்லாமல்………….. சுரேந்தருக்கு போன் செய்தான் விஜய்……….

“டேய் இந்த மகாராணி எழுந்துட்டாங்க………… மேடம் பசி தாங்க மாட்டாங்கனு அவங்க அம்மா கொடுத்துவிட்ட டிபனை கொண்டு வந்து கொடுங்க……………..” என்று போனை வைத்து கடுப்புடன் பார்த்தான் விஜய்…

அடுத்த நிமிடம் சுரேந்தர் காலை டிபனைக் அவள் கையில் கொண்டு வந்து சேர்க்க……………… சுரேந்தரே அவளுக்கு வந்து கொடுத்ததை தாங்க முடியாத விஜய்………….

சுரேந்தரை தனியே வெளியே வந்தவன்………..

“எடுத்துட்டு வான்னா…… நீயே வரணுமாடா…………. வேற யார்கிட்டயாவது குடுத்து விட மாட்டியா” என்று பல்லைக் கடிக்க……

”ஏண்ணா………… தீக்‌ஷாவும் இனி நம்ம வீட்டும் பொண்ணுதானே…………….விடுங்க…………….” என்று அவன் சாதாரணமாகச் சொல்லியபடி கீழே இறங்கிப் போய் விட்டான்

விஜய் தீக்‌ஷாவை தான் நின்ற இடத்தில் இருந்தே பார்த்தபடி இருந்தான்………… அவளோ அதை எல்லாம் உணராமல்………… சாப்பாடே கருமமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க…………. அவள் சாப்பிட்ட விதத்தில் லேசாய் புன்னகை விஜய் முகத்தில் படர……………… அந்தப் புன்னகையுடன் அவளின் முன் வந்து உட்கார்ந்தான் விஜய்…..

“எனக்கு மட்டும் ஏன் இவள பார்த்து எரிச்சல் வருகிறது………….. போயும் போயும் சின்ன பொண்ணுகிட்ட…………… சின்னப் புள்ளை மாதிரி நானும் சண்டை போட்டுட்டு இருக்கேன்….. என்னை நான் மாற்ற வேண்டும்……” என்று மனம் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு விக்கல் வர…….

”சாப்பாடை எடுத்து வந்து கொடுத்தவன்…………. தண்ணீர் எடுத்து வர மாட்டானா” என்று சுரேந்தரை மனதில் திட்டியவன்……………….

தன்னையே பார்த்தபடி…. பரிதாபமாக விக்கிக் கொண்டிருந்த தீக்‌ஷாவைப் பார்த்து ஒரு யோசனை வந்தது……….. ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தா விக்கல் போகும்னு சொல்வாங்களே கொஞ்சம் மிரட்டிப் பார்ப்போமா……. என்ற எண்ணம் வர……………… அந்த எண்ணத்தை அதே வேகத்தில் கைவிட்டவன்…………….. அவளிடம்

““சாப்பிட மட்டும் அவசரம் காட்டக் கூடாது… தண்ணி இருக்கானு ஃப்ர்ஸ்ட் பார்க்க வேண்டும்” என்று சொல்லியபடி எழுந்து கிச்சனுக்குள் போனான்…..………………………

அங்கு ஒரு பொருளுமில்லை…………… பின் எப்படி தண்ணீர் மட்டும் இருக்கும்………….. அவனே மனம் வந்து அவளுக்கு… தண்ணீர் எடுத்துக் கொடுக்க வந்தான் தான்…. எல்லாம் அவன் நேரம்…………… அவனை அவளிடமிருந்து இன்னும் விலக்கியே வைத்தது விதி….

வேறு வழியின்றி யுகேந்தருக்கு கால் செய்தான்……………… சுரேந்தர் தீக்‌ஷாவுக்கு….. வேலை செய்வதை அண்ணனாகப் பார்க்க பிடிக்கவில்லை…………… ஆனால் யுகேந்தர் இவளுடன் சரிசமமாக பழகுவதால்………. அவனுக்கே போன் செய்தான்………………

யுகேந்தரும் கொண்டு வந்து கொடுக்க…………………

“என் தம்பிங்க ரெண்டு பேரையும் என்னை வைத்தே வேலை வாங்குகிறாள்……………. இப்பவே இப்படினா………” என்று தோன்ற

“இவ இருக்கிற பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது நாங்க 3 பேரும்………….” என்றெல்லாம் அவன் குண இயல்புக்கு மாறி அவன் யோசித்துக் கொண்டிருப்பது கூட தெரியாமல்………………. அவன் இருந்தான் அப்போது………………….

கிட்டத்தட்ட எல்லாவற்றையும் காலி செய்து….. தீக்‌ஷாவையும் வெளியே அனுப்பி விட்டு……….. வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தவன்………… தீக்‌ஷாவின் அறையையும் பார்க்க நேரிட………… அதன் சுவரெங்கிலும்…………….. அவள் பேர் கிறுக்கப் பட்டிருக்க…….…………………… அதைப் பார்த்தபடி

“வீட்டையே அலங்கோலப் படுத்தி வச்சுருக்கா…….. பெரிய இந்த பேரு…………….. ” என்றபடி வெளியேறினான் விஜய்…………….

அவன் வெளியே வந்த போது அந்த குவார்ட்டர்ஸின் குழந்தைகள் தீக்‌ஷாவை சுற்றி நின்று அழுதபடி இருக்க……… இவள் கண்களும் கலங்கி நின்றிருந்த விதம் அவனுக்கு சிரிப்பைதான் தந்தது…………..

பின் அவர்களிடம் விடைபெற்றபடி தன் அருகில் வந்த தீக்‌ஷாவிடம்

“அடேங்கப்பா…………. இந்த அக்கா போறாங்கனு…… இத்தனை பேருக்கு வருத்தமா” என்று கேலியாக அவளிடம் கேட்க

“இந்த மாதிரி நிலை உங்களுக்கு வந்தா தெரியும்……… நமக்கு பிடிச்சவங்க நம்மை விட்டு போகும் போது வருகிற வலிதான் இந்த உலகத்திலேயே பெரிய வலி” என்று சொல்லி அழுதபடியே அவனை முறைத்தவளைப் பார்த்து

இவகிட்ட கொஞ்சம் பேசுனா நமக்கே சாபம் விடுற மாதிரி பேசுறா………….. என்று தன் முகத்தை மாற்றினான் விஜய்…..

ஆனால் அன்று கேலியாகத் தீக்‌ஷா சொன்ன வார்த்தைகள்………. ஒருநாள் அவன் வாழ்வில் நிதர்சனம் ஆகி……. அந்த வலியை அனுபவிக்கும் நிலைக்கும் ஆளானான் விஜய்…..

“ஏன் அத்தான் இப்டி பண்ணுனீங்க…….. ஒரே நாளில் வீட்டை மாற்றி…………” என்ற போதே…………. அவள் பேச்சை காதிலே வாங்காதவன் போல்

காரை எடுத்தான் விஜய்…………….. அவளும் தங்கள் வீட்டு பெண் என்ற எண்ணம் கொஞ்சம் வந்ததால்….. அவளுக்கு காரோட்டுவதில் இப்போது மனம் தயங்கவில்லை அவன்…………

ஆனால் அவள் பின்னால் போக………… அது அவளுக்கு காரோட்டும் ஓட்டுனநர் போல் இருக்க………….. முன்னால் வரச் சொல்ல…………………… அவன் அருகில் வந்து அமர்ந்த தீக்‌ஷா சும்மாவா இருந்திருப்பாள்…………….. சற்று முன் இருந்த பிரிவுத் துயரம் எல்லாம் போய் விட…………. விஜய்யோடு பேச ஆரம்பித்தாள்………………

அவனே ஏதோ போனால் போகிறது என்று அவளையும் அழைத்துக் கொண்டு போக மனம் வந்து இருந்தான்………… ஆனால் அவன் மனம் புரியாமல் தீக்‌ஷா அவனோடு வம்பளந்து கொண்டிருந்தாள்……… அதுவும் சும்மா இருக்காமல் தீக்‌ஷா திடிரென்று அவனிடம்

“ஏன் அத்தான் எனக்கு ஒரு டவுட்……….. உங்க வைஃப் வந்த நம்ம ரெண்டு பேருக்கு நடுவிலயா உட்கார வைப்பீங்க…. ” என்றவளை

புரியாமல் நோக்க

வழக்கமாய் தன் உளரலோடு தீக்‌ஷா பேசத் தொடங்கினாள்……. இவனின் பார்வை புரிந்தவள் போல்

“இல்ல சும்மா…. கேட்டேன்……… ஏன்னா……… என்னை பின்னாடி வச்சு ட்ரைவ் பண்ண மாட்டீங்க………… நான் முன்னாலயும் வர முடியாது…….. ஒரு வேளை அப்படி ஒரு சிச்சுவேசன் வந்தா அப்போ என்ன பண்ணுவீங்க”

சத்தியமாய் கடுப்பாய் ஆகி விட்டான் விஜய்……………. இவள நாம கூட்டிட்டு வராமலே இருந்திருக்கலாம்………. பெரிய சிச்சுவேஷன் ……… எங்க இருந்து யோசிப்பா இவ…… அது உருப்படியா இருந்தால் கூட பரவாயில்லை……………. இவ என்னைக்குமே யூஸ்ஃபுல்லா பேச மாட்டாளா என்ற இவன் மனதில் நினைக்க………….. அவள் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து

”அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா பார்த்துக்கலாம்……..இப்போ நீ பேசாம வருகிறாயா” என்று அந்தப் பேச்சை முடித்து வைப்பவன் போல் அதட்டியவன்………… பேசாமல் காரை ஓட்ட ஆரம்பித்தான்”

ஆனால் தீக்‌ஷா விடுவாளா……….. விட்டால் தான் அவள் தீக்‌ஷா ஆவாளா……………….. விஜய் அவளிடம் ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்ததாலோ என்னவோ………………. அம்மணி அவனையே நக்கலடிக்கும் அளவுக்கு வந்து விட்டாள்…………………

”ஆன்சர் தெரியவில்லையா” என்று அவனிடம் ஓட்ட விஜய்க்கு வந்த எரிச்சலுக்கு அவளிடம்

“ஹ்ம்ம்ம்ம்…….. என் பொண்டாட்டிய மடியில் தூக்கி வச்சுப்ப்பேன்டி…..” என்று சொல்ல வேண்டும் போல் இருக்க………. அதை அவளிடம் சொல்லவா முடியும்

”யார்டா இவ…………. ஆன்சர் தெரியலையான்னு……. வந்துட்டா கேள்வி கேட்க………..” என்று மனதில் நினைத்தவன்

”யார் சொன்னது ஆன்சர் தெரியாதுனு……………. நீ சின்னப் பொண்ணு……………. அதுதான்……….. சொல்லல” என்று மட்டும் சொல்ல

இப்போது அவன் எண்ணப் போக்கில் அவன் மனமே அவனைப் பார்த்து சிரித்து வைத்தது……….

‘டேய் விஜய்………… உன் பொண்டாட்டிய நீ மடியில வச்சுகுருவியா……… அவ்வளவு ரொமான்ஸ் மன்னனாடா நீ…..” என்று நினைத்த போது அவன் முகம் அவனை அறியாமலே புன்முறுவல் பூச ஆரம்பிக்க…………

தீக்‌ஷா….. அதைக் கவனித்து விட்டாள் போல்…………. அவள் முகத்தைப் பார்க்கும் போதே விஜய்க்கும் அது தெரிய……………….

“கடவுளே………. இவ என்னத்த யோசிக்கிறாளோ……………… இவ யோசிக்கிற விதமே சரி இருக்காதே………………. என்னென்ன………… யோசிச்சாளோ…….” என்று மனம் திடுக்கிட முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்

”ரொம்ப யோசிக்காத…………… உன் மூளை கண்டதை எல்லாம் யோசிக்குமே ட்ரைவர வரச் சொல்லி இருப்பேன்…………. போதுமா…………”. என்று விரிவாகச் சொல்லி தன் பதிலை அவளுக்கு புரிய வைக்க முயல………..

ஆனாலும் அவள் அதை நம்பாமல் அவன் முகத்தை கேலியாகப் பார்த்தபடி இருக்க………….

அவளை நம்ப வைக்கும் முயற்சியாக………….. இவன் இன்னும் பேச ஆரம்பித்தான்…………….

“இல்லைனா உன்னை விட்டுட்டு போயிருப்பேன்…….. எனக்கு என் வைஃப் தான் முக்கியம்……… நீயா முக்கியம்” என்று சொல்லி அவளைப் பார்க்க…….அவள் இன்னும் கேலியாக நோக்க

“போடி………….. இதைவிட நீ என்ன எதிர்பார்க்கிற…….. போனாப் போகுதுனு உனக்கு உன் லூசுத்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொன்னா………… உனக்கு அதுல திருப்தி இல்லையோ… எனக்குத் தேவைதான்…………… தூங்கிட்டு இருக்காளேனு பாவம் பார்த்து… எழுப்பாம…………. கூட்டிட்டு வரேனு அவ அம்மாகிட்ட பெரிய இவனாட்டம் சொன்னேன்ல………….. அனுபவிக்கத்தான் வேண்டும்” என்று தன்னையே நொந்தபடி சாலையின் புறம் தன் மொத்தக் கவனத்தையும் திரும்ப

தீக்‌ஷாவோ ”இதச் சொல்லத்தான் நான் சின்ன புள்ளைனு சொல்லலையா…… இதுதான் யோசிச்சீங்களா……………. வேற என்னவோ இருக்கு” என்று அடம்பிடிக்க

வேறு வழியின்றி…. முகத்தை கடுமை ஆக்கியவன்

“தயவு செஞ்சு என்னையும் உன்னை மாதிரியே லூசு மாதிரி பேச வச்சுராதா” என்றவன் அதற்குப் பிறகு அவளிடம் பேச்சைக் குறைத்தவன்……………வீடு வரும் வரை………….. வாயையே திறக்க வில்லை…………….. ஏதாவது பேசினால்………….ஏடாகூடாமா எதையாவது சொல்லி விடுவோமோ என்று கூட நினைத்தவன்………………. நல்ல பிள்ளையாக மாறி………. தான் வாங்கிக் கொடுத்த புதிய வீட்டின் முன் காரை நிறுத்தினான்………………

அவள் இறங்கும் போது…………

’தீக்‌ஷா’ என்று அழைக்க…………….

அவளும் குனிந்து கீழே பார்க்க

“உன் பேர் எங்க எல்லோருக்கும் தெரியும்……………… இங்கயும் உன் பேரை எழுதி சுவரையெல்லாம் அசிங்கப் படுத்திராத…………. இது நீ இருந்த கவர்ன்மெண்ட் குவார்ட்ரெஸ் இல்லை” என்று சொல்ல…………. அவள் விறைத்தாள்…………….. அதேநேரம்…… அவனிடம்

“கண்டிப்பா…..விஜய் அத்தான்………… எனக்கு பிடிச்ச இடத்தை மட்டும் தான் என் பெயர் அலங்கரிக்கும்……………. சோ இந்த வீட்டுக்கு அந்த அலங்காரம் கிடைக்காதுதான்….. சாரி சாரி…………. உங்க பாஷைல அசிங்கப்படுத்த மாட்டேன் உங்க தங்கை வீட்டை” என்ற படி……….. அவள் கிளம்ப……. அவளின் வேக நடையே அவளின் கோபம் சொல்ல

“சுவரில் கிறுக்கக் கூடாதுனு…. நல்ல பழக்கத்தைதானே சொன்னேன்……….. இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது…. நல்ல பழக்கம் எல்லாம் சொன்னா……….. இவளுக்கெல்லாம் பிடிக்குமா……………. பிடிக்காதுதான்……” என்ற மட்டில் தான் விஜய் அன்று நினைத்தான்……………..

சுவரில் கிறுக்கக் கூடாது என்ற நல்ல பழக்கத்தைதான் அவளிடம் சொன்னான் ……..கூடவே தன் பேச்சில் அவளின் பழைய வீட்டையும் இழுத்ததைத்தான் அவன் உணரவில்லை…………

1,280 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page