top of page

அன்பே… நீ இன்றி??? 2

அத்தியாயம் 2:

பார்வதி கண்ணில் அதிர்ச்சியுடன் அவளையே பார்க்க

“ஹலோ எதுக்கு இந்த லுக்…. எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆக வேண்டும்….. என்ன….. நான் கொஞ்சம் சீக்கிரம் போகப் போகிறேன்….” என்றவளிடம்

“தீக்‌ஷா விளையாடாதே……. சும்மா மனசெல்லாம் பட படனு னு வருது….. இத்தனை நாள் கழித்து பார்க்கிறேன்….. சும்மாதானே சொல்ற…..” என்று சொன்னவளின் மனம் அவளும் அதையே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க….

தீக்‌ஷா விரக்தியாய் சிரித்தாள்…

“எனக்கும் நீ சொல்றது போல சொல்லத்தான் ஆசை பாரு…. ஆனால் சொல்ல முடியவில்லையே….. ஏதோ மயங்கி விழுந்தேனாம்…. கோமா ஸ்டேஜுக்கு போனேனாம்…. என்று சொன்னாங்க…. வேற எதுவும் சொல்லலை…. அதுக்கப்புறம்…. நான் நச்சரிச்சு கேட்ட பின்னால் ஏதோ ஒரு பேர் சொன்னாங்க…. என் இதயம் ரொம்ப நாள் துடிக்காதாம்….. சீக்கிரம் ஸ்டாப் பண்ணிக்குமாம்…. அதிர்ச்சி தாங்க முடியாதாம்…. சந்தோசமோ… துக்கமோ அதிகமா இருக்கக் கூடாதாம்…….. என்று சாதாரணமாகச் சொல்லியவளிடம்….

தீக்‌ஷா ”என்னடி” என்று தழுதழுத்தவள்…. ”இவ்ளோ ஈசியா சொல்ற….. கேட்கிற எனக்கே முடியல….. உனக்கு…. உன்னால எப்டிடி” என்று சொன்னபோது

”என்ன பண்ண சொல்ற….. ஒருவாரம் மனசு கிடந்து அடிச்சுகிறுச்சு…. அழுதேன்…. கதறினேன்….. இதுதான் வாழ்க்கையானு துடித்தேன்… விரக்தியா இருந்தேன்….. அப்புறம் பழகிருச்சு…. சரி இருக்கிற வரை சந்தோசமா அனுபவிப்போம்னு பார்த்தா….. என்னைச் சுற்றி இருக்கிறவங்க அன்புத் தொல்லை இருக்கே…. தாங்க முடியல………. என்றவள்….

”நல்ல வேளை.. நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சு….. இல்லை… பாவம் அந்தப் பையன்…” என்றபோது…

“என்னது திருமணமா….. நின்னு போச்சா…” என்று வாய் திறந்தவளிடம்

“நானே இந்த அளவுக்கு ரியாக்சன் கொடுத்திருக்க மாட்டேன் போல….. ஆமாடி… ஆனா நிச்சயதார்த்தம் வரை வந்து…….. நின்னுருச்சு…. அவன் வேற எந்த பொண்ணையோ லவ் பண்ணினானம்… அவளோடயே போறேனு லெட்டர்….. என்று நிறுத்தியவள்

“லெட்டரா என்று குழம்பி… புடவைக்கு இடையில…” என்று யோசிக்க ஆரம்பித்தவள்…… மனம் எதையும் எடுத்து கொடுக்காமல் நினைவுகளை நிறுத்த ஆரம்பித்து இருக்க.………. அவள் உடல் வேர்க்க ஆரம்பித்து இருந்தது….

அவளின் நிலையைப் பார்த்து படபடப்பான பாரு அவளை உலுக்க

அவளின் உலுக்கலில்…… மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்….. ஆனால் பேச்சுதான் மாறியது……

”லெட்டருக்கு எனக்கும் ராசி இல்ல போல பாரு…” என்று கண் சிமிட்ட

பார்வதிக்கோ அவளின் குழப்பமெல்லாம் அவளுக்கு கருத்தில் படாமல்…. அவள் சாதாரண நிலைக்கு திரும்பிய திருப்தியில்

“அண்ணா இப்பவும் ஃபீல் பண்ணுவாங்க தீக்‌ஷா……. அவராலதான் நீ என் தொடர்பையே விட்டுட்டேன்னு” என்று சொல்ல…..

“ஹ்ம்ம்.. அப்டியும் தான்…. திடிர்னு 12 த் படிக்கிற பொண்ணுகிட்ட லெட்டர நீட்டினால்…. கை கால் எல்லாம் ஆடிருச்சு ’பாரு’…. இப்போ அதை நினைச்சா சிரிப்பு வருது….. ” என்று சொன்னவளிடம்

”வரும் வரும்….” என்றபடி தன் அண்ணன் விசயத்தை ஒத்தி வைத்தவள்…. விஜயிடம் வந்து நின்றாள்…

”விஜய்க்கும்… உனக்கும் என்ன சம்பந்தம்…. ஏன் அவர இன்சல்ட் பண்ற மாதிரியே பேசுற” என்றவளிடம்

“ப்ச்ச்… அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை….. ஆனா சம்பந்தமிருக்கு….” என்றபடி….. பார்வதி விழித்ததைப் பார்த்து

“முழிக்காத….. அவர் எங்க அண்ணியோட அண்ணன்…. அந்த சம்பந்தம் மட்டும் தான்….”. என்று சாதரணமாகச் சொன்னவள்…. சொன்ன நொடியிலேயே முகம் கடுத்து பேச ஆரம்பித்தாள்

”பணத்திமிர் பிடித்தவன்….. ஸ்டேட்டஸ் வெறிப் பிடித்தவன்………. இன்னும் சொல்லலாம்…. என்றவள் இன்னொருத்தனுக்கு திருமணம் நிச்சயம் செய்த பொண்ணுனு கூடப் பார்க்காம என்கிட்ட மோசமா பேசியவன்……..” என்று கொதித்தவள்………

“இப்போ இவனை நம்பி தனியா இவனோட என்னை அனுப்பி வைக்கிறாங்க……. பணம் படுத்துற பாடு பாரு……. என்னை இவர்தான் இப்போ காப்பாத்திட்டு இருக்காராம்……. பெரிய டாக்டர்கிட்ட காண்பித்து……… இதுனாலேயே சீக்கிரம் சாகலாம்னு இருக்கு பாரு……….. இவன் போடுற பிச்சைல வாழவே பிடிக்க வில்லை……….. எதையும் சாதரணமா செய்ய மாட்டான் இவன்……. இதுக்கு பின்னால என்ன இருக்கோ” என்று சொன்னவள்… பார்வதியைப் பார்த்து

“இப்போ என்ன சம்பந்தம்னு புரியுதா…. இது போதுமா….” என்றவளுக்கு

”புரியல … இதுக்கு நீ சொல்லி இருக்கவே வேண்டாம்… இப்போதான் கொஞ்சமா தெரிந்து…. ரொம்ப குழப்பமா இருக்கு” என்று பாரு மீண்டும் முறைக்க….

”சொல்றேன் சொல்றேன்…. இப்போ வேண்டாம்” என்று விஜய்யின் பேச்சை நிறுத்தினாள்…….

அதன் பிறகு அவளும் வேலை பார்க்கவில்லை…. தோழியையும் வேலை பார்க்க விடவில்லை…. தீக்‌ஷா பேசிக் கொண்டே இருந்தாள்………. ஆனால் கவனமாய் சாரகேசை மட்டும் தவிர்த்து….

அது மதிய உணவு இடைவேளை வரைதான்……….. தானாகவே ஆரம்பித்தாள் தீக்‌ஷா………

“உங்க அண்ணன் என்ன பண்றாங்க ….. எந்த ஹாஸ்பிட்டல்…. இல்ல…. ப்ரைவேட்டா …. MBBS படிச்சுட்டு…. அடுத்து மேல படிச்சாங்களா….” தீக்‌ஷா வழக்கமான வாய் வழக்கில் பேச….

”என்னடி இந்த பட பட பட்டாசை நிறுத்தலயா…..” என்றவள்…

“அண்ணா…. ஹார்ட் சர்ஜனா இருக்காரு தீக்‌ஷா…. உன்னை அவர்கிட்ட காட்டலாம் தீக்‌ஷா…. என்று சொல்லியபடியே ஆனா.... அண்ணாவால இதை தாங்கவே முடியாது தீக்‌ஷா….. என்று சோகமானவளிடம்

“பாரு…………. இதை உங்க அண்ணாகிட்ட சொல்ல வேண்டாமே ப்ளீஸ் என்றவள்….. உன்கிட்ட கூட சொல்லியிருக்க்க் கூடாதுதான்… உன்கிட்ட சொல்லனும் போல இருந்துச்சுப்பா” என்றபடி சாரகேசுக்கும் அவளுக்குமான பிரச்சனையைச் சொன்னாள்

”உன் அண்ணா சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன்….. ரிசல்ட் பார்த்த உடனே அவ்ளோ சந்தோசம்…. 1122 மார்க….. அதுவும் மேக்ஸ்ல 200… சந்தோசத்தில நீ ஊரில் இல்லைன்றதையும் மறந்து உன் வீட்டுக்கு வந்தேன்…. வீட்ல உங்க அம்மாவும் இல்லை…. உங்க அண்ணா மட்டும் தான் இருந்தார்… அவர் சொல்லிக் கொடுத்ததினாலதானேனு சந்தோசமா ஷேர் பண்ணிட்டு… அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆன விசயத்தை சொன்னா……….. அடுத்த 5 மினிட்ஸ்ல எதையோ எழுதி நீட்டுறாரு…. சத்தியமா ’பாரு’ முன்ன பின்ன எனக்கு லவ் லெட்டர் யாரும் கொடுத்ததில்ல…. என்னடானு உங்க அண்ணாவை நம்பி… வாங்குனா…. லவ் ப்ரொபொசல் லெட்டர்……….. கை காலெல்லாம் நடுங்கிருச்சு………… அவரப் பார்க்கக் கூட முடியல……….. சரி போகலாம்னு தான் வெளில வர பார்த்தா……. கைய புடிச்சுட்டாரு………. எனக்கு அழுகையே வந்துருச்சு… என்ன நினைத்தாரோ தெரியவில்லை… விட்டுட்டாரு………. அதுக்கப்புறம் பயம் ’பாரு’… இதைப் பற்றி கேட்பாரோனு…. அதுனாலதான் உன்கிட்ட சொல்லாம வந்துட்டேன்…… மார்க் சீட் வாங்க வரும்போது கூட உன்னைப் பார்க்கலை என்று சொன்னவளிடம்

“ஹ்ம்ம்…. சரி விடு…. ஆனாலும் என்கிட்ட பேசாம வந்தது ஓவர்தான் தீக்‌ஷா என்றவளிடம்

நூறாவது முறையாக சாரி கேட்டாள் தீக்‌ஷா……..

இப்போது பார்வதி அவளிடமே

“சரி சரி விடு…. உன் மேல கோபமெல்லாம் இல்லை… என் அண்ணன் பண்ணினதும் தப்புதானே….. ஆனால் இன்னொன்று கேட்பேன்….. தப்பா எடுத்துக்கக் கூடாது…….. அண்ணா அன்னைக்கு கொடுத்த லெட்டருக்கு என்ன பதில் மேடம் “ என்று குறும்பாக்க் கேட்க

“ஆமாடி……… இப்போ நான் இருக்கிற நிலைமையில அது ரொம்ப முக்கியம்………. அதை விடு…. உனக்கு எப்போ மேரேஜ்” என்றவளிட,ம்

நான் கேட்டதற்குப் பதில் என்று பார்வதி முறைக்க

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று பெருமூச்சை இழுத்து விட்டவள்……….. தெரியல என்று சொல்ல…….

“அடிப்பாவி” என்றவளிடம்

“காதலுக்கும் தீக்‌ஷாவுக்கும் ஆகவே ஆகாது பாரு………….. ஒருத்தனை லவ் பண்ணிட்டு…… அவனுக்காக வீட்ல சண்டை போடுறதுனு…. வீட்டை விட்டுப் போறதுனு… அவனுக்காக உயிரை விடுறது…… அவன் தான் எல்லாம்… இதெல்லாம் போர்பா…….. சும்மாவே எனக்கும் என் அம்மாவுக்கும்…. என்கிட்ட அது சரி இல்ல.. இது சரி இல்லைனு இப்டி இருக்கக் கூடாது,…. அப்டி நடக்கக் கூடாதுனு…. உலகப் போரே நடந்துட்டு இருக்கும் இது வேறயா” என்று சொல்லியபடி…..

ஹை சேம் பின்ச் என்று பாரு குதிக்க………. நண்பிடி என்று தோழியர் இருவரும் கட்டிக் கொண்டனர்…. மீண்டும் தீக்‌ஷா,,,,

”சரி நமக்குதான் இந்த காதல் கத்தரிக்காய்லாம் வராதுனு வீட்ல பார்த்த பையனுக்கு கழுத்தை நீட்டுவோம்னு பார்த்தா…….. அது அதுக்கும் மேல…….. என்னைப் பார்த்துட்டு ஓடி இருந்தா கூட பரவாயில்ல…….. பார்க்காமலே ஓடிப் போயிட்டான் அந்த ராகேஷ்…………. எனக்கு எவ்ளோ பெரிய இன்சல்ட் இது…… என்னைக்காவது அவன் என் கையில மாட்டட்டும்……….. அப்ப இருக்கு அவனுக்கு…………” கலகலப்பாய் பேச

இருவரும் சந்தோசமாக இருந்தாலும் பார்வதிக்குக்கு அவள் நிலை ஒருபுறம் கவலை அளிக்க தோழியின் முன் அதைக் காட்டிகொள்ளாமல் கல கலப்பாக பேசிக் கொண்டிருந்தாள்

ஆனால் அடுத்த சில தினங்களிலே சாரகேசுக்காக….. வீட்டை விட்டுக் கிளம்பம் நிலை ஏற்படப் போவது தெரியாமல்….. ஆனால் அது கூட அதிர்ச்சி இல்லைதான்…….. அதற்கும் மேலே தன்னைப் பற்றி அறியப் போவதும்….. அது கொடுக்கப் போகும் அதிர்ச்சி தெரியாமலும்…. இருந்தாள் தீக்‌ஷா

போன் செய்து சாரகேஷை 4 மணி அளவில் வரச் சொன்ன பார்வதி அவனுக்கு தீக்‌ஷாவைப் பார்த்த விசயத்தை மறைத்து விட்டிருந்தாள்.. சஸ்பென்ஸாக சொல்லலாம் என்றுதான்….. சொல்லாமல் விட்டாள்

அதே நேரத்தில் தன் அண்ணனுக்கு அவள் நிலை தெரிந்தால் என்ன நினைப்பான்……. இன்னும் அதிகமாகத்தான் அவன் நேசிப்பான் என்று தோன்றியது……….. அது மட்டுமில்லாமல் கண்டிப்பாக இவள் நோயைத் தீர்க்கும் வழிமுறை கூட மருத்துவனாய் அவன் அறிந்திருக்கக் கூடும் என்று எண்ணினாள்…..

இருவரும் 4 மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியேறி சாரகேஷுக்காக காத்திருந்த போது விஜய்யின் கார் உள்ளே நுழைய…

அதிர்ந்த தோழியர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பார்வை பறிமாற்றம் செய்ய

நின்றிருந்த இருவரையும் பார்த்தவன்…….. காரை நிறுத்தி கோப முகத்துடன் பார்வதியின் அருகில் சென்றான்.

பார்வதியும் அவன் கோபம் பார்த்து அதிர்ந்துதான் நின்றாள். அது மட்டும் இல்லை அவன் மீது சிகரெட் நெடியும் அடிக்க முகம் கொஞ்சம் சுழிக்க பின்னால் தள்ளிப் போக…..

தீக்‌ஷாவோ………… அவனின் கோப முகத்தையும்………… பார்வதியின் பார்வையையும் பார்த்தவள்…….. அவளை அவன் திட்டி விடுவானோ என்று அவனிடம் தானாக சரண்டர் ஆனாள்…….. அவனின் கோபம் அறிந்தவள் அல்லவா அவள்

”விஜய் அத்தான்……….. நான் சொல்லித்தான் அவ வந்தா…………” என்று சொல்ல

வந்த தன் கோபத்தை தனக்குள்ளே அடக்கிய விஜய்…. தீக்‌ஷாவிடம் திரும்பினான்

“வீட்டுக்கு போகனுமா………….” என்று கேட்க

“ஆமாம்” என்ற ஒற்றை வார்த்தையை அவன் முகம் பார்க்காமல் சொல்ல

”சரி வா“ என்றபடி…. விஜய் முன்னே போக

”நாங்… நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போறோம் …. ’பாரு’ அண்ணா வறேன்னு சொல்லி இருக்காங்க அத்தான்……… அவர் கூட போகிறோம்…. நீங்க உங்க வேலையைக் கண்டினியூ பண்ணுங்க” என்றவளிடம் தீப்பார்வை பதிலாய்க் கிடைக்க

”சாருமதி அவ அண்ணாகூட வரட்டும்…. நீ என் கூட வா” என்றவன் பார்வதியிடம் திரும்பி

“உன் ஃப்ரெண்ட் வீட்டு அட்ரெஸ் தெரியுமா” என்று கேட்க

பார்வதி அவனின் கடுமையான குரலிலே தன்னை அறியாமல் இல்லை என்பது போல் தலை ஆட்ட …. அவளின் வீட்டு முகவரியைச் சொல்லியபடி தீக்‌ஷாவைப் பார்க்க

தீக்‌ஷா அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றாள்………… அவனோடு வர மாட்டேன் என்று அறிவிப்பது போல்……..

விஜய் அவள் அருகில் வந்து நின்று……………. அவள் தன்னோடு கூட்டிச் செல்ல…. தன் கையை அவளை நோக்கி நீட்ட…. அவனிடமிருந்து சற்று பின் வாங்கியவள்

”கையை பிடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க ………. நானே வருகிறேன்………. ஆனா அவளும் என்கூட வருவா………… வரணும்…. அப்போதான் வருவேன்……….. நான் ஏன் அவ அண்ணா கூட வர்றேனு சொன்னேன் தெரியுமா……. நீங்க அவளுக்குலாம் ட்ரைவர் வேலை பார்க்க விரும்ப மாட்டீங்கள்ள……..உங்க ஸ்டேட்டஸ நான் காப்பத்த வேணாமா விஜயத்தான்… அதுனாலதான்” என்று கடுப்பில் பேச

தானாக பின் வாங்கியவளைக் கண்டு கொள்ளாமல்……

கவனமாக தன் கை அவளைத் தீண்டாதபடி………. அவள் தோளில் மாட்டி இருந்த தோள்பையினை தொட்டு அவளைத் தன் புறம் இழுத்தபடி

”கண்டிப்பா……. நான் உனக்குனா ஓட்டுவேன் யார் யார்க்குலாம் ஓட்ட மாட்டேன் தான்” என்று உறுமியபடி மொபைலை அழுத்த அடுத்த 2 நிமிட்த்தில் அந்த காருக்கு ட்ரைவர் வந்து சேர

”காத்தமுத்து வண்டிய எடுங்க…….” என்றவுடன்

“இதோ…….. என்று சொல்லி………….. தங்கச்சி ஏறுமா” என்று தீக்சாவைப் பாசப் பார்வை பார்த்து வைக்க………. தீக்‌ஷா விஜய்க்கும் சேர்த்து அவனை முறைத்தபடி

”ஏய் தங்கச்சினு கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்………… உன் விசுவாசத்தை எல்லாம் என்னை பற்றி உளவு சொல்றதுக்கு உன்னை வச்சுருக்காருல்ல அவர்கிட்ட சொல்லு…………. இப்போ நீதானே சொன்ன அவர்கிட்ட” என்று விஜய் முன்னாலே பட படத்தாள் தீக்‌ஷா

காத்தமுத்து பரிதாபமாய் அவளை பார்த்து பின் விஜய்யைப் பார்க்க………

காத்தமுத்துவிடம் காரை எடுக்கச் சொல்லி……. தானும் ஏறி அமர்ந்தான்………

வேறு வழி இன்றி……… எப்போதும் போல்……. காரில் ஏற முடிவெடுத்த தீக்‌ஷா ……. பார்வதியை அழைக்க

இப்போது பாருவுக்கு தன்மானம் விழித்துக் கொள்ள……… அதனால் தீக்‌ஷாவிடம் மறுக்க………. தீக்‌ஷாவோ விட வில்லை அவளை……. அவளைக் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்……….

காரில் ஏறி அமர்ந்த விஜய்………. கார்க்கதவை மூடாமல் அவர்களைப் பார்த்தபடி அமர்ந்து…….. தீக்‌ஷாவைப் பார்த்தபடி…….. விரலைச் சுண்டி அழைக்க………. பார்வதியை கெஞ்சிக் கொண்டிருந்தவள்……… அவனைத் திரும்பிப் பார்த்தாள்……

சவகாசமாய் காலை வெளியில் நீட்டி வசதியாக அமர்ந்தவன்…………. தன்னைப் பார்த்த தீக்‌ஷாவிடம்…..

கரெக்டா 10 மினிட்ஸ் டைம் தருவேன்………

”அதுக்குள்ள உன் ஃப்ரெண்டோட வரணும்……….. இல்லை நீ வந்துரனும்…………. உன் ஃப்ரெண்ட வர வைக்கிறது உன் சமத்து……….. உன்னை வர வைக்கிறது என் சாமர்த்தியம்.…… “ என்றபடி வாட்சைப் பார்க்க ஆரம்பிக்க

”பாரு…….. பாரு….பிளீஸ்டி………. அவன் சொன்னா…. சொன்ன மாதிரி செய்வாண்டி…………. எனக்காக செல்லம்ல…….. பட்டுல்ல……….. நீயும் வாடி……… “ என்று அவளைக் கெஞ்சியவள்……. விஜய்யைப் பார்த்து…………… ஒரு முறைப்பும் வைக்க……….. அவனோ கர்மசிரத்தையாக வாட்சைப் பார்த்துக் கொண்டிருந்தான்………..

”இன்னும் 10 செகண்ட்ஸ்” என்று கவுண்டவுன் சொன்னவன்…… அவன் அதைச் சொன்ன போது தீக்‌ஷா பரிதாமாக பார்வதியைப் பார்க்க….

இப்போது விஜய் ”என்கிட்டேயேவா” என்ற பார்வையை தீக்‌ஷாவை நோக்கி வீச……….. அவனை ஒன்றும் பண்ண முடியாமல் பார்வதியைப் பார்க்க….. அவளோ அதற்கு மேல்……… வரமாட்டேன் என்ற நிலையில் அழுத்தமாய் நின்றாள்………

விஜய்யோ 5 என்று தீக்‌ஷாவின் நிலை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டே சொல்ல…………

”வாடி…… அந்தக் கடன் காரன்………. என்ன படுத்துறான்………. நீ அதை விட” என்று அடிக்குரலில் பார்வதியிடம் சொல்லியபடியே சட்டென்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவள்……

“என் பாருச் செல்லம்ல” வாங்க என்று கையைப் பிடித்து இழுக்க……. பார்வதி அவளின் எதிர்பாராத முத்தத்தில் திகைத்து கன்னத்தை துடைத்தபடி அவள் இழுவைக்கு வர……..

கடைசியில் தீக்‌ஷா ஜெயித்தாள்

பாரு மறுத்தும் அவளோடே கிளப்பிக் காரின் அருகே கூட்டிச் சென்றாள்………….

வாயைத் திறக்காமல் புன்னகைத்த விஜய் கார்க் கதவை மூடி……… சாய்ந்து அமர்ந்து…. பின் மனம் விட்டு சிரித்தான்…………

”காத்தமுத்து காரை எடுங்க…… ”உங்க தங்கச்சி……… அவ ஆயுதத்தால ஆள கவுத்துட்டா……. இனி அவ ஃப்ரென்ட் காரில் ஏறாமல் இருப்பாளா” என்று சிரிக்க………

விஜய் அவனை மறைத்தபடி இருந்ததால்…. காத்துமுத்துவுக்கும் போன் வந்து அதில் கவனம் செலுத்தியதால் தீக்‌ஷாவை, அவள் செயலை எல்லாம் அவன் கவனிக்கவில்லை……. அதனால்

“பேசிப் பேசியே அந்தப் பொண்ணை கவுத்துருச்சா தம்பி” என்று கேட்க……….

விஜய்யோ கண்களை மூடியபடி…………

”அதுக்கும் மேல………… அவளுக்கு ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் இந்த ஆயுதத்தை யூஸ் பண்ணுவா……………” என்று சொன்னவன் மேலே பேச வில்லை………

காரில் தோழியர் இருவரும் ஏற………. காத்தமுத்து எதுவும் பேசாமல்………… விஜய்யை பார்த்து பின் தீக்‌ஷாவையும் ஒரு வினாடி பார்த்து……..

”கடவுளே இந்த தம்பிய இப்டி சோதிக்கிறியே…….. நீதான் நல்ல வழி காட்டணும்” என்று கடவுளுக்கு மனு போட்டவனாய்க் காரைக் கிளப்பினான்

காரில் தீக்‌ஷா பேசிக் கொண்டே வர…….. பாரு கேட்டுக் கொண்டே வர………… விஜய் கண்களை மூடியபடி வர பயணம் ஆரம்பித்தது………..

1,941 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page