top of page

அன்பே! நீ இன்றி!! 13

அத்தியாயம் 13

அடுத்த நாள்………….. தோழிகள் இருவரும் சந்தோசமாய்ப் பேசியபடி அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்……………… தீக்‌ஷாவின் தோழிதானே பார்வதியும்………… அடங்குவாளா என்ன……….. விஜய்யிடம் அவன் சொன்ன வழியில் வருவதாக தலை ஆட்டி விட்டு…. அவன் சொன்ன வழியில் செல்லாமல் வழக்கமாய்த் தான் செல்லும் வழியிலே சென்றாள்……….

பார்வதி வண்டியை ஓட்ட…………… தீக்‌ஷா வழக்கம் போல் பேசியபடி வந்தாள்…..

”பாரு உன்னைப் பார்த்ததில் இருந்து எனக்கு ஏதோ பழைய தீக்‌ஷாவா ஆனா மாதிரி இருக்கு,………. விஜய் அத்தான் கிட்ட கூட எனக்கு கோபம் வரலை தெரியுமா………..” என்று சொன்னவளிடம்………….

“நீ பாட்டுக்கு நேத்து வராம இருந்துட்ட…….. எனக்குத்தான் பயமாகியிருச்சு “ என்றவளிடம்

“ஏன் பயம்…….. எதுக்கு பயம்” என்று கேட்டவளின் கூந்தல் காற்றின் பறந்து பாருவின் மேல் மோத….. பார்வதி அலுவலகப் பேச்சை மறந்து……. அவளிடம்

“உனக்கு நீளமான முடிதானே தீக்‌ஷா……… அதை ஏன் வெட்டிகிட்ட………..” என்று கேட்க

“அதுவா……………. சும்மாத்தான்……….”. என்றவள்……….. தொடர்ந்து

“அண்ணி வந்த பின்னால்…………. வீட்டில் வேலைக்கும் ஆள் வர……….. அம்மாவுக்கு அண்ணியும் உதவியா இருக்க…………. என்னைக் கண்டுக்கவே இல்லை…………. திட்டக் கூட இல்லை……….. அதுதான் நேர பார்லர் போய் முடிய வெட்டிட்டு வந்துட்டேன்……………. அன்னைக்கு எனக்கு கெடச்ச திட்டு இருக்கே…………….. சும்மா………… வானத்துக்கு எகிறுச்சு………..சூடுதான் போலனு கொஞ்சம் பயம் வேற வந்துருச்சு தெரியுமா…….. இந்த வைஜெயந்தி யோட அராஜகத்துக்கு அளவே இல்லைதான்………….. ஆனா……………. எங்க அம்மா திட்டாம இருந்தாலும் நல்லா இருக்காது…………… அப்போ அப்ப பூஸ்ட் ஏத்திக்கிருவேன் ” என்றவள் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த பார்வதி

’நல்ல பொண்ணு டி நீ……… இதுக்காக நீ போய் முடி வெட்டுவியா என்ன…………… ஒரு ஆளு…….. ரொம்ப ஃபீல் பண்ணாரு………… யாரோ போட்ட ரெட்டை சடைல மயங்கிதானே லவ் லெட்டரே கொடுத்தேன்…னு” என்று சொல்ல

“ஏய் உதை படுவ……………..” என்றவள்…………….. “ உங்க அண்ணாவை டாவடிக்கிற டாக்டரம்மா பேர் என்ன சொன்ன…………. “ என்று கேட்க

”அகல்யா……….” என்று பார்வதி சொல்ல…………

”அகல்யா – சாரகேஷ், நல்லாத்தான் இருக்கு…. நாம சேர்த்து வைப்போமா என்று உற்சாகத்துடன் சொன்ன தீக்‌ஷாவைப் பார்த்த பார்வதி…………..

“எங்க அண்ணனை உனக்குப் பிடிக்கலையா தீக்‌ஷா” என்று கொஞ்சம் வருத்தமாய்க் கேட்க

அவளைப் பின்னால் இருந்து கட்டியபடி………..

“உங்க அண்ணா ரொம்ப நல்லவர் பார்வதி………… அவர் மனசுக்கு அவர் கூட ஆயுள் முழுக்க வாழக் கூடிய பொண்ணு கிடைப்பா……….” என்று சொல்லியவளிடம்

“பிடிச்சுருக்கா…………… அதை மட்டும் சொல்லு” என்று பார்வதி பிடிவாதம் பிடிக்க

“பிடிச்சிருக்குனு சொல்லி என்ன ஆகப் போகுது ………… பிடிக்கலைனு சொல்லி என்ன ஆகப் போகுது சொல்லு…………….. நான் சில உணர்வுகளுக்குலாம் தடா சொல்லி ரொம்ப நாள் ஆச்சு” என்று சொல்லும் போதே அவள் குரலில் இருந்த விரக்தி பார்வதியை வாட்ட…… தன் அண்ணன் சொன்ன மாதிரி அவளுக்கு ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மனம் அடித்துக்கொண்டது……..

தன் விரக்தியான பேச்சை உணர்ந்த தீக்‌ஷா தன்னைச் சமாளித்து……. தானே பேச்சை மாற்றினாள்…

”என்னை விடு………… நீ சொல்லு உனக்கு இதுவரை யாரும் பிடிக்கவில்லையா……… தனியா சுத்திட்டு இருக்க….…………….” என்று தோழியின் புறம் பேச்சை மாற்ற….. பார்வதியும் அவள் நிலை புரிந்து … பேச ஆரம்பித்தாள்….

”எனக்கு மாப்பிள்ளைதானே…………………. நீ வேற…………….. ஒருத்தனும் செட் ஆக மாட்டேங்கிறான்…………… நமக்குதான் காதல் வரல……… அம்மா,அண்ணா பார்த்து சொன்ன பையனப் பார்த்தாவது வருமானு பார்த்தா அதுவும் வர மாட்டேங்குது…………. உனக்கு ராகேஷைப் பார்த்து வராத மாதிரி…………” என்று சிரித்தவளின் முதுகில் ஒரு போடு போட்ட தீக்‌ஷா……….

“அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆன ராகேசை எல்லாம் ஏண்டி சீனுக்கு இழுக்கிற” என்று கேட்ட போதே சிக்னல் வர……………. வண்டியை நிறுத்தினாள் பார்வதி

அப்போது அருகில் யாரோ சக்தி என்று அழைக்க…….சட்டென்று தீக்‌ஷா திரும்பிப் பார்க்க………….பார்வதியும் பார்க்க……….. அந்தப் பெண்ணின் குழந்தையின் பேர் சக்தி போல……… அவள் குழந்தையை அதன் பேரை அழைத்து ஏதோ பேசிக் கொண்டிருக்க…………. இப்போது பார்வதி

“உனக்குப் பிடித்த பேர்டி………. ஸ்கூல் டேஸ்ல எங்க எல்லாரையும் தீக்‌ஷா தீக்‌ஷானு தொடர்ந்து சொல்லச் சொல்லி…….அது சக்தினு மாறுகிற விட மாட்டேல்ல” என்று அன்றைய ஞாபகங்களை ஆரம்பித்தவளுக்கு………… நேற்றைய அலுவலக ஞாபகம் வர…………

”உனக்கு சக்தினு யாராவது தெரியுமா…….. உங்க விஜய் அத்தானை பார்க்க வந்தாங்க நேத்து………… விஜய் ஸ்டேட்டஸ் பார்க்கிறவர்னு சொன்ன……………. ஆனா வந்தவங்க சாதரணாமானவங்க……………அவங்கள வாசல் வரைப் போய் அவரே கூட்டிட்டு வந்தார் தெரியுமா” என்றவளிடம்

“தெரியலையே…………..” என்று உதட்டைப் பிதுக்கிய தீக்‌ஷா

”நேத்து என்ன சைட்ல பிரச்சனை ……….. என்று கேட்க……. அவளுக்குப் பதில் சொல்லியபடி போக…… இப்படியே அவர்களின் பயணம் தொடர்ந்தது,………

இப்போது பாரு…………

“ஒரு 12 மணி போல விஜய் அவர் ரூம்க்கு கூப்பிட்டாரு தீக்‌ஷா…….. நீ உன் ஃப்ளஸ்பேக் சொல்லி……. அவர தனியாப் போய் பார்க்கவே பயம் ஆகி….அடிவயிரெல்லாம் கலங்க ஆரம்பிச்சுருச்சு……. வாய எல்லாம் விடாம………… அடக்கி நல்ல பிள்ளையா வெளில வந்தேன் தெரியுமா” என்று சொல்ல

”ஓ……… என்னை அடைச்சு வச்ச மாதிரி உன்னையும் பன்ணிடுவான்னு நினைத்தாயா,,,,,, பண்ணினாலும் பண்ணுவான்………பி கேர்ஃபுல்…… என்று சொன்னவளைப் பார்த்து

“என்னடி………அப்டிலாம் விஜய் அத்தான் இல்லேனு சொல்வேனு பார்த்தா இப்டி சொல்ற” என்ற போது

“உண்மையத்தான் சொல்வா இந்த தீக்‌ஷா…………… நீ ஒவர் ரியாக்சன் கொடுத்ததில் இருந்தே கண்டுபிடிச்சுருப்பான்……. நான் சொல்லி இருப்பேன்னு” என்று தோழியை அனுமானித்துக் கேட்க

“ஆமாடி…….. ஆனா ஆள் நீ சொன்ன மாதிரி இல்ல……..பக்கா செண்டிலாத்தான் பிகேவ் பண்ணினார்………… அப்புறம்” என்று தயங்கி

“உங்க அத்தான்……. ஆபிஸ்ல இருக்கிர போட்டோல செம ஸ்மார்ட்டா இருக்காரு…. இப்போ டல்லா இருக்கிர மாதிரி இருக்காரே…………. ஏன்” என்று கேட்க

பார்வதிக்கு தோன்றிய கேள்வி தீக்‌ஷாவுக்கும் தோன்றாமல் இல்லை………. வீட்டில் ராதாவிடம் கேட்ட போது……….. அண்ணா பிஸ்னஸ்ல லாஸ் ஆகிடுச்சுல அதனாலதான்….. என்ற பதில் கிடைத்திருந்தது……….. அதை பார்வதிக்கும் சொன்னவள்….

“அவ்வளவுதான் எனக்குத் தெரியும்பா……….. எனக்கே கொஞ்சம் கஷ்டம் ஆகிருச்சு……….. ட்ரீம் ப்ராஜெக்ட்னு ரொம்ப கஷ்டப்பட்டாரு……….. ஆளக் கடத்தி கூட ப்ராஜெக்ட் கிடைக்கல போல………. என்றவள்………. பார்வதி சொன்ன ஸ்மார்ட் என்ற வார்த்தையில்………..

“என்னடி…… ஒரே நாள்ல சப்போர்ட் அந்த சைடு போகுது………… இப்போ ஒரு மாதிரி……. அப்போ ஒரு மாதிரினு…. என்ன…. அந்த கருவாயன சைட் அடிக்கிரியா ……….” என்று மிரட்டும் தோரணையில் கேட்டவளுக்கு………. பதிலாக பார்வதி

“ஏண்டி…….. கருவாயன்னு சொல்ற…………. ஆளு சூப்பராத்தான் இருக்காரு………… அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா கூட யோசித்திருக்கலாம்….. கல்யாணம் ஆனவரை சைட் அடிச்சு என்ன பண்றது சொல்லு” என்று சொல்ல….

அதைக் கேட்ட….. தீக்‌ஷா……. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க………….. பார்வதி பயந்தே விட்டாள்……….. அப்படி என்ன நாம் சிரிப்பாக இவளிடம் சொல்லி விட்டோம் ………… இந்தச் சிரிப்பு சிரிக்கிறா…………. என்று பார்வதி விழிக்க………

அவளோ சிரிப்பை விடாமல்

”என்ன சொன்ன………… என்ன சொன்ன….. சொல்லு…..சொல்லு…………. விஜய் அத்தானுக்கு மேரேஜ் ஆகிருச்சா…………………….யாருடி பொண்ணு எனக்குத் தெரியாமா………….உன் கனவுலேயே அவருக்கு திருமணம் ஆகி விட்டதா……… பாவப்பட்ட அந்த பொண்ணு யாரு…………. மொறச்சே மனுசன் கொன்னுடுவாரே ……………. “ என்று தோழியைப் பார்த்து இன்னும் பெரிதாய்ச் சிரிக்க……

பார்வதிக்கே தான் கேள்விப்பட்ட விசயம் தவறோ என்று குழம்பிவிட்டாள்…….. அதனால் கொஞ்சம் குழப்பமான தோரணையிலே

“அவருக்கு மேரேஜ் ஆகிருச்சுல்ல தீக்‌ஷா………….நான் விசாரிச்சப்ப சொன்னாங்க……….” என்றவளிடம்

“அடிப்போடி………….. அவருக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க………. இளமதிய வேண்டாம்னு சொல்லி விட்டாராம்………….. அம்மா சொன்னாங்க” என்றவளிடம்

”இல்லடி………….நான் கேள்விப்பட்டனே” என்று பாரு குழம்ப

“விஜய் அத்தானுக்கு கல்யாணம் ஆகி இருச்சுனு யார் உனக்கு சொன்னது……….” என்று சிரித்தவள்………… சரி அவருக்கு மேரேஜ் ஆகலைனு நான் சொல்றேன்ல………….. அவர் என் அண்ணியோட அண்ணன்…….. அவரோட சொந்தம் நான்……. நான் சொல்றதை நம்ப மாட்டியா…… என்று சொல்ல

பார்வதி தெளிவில்லாமல் அவளைத் திரும்பிப் பார்க்க……….. தீக்‌ஷா அவளைப் பார்த்து

“ஏண்டி இந்தப் பார்வை பார்க்கிற….. நம்புடி…. எனக்குத் தெரியாதாடி….. அவருக்கு இன்னும் மேரேஜ் ஆகவில்லை… ஆனால்…. கல்யாணம் ஆகலேனு….. அவரை சைட் அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத……… அதுலாம் உனக்கு செட் ஆகாது….. வேணும்னா ஒண்ணு பண்ணு…. அப்டியே ஜம்ப் பண்ணி அடுத்த ஆளுக்கு தாவிடு……… யாரைச் சொல்றேனு தெரியுதா….. சுரேந்தர் அத்தானை ட்ரை பண்ணு……… சூப்பர் ஆளு………… நான் வேணும்னா ஹெல்ப் பண்றேன்………… ஆனா விஜய் அத்தானுக்கு ஹெல்ப் கேட்ராதம்மா……….. தெரிஞ்சே உன்னை தீராத துன்பத்துல தள்ள உன் தோழிக்கு ஆசை இல்லைமா……………. என்று சொன்னவள் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க……. அது ஒரு கட்டத்தில் அதிகமாக ஆரம்பிக்க

பாரு சற்று பயந்து நிறுத்தி விட்டாள் வண்டியை…………

“இப்டி சிரிக்காத தீக்‌ஷா….. எனக்கு பயமா இருக்கு…………… ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுடி” என்று கெஞ்ச

“சரி சரி………….. நிறுத்தறேன்…….அப்போ நீ இந்த மாதிரி காமெடிலாம் அடிக்க்க் கூடாது என்றபடி………… சிரிப்பை நிறுத்தியவள்…….

“விஜயை மணக் கோலத்தில் நினைத்து பார்க்க…… அவன் அப்போதும் உம்மென்று…. முறைத்தபடி…. இருப்பது போல் காட்சி தோன்ற………..” மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் இம்முறை தோழிக்குப் பயந்து வாய் விட்டு சிரிக்காமல்….உடல் மட்டும் குலுங்க………….

அவள் மீண்டும் சிரிக்கிறாள் என்று உணர்ந்த பார்வதி,,, அவள் இருக்கும் நிலையில் இப்படிச் சிரித்தாள் என்றால் ஏதாவது ஏடாகூடம் ஆகும் என்று நினைத்தவள்…. பேச்சை மாற்றினால் தான் அவள் சிரிப்பை நிறுத்துவாள் என்று தீக்‌ஷாவை திசைதிருப்ப………

”உன்னோட ஸ்கூட்டி எங்க தீக்‌ஷா” என்ற கேட்க…………

தீக்‌ஷாவும் சிரிப்பை நிறுத்தி விட்டு… சற்று சோகமாக

“அதை வித்துட்டாங்க……………….இருந்தா நான் ஓட்டுவேன்னு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே……. தலைக்கு மேலே விமானம் பறக்கும் சத்தம் கேட்க

அது விமான நிலையம் அருகில் என்பதால் அவர்களுக்கு வெகு அருகில் கேட்க…………….

தீக்‌ஷா………. அந்த சத்தம் கேட்டு தன் காதுகளை கையால் மூடிக் கொண்டாள்…………… கண்களை இறுக மூடியவளால் விமானத்தின் இரைச்சலை தவிர்க்க முடியாமல் துடிக்க ஆரம்பித்தாள்……… அதன் சத்தம் அவள் உயிரையே எடுக்கும் உணர்வைக் கொடுக்க………

“பாரு…பாரு…. என்னால முடியலடி….. அந்த சத்தம்……………” என்றபடி பாருவின் தோள் மேல் சாய……………..

“தீக்‌ஷா தீக்‌ஷா” என்ற அழைப்புக்கு பதில் வராமல் போக…………….

தன் மேல் சாய்ந்திருந்தபடியே விழப் போன தீக்‌ஷாவைப் பார்த்த பார்வதிக்கு அதிர்ச்சியில் கைகால் எல்லாம் ஆட ஆரம்பித்து விட….. இருந்தும்… அவளைப் பிடித்தபடியே வண்டியை நிறுத்தியவள்………… தீக்‌ஷாவை தாங்கி அவளைப் பார்க்க……….. அவள் மூக்கில் இருந்து ரத்தம் கண்ணிர் போல் வலிய…………. கூட்டமும் கூட….. அதிர்ச்சியைக் கைவிட்ட பார்வதி… கொஞ்சம் தன்னைச் சமாளிக்க ஆரம்பித்து…… ஆசுவாசப் படுத்தியவள்…………. வேகமாய்

தீக்‌ஷாவின் ஹேண்ட்பேகை ஆராய……… அன்று சாரகேஷின் கையில் கிடைத்த மாத்திரை இருந்த கவரில் இன்று ஒன்றுமில்லாமல் இருக்க…. இப்போது பார்வதிக்கு பதட்டத்தில் அழுகை வர ஆரம்பித்து இருந்த்து….

எப்போதும் அந்தக் கவரில் இருக்கும் 2 செட்களில்…. ஒரு செட் சாரகேஷால் எடுக்கப்பட்டிருக்க..………… விஜய் வராததால் அந்த மாத்திரை இருக்கிறதா என்று ராதாவும் சரி பார்க்க மறந்து விட்டிருக்க………… பார்வதிக்கு மாத்திரை கிடைக்கவில்லை….

பார்வதிக்கு என்ன செய்வதென்று புரியாமல்….…… உடனே தன் அண்ணாவிற்கு கால் செய்ய…. அவன் தியேட்டரில் சர்ஜரியில் இருப்பதாகக் கூற

வேறு வழியின்றி விஜய் திட்டினாலும் பரவாயில்லை….. தீக்‌ஷா இப்படிக் கிடக்கும் நிலைக்கு அவன் என்ன திட்டினாலும் பரவாயில்லை….. வாங்கிக் கொள்ளலாம் என்று விஜய்க்கு கால் செய்யப் போக…………….. அப்போது காத்தமுத்து பார்வதி அருகே வந்தான்……..

பதட்டத்துடன் அவளின் அருகே வந்தவன் அவன் போனை பார்வதி கையில் கொடுக்க அது விஜய்தான்……… கை நடுங்கியபடி போனைக்காதில் வைத்தாள்

கோபமாய் இருக்கிறான் என்பது அவன் சொன்ன…………… ஹலோவே உணர்த்த

“விஜய் சார்” என்று நடுங்கிய குரலால் பேச ஆரம்பிக்க

“முதல்ல……… அவ ஹேண்ட் பேக்கை எடு………… அதுல மாத்திரை இருக்கு……. அதை எடுத்துக் கொடு” என்று விஜய் தன் கோபத்தை மறைத்து தீக்‌ஷாவின் ஹேண்ட்பேகில் மாத்திரை இருக்குமிடம் சொல்ல…………….

“அங்க இல்லை சார்.. நான் இப்போதான் பார்த்தேன்…… எனக்கு பதட்டத்தில கையும் ஓடலை………..காலும் ஓடலை விஜய் சார்………. நீங்க நீங்க வர்றீங்களா” என்றபோது விஜய் அவளின் பதட்டமான குரலில் தன் குரலில் அமைதியைக் கொண்டு வந்து

“பதட்டப்படாத பார்வதி….. நான் வந்துட்டே இருக்கேன்…. உன் ஹேண்ட்பேகை ஓபன் பண்ணு…. என்றவன் அதில் தேடச் சொல்ல……….. அவன் சொன்னபடியே அதில் ஒரு கவர் இருக்க……. ஒரு கணம் அதிர்ந்த பார்வதி…… அவனிடம் உடனே அதைப்பற்றி எதுவும் கேட்காமல்

“இருக்கு சார்….. “ என்று மட்டும் சொல்ல

“அதை எடுத்து அவளுக்கு கொடு……” என்றவன்………… சற்று தயங்கி

“அவள தரையில விட்ராத பார்வதி” என்று தளுதளுத்த குரலில் சொல்ல……….. அவன் குரலில் பார்வதிக்கே ஏதோ செய்ய…….. தீக்‌ஷாவை உடனே தன் மடியில் தாங்கியவள்………அவளுக்கு மாத்திரயைக் கொடுக்க……… அன்று போல் தீக்‌ஷா நிலைமை உடனே சீராகவில்லை…………. இன்னும் மோசமாகிக் கொண்டிருக்க………… பார்வதி மனதில் பய அலை அடிக்க ஆரம்பித்து இருந்தது…………

சற்று நேரத்தில் விஜய்யும் அங்கு வந்திருந்தான்

வேகமாய்க் காரை விட்டு இறங்கி தீக்‌ஷாவைப் பார்க்க………. சாலை ஓரத்தில் அவள் பாருவின் மடியில் தலை வைத்திருக்க…... அவள் மூக்கில் ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருக்க………. இப்போது இன்னொரு விமானம் மேலே சத்ததுடன் பறக்க….... அவள் கிடந்த கோலம் அவன் கொல்லாமல் கொன்றது……..

வேறு வழியின்றி அவளைத் தூக்குவதற்காக அவளைத் தொட்டுத் தூக்க முயற்சிக்க……………அவன் தொட்ட அடுத்த நொடியே தீக்‌ஷாவின் உடல் அதிர்ந்து தூக்கிப் போட……………அவளை வெறித்தபடி…. சட்டென்று கையை எடுத்தவன்…… பின் தன்னைச் சமாளித்து……. அவளைத் தூக்கியவனுக்கு………. அவளின் இதயத்துடிப்பின் சத்தம் அவன் காதுகளை எட்டியது……….

அவன் தூக்கிய அடுத்த நொடி………….. அவனை மயக்க நிலையிலே உணர்ந்த தீக்‌ஷா அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு……. அவனிடம் இன்னும் நெருங்கி ஒன்றியவளை உணர்ந்த விஜய்யும் தன்னோடு தீக்‌ஷாவை இன்னும் இறுக்கமாக அணைத்தவன்……….. அவளைத் தாங்கியபடி…….. பார்வதியிடம் திரும்பி

”டேப்லட் கொடுத்தியா” என்று கேட்டவனுக்குப் பதிலாய் பார்வதியும் ஆமாம் என்று தலை ஆட்ட

”சரி நீ கிளம்பு” என்றபடி அவளைப் பார்த்தவன்………… அவள் பதட்டத்தில் நிற்பதை உணர்ந்த விஜய்…….

“அசோக்…………. இந்தப் பொண்ணக் கூட்டிட்டுப் போய் நம்ம ஆபிஸ்ல விட்ரு….” என்று சொன்னவன்… அதற்கு மேல் பார்வதியின் பதிலைக் கூட கேட்க அங்கு நிற்கவில்லை…….

வேகமாய்…………தீக்‌ஷாவை காரில் படுக்க வைக்க….. தன்னை விட்டு விலகியவனை விடாமல் தீக்‌ஷா இறுகப் பிடித்தாள்………. அவனை விட மாட்டாதவள் போல………. அவள் நிலை உணர்ந்தும்….. விஜய்……. அவளை கீழே படுக்க வைக்க முயற்சிக்க…………. அவளின் கரங்கள் இப்போது இன்னும் அவனை அழுத்தமாக பற்ற ஆரம்பிக்க……. அதேநேரத்தில் மூச்சுத் திணறவும் ஆரம்பித்தாள் தீக்‌ஷா……….. விஜய்யால் அதற்கு மேல் தாங்க முடியாமல்………….

“நீ இப்டி துடிக்கிறத தாங்க முடியாமத்தானே தள்ளி நிற்கிறேன்… ஏண்டி……….. படுத்துற………….. “ என்று வாய்விட்டு சொன்னவன்…………..தன்னை முயன்று………… அவளை வலுக்கட்டாயமாகப் பிரித்து……………. அவளைக் கார்ச் சீட்டில் படுக்கவைத்து அருகே அமர………….காத்தமுத்து காரைக் கிளப்பினான்….


பார்வதி தன் பையில் மாத்திரை வந்தது எப்படி என்று யோசித்தபடி சிறிது நேரம் இருந்தவள்….. காத்தமுத்து எப்படி உடனே வந்தான்…….. தங்கள் இருவரையும் தொடர்ந்து வந்தானா அவன்……… விஜயும் உடனே வந்தானே………… தீக்‌ஷா சொன்ன என்னைச் சுற்றி என்ன நடக்குதுனே புரியவில்லை என்பது இப்போது அவளுக்கே தோன்றியது போல் இருக்க……… பயம் இருந்த போதும் VD ப்ர்மோட்டர்ஸுக்கே செல்ல முடிவெடுத்தவள்……. அசோக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டு….. தன் வண்டியை எடுத்தபடி அலுவலகம் சென்றாள்…………. இருந்தும் அவள் பின் அசோக் வர…… கொஞ்சம் எரிச்சலுடன் ”வேண்டாம் என்று சொன்னேன்ல” என்று அசோக்கைக் கடிய…..

“சார் திட்டுவார் மேடம்…. நீங்க பத்திரமா ஆபிஸ் போய்ச் சேர்ந்துட்டீங்கனு ரிப்போர்ட் பண்ணனும் நான்” என்று தயங்கிச் சொல்ல…….. பார்வதியும் ஒன்றும் சொல்லாமல் அலுவலகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்…….

மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் விஜய் போகும் போதே தீபனுக்கு விசயத்தை சொல்லி மருத்துவமனைக்கு வரச் சொன்னவன்… அடுத்து.. சுரேந்தருக்கு கால் செய்து எல்லாம் சொல்லியவன்……… அவனை VD ப்ரோமோட்டர்ஸ்க்குப் போகச் சொல்லி போனை வைத்து விட்டு…. தீக்‌ஷாவைப் பார்த்தபடியே வந்தான்…………. அவளையே பார்த்தபடி வந்தவனின் முகத்த்தில் உணர்ச்சிகள் துடைத்து வைக்கப்பட்டு வெறுமை மட்டுமே இருந்தது……………. அடுத்த சில மணி நேரத்தில் எப்போதும் அளிக்கப்படும் சிகிச்சைகள் உடனே நடக்க... தீக்‌ஷா கண் விழிக்க………. தீக்‌ஷா மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்……………..

----------------------

விஜய் மருத்துவமனைக்கு சென்று விட…. அவன் சொன்னதால்…… சுரேந்தர் VD ப்ரொமோட்டர்ஸ் அலுவலகத்திற்குச் சென்றான். உள்ளே நுழைந்தவன்………. நுழையும் போதே தீக்‌ஷாவின் இருக்கையில் அமர்ந்திருந்த பார்வதியை பார்த்துவிட……… அவன் உள்ளம் கொதித்தது……….

“எல்லாத்தையும் பண்ணிட்டு… இங்க வந்து ஒண்ணுமே நடக்காதது மாதிரி சீன் போடுறியா நீ……. தைரியம் தான் உனக்கு…….” என்று மனதினுள் நினைத்தபடி

தன் அண்ணனின் அறையில் நுழைந்தவன்………. அதே வேகத்தில் அவளையும் உள்ளே அழைக்க…………… பார்வதி பயம் மனதில் இருந்தாலும்…….. உள்ளே வந்தாள்…..

உள்ளே வந்தவளை திட்டுவதற்கு வாயெடுத்த சுரேந்தர்……….. பார்வதியின் முகத்தைப் பார்க்க………… வார்த்தைகள் அவன் வாயிலே நின்று விட்டன…… அழுதழுது முகம் சிவந்திருந்தாள் போல…….. பார்க்கவே பாவமாய் இருக்க

கோபத்தை அடக்கி ஒன்றும் சொல்லாமல்….

“உட்காரு” என்று முன்னால் இருந்த இருக்கையைக் காட்டினான்………….. அவள் உட்காராமல் நின்று கொண்டே இருக்க….. இப்போது அவள் கண்ணில் அவளை அறியாமால் நீர் வடிய….

“இப்போ அழுது என்ன பிரயோசனம்………… தீக்‌ஷாவுக்கு ஏதாவது ஆச்சு……… என் அண்ணா உன்னை சும்மா விட மாட்டாரு……. அவருதான் உன்கிட்ட சொன்னாராம்ல……… அந்த வழில வரக் கூடாது என்று………. ஏன் நீ கேட்கலை……….. தீக்‌ஷா ஃப்ரெண்ட்தானே நீ ……..பின்ன அவள மாதிரி இருக்காம வேற எப்டி இருப்ப…………… சொல்றவன் எல்லாம் கேனப் பயலுங்க உங்களுக்கு…” என்று சொல்லும் போதே

அவள் சத்தமாக அழ ஆரம்பிக்க….

சுரேந்தர் அரண்டு விட்டான்…… ஏனென்றால் சுற்றிலும் கண்ணாடி தடுப்பு மட்டுமே இருந்தது….. அங்கிருந்து பார்த்தாலே வெளியே அனைவரும் தெரிவர்….. உள்ளே இருப்பவர்களும் தெரிவர்….. விஜய் தீக்‌ஷாவிற்காக செய்த ஏற்பாடு என்பதால்………. அதில் சுரேந்தர் பயந்து விட்டான்….

“ஏய் ஏய் எதுக்கு இப்போ அழ ஆரம்பிக்கிற…… வெளில இருந்து பார்த்து யாராவது தப்பா நினைக்கப் போறாங்க” என்றவனிடம்

“தீக்‌ஷா ………… எப்டி இருக்கா இப்போ………….என்னாலதான்……..அவளுக்கு ……….ரெண்டு முறை” என்று அழுகையை அடக்கியவள்……….இப்போது தேம்ப ஆரம்பிக்க

எரிச்சலாக

“முதல்ல அழறதை நிறுத்து…………… “ என்று சொல்ல…… அவள் நிறுத்தாமலே இருக்க

சற்று குரலை உயர்த்தினான்……….

”இப்போ நிறுத்தப் போறியா இல்லையா” என்ற அவனின் குரலில்……..அவனைப் பார்த்தபடியே கண்களைத் துடைக்க…………..

தண்ணிர் பாட்டிலை நீட்டி

“இதைக் குடி…. இப்போ நல்லா இருக்கா…….. இது அடிக்கடி வருகிற பிரச்சனைதான்………… நீ அழாத…… போய் வேலையைப் பாரு சாருமதி” என்றவனிடம்

“விஜய் சார் திட்ட……திட்ட மாட்டார்ல” என்று தேம்பல் நிற்காமலே கேட்டவளைப் பார்த்தவன்……அவளின் பயந்த விழிகளைப் பார்த்து சிரித்தபடி

“சாருமதி…….. போல்ட்……….. செம ப்ரேவ் கேர்ல்னுதானே இந்த போஸ்ட்டுக்கு எடுத்தேன்………. அது தப்பு போல் இருக்கே” என்று சொல்ல….

இப்போது அழுகையை நிறுத்திய பார்வதி………… உள்ளே போன குரலில்

”நான் தப்பு செய்யலேனா……….இப்போ நான் தப்பு பண்ணிட்டேனே அதுதான் “ என்று வேக வேகமாய் சொல்லியவளின் பாவனையில் சுரேந்தர் புன்னகை பூக்க…..

பார்வதி அவன் மலர்ந்த முகத்தைப் பார்த்தபடி…… அவன் முன்னே அமர்ந்தாள்……. அவளுக்கே இது புதிதுதான்…………. காலையில் தீக்‌ஷாவின் நிலையைப் பார்த்த பிறகு…….. அவள் அவளாகவே இல்லை……….. தன்னால் தான் அவள் இன்று மயக்கமாகி விட்டாள் என்று அவள் குற்ற உணர்வில் தத்தளிக்க ஆரம்பிக்க…….. சாரகேசிடமும் பேச முடியாமல் போக…….. சுரேந்தரிடம் அவளையுமறியாமல் அழுது விட்டாள்…………

சுரேந்தர் அவளைப் பார்த்த படியே

“அண்ணா ஒண்ணும் சொல்ல மாட்டாரு……… தீக்‌ஷா ஃப்ரெண்டப் போய்த் திட்டுவாரா என்ன………….” என்று சமாதானப் படுத்தி அனுப்பி வைக்க………… அவளும் ஓரளவு…… தெளிந்து தன் இருப்பிடத்திற்கு சென்றாள்

அவள் போவதையே பார்த்திருந்தவன்

“நான் எதுக்கு அவளைக் கூப்பிட்டேன்……… இப்போ நானே அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறேன்….. டேய் சுரேந்தர்…. என்னடா ஆச்சு உனக்கு.” என்று இருக்கையில் சாய்ந்தவனின் எதிரில் அவனது அண்ணன் புகைப்படம் கம்பீரமாய் அவனைப் பார்த்து சிரிக்க……….. இன்று தன் கம்பிரம் எல்லாம் தொலைந்தவனாய் நடைபிணமாய்த் திரியும் தன் அண்ணன் ஞாபகம் வர………… தன்னைச் சுதாரித்து நிமிர்ந்தவனின் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது………..

-------------------

கிட்டத் தட்ட 4 மணி அளவில் பார்வதியை மீண்டும் அழைத்தான் சுரேந்தர்……..

இப்போதும் அவள் முகம் தெளியாமல்தான் இருந்தாள்………. தன் முகத்தில் புன்னகையை படர விட்டவன்………

”தீக்‌ஷா வீட்டுக்கு வந்துட்டாளாம்………..உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாளாம்……….. உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு அண்ணா…..வா போகலாம்” என்றபடி கிளம்ப……………

”நீங்க…. என்னைக் கூட்டிட்டு போறீங்களா………..” என்றவளிடம்

“ஏன் அதில் என்ன பிரச்சனை உனக்கு” என்று கேட்டவனிடம்

“உங்க வீட்டில ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா….. முக்கியமா உங்க அண்ணா” என்று வினவியவளிடம்

“என்ன தீக்‌ஷா………… சொல்லிட்டாளா…………. எங்களப் பற்றி எல்லாம்……………. பில்டப் கொடுக்காம வர்றீயா” என்று போனவனைப் பார்த்தபடி நின்றவள்

விஜய் தான் பிரச்சனை என்று தீக்‌ஷா சொன்னது ஞாபகம் வர…….. தைரியமாகச் சென்றாள்………….

காரில் சுரேந்தர் அமைதியாக ஓட்டி வந்தான்………………

“உங்களுக்கு இன்னொரு தம்பி இருக்காருல்ல……… அவர் இப்போ எங்க இருக்காரு” என்று ஆரம்பித்தாள்

“Uk la இருக்கான்…………. இந்த வாரம் வருவான்…………… ஏன் கேட்கிற” என்றபடி…….

தீக்‌ஷா அவரப் பத்திச் சொல்லி இருக்கா என்றவளிடம்………..

”என்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கா” என்று ஆவலாய்க் கேட்டான்தான் சுரேந்தர்

“பெருசா சொல்லலை………. ஆனா நல்லவிதமாத்தான் சொன்னா……….விஜய் சார் மட்டும்தான் அவளுக்கு பிடிக்கலை” என்று முடித்த அவளிடம்

“எங்க அண்ணாவை அவளுக்கு பிடிக்காதாமா…………..“ என்று சொல்லி அமைதியாய் ஆனவனிடம்

“எனக்கு இன்னைக்கு உயிரே போயிருச்சு………..தீக்‌ஷாவைப் பார்த்து…. எப்டி என்னோட ஹேண்ட்பேக்ல மாத்திரை வந்துச்சு………. காத்தமுத்து எங்க பின்னாலதான் வந்தாரா…… என்று கேட்க

நீ ஃபர்ஸ்ட் நாள் வந்தப்பவே உனக்கும் தீக்‌ஷாவுக்கும் உள்ள நெருக்கம் பார்த்து……. அண்ணா ராதாகிட்ட சொல்லி வைக்கச் சொன்னாரு…………. இந்த மாதிரி தீக்‌ஷா பண்ணுவானு தெரியும்….அவருக்கு………….. உங்கள அனுப்பிட்டு உங்க பின்னால் காத்தமுத்துவை அனுப்பினார்……… அவன் தான் அண்ணாவுக்கு நீங்க ஏர்போர்ட் இருக்கிற வழில போயிட்டு இருக்கீங்கனு சொல்லி அண்ணாவையும் வரச்சொன்னாரு” என்றவனைப் பார்த்து………. விழி விரிய ஆச்சரியமாக பார்க்க

மனதிற்குள்…….. ”விமானத்துக்கும் தீக்‌ஷாவுக்கும் என்ன சம்பந்தம்” என்று யோசித்தவள்……. அவனிடம் மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க

அப்போது அவனுக்கு ஏதோ அழைப்பு வர……….. ஹேண்ட்ஸ் பிரியில் போட ஆரம்பித்தவன் பேச ஆரம்பிக்க அது யுகேந்தர் என்பது அவன் பேசியதிலேயே தெரிந்த்து……

”சனிக்கிழமைதானே எல்லோரும் கோவிலுக்கு போக முடிவு பண்ணிருக்கோம்…… நீயும் வந்துருவதானே………” என்றவன் பார்வதியைப் பார்த்தபடியே பேசிவிட்டு போனை வைக்க

“சனிக்கிழமை என்ன விசேசம்…….. அதற்கு எதற்கு யுகி வருகிறான்” என்று மீண்டும்…..கேள்விகள் ஆட்சி செய்ய……. இவளும் சுரேந்தரைப் பார்த்தபடியே இருக்க………. பார்வதிக்கும் கேள்வி கேட்கும் மனநிலை இல்லாமல் போக….. அவனிடம் எதுவும் பேசாமல் வெளியே வெறித்தபடி வர…………… சுரேந்தர் இப்போது பார்வையை சாலையில் மாற்றினான்…….. அங்கு ஏனோ மௌனமே ஆட்சி செய்ய….. அடுத்த சில நிமிடங்களில் தீக்‌ஷாவின் வீட்டையும் அடைய……. இறங்கிய பார்வதி

“யாரும் திட்ட மாட்டாங்கள்ள” என்று முகத்தில் வலியோடு கேட்க

“அதெல்லாம் காலையில யோசித்திருக்க வேண்டும்” என்று பட்டென்று சுரேந்தர் சொல்ல

கலங்கிய முகமாய் உள்ளே சென்றாள் பார்வதி

ஹாலில் விஜய் மற்றும் தீக்‌ஷா குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் அமர்ந்திருக்க…….. தீக்‌ஷா டல்லாக இருந்தாலும் தெளிவாக இருக்க…… நிம்மதி வந்தது பார்வதிக்கு….. இருந்தும் தான் காலையில் செய்து வைத்த வேலையில்…. உள்ளே போகாமல் தயங்கி நிற்க…. அவள் பின்னே வந்த சுரேந்தர்…….. அவள் தயக்கத்தை உணர்ந்தவனாய்……….

“வா…..யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்று அவளுக்கு தைரியம் சொல்லியபடி உள்ளே அழைத்து வர மொத்தக் குடும்பமும் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்தது……. தீக்‌ஷாவோ மனதினுள்

“ச்ச்சேய் யுகி இல்ல நம்ம பக்கத்தில இல்லை…… சூப்பர் சீன்………… கம்பெனிக்கு ஆள் இல்லாம போச்சே சுரேந்தர் அத்தானை ஓட்டுறதுக்கு என்று யோசித்தபடியே ……. நம்ம விருமாண்டி ரியாக்‌ஷன் என்ன்னு பார்ப்போம் என்று பார்க்க

அதில் பெரிதாய் எதுவும் இல்லை………….. ஆனால் அவனும் யோசித்தபடியே அவர்களைப் பார்த்தபடி இருந்தவன்…… தீக்‌ஷா தன்னைப் பார்ப்பதை உணர்ந்து……….உடனே அவளைப் பார்க்க………… தீக்‌ஷா வேகமாய் தன் பார்வையை மாற்ற…….. விஜய் மனதினுள்

“உன்கிட்ட யுகியும் மாட்டினான்……… இப்போ இவனுமா……….. “ என்றபடி இருக்க…………. அருகில் இருந்த தீபன்…….. விஜய்யிடம்

“விஜய் உங்களைத் தவிர………. உங்க கூடப் பிறந்த 3 பேரும் இந்த விசயத்தில் ரொம்ப தைரியசாலி தான்…………” என்று சொல்ல……… விஜய் தீபனை முறைக்க ஆரம்பித்து………… பின் அசடு வழிந்தவன்……….. அதை மறைக்க….. சுரேந்தரைக் கவனிப்பது போல் பாவனையை மாற்றினான்

அப்போது……….தீக்‌ஷா….. பார்வதி சுரேந்தரோடு நடந்து வந்த தோரணையைப் பார்த்து “வாராயோ தோழி வாராயோ தோழி வாராயோ” என்று கிண்டலாக ஆரம்பிக்க

ஜெயந்தி அவளை முறைக்க……… தானாக வாயை முடினாள் தீக்‌ஷா…….. அவள் உடனே பாடலை நிறுத்த…………

சுரேந்தரோடு அன்ன நடை போட்டபடி வந்த பார்வதி……… தீக்‌ஷாவின் பாடலில் நிமிர…… சுரேந்தரோ அதற்கு மேல்.. அவள் அன்ன நடைக்கு இணையாக தன் நடையின் வேகமும் குறைந்து நடந்து வந்து கொண்டிருந்தவன் தீக்‌ஷாவின் பாடலில் சுதாரித்து………. வேகமாய் அடி எடுத்து வைத்தி தீபனின் அருகில் போய் அமர……….பார்வதி தீக்‌ஷாவின் அருகில் போய் அமர்ந்தாள்………..

சுரேந்தர் அருகில் இருந்த போது இருந்த தைரியம் தோழியின் அருகில் சற்று போனது போல் இருக்க…. தோழியின் அருகில் நெருங்கி அமர்ந்தவள்….

“சாரி தீக்‌ஷா…….என்னை மன்னிச்சுடு” என்ற போது …… தீக்‌ஷாவுக்குப் பதில்

“அதை விடு………… இனி அந்த வழில வராத……… புரிஞ்சதா” என்று விஜய் சாதரணமாகப் பேச………. நிம்மதி ஆனவள்…. சுரேந்தரையும் பார்க்கத் தவறவில்லை……….. சுரேந்தரும் அவள் பார்வையினை உள்வாங்க……….. விஜய்யும் தீபனும் அதைக் கண்டும் காணாமலும் இருந்தனர்

அப்போது தீக்‌ஷா அவளிடம் மட்டும் மெதுவாய்

“ஏய் பாரு………. விஜய் அத்தானுக்கு மேரேஜ் ஆகி இருச்சுனு சொன்னேல……. அந்த டவுட்டை எல்லோரும் இருக்காங்க………. இப்போ கேட்கலாமா” என்று சீண்ட

“ஆள விடுடி………… ரொம்ப முக்கியம்……..” என்றவள்………….

”வேணும்னா உன் சுரேந்தர் அத்தானுக்கு மேரேஜ் ஆகிருச்சானு கேளு……….”என்று தீக்‌ஷாவையே போட்டுத் தாக்க

“அடிப்பாவி………… இப்டிப் போகுதா கதை……… அங்க நிலவரமும் லைட்டா தடம் புரண்ட மாதிரி இருக்கு…………. ஆனா என்ன…… பக்கத்தில இருக்கிர வில்லன் லட்சுமணன் கிட்ட பேசியே நிமிர்த்திடுவான்……. ஆனா எங்க ஆளு யுகி இருக்கானே…………. இந்த ரெண்டு பேருக்குமே டிமிக்கி கொடுத்துடுவான்…….. பையன் செம விபரம்……. தெரியுமா…. இது தெரியாம இந்த ரெண்டும் அவனுக்கு அண்ணனுனு சொல்லிட்டு திரியுதுங்க……… அவன்தான் முதலில் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கப் போகிறான்…… அப்போ இதுக ரெண்டு முழிச்சுட்டு நிக்கப் போகுதுங்க” என்று பேச ஆரம்பித்தவள்………. அதன் பின் பார்வதியை அழைத்துக் கொண்டு அவளோடு தனியே செல்ல

தீக்‌ஷாவிடம் எதைப் பற்றியும் துருவி விசாரணையை மேற்கொள்ளாமல் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தாள்………. அவள் மனதில் ஏனோ சுரேந்தர் பற்றி அவ்வப்போது ஞாபகம் எழ……. இது என்னடா புதுப் பிரச்சனை என்று அவன் நினைவுகளைத் தள்ளியவள் தோழி பேசிக் கொண்டிருக்க அதில் கவனம் வைத்தாள்………….

2 மணி நேரம் கழிய பார்வதி வீட்டுக்கு கிளம்ப தயாராகி கீழே வர………… விஜய், சுரேந்தர்,தீபன் மட்டுமே ஹாலில் இருக்க………….. மற்றவர்கள் யாரும் இல்லை………..

தீக்‌ஷாவும் தன் அண்ணனிடம்

”அண்ணா………… பாருவை அவ வீட்ல விட்டுட்டு வருகிறாயா” என்று கேட்க…………

சுரேந்தர் வேகமாக தீக்‌ஷாவிடம்

“நானே போறேன் தீக்‌ஷா………… நான் தானே கூட்டிட்டு வந்தேன்” என்று கூற

வழக்கம் போல் விஜய்………. தீக்‌ஷாவோடு முட்டிக் கொண்டான்…………

”நீ வேண்டாம் சுரேந்தர்…………….. காத்தமுத்துவோட போகட்டும்” என்று கூறியபடி தீபனோடு பேச ஆரம்பிக்க………..

சுரேந்தரும் விஜய் சொல்லி விட்டதால் வேறு வழியின்றி அவர்கள் பேச்சில் கலக்க…….

இப்போது தீக்‌ஷா தீபனின் முன்னால் கோப அவதாரத்தில் நின்றாள்………

“டேய் அண்ணா நீ கூட்டிட்டு போவியா இல்லையா………….. சொல்லு…………… அவ என்னோட கெஸ்ட்………. என்றாள் சத்தமாக………….

“அண்ணா எதுக்கு தீக்‌ஷா நான் போய்க் கொள்வேன்” என்று தீக்‌ஷாவின் கோபத்தில் பார்வதி பேச ஆரம்பிக்க

தீக்‌ஷாவின் கோபம் உணர்ந்த விஜய் எதுவோ சொல்ல வர

கை உயர்த்தி தடுத்தவள்…. அவனை ஏளனமாக பார்த்தபடி

“நான் என் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கேன்…………. நீங்க இதில் தலையிட வேண்டாம்……. உங்க தம்பிய யாரும் இங்க கொத்திட்டு போயிட மாட்டாங்க……. அந்த புத்தி என் ஃப்ரெண்டுக்கு கிடையாது……..” என்ற பேச ஆரம்பிக்க

விஜய் சுரேந்தரிடம் திரும்பி

“சுரேந்தர் நீயே போய் அவளை விட்டுட்டு வா……….. ‘ என்று பேச்சை முடித்தான் விஜய்……….

ஆனால் தீக்‌ஷாவோ……….. அதில் எல்லாம் சமாதானம் ஆகவில்லை………………

“அண்ணா நீதான் அவளைக் கொண்டு போய் விடனும்……… நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்டை அடுத்தவங்க யாரும் கொண்டு போய் விட வேண்டாம்……. காத்துமுத்துவும் ஒண்ணுதான்……….. மத்தவங்களும் ஒண்ணுதான்…….” என்று தன் பிடிவாதத்தில் நிற்க……….

விஜய் அவளை முறைக்க………… அவளும் அவனை முறைத்தபடிதான் இருந்தாள்…………… விஜய் கோபத்தை அடக்குவதைப் புரிந்தவள்………….. அலட்சியமாய் உதடைச் சுழித்தவள்………. தீபனைக் கிளப்ப………. அவனும் பார்வதியை விடச் செல்ல………. சகோதரர்களும் கிளம்பினர்………..

தீபன் பார்வதியை வழி அனுப்பி வைத்தவள்……….

பார்வதி சென்ற காரையே பார்த்தபடி இருந்த சுரேந்தரைப் பார்த்தவள்….. அவன் காரின் அருகே சென்று அவனருகே குனிந்து………..

“சாரி ………. கோபத்தில ஏதோ பேசிட்டேன்……… நாம் ஒரு முடிவெடுத்தா மாறக் கூடாது அத்தான்…………. நானே பார்வதியக் கூட்டிட்டு போறேனு உங்க அண்ணாகிட்ட நீங்க சொல்லி இருந்திருக்கணும்…………. அதைத்தான் நான் எதிர்பார்த்தேன் உங்ககிட்ட………. நீங்க சொல்லலை…… உங்க அண்ணா சொன்னவுடனே அவள விட்டுடீங்க” என்று இரட்டை அர்த்தத்தில் பேசியவளிடம்………..

“என் அண்ணா என்ன சொன்னாலும் கேட்பேன் தீக்‌ஷா………….. அது என்னைக்கும் மாறாது………… மாற மாட்டான் இந்த சுரேந்தர்……………. ஏன்னா என் நல்லதுக்குதான் சொல்வாரு அவர்” என்று அவனும் அவளுக்கு இரட்டை அர்த்த்ததிலேயேக் கூற

சிரித்த தீக்‌ஷா

“அப்பா இந்த ‘வானத்தைப் போல’ குடும்பத்தோட பாசம் தாங்கலடா சாமி” என்று அவனைப் பார்த்து வம்பளக்க……….

“ஆளுங்களுக்கெல்லாம் பட்டபேர் வைக்கிறது போய்… இப்போ குடும்பத்துக்கே பட்டப் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டியா …….. உன்னை” என்று சிரித்தபடி சுரேந்தர் வண்டியைக் கிளப்ப…………

தீக்‌ஷாவும் சந்தோசாமாய் ஆனவள்……. விஜய்யைக் கடந்து செல்ல……… அவனும் ஏதும் சொல்லாமல் அவள் கடந்து செல்லும் வரை காத்திருந்தவன்……………… அவளை போக விட்டு காரின் கண்ணாடி வழியே பார்த்தபடி இருந்தான்……………

தீக்‌ஷாவுக்கு அவனைப் பார்த்து…………. காலையில் பார்வதி சொன்ன விசயத்தினை வைத்து அவனை ஓட்ட வேண்டும் போல் தான் இருந்தது……. பழைய தீக்‌ஷாவாக இருந்திருந்தால்……

“விஜய் அத்தான்….. உங்களுக்கு மேரேஜ் ஆகிருச்சாமே………… பார்வதி சொன்னா” என்று அவனை ஒரு வழி பண்ணியிருப்பாள்………….

ஆனால் இன்றைய தீக்‌ஷா விஜய்யிடம் பேச்சைக் குறைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது…… சுனந்தாவின் பிறந்தநாள் விழாவில் நடந்த சம்பவத்தின் பின்………….. அவள் அவனிடம் தன் குறும்பை எல்லாம் அவனிடம் காட்டுவதில்லை………. அவள் இப்போதெல்லாம் தனிமைதான் நாடுகிறாள்………… ஆனால் அது கூட அவளுக்கு இப்போது கிடைக்க மாட்டேன் என்கின்றது…………. அவளை யாருமே தனியே விடுவதே இல்லை…………. யாராவது ஒருவர் அவளோடே இருப்பர்….. குறைந்தபட்சம் சுனந்தாவாவது அவளின் அருகில் இருப்பாள்………….. சில சமயம் அவளுக்கு …………. என்னைத் தனியே விடுங்கள்………….. என்று கத்த வேண்டும் போல் இருக்கும்…… அவள் மனதில் ஏதோ ஒரு தேடல்……….. ஏதோ ஒரு ஏக்கம்…………. அதைத் தேடி ஓடும் மனதிற்கு ஏமாற்றம் தான் விடையாக கிடைக்கிறது………… அவள் இழந்தது என்ன………… எதைத் தேடுகிறாள்…………… அவளின் ஏக்கம் எதனால்………. இதை யோசிக்க யோசிக்க………….. அவள் இதயத்துடிப்பு அதிகமாகி மயக்கம் தான் அவளின் அடுத்த நிலையாக இருக்கும்…………… இப்படி….. தன் நிலையை நினைத்தபடி அவள் வீட்டை நோக்கிச் செல்ல………..

விஜய்யோ தன்னை அவள் திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க…………… அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே சென்று கொண்டிருந்தாள்………….. ஆனாலும் அவள் கண்டிப்பாக திரும்பிப் பார்ப்பாள் என்று அவனுக்குத் தெரியும்….. இருந்தும் அவள் பார்வை வேண்டி…. அவளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்……….

வாசற்படி அருகே போன தீக்‌ஷா…………. என்ன நினைத்தாளோ தெரியவில்லை………….. ஏதோ ஒரு உணர்வு அவளைத் திரும்பிப் பார்க்கச் சொல்ல………… திரும்பியவள்………….விஜய்யின் கார் இன்னும் நிற்பதை உணர்ந்து…………. அதையே பார்த்தபடி இருக்க……………. இப்போது கார் கிளம்பியது…………

”இவ்ளோ நேரம் என்ன பண்ணினான் விருமாண்டி” என்றபடி தீக்‌ஷா உள்ளே போக…………

காரைக் கிளப்பிய விஜய்…………….. அவள் பார்வை தன்னைத் தீண்டிய சந்தோசத்தில்……………… தனது காரில் பாடலை ஒலிக்கவிட்டபடி………….. உல்லாசமாய் விசிலடித்தபடி அதி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தான்……………….

1,276 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page