top of page

அன்பே… நீ இன்றி??? 11

அத்தியாயம் 11

விழா முடிந்து…………. விருந்தினர் அனைவரும் கலைந்திருக்க………. மீதமுள்ள உறவினர் கூட்டமும் தீக்‌ஷா வீட்டிற்கு அனுப்பப் பட்டிருந்தனர்…………..

விஜய் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் ஹாலில் கூடி இருக்க………….. விஜய் அப்போதுதான் உள்ளே வந்தான்............... அதுவரை எப்படிக் தன்னைக் கட்டுப்படுத்தி இருந்தான் என்றே தெரியவில்லை பிரதீபனுக்கு……… விஜய் உள்ளே நுழையும் போதே………….. பிரதீபன்

“ராதா” என்று காட்டுக் கத்தல் கத்த …………………… அவன் குரல் அந்த பிரமாண்ட ஹால் முழுவதும் பட்டு எதிரொலித்தது……………………

அவனின் கூச்சலில் ராதா தன் அறையில் இருந்து நடுங்கியபடி இறங்கினாள்……… அதுவும் தீக்‌ஷாவின் நிலையை அறிந்த பின்னர் தைரியமாக இருப்பாளா என்ன………..

மேலே தீக்‌ஷாவோ அன்னை மடியில் விழுந்து அழுது கொண்டிருந்தாள்……….

முதன் முறை ஜெயந்தி ராதாவை மருமகளாக எடுத்திருந்திருக்க வேண்டாமோ என்று அவளும்…. மகளோடு சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்…….. ராதாவுக்கு எந்தப் பக்கம் பேசுவது என்றே தெரியவில்லை……………. கணவன் என்ன சொல்வானோ என்றும் தெரியவில்லை…………… அவன் கோபம் முகத்தை….. விழா நடக்கும் இடத்தில் அவள் உணர்ந்தாலும்………….. அப்போது காரணம் தெரியவில்லை……………. அறையில் தீக்‌ஷா அவள் அன்னையிடம் சொல்லி அழுத போதுதான் தீபனின் கோபத்திற்கான காரணம் தெரிய……….. உள்ளம் நடுங்கியது அவளுக்கு…….

யுகி, சுரேந்தர்……….. ராகவேந்தர்……… வைத்தீஸ்வர் தீபன் ஏன் கத்துகிறான் என புரியாமல் விழிக்க………. கலைச்செல்வியோ அப்போதுதான் உள்ளே வந்தாள்…………

கணவனின் குரலில்….. ராதா இறங்கி வர…………. அவளது நடையே அவளின் பயந்த தோற்றத்தை பறைசாற்ற……….

”சீக்கிரம் இறங்கி வாடி…………….. அன்ன நடை போட்டுட்டு வர்ற…………” என்று அவளை விரட்டினான் தீபன்….

சுரேந்திரும்……….. யுகேந்தரும்……. கொதித்து விட்டனர்…… தங்கள் தங்கையை அதட்டியது அவள் கணவன் தான் என்றபோதும்……… அதைத்தாங்க முடியாமல்

“அத்தான்……….. எங்க முன்னாடியே………….. எங்க தங்கச்சிய” என்று சொல்ல ஆரம்பிக்க

“என்னது…………. உங்க தங்கச்சியா ……………… ” என்று சொன்னவனின் வார்த்தைகளில் நக்கல் தாண்டவமாட…… அடுத்த நிமிடமே

”அவ என் பொண்டாட்டி………. என்ன வேணும்னாலும் சொல்வேன்…….. செய்வேன்…………………… “ என்றவன் ………….. கண்களில் அண்ணனின் ரவுத்திரம் இருக்க

அப்போது விஜய்

“தீபன்…………. நான் “ என்று ஆரம்பிக்க……………….விஜய்யினை திரும்பி ஒரு முறை முறைத்த தீபன்…………… ராதாவிடம்,

“என் தங்கை எங்கடி………….. உன்னை கூப்பிட்டது எதுக்குனு தெரிஞ்சுதான பம்மிட்டு வர்ற……… அவளைக் கூட்டிட்டி வராம தனியா வந்து நிக்கிற……… என்ன உன் அண்ணனைக் காப்பாற்ற போறியா” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் கேட்க….. ராதா………………. வழக்கம் போல் தன் அண்ணன் பாசத்தில்………..

“தீபன்……….. ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க……… அண்ணா தப்பா எதுவும் பண்ணியிருக்க மாட்டார்” எனும்போதே……………. பிரதீபனின் கை அவள் கன்னத்தில் பதிந்து மீள……….. அவள் பிறந்த வீட்டினர் துடித்துப் போனர்……….

ராதாவோ வாயடைத்து நின்றாள்……………. தன் கணவனின் கோபத்தில்………

தன் தங்கையின் நிலை பொறுக்காத…. சுரேந்தர் ஒரே தாவலில் தீபன் சட்டையைப் பிடிக்கப் போக…………… அவனைத் தடுத்த விஜய்……………… தீபனின் முன் நின்றான்…………….. இருவரின் பார்வைகளும் கோப அக்கினியை வெளியிட………………

தீபனால் தாங்க முடியவில்லை…………… மனைவி என்ற உரிமை இருக்கும் தான் அடித்ததிற்கே இவனுக்கு தாங்க முடியவில்லை…………. ஆனால் என் தங்கையை …………. அதுவும் அறையில் பூட்டி… கட்டிவைத்து……… நினைக்கவே அவனுக்கு நெஞ்சமெல்லாம் தகித்தது……………

“உன் தங்கச்சிய கூப்பிடு” என்று விஜய் சொல்லும் போதே அவன் கண்களும் சிவந்து நிற்க

”அவ எதுக்குடா……….. இன்னும் மிரட்டவா” என்று வார்த்தைகள் தடமாற ஆரம்பித்து இருந்தன……………… விஜய் தனக்கு பதில் சொல்வான் என்று தீபன் காத்திருக்க…………………….. அதற்குப் பதில்

“தீக்‌ஷா இறங்கி வாடி” என்று விஜய் கத்த………………..

இப்போது தீபன் விஜயின் சட்டையை பிடித்திருந்தான்………………..

அத்தனை பேரும் மிரண்டனர்………. இருவரின் கோபத்தில்……………..

இத்தனைக்கும் காரணமான நாயகியோ……………… சிவந்த விழிகளுடன் இறங்கி வர………………

தன் அண்ணன் கை……………. விஜய்யின் சட்டை மேல் பதிந்திருக்க……………. பார்த்த தீக்‌ஷா கலவரம் ஆக வில்லை……………. அதற்குப் பதில் என் அண்ணன் எனக்காக இருக்கிறான்…………. என்ற கர்வம் வர…………… அவள் கண்களில் கண்ணிர் நின்றது……….. தைரியமாக இறங்கினாள்……………. விஜய்யைப் பார்த்தபடியே…………………

இறங்கி வந்தவளிடம்………… தீபனின் கையைத் தட்டி விட்டபடி……… மின்னல் வேகத்தில் விஜய்யும் அவள் முன் நிற்க………

தீக்‌ஷா அவன் கோபத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாய்ப் பார்த்தவள்…………….. அவனைத் தாண்டி சென்று தன் அண்ணனின் அருகில் நின்றாள்…..

“என்ன சொன்ன உன் அண்ணன் கிட்ட……………. என் முன்னாலேயே என் தங்கச்சிய அடிக்கிறான்” என்ற போது…..

”அண்ணியை எதற்கு அடித்தாய்………..” என்ற வண்ணம் தீக்‌ஷா தன் அண்ணனைக் கோபமாய்ப் பார்க்க…………. தீபன் தலை குனிந்தான்

ஜெயந்தி ஆரம்பித்து விட்டாள்

“நல்லா இருக்கு தம்பி…………. உங்க நியாயம்…… என் பொண்ணைப் பாருங்க…………… அவள அடிச்சுருக்கீங்க நீங்க……… இதுல என் பையன் அவ பொண்டாட்டிய அடிச்சதுல உங்களுக்கு……….. கோபம் வருதா” என்று ஆரம்பித்தவளிடம்

வைத்திஸ்வரன்…………..

”ஜெயந்தி…………………” என்று தன் மனைவியின் வார்த்தைகளை நிறுத்தியவர்……….. தீக்‌ஷாவிடம்……………… என்ன நடந்ததென்று கேட்க……………….. தீபன் அதை விளக்க…………

அத்தனை பேரும் அதிர்ந்தனர்………………. வைத்தீஸ்வரனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை……………….. ஆனாலும் தன் மகளின் வரம்பு மீறிய……….. இடமறியா பேச்சும்….. இதற்கு முக்கிய காரணம் என்று புரியாமல் இல்லை…………… அதனால் கொஞ்சம் பொறுமையாக….

ராகவேந்தரிடம்

“என் பொண்ணு என்ன வேண்டும் என்றாலும் பண்ணியிருக்கலாம்……. அதுக்காக உங்க பையன் என் பொண்ணு மேல எப்டி கைய வைக்கலாம் சம்பந்தி………………” என்று ஆரம்பிக்க………

பதிலுக்கு ராகவேந்தர் ஆரம்பித்தார்

“என் பையன் தொழில் விசயத்தில் ஏன் உங்க பொண்ணூ தலையிடுறா……….. என்ன தெரியும்னு அவ என் பையன எதிர்த்துப் பேசுவா…….. நாங்க அப்டித்தான் பண்ணுவோம்……. எங்களுக்கு எங்க பிஸ்னஸ் முக்கியம்” என்று விஜய்க்கு ஆதரவாக பேசியவரிடம் அலட்ச்சியமும்…ஆத்திரமும் இருக்க ……….. தீக்‌ஷா குடும்பத்திற்கு தெரிந்து விட்டது…………… இங்கு இனி நியாயம் கிடைக்காது என்று……………. வீட்டின் மூத்தவர் ராகவேந்தர் அவரே நியாயமின்றி பேசினால்…………… வேறு என்ன சொல்ல……… வேறு எங்கு செல்ல

ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க ராதாவுக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது………

அப்போது…………. தீக்‌ஷாவிடம் மீண்டும் வந்தான் விஜய்

“இதுக்குதான் சொன்னேன்……………. உன் வேலைய மட்டும் பாருனு…………… “ என்று சொல்ல………….

தீக்‌ஷா இன்னும் அடங்க வில்லை……………….. தன் குடும்பத்தின் ஆதரவும் சேர………… இன்னும் ஆக்ரோஷமாகவே பேசினாள்……………

“நீ ஒரு பொண்ணைக் கடத்தி வச்சு மிரட்டுவ…….. அத நான் பார்த்துட்டு சும்மா போகனுமா….. நல்லா இருக்கு நியாயம்………” என்று அவனை மீண்டும் தாக்க

யுகேந்தர் தீக்‌ஷாவிடம் வந்து

“தீக்‌ஷா இதுதான் பிரச்சனையா………….. அதுலாம் அண்ணன் தப்பா எதுவும் பண்ணலை” என்று ஆரம்பிக்க

“நீ சும்மா இரு யுகி…………… இவன்…………..” என்று மீண்டும் மரியாதை இல்லாமல் பேச

“மரியாதையா பேசு தீக்‌ஷா” என்று பல்லைக் கடித்தான் விஜய்……..

“அப்டிதாண்டா பேசுவேன்……….. என்னடா பண்ணுவ…………… பூட்டி வச்சு பொம்பள புள்ள மேல கைய வைக்கிற உனக்கு……… மரியாதை ஒரு கேடா………… பொறுக்கி” என்ற வார்த்தையை முடிக்க வில்லை……………..

விஜய்யின் கைகளால் அவள் பிடித்து இழுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டிருந்தாள்…………………

விஜய்யின் இந்தச் செயலில் ராகவேந்தரே சற்று நிலைகுலைய…………. யுகேந்தர், சுரேந்தர்…. கலைச்செல்வி……… என அனைவரும்……….. விஜய்யை அமைதிப் படுத்த முயல………. விஜய் அவர்கள் யாரையும் லட்சியம் செய்யாமல்

“என் வீட்ல இருந்து என்னையவே மரியாதை இல்லாம பேசிவியா………………………. உங்களுக்கெல்லாம் இடம் கொடுத்தா………….. நீங்க…….. இப்டித்தான்…………ஏறுவீங்க……………. என்ற அவன் குரல் கூட கீழே தள்ளப்பட்ட தீக்‌ஷாவுக்கு தெளிவில்லாமல் தான் விழுந்தது……………

உள்ளே பிரச்சனை என்பதால் …………….. வேலையாட்கள் அனைவரும்………. வெளியே நின்று கொண்டிருந்தனர்……………

அவர்கள் அனைவரின்………….. முன்னிலையில்………….. தீக்‌ஷா அவமானப்படுத்தப் பட்டாள்……… அவர்கள் அனைவரும் தீக்‌ஷாவைப் பார்த்த பார்வையில் பரிதாபம் இருக்க………… அதில் குன்றிப்போன தீக்‌ஷாவால் எழக் கூட முடியாமல்…………… அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்……………… மேலே தனி அறையில் பட்ட அவமானத்தை விட இது கொடுமையாக இருக்க…………… கை கால்கள் எல்லாம் நடுங்கியது……………… இதயம் படபடப்பாக அடிக்கத் தொடங்க………….. அவள் உணர்வுகள் எல்லாம் அடங்கியது போல் இருக்க……………… ஜெயந்தியும் வைத்தீஸ்வரனும்………….. தங்கள் மகளை ஒடி வந்து தூக்கினர்………… எழுந்தவளின் உடல் நடுங்கியதை அவள் பெற்றோர் உணர………. துடித்துபோனார்கள் இருவரும்……..

தீக்‌ஷாவுக்கு விஜய்யின் செயல்…………. எதையுமே யோசிக்க விடவில்லை………… விஜய் இப்படிப்பட்டவனா என்ற எண்ணம் மட்டுமே இருக்க………. கல்லாய் நின்றாள்……….. கண்கள் கண்ணீரை அவள் அனுமதியின்றி வெளியிட………… அதைத் துடைக்கக் கூட முடியாமல் இறுகி நின்றாள்……………

பிரதீபன் அதிர்ந்து…………….. ராதாவை நோக்கியவன்………….. அதற்கு மேல் அங்கு நிற்காமல்…………. . வெளியேற ஆரம்பிக்க…………

ராதாவுக்கு எல்லாமே கை மீறியது போல் இருக்க…………சுனந்தாவைத் தூக்கியபடி தீபனின் பின்னால் வெளியேறினாள்….

அவளின் வருகையை உணர்ந்த தீபன்……….

அதிர்ச்சியில் இருந்த தன் தங்கையை ஆதரவாய்ப் பிடித்தபடி…… அவமானம் ஒரு புறமும்…….. அதிர்ச்சி ஒருபுறம் எனச் சேர்ந்து………….. தன் கோபமுகத்தையும் ராதாவிடம் காட்டினான்………

”நீ எங்க வர்ற………….. போதும்மா……………. உன் உறவு………….. எல்லாம் என்னாலதான்…………. உன்னைக் கல்யாணம்னு ஒண்ணு பண்ணியதுதான் நான் வாழ்க்கைல பண்ணின தப்பு………….. உன் அண்ணன் பண்ணினதுலாம் தப்பே இல்லை…………………” என்று போக….

அவன் திட்டியும் ராதா பின்னாலே போக………. கோபத்தில் தீபன் அவளைத் தள்ளி விட…………

விஜய் தன் தங்கை விழாமல்…….. ஓடி வந்து………….. தாங்கிப் பிடித்தான்……………. நடந்த சண்டையில் சுனந்தா எதுவும் புரியாமல்…………. அழ ஆரம்பிக்க……………….

சுனந்தாவின் அழுகையில்தான் தீக்‌ஷா தன் உணர்வுக்கு வந்தாள்………

வந்தவள் ப்ரதீபனிடம்

“அண்ணா…….. அவன் பண்ணியதுக்கு அண்ணி என்ன பண்ணுவாங்க…………” என்றபடி….

”வாங்க அண்ணி” என்று அழைக்க

ராதா தயங்கி அண்ணனின் கையை விலக்கி………….. அவர்களை நோக்கிப் போனாள்

விஜய்யைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்த தீபன்……….. தன் அருகில் வந்த ராதாவிடம்

“நீ என்கூட வரலாம்…… ஆனா என் தங்கச்சி கிட்ட உன் அண்ணனை மன்னிப்பு கேட்கச் சொல்லு………. அவன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நீ என் கூட வர முடியும்………… இல்லை…..” என்று தன் காதலை எல்லாம் துரத் தூக்கிப் போட்டவனாய்ப் பேச………. ராதா துடித்துப் போனாள்……………… அது தீபனுக்கும் புரிய……….. தன்னவளின் நிலை உணர்ந்தவன்….. அதைப் பார்க்க முடியாமலும்….. அதுமட்டுமில்லாமல் பார்த்தால் எங்கு ராதாவின் மேல் உள்ள காதல்… தன் தங்கையின் பாசத்தை மாற்றி விடுமோ என்று……….. பார்வையை வேறு திசையில் மாற்றினான்…………..

தீக்‌ஷாவோ

“அண்ணா…………. அவன் மன்னிப்புலாம் வேண்டாம்…………… இனி அவன நம்ம அண்ணிய மறந்துரச் சொல்லுங்க……” என்று ராதாவின் கையை பிடித்து தன்னோடு அழைத்துப் போக

“அவள விடுடி………… என் தங்கச்சிக்கு…. நீ…. வாழ்க்கைப் பிச்சை போடுறியா…..………… நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன்……. நீ பேசுன…….. அதுக்கு வாங்கிக் கட்டிகிட்ட…….. ராதா என்ன தப்பு பண்ணினா…… உன் அண்ணனை காதலிச்சத தவிர………….. அதுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டீங்க………. பார்ப்போம்டி…….. என் தங்கச்சிய இப்படி நிறுத்தின…….. நீ எப்டி வாழப் போறேனு………….. உன் குடும்பம் எப்டி வாழப் போகுதுனு…………. என் தங்கச்சிய எப்படி வாழ வைக்கிறதுனு எனக்குத் தெரியும்…”

என்ற போது…………….. அவன் கண்களில் கொலை வெறியைப் பார்த்தாள் தீக்‌ஷா…..

ராதாவைப் பரிதாபமாகப் பார்த்த தீக்‌ஷா…….. அவனின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல்

“நீங்க வாங்க அண்ணி” அவன் கையை மீறி ராதாவை இழுக்க……….

“ஒழுங்கா போக மனசில்லையா………….. இல்லை உங்க எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து அனுப்பவா” என்று தன் உயரத்தை காண்பிக்க……….

இரு குடும்பத்தாருமே விஜய்யின் உச்சக்கட்ட கோபத்தில் உறைந்தனர்……….

அதன் பிறகு தீபன் ராதாவை ஒரு பார்வை பார்த்து வெறித்தவன்……………… தன் குடும்பத்தோடு அவமானத்தோடு வெளியேற………..

ராதா அவனோடு போக விஜய்யிடமிருந்து திமிறினாள்……. விஜய்யின் கைகளை மீறி அவளால் போக முடியவில்லை…………… தீபன் என்ற அவளின் கதறல் காற்றில் தான் கலந்தது………… தன்னை விட்டும் போய்க் கொண்டிருக்கும் அவர்களை பார்த்தபடி கதற……….

தீக்‌ஷா பின்னால் திரும்பி தன் அண்ணியையும் சுனந்தாவையும் பார்த்தபடியே கடந்து சென்றாள்…………..

தான் பேசாமல் இருந்திருக்கலாமோ என்று தன்னைத் தானே நொந்தவளாய் வீடு வந்து சேர்ந்து தன் அறையினுள் தன் கட்டிலில் விழுந்து குமுற ஆரம்பித்தவளுக்கு………. தன் மேனியில் அவன் கை தீண்டிய இடமெல்லம் எறிய… அருவருப்பாய் இருக்க.………… குளியலறைக்குச் சென்று………. ஷவரைத் திருவி விட்டவள்………….. அப்படியே எத்தனை மணி நேரம் நின்றிருப்பாளோ தெரியவில்லை……… அப்போதும் ஆறாமல்………. உடல் தகித்தது……………… மனம் அவன் கொலை வெறியோடு தன்னை நோக்கியதையும் நினைக்க…………தன் அண்ணியையும்………….. தன் அண்ணாவின் வாழ்க்கையையும் நினைக்க…………… எல்லாமே தன்னால் தான்……… தன் அவசரப்பட்ட வாய்ப் பேச்சில் தான் என்பது இப்போது புரிய…………. கொஞ்சம் கொஞ்சமாய் மாலை நடந்த நிகழ்வுகள் அவளை அலைகழிக்க……… உச்சக் கட்ட அதிர்ச்சியில் தீக்‌ஷா குளியலறையிலேயே மயங்கி விழுந்தாள் …………….

மறுபுறம் வீட்டை காலி செய்ய வேண்டும் தீபன் வேறு ஆடிக் கொண்டிருக்க………….. வைத்தீஸ்வரன் மட்டும்……….எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காமல்….. அவனைச் சமாதானப் படுத்திக் கொண்டிருக்க…………… மகள் அறையில் போய் வெகுநேரம் ஆகி விட்டதே என்று ஜெயந்தி எதேச்சயாக மகளைக் காண வர………… மகளின் கோலத்தில் அலறி………… தன் மகளை அன்று காப்பாற்றினார்………..

----------------

2 நாட்களுக்குப் பிறகு…. தீக்‌ஷாவும்… துக்கம் மனதோடு இருந்தும்….. ஓரளவு தன் நிலை மீண்டவள்…….. புடவை எடுக்கப் போய் விட்டும் வந்தாள்………. ஏற்கனவே அவள் பேப்பர் போட்டிருந்தபடியால்……. கடைசி நாளாய் அலுவலகத்திற்கும் சென்று தன் நண்பர்களுக்கு ட்ரீட் வைத்தவள்.……… பத்திரிகை வைக்க ஒரு நாள் வருவதாக கூறிவிட்டு………… தன் வேலைக்கும் முழுக்குப் போட்டாள்……

இதெல்லாம் நடந்து ஒரு வாரம் இருக்க………

ராதா தீபனிடம் பேச முயற்சி செய்து ஓய்ந்து போக……… தீக்‌ஷாவிடம் கலங்க ஆரம்பித்து இருந்தாள் ராதா……….. இதனால் தீக்‌ஷா தன் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்…

தீபன் தாய் தந்தையும் அவனைத் திட்ட ஆரம்பித்தனர்…….. விஜய் செய்த தவறுக்கு ராதா என்ன செய்வாள் என்று………….

இதற்கிடையில் கலைச்செல்வியும்……. ராகவேந்தரும் தங்கள் தவறை உணர்ந்து…… மன்னிப்பு கேட்டு….. வீட்டிற்கு வந்து பேச……… உறவுகளுக்குள் விரிசல்கள் இருந்த போதும்………… கோபங்கள் இருந்த போதும்………… ராதா மீண்டும் தன் கணவன் வீட்டிற்கு வர வைக்கப்பட்டாள்………….. ஆனால் விஜய் மன்னிப்புக் கேட்கவேயில்லை………… ராதா வந்த போது விஜய் பிரச்சனை பண்ணவும் இல்லை….. தீபனோ……..ராதோவோடு பேசவே இல்லை………….

ராதாவோ வீட்டிற்காவது வர விட்டானே என்று நிம்மதி பெரு மூச்சு விட்டவளாய்………… தீக்‌ஷாவின் திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் ராதா…….

யுகி மட்டும் ஒரு நாள் தீக்‌ஷாவைப் பார்க்க வந்தான்……………….

அவனைப் பார்த்த தீக்‌ஷா………….. எதுவும் நடக்காதது போல் அவனை வரவேற்றுப் பேச……… அவனும் சகஜமானான்……. அன்று யுகியிடம் அவள் அந்த சம்பவத்தைப் பற்றி எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள்…………

அவள் அதைப் பற்றி பேசாமல் இருந்தால் கூட…… யுகி ஆரம்பித்தான்

“தீக்‌ஷா………. அண்ணா பண்ணினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்……………. என்று சொன்னவன்

“ஆர்த்திய கடத்துனாங்கதான்… ஆனா……… ஒண்ணும் மிரட்டலாம் இல்லையாம்…….. அசோக் அவ கூட இருந்து பத்திரமா பார்த்துகிட்டாராம்……….. நீதான் இங்க பிரச்சனை பண்ணிட்ட….………… ராதாவை கடத்த அவன் பிளான் பண்ணினான்ல……….. அண்ணா அதை செஞ்சு காமிச்சுட்டார்….. வேற எந்த நோக்கமும் இல்லை தீக்‌ஷா……….. அவ ஜாலியாத்தான் இருந்தாளாம்………… சொன்னா என்கிட்ட ” என்று சாதரணமாகச் சொல்ல……

அதிர்ந்து பின் சிரித்தாள் தீக்‌ஷா

”நீ சந்தோசமா இருந்தியா யுகி…….. அவளோட குரலைக் கேட்க முடியலைனு…….. நீ தவிச்சியே…………… உன் பார்வைல ஒரு வலி இருந்துச்சே…………….. இது மாதிரி அவங்க வீட்லயும் துடிச்சிருப்பாங்களே யுகி……………. சொல்லு யுகி…………. உன் அண்ணா பண்ணினது தப்பு இல்லையா…………. எப்டி இப்டி இதயம் இல்லாம இருக்கீங்க………… “ என்றவளை

அவஸ்தையோடு பார்த்த யுகி…. தீக்‌ஷாவின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தலை குனிந்தான்…………….

“இது மட்டும் இல்ல யுகி…………. இத நான் கேட்கப் போய் ………உன் அண்ணன் என்னை அடிக்க மட்டும் செய்ய வில்லை என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகளில் அதிர்ச்சியாய் நிமிர்ந்தான் யுகி…………

அவனிடம் அன்று தான் பட்ட அத்தனை வேதனைகளையும்… அவன் அண்ணன் நடந்த விதத்தையும் மறைக்காமல் சொன்னவள்………

“அவர் என்கிட்ட தப்பா நடந்துக்கலை அவ்வளவுதான்………. ஆனா இது கூட அசிங்கம் தான் ஒரு பொண்ணுக்கு யுகி…….. அவர் அதை உணரல…………….. ஆனால் காலம் கண்டிப்பா உணர வைக்கும்…………… அதை நான் பக்கத்தில இருந்து பார்ப்பேனானு தெரியல …………. ஆனா நீ இருப்பேல யுகி……….. அன்னைக்கு நீ நினைப்ப………. இந்த தீக்‌ஷாவோட வேதனைதான்… அவ சாபம்தான்…… உன் அண்ணனோட நிலைக்கு காரணம்னு…………” என்றவளின் கண்களின் இருந்த தீர்க்கம்…………….. அது நடக்கும் என்பதை திண்ணமாகச் சொல்ல………. அவள் பார்வையின் உக்கிரத்தில் யுகேந்தர்………….. கலவரமாகி……….

“ப்ளீஸ் தீக்‌ஷா……..இப்டிலாம் சாபம் லாம் கொடுக்கதா………… ஒருவேளை உன் புடவை கலர்ல அவர் ஷேர்ட் இருந்ததால கூட கழட்டி இருந்திருக்கலாம்……. அவர் தப்பானவர்லாம் இல்லை தீக்‌ஷா…… என்றபோதே அவனுக்கு தன் அண்ணன் பெண்ணிடம் கேவலமாய் நடக்கும் தேர்ட் ரேட் இல்லை என்ற நம்பிக்கை இருந்தும்………. ஏன் தன் சட்டையைக் கழட்டினான் என்ற சந்தேகம் வர அவன் குரல் உள்ளே சென்றது

”நீ அவர திட்டிரு… பதிலுக்கு அடிக்கக் கூட செஞ்சுரு தீக்‌ஷா………. சாபம் லாம் விடாத தீக்‌ஷா………..“ என்று தன் அண்ணனுக்காக கெஞ்சியவனைப் பார்த்து கண்ணில் வலியோடு சிரித்த தீக்‌ஷா

“உன் அண்ணன்…..… முதன் முதலில்…. பார்த்த நாளில் இருந்தே என்னை எவ்வளவோ அசிங்கப் படுத்தி இருக்கார்…… உங்களோட பேசுறதை எல்லாம் பிடிக்காமல் திட்டி இருக்கிறார்……… மனசுல கோபம் இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் அங்க வந்து நின்னேன்……….……. தன்மானம் எனக்கு இல்லைனு நீ நினைத்திருக்கலாம்…. எனக்கும் தன்மானம் இருக்கு யுகி…. ஏன் நான் உன் அண்ணன்கிட்ட காட்டல தெரியுமா……. அவர் என் அண்ணியோட அண்ணன்…….. நம்ம சொந்தம்னு நெனச்சு…… அவர் கோபத்தை எல்லாம் மனசில வைக்காம சிரிச்சுட்டு இருந்தவ இந்த தீக்‌ஷா………. இப்போ கூட நான் கொஞ்ச நாள்ள இதை மறந்துட்டு உங்க வீட்ல வந்து நின்னாலும் நிப்பேன்……….. ஏன்…. உங்க அண்ணா கிட்ட கூட பேசினால் கூட ஆச்சரியம் இல்லை…………. ஏன்னா அது ஏன் கேரக்டர்…. என்னால யார்கிட்டயும் பேசாம இருக்க முடியாது……….. வந்து பேசுனா………… பேசிருவேன்……… ஆனா இது மட்டும் நிச்சயம்……….. தன்னோட தவறை உணாரம இறுமாப்பா இருக்கிற உன் அண்ணன் அனுபவிப்பான்………… கண்டிப்பா நடக்கும்” என்று ரண வேதனை மனதில் இருந்தும்…….. யுகியிடம் அதை மறைத்து………. எங்கோ பார்த்தபடி பேசினாள் தீக்‌ஷா……..

அவள் முகம் காட்டாவிட்டாலும்…….. அதன் வேதனை யுகேந்தருக்கும் புரிய

அவள் வேதனை தாங்காத…….. யுகி அந்தப் பேச்சினை மாற்றி ராகேஷை பற்றி விசாரிக்க…… இன்னும் வேதனையானாள் தீக்‌ஷா……

”அவர் அன்னைக்கு பேசுனதுதான் யுகி……….. அவர் பேசின அன்னைக்கு நைட் அவங்க அம்மா பேசினாங்க …………. ராகேஷ் பேசினானன்னு கேட்டாங்க……. ஒருவேளை அவங்க அம்மாக்கு பயந்துட்டு பேசி இருப்பாரோ யுகி” என்றவளை கவலையோடு பார்த்தான் யுகி…………………

”சரி விடு…………. எனக்கும் ஒரே குழப்பமாதான் இருக்கு…………… நாளைக்கு இந்தியா வருகிறாரம்…. பார்க்கலாம்…….அவன் எனக்கு என்ன பண்ணப் போறானோ………”

யுகி………. இன்னும் தெளிவில்லாமல் கவலையோடு இருக்க…….. தன்னைக் கலகலப்பாக மாற்றினாள்……….. அவனுக்காக……………………..

“உங்க வீட்ல எப்போ கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க…………. உங்க விருமாண்டி………….. என்ன சொல்றாரு………… அவர் இளமதி என்ன சொல்றாங்களாம் ” என்று. ஆரம்பித்தவளிடம்……..

அவளின் குறும்பான பேச்சில்…… புன்னகைத்தபடி

“அம்மா வேற அண்ணனை நல்லா திட்டிடாங்க தீக்‌ஷா…….. உன் மேல அம்மாக்கு ரொம்ப பாசம் போல……….. அண்ணா………. கொஞ்சம் டல்லா இருக்கார்…… யார்க்கிட்டயும் பேசவே இல்லை……………. நானும் அவ்வளவா பேசல…….. சோ….. தெரியல…………. அண்ணா ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிறார்னு அம்மா புலம்பிட்டு இருக்காங்க………” என்று புலம்பியவனிடம்

“உன் ஆளை கடத்திட்டார்னு சார்கிட்ட அவங்க அண்ணாகிட்ட கோபமாக்கும்” என்று கண் சிமிட்ட……….

”ப்ச்……” என்று சலித்தவன் பின்

“சுரேந்தர் அண்ணாவும் இதுக்கு கூட்டணி தெரியுமா…………” என்று சொன்னவனிடம்

“பின்ன லட்சுமணன் ஆச்சே………… ராமர் இவர் துணை இல்லாமல் இந்த வேலையெல்லாம் பண்ணுவாரா ” என்று நக்கலடிக்க

“இப்போதான் ராவணன் ரேஞ்சுக்கு என் அண்ணனை பேசுன………. அதுக்குள்ள ராமர் ஆகிட்டாரு” என்று அவளை சமாதானாமாக்கும் முயற்சியில் பேச

கொஞ்சம் விறைத்த தீக்‌ஷா………… பின் சாதாரணமாக

“அண்ணன் தம்பி பாசத்துக்கு ராமர்-லட்சுமன் தான் சொல்லனும்…………. ராவணன் – விபிஷணன்னா சொல்ல முடியும் என்றவள்………….. சரி விடு உன் முகத்துக்காக இப்டி வேனும்னா சொல்லலாம்…………. விஜய்-சுரேந்தர்……….. ராமர்-லட்சுமனர்………. விஜய்-யுகி…………. ராவணன் - விபிஷணன்….. இது எப்டி இருக்கு என்று சிரிக்க

”ரொம்ப கேவலமா இருக்கு ’ராமனும் – ராவணனும்’ ஒரே ஆள்னு சொன்ன ஒரே பொண்ணு நீ ஒருத்தியாத்தான் இருப்ப” என்று ஓட்ட…………

அதற்கு தீக்‌ஷாவோ

இப்படிக் கூட சொல்லலாம் யுகி……….. ”ஹீரோவும்……..வில்லனும்” ஒரே ஆள்னு………….. ”ஆனா எனக்கு எப்போதும் வில்லன் தான்” என்று சொல்ல……………

யுகேந்தருக்கு அவளின் குணம் ஆச்சரியமாகத்தான் இருந்தது…………..

------------------

தன் மகளுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வேறு வழியின்றி……….ஜெயந்தியும்…….. வைத்தீஸ்வரனும் சம்பந்தி வீடாகி விட்டதே என்று ராதா வீட்டிற்கு சென்று அனைவரையும் அழைத்தனர்……….. தீபன் இன்னும் கோபத்தில் தான் இருந்தான் என்பதால் அவன் போகவில்லை…………. ராதாவிடமும் இன்னும் கோப முகத்துடன் திரிந்து கொண்டிருந்தான்………..

நிச்சய தினம் அன்று காலையிலேயெ……….. தீக்‌ஷா வீடு பரபரப்பாக இருக்க…….………………….. மாப்பிள்ளை வீட்டாரும் வந்திறங்கினர்…………. ஆனால் ராகேஷ் வர வில்லை………”

என்ற இடத்தில் நிறுத்தினாள் தீக்‌ஷா………………

சாரகேஷ்…………….. அவளையே பார்த்தபடி இருக்க

“ஏன் என்னாச்சு” என்று பார்வதி வினவ

”ப்ச்………. அவன் இன்னொரு பொண்ணை வெளி நாட்டிலேயே லவ் பண்ணினானம்……. அவங்க வீட்ல சொன்னாங்களாம் “ என்று முடிக்க

இப்போது பார்வதி…………

“ராகேஷ் உனக்கும் லெட்டர் எழுதியிருந்தார்ல தீக்‌ஷா” என்றவளிடம்…………

“என்ன லெட்டர்………….. யாரு எழுதினா” என்று புரியாமல் கேட்க

“நீதானே சொன்ன அந்த ராகேஷ்……… புடவைக்கு இடையில லெட்டர்னு ஆரம்பிச்ச” என்றவளை………..

“லெட்டரா…… என்று ஆரம்பித்தவளின் விழிகள்………… சந்தோசமாக…… .பரவசமாக ஆரம்பிக்க………….

“என் இந்…….. என் இந்த…….. அன்னைக்கு என் ரூம்ல……….. என்று ஆரம்பித்து …. பட்டுபுடவைய தூக்கி வீசுனேனா…. இடையில…… லெட்டர்….. நான்…….. அவர் இல்லாம…. நான் எப்டி” என்று வார்த்தைகள் இடம் மாறி ஆரம்பித்தவளின் விழிகள்………. இப்போது நிராசையாய் மாறி ஒரு நிலையிலே இருக்க ஆரம்பிக்க………. படபடப்பானாள்………….. உடல் வேர்க்க…………. ஆரம்பிக்க…………… மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்க…….. நிற்க முடியாமல்……… தள்ளாட ஆரம்பித்தாள்……….

அவளின் பேச்சு புரியாமல்……….. முதலில் விழித்தவர்கள்………. அவளின் தள்ளாடுவதை உணர்ந்து.………. இப்போது அதிர்ந்து

சாரகேஷ்………….. சட்டென்று அவளைப் பார்த்து ”தீக்‌ஷா”………………. என்று சத்தமாக கூப்பிட்டபடி……………அருகே போக…………

’பாரு’ அவளின் மூக்கிலிருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்து தண்ணீரை அருந்தக் கொடுக்க…………….. அதைக் குடிக்கக் கூட முடியாமல்…….. அவள் மடியிலேயே படுத்து விட்டாள் தீக்‌ஷா…………………

பார்வதிக்கு தாங்க முடியவில்லை……….. அழுதபடி………..

“தீக்‌ஷா உனக்கு என்னடி பிரச்சனை……………..” என்ற போதே அவள் மூக்கில் இன்னும் ரத்தம் வடிய பார்வதிக்கு பயம் ஆகி விட்டது……………

“அவங்க வீட்டுக்கு போன் பண்ணுவோம்ணா” என்றவளை சமாதானப்படுத்திய சாரகேஷ்…….. அவளுடைய ஹேண்ட்பேகை ஆராய………. அதில் பல மாத்திரைகள் இருக்க…….. ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தவன்…… ஒரே ஒரு மாத்திரை மட்டும்……….. கவரில் தனியே இருக்க அதை பிரிக்க………..

“மூக்கில் ரத்தம் வந்தால் கொடுக்க வேண்டிய மாத்திரை” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வைத்திருக்கப்பட்டிருந்தது……..

வேகமாய் அதை எடுத்து சாரகேஷ் அவளுக்கு புகட்ட……………. அடுத்த அரை மணி நேரத்தில் சாதாரணமானாள் தீக்‌ஷா……….

அப்போது சுரேந்தரும் போன் செய்தான்………… பார்வதிதான் போனை அட்டெண்ட் செய்தாள்……..

பார்வதிக்கு தன் தோழியின் கடந்த கால தெரிந்த காரணத்தால் …. கோபத்துடன் பேச ஆரம்பிக்க………. அவனோ

”கிளம்பியிரு தீக்‌ஷா…… இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன்” என்று சொல்லி அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்……….

”விஜய் தம்பி சுரேந்தர்…………… ” என்று சொல்லி போனை வெறித்தவள்…… அவன் சொன்ன விசயத்தை தன் அண்ணனிடம் சொன்னாள்…..

இதற்கிடையே சற்று தெளிவான தீக்‌ஷா………..தன் முன் நின்ற இருவரின் திகிலடைந்த முகத்தைப் பார்த்து……..

தானே ஆரம்பித்தாள்…………..

“என்ன பயந்துட்டீங்களா…….. இது அப்போ அப்போ வரும்………… பழகிருச்சு” என்று சிரித்தவள்…………

இதேபோல ஒருநாள் மயக்கப்பட்டு விழுந்தேனாம்……… என்ன….. இப்போ உடனே எழுந்துட்டேன்….. அன்னைக்கு எழவே இல்லையாம்….. அதுக்கப்புறம் 3 மன்த்ஸ் கோமா ஸ்டேஜ்ல இருந்தேனாம்………… கடைசியில………….”. என்று ஆரம்பித்தவளின் விழிகள் ஈரமாகி இருக்க

பார்வதி அவளை தன்னோடு அணைக்க

“கடவுளுக்கு என்னை ரொம்ப பிடிச்சுருக்கு போல பாரு……….. அதுதான் சீக்கிரம் கூப்பிடுறாரு…” என்று விரக்தியாய் சிரிக்க……………..

பார்வதிக்கு ராகேஷ் முதல் விஜய் திருமணம் வரை….. ஆயிரம் சந்தேகங்கள் இப்போது வந்திருந்தன……….. ஆனால் கேட்க முடியாமல் தவித்தாள்………….. தன் அண்ணனைப் பார்க்க…………….. அவன் ஏதோ ஒரு யோசனையிலே இருக்க………….. அந்த இடம் அமைதியாய் மாறி இருக்க…………… தீக்‌ஷாவை கீழே கூட்டி வந்தனர்……… சற்று நேரத்தில் சுரேந்தரும் வந்தான்………………..

அவனைப் பார்த்து……….

“இது எங்க சுரேந்தர் அத்தான்”………………. என்று மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்திய தீக்‌ஷா……….. சாரகேசையும் அறிமுகப் படுத்த…………

வந்தவனோ……….. அதில் எல்லாம் ஆர்வம் காட்டாமல் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க………. அதைக் கவனித்த பார்வதி……… அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினாள்……………

அவளோடு தனியாக வந்த சுரேந்தரிடம் தீக்‌ஷா மயங்கி விழுந்ததைக் கூற…………..

”எங்கயிருந்து வந்து தொலச்ச நீ…………….. ஏதோ நடமாடிட்டு இருக்கிறார் என் அண்ணன்… அவர் உயிரையும் எடுத்துராதீங்க………….. நாங்க ஏற்கனவே நொந்து நூலாகிப் போயிருக்கோம்……..” என்ற அவனின் அதிரடியான வார்த்தையில் பார்வதி அதிர்ந்து அவனை முறைக்க…………

அவள் முறைப்புக்கு தன் அலட்ச்சியத்தை பதிலாகத் தந்தான் சுரேந்தர்…………..

ஹாலிலோ…………. தீக்‌ஷாவிடம் சாரகேஷ்………

“உன் ரிப்போர்ட்ஸ்லாம் எனக்கு வேணும் தீக்ஷா………… விஜய் கிட்ட கேட்டு வாங்கித் தருகிறாயா” என்று கேட்க.. அந்த நேரத்தில்…. அதைக் கேட்ட படியே வந்த சுரெந்தர்…………..

”என்ன டாக்டர்னு காட்றியா………….. உன் வேலைய மட்டும் பார்த்துட்டு இரு……” என்று சாரகேஷை மிரட்ட ஆரம்பிக்க…….

இப்போது சாரகேஷும் முகம் இறுக ஆரம்பித்தான்

”சுரேந்தர் அத்தான்” என்று தீக்‌ஷா அதட்ட…………. அதற்கு மேல் எதுவும் பேசாமல் சுரேந்தர் நிற்க

தீக்‌ஷா பார்வதியிடம் திரும்பி ……….

“நான் விஜய் அத்தான்கிட்ட பேசிட்டு சொல்றேன்………….. ’பாரு’………….. உங்க அண்ண கிட்ட தப்ப எடுத்துக்க சொல்லாத………” என்று சொல்லியவள்………..

”சுரேந்தர் அத்தான்…………. இப்போ எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகறீங்க” என்றபடி வெளியேற……. தீக்‌ஷாவை பாருவின் தாய் தேவகி கேள்விக் குறியோடு நோக்க…. சாரகேஷும் பார்வதியும் குழப்ப முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்……………..

சாரகேஷ் வீட்டில் நிலவரம் இப்படி இருக்க…..

விஜய்யோ………….. தீக்‌ஷாவின் வரவை எதிர்பார்த்து…………….. தீக்‌ஷாவின் வீட்டில் அமர்ந்திருந்தான்…………………

1,537 views1 comment

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page