top of page

சந்திக்க வருவாயோ?-51-2

Updated: Jun 28, 2020

அத்தியாயம்:51- 2

சந்தியாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்த அன்றைய இரவு… ராகவ் தன் பிறந்த நாள் என்று சொன்ன இரவு…. இன்று ஞாபகம் வந்தது


ராகவ் பேசி முடித்து போனை வைத்த பின்…

----


திருமணத்திற்கு பின் வரும் ரகுவின் பிறந்த நாள்… இருவரும் ஒன்றாக இருக்க முடியவில்லையே… சந்தியாவுக்கு மனம் தவிக்கத்தான் செய்தது… ஆனாலும்… என்ன செய்வது… போனில் வாழ்த்து சொன்னதோடு முடிந்தது…. இந்த நள்ளிரவில்… அவனும் என்னதான் செய்வான்… கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது… அமைதியாக கண்களைத் திறந்த படி விட்டத்தை வெறித்தவளுக்கு உறக்கம் என்பது சுத்தமாகப் போயிருந்தது… ராகவ் மட்டுமே அவளது நினைவுகளில் ஆக்கிரமித்து இருக்க… மொபைலை எடுத்துப் பார்க்க… மணி 3 ஐத் தொட்டிருக்க… ராகவ் 2 மணி அளவில்தான் பேசி முடித்தே வைத்திருந்தான்… அவனோடு பேசிய போது நொடியில் கரைந்தன மணித்துளிகள்… இப்போதோ…. நொடிகள் கடக்கவே பெரும்பாடாக இருக்க… சன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்… வெளியில் தூறல் போட்டுக் கொண்டிருக்க.. சில்லென்ற அந்த சூழ்நிலையாவது தன் தனிமைத் துயரை போக்க முடியுமா என்று அதில் மூழ்க முயற்சித்தாள்…


கதைகளிலும், இலக்கியத்திலும் மட்டுமே கேட்ட… படித்த… தலைவனை நினைத்து தலைவி கொள்ளும் ஏக்கம் இப்போது தனக்குள்ளுமா… சந்தியாவுக்கு அவளையுமறியாமல் மெல்லிய சிரிப்பு அவள் இதழ்களில் …


வாடைக்காற்றில் தலைவனுக்கு தூதனுப்பும் தலைவியின் அகநானுற்று காதல் தனக்கும் உதவி புரியுமா… இந்த எண்ணம் வந்த போதே… முத்திப் போயிருச்சு சந்தியா… தன்னைத்தானே தலையில் கொட்டிக்கொண்டவளின் மனசாட்சி கூட ராகவ்வை வைத்து அவளை கேலி செய்ய ஆரம்பித்திருக்க… அந்த கேலி கூட அவளுக்கு உவப்பாகத்தான் இருந்தது… அந்த நிலைமையில் அவள் இருக்க…


இயற்கைக்கு புரிந்ததோ?… இவள் காற்றில் விட்ட தூது அவள் நாயகனை அடைந்ததோ?…


மனிதர்கள் மாறலாம்… தலைவன் தலைவி மாறலாம்… அன்றும் இன்றும் என்றும் இயற்கை மாறுமோ…


அப்போது…. அந்த பின்னிரவு நேரத்தில் அவளது மொபைல் நானும் உன்னுடன் துணைக்கு இருக்கின்றேன் என்பது போல… மெலிதாக ஒலி அடித்து அவள் கவனத்தை திருப்பியது…


நவீன் யுகம்… நவீன தொழில்நுட்பம்… அன்றைய தலைவன் தலைவிக்கு கிட்டாதது… நம் நாயகிக்கும் நாயகனுக்கும் கிட்டியது…


வேகமாக எடுத்துப் பார்க்க… ரகுவே… அவள் கணவனே… அவள் நாயகனே… உணர்ச்சி வசப்பட்டவளாக..


“ரகு” என்று அழைக்க.. அழைத்தவள் குரலில் அப்படி ஒரு உணர்ச்சிக் குவியல்…


அவள் எடுத்த வேகத்தில்… அவள் குரலில் ஒலித்த உணர்வுகளில்.. ராகவ்வே சற்று திணறினான் தான்… இருந்தும் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டவனாக…


“உங்க ஸ்ட்ரீட் கிட்ட நிற்கிறேன் சந்தியா… உன்னால வர முடியுமா…” ஏக்கத்துடன் ஒலிக்க… அவன் பேசி முடிக்கும் முன்னரே… வேகமாக வெளியில் செல்ல ஏதுவாக சுடிதார் தேடலில் இறங்க ஆரம்பித்திருந்தாள்… சந்தியா…


நிமிடங்களில் உடை மாற்றி… ஓசைப்படாமல்… கதவைத் திறந்து வெளியே வந்தவளுக்கு… பட பட நெஞ்சம் தான்… எதைப்பற்றியும் சந்தியா கவலைப்படவில்லை… ரகு மட்டுமே… அவன் தனக்காக வந்திருக்கின்றான்… தனக்காக காத்திருக்கின்றான்… இது மட்டுமே அவள் நினைவிலும்… கருத்திலும் நிறைந்திருக்க


யார் கண்ணிலும் படாமல் வெளியில் வந்தவள்…


”ஊப்ப்…” என்று நிம்மதிப் பெருமுச்சு விட்டவள்… வீட்டை வெளியில் இருந்து பூட்டியவள்…. துப்பட்டாவை எடுத்து தலையில் சுற்றிப் போட்டவள்… வெளியே பார்க்க… அப்படியே ஆணி அடித்தாற் போல நின்றாள்…


கணவன் குரலைக் கேட்ட வேகத்தில்… எதையும் யோசிக்காமல் வெளியே வந்து விட்டிருந்தாள்… ஆனால் இப்போதுதான் நிதர்சனத்திற்கு வந்திருந்தாள்…


வெளியே அப்படி ஒரு கும்மிருட்டு… தெருவிளக்குகள் கூட இல்லை… வீடுகளில் தடையில்லா மின்சாரம் சாத்தியமாகி இருக்க… மின்சாரம் இல்லை என்பதே அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது.. அவள் வீட்டின் வாசல் விளக்கு சில அடி தூரம் மட்டுமே அவளுக்கு துணை புரியும்…


என்ன செய்வது… வேறு வழியில்லை… கணவனைத்தான் இங்கே அழைக்க வேண்டும்…


‘திட்டுவானோ… திட்ட மாட்டான்’ என்று ஓரளவு நம்பிக்கை வந்திருக்க… அவனுக்கு அழைத்தவள்….


‘ரகு… இங்க ஒரே இருட்டா இருக்கு… நான் கேட்கிட்ட தான் இருக்கேன்…” என்க… எந்த காதல் கணவனாவது திருமணமான இரண்டாம் நாளே மனைவியுடன் வாக்குவாதம் செய்யும் சரித்திரம் உண்டோ… ராகவ்வும் வழக்கமான காதல் கணவனாக சரித்திரத்தை மாற்றவில்லை… மனைவி சொன்ன அடுத்த சில நிமிடங்களில் அவள் வீட்டின் முன் வந்து நிற்க… அவனைப் பார்த்த உடனே கேட்டின் முன் வந்து நின்று… வேகமாக வாசல் கேட்டில் கை வைக்க… அப்போதுதான் உணர்ந்தாள் சந்தியா… வெளி வாசல் கேட்டின் சாவியை எடுக்காமல் வந்து விட்ட தன் முட்டாள் தனத்தை…


தவறு செய்யவும்… தனித்திறமை வேண்டும் போல்… சந்தியாவுக்கு அன்றுதான் புரிந்தது…


கேட்டின் அந்தப்பக்கமாக நின்றவனிடம்… நிலைமையை சொல்லி… மீண்டும் வீட்டைத் திறந்து சாவியை எடுத்து வரவா என்று கேட்க… அவனோ அதை மறுத்து… கேட் ஏறித் தாண்டி வா என்று சைகை மொழியில் சொல்ல.. இவளுக்கோ மூச்சு திணறியது…


“அடப்பாவி… நான் இவனை சுவர் ஏறி குதிக்கச் சொன்னால்… இவன் நமக்கு திருப்பி அனுப்புறான்” என்று யோசித்தபடி திட்டினாள்தான் தன்னவனை… இருந்தும்… அவன் சொன்னதை தப்பாமல் செய்தாள்… கீ கொடுத்த பொம்மையாக…


மொபைல் , செப்பல் போன்றவற்றை அவனிடம் கடத்தியவள்.. பின்… கேட் ஏறினாள்… ராகவ் வழிகாட்டுதலின் படி…


அந்தப்பக்கமாக மீண்டும் அதே போல் இறங்கப் போக…


ராகவ்வோ… அவளைக் குதிக்கச் சொல்லி.. தன் கைகளை ஏந்தியபடி நிற்க… அவள்தான் அவன் என்ன சொன்னாலும் செய்யும் ராகவ்வின் மனைவி என்ற நிலையில் இருந்தாளே… எவெரெஸ்ட் சிகரத்தில் நின்றிருந்திருந்தால் கூட குதி… நான் இருக்கின்றேன் என கணவன் சொன்னால் அதைக் கூட செய்து விடும் உணர்வின் கட்டுக்குள் இருந்தவளுக்கு… இந்த ஆறடிச் சுவரெல்லாம் எம்மாத்திரம்…


“ஏழு கொண்டலவாடா… குருவாயுரப்பா… நீதான் என்னைக் காப்பத்தனும்” என்றபடியே கண்மூடிக் குதித்த அவளைத் தன் கைகளில் சரியாக தாங்கிப் பிடித்திருந்தான்… அவள் கணவன்…


இவளும் உடனே இறங்கவெல்லாம் முயற்சிக்கவில்லை… வீட்டை விட்டு வெளியே வந்து விட்டோம்… நிம்மதி பெரு மூச்சே…. வந்திருக்க


“ஹப்பா” என்று அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை எல்லாம் விட்டவள்…


“ஹேப்பி பேர்த்டே ரகு” என்று அவனை வாழ்த்தவும் மறக்கவில்லை அந்த ரணகளத்திலும்…. அதன் பின் அவனிடமிருந்து இறங்க எத்தனித்தவளை


“அது என்ன சந்தியா… அடுத்த ஸ்டேட் சாமியை எல்லாம் கூப்பிடுற… நம்ம ஸ்டேட்ல இருக்கிற கடவுள் எல்லாம் விட்டுட்ட… கோவிச்சுக்க போறாங்க பாரு” என்று இவன் அவளை இறக்கி விடாமல் வம்பளக்க…


அவனையே பார்த்தபடி… அவன் மார்பில் விரல் சுட்டி…


“ராகவரகுராம்..” என் முன்னாடி நிற்கும் போது… இந்த ஸ்டேட்ல கடவுளுக்கெல்லாம் நெக்ஸ்ட் ப்ளேஸ் தான்…


சந்தியா என்னவோ குறும்பாக விளையாட்டாகத்தான் சொன்னாள்… முதல் முறை ராகவ்வுக்கு அவள் வார்த்தைகள் விளையாட்டாக… குறும்பாகத் தோன்றவில்லை… தான் அவளுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அவளின் வார்த்தைகள் மூலம் முதன் முதலாக அவனுக்குள் அடி ஆழத்தின் வரை பதியச் செய்ய… அதில் உணர்ச்சி வயப்பட்டவனாக அவளை அணைத்திருந்த கரங்கள் இன்னும் இறுக்கமாக…


திடிரென்ற அவன் கைகளின் இறுக்கம் அதிகமாகி இருக்க


“பாஸ் செப்பல் மாட்டனும்” என்றபடியே இறங்க முயற்சிக்க…


“தூறல் போட்டதுல… ஸ்ட்ரீட் எல்லாம் தண்ணியா இருக்கு சந்தியா... உன் கால் எல்லாம் சேறாகிடும்… பக்கத்தில் தானே கார் இருக்கு” என்று குறும்போடு கண் சிமிட்டியவனிடம்…


முறைத்தவள்…


“அடேங்கப்பா… சேறாகிரும்… என்ன ஒரு நல்ல எண்ணம்… பொண்டாட்டி காலில் சேறு சகதி எல்லாம் படக்கூடாது… ஒரு சின்னக் குழந்தையை… சேத்துல முக்கி முக்கி எடுக்கலாம்… என்ன ட்ரிப்பிள் ஆர்… உங்க நியாயம்” அவன் மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்ட…


சிரித்தவன்…


“அது… குழந்தை இல்லை சகி… யூ நோ… குட்டிப் பிசாசு…” என்ற போதே… அவன் குட்டிப் பிசாசு என்ற வார்த்தைகளில்


“அப்போ இப்போ”


“இது மயக்கு மோகினி பிசாசு” என்று கண் சிமிட்டியபடி ரகசியம் சொன்ன சந்தியாவின் ராகவ் குரலில் ஏனோ கிறக்கம்… அந்த சகியின் ரகுவின் கண்களிலோ அந்த மோகினியின் மேல் வந்த மயக்கம் வந்திருக்க… தன் சீதாவினை தாங்கி இருந்த அந்த ராமனின் கரங்களோ தன்னவளை மட்டுமே இன்னும் இன்னும் அறிய தன் பயணத்தை தொடங்கி இருக்க… சட்டென்று அவன் கரங்களை தட்டிவிட்டு… வேகமாக இறங்கியவளுக்கு…


தேகம் சிலிர்த்து நடுங்கி இருக்க…குளிரிலோ… இல்லை அவளவனின் செய்கையிலா… அவளுக்கே தெரியவில்லை


அதன் பிறகு சந்தியாவோடு சேர்ந்து நடந்தபடி… தான் காரை நிறுத்திய இடத்திற்கு வந்து சேர்ந்தவன்…. அதுவரை எப்படித்தான் பொறுமையாக இருந்தானோ தெரியவில்லை…


சுற்றி முற்றிப் பார்த்தவன்… வேகமாக சந்தியாவை இழுத்து… அவள் என்ன ஏதென்று உணருவதற்கு முன்னரே… தன் இதழ்களைப் பதித்து…. தன் பிரிவுத்துயரை அவளுக்கு காட்டியவன்…. அவளை விட்டபடி…


“ஃபர்ஸ்ட் ஸ்மால் கிஃப்ட் ஃப்ரம் மை வைஃப்… நானே எடுத்துக்கிட்டேன்” என்று அன்றைய தினத்தை ஆரம்பித்தவனுக்கு… அன்றைய தினத்தின் முடிவில் அவளையே பரிசளிக்கவும் வைத்தான் ராகவரகுராமன்….


---

அதன் பின்… இருவருமாக அந்த ஏரியாவிற்கு அருகே இருந்த ஹைவேயில் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்து இருக்க…


அதே நேரம் குகன் சிவாவுக்கு அழைத்ததை அப்போது அவள் அறியவில்லை… சிவாவுக்கு, ராகவ் சந்தியாவின் வீட்டுக்கு இந்த நேரத்தில் வந்தது குழப்பமே… காலையில் ராகவ் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பியது சிவாவுக்கு கூட அதிர்ச்சியே… உண்மையிலேயே ராகவ் சந்தியாவை விரும்பவில்லையோ…பழி வாங்குவதற்குத்தான் திருமணம் செய்தானோ… இப்போது சந்தியாவை எங்கு கூட்டிச் செல்கிறான்… குழப்பம் இன்னும் அதிகமாகி இருக்க… சந்தியாவின் பாதுகாப்புக்காக குகனை அவர்கள் பின் தொடரச் சொன்னவன்… அதன் பின் குகன் அனுப்பிய புகைப்படங்கள் ஒவ்வொன்றாகப் போய்ச் சேர அவற்றையெல்லாம் பார்த்தபின்… சந்தியாவின் கணவனாக ராகவ்வை முழுமையாக நம்ப ஆரம்பித்தது அந்த தினமே..… ராகவ் அருகில் இருக்கும் போது சந்தியாவுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று உறுதி செய்த தினமும் அன்றே… ராகவ் வந்துவிட்டால் சந்தியாவைத் தொடர வேண்டாம் என்று குகனைக் கட்டளையிட்டதும் அன்றே… அதையெல்லாம் சந்தியா அறிவாளோ… அன்றைய புகைப்படங்கள் மட்டுமே கண்களில் தெரிந்தது…


இங்கு பார்த்த புகைப்படங்கள் மூன்றாம் மனிதன் ஒருவன் தங்களை தன் வீட்டுத் தெருமுனையில் இருந்து ஃபாளோ செய்திருக்கின்றான் என்பதை உணர்த்தியது…


இருவருமாக கேக் வாங்கி வெட்டிய போது யாரும் இல்லையென்று இருவரும் அந்நியோன்மயாக நடந்த விதம் ஞாபகத்துக்கு வர.. எல்லாவற்றையும் எல்லாம் புகைப்படமாக வைக்க வில்லை… கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்… இன்னொருவரின் கண்பார்வையில் அவர்களின் அந்தரங்கம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது… அதுதானே அழிக்க முடியாத உண்மை… நினைக்கும் போதே உடல் கூசியது சந்தியாவுக்கு… இருந்தும்… பொது வெளியில்… அந்த சாலையோரத்தில் யாரும் இல்லையென்று என்ன நிச்சயத்தில் இருவரும் தங்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர்… அது தவறுதானே…. அந்த நேரத்தில் உணர்வுகள் போட்ட ஆட்டத்தில் அனைத்தையும் மறந்து விட்டோமா… அவமானத்தில் உதட்டை அழுந்தக் கடித்தவளின் நினைவுகள் மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தது…




2,370 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

© 2020 by PraveenaNovels
bottom of page