top of page

சந்திக்க வருவாயோ?-42

அத்தியாயம் 42

/* உன்னை அள்ளி ஏந்தியே

ஒரு யுகம் போகவா.

தலைமுதல் கால்வரை

பணிவிடை பார்க்கவா.

லாளி லாளி

நானும் தூளி தூளி.

லாளி லாளி நீ

என் தூளி தூளி.

காலை அணைப்பின் வாசமும்

காதில் கிருங்கும் சுவாசமும்

சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே.*/

இன்றைய கால கட்டத்தில் விவாகரத்து என்பதெல்லாம் சாதாரண ஒன்றுதான்… வினாடிக்கு ஆயிரம் ப்ரேக் அப்ஸ், தடுக்கி விழுந்தால் நூறு விவாகரத்து… சுற்றிப் பார்த்தால் லிவ் இங் டூ கெதர் வாழ்க்கை முறை… இதெல்லாம் பார்க்காத கேட்காத… வீட்டுக்குள் இருக்கும் பெண் அல்ல அவள்…

இப்போது அப்படி கூட பெண்களைச் சொல்ல முடியாது… வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கே… உலகம் விரல் நுனியில் இருக்க…

ஏன் சந்தியா திகைக்க வேண்டும்… ஏன் இவ்வளவு அதிர்ச்சி… நிகழ்வுகள் தன் வட்டத்திற்கு வெளியே எனும் போது அது செய்தி… வட்டதிற்குள் எனும் போது… மனம் ஸ்தம்பிக்கின்றது… விசித்திரமான மனித மனத்தின் அளவீடுகள்…

அதே நிலைதான் சந்தியாவுக்கும்…

விவாகரத்து… ஒற்றை வார்த்தைதான்… ஆனால் அந்த வார்த்தை கடும் வேதனையைக் கொண்டு வந்தது…

இதே வார்த்தைகள்தான் அன்று தன் அன்னையிடமிருந்து வந்தது…

இங்கோ விவாகரத்து கேட்ட தன் மனைவியிடம் சந்தோஷ் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்….

வசந்திக்கோ… இந்த வார்த்தைகளுக்கான அவள் கணவனின் பதில்… வார்த்தைகளினால் அல்ல… கைகளினால் கிடைத்தது…

கண்கள் கசிந்தே விட்டன சந்தியாவுக்கு… தன் அண்ணனின் நிலையைப் பார்த்து…

தவறு செய்து விட்டான்தான் மன்னிப்பு கிடையாதா அவனுக்கு… ’ரூல்ஸ் ராமானுஜி’… விளையாட்டுத்தனமாக வைத்த பெயர்தான்… தனக்கான கொள்கைகள்… தனக்கான கோட்பாடுகள்… என யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் அவளின் நடவடிக்கைகள் பிடிக்காததினால் தனக்கு விபரம் தெரியாத வயதில் எரிச்சலில் வைத்த பெயர்… ஆனால் இப்போது மிருணாளினியை நினைக்கும் போதெல்லாம்… பெண்ணாக கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும்… எல்லோராலும் இப்படி இருக்க முடியாது என்று… ஆனால் அந்த குணம் தன் அண்ணனுக்கே வேதனையாக இருக்கும் போது…

இப்போதும் மிருணாளினியின் மேல் கோபம் எல்லாம் இல்லை சந்தியாவுக்கு… ஆனால் தன் அண்ணன் வாழ்க்கையை நினைத்து பயம் தான் வந்திருந்தது சந்தியாவுக்கு…

சந்தோஷுக்கு கோபம் எந்த அளவுக்கு வரும் என்று இவளுக்கும் தெரியும்… தன் அப்பாவோடு தன் அண்ணன் பேசினாலே கடும் விவாதத்தில் தான் முடியும்… ஒரு கட்டத்தில் இருவருமே அவரவர் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு விட… பெரிதாக சலசலப்புகள் இப்போது இல்லை அதுதான் உண்மை… அதிலும் சந்தோஷ் எப்போது குடும்பத்தில் தலையெடுக்க ஆரம்பித்தானோ அப்போதிலிருந்தே… இவள் தந்தை தன் ஆளுமையையும் அதிகாரத்தையும் மிக அதிக அளவில் குறைத்திருக்க… எப்போதாவது தான் சந்தியாவும் வசந்தியும் மாட்டுவார்கள்… தன்னிடமும் தன் அன்னையிடமும் அவர் அதிகாரத்தின் எல்லைகள் வரம்பு மீறும் போது போது சந்தோஷ் அடக்கிவிடுவான்… சந்தோஷ் ஆண்பிள்ளை என்ற காரணத்தினாலேயே தன் தந்தை அடங்கிப்போகிறார் என்று இவளாகவே நினைத்துக் கொள்வாள்…

அப்படிப்பட்ட தன் அண்ணன் மிருணாளினியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான்… அவன் வாழ்க்கைக்காக மனைவியிடம் கையேந்தி நிற்கின்றானா…

ஸ்தம்பித்தவளாகி சந்தோஷையே பார்த்துக் கொண்டிருந்தவளை…

சந்தியாவைப் பார்த்த ராகவ்வுக்கோ.. இவள் ஓவராக ரியாக்ட் செய்கிறாளோ இல்லை ஓவராக தன்னைக் குழப்பிக் கொள்கிறாளோ என்று தோன்ற… அவளது ஓய்ந்த தோற்றம் இன்னொன்றையும் அவனுக்குள் சில விசயங்களையும் சொல்லாமல் சொல்லியது…

இந்த அளவுக்கு அவள் எமோஷனல் ப்ளாக் ஆகின்றாள் என்றால்… சந்தோஷ் மிருணாளினி விசயத்தோடு… தன் அன்னையையும் சேர்த்து நினைக்கின்றாள்..

இந்த சில தினங்களிலேயே அவனுக்கு இது நன்றாகத் தெரிந்தது… அந்த எண்ணம் தந்த விளைவு… கடுப்பான குரலில்

“சந்தியா” என்று அதட்டி அழைக்க… திரும்பினாள் தானே அவள்…

சந்தோஷ் மிருணாளினிதான் சுற்றம் மறந்து இருக்கிறார்கள் என்றால்.. இவளுமா…

“ஓ காட்”… வாய்க்குள்ளேயே முணங்கிக் கொண்டவனுக்கு…

”அவள் தன்னைப் பார்த்து மயங்கி நின்றிருந்தால் கூட பரவாயில்லை…” தன்னைத் தானே நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது ராகவ்வால்…

பிறகென்ன… அவள் கைகளைப் பிடித்து இழுத்தபடி வந்தவன்… அவன் அலுவலகத்தின் மற்றொரு அறைக்குள் அழைத்து வந்திருக்க… அந்த அறையின் அமைப்பெல்லாம் அவளின் கவனத்தை ஈர்க்கவில்லை… அப்படியே அமர்ந்திருந்தாள்… கவலையோடும் வேதனையோடும்

நொடிகள் பல கடந்தன… நொடிகள் நிமிடங்கள் ஆக… சில நிமிடங்களும் கடந்தன… பல நிமிடங்கள் கடக்க…. பல்லைக் கடித்தவன்… சந்தியாவின் திருவாளனே…

அமைதியாகவே அமர்ந்திருந்தாள் சந்தியா…. ராகவ்வைப் பார்த்த சந்தோஷம் கூட அவள் முகத்தில் இல்லை… எண்ணமெங்கும் தன் அண்ணனைப் பற்றித்தான்…

இப்போது… நிமிடங்களை மணித்துளியாக கடக்க விட ராகவ் என்ன பைத்தியக்காரனா!!!!….

அவளைப் பார்த்தபடியே அருகிலிருந்த இசைக்கருவியின் பட்டனைத் தட்டி விட… அடுத்த நொடி… அறை எங்கும் அதிரடியான காதைக் கிழிக்கும் சத்தம்… சந்தியாவின் காதில் வந்து விழுந்த சத்தம்… இல்லை இல்லை அந்த மேற்கத்திய இசையின் பல்வேறு வாத்தியங்களின் சத்தங்களின் அலைவரிசை… சந்தியாவின் நினைவலைகளின் அலைவரிசையை அறுத்து அவளது மூளையை வேறு திசைக்கு திருப்ப…

வேகமாக ராகவ்வை நிமிர்ந்து பார்க்க… அவன் தான் இவளையே பார்த்துக் கொண்டிருந்தானே… தன்னவளை ரசிக்கும் நிமிடங்களை விடுவானா… அனுபவித்து ரசித்து கிறங்கி பார்த்துக் கொண்டிருந்தான்… கோபமோ… தாபமோ…. உன்னிடம் நான் சரணடைந்து விட்டேன்… என்ற உச்சக்கட்ட சரணடைதல்…. நிலைக்கு என்றோ மாறிப் போயிருந்தான்….

இப்போதும் அவன் பார்வை சந்தியாவிடமே சரணடைந்திருக்க… இவள் பார்த்த உடனேயே… புருவம் உயர்த்தி… “என்ன” என்று கண்களாலேயே கேட்க…

காதுகளை மூடிக்கொண்டவள்…

“ரகு... ப்ளீஸ்… அந்த மியுஸிக்க ஆஃப் பண்ணுங்க… காதெல்லாம் வலிக்குது…. “ கிட்டத்தட்ட கத்தினாள் என்றே சொல்ல வேண்டும்..

சந்தியா… மெல்லிசையின் பெரும் ரசிகை… ராகவ் அதிரடி துள்ளல் இசைகளின் வெறியன்… இவள் நிச்சய தார்த்த விழாவில் பாடிய பாடலை வீடியோவில் பார்த்து… இவள் பாடுகிறாளே என்று பார்த்து வைத்தான்…

இந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கேட்டாலே காத தூரம் ஓடுபவள்…

தெரிந்து கொண்டே ராகவ் கல்மிசப் புன்னகையோடு… பாடலின் சத்தத்தை இன்னும் அதிகமாகக் கூட்ட…

“ரகு…” என்று இன்னும் சத்தமாக இவள் முறைத்த முறைப்பில்… சிரித்தபடியே ஆஃப் செய்ய

“ப்ச்ச்” என்று சலித்தவள்… மீண்டும் அமைதிப் புறாவாக மாறி இருக்க…

விடுவானா இவன்… ராகவ்வின் விரல்கள்… மீண்டும் மியூஸிக் சிஸ்டத்தில்… அதைப் பார்த்த சந்தியாவோ மீண்டும் அலற…

அந்தக் கருவியோ சந்தியாவுக்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் .. தன் எஜமானனின் விரல்களின் ஆணைக்கு அடிமையாக மாறி… மீண்டும் ஒலிக்க… இப்போதும் இசைதான்… ஆனால் தமிழ்ப் பட பாடல்…. தெரிந்த பிடித்த பாடல்…

ராகவ்வை நிமிர்ந்து பார்க்க… அவனின் பார்வைகளோ அந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளையும் பிரதிபலிக்க…

இவளுக்கோ இன்னொரு மிகப்பெரிய சந்தேகம் வந்து தொலைத்தது அப்போது… இப்படி சத்தம் வைத்திருக்கிறானே… வெளியில் கேட்காதா… முதலில் கூட ஏதோ ஆங்கிலப் பாடல்…

கடவுளே… என்று தலையில் கை வைத்தவள்….

“வெளிய கேட்காதா…”

ஒலித்த பாடல் வரிகளுக்கிடையே… அந்த இசைக்கிடையே தான் இருந்த இடத்தில் இருந்தே கேட்க…. அண்ணனின் வாழ்க்கை குறித்த கவலைகள் எல்லாம் எங்கோ போய்விட… இப்போது இந்த கவலைதான் பெருங்கவலையாக மாறி இருக்க…

”கேட்கலை… என்ன சொல்ற… என்கிட்ட இங்க வந்து சொல்லு” என்றான்… கைகளை கட்டியபடி அவளைவிட்டு பத்தடி தள்ளி சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான்… தன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடியே

அவனைப் பார்த்தபடியே

“ப்ச்ச்” இப்போது இந்த வார்த்தையை கடுப்பாக தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்… வேகமாக அவன் அருகே வர…

“லூசாடா நீ.. இப்படி சத்தமா… அதை விட… இந்த சாங்” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே… அவன் சந்தியாவின் இடையில் கை கொடுத்து சட்டென்று அதிரடியாக இழுக்க… அதை எதிர்பார்க்காத சந்தியா… அவனிடமே வேகமாக மோதி நிற்க… அவளைச் சரிப்படுத்தி… தனக்கு எல்லா வகையிலும் வசதியாக வாகாக நிற்க வைத்துக் கொண்டவன்…. தனக்கும் தன்னவளுக்குமான இடைவெளிக்கு தற்காலிகமாக வேலைநிறுத்தம் கொடுத்து… மாயமாக மறையச் செய்து… ரதியின் இல்லை இல்லை தன் சகியின் மன்மதனாக… மாறி இருந்தான் ரகுராகவராமன்

பாடல் ஓடிக் கொண்டிருந்தது… வட இந்திய பாடகரின் குரலில்… தமிழ் வார்த்தைகள் தாறுமாறாக இருந்தாலும்… கேட்ட அந்த குரலோ தேனில் குழைந்திருக்க… அவள் நெஞ்சம் இப்படி நினைக்கும் போதே… கண்கள் ராகவ்வைப் பார்க்கச் சொல்ல… அவள் விழிகளும் ராகவ்வின் பார்வையை சந்திக்க.. அது ஆயிரம் ரகசியம் சொல்லியது…

”ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்

ஏய் ஏய் ஏய் நேசிப்பாயா

உண்மை சொன்னால், நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா”

பாடல் வரிகள்… ஓடிக் கொண்டே இருக்க…

இவளுக்கோ தொண்டைக் குழிக்குள் மெல்ல மெல்ல ஏதோ தடை… ராகவ்வின் கிறங்கிய பார்வையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டாலும்… இவளை ரசித்து விழுங்கிக் கொண்டிருந்த அவனது பார்வைக் கடலில்…. அதன் பேரலையில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்க…

’ராகவரகுராம்’… இவளது அழகென்னும் தேக புத்தகத்தின் ஒரே ரசிகன்… அவன் மட்டுமே ரசிகன்… வெறித்தனமான வேட்க்கையான… சந்தியா என்னும் அழகிய புத்தகத்தின் அத்தியாயங்களை தனக்கேற்றாவாறு மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளும் மிதப்பான… தனித்துவமான…. கர்வமான ரசிகன்…

அந்த தனித்துவமான ரசிகன் ரகசியம் சொன்னான் தன் துணையின் காதில்…. பெரும் சத்ததிலும் காதில் ரகசியம் சொன்னான் அந்தக் கள்வன்…

“இது சவுண்ட் ப்ரூஃப் ரூம் சகி பேபி” பாடலில் ஒலித்த குரலை விட… இப்போது இவனது குரல் குழைவாக விழ…

“ஓ…” வார்த்தைகள்… இல்லை இல்லை ஒரு எழுத்து

இந்த ஒரு எழுத்து மட்டுமே சந்தியாவின் தொண்டைச் சுழலுக்குள் சிக்கி தவித்து… சின்னாபின்னமாகி…எப்படியோ உயிர் தப்பித்து வெளியே வர… மெய் மறந்து பார்த்தாள்… தன்னவனை…

சகியின் ரசிகனோ… சகியின் மன்மதனோ… இப்போது தன் சகியின் பித்தனாகிப் போனான்…. இந்த ஒற்றை எழுத்துக்கே

“பெண்கள் மேலே மையல் உண்டு

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

நீ முத்த பார்வை பார்க்கும் போது

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்..!"

இடை தழுவிய கரங்கள்… அவன் எந்த அளவுக்கு ரசிகன்.. பித்தன் என்பதை அவளுக்கு காட்டிக் கொண்டிருக்க…

”ரகு” சந்தியா உச்சரித்த இந்த ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் தடையில்லை போல… சிந்தாமல் சிதறாமல் வெளியே வந்தது… இந்த மோன நிலையிலும்…

”நீதானே மழை மேகம் எனக்கு

என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு

வா சோகம் இனி நமக்கெதுக்கு

யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு”

கள்ளச் சிரிப்போடு… சந்தியாவின் நெற்றியில் ராகவ் வைத்த இதழ் முத்தத்திலேயே இவள் முற்றிலுமாக தன்னைத் தொலைத்திருக்க… அந்த நொடி ரசிகன் கள்வனாகிப் போன ஷணம்…

”ரகு” என்றபடியே இன்னும் அதிகமாக அவனிடமே சரணடைந்திருந்தாள் சந்தியா… கள்வன் களவாடப் போகும் முன் தானே அவனிடம் அவளை ஒப்படைக்க ஆயத்தமானாள்.. கள்வனை காவலனாக மாற்றும் தாம்பத்தியத்தின் சூட்சுமம்… சந்தியாவுக்குள் எப்போது வந்தது… கள்வனே கற்றுக் கொடுத்தானோ… அவர்கள் அறிந்த ரகசியம்… உலகம் அறியாத பராபரம்…

”என் வானம் என் வசத்தில் உண்டு

என் பூமி என் வசத்தில் இல்லை”

”உன் குறைகள் நான் அறியவில்லை

நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை”

பாடல் வரிகளா… இவன் கரங்களின் திருவிளையாடலோ… தன் உணர்வோடே தன்னை தொலைத்து… முற்றிலும் அவன் வசம் தொலைந்தவளாக…

“என்னாச்சுடா… இன்னைக்கு உனக்கு” அவன் நெஞ்சத்தில்… உரிமையாக உரசிய இதழ்கள்… அவனில் தொலைய ஆதாரங்களைத் தேடி விசாரணையை ஆரம்பிக்க…

“எஸ்டெர்டே யூ ஃபெல்டு… டுடே ஐ ஃபீலு” கொஞ்சிய குரலில்… அந்த ஆங்கில உச்சரிப்பில்யே நக்கல் டன் டன்னாக வழிந்தது …

அந்த நக்கல் தெரிந்து … அதை உணர்ந்து வந்த கோபத்தில் இவள் நிதானத்திற்கு வர முயல… அவன் வசம் இருந்த அவள் தேகமோ அவளிடம் முரண்டு பிடித்தது… இவள் கட்டளைக்கு இணங்காமல்..

குறைந்த பட்சம் தன் கோபக் குரலாவது தனக்கு உதவி செய்யுமா… உயர்த்தினாள் குரலை

“எனக்கு இன்னைக்கு ஒரு ஃபீலும் வரலை மண்ணாங்கட்டியும் வரல… விடுடா” அந்தோ பரிதாபம்… சொன்ன வார்த்தைகளுக்கும்… அது வெளிவந்த விதத்திற்கும் சந்தியாதான் அங்கு கேலிப் பொருளாக மாறியிருந்தாள்…

அதில் ராகவோ… இன்னும் அதிகமாகச் சிரித்தபடி…

“சொன்னாங்க சொன்னாங்க… உங்களுக்கு ஃபீல் இல்லைனு…” என்ற போதே….

”யாருடா”

அவள் முன் தன் கைகளை அசைத்துக் காட்ட… முறைத்தாள்…

“உன்னைத் தொட்டுட்டு இருக்கிற… என் கை சொல்லிருச்சு பேபி… உங்களுக்கு… ஃபீலிங் இருக்கா இல்லையான்னு” உல்லாசமாக

வேகமாக அவன் கையைத் தட்டி விட்டவள்…

“நீ என்னைத் தொட்டுட்டு இருக்கியாடா…. ராஸ்கல்… தமிழ் தெரியுமா உனக்கு” என்றாள் ஏதோ ஒரு வேகத்தில்….

அதே வேகத்தில் அவளின் இதழை இவனிடம் சரணடைய வைத்திருக்க… தமிழாவது… ஆங்கிலாமாவது… காதல் உலகத்தின் ஒரே மொழியான மௌனத்தின் விளக்கவுரைகள்… முத்ததின் வாயிலாக இருவருக்குமிடையிலும் பரிமாறிப்பட்டுக் கொண்டே இருக்க… அந்த மொழியின் வார்த்தை பிராவாகங்களோ முடிவுரை இல்லாத அகராதி ஆகி இருக்க… அதன் அர்த்தங்களைத் தேடும் தேடல்களும் முடிவுரை இல்லாமல் போய்க் கொண்டிருக்க… அதே நேரம் பாடல் முடியவும் சரியாக இருக்க… ராகவ்வின் ஒரு கரமோ கர்ம சிரத்தையாக… மனைவியைத் தழுவியபடி இருக்க… இன்னொரு கரமோ அடுத்த பாடலைப்பாடப் போன அந்த இயந்திரத்தின் மூச்சை நிறுத்த… இவளோ தன் மூச்சுக் காற்றுக்கு போராடி அவனை விட்டு விலக…

விட்டு விலகியவளை விலக்கி… அவளின் மூச்சுக் காற்றுக்கு அனுமதி அளித்து… மீண்டும் அணைத்து இதழை நோக்கி குனிய…

“இவனுக்கு என்ன ஆச்சு…” சந்தியாவின் மூளை யோசிக்கச் செல்ல

”குழப்பத்திலேயே நீ இரு… ” என்று அவள் இதழ்கள் அவளைக் கண்டு கொள்ளாமல் அவனுக்கு வசமாகத் தயாராக…

புன்னகையா அது… நக்கலா… பெருமிதமா… வசியமா… என்ன இருந்தது என்று விளங்க முடியாத அவனின் சிரிப்பில்… இவளோ அவனையே பார்த்தபடி இருக்க…

“தமிழ் தெரியுமாவா… “ என்றபடியே

”பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...”

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு

என்றவன் நிறுத்தி…

“இப்போ ஃபில் பண்ணிக்கோ… சுத்த தமிழ் வார்த்தை உனக்கு எடுத்துக் கொடுத்திருக்கேன்… சகிபேபி… மேவும் விரல் நானுனக்கு” என்றவனை விழி விரித்து பார்த்து நின்றவள்… சந்தியாவேதான்

சில நிமிடங்களுக்கு முன் சந்தோஷின் தங்கையாக நின்றிருந்தவளை… ஒரேயடியாக வீழ்த்தி திருமதி ராகவரகுராமாக மாற்றி வெற்றிக் களிப்புடன் அவளைத் தள்ளி நிறுத்தி தன் தலைக் கேசத்தை சரி செய்து… அவளையும் சரி செய்து… அவளை பார்த்தான்….

வேண்டுமென்றே வீழ்த்தினான் தன் மனைவியை…. ஆம்…

இருவருக்கும் தனிமை கிடைப்பதே அரிது… அதிலும் சந்தோஷ் மிருணாளினி நினைவில் மொத்த சோகத்தையும் சந்தியா குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்க… மிருணாளினியின் அண்ணனாக இருந்தபோதிலும்… சந்தியாவின் கணவனாக உள்ளுக்குள் அனலடித்ததுதான்…

இருந்தும்… கிடைக்கும் கொஞ்சமே கொஞ்சம் நிமிடத்தில் கொஞ்சுவது விவேகமா… கோபப்படுவது விவேகமா…

மனதில் வீசிய அனலுக்கு அணை போட்டவனாக… கணவனாக திட்டங்களை செயல்படுத்த… சந்தியாவும் வீழ்ந்தாள் அவன் வலையில்….

ஆக மொத்தமாக சந்தியாவை தன் வசப்படுத்தி இருக்க…

இப்போது தன்னை விட்டுத் தள்ளி நின்ற கணவனைப் பார்த்து யோசனையாக புருவம் சுருக்க…

"என்ன பார்க்கிற… கிடைக்கிற தனிமைல உன்னை வச்சு வேடிக்கை பார்க்கிற அளவுக்கு நான் நல்லவனும் இல்லை… அதே நேரம் கிடைக்கிற இடத்தில் எல்லாம் நான் உன் புருசன்னு காட்ற கெட்டவனும் இல்லை.... " என்று வசனம் பேசியவன்.... கண்களை சிமிட்ட்ட…

இவளோ அவன் வார்த்தைகளில் அவனிடம் மேலும் அதிகமாக சாய்ந்தபடி இன்னும் அமைதியாகி விட…

”அடேய் இவளுக்கு கொஞ்சம் கேப் கொடுத்தால்… ஒண்ணு வசந்தி மகளாகிடறா… இல்லை சந்தோஷ்க்கு தங்கை ஆகிடறா…?” கணவனாக மனம் அலற… இருந்தும்

இப்போது பேச்சு வார்த்தையை தொடங்கினான்….

“என்னாச்சு… மேடம்… இவ்ளோ அமைதி... ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் தவணைமுறையில் பார்க்கிற வரம் வாங்கிட்டு வந்திருக்கோம்... அது புரியுதா இல்லையா உனக்கு…. இன்னைக்கு ஃப்ரீ ஆஃபர் மாதிரி எக்ஸ்ட்ரா டைம் கெடச்சுருக்கு…. ரெஸ்பான்ஸ் இவ்ளோதானா மேடம்… பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்க… நாங்களும் பேர் வாங்கனும்ல…”

ராகவ்வின் முழுக்க முழுக்க நக்கலான சீண்டலில் முழுவதுமாக நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள்…

“இங்க என்ன நடந்துட்டு இருக்கு… நீ என்னடான்னா ஜாலியா டையலாக் பேசிட்டு இருக்க… அதை விடு… இப்போ நீ பெர்ஃபார்மென்ஸ் பண்ணலை… இப்போ பண்ணதுக்கு பேர் என்னடா… மனசாட்சியே இல்லாமல் பேசுறடா…” என்று அவனை முறைத்தபடி சற்றுத் தள்ளி விட்டுச் சென்றவளாக … இப்போது இன்னும் அதிகமாக முறைத்தபடி…

“ஹா ஹா… உன் ரகு மாம்ஸோட பெர்ஃபார்மென்ஸ் சரி இல்லை போல… தள்ளிப் போய்ட்ட” எனும் போதே

“அது தெரிஞ்ச விசயம் தானே…” சந்தியாவும் விடாமல் அவனை வாற…

”அடிப்பாவி…” கிட்டத்தட்ட ராகவ் அலறினான் என்றே சொல்ல வேண்டும்

”நீ இந்த மாதிரி பேசிப் பேசியே என்னை காமெடி பீஸாக்கிறடி… உண்மையிலேயெ நான்லாம் ஹீரோவான்னு எனக்கே சந்தேகம் வருது… அதுவும் அந்த நிரஞ்சனாவோட உன்னை ஹோட்டல்ல பார்த்தேன்ல… ஹப்பா!!! அப்போ அவ என்னை நக்கலா பார்த்த பார்வை இருக்கே… நீ என்னை கேவலமா… காமெடி பீஸ் மாதிரியே சொல்லி சீன் ஓட்டி வச்சுருக்கேன்னு அந்தப் பார்வையே சொல்லுச்சு…

”இந்த லூசு, அந்த காதம்பரிக்கிட்ட என்னை லூசாக்கின மாதிரி… இவகிட்டயும் லூசாக்கிறுவாளோனுதான்… லிஃப்ட்ல உங்க கூட வராமல் எஸ்ஸாகிட்டேன் தெரியுமா” பரிதாபமாகச் சொல்ல.. சந்தியாவுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி…

“நான் லூசாடா உனக்கு” என்று இடுப்பில் கை வைத்தபடி முறைக்க

”என்னையும் லூசுன்னு சொல்லிக்கிட்டேனே… அதையும் நோக்குங்க மேடம்” என்றபடி… இப்போது

”அதெல்லாம் விடு… இப்போ இடையில உங்க அண்ணன் வேற… கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தவன்.. திடீர்னு ஹீரோவா…. ஆண்டி ஹீரோவானு டவுட் வருகிற மாதிரி ப்ரோமோஷன் வாங்கிட்டு ஃபுல் பெர்ஃபார்மென்ஸ்ல பின்னி பெடலெடுத்துட்டு இருக்கான்… பயம் வருதுள்ள நமக்கும்” என்று சிரிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

சுற்றி முற்றி பார்த்தாள் சந்தியா…

“சந்தியா நோ வயலென்ஸ்…” இவனும் உஷாராக…

“என் அண்ணன் என்ன பாடுபட்டுட்டு இருக்கான்… இதுல உனக்கு பெர்ஃபார்மன்ஸ் பண்ண முடியலேன்னு நக்கல் வேறயா உனக்கு..” தேடியவள்… அங்கிருந்த பொருட்களில் கைக்கு அடங்குமாறு இருந்த அவார்ட் ட்ராஃபியை கையில் எடுத்து அவன் மேல் தூக்கி எறிபவளைப் போல பாவனை செய்து மிரட்டியவள்… பாவம் பார்த்து மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்க…

“உண்மை சந்தியா… அமரக் காதல்ன்றானுங்க… ரோமியோ ஜூலியட் ரானுங்க…” என்ற போதே…

“உனக்கு பொறாமைடா… எங்க அண்ணனப் பார்த்து… அவன் காதலைப் பார்த்து கத்துக்கோ… விட்டா பொண்டாட்டி கால்ல விழுந்திருப்பான்.. விழுந்திருப்பான் என்ன.. விழுந்துட்டான்… நீ என்னடான்னா… எவெரெஸ்ட்னுன்ற… ஆணியே புடுங்க வேண்டாம்னுன்ற… நான் இந்த அளவுக்கு நல்லவன்ற… அந்த அளவுக்கு கெட்டவன் இல்லைன்ற..” என்று இவளும் முழுவதுமாக உருமாறியிருந்தாள்…. திருமதி ராகவரகுராமாக….

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… என்பதற்கேற்ப… ராகவ்வும் அதை நோட்டமிட்டபடியே…..

“அது போன மாசம் பேபி… இது இந்த மாசம்… என் பொண்டாட்டியே ” என்ற போதே

“அதேதான்… இங்கயும்… அதாவது அது போன மாசம் பேபி… இது இந்த மாசம்… பக்கத்தில வந்த கொன்னுருவேன்” என்று சிலிர்த்துக்கொண்டு நிற்க…

“சகி பேபி.. பொய் சொல்ற… இப்போ பார்த்தேனே… மயங்கி கிறங்கி நின்னதெல்லாம்…. அது பொய்யா… அப்போ விடு… மறுபடியும் ஸ்டார்ட் பண்ணலாம்… எந்த பாட்டு போடலாம்…. ரகு மாம்ஸுக்கும் பெர்பார்மன்ஸ் பண்ண தோதா டைலாக் சேஞ்ச் பண்றாடோய் அவன் பொண்டாட்டி… ” அவனது தொணியில் சந்தியாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது…. அந்த அளவுக்கு ரகு உல்லாசமாக பேசிக்கொண்டிருக்க… இவளும் விடவில்லை….

”ரகு மாம்ஸ்… எனக்கு ஒரு பெரிய டவுட்… “ என்று அப்பாவியாக இமை கொட்ட…

”இதோ… உன் மாம்ஸ் வந்துட்டேன்…” அதே வினாடியில் அவள் பக்கம் வர… இவளோ பயப்படுவது போல போக்கு காட்டி எட்டி நிற்க… அவள் அருகில் இருந்த நாற்காலியில் இவன் அமர்ந்தபடி

“அம்மையாரின் சந்தேகம் என்னவோ” …

“அது என்ன அமரக் காதல்… காவியக் காதல்”

“அது நமக்கெதுக்கு…” என்று இவன் சலிப்பாகச் சொல்ல…

“ப்ச்ச் சொல்லு ரகு மாம்ஸ்” என்றவளின் சிணுங்கலில்… அவளருகில் அமர்ந்திருந்த ராகவ்வுக்கு… ஜிவ்வென்றிருந்ததுதான்… இருக்கும் இடம் உணர்ந்து அடங்கியவன்… அடக்கியவன்…

“பக்கம் வா… பதில் கிடைக்கும்”

“ஆ” என்று இப்போது வாய் பிளந்தவள் சந்தியாதான்

“என்ன ரகு மாம்சு ஒரு மார்க்கமா பேசுற… திடீர்னு அதுவும் இந்த டைம்ல என்னைப் பார்த்ததில ஏதாவது ஆகிருச்சா…” சந்தேகமாகப் பார்த்தவள் அதை வாய் விட்டும் கேட்டு விட…

“ஆன்சர் வேணுமா பக்கத்தில வா… இந்த மாடுலேஷன் ஓகேவா…” என்றான் கொஞ்சம் கடுப்பாக…

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை….” என்ற படியே அருகே வந்தாள் தான் … ஆனாலும் சற்று தள்ளி நிற்க…

”மறுபடியும் என்னை ஆனந்தமா பேச வைக்காதடி…” என்ற போதே சந்தியா திருதிருவென்று முழிக்க ஆரம்பிக்க… சிரிப்பை கன்னக்கதுப்பில் அடக்கியபடியே… அவளை தன் புறம் இழுத்து… தன் மடியில் அமர்த்தி கொள்ள…. சந்தியாவும் பிடிவாதம் பிடிக்க வில்லை… ஆனால் மடியில் அமர்ந்த பின்னால்…

“அமரக் காதல் காவியக் காதல் அது என்னன்னு தெரியனும்… அவ்வளவுதானே…”

“ஹ்ம்ம்ம்…” அப்பாவியாக தலையாட்ட…

“இப்போ உன் புருசன் ரகு இருக்கான்ல… அவன்கிட்ட இருந்தே ஆரம்பிக்கலாமா… அவன நீ காவியக் காதலனா மாத்திருக்கலாம்… சான்ஸ விட்டுட்ட… ப்ச்ச் விடு… ஆனால் உன்னால இனி அது முடியாது…”

“ஏன்… எனக்காக நீ ஒண்ணும் பண்ண மாட்டியா… இல்லை ஒண்ணும் பண்ணப் போறதில்லையா” கேவலமாக பார்வை பார்த்து வைக்க

”நோ பேபி… ரொமான்ஸ் லுக்லாம் வேண்டாம்… உன் மாம்ஸுக்கு மூடு மாறிரும்.. ஆனால் என் சகிக்காக பண்ணாம வேற யாருக்காக பண்ணப் போகிறேன்… அந்த கதையை விடு… மேட்டருக்கு வா… ஆப்ஷன்ஸ் உன்கிட்ட இருந்தது… நீதான் அதைலாம் யூஸ் பண்ணாம என்னை நார்மல் பெர்சனா ஆக்கிட்ட” சோகமாக நீட்டி முழங்க

முறைத்தாள் சந்தியா

“முறைக்காத சகி பேபி… சிம்பிள்… நீதான் என் பொண்டாட்டியா வரப் போறேன்னு தெரியாமல்… முன் ஜென்மத்தில… சில பல சம்பவங்கள் பண்ணி வச்சிருந்தேன்… அது உனக்கும் தெரியும்ல”

வாயிலேயே கை வைத்து விட்டாள்…. சந்தியா “ஆவென்று”

“அடப்பாவி… 11 வருசத்துக்கு முன்னாலே நடந்தது முன் ஜென்மமா உனக்கு…”

“அது முக்கியமா அதை விடு…. ஆனால் நீ அதெல்லாம் மறந்துட்டு என்னை ஏத்துக்கிட்ட பாரு… அங்க உன் ரகு மாம்ஸுக்கு நீ பெர்பார்மன்ஸ் பண்ண சான்ஸ் கொடுக்கலை… “ போலியாக வருத்தப்பட

இவளோ புரியாமல் விழிக்க…

“புரியலை… தங்களுக்கு முன்னாடியே… இன்னொருத்திய ப்ரப்போஸ் பண்ணியவன்னு என்னை வச்சு செஞ்சுருந்தீங்கன்னா… ” என்ற போதே இவள் விழுந்து விழுந்து சிரிக்க…

அவனும் சிரிப்பை அடக்கியவனாக

“ஆனால் நீ என்ன பண்ணின… அப்படியெல்லாம் வச்சு செய்யாமல்.. என்னை ஏத்துக்கிட்ட… சரி அப்போதும் காலம் எனக்கு சம்பவம் பண்ண வசதியா உனக்கு ஆப்பை எடுத்துக் கொடுத்துச்சு… அதாவது மிருணா-சந்தோஷ் ரூபத்தில்… ஆனால் அதெல்லாம் கண்டுக்காம ட்ரிப்பிள் ஆர் ரொமான்ஸ்க்கு அக்செப்ட் பண்ணி ‘குவாட்ரிப்பில் ஆர்’ ஆ மாத்திட்ட” கண் சிமிட்டி… சொல்ல..

”ரகு… ப்ளீஸ் ரகு… முடியலை ரகு…. அடங்குறியா“ கொஞ்சம் வெட்கம்… கொஞ்சம் நாணம்… கலந்த கலவையாக மாறி சந்தியா சிரிக்க… அந்த சிரிப்பைக் கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தான் ராகவ்….

“இவள் என்னவள்… இவள் எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருக்க வேண்டும்… இதே போல என்றும் எப்போதும்….” ராகவ் தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது திடீர் அமைதியில் இவளும் நோக்க…

மூணாவது ஆப்ஷன்…

“உன்னை நினைத்து தெருத் தெருவா அலையனும்… உன் அண்ணன் அன்னைக்கு வந்து நின்னான்ல… அந்த மாதிரி பிச்சைக்காரனுக்கும் எனக்கும் எழு வித்தியாசம் என்னன்னு கேட்கத் தோணனும்” இப்போது இவள் முகம் சுருங்க…

“ஆஹா… இவள மலை இறக்க… நாம இறங்கி காமெடி பீஸா மாறி… சொன்னதெல்லாம் வேஸ்ட் ஆகிருச்சோ…” என்று யோசித்தவன்…

இருந்தும்…

”நாலாவது ஆப்ஷன்…” என்று இவன் ஆரம்பிக்க…

அவள் வாயை கையில் வைத்து போதும் என்ற சைகையில் முறைக்க…

“இதுதாண்டி.. அமரக் காதலோட ஹைலைட்…” என்ற போதே

“புரிஞ்சுருச்சு… உன் கோனார் நோட்ஸை மூடலாம்…” என்று அவன் வாயிலேயே போட…

”எதை ஆரம்பிச்சாலும் முடிக்கனும்டி… பாதில நிறுத்தக்கூடாது” என்றவன் வார்த்தைகளில் இருந்த கள்ளத்தனத்தைக் கண்டுகொண்டவள்…

”ஏண்டா… என்னடா ஆச்சு… நான் பாவம் இல்லையா… ஒரே நாள்ள எவ்வளவுதான் தாங்குவேன்” இவள் என்னவோ நல்ல பிள்ளையாகத்தான் பேசி வைத்தாள்

“சந்தியா…. ” என்று இப்போது இவன் நல்ல பிள்ளை போல் வாயில் கை வைத்து அப்பாவியாகப் பார்க்க…

தான் சொன்ன வார்த்தைகளை மீண்டும் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தவளாக…

“டேய் உன்னை… .ஹ்ஹூஹூம்…. இது சரி இல்லை.. நீ ஃபுல்லா… சந்திரமுகனா மாறி இருக்க… நான் ஜூட் விடறதுதான்... எனக்கு மரியாதை” என்று எழுந்தவள்… நகரப் போக…

அந்த நாலாவது ஆப்ஷன்…. ராகவன் கேட்க

”தேவையில்ல போடா…” என்றே கதவை நோக்கிப் போக…

“லைலா-மஜ்னு… அம்பிகாபதி-அமராவதி…. ரோமியோ-ஜூலியட்… சலீம்-அனார்கலி… இவங்கள்ளாம் இந்த வரிசைலதான் வர்றாங்க… எப்படினு கேளு”

“நீ ஒரு டேஷும் விளக்க வேண்டாம்” என்றபடியே காதைப் பொத்த

இவனோ இன்னும் சத்தமாக….

“அதாவது… சந்திக்க வருவாயோனு… லவ்வர திஸ் லோகத்தில விட்டுட்டு… நெக்ஸ்ட் லோகத்தில மீட் பண்ண வரச் சொல்லிட்டு…பறந்து போயிருவாங்க

“ஷ்ஷ்ஷ்” கைகளாலேயே பறந்து காட்டுவது போலச் செய்ய

காதுகளை கைகளால் பொத்தி இருந்துதும்… அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அட்சர சுத்தமாக விழ…. கதவைத் திறக்கப் போனவள் அப்படியே நின்று விட்டாள்…

அவள் நின்று விட்டாள் என இவன் இன்னும் உற்சாகமாக

“ஓய்… இந்த ஒரு ஆப்ஷன் மட்டும் தான் எனக்கு விட்டு வச்சுருக்கடி… ”

அவன் சாதரணமாகத்தான் விளையாட்டாகத்தான் சொன்னான்… ஏனோ இவள் மனது அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் மனதினைப் பிசைய….

அது தந்த கனம் தாங்க முடியாமல் கண்களை கலங்க வைத்து விட… அவ்வளவுதான்.. மீண்டும் ராகவ்விடமே வந்தாள்…

“டேய்… அடங்குறியா… இந்த மாதிரிலாம் பேசுன…” என்று கைகளாலேயே நாலு அடி போட்டவள்…

“சந்தியா…. ஏய் ஏய் வலிக்குதுடி…… “ என்றபடியே… என்றபடி அவள் கைகளை தன் கைகளுக்குள் லாவகமாக அடக்கியவன் சந்தியாவைப் பார்க்க…. அவளோ கண்ணீரை மறைக்க… வேகமாக வேறு புறம் திரும்ப..

“ஹேய் லூசி… எதுக்குடி அழற… இதுக்குத்தான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டனா… “ என்று வேகமாக தன் கரங்களுக்குள் அடங்கி இருந்த அவள் கரங்களை விட்டுவிட்டு… தன் கைகளால் அவள் கண்களைத் துடைக்க…

தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் அவனுக்கும் புரிய…

“சாரி.. உன்னை சிரிக்க வைக்கனும்னு ஏதோ ஆரம்பிச்சு… எங்கோ போயிருச்சு… இனி நான் சொல்ல மாட்டேன் போதுமா…”

“ஹ்ம்ம்…” என்று மூக்கை உறுஞ்சியவள்…

“எனக்கு அந்தக் காதல்லாம் வேண்டாம்… இந்த ரகுவோட என் ரகு மாம்ஸோடட காதல் மட்டும் போதும்” அவனிடமே சொல்ல

“அதுக்கு ஒரே கண்டிஷன் தான்… அதாவது இந்த ரகுவோட உன் ரகு மாம்ஸோட லவ் வேணும்னா… நீ சிரிக்கனும்… எப்போதும் சிரிச்சுட்டே இருக்கனும்” என்ற போதே அவன் குரல் மென்மையாக மாறி இருக்க

“நீ எப்போதுமே இப்படி சிரிச்சுட்டே இருக்கனும் சகி பேபி… எனக்காக கூட நீ அழக்கூடாது ” என்றவன்… அவள் ஏதோ பேச வர… அதை விடாமல் தொடர்ந்தான்

“சகி…. ஒண்ண நல்லா புரிஞ்சுக்கோ… சந்தோஷ் மிருணாளினி பற்றி…. அவங்க ரெண்டு பேரும்…. எப்போ சண்டை போடுவாங்க எப்போ ஒண்ணா சேருவாங்கனு அவங்களுக்கே தெரியாது…. இப்போ லெக்சர் கொடுத்தேன்ல… அந்த மாதிரியான அமரக் காதல் அது…. அதனால இவள அவனும் விட மாட்டான்… அவளும் இவன விட மாட்டான்…. இடையில நாமதான் பாவம்… நம்மள ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க… பார்த்தேல்ல…. என்கிட்ட , அப்பா அம்மாட்ட எல்லாம் வேற மாதிரி அடம் பிடிச்சா... ஆனால் சந்தோஷ் கிட்ட அவளோட அடமண்ட் வேற மாதிரி இருக்கு… அதை சந்தோஷ் ஹேண்டில் பண்ணிருவான்னு எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கு….

எனச் சொல்லும் போதே சந்தியாவின் முகம் போன போக்கை உணர்ந்து… இன்னும் அவள் தெளியவில்லை என்பதை உணர்ந்து…. இப்போதைக்கு இவள் புரிந்து கொள்ள மாட்டாள்… விட்டுப் பிடிப்போம் என்று முடிவு செய்தவனாக

“ஓய்…” என்று கிறக்கமாக அவள் காது மடலில் மீண்டும் கவிதை படிக்க ஆரம்பிக்க…

“ப்ச்ச்… ரகு… இந்த ரணகளத்திலயும் உங்களுக்கு குதுகலம் கேட்குதா” என்ற போதே…. அவளுடைய மனநிலையும் மாறி இருக்க….

சிரித்தான் ரகு…

“ரணகளம் ஓகே... குதுகலம் எங்கம்மா… இன்கம்ளீடட் ஃபீல்” என்றவனின் வார்த்தைகளில் உல்லாசம் மட்டுமே இருக்க… முறைத்தவளிடம்…

“தாங்கள் சொன்ன வார்த்தைகளே.. முறைக்கலாமோ… தாங்களை மேவிக் கொண்டிருக்கும் விரல்களுக்கு கடின காலம் அல்லவோ… ” அவன் விரல்களில் இன்னும் உக்கிரமாக மாறியவளிடம்

“தமிழ் நல்லாத்தானேடி பேசுறேன்.. வை திஸ் கொலை வெறி…” என்று கண் சிமிட்டியவனிடம் இவள் மீண்டும் அவனைத் திட்ட வார்த்தைகளைத் தேடப் போக…

அவளை அடக்கும் விந்தை தெரியாதவனா….

“போலாமா நம்ம வீட்டுக்கு….“ கிசுகிசுப்பாக அவள் காது மடலில் இருந்து பின்னங்கழுத்தில்… இதழ் ஊர்வலம் நடத்தியபடியே கேட்க…. சந்தியாவோ மீண்டும் மெது மெதுவாக கிறங்கடிக்கப்பட்டிருந்தாள் …

அது போதாதென்று …. இதழ் மட்டும் இன்றி அவனின் கரங்களின் இவள் மீதான தேக ஊர்வலமும் சேர...

“ரகு…” என்றாள் அதே கிறக்கத்தோடு…

அவளின் ’ரகு’ என்ற வார்த்தை அத்தனை இனித்தது ராகவ்வுக்கு…

மற்றொரு அறையில் நடந்து கொண்டிருந்த ரணகளமெல்லாம் இவர்களுக்கு காதுகளுக்கு எட்டவேயில்லை…. தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்….

காதல் வந்தால் கூடவே சுயநலமும் வந்துவிடுமோ…. இல்லை…. சந்தோஷ் மேல் வந்த நம்பிக்கை…. தனது தங்கை வாழ்க்கை பற்றி மனதை அரித்துக் கொண்டிருந்த கவலையை நீர்த்துப் போக விட்டதோ… ராகவ் எண்ணங்களில் சந்தியாவே முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்…

அவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு தித்தித்தது…. கிடைத்த எந்த ஒரு நொடியையும் வீணாக்காமல் தன்னனவளுக்கு தன் காதலைக் காண்பித்துக் கொண்டிருக்க… சந்தியாவோ அவன் காதல் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தாள்… அவளின் அவன் மீதான காதல் காட்டுவதற்கு அவள் கணவன் நேரம் கொடுக்கவே இல்லை…

’ரகு’ என்ற சந்தியாவின் கிறக்கமான வார்த்தையிலேயே சொர்கத்திற்கு செல்ல ஆரம்பித்தவனை… சந்தியாவின் ’ரகு’ என்று மீண்டும் அழைத்த அழைப்பு அவனை சாதரண நிலைக்கு மீண்டும் வர வைத்திருந்தது…

’ரகு’ என்ற பெயர் சந்தியாவால் உச்சரிக்கப்படும் ஏற்ற இறக்கங்களிலேயே சந்தியாவின் உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடிந்தது அவனால்…

காரணம் அன்றைய ஒரே கூடலில்… ’ரகு’ என்ற பெயரின் பல்வேறு அலைவரிசைகளை அவனுக்கு காண்பித்திருக்க…

இப்போது ரகு என்ற அவள் உச்சரிப்பில்… அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவனாக… அவளைப் பார்க்க…

சந்தியாவுக்கோ மிகப்பெரிய சந்தேகம் அவள் மனதில் … அதை ரகுவிடம் நிவர்த்தி செய்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இப்போது…

“எனக்கு ஒரு டவுட்” தன்னவனின் கைகளின் பயணத்திற்கு ரெட் சிக்னல் கொடுத்து…. அவள் கேள்விக்கான பதிலை அவனிடம் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்…

“சொல்லு… அடுத்த டவுட்டா…” என்றான் ராகவ்வும் சோம்பலாக… மோன நிலையை தற்காலிகமாக நிறுத்தி…. அவளைப் பார்க்க…

“எனக்கு எனக்கு” தடுமாறினாள் சந்தியா …. குரலில் கொஞ்சம் நடுக்கமும் இருந்தது….

”உனக்கு… உனக்கு” இவன் குரலில் நக்கல் மட்டுமே இருக்க

“நாம அன்னைக்கு” அவளால் அடுத்து வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாற

ராகவுக்கு சந்தியாவின் தடுமாற்றம் கூட இம்சித்ததது இன்றைய சூழ்நிலையில்….. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை அனுமானித்து…. நெற்றிப் புருவம் சுழித்தவனாக

“அதுனால… அதுல உனக்கு என்ன டவுட்…. டவுட் வரவே கூடாதே…. அப்படி வந்தாலும் நிவர்த்தி பண்ணனுமே என் சகிக்கு” என்று அவளை அணைத்த கைகள் இறுக்கத்தைக் கூட்ட…

“ஹையோ ரகு” என்று அவன் கைகளைத் தட்டியபடி….

“சப்போஸ் நமக்கு குழந்தை…. நான் கன்சீவ் ஆகிட்டேனா… நான் எப்படி சொல்வேன் வீட்ல” என்று வேக வேகமாக முடித்தவளைப் பார்த்து… அதை விட வேகமாக முறைத்தான்…. அவன் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல்… கவலையாக அவனையே பார்த்தபடி அவன் தோளில் தலை சாய்ந்தாள்… அந்த வெள்ளை நிற உடை தேவதை…


/* மெல்ல மெல்ல என்னுயிரில்

உன்னுயிரும் அசையுதே

துள்ள துள்ள என்னிதயம்

நம்முயிருள் நிறையுதே.

சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா.

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

லாளி லாளி நீ

என் தூளி தூளி.

*/

3,805 views6 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page