சந்திக்க வருவாயோ? -38
அத்தியாயம் 38
/*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது — ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்*/
இடம் டெல்லி : ஜெயவேலின் கண்கள் தன் முன் அமர்ந்திருந்த அதீனாவின் மீது மட்டுமே நிலைத்திருந்தது…. எப்போது அவர் அதீனாவை நேருக்கு நேர் சந்தித்தாரோ அன்றிலிருந்து அவர் அதீனா மேல் கொண்ட மோகம் பற்றி எறிய… பொருந்தா காதல்கூட இல்லை பொருந்தா காமத்தில் அவரது நினைவுகள் கண்கொத்திப் பாம்பாக அவளை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. இதோ இன்று அவருக்கு வாய்ப்புக் கிடைக்க பயன்படுத்திக் கொண்டார்… தன்னை… தன் முன் நிற்கும் கயவர்கள் பார்வையாலேயே துகிலுருக்கின்றனர் என்று தெரிந்த போதும்… அது அதீனாவை இம்மியளவு கூட பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்… இதை எல்லாம் கடந்து வந்தவள் தான் அதீனா… உணர்வுகளின் எல்லை கடந்தவளிடம் பார்வைகள் இம்சைப்படுத்துமா என்ன… அதீனாவும் அலட்ச்சியத்துடனே அமர்ந்திருந்தாள்… என்றே சொல்லலாம்… திமிரான பார்வையுடனே அவர்கள் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அதீனா கையில் கைவிலங்குடன்… ”கரண்… இந்தப் பார்வைதான் கரண்… இந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்ணு வைக்கத் தோணுச்சு…” என்று தமிழில் அவர் உரைத்த வார்த்தைகள் அதீனாவுக்கும் புரியும் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்… “ஜெயவேல்… இந்தப் பொண்ணை அவ்வளவு ஈஸியா நம்ம தூக்கிற முடியாது… ஃபுல் பாதுகாப்பு வளையத்தோட இருக்கிறவ… அந்த சிவா லாஸ்ட் டைம் நாம வந்த போதே அத்தனை கேள்வி கேட்டான்… அவனுக்கு உன் பார்வையே பிடிக்கலை…” என்று எச்சரிக்க “அவன் கிடக்கிறான் விடு்… அவனெல்லாம் ஒரு ஆளுன்னு… உனக்கு கீழ இருக்கிறவனுக்கு இவ்வளவு பில்டப் ஏன்… ஆமாம் இவளுக்கு எப்போ தீர்ப்பு சொல்லப் போறாங்க… அதிகப்பட்சமா தூக்கு தண்டனை… இல்லை ஆயுள் தண்டனை… ஆயுள் தண்டனைனா பொறுமையா இருப்பேன்… தூக்கு தண்டனைனா… “ என்று அதீனாவைப் பார்த்தவரின் கண்களில் கள்வெறி மட்டுமே இருக்க… அதீனாவின் அருகில் சென்றவர்.... அதீனாவின் தோள் வளைவில் கைவைத்தபடி… “இந்த கழுத்தை…. தூக்குக் கயிறு முத்தமிடுவதற்கு முன் என் முத்தம் முந்திக் கொள்ள வேண்டும்” என்றவரின் கைகள் அதீனாவின் தோளில் இருந்து மெதுவாக இறங்க… அதீனாவோ… அசையாமலேயே இப்போதும் அமர்ந்திருந்தாள்… கொஞ்சம் கூட பெண்ணென்ற கூச்சம் இல்லாமல் மரக்கட்டை போல் அமர்ந்திருந்த அதீனாவின் செயல்… இருவருக்குமே ஆச்சரியமாக இருக்க… “கரண்… பொண்ணுக்கு துப்பாக்கி வெடிகுண்டுனு கத்துக் கொடுத்தவனுங்க…. வெட்கம் எல்லாம் கத்துக்கொடுக்கலை போல… கத்துக் கொடுப்போமா…” என்றபடி…. அவளைத் தூக்கி நிறுத்த… அதீனா அவர் கண்களை இளப்பமாக அவள் உயரத்திற்கு நிமிர்ந்து பார்க்க… காமுகனின் பார்வையோ… அதீனாவின் கண்களைக் பார்க்க வில்லை.. அவளின் உதடுகளின் மீதி இப்போது பதிய…. அதே நேரம் பாய்ந்து வந்திருந்தான் சிவா… அந்த அறைக்குள்… நிரஞ்சனாவின் தாயைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தவன்…. மீண்டும் சிறைச்சாலைக்கு வர… உள்ளே நுழைந்த போதே ஜெயவேலின் வாகனம் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தவன்… அதற்கு மேல் நடக்க வில்லை ஓடியே வந்தான் என்றே சொல்லலாம்… சென்ற முறை வந்திருந்த போதே…. ஜெயவேலின் பார்வை சரியில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான் சிவா…. அதன் பிறகு ஜெயவேல் அதினாவைப் பார்க்க வேண்டும் என்று இவனிடம் கேட்ட போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் காட்டி மறுத்துக் கொண்டிருந்தவனுக்கு… இன்று ஜெயவேல் வந்தது… அதுவும் தன்னிடம் சொல்லப்படாமலேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க… அமீர் மீதுதான் அவனின் கோபம் திரும்பியது… அதே கோப முகத்தோடு சடாரென்று தலைமைக்கண்காணிப்பாளரின் அறைக்கதவைத் திறந்தவன்… அங்கு ஜெயவேல் இல்லாமல் போக… அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூட நிற்காமல்… வேகமாக வந்தது சந்திப்பு அறைக்குத்தான்… அங்கு… அப்படி ஒரு வேகத்தில் சிவாவை எதிர்பார்க்காத கரணும் ஜெயவேலும் தடுமாற…. ஜெயவேல் அதீனாவை நெருங்கி நின்ற காட்சி சிவாவுக்கு… நன்றாகவே புரிய… காட்டாற்று வெள்ளமாக கோபம் வந்தது… இருந்தும் அவர்களிடம் தன் கோபத்தை காட்டாமல்… அடக்கியவன்… ஜெயவேலிடம் எதுவும் பேசாமல்… அடக்கப்பட்ட கோபத்துடன் தன் உயரதிகாரியிடம் திரும்பியவன் “சார்... இந்த மாதிரி அடிக்கடி இவரைக் கூட்டிட்டு வந்து அக்யூஸ்ட்ட பார்க்கிறது… அந்த அளவு பாதுகாப்பு இல்லை… அக்யூஸ்ட்டுக்கும்…” என்றவன்… ஜெயவேலை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி… “இவருக்குமே… ஏதாவது நடந்தால்… நாளைக்கு நமக்குத்தான் அசிங்கம்… நம்ம டிபார்ட்மெண்ட்ட மீடியால நம்மள கிழி கிழின்னு கிழிச்சுருவாங்க… “ என்றவன்… ”உங்க கேள்விகளுக்கெல்லாம் இவ பதில் சொன்னாளா… ஏதாவது விசாரிக்கனும்னா… கேட்கலாம்… முடிஞ்சதுன்ன்னா நான் கூட்டிட்டு போலாமா… மெடிக்கல் செக்கப் இருக்கு” என்ற போதே கரணுக்கு.. இப்போது அவரது அதிகாரம் தலைதூக்க… அதை சிவாவிடம் காண்பிக்கும் பொருட்டு “இன்னும் விசாரனையை ஆரம்பிக்கலை… போய்ட்டு 10 நிமிடம் கழித்து வாங்க… அதுக்குள்ள ஜெயவேல் சாரும் நானும் இந்த பொண்ணுகிட்ட எங்க விசாரணையை முடித்து அனுப்புகிறோம்” என்றவர் அதற்கு மேல் சிவாவிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்ற விதத்தில் “சார்… நீங்க பேசலாம்…” என்று ஜெயவேலிடம் கூற… சிவா முதன் முதலாக செய்வதறியாது நிற்க… இருந்தும்… “சார்.. இந்த கேஸ் என் கண்ட்ரோல்ல இருக்கிற கேஸ்… “ “ஹ்ம்ம்… தெரியும் சிவா… அந்த கண்ட்ரோலை வேற ஒருத்தர்கிட்ட கொடுக்கிற அதிகாரம் எனக்கு இருக்கு… அது தெரியும் தானே… நீங்க கிளம்பலாம்” என்று சொல்லி முடிக்க… சிவா திகைத்து நின்றான் தான்… ஆனாலும் அவ்விடத்தை விட்டு போக அவனால் முடியாவில்லை… இப்போது என்ன செய்து அதீனாவை அவர்களிடமிருந்து காப்பாற்றலாம் என்று மனம் பல திசைகளில் சென்று யோசிக்க... போலிஸ் அதிகாரியாக கிரிமினல் மூளையை பயன்படுத்தாமல் உண்மையான ஆண்மகனாக மனதை பயன்படுத்தியதால்… உடனடியாக அவனுக்கு வழி கிடைக்காமல் போக… அவனுக்கு யோசனை கிடைக்கவில்லை என்றால் என்ன… நல்ல எண்ணங்களே தனக்கான பாதையை வழி வகுத்துக் கொள்ளும் என்பதற்கேற்ப… அப்போது ஜெயவேலின் அலைபேசிக்கு அழைப்பு வர… அது.. அவரது கட்சி தலைவரிடம் இருந்து வர… ஜெயவேலோ இரண்டு முறை எடுக்காமல் விட இருந்தும் அது தொடர்ந்து அடிக்க… தலைவர் நேரிடையாக அடிக்கிறார் என்றால் முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்… வேறு வழியின்றி எடுக்க… ”யோவ் உடனே கட்சி ஆஃபிஸுக்கு வாய்யா… உன் புள்ள மேல இங்க ஒரு பெரிய கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு… மீடியா வரை போகப் போது… நம்ம கட்சி மானத்தை எல்லாரும் ஏலம் போட போறாங்க… எல்லாம் உன் மகனால..உடனே வாய்யா” என்று பேச ஆரம்பித்தவர்… அதன் பிறகு மொத்தமாக ஜெயவேலை நார் நாராக கிழித்து தொங்க விட…. அதற்கு மேல் ஜெயவேல் அங்கிருப்பாரா என்ன…. வெளியே வந்திருக்க… சிவா நிம்மதிப் பெருமூச்சுடன் அதீனாவை அவளது சிறை அறையில் அடைத்து விட்டு… தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் வெளியே வாகனத்தை அடைந்த ஜெயவேல்… கரணிடம்.. தன் மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார்… காமுகனின்… மரபணு… அதன் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருக்காமல் இருக்குமா… ஜெயவேலின் வாரிசு… இவனுக்கும் மேலாக வளர்ந்து கொண்டிருந்தான்… “இவனை…. தப்பு பண்ணினால் தெரியாமல் பண்ணுடான்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன் கரண்… இந்தாளு வேற … வாயாலேயே பந்தாடுறார்” என்று நொந்தவர்…. அப்போதும்… ஜெயிலை நோக்கியபடிதான் அவர் பார்வை இருக்க…. “இவ என்கிட்ட இருந்து ரெண்டு தடவை தப்பிச்சுட்டா கரண்… மூணாவது தடவை மாட்டும் போது இவளை விடவே மாட்டேன்” என்று ஒட்டு மொத்த வெறியையும் கண்களில் தேக்கியபடி சொன்னவரை கரண் அங்கிருந்து அழைத்து செல்ல… அந்த ஜெயவேலிடம் மூன்றாம் முறை மாட்டியவளோ நம் நாயகி சந்தியாவாக இருந்தாள்… சென்னை… சந்தியாவுக்கு அவள் கணவன் இருந்த நிலைமையின் தீவிரம் புரியவில்லை…. “ஏன் ரகு பதட்டமா இருக்க…. யார் என்ன சொல்லப் போறாங்க….” என்று வேறு கேட்டாள் அவள் ராகவ்விடம்…. அவளுக்கு அவனின் நெருக்கம் இம்சையாக இருந்தால் தானே…. அது நம்பிக்கையோடு சேர்ந்த உரிமையாக இருக்கும் போது எந்தப் பெண் வித்தியாசமாகப் பார்ப்பாள்… அந்த சந்தோஷத்தில் ராகவ்வோடு பேசிக் கொண்டே வந்தாள்… முதல் முறை வந்த போது நெடுந்தூரமாக இருந்த பயணம் இப்போது சீக்கிரமாகவே முடிவடைந்து… அவர்களின் வருங்கால இல்லத்தை அடைந்திருந்தனர் இருவருமாக…. அன்று கவனமாக பார்த்து வீட்டினுள் அடி எடுத்து வைத்தாளோ இல்லையோ இன்று மிகக் கவனமாக இருந்தாள்… ராகவ்வுக்கும் சொல்லி… தன் கணவனோடு கைகோர்த்தபடி… வலது காலை எடுத்து வைத்து… உள்ளே நுழைந்தனர் தம்பதி சகிதமாக முதல்முறையாக… உள்ளே நுழைய அவள் கண்களில் பட்டது வீட்டின் ஹாலில் தொங்க விடப் பட்டிருந்த அந்த பெரிய ஊஞ்சல் தான்… அன்று வந்த போது இல்லை… “வாவ் ஊஞ்சல்” என்றவள் ராகவ்வை அப்படியே விட்டு விட்டு ஆசையாக அதன் அருகே ஓட…. “எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்… இதில ஆடிட்டே தூங்கற…. புக் படிக்கிற சுகம் இருக்கே… தாத்தா வீட்லதான் இருக்கும் ரகு… திவா மாமாக்கும் எனக்கும் ஒரே போட்டிதான்… “ என்றவளை கண்களில் சிரிப்போடு பார்த்தவனுக்கோ… பைக்கில் வந்த போது… மல்லிகை வாசத்தோடு உரிமையாக தன் அருகில் அமர்ந்து வந்த மனைவியின் அழகு அவனுக்குள் இம்சை செய்திருக்க… பேயாட்டம் ஆடிய அந்த உணர்வுகள்.. இப்போது தன்னருகே நிற்பவளை அவளை எட்டி நின்று ரசிக்க விடாமல் செய்ய… அவளை பார்த்தபடியே அவளருகே போக ஊஞ்சலைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவள்.. திடிரென தன் அருகில் வந்த ராகவ்வை… அவனின் பார்வை புரியாமல்…. ஏன் என்ன கேட்கும் முன்னே… அவளைச் சட்டென்று இழுத்தவன்… அதே நொடியில் அவள் இதழை அவன் வசப்படுத்தி இருக்க… அவனின் அதிரடி நடவடிக்கை எதிர்பார்க்காத சந்தியா விழி விரித்து அவனை நேருக்கு நேராக பார்த்தவள்…. பின் மெதுவாக தன்னவனின் கண்களில் கண்ட தாபத்தின் கெஞ்சலில்… மெதுவாக அடங்க…. ஏனோ இவன் உடனடியாக விலக… இருவருமே சில நிமிடங்கள் அமைதியாக இருக்க… தன்னை விட்டு தன்னை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஊஞ்சலை அக்குவேறாக அலசிக் கொண்டிருந்தவளை…. பார்த்து புன் சிரிப்பு சிரித்தபடி ராகவ் அருகில் வர… “ஓய்… கியாரண்டி ஞாபகம் இருக்குதானே” என்று எட்டி நின்றவளாக எச்சரிக்கை வசனம் சந்தியா பேச…. ”அதெல்லாம் ஞாபகமிருக்கு… இதெல்லாம் அதுல சேர்த்தி வராது… கிஸ் பண்ணினா கற்பு போகுமா என்ன…” என்றபடி இன்னும் வேகமாக நெருங்க…. வேகமாய் ஊஞ்சலின் மறுமுனைக்கு சென்றவள்… அங்கிருந்தபடியே முறைக்க… “டேய் ஏற்கனவே என் அனுமதி இல்லாமல் என்னை கிஸ் பண்ணிருக்க… இன்னைக்கும் வேற… என் பெர்மிஷன் இல்லாமல் என்னைத் தொட்டுட்டேன்னு… நான் எத்தனை நாள் தூங்கலை தெரியுமா” என்றவள் முகம் சோகத்தில் உண்மையிலேயே வாட… அன்றைய தன் கேவலமான நடவடிக்கைக்கு என்ன விளக்கம் கொடுப்பான் இவன்… இருந்தும் அவளை ஆறுதல் படுத்த நினைத்தான் ராகவ்…. ”சாரி சந்தியா… இந்த இண்டீரியர் கன்ஃபார்ம் பண்றதுக்காகத்தான் உன்னை அன்னைக்கு கூப்பிட்டு வந்தேன்….. ஆனா அன்னைக்கு வேற மாதிரி ஆகிருச்சு…. என்னை விரும்பி நீ ஏத்துக்கலையோனு எனக்கு சந்தேகம்…. எல்லாரும் கட்டாயப்படுத்தினதுனாலதான் என்னை மேரெஜ் பண்ண ஒத்துகிட்டியோனு டவுட்” என்று அவன் சமாளித்தபோதே அவனை வித்தியாசமாகப் பார்த்தவளை…. இவன் நோக்க… இப்போது அவன் அருகில் வந்தாள்…. சந்தியா…. “உண்மை அதுதானே ராகவ்… இப்போ கூட எனக்கு என்ன ஃபீல்னே தெரியலை…. உன் கூட இருக்கனும்னு தோணுது…. பேசனும்னு தோணுது…. ஆனால் காதலானு தெரியலை…. என்னோட புருசன் …. அந்த உரிமைதான் அதிகமா இருக்கு” என்று உண்மையாகப் பேசியவளை ராகவ் அதிர்ந்து நோக்க… ”ஆமாம் ரகு… காதல்னா என்ன… எனக்குப் புரியலை… இப்பவும் சொல்றேன்… உன்னைப் பிடிக்கிறது…. உன்னை மனசு தேடுதுதான்…. ஆனாலும்…. ஏதோ ஒரு இன்கம்ப்ளீட் ஃபீல் உனக்கும் எனக்கும் இன்னும் இருக்கு… ஆனால் இந்த ரெண்டு நாளா…. உன்னை மிஸ் பண்றேன்தான் ஆனால் அதற்கு பேர்தான் காதல்னு சொல்வாங்களா… எனக்குத் தெரியலை…. ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்னு சொல்வாங்களே அந்த மாதிரி…. புதுசா மேரேஜ் ஆனவங்களுக்கு வர்ற ஃபீல் தானோ அந்த மாதிரிதான் நானும் உன்னைத் தேடுறேனோனு தோணுது…” என்ற போதே ராகவ்வின் முகம் கோபத்திலும்… தன் காதல் இன்னும் இவளுக்குப் புரியவில்லையா என்ற ஏமாற்றத்திலும்…. சுத்தமாய் இறுகியிருக்க…. அன்றும் இதே போல்தான்… விட்டேற்றியாகப் பதில் சொன்னாள்…. பிடித்திருக்கிறதா? என்று கேட்ட போது தெரியவில்லை… ஆனால் பிடிக்காமல் இருப்பதற்கும் பெரிதாகக் காரணம் இல்லை…. என்று.. ஒரே நொடியில் இவள் மட்டும் தான் என் உலகம் …. இவள்தான் என் வாழ்க்கை என்று தான்மட்டும் மாறி இருக்க… அவளோ மிகவும் எதார்த்தமாக… சாதரணமாக… உண்மையாக இருப்பதாக உளறிக் கொண்டிருப்பதை எல்லாம் கேட்க முடியவில்லை அவனால்…. என் காதலைச் சொல்லி மொத்தமாக அவளிடம் சராணாகதி அடைந்து விட்ட போதிலும் தன் காதல் கூட இவளை மாற்ற வில்லையா…. இறுகி சிலையோ எனும்படி மாறி இருந்தான் ராகவ்…. அதெல்லாம் உணராமல்… சந்தியாவோ… அவன் மீது சாய்ந்து…. அவன் நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டியவள்.... “என் காதல் இங்கதான் இருக்குனு தெரியுது…. உங்ககிட்டதான் என் ஆதி அந்தம்னு தெரியுது…. ஆனால்…. இதெல்லாம் எல்லா பொண்ணுக்கும் தன் கணவன் மேல வருகிற ஃபீல்தான ரகு… எங்க அப்பாக்கு உன்னோட ஃபேமிலி, பணம், வசதி பார்த்து பிடிச்சது…. உன் அப்பாக்கு…. அவரோட பையன அவருக்கு திருப்பிக் கொடுக்க நான் தேவைப்பட்டேன்… உனக்கு…. “ என்றவளின் கண்கள் இப்போதுதான் அவனை… அவன் கண்களைச் சந்தித்தது…. அப்போதுதான் உணர்ந்தாள் சந்தியா…. தன் வார்த்தைகளால் அவனைக் காயப்படுத்திக்கொண்டிக்கிறோம் என்று…. அதை எப்போது உணர்ந்தாளோ…. சட்டென்று வார்த்தைகளை நிறுத்தி தடுமாறினாள்… சந்தியா… முதல் முறை… சொல்ல இயலாத உணர்வு சந்தியாவுக்கு… அவன் நின்றிருந்த தோற்றம்… அவனது ஏமாற்றம்… அதன் தாக்கம்… ராகவ்வின் கண்களின் இருந்த வலி…. அவனின் அந்தக் கோலத்தை தாங்க முடியாத ஏதோ ஒரு உணர்வு இவளுக்குள்….. அவளது இதயத்தை மின்னல் கீற்றென ஊடுருவ…. அது கொடுத்த வலி… இதற்குப் பெயர்தான் காதலா எனும்படி…. உயிர் ஊடுருவிய அந்த வலி…. அது தன் முன்னால் நிற்கும் இவனால் மட்டுமே தான் உணர முடியும் என்ற வலி…. இத்தனை நேரம் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பது தெரிந்து… தெளிந்தவள்…. அவன் கல்லாகச் சமைந்து நிற்கிறான் என்று புரிந்தவள்….. அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் வேறு வழியே இன்றி….. அவனை இறுக்கமாக கட்டி அணைக்க…. கோபத்தில் விட்டு விலகியவனை… விடாமல் அணைத்தபடி…. தான் இதுவரை உணர்ந்த உணர்வுகளை எல்லாம் அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள் “எனக்கு யாருமே டைம் கொடுக்கலை ரகு…. திடீர்னு உன்னோட மேரேஜ்னு சொன்னாங்க…. அதுவே எனக்கு அதிர்ச்சி…. அடுத்து நீ சம்மதம் சொன்னது அடுத்த அதிர்ச்சி…. ஆனால் அதுக்கு மாறா இருந்த உன்னோட பிஹேவியர்… என்னை வேண்டாம்னு உங்க வீட்ல சொல்லுனு என்கிட்ட நீ நடந்த விதம் அதுக்கு பதிலடியா நான் நடந்துகிட்ட விதம்… இதெல்லாம் பார்த்து நீ இப்படித்தான்னு முடிவு பண்ணி மனசை தேத்திகிட்டு ஃபர்ஸ்ட் நைட்ல வந்தா…. காதலிக்கிறேனு சொல்லி அதிர்ச்சி ஆக்கின…. அந்த சந்தோசமாவது இருக்கும்னு பார்த்தா… அதுவும் நிலைக்கல… அடுத்த நாளே எங்க வீட்டுக்கே நான் திரும்ப வந்திட்டேன்… இங்க எந்த இடத்திலயும் என்னோட உணர்வுகளுக்கு யாரும் முக்கியம் கொடுக்கலை ரகு… நீ உட்ப்பட… நானும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி மாறி… இப்போ என்ன நினைக்கிறேன் என்ன பண்றேன்னு… எனக்கே தெரியலை ரகு…. பயமா இருக்கு…. சரின்னு நினைக்கும்போது தப்பா மாறுது… தப்புனு நினைக்கிற விசயம் சரி ஆகுது… ” என்று தன் உணர்வுகளை உண்மையாக சந்தியா விளக்கியது ராகவ்வுக்கு புரிந்தாலும்… கோபம் அடங்கவில்லை இவனுக்கு…. ஆனாலும் அவளைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ…. சற்றே இறுக்கம் தளர.. தன்னை அணைத்திருந்த அவளை இவனும் அணைத்தபடி…. சிறிது நேரம் நின்றவன்… பெருமூச்சை இழுத்து விட்டபடி…. அவளை தன்னை நோக்கி நிமிர்த்து பார்க்க… சந்தியாவின் கண்களில் இன்னும் பரிதவிப்பு இருக்க…. இருந்தும்… “என் மேல ஒரு ஃபீலும் இல்லைனு சொல்லிட்ட… லவ் இருக்கா இல்லையானா அதுவும் சொல்லத் தெரியலைனு சொல்லிட்ட… அப்புறம் எதுக்குடி இந்த லுக்கு… சரி விடு உனக்கு எப்போ காதல் வருமோ வரும்போது அது வரட்டும்… அதுக்காக நான் அப்டியே விட்ற முடியுமா? “ என்று முற்றுபுள்ளி வைக்காமல்… அவளையே பார்த்தபடி கேள்விக்குறியோடு நிறுத்தியவனின் அணைப்பு இறுக… புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சந்தியா…. “இன்கம்ப்ளீட்னு பேசிட்டுருக்கும்போது சொன்னியே…. கம்ப்ளீட் பண்ணிருவோமா சகி” என்று அவள் காதில் கிறக்கமாக கிசுகிசுத்தவனின் மோனக் குரலில்… இவள் அவளறியாமலேயே மோன நிலைக்கு பயணப்பட ஆரம்பிக்க…. அவனோ அவள் தேகம் தேடும் தன் இதழ்களின் பயணத்தை அவள் சங்குக் கழுத்தில் இருந்து ஆரம்பித்திருந்தான்… சந்தியாவின் நிலைதான் இப்போது விவகாரம் ஆகி இருந்தது…. என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தது அவளுக்கு அவனை விலக்கவும் மனம் இல்லாமல்…. அதில் மூழ்கவும் முடியாமல் நெளிய ஆரம்பிக்க… ஆனால்… அவள் தன்னிடம் இருந்து நழுவ முயல்கிறாள் என்பதை உணர்ந்தவன்… அதற்கு அனுமதிக்காமல் அவன் கரம் அவள் மெல்லிடையை வன்மையாக அழுத்தி தனக்கும் அவளுக்குமான இடைவெளியை குறைத்து காற்று கூட நுழைய அனுமதி மறுத்தவன் போல…. இறுக அணைத்தவன்… அவள் மென்மையை மோகத்துடன் உணர்ந்த போது … அங்கு இருவருக்குமிடையே காதலின் உச்சகட்ட தேடல் தொடங்க ஆரம்பிக்க… ராகவ் முற்றிலுமாக தன்னைத் தொலைத்திருந்தான் சந்தியாவிடம்…. காலையில் இருந்து அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த விரகத் தீயை… சந்தியாவையும் உணர வைக்கும் முயற்சியில்… இப்போது அவளையும் தனக்குள் இழுக்கத் தொடங்கி இருந்தான்… தன் கணவனின் உரிமையான அணைப்பு, அவனின் வலிமையான கரங்களின் அழுத்தம்… அதற்கும் மேலே… அவன் உதடுகள் இவள் கழுத்து வளைவில் உரசியபடி போர் புரிய… என அவனின் பலமுனைத் தாக்குதலில்…. இதுவரை அவளறியாத அவள் தேகம் உணராத உணர்வுகளின் பந்தாட்டத்தில்… அவள் தேகமும்… இதயமும் தன்னவனிடம் சரணடைந்திருந்தாலும்…. ஒரே நிராயுதபாணியாக இருந்த அவள் மூளையோ விலகிவிடு என்று எச்சரிக்கையை.,…. சொல்லிக் கொண்டே இருக்க… அது முடியாமல் போக… தாளமுடியாமல்… அவனிடமே சரணடைந்திருந்தாள்…. சந்தியா…. தன் மீதான அவள் தாபத்தில்… ஆண்மகனாக அவள் கணவனாக ராகவ் பெருமிதம் கொள்ள… அது தந்த மகிழ்ச்சியில்… பேருவகையுடன்… அவள் கன்னத்தில் இதழ் பதிக்க…. அந்த சத்தம்… புதிதாகக் கட்டிய இல்லம் என்பதால்…. அந்த அறையிலோ பொருட்கள் இன்னும் ஆக்கிரம்பிக்காமல் இருக்க… அறை முழுவதும் ஆக்கிரமித்து….. இவர்களிடமே மீண்டும் எதிரொலிக்க…. அதன் விளைவு இப்போது சந்தியா தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை விட்டு விலக எத்தனிக்க…. இவனோ விடவில்லை… “ப்ளீஸ்… ரகு….” என்றவளின்…. கண்கள் லேசாக நீரை வடிக்க…. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… “நான் தான் சொன்னேன்ல…. நீதான் கேட்காமல் கூட்டிட்டு வந்த…” பழியை அவள் மேலேயே போட்டவன்…. அவளை தன் இதழ் சிறையில் எந்த வித கஷ்டமுமில்லாமல் கைது செய்ய…. முதலில் தயங்கிய சந்தியா…. பின் யோசித்தவள்…. என்ன நினைத்தாளோ… இமைகளை மூடி…. விருப்பத்துடன் அவன் சிறையில் கைதி ஆக…. நிமிடங்கள் கடந்து அவனே போதுமென்று விட நினைத்து அவளை விட்டு விலகி தன்னை நிலைப்படுத்தியபோதுதான் இவளும் தன் நிலைக்கு வந்திருக்க…. ஆனாலும் தள்ளாடியபடி அவனிடமே கண்மூடி சாய்ந்திருக்க ராகவ்… தன்னவளையே பார்த்திருந்தான்… அவனின் அமைதியில் சந்தியாவும் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்து… அவனின் முகம் பார்க்க அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க... அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியாமல்…தலை கவிழ…. “ம்க்கும்…. சந்தியா என்னைப் பாரு“ என்றான் மந்தகாசமாக சிரித்தபடியே… “ம்ஹ்ம்” .. அவனைப் பார்க்க மட்டுமே நாணம்…. என்பது போல அவன் மார்போடு புதைந்து கொள்ள… அவளைத் தன்னிடமிருந்து விலக்கி தன்னைப் பார்க்குமாறு தன் முன் நிறுத்தியவன்…. கலங்கிய கண்களை சந்தித்தவன்… அவளது சிவந்த கன்னங்களை தன் உள்ளங்கையில் வைத்து அழுத்தியவன்…. சற்று முன் இவன் வன்மையான இதழ் சிறையிலிருந்து விடுதலையான அவள் மென்மையான இதழ்கள் இன்னும் துடித்துக் கொண்டிருக்க… அதன் துடிப்பை நிறுத்தும் பொருட்டு மீண்டும் மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்தவன்…. நோயைத் தந்தவனே அதன் மருந்தையும் தர முடியும் என்ற தாம்பத்திய பந்தத்தின் அடிப்படை அறிவு அவனையுமறியாமல் அவனுக்குள் ஆரம்பித்து இருக்க…. “தேங்க்ஸ்” என்று மட்டும் சொல்லி அவள் நெற்றியில் அழுத்தமாக தன் இதழ்களின் ரேகையை பதித்தவன்…. கலைந்திருந்த அவள் கேசத்தை தன் கரங்களால் சரிப்படுத்தி…. கோணல்மாணலாக இருந்த அவள் நெற்றி குங்குமத்தை துடைத்து விட்டவனின் கண்களில் இப்போது சந்தியாவின் கன்னங்களில் இருந்த தடம் மீண்டும் பட… இப்போது அதன் விரல் தடம் நன்றாகத் தெரிய… ராகவ்வுக்கு இப்போது லேசாகப் புரிந்தது… அன்றொரு நாள்… சந்தியா துப்பட்டாவினால் முகத்தினை மூடியிருக்க.. இவன் ஏன் என்று கேட்ட போது. அவள் தந்தை அறைந்தாகச் சொன்னாளே… இப்போதுமா… அதுவும் இவன் மனைவியான பிறகுமா? இரத்தம் கொதித்தது ராகவ்வுக்கு “என்னது இது… என்ன நடந்துச்சு… உங்க அப்பா அடிச்சாரா…” கொதிநிலையின் உச்சத்தில் இவன் கேட்க அவள் அமைதியாக இருக்க… அதிலேயே புரிந்தது அவனுக்கு அவன் சரியாக அனுமானித்திருக்கின்றான் என்று… “என்ன மனுசன் சந்தியா… உங்க அப்பா… இப்போ நீ என் மனைவி... இதை இப்டியே விடக் கூடாது “ என இவன் ஆக்ரோசமாக ”ஹலோ… உன் பொண்டாட்டின்றதுனாலதான் இந்த அடியே… கொஞ்சம் சும்மா இருக்கியா… நானே… லைட்டா பட்ருச்சுனு சந்தோஷத்தில இருக்கேன் நீ வேற…. அவரோட அஞ்சு விரலும் பதிஞ்சா என்ன வலி வலிக்கும் தெரியுமா…. பல நாள் அனுபவிச்சுருக்கேன்… ஆனால் இப்போலாம் அடிக்கிறது இல்லைதான்… இன்னைக்கு ராகவ் வைஃபா பேசிட்டேனாம்… அதான் இந்த அடி… நான் இன்னும் அவர் பொண்ணுதான்னு நிருபிக்க” வலியை மறைத்து சிரித்தபடி பேசியவளை…. மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டு… “ஐம் சாரி சந்தியா… இந்த மாதிரி இனி நடந்தால் … நடந்தால் என்ன…. நடக்காது சந்தியா… அதுக்குள்ள உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துருவேன்” என்றவனிடம் “ஹ்ம்ம்” என்று மட்டும் சொன்னாள் சந்தியா…. தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து பின்… “போகலாம் சந்தியா…. ” என்றவன் குரலில் இருந்த நிராசை அப்பட்டமாக சந்தியாவை அடைய…. இவளுக்கும் அது புரிந்தது இருந்தாலும்…. “இப்போதுதான் வந்தோம்… உடனேயா?” என்று நினைத்தாலும்… உணர்வுகள் இவர்களை அடிமைப்படுத்த ஆரம்பிக்கும் இந்த தருணம் இங்கிருப்பது சரியில்லை என்றுதான் அவனே தன்னைக் கட்டுபடுத்தி இங்கிருந்து போக நினைக்கிறான் என்பதை உணர்ந்தவள்…. கேள்வி ஏதும் கேட்காமல்… தலையை மட்டும் ஆட்ட…. ராகவ்வோ… தந்தை அடித்த சோகத்தில்தான் இன்னும் இருக்கிறாள் எனத் தவறாகப் புரிந்து கொண்டு… அவளை எப்படி சகஜ நிலைக்கு மீண்டும் கொண்டு வர வைக்கலாம் என்று யோசித்தவன்…. பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக….. ”சந்தியா காலையிலேயே கேட்கனும்னு நினைத்தேன்… பஸ்ல வந்தேன்… கூட்டத்தில் நசுங்கினேன்னு புலம்புனியே… ஏன் அப்படி வரனும்…. கால் டாக்சி… ஆட்டோல வரவேண்டியது தானே” அவளோடு நடந்தபடி சந்தேகத்தை கேட்டபடியே சந்தியாவை இயல்பாக பேச வைக்க முயற்சிக்க… அதுவும் சரியாக வேலை செய்தது… “அதுவா… அம்மா என்கிட்ட சொல்லிருக்காங்க… தனியா போகும் போது கால் டாக்ஸி, ஆட்டோன்னு எடுக்க வேண்டாம்னு… அவங்க பொண்ணை இந்த ரகுப் பையனுக்கு பத்திரமா ஒப்படைக்க உங்க மாமியார் இந்த மாதிரி பல ஸ்ட்ரிக்ட் அட்வைஸ்லாம் பண்ணி வச்சுருக்காங்க” என்று சிரித்தபடி இவள் சொல்ல…. அவனுக்கோ இவள் சொல்லச் சொல்ல… முகம் இறுக ஆரம்பித்து இருந்தது… அவளோ அது எல்லாம் தெரியாமல் தன் தாயைப் பற்றி பேசிக் கொண்டே வந்தாள்… சந்தியாவை பல விசயங்களில்…. வசந்தி ஒரு குறுகிய வட்டத்திலேயே வளர்த்திருப்பது ராகவ்வுக்கு மெது மெதுவாக புரிய ஆரம்பித்தது… தனிமை என்றால் பயம்… இருட்டு என்றால் பயம்… என்று அவள் அடிக்கடி சொல்வது என பல விசயங்களை ராகவ் யோசித்தபடியே வர…. அதில் ராகவ்வின் முகம் மாறியதைக் கண்ட சந்தியா… தன் பேச்சை நிறுத்திய சந்தியா என்னவென்று கேட்க… ”இல்லை ஆட்டோல தனியா போகாதே… வீட்டுக்கு 7 மணிக்குள்ள வா… ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போன் பண்ணு… லொட்டு லொசுக்குனு அதை இதை சொல்லி உன்னை பயமுறுத்தி வளர்த்ததுக்கு… பதிலா பெண்களுக்கு எத்தனை தற்காப்பு கலைகள் இருக்குதானே… அதுல ஏதாவது ஒன்றை உனக்கு கத்துக் கொடுத்திருக்கலாமே சந்தியா” என்று சொல்ல… முதன் முதலாக சந்தியாவும் யோசித்தாள்… “ஆமால்ல… இந்த வசந்தி ஏன் பண்ணலை” என்று அவனிடமே கேட்க… முறைத்தவன் “பொண்ணுங்க அவங்களுக்கான பாதுகாப்பை வெளியில தேடக்கூடாது சந்தியா… அது அவங்க உள்ளுணர்வுல இருக்கனும்… தன்னம்பிக்கை வேண்டும்… எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளலாம்… அதைப் புரிஞ்சுக்கோ…” எனும் போதே “ப்ச்ச்… அதெல்லாம் வராது… என் மேரேஜ் வரைதான் அம்மாக்கு அந்த பயம்லாம்… அதுக்கும் முக்கிய காரணமே நீதான்… பார்க்கிறப்போதெல்லாம் சும்மா சும்மா என்னை முறைச்சு பார்த்துட்டு… இப்போ வந்து அட்வைஸ் பணணு….” இவளும் அவனோடு வாதாட… அதன் பிறகு அவனும் விட்டுவிட… ஒன்றும் பேசாமல் இருவரும்…. வீட்டைப் பூட்டி வெளியே வர…. ஆகாயமோ… மப்பும் மந்தாரமுமாக மாறி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது…… வானிலை நிலவரம் சரியில்லாமல் இருப்பதை உணர்ந்த ராகவ்…. தன் பைக்கை ஸ்டார்ட் செய்து… சற்றுத் தள்ளி… சந்தியா நிற்கும் இடத்திற்கு வந்தவன்…. “சந்தியா…. கிளம்பு…. மேக மூட்டமா இருக்கு…. மழை வரப் போகுது போல…. சீக்கிரம் கிளம்பலாம்” என்று சொல்லி முடிக்கவில்லை அவன்… வானம் அடித்துக் கொண்டு மழையை பொழிய ஆரம்பிக்க…. சந்தியா சுதாரித்து அங்கிருந்த போர்ட்டிக்கோவில் போய் நின்று கொள்ள… இவனோ பைக்கை மீண்டும் நிறுத்தி வந்த சில நிமிடங்களில் மொத்தமாக நனைந்திருக்க… சந்தியா இப்போது ராகவ்வைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்… ஏற்கனவே பெரிய உத்தமன் போல… பாதியில் இவளை விட்டு விலகிய தன் மீதிருந்த கடுப்பு வேறு…. இப்போது இந்த மழை வேறு…. அதோடு சந்தியாவின் சிரிப்பும் சேர… முறைத்தபடி அவளருகில் வந்தான்… முகத்தில் முத்துக்களாக மாறி இருந்த மழைநீரை துடைத்தவன்…. தன் கேசத்தை கோதியபடி…. சந்தியாவைப் பார்த்து… “இப்போ எதுக்குடி உனக்கு இவ்வளவு சிரிப்பு….“ சுள்ளென்று விழுந்தான்… அவள் சிரித்த காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு… ஆனால் அந்தக் கோபத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல்…. அவளோ அவனையே பார்த்தபடி … இப்போது இன்னும் அதிகமாக சிரித்து வைக்க…. “இந்த பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….. என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையானே தெரியாதவளுக்கெல்லாம் இந்த பார்வை ரொம்ப முக்கியம்“ என்று இப்போது முணுமுணுத்தவள்…. ”சொல்லிட்டு சிரிடி…. யாருமில்லாத காட்டுல மோகினி மாதிரி ஏன் சிரிக்கிற” என்ற போதே… “என்னம்ம்ம்மோ நெனச்ச்சேன்…. எதுக்க்க்க்கோ சிரிச்சேன்….” அவளது மனம் கவர்ந்த ராகவ்விடம் ராகமாக இழுத்துச் சொன்னவள்… அவனிடம் காதருகில்… ரகசியமாகச் சொன்னாள்…. “மோகினிப்பிசாசு விடாதாம்”… அதில் நொந்தவன் ராகவ்தான் இருந்தும் அவளிடம் வம்பளக்கும் நிலையில் அவன் இல்லை என்பதால்… அவள் புறம் திரும்பாது…. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி வேறு திசையில் திரும்பி… பெய்து கொண்டிருந்த மழையைப் பார்க்க ஆரம்பித்தான் மழை நிற்பது போல் தெரியவில்லை…. அடித்துக் கொண்டு ஊற்றிக் கொண்டிருக்க…. காற்று வேறு பலமாக வீச ஆரம்பிக்க… மழைச் சாரல் இவர்களை நோக்கி அடிக்க ஆரம்பித்து இருக்க “நாம இவள இங்க கூட்டிட்டு வர்றோம்னு தெரிஞ்சவுடனே மழையும் ஃபாளோ பண்ணிட்டு வந்திரும்போல…” கடுப்பான எண்ண ஓட்டம் அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்க.. ”ரகு வீட்டு சாவி எங்க…” கேட்டபடி அவனருகில் வந்த சந்தியாவை ராகவ் திரும்பிப் பார்க்க… அவளோ குளிரில் தந்தியடித்த இதழ்களை பற்களைக் கடித்து…. அடக்கி வைத்திருக்க… குளிரில் நடுங்குகிறாள் என்று தெரிந்த போதும்… அமைதியாக மழையை வெறித்துக் கொண்டிருந்தான் ராகவ் அவளைக் கண்டும் காணாதது போல…. ”உள்ள போலாம் ரகு… நானும் நனஞ்சுருவேன் போல… காத்து வேற பலமா அடிக்குது. ரொம்ப குளிரா இருக்கு” நடுங்கியபடியே சொன்னவளை… அசட்டையாகப் பார்த்தவன்… “விட்ரும்… வெயிட் பண்ணலாம்… இங்கயே இருக்கலாம்… அதுதான் நமக்கு நல்லது” அவள் மீதிருந்த பார்வையை எடுத்து எங்கோ பார்த்தபடி சொன்னான்…. ’லூசா இவன்’ என்பது போல சந்தியா பார்த்து வைத்ததைக் கூட அறியாமல் …. இப்போதும் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ராகவ்… சந்தியாவுக்கு ’நமக்கு நல்லது’ என்று அவன் சொன்ன வார்த்தைகளில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிய…. அதில்புன்னகை வர… அவனைப் பார்த்தபடியே அவனருகில் வந்து முன்னால் நின்றவள்… அவனைத் தொட்டுத் தன்புறம் திருப்ப… இவன் திரும்பி பார்க்கும் போதே… சற்று கையை வெளியில் நீட்டி மழைநீரை உள்ளங்கையில் வாங்கியவள்… அதை அவன் மீது தெளித்து விளையாட ஆரம்பிக்க…. “ப்ச்ச்… விளையாடாத சந்தியா”… “ஹலோ பாஸ் நாங்க விளையாடல… கீயைக் கொடுங்க திறக்க… விட்டா குளிர்ல வெறச்சு செத்துருவேன்… கீயைக் கொடுக்காம நீங்கதான் விளையாடறீங்க…” என்றவள்… இப்போது அவன் சாவியை எடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் … மார்புக்கு குறுக்காகக் கட்டிய கைகளை எடுக்காமல் இன்னும் இருக்க… இவன் வேலைக்காக மாட்டான் என்று உணர்ந்த சந்தியா…. வீட்டை பூட்டி விட்டு… சாவியை அவன் பேண்ட் சைட் பாக்கெட்டில் போட்டதை இவள் பார்த்திருந்ததால்…. கொஞ்சமும் யோசிக்காமல்… அதை அவனிடமிருந்து எடுக்கப் போக… தன் புறம் நீண்ட அவள் கைகளை சட்டென்று வேகமாகத் தட்டியவன்… ”தான் சொல்வதைக் கேட்க மாட்டேன்” என்று இருப்பவளை முறைத்தபடி…. அவனே சாவியை எடுத்து நீட்ட… “ஷ்ஷ்ஷ் ஹப்பா… ரொம்ப பண்றடா… ” என்று சொன்னபடி கதவைத் திறந்தவள்… உள்ளே போக நினைக்க.. ஆனால் ராகவ் இன்னும் வராமல் அசையாமல் அங்கேயே நிற்பதைப் பார்த்து… மீண்டும் அவன் அருகில் வந்து “ரகு என்னைப்படுத்தாத…. வா” என்று அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே போனவள்… ”ஷேர்ட்லாம் நனஞ்சுருக்கு… கழட்டு….” என்றபடி ஊஞ்சலில் அமர வைத்தவள்… அவன் தலையை தன் புடவைத் தலைப்பால் துவட்ட ஆரம்பிக்க… இவன் இன்னும் அமைதியாக இருக்க… ”எக்ஸ்கியூஸ்மி…. சாமியாராக போறீங்களா….” அதே அமைதி ராகவ்விடம் இன்னும் தொடர “அப்படி ஏதாவது ஐடியா இருந்தா மாத்திக்கங்க… மிஸ்டர் ட்ரிப்பிள் ஆர்… இப்போ ஆக்சுவலா… ரொமான்ஸ் சீன் இருக்கனும்…. உம்மனாமூஞ்சி சீன் காட்டக்கூடாது…. ரகு மாம்ஸ்” அவனிடம் வம்பளந்தபடி நெருக்கமாக நின்று கொண்டு…. துவட்டிக் கொண்டு இருக்க... இவனோ நிமிர்ந்து பார்க்க… இவனைப் பார்க்காமல் நாணத்துடன் திரும்பிய தன்னவளின் மலர்ந்த முகத்தில்… சஞ்சலம் எல்லாம் நீங்கியவன்… கழட்டிய சட்டையயையும், உள்ளே அணிந்திருந்த உள்சட்டையையும் வேண்டுமென்றே அவள் மீது போட்டவன்…. இப்போது அவள் இடையை சுற்றிக் கட்டிக் கொண்டபடி… “ஓய்ய்… யாரோ உத்திரவாதம்லாம் கொடுத்தாங்க… என்னோட கற்புக்கு ” ”அதெல்லாம் எக்ஸ்பையர்ட் ஆகிருச்சாம்” முணங்கினாள் சந்தியா… “ஒஹோ…. தண்டனை கொடுத்திரலாமா… “ என்றவனிடம்… “எதுக்கு……. “ பெரிதாக கண்கள் விரிய கேட்டாள் விளக்கம் …. விளங்காமல்… “உத்திரவாதம் கொடுத்த கம்பேனியனுக்கு..…. சாரி சாரி… கம்பெனிக்கு” … “டெம்பொரரி கியாரண்டினு தாண்டா சொன்னேன்…. “ சிணுங்கியவளின்… கண்கள் சொன்ன சம்மதத்தை…. உள்வாங்கிக் கொண்டவன்… சற்றும் தாமதிக்காமல் வெற்று மார்பினனாய் எழுந்து அவளைத் தூக்கியபடி… அவர்கள் இனி வாழப்போகும் படுக்கை அறைக்குள் வந்தவன்… தங்களுக்காக காத்திருந்த மஞ்சத்தில்… அவளோடு தஞ்சமடைய முதலில் யோசித்தாலும்… கண் மூடி தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்திருந்த தன்னவளின் முகம் பார்த்து திருப்தி அடைந்தவன்… “சந்தியா… ஆர் யூ சீரியஸ்” சந்தேகமாகக் கேட்க…. மெதுவாக கண் திறந்து பார்த்தவள்… பதிலேதும் சொல்லாமல் அவனை விட்டு இறங்கியவள்….அவன் உயரத்திற்கு எம்பி… தன் இதழை அவன் முகமெங்கும் பதித்து இதழ் நோக்கி வந்தாள்… அன்று கோபமாக… வேகமாக அவன் இதழை தன் வசப்படுத்தி அவனைவிட்டு ஓடியவள்… இன்று காதலோடு தானாகவே இதழ் பதித்து… அவனோடே சரணடைந்தாள் அவன் சகி…. மழைச்சாரல் ஆசிர்வதிக்க… இதுவரை அவனுக்கே அவனுக்காக கட்டிக்காத்த தன் இளமையை தன் கன்னித்தன்மையோடு அவனுக்கு விருந்தாக அளிக்க.. அதில் அவனறியா அவளதிகாரங்களை அவள் மறுக்க மறுக்க அவள் நாணத்தை மறக்கடித்து படிக்க ஆரம்பித்தவன்… அவளறியா அவனதிகாரங்களை அவளை அதிரவைத்து… உணர வைத்து… அவள் துணையோடு தன் பிரம்மச்சரிய விரதத்தை முடித்து வைக்க.. இருவரும் அறியாத அதிகாரங்களோ…. அவர்களை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தது…
/*காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா வரம் நாளெல்லாம் இனி மதனோர்சவம் வலையோசைதான் நல்ல மணிமந்திரம் நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம் — ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*/