top of page

சந்திக்க வருவாயோ?? 30

அத்தியாயம் 30

/*கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ*/


”இனி வாழ்நாள் முழுதும் நான் சொல்றதை மட்டும் தாண்டி நீ கேட்கனும்…. “ என்று திமிரான குரலில் கர்வத்துடன் சொன்ன ராகவை எதிர்த்து பேச ’நா’ நினைத்த போதிலும்…. மனம் அவனிடம் எதையோ எதிர்பார்த்து…. அவனிடம் அது கிடைக்காமல் போன ஏமாற்றம் சந்தியாவை அடியோடு கொல்ல….ஏனென்று தெரியாத மனவலி… “தன் தாயின் நிலைதான் இனி நமக்குமோ” என்றெல்லாம் யோசித்தவள் தன்னையுமறியாமல் “ரகு” என்றாள்… மெல்லிய குரலில் விசும்பலாக…. தன் சம்மதம் இன்றி தன்னை ஆள நினைத்தவனை… தடுக்க முடியாமல் அவளையும் மீறி குரல் நடுங்க… கண்களில் ஈரம் கசிய… ஆனால் அவனோ எதையும் கண்டு கொள்ளாமல்… அவளை வலுக்கட்டாயமாக தன் கீழ் கொண்டு வந்தவன் அவளை நோக்கி குனிய… ”ரகு… நோ” என்று அலறியபடி கட்டிலில் இருந்து எழுந்தவளின்… முகமெங்கும் வியர்வை முத்துக்கள்… பயத்தில் உலர்ந்த உதடுகளை ஈரமாக்கிக் கொண்டவள் “ஊப்ப்ப்ப்… கனவா” என்று நெற்றி வியர்வையைத் துடைத்தவளின் இதயமோ தாறுமாறாக அதன் லப்டப் ஓசையை பதிவு செய்ய… அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே கவிழ்க்க… அப்படியும் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை… சற்றுமுன் நடந்ததெல்லாம் கனவுதான்.. நிஜமல்ல என்று மூளை உணர்ந்தாலும்… அவள் மேனி உணரவில்லை போல … அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருப்பதை அவளால் நிறுத்த முடியவில்லை.. கனவின் தாக்கம் இன்னும் இருக்க படபடப்பு அடங்கவில்லை… மூச்சு விடவே முடியாதது போல் இறுக்கமாக இருப்பது போல தோன்ற… அருகில் அடித்துப் போட்டாற் போல படுத்திருந்த வசந்தியை தொந்திரவு செய்யாமல்… பார்த்து கவனமாக எழுந்தவளுக்கு சற்றே வெளிக்காற்று படும்படி… வெளியில் போய் நின்றால்…. சற்று இந்த நிலைமை மட்டுப்படும் என்று தோன்ற… வேறு எதையும் யோசிக்காமல்… அறையில் இருந்து வெளியே வந்தவள்… ஹாலைப் பார்க்க… அப்போதுதான் மண்டையில் சுளீரென்று உரைத்தது…. திருமணம் நடக்க 2 நாட்களே இன்னும் இருக்க… அங்கும் இங்குமாக பொருட்கள் பரப்பிக் கிடக்க… கிராமத்திலிருந்தும் வெளியூரில் தங்கி இருந்த உறவினர்கள் கூட்டம் வேறு… மிரட்டிய கனவில் இருந்து தப்பிக்க நினைத்து வெளியில் வந்தவள்… உறவினர்கள் கூட்டத்தைப் பார்த்ததும்… அப்படியே பின்வாங்கினாள்… அர்த்த ராத்திரியில் இப்படி இவள் உலாவுவதைப் பார்த்தால் வேறு வினையே வேண்டாம்… உணர்ந்தவள்… மீண்டும் தன் அறைக்குள்ளேயே போய் முடங்கியவள்… நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு… அலுப்பில் உறங்கிக் கொண்டிருந்த தாயைப் பரிதாபமாகப் பார்த்தபடியே இருந்தாள்.. அதிலும் இத்தனை பேர் முன்னிலையில்… தன் தந்தை ஏவும் ஏவல்களை எல்லாம் சலிப்பின்றி மற்றவர் அறியாவண்ணம் புன்னகை முகமூடி அணிந்து செய்து முடிக்கும் பாங்கு… தாய் உறங்கும் போது அந்த புன்னகை முகமூடி இல்லை… அருகில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் தன் தாயையே பார்த்தபடி இருந்தவளுக்கு… தாயின் நினைவுகள் மனதை பின்னோக்கி இழுத்துச் செல்ல… முயன்று அடக்கினாள்… இப்போதைய தன் நினைவுகளில்…. இன்னும் ஒரே இரவுதான்… தன் தாயுடன்… இந்த வீட்டில்… அதன் பிறகு… நினைத்தபோதே உள்ளுக்குள் கிலி பரவியது சந்தியாவுக்கு… இந்த இலட்சணத்தில் சற்று முன் வந்த கனவு வேறு… கனவா… இல்லை இந்த ஒரு வாரமாக… அதாவது ராகவ்வை பார்த்துவிட்டு வந்த பின்னர் அவன் நடந்த விதத்தில் இவளுக்கிருந்த மனநிலையில்… வந்த எண்ணங்களோ… திருமணப் பெண்ணாக சந்தோஷ கற்பனைகளில் உறக்கம் தொலைக்க முடியாமல்… ராகவ் பற்றிய கவலையான எண்ணங்களில்… தனது நிம்மதியைத் தொலைத்து… அதன் தொடர்ச்சியாக உறக்கத்தையும் தொலைத்து… மேலும் யாரிடமும் சொல்லமுடியாமல் தனக்குள்ளே வைத்து வேறு மனம் புழுங்கிக் கொண்டிருக்க… அதுவே அவளை முற்றிலுமாக களை இழக்க வைத்திருந்தது… இதில் காதம்பரிக்கு வேறு திடிரென்று பிரசவ வலி வந்துவிட… அதில் சிக்கல் ஏற்ப்பட்டு… அறுவைச்சிகிச்சை , குறைமாதக் குழந்தை என.. அந்தப் பிரச்சனைகளும் வேறு அவளுக்கு இன்னும் மன அழுத்தத்தை அதிகப்படுத்த…. குறைந்தபட்சம் காதம்பரியிடம் சொல்லியாவது மனதை இலகுவாக்கியிருப்பாள்… ஆனால் அதற்கும் வழி இல்லை.. நிரஞ்சனாவிடம் அந்தரங்கங்களை எல்லாம் சொல்லும் அளவிற்கு பழகவும் இல்லை… அதிலும் ராகவ் நடந்து கொண்ட முறையை அவளிடம் சொல்லி ஆறுதல் தேடவும் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை… நினைவுகள் சற்று முன் வந்த கனவுக்குத் தாவ…. அது அவளை அன்றைய தினத்தில் ராகவ் நடந்து கொண்டதை விட மூர்க்கத் தனமாகவே காட்சி அளிக்க… அன்று அவனைத் தள்ளி விட்டு ஓடி வந்து விட்டாள்… ஆனால் இனி… அதாவது தன் வாழ்நாள் முழுவதும்… எப்படி அவனைச் சமாளிப்பது… ”மனைவி ஆகி விட்டாய்… இனி என்ன சொன்னாலும் நீ கேட்க வேண்டும்…. என்ற ஆண் வர்க்கத்தின் அடிமைத்தனமாக அவளை ஆட்க்கொண்டால்… இதுவரை ராகவ்வை அவள் விளையாட்டுத்தனமாகவே எதிர்கொண்ட காட்சிகள் கண்களில் தோற்ற பிம்பமாக தோன்றி மறைந்திருக்க… கண்களை மூடி அந்த விளையாட்டுத்தனம் நிரம்பிய ரகுவை தன் கண்களுக்குள் நிரப்ப முயன்று தோற்றுப் போனாள் என்றே சொல்லலாம்… அன்று அவளை தனக்குள் கொண்டு வந்து அடக்கிய அவனின் வலியகரங்கள்… கனல் விழி… கணப் பொழுதில் தன்னை ஆக்கிரமித்த விதம்… மூடிய கண்களில் விழி நீரை வெளியேற்ற ஆரம்பித்து இருக்க… இவள் விலக்கிக் கொள்ளவே முடியாமல்… ஆட்கொண்ட விதத்தை நினைக்க.. இலகுவானவன் என்று இதுநாள் வரை இவள் நினைத்து வைத்திருந்த மாய பிம்பத்தை அவனின் வலிய உதடுகளின் அழுத்தமான முத்தம் உடைத்தெறிந்த அந்த கணத்தை நினைத்தவளுக்கு உயிர் மொத்தமும் கருகியது…. எவ்வளவோ போராடினாள்.. ஆனால் அவன் இதழ் சிறையிலிருந்து தன்னை விடுவிக்க.. விடாமல்… தன் தேவை தீரும் வரை அவளை தனக்குள் சிறைப்படுத்தி இருந்தானே … அவனின் ஒரு கரம் லாவகமாக அவளைத் தன்புறம் இழுத்து தன்னோடு அணைக்க… மறு கரமோ அவள் இரு கைகளையும் சேர்த்துப் பற்றியபடி இருக்க.. அவன் வசம் இருந்த தன் இதழ்களை மீட்கவே முடியாமல் தொய்ந்தவள் அவனிடமே சரணடந்த கேவலமான அந்த நிகழ்வு இப்போதும் இவளை இம்சிக்க… அவமானத்தில் குன்றினாள் சந்தியா… தலை விண் விண்ணென்று வலியில் தெரித்தது…. மனம் இணைந்தால் தான் தேகம் இணைய முடியும் என்ற எண்ணம் மூன்றாவது முறையாக சுக்கு நூறாக்கப்பட்டிருக்க…. அதிலும் இப்போது அது தனக்கே நடந்திருக்க… அந்த உண்மை அவளை துண்டு துண்டாக கிழித்திருக்க…. அது தந்த விரக்தியில் மொத்தமாக தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தாள் சந்தியா… திவாகர், முரளி என அவள் கண்ட ஆண்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்… அந்த வகையில் தனக்கும் ஒருவன் அது போல கிடைக்க வேண்டும் என்ற பேராசை எல்லாம் படவில்லை அவளுக்கு கிடைத்த அனுபவங்களில்… ராமன் போல் வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை இன்றைய சூழலுக்கு… வரப்போகிறவன் எப்படி இருக்கவேண்டும் என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை… குறைந்த பட்சம் அவளைத் திருமணம் செய்யும் போதாவது அவளுக்கானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே… இந்த எண்ணங்கள் தான் ராகவ்வை திருமணம் செய்ய எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் சம்மதம் சொல்ல வைத்தது எனலாம்… தன் கண்முன்னே ராகவ் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் அதுவும் தன் சகோதரியிடமே காதல் என்று கண்களில் ஏக்கம் வழிய சுற்றித் திரிந்தது தெரிந்தும், ஒரு பெண்ணை அணைத்து நின்றதைப் பார்த்த போதும்… அவனைச் சூழ்ந்து… அவன் கன்னங்களில் இதழ் பதித்த பாவையரைப் பார்த்த போதும்…. அவன் அடிக்கடி மாடல்களை அழைத்துக்கொண்டு போட்டோ ஷூட் என்று வெளியூர்.. வெளிமாநிலம் ஏன் வெளிநாடு வரை போவது அவன் தொழிலில் வழக்கம் எனத் தெரிந்தும் திருமணம் செய்ய சம்மதித்தாள் என்றால்… அதன் காரணம் அவள் மட்டுமே உணர்ந்தது… ஆனால் இப்படிப்பட்ட ஒருவனை ஏற்றுக்கொள்ள முடிந்த அவளால் வலுக்கட்டாயமாக அவன் தன்னை ஆக்கிரமிப்பதை அவளால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடிய வில்லை … எல்லாவற்றையும் சமரசம் செய்து வாழும் முறைக்கு பழகியவள்.. இல்லை பழக்கப்படுத்திக் கொண்டவள்தான்… அதற்க்காக எல்லாவற்றையுமே இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்… அது முடியாது என்று அவளுக்கு உணர்த்தி இருந்தான் ராகவ்வே அவனது நடவடிக்கைகளால்… இவளுக்கே இவளுக்கான பிரத்யோக… நுண்ணிய உணர்வுகள்… இன்று அவனால் தட்டி எழுப்பப்பட்டு… அதைச் சமரசம் செய்ய முடியாமல் உணர்வுகளின் அழுத்தத்திற்கு முற்றிலும் மூழ்கி இருந்தவளை… அருகில் இருந்த அவர்களது திருமணப் அழைப்பிதழில்… இருந்த மணமகன் ’ராகவரகுராமன்’ மணமகள் ’சந்தியா’ என்று அந்த விளக்கு ஒளியிலும் மிளிர்ந்த எழுத்துக்கள்… அவளை நோக்கி… மினுமினுத்து புன்னகைக்க… அதை எடுத்தவளின் விரல்கள்… அவளை மீறி… ’ராகவரகுராம்’ என்னும் எழுத்துக்களை தடவியதை அவளால் தவிர்க்க முடியவில்லை… “நீயாவது என்னோட முகத்தில உண்மையான புன்னகையை கொண்டு வருவேனு எதிர்பார்த்தேன் ரகு…. ஆனால் நீதான் என்கிட்ட இருக்கிற போலியான முகமூடியை நிரந்தரமாக்கப் போகிறாய்னு எனக்குத் தெரியாம போயிருச்சு ரகு… உன்னை வேண்டாம்னு சொல்லி இந்தத் திருமணத்தை நிறுத்தவும் முடியலை… உன்னோட என்னைக் காம்ப்ரமைஸ் பண்ணி வாழவும் முடியுமானு தெரியல…. எனக்காக என்னை ஏத்துக்க ட்ரை பண்ணவே மாட்டியா ரகு… என் அம்மா வாழாத வாழ்க்கையை எனக்கு வாழ்ந்து பார்க்க ஆசை… அதை அவங்களுக்கு காட்டனும்னு ஆசை…. அது முடியாதா… எனக்குப் பெரிதாகவெல்லாம் ஆசை கிடையாது… என்னை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும்… அது நீயாக இருக்க வேண்டும் இப்போது” என்றவளின் நினைவுகளில் ஹரி வந்து போக… கசந்தது மனம்… “தன்னை ஏற்றுக் கொள்பவன் இப்போது ரகுவாக மட்டுமே இருக்க வேண்டும் … அவன் மட்டுமே தன்னை புரிந்து கொள்ள வேண்டுமென்று…” என்று ஏன் தன் மனம் ஏங்குகிறது… ” தவித்தாள் சந்தியா விடைதெரியாமல்… மனம் கருகி அவள் மனம் தவிக்க… ’ராகவரகுராமன்’ பெயர் தொட்ட விரல்களோ ஜிகினா முலாம்களை பூசி அவளைப் பார்த்து பளபளத்தது..… ராகவ் பெயர் தொட்ட விரல்கள் பொய் ஜிகினாக்களில்தான் மிளிர்ந்தன… ஆனால் அவன் உளம் தொட்ட பின் இவள் வாழ்க்கையே சந்தோஷ வர்ண முலாம் பூசி ஜொலிக்கப் போவது தெரியாமல்… பேதைப் பெண் கவலையில் தன்னையே முழ்கடித்துக் கொண்டிருக்க… ராகவ்வோ முற்றிலுமாகத் தன்னைத் திருமண வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டிருந்ந்தான்…. இரண்டு திருமணங்கள் ஒரே வேளையில் என்பதால்… தந்தைக்கு வேறு உடல்நிலை சரியில்லாத காரணம் என்பதால் நிற்கவே நேரம் இல்லை… அவன் மீடியா துறையைச் சார்ந்தவர்களில் மிகவும் சொற்பமானவர்களையே அழைத்திருந்தான் பெரும்பாலானவர்களை அழைக்கவில்லை… வரவேற்ப்புக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று தவிர்த்த போதும்… அலைச்சல் குறைந்தபாடில்லை… இடையிடையே சந்தியா ஞாபகம் வந்த போதும்… அவள் கோபத்தில் வைத்துவிட்டுப் போயிருந்த இதழ் அச்சாரம் மட்டுமே அவனின் எதிர்கால திருமண வாழ்க்கையின் நம்பிக்கை அச்சாரத்தைக் கொடுத்திருக்க… நிம்மதியாக தன் திருமண வேலைகளை எதிர்கொண்டான்… தன்னவளை சந்திக்கும் திருமண நாளை எதிர்பார்த்தபடியே… ------- பயந்து கொண்டே இருந்தாள் நிரஞ்சனா… சிவா, சந்தியா விசயமாக என்ன சொல்வானோ… என்ன சொல்வானோ என்று… சிவா டெல்லி கிளம்பும் முன் சந்தியா விரைவில் டெல்லிக்கு வரவேண்டும்… தான் அங்கு சென்றதும்… நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும் போது அவளை இது தொடர்பாக தொடர்பு கொள்வதாகவும்… என்ன செய்ய வேண்டுமென்று அப்போது சொல்வதாகவும் கூறிவிட்டுச் சென்றவன்… இதுவரை அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை… இதோ சந்தியாவின் திருமண நாள் நாளை.. காலையில் இருந்தே மனம் சஞ்சலமிட்டுக் கொண்டிருந்தாலும்… நாளை வரை சிவாவிடம் இருந்து தப்பித்து விட்டால் சந்தியா ராகவ்வின் திருமதி ஆகிவிடுவாள்…. இன்னும் 24 மணி நேரம் இருக்கிறதே என்ற கவலை தான் அவளுக்கு… நேற்றைய தினம் வரை சிவாவிடம் இருந்து எந்த கட்டளைகளும் வராமல் போக.. இன்று கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நிரஞ்சனாவுக்கு யுகங்களாகவே இருக்க… அவளுக்குத் தெரியும்.. … தான் சந்தியாவுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ஒதுங்கினால் கூட வேறு யாரையோ வைத்து சந்தியாவை தன் கஸ்டடியின் கீழ் சிவா கொண்டு வந்து விடுவான் என்று… நிரஞ்சனா என்று வரும்போது அவள் ஒரு பெண் என்பதை மையமாக வைத்து சிவா திட்டமிடுவான்… அதனால் சந்தியாவுக்கு பெரிதாகத் கஷ்டங்கள் இருக்காது…. இதுவே குகனை வைத்து திட்டமிட்டால் .. சந்தியாவுக்கு இன்னும் கஷ்டம் அதிகம் ஆகுமே… மனதில் பிரார்த்திப்படியே இருந்தாள்.. சந்தியா ராகவ்விடம் சேர்ந்து விட்டால் அப்போதும் பிரச்சனை தீராதுதுதான்… இருந்தும் இருவருமாக சமாளிப்பார்கள் என்று தோன்றியது… வேண்டுதல் இறைவனுக்கு கேட்டதா… நிரஞ்சனாவின் அலைபேசி… சிணுங்க… சாட்சாத் சிவாவே… எடுத்த எடுப்பிலேயே “நிரஞ்சனா… சந்தியாவை டெல்லிக்கு கொண்டு வரணும்…. “ என்ற போதே… “சார் அவளுக்கு … நாளைக்கு மேரேஜ்…” என்று மனசாட்சியோடு பதறியவளிடம்.. மனசாட்சியே இல்லாமல் … அதிகாரத்தை மட்டுமே காண்பித்தான் சிவா “என்ன பண்றது நீ உன் மேலதிகாரிட்ட இவ்வளவு தூரம் பேசுற அளவுக்கு… என் மேலதிகாரிட்ட பேச எனக்கு ரைட்ஸ் இல்லையே… தைரியமும் இல்லையே.. அவங்க சொன்னால் செய்ய வேண்டும்… அப்படித்தான் எனக்கு ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க…” என்றவனின் குரல் நக்கல் மட்டுமே இருக்க.. இவளது பதட்டத்தை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை…. “சார்..” என்று இப்போதும் தடுமாறியவளிடம் “ஒகே… நான் குகனிடம் பேசிக்கொள்கிறேன்… டெல்லிக்கு கிளம்புவதற்க்கு வழியைப் பார்” என்ற போதே “சொல்லுங்க சார்” சுரத்தில்லாமல் ஒலித்தது நிரஞ்சனாவின் குரல்… சிவாவின் கட்டளைகளை நிறைவேற்றும் விதத்தில்… ---- ராகவ் சந்தியா வரவேற்பு நிகழ்ச்சி… திருமணத்திற்கு பின்னர் 20 நாட்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தபடியால்… மிருணாளினி – சந்தோஷ்.. திருமண வரவேற்பு மட்டுமே அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது… நிரஞ்சனா சந்தியாவுடனே சுற்றிக் கொண்டிருக்க… சந்தியா தன் மனதின் சஞ்சலங்களை எல்லாம் ஒரு புறம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு… ராகவ்வையும் முடிந்தவரை தவிர்த்தபடி…. அலங்கார பதுமையாக வலம் வர… ராகவ் மணமகன் வீட்டினராக அனைவரையும் உபசரிக்கும் விருந்தோம்பல் ஒருபுறம்… வேலை ஒருபுறம் என ஓய்வின்றித் திரிந்தாலும்.. கண்ணுக்கு விருந்தாக தன்னவளின் காட்சி கிடைக்க உற்சாகமுடன் சுற்றித் திரிந்தவன்… சந்தியாவை நேருக்கு நேராக காணும் காட்சி கிடைக்கும் போதெல்லாம் முத்தத் தூதினை இதழ் குவித்து காற்றில் யாரும் அறியாமல் அனுப்பிக் கொண்டிருக்க… இவளோ அதிலேயே அரண்டவளாக அவன் பக்கமே தலை வைத்து படுக்காமல் தலைமறைவாகும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் ராகவ் சந்தியாவை தன்னோடு சேர்த்து தனிமைப்படுத்தினான் நவீன கால வழக்கமாகிக் போன போட்டோஷூட் என்னும் பழக்கத்தால்… வேறு வழி இன்றி… நிரஞ்சனா மற்றும் சில தோழிகளோடு சேர்ந்து… புகைப்படம் எடுக்க அலங்காரம் செய்து வந்த சந்தியாவைப் பார்த்து இவன் புன்னகைத்து வைக்க… அவளோ அந்தப் புன்னகை எல்லாம் அவள் கண்பார்வையிலே படாதது போல நின்றிருந்தாள்… உயிரற்ற பதுமை போல ஃப்ரெண்ட்ஸ்… சந்தியாவை நான் பத்திரமா அனுப்பி வச்சுடறேன்… ஜஸ்ட் 1 ஹவர்… உங்க ஃப்ரெண்ட் ஐ மீன் என் ஆளு கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணினா… ஹால்ஃப் அன் ஹவர் தான்… முடிஞ்சிரும்… நான் பார்த்துக்கிறேன்… ஹெல்ப் பண்ண என் டீம்லயே ஆள் இருக்காங்க…. என்று சந்தியாவை மட்டும் அவர்களிடம் இருந்து தன்வசமாக்கியிருக்க… ”நிரஞ்சனா … இந்தா என் போனை வச்சுக்க..” என்றவள்.. நீ கொடுத்தேல்ல அந்த கூல்டிரிங் பாதிதான் குடித்தேன்… ஒரு மாறி டேஸ்ட் நல்லா இல்லை வச்சுட்டேன்… “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ”சந்தியா வா போகலாம்” என்று பேசிக் கொண்டிருந்தவளை ராகவ் அப்படியே அழைத்துப் போக… நிரஞ்சனாவுக்குள் இப்போது சந்தியாவின் வார்த்தைகளில் பதட்டம் வந்திருக்க… ராகவ்வோடு போகும் சந்தியாவையே பார்த்திருந்தாள்.. கண்களில் நீரோடு… சந்தியா வாழ்க்கை நிரஞ்சனாவோ … சிவாவோ முடிவு செய்வதல்ல… என்பதை உணராமல்…. சற்று முன் தான் மிருணாளினி… சந்தோஷ் போட்டோ ஷூட் முடிந்திருக்க…. இனி இவர்களுக்கான பிரத்யோக புகைப்பட பதிவுகள்… மிருணாளினியையும் சந்தோஷையும் இணைத்து புகைப்படம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது இவனுக்கு… அதில் களைத்துப் போனவன் இப்போது தங்கள் போட்டோ ஷூட்டுக்கு ஆயத்தமாக உடை மாற்றி வரப் போனான்… அவளை அங்கு விட்டு விட்டு… ராகவ்வின் டீம் தான் போட்டோ ஷூட் எடுக்கவும் தயாராக இருந்தனர்… கிட்டத்தட்ட நான்கைந்து பேர் இருக்க… சந்தியாவுக்கு இன்னும் பதட்டமாக இருந்தது. இப்போது… இருந்தும் இத்தனை பேர் இருக்க.. ஓரளவு தைரியமாக ஆனவள்… ராகவ்வை தனியே சந்திப்பதைக் காட்டிலும் இது பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டாள்… சில நிமிடங்களிலேயே…. உடை மாற்றி வந்தவன்… மணமகனாக இல்லாமல்… தனது குழுவுக்கு… ஆணைகளை பிறப்பிக்க ஆரம்பித்தான்… ”சந்தியாக்கு ஃபுல் வியூ தான் ரொம்ப கரெக்டா இருக்கும்…. ஃப்ரண்ட் அண்ட் பாக்… சைட் வியூ எல்லாமே… ஃபுல் ஆங்கிள் தான் இருக்க வேண்டும்… “ என ஏதேதோ சொல்ல…. இவளுக்கோ வியர்த்தது…. ராகவ் முதலில் சந்தியாவை மட்டும் எடுக்கும்படி சொல்லி விட்டு.. சந்தியாவுக்கு அருகில் நில்லாமல்… கேமராவை பார்த்துக் கொண்டே தனது டீமுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்க… சந்தியாவிற்கோ பதட்டத்தில்… எந்த ஒரு ஸ்னாப்பிற்கும் அவளது பாவனைகள் ஒத்து வராமல் போக… ராகவ் தான் டென்சனானது இப்போது… ராகவ்வின் ஷூட்டிங்கில் மட்டும் இப்படி ஏதாவது ஒரு மாடல் சொதப்பியிருந்தால் அவ்வளவு தான்… அதோடு கட்… அந்த மாடல்… தொழில் என்று வந்து விட்டால்.. அதற்கேற்ற அணுகுமுறையோடு இருக்க வேண்டும் என்பது இவன் எண்ணமாக இருக்கும்… இவன் சொல்வதற்கேற்ப கோணங்களில் நிற்க தயங்கினாலோ… இல்லை சிரமப்பட்டாலோ… அவ்வளவுதான்… கேன்சல் செய்து விட்டு போய்க் கொண்டே இருப்பான்… மாடல் விசயத்தில் இருக்கலாம்… மனைவி விசயத்தில் கோபம் இருக்கலாமா… நிற்பது மாடல் அல்ல… தன் வருங்கால மனைவி என்று மூளைக்குச் சொல்லிக் கொண்டவன்… ”ஒகே கைஸ்… கொஞ்சம் நெர்வஸ் ஆகுறாங்க… முதல்ல எனக்கு சிங்க்ள் சூட் வைங்க…” என்றபடி சந்தியாவிடம் வந்தவன்… “சந்தியா… கொஞ்சம் ரிலாக்ஸா இரு… என்னைப் பாரு… எந்தெந்த ஆங்கிள்ள எடுக்கிறாங்க… நான் எப்படி போஸ் கொடுக்கிறேனு பாரு… அதைப்பார்த்து நீ பிரிப்பேர் பண்ணிக்கோ…. ” என்று அறிவுரை வழங்க.. மிரண்ட விழிகளோடு… ராகவ்வை பார்த்து தலைஆட்டியவள். அவனைப் பார்க்க ஆரம்பிக்க..… பத்தே நிமிடத்தில் அவனுக்கான அத்தனை கோணங்களிலும் எடுத்து முடிக்கப்பட்டிருந்தது… அதே துறையில் இருப்பவனுக்கு… அதுவும் மாடலாக இருப்பவனுக்கு புகைப்படம் எடுப்பது புதிதா என்ன…. சட் சட் என்ற க்ளிக் ஒலியில் முடிந்து விட… சந்தியா இப்போது இன்னும் பதட்டமானதுதான் மிச்சமாகிப் போனது… ராகவ்வின் செயல்களில்… அவனது இயல்பான கோணங்களில்… இப்போது சந்தியா இன்னும் அதிகமாகத் தடுமாறியவளாக… மோசமாக பாவனைகளில் சொதப்பி வைக்க… ராகவ்வின் முகம் புகைப்பட நிபுணனாக கோபத்தில் வெளிற ஆரம்பித்து இருக்க… இருந்தும் கட்டுப்படுத்தியவன்… “சந்தியா… ஒரு சாதரண ஆங்கிள் பார்க்கிறதுக்கே இவ்ளோ டென்சனா.. இது கூட முடியாத” என்று கொஞ்சம் குரல் உயர்த்திக் கேட்க… சட்டென்று சந்தியாவின் முகம் அவமானத்தில் சுருங்க… ”இவளை எல்லாம் ப்ரீ வெட்டிங் சூட்டுக்கு இழுத்துட்டு போயிருக்கனும்… மொரிஷியஸுக்கு இவளக் கூட்டிட்டி போயிருந்தால் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்திருக்கலாமோ” என்று இப்போது தோன்ற.. “ஹ்ம்க்கும்… நீ உன் ஆள எப்படி தவிக்க விடலாம்னுதானேடா.., மொரிஷியஸ் ப்ராஜெக்டுக்கே அக்செப்ட் பண்ணியது” என்று அவனது மனசாட்சி… நியாயமாக அவனை அடித்துப் பேச… தனக்குள் ஒருவாறு தணிந்தவன்… தன்னவளையும் தணிக்க எண்ணினான்… அவள் முகம் வெளிறியதை உணர்ந்தவனாக… சந்தியாவின் அருகில் வந்தவன்… அவளிடம் எதுவும் பேசாமல்… “ரவி… கப்புள் ஷூட் எடுத்துறலாம்… நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்… கொஞ்சம் நார்மலாவாங்கன்னு நினைக்கிறேன் “ என்று சொல்லியபடியே சர்வ சாதரணமாக அவள் இடையில் கைவைக்கப் போக… பதறி விலகியவளை… முறைத்தபடி… தோளில் கைவைத்து… தன்னருகே கொண்டுவந்தவன்… அவளையும் அதே போல் நிற்கச் சொல்ல… சுத்தமாக முடியவில்லை அவளால் … அவன் மூச்சுக்காற்று மிக அருகில் இவளைத் தீண்ட… இவளுக்கோ மூச்சையே அடைத்தாற் போல இருக்க… அவஸ்தையான உணர்வு அடிவயிற்றில் சுழல ஆரம்பிக்க… அது என்னவோ செய்வது போல் இருக்க… தடுமாற ஆரம்பித்திருந்தாள் சந்தியா… ”இத்தனை பேர் இருக்கும் போது நான் என்ன பண்ணப் போகிறேன்… இப்படியே ஆடாம அசையாமா அப்படியே இரு… நீ கேமராவைப் பார்க்காத… என்னை மட்டும் பாரு… ” என்றபடியே உணர்வுகளே இல்லையா என்பது போல.. ஒன்றுமே நடவாதது போல்… புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க… அட்லீஸ்ட் அவனையாவது பார்த்து வைப்போம்… என்று சந்தியா முயற்சிக்க… அவன் கண்களை நேரடியாக சந்திக்க முடியாமல்… தடுமாற்றத்தில் தான் முடிந்திருந்தது… அவனோ.. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்… கொஞ்சம் கூட தடுமாற்றம் இன்றி அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அழுத்தம் கொடுத்து அணைக்க முயற்சிக்க… இவளுக்கோ அது முடியாமல் நெளிய ஆரம்பிக்க… ஏனோ முடியவில்லை அவளால்… கேமராவின் ஒளிக்கற்றை இவளைத் தன்வசப்படுத்த முடியாமல் தோல்வியையே காண… புகைப்படக் குழுவினர் அதிருப்தியை வெளிக்காட்ட… தன் அருகில் நின்ற ராகவ்விடம்… திக்கித் திணறியபடி… ”ரகு… இ..இது வேண்டாமே… இத்தனை பேர் முன்னால எனக்கு இந்த மாதிரி போஸ் கொடுக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு ரகு” என்று சொல்லி முடிக்க.. ராகவ் முகத்தில் அப்படி ஒரு கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது… அவனைப் பொறுத்தவரையில் இதெல்லாம் ஒரு சீனே கிடையாது… சாதாரண அணைப்பு… இவளுக்கோ அதுவே பெரிய விசயமாக இருக்க… எதிர் எதிர் துருவங்களாக மாறி இருந்தனர்… ஒருவேளை ராகவ் அந்தத் துறையில் இல்லாமல் இருந்திருந்தால்… அவனுக்கும் படபடப்பு இருந்திருக்குமோ தெரியவில்லை…. சந்தியாவை அவனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நிற்க வைத்திருந்தது அவன் சார்ந்த துறை.... “போஸ் கொடுக்கமுடியலையா… இல்லை என் பக்கத்தில நிற்க முடியலையா” வார்த்தைகளை பற்களுக்கு இடையே கடித்து துப்பினான்… சுற்றி நின்ற யாரும் கேட்க முடியாத உணர முடியாத பாவனையில் “எனக்கு பழக்கமில்லை ரகு… ஓகே அதுக்காக பழகிக்கனு சொல்லி என்னை வெறுப்பேத்தாத… உன்னால ஈஸியா பண்ண முடியுது பட் என்னால முடியல” எனும்போதே… “நீ போட்டோவே எடுக்காத பொண்ணு இல்லை சந்தியா.. ஜஸ்ட்… இது இப்போ எல்லா மேரேஜ்லயும் வழக்கமாத்தானே இருக்கு.. மத்தவங்களுக்கு கூட… ஏன் சந்தோஷ் மிருணாவுக்கு கூட ரெண்டு பேருக்கும் இந்த அனுபவம் புதுசு.. ஃபர்ஸ்ட் தயங்கினாங்க… ஸ்னாப்ஸ் எடுக்க வைக்க… ட்ரெயின் பண்ணினோம்… அண்டர்ஸ்டேண்ட் பண்ணிட்டு.. அவங்களே கோ ஆபரேட் பண்ணினாங்க… 1 ஹவர் ல அவ்ளோ ஸ்னாப்ஸ் எடுத்துட்டோம்… ஈவன் நான் தான் அவங்களுக்கே கைட் பண்ணினேன்… நான் இந்த பீல்ட்ல எக்ஸ்பீரியண்ஸ் உள்ளவன்… நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல… ஒண்ணும் இல்லை… ரிலாக்ஸ்… ஜஸ்ட் நார்மல் ஸ்டில் தான்… நான் இருக்கேன்ல.. “ என்று பெரிய லெக்சர் கொடுத்து அவளை நிற்கவைக்க முயல…. அவன் அப்படி இருப்பதுதான் இவளுக்கு மிகப்பெரிய தடைக்கல்லே…. புரிந்து கொள்ளாமல் அவன் பேச… இவளோ…. அடம்பிடித்தாள் அவனிடம்… முடியாதென்று… ஏன் என்று தெரியவில்லை… ராகவ்வின் அருகில் நிற்கும் போதே அவளுக்கு நடுக்கம் வந்திருந்தது… அன்று இவளாகவே இதழ் முத்தம் வரை கொடுத்து வந்திருந்த போதும்… மேலும் அது கூட காரணமாகியிருந்ததோ என்னவோ… அவன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம்… அவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியங்களை விட இவள் செய்துவைத்திருந்த காரியம் தான் அவமானத்தில் குற்ற உணர்ச்சியில் குறுக வைக்க… இப்போது அவன் அருகில் நிற்க கூட முடியாமல் மனம் குமைந்தாள் என்று சொல்லலாம்… அதெல்லாம் புரியாமல்… இவனோ ஆடிக் கொண்டிருந்தான்… “நீ ரொம்ப சீன் போடற சந்தியா… சும்மா கை மேல போடற மாதிரிதான் ஸ்னாப்ஸ்.. புரிஞ்சுக்கோ” என்ற போதே… ‘மாட்டேன்’ என்று தலையாட்டியபடி பயத்தில்… இவள் விழிகள் இன்னும் விரிய… இவனுக்கோ பற்றிக் கொண்டு வர… அதன் உச்சகட்டமாக “சோ… நீ அடங்க மாட்ட” என்று அவளிடம் சொன்னவன்…. கைதட்டி அழைத்தான் அவன் குழுவினரை… ”ரவி… லாங்க் ஷாட் வைங்க…. நான் சந்தியாவை லிஃப்ட் பண்ற மாதிரி… அண்ட் கிஸ் பண்ற மாதிரி சீன்ஸ்லாம்… என்னை மட்டும் ஃபோகஸ் பண்ணுங்க” என்று கடகடவென ஆணைகளை அவர்களிடம் பிறப்பித்துவிட்டு… “இப்போ என்ன பண்ணப் போகிறாய்” என்று சவால் விடுவது போல சந்தியாவைப் பார்த்தவன்… அவளை இழுத்துக் கொண்டு… அந்த மிகப்பெரிய அறையின் அடுத்த முனைக்குச்செல்ல… “ரகு… விளையாடாத…. இந்த மாதிரி சினாப்ஸ்லாம் எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க… அம்மா என்னைக் கொன்னுடுவாங்க” என்று இவளும் எகிற ஆரம்பிக்க… நின்றான் இவன்… ”நான் விளையாடல சந்தியா… இப்படித்தான் நான் எடுப்பேன்… நான் ஆயிரம் பேர இந்த மாதிரி ஸ்னாப்ஸ்ல எடுக்கிறவன்… என் வருங்கால மனைவியோட இந்த ஸினாப்ஸ் இல்லேனா… எனக்குதான் அசிங்கம்… சோ… கோ ஆபரேட் பண்ணு… எக்ஸ்பிரெஷன் நெனச்சு பயப்படாதா… உன்னை ஃபோகஸ் பண்ண மாட்டங்க… ” என்று இவனும் பிடிவாதம் பிடிக்க… இவளும் முடிவு செய்தவளாக தன்னைப் பிடித்திருந்த அவன் கைகளை சட்டென்று உதறியவளாக “நீ என்ன சொன்னாலும்.. நான் கேட்பேன்னு நினைக்கிறியா ரகு…” முடிவோடு … எதிர்த்து நின்றாள்… “கண்டிப்பா… அதிலும் நாளையில் இருந்து சர்வ நிச்சயமாக” என்றவனின் குரலும் அவளுக்கு இணையாக போட்டி போட்டு கர்ஜிக்க… ”அப்போ… நாளையில இருந்து பார்த்துக்கலாம்… இப்போ என்னை விட்ரு… எனக்கு இதெல்லாம் பிடிக்கலை…” என்று வெளியேற எத்தனித்தவளை யோசனையுடன் கோப முகமாகப் பார்த்தவன்… அவளை மறித்தபடி நின்று… “இப்போ எனக்கு நான் சொல்ற ஸ்னாப்ஸ்ல எல்லாம் நீ போஸ் கொடுக்கனும்… இல்லை வேற மாதிரி இன்னைக்கு பிரச்சனை ஆகிரும்… முடிவு உன் கைல… உன்னோட பிடிவாதத்தால… இல்லை என்னோட கோபத்தால… சந்தோஷ் மிருணாளினி மேரேஜ்ல பிரச்சனை வரணுமா சொல்லு” என்க… அவன் கேள்வியில் அதிர்ந்து நின்றவளை... கோபம் மாறாமல் இழுத்து வந்தவன்… கேமராவில் பதிவாகி இருந்த சந்தோஷ் மிருணாளினி ஸ்டில்சை எல்லாம் போட்டுக் காண்பித்தவன்… உக்கிரமான குரலில்… ”இதே மாதிரி அத்தனை ஸ்டில்ஸும் எனக்கும் வேண்டும்… உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்…” சந்தோஷ் மிருணாளினியின் புகைப்படங்களைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்… இதழ் தீண்டல், விரசமான அணைப்புகள் போன்ற அநாகரிக அந்தரங்க காட்சிகள் எல்லாம் இல்லாமல் நாகரீகமான முறையில் ஆனாலும் அந்நியோன்யமாக இருப்பது போன்ற காட்சிகள் தான் பதிவாகி இருந்தன… அவர்களைப் பார்க்கவே அவ்வளவு அழகாயிருந்தது… மிருணாளினியின் வெட்கமும்… சந்தோஷின் கம்பீரமும்… காதலுடன் ஒவ்வொரு புகைப்படமும் உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்க… தங்களை நினைத்துப் பார்த்தவள் தனக்கும் இதே போல் வெட்கமும் சந்தோஷமும் வருமா… வராது என்றே தோண… கண்கள் கலங்கி ராகவ்வைப் பார்க்க…அதைக் கண்ட ராகவ்வின் உள்ளமும் வெறுமை ஆகியதுதான்… இருந்தாலும்… சந்தியாவை விட வில்லை… அவளைக் கட்டாயப்படுத்தி… பல்வேறு கோணங்களில் இருவருமாக சேர்ந்து… புகைப்படம் எடுத்த பின் தான் விட்டான்…. எது நன்றாக வந்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தவனாக கிட்டத்தட்ட அரைமணி நேர போராட்டத்தின் முடிவில்… முற்றிலுமாக சோர்ந்து போய் நின்றவளிடன்… தேகத்தில் ஏதேதோ மாற்றங்கள்… நிற்கவே முடியவில்லை அவளால்… ஏதோ செய்கிறது நன்றாக உணர்ந்தாலும்… என்ன என்று தெளிவாக உணர முடியாத நிலை… ‘என்னாயிற்று எனக்கு” ஆராய்ச்சி நோக்கிப் போனவளை…… காதோரத்தில் ராகவ்வின் குரல் மீண்டும் இழுத்து வர… “பிடிக்கலைனா… எதுக்குடி.. மேரேஜ்க்கு ஒத்துகிட்ட… அன்னைக்கே வேண்டாம்னு சொன்னேன்ல… சொல்லியிருக்கலாமே… இப்போ என் உயிரையும் எடுத்து… “ என்று ஆரம்பித்தவன்..… அவள் நின்ற கோலம் பார்த்து… “இனி நீயும் சரி நானும் சரி இதில இருந்து தப்பிக்க முடியாது… ” எனக் குரலில் மீண்டும் மென்மையைக் கொண்டுவந்திருக்க… “ரகு… எனக்கு என்னமோ” என்று இவள் ஆரம்பிக்கும் போதே… திவாவர்.. மோகனாவுடன் உள்ளே வர… சந்தியா வார்த்தைகளை நிறுத்தினாள்…. ரகு… முடிஞ்சதா இல்லையா… எங்க வீட்டுப் பொண்ண அனுப்புப்பா… நாளைக்கு நீயே வேண்டாம்னு சொன்னாலும்… நாங்க வச்சுக்க மாட்டோம் என்று கிண்டல் பேசியபடி உள்ளே நுழைய.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாக அவர்களுடன் கிளம்பிவிட்டவளை… தடுக்க முடியாதவனாக கோபத்தில் கண்சிவந்தவனாக இவன் நிற்கத்தான் முடிந்தது..… கோபத்தில் சந்தியாவின் மாறுதல்களை கணிக்கவே முடியாமல் போயிருந்தான் என்பதே உண்மை… --- நள்ளிரவு ஆகியிருக்க… சந்தியாவும் நிரஞ்சனாவும் மட்டுமே தனியே அறையில் இருந்தனர்… சந்தியாவுக்கு ஏனோ தூக்கமே வரவில்லை… திடீரென்று ஏதேதோ செய்தது… வயிற்றை பிரட்டிக் கொண்டு வருவது போல… இருக்க…. எழுந்தவளால் நிற்கவே முடியாதது போல… தலை பாரமாகி இருக்க… அந்தரத்தில் மிதப்பது போல உணர்வு.. “ரஞ்சி” என்றவளின் குரல் நைந்து ஒலிக்க… தடுமாறினாள் சந்தியா தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே முடியாமல்…. “எனக்கு என்னமோ பண்ணுது ரஞ்சி… வாமிட் வர்ற மாதிரி…. தலையெல்லாம் சுத்துது… திடீர்னு…. நான் ரெஸ்ட் ரூமுக்கு போகனும்” என்ற தடுமாறி எழுந்த போதே நிரஞ்சனாவின் பார்வை கூர்மையாகியது…. போட்டோ ஷூட்டுக்கு முன் சந்தியா குடிக்க குளிர்பானத்தை கொண்டு வந்து கொடுத்தவள்… அதில் சந்தியாவுக்கு மிதமான மயக்க மருந்தையும் கலந்து கொடுத்திருக்க… அதுவும் மெதுவாகவே வேலை செய்வதை உணர்ந்தவள் …. வேனில் தயாராக இருக்கும் படி…. வேகமாக குகனுக்கு மெசேஜ் செய்தவள்… சந்தியா குளியலறைக்குள் சென்றபின்.. சந்தியா இவளிடம் ஒப்படைத்திருந்த அவளது மொபைலில்… தான் சற்று முன் பதிவு செய்திருந்த ரெக்கார்டிங்கை மீண்டும் சரிபார்க்க… அது அவளது காதுக்குள் ஒலித்தது…. ”எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லைம்மா…. எனக்கு வேற வழி தெரியல வசந்தி….. ரகு இன்னும் பழைய விசயங்களை மறக்காம இருக்கான்மா… . அவன் என்னை எப்போதும் மன்னிக்க மாட்டான்மா… என்னைத் தேட வேண்டாம் “ பதிவு செய்த வாசகங்களை மீண்டும் தனக்குத்தானே கேட்ட போது நிரஞ்சனாவின் முகத்தில் முழு திருப்தி பரவியது சந்தியா ஓய்வறையிலிருந்து வெளியே வரக் காத்திருந்தாள்… மனசாட்சியை எல்லாம் கொன்று புதைத்துவிட்டு…. கடமையே கண்ணாக… காவல் துறை அதிகாரியாக….

/* ரத்தம் கொதிகொதிக்கும்

உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினள் மாது */



Recent Posts

See All
கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

 
 
கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

 
 
கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

 
 

Comments


© 2020 by PraveenaNovels

Developed by Varuni Vijay

© 2020 by PraveenaNovels

  • Grey Facebook Icon
bottom of page