இதயம் - 2
தூக்கம் தடைப்பட்டதின் எரிச்சல் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. மல்லியோ அதை உணரும் நிலையிலெல்லாம் இல்லாமல், “அம்முகிட்ட பேசணும்!” என்று சொல்ல, “என்ன அம்முவா!?” என்றவனின் தூக்கமெல்லாம் பறந்திருந்தது.
“ப்ளீஸ்! போனை அம்முகிட்ட குடுங்க!” மறுபடியும் அவள் இதையே சொல்ல,
எதிர் முனையில் பேசியவனோ அடக்கப்பட்ட கோபத்துடன், “ஏய்ய்ய்ய் யார் நீ? இப்பப்போய் அம்முவை கேக்கற?” என்று உறும,
மறுபடியும் அவள், “அம்மு எங்க இருக்கா?” என்று கேட்கவும்,
கோபத்தின் எல்லைக்கே சென்றவன், “ஏய் நீ எங்கிருந்து பேசற” என்று அடிக்குரலில் சீறினான்.
அதில், அழுகின்ற நிலைக்கே போனவள், “அம்மு எங்கடி இருக்க?” என்றவாறே போனை கட் செய்துவிட்டு, அப்படியே தூங்கியும் போனாள்.
அடுத்த நாள் காலை, தான் செய்துவைத்திருந்த குளறுபடிகள் எதுவுமே நினைவில் இன்றி, வழக்கம் போல் எழுந்தவள் குளித்து, தயாராகி, தனக்கும் தம்பிக்குமான உணவையும் தயாரித்து, லஞ்ச் பாக்சில் அடைத்தவாறே படித்துக் கொண்டிருந்த தீபனிடம்,
“டேய் தீபா லஞ்ச் பேக் பண்ணிட்டேன்டா வா சாப்பிட்டுக் கிளம்பலாம்” என அவனை அழைக்க,
இருவரும் பேசிக்கொண்டே உண்டு முடித்து அவன் பள்ளிக்கும் அவள் அலுவகத்திற்கும் கிளம்பினார்கள்.
அலுவலக பேருந்தில் அமர்ந்தவள், அம்மாவுக்கு அழைத்துப் பேசலாம் என்று போனை எடுக்க அப்பொழுதுதான் அவள் டையல்டு லிஸ்டில் ஒரு புதிய எண்ணிற்குக் கால் செய்திருப்பதை கவனித்தாள்.
அழைத்திருந்த நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு, ‘தூங்கும்போது, டச் ஸ்க்ரீனில் தெரியாமல் கை பட்டு, அழைப்பு போயிருக்கும்!’ என்று நினைத்தவள், கால் டியூரேஷனை பார்த்தால், மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தது!
‘மன்னிப்பு கேட்பதுதான் முறை!’ என்று கருதி அந்த எண்ணுக்கு, ‘சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ், மிஸ்டேக்கன்லி கால்டு!’ என்று மெசேஜ் செய்துவிட்டு, அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் பரிமளாவை அழைத்துப் பேசத்தொடங்கினாள் மல்லி.
ஆனால் எதிர்முனையில் அந்த குறுந்தகவலை படித்தவனோ ‘அவள் யார்?’ என்று யோசிக்கத் தொடங்கியிருந்தான்!
***
அன்று மல்லி, சவிதா, மேகலா மூவரையும் அழைத்திருந்தார் காஞ்சனா.
அனுமதி பெற்று அவரது கேபினுக்குள் மூவரும் நுழைந்தனர்.
அங்கே மணிகண்டனும் அமர்ந்திருந்தான். மூவரையும் அமருமாறு பணித்த காஞ்சனா, “இந்த ட்ரைனிங் பீரியட்ல உங்க மூணு பேருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு வந்திருக்கு.
நீங்க மூணுபேரும் தனித்தனியாக சில ட்ரெஸ்ஸஸ் டிசைன் பண்ணனும். மேனேஜ்மெண்டில் யாரோடது பெஸ்ட்டாக இருக்கோ அதை செலக்ட் செய்வாங்க.
அது கிறிஸ்மஸ், நியூ இயர், அண்ட் பொங்கல் டைம்ல விற்பனைக்கு வரும்.