Hi Friends,
Here is the second episode. Kindly share your valuable comments.
Episode-2
சாவித்ரியுடன் இணைந்து காலை உணவு வகைகளை மேசை மேல் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் தாமரை.
"பசங்க இன்னும் சாப்பிட வரலயா தாமர?" என்றவாறே இருக்கையில் வந்து அமர்ந்தவர், "பிரேக் ஃபாஸ்ட்க்கு என்ன செஞ்சிருக்க இன்னைக்கு" என்று கேட்டுக்கொண்டே ஒரு பாத்திரத்தை திறந்து பார்த்துவிட்டு, "ஐயோ, பூரியா?" என்று அலற, "ப்ச்... பூரி பசங்களுக்காக செய்ய சொன்னேன்ங்க. உங்களுக்கு ஆப்பம் இருக்கு. தொட்டுக்க ரெண்டுக்கும் காமனா குருமா" என்றவாறு அவருக்கு அவற்றை பரிமாறிய தாமரை, "இந்த பிள்ளைங்க ஏன் இன்னும் சாப்பிட வரலன்னு தெரியலையே" என்றார் சிறு சலிப்புடன்.
அன்று அவருடைய மாமனாரும் மாமியாரும் அங்கே வருவதாக இருக்க, அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துவைத்து அவர்களுடைய அறையை தயார் செய்ய வேண்டும். அவர்கள் வந்த பிறகு செய்ய இயலாது. சீக்கிரமாகக் காலை உணவை முடித்துக்கொண்டால் தேவலை என்றிருந்தது அவருக்கு. அதுதான் காரணம்.
அதற்குள்ளாகவே கையில் செல் போனும் காதில் ஹெட் செட்டுமாக மகள் அங்கே ஆஜராக, "ஹசி, சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் இதையெல்லாம் கழட்டி தூர வை" என சொல்லிக்கொண்டே அவளுக்கு பூரியை பரிமாறியவர், "இந்த பையன் ஏன் இன்னும் சாப்பிட வரல' என்று என தம்பியைக் குறிப்பிட்டு தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, "சத்யா" என்று குரல் கொடுக்க, "அவன் ஒரு பிசினெஸ் கால் பேசிட்டு இருக்கான்..மா முடிச்சிட்டு வருவான்” என கருணாகரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அன்னைக்கு பிடிக்காத காரியத்தை செய்ய வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையுடன், கையில் வைத்திருந்த கைப்பேசியை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்தவாறே வந்து உட்கார்ந்தான் சந்தோஷ்.
அவனைப் பின் தொடர்ந்து வந்து அவனுக்கு அருகில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தான், சத்யா என அனைவராலும் அழைக்கப்படும் சத்யநாராயணன்.
முதல் காரியமாக மருமகனுடைய உச்சி முடியை கலைத்து விட்டவன், "அக்கா, ஒரு நாப்பது அம்பது பூரியாவது செஞ்சியா? இல்லனா சந்து ஒருத்தனுக்கே போறாது" என்று வேறு சொல்ல, இடதுகையால் கலைந்த தன் கேசத்தை சரிசெய்தவாறே, "மாம்ஸ்!" என்றான் சந்தோஷ் சிணுங்கலாக.
அவனை அடக்குவதுபோல், 'சீண்டலை ஆரம்பிச்சிட்டியா?' என்பதாக சத்யாவை கருணா ஒரு பார்வை பார்க்க, அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், "யக்கோவ், சாப்பிடும்போது செல் போன கையில எடுத்தா என்னவோ உலகமகா குத்தம்னு எங்களுக்கு ஒன் ஹவர் ட்யூஷன் எடுப்ப, இந்த பப்பிளிமாஸ் சைலண்டா ஹெட் போன் போட்டுட்டு கேம் விளையாடிட்டு இருக்கு, கொஞ்சமும் கண்டுக்க மாட்டேங்கற" என மருமகளையும் தமக்கையிடம் வகையாக மாட்டிவிட்டான் சத்யா.
அவன் இலக்கு மாறாமல், "அடியேய்... முதல்லயே சொன்னேன் இல்ல. நீயே லாக் பண்ணி வெக்கறியா இல்ல ஹெட் போன் ஒயரை கட் பண்ணவா?" என தாமரை மகளை எச்சரிக்க, வேறு வழி இல்லாமல் அதை கழற்றி மேசை மேல் வைத்துவிட்டு, ஹாசினி சத்யாவை ஒரு தீ பார்வை பார்க்க, "அக்கா இவ என்ன முறைக்கறா பாரு" என அதற்கும் அவன் பஞ்சாயத்து கூட்ட, தலையில் கை வைத்துக்கொண்டார் கருணாகரன்.
தாமரைக்கு சிரிப்பு வந்துவிட, "சத்யா... சேட்டை பண்ணாம சாப்பிடு" என அவனை அடக்கியவர், "குட்டிப்பா, நீ என்ன இன்னைக்கு டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு கிளம்பி வந்திருக்க" என மகனிடம் தன் கவனத்தை திருப்ப,