அத்தியாயம்-18
சில நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்ட மகளைப் பார்க்கையில் 'எப்படி இதுபோல் சட்டெனக் கண்ணயர்ந்தாள் இவள்' என அதிசயமாக இருந்தது தாமரைக்கு. அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தார் அவர்
சத்யா அவனுடைய அறைக்குச் சென்றிருக்க, உட்கார்ந்தது உட்கார்ந்தபடி அப்படியே இருந்தார் கருணா. அவருக்கு அருகில் வந்து அமர்ந்தவர், "அவதான் அப்படி தையாதக்கான்னு குதிக்கறான்னா, நிதானமா யோசிக்காம நீங்களும் இப்படி உணர்ச்சிவசப்படறீங்களே ப்ச்" என ஆற்றாமையுடன் சொல்ல, "இப்ப என்ன சொல்ல வர தாமரை" என கேட்டார் கருணா கடுப்புடன்.
"அவ லவ் பன்றேன்னு உங்க கிட்ட நேருக்கு நேரா சொல்லக்கூட இல்ல, சாப்பிடாம சத்யாகிரகம் பண்ணான்னு, நான் சொன்ன எதையும் காதுல வாங்காம, அவசர அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க. இன்னைக்கு கண்ணீரும் கம்பலையுமா வந்து நின்ன உடனே, பொசுக்குன்னு போலீசுக்கு போறேன்னு கிளம்பறீங்க.
வேணும்னா வேணும் வேண்டாம்னா வேண்டாம்னு கை கழுவி விட்டுட்டு போக காதல், கல்யாணம் இதெல்லாம் விளையாட்டா போச்சா அப்பாவுக்கும் பொண்ணுக்கும்? இது என்ன ஒரே நாள்ல முடிஞ்சு போற சமாச்சாரமா உங்களுக்கு?
உங்க பொண்ணு ஒரு சரியான ஏடாகூடம் பிடிச்சவ! மாப்பிள்ளை அடிக்கற அளவுக்கு போயிருக்கார்னா, அந்த அளவுக்கு அவ என்ன செஞ்சுவெச்சான்னு அவங்கள கேட்டாதான தெரியும்" என தாமரை சொல்லிக்கொண்டே போக, "மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை, மண்ணாங்கட்டி மாப்பிளை, இதுல அவர் இவர்னு அவனுக்கு மரியாதை ஒரு கேடு" என முணுமுணுத்தவர்,
"அவளுக்கு என்ன தெரியும், அவ சின்ன பொண்ணு தாமர. நீ சொல்ற மாதிரி அப்படியே எடக்கா அவ ஏதாவது செஞ்சிருந்தாலும் பக்குவமா பேசி புரியவெச்சிருக்கணும். அது அவனால முடியலன்னா நம்ம கிட்டயாவது சொல்லியிருக்கணும். அப்பறம் நாமெல்லாம் எதுக்கு பெரியவங்கன்னு? எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கையை நீட்டற அளவுக்கு போயிருப்பான் அவன். என் பொண்ணுக்காக ஏன்னு கேட்க நாதி இல்லன்னு நினைச்சுட்டானா?" என அவரை தொடர்ந்து பேசவிடாமல் கருணாகரன் படபடவென பொரிய, அவரை கூர்மையாக பார்த்தவர், "பொண்ணுங்களுக்கு நாதி இருக்கா நாதி இல்லையான்னு யோசிச்சுதான் கையை நீட்டுவாங்களா. எல்லாம் ஒரு ஃப்ளோல வரதுதான? இதுக்கு பேர்தான் ஆம்பள திமிறுங்கறது... வேற என்ன?" என்றார் குதர்க்கமாக.
எதிர்பாரா நேரத்தில் பளார் எனக் கன்னத்தில் அறை விழுந்தது போல, என்ன பேசுவதென்று புரியாமல் ஒரு நொடி அவர் தடுமாற, "உங்க மக மட்டும் சின்ன பாப்பான்னா, அப்ப நம்ம மாப்பிளை என்ன நூத்து கிழவனா? சில விஷயங்களைத்தான் பொதுவில் சொல்ல முடியும். சிலது சென்சிட்டிவான புருஷன் பெண்டாட்டி அந்தரங்கமா கூட இருக்கலாம். அதையெல்லாம் தூக்கிட்டு பெரியவங்க கிட்ட பஞ்சாயத்து வர முடியாது. இதெல்லாம் இன்னும் உங்களுக்கே புரியல" என அனாயாசமாகச் சொன்னவர், "என்ன தாமரை நீயே இப்படி பேசற" என அவர் இறங்கிய குரலில் கேட்கவும், " ஒரு பக்கம் வரதட்சணை கொடுமை அது இதுன்னு பெண்கள் மீதான வன்முறை நடந்துட்டே இருந்தாலும், இப்ப நடைமுறை சட்டம் பெண்களுக்கு சாதகமாத்தான் இருக்கு. ஒரு வகைல பார்த்தால் பெண்ணை பெத்தவங்க கை ஓங்கி இருக்கற காலம் இது. கட்டிக்க பெண் கிடைக்காம திண்டாடறதால பிள்ளையை பெத்தவங்க கொஞ்சம் பயந்து அடக்கித்தான் வாசிக்கறாங்க. சங்கரி கூட நம்ம பொண்ணுகிட்ட நேரடியா எந்த பிரச்சனைக்கும் வரதில்ல, அது தெரியுமா உங்களுக்கு. இவளும் அவங்ககிட்ட எதுவும் மரியாதைக் குறைவா நடத்துகற மாதிரி தெரியல, பின்னால வந்து புலம்பினாலும் எங்கிட்ட பேசறமாதிரி முகத்துல அடிச்சது போல அவங்ககிட்ட எதுவும் பேசறதும் இல்ல. இங்க ஒரு துரும்பை கூட அசைக்காதவ மூக்கால அழுதுட்டுன்னாலும் அங்க அவங்க சொல்ற வேலையெல்லாம் செஞ்சிட்டுதான் இருக்கா. மறைமுகமா பிரச்சனை இல்லா