Praveena Vijay

Jun 10, 202114 min

கண்மணி... என் கண்ணின் மணி -37-5

அத்தியாயம் 37- 5

/*நெஞ்சில் என்னை நாளும் வைத்து

கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று

மஞ்சள் மாலை மேளம் யாவும்

கண்ணில் காணும் காலம் உண்டு

பூவைச் சூடி பொட்டும் வைக்க

மாமன் உண்டு மானே மானே

உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட

கள்வன் இங்கு நானே நானே*/

ரிஷியைத் தேடி மாடி ஏறியவள்… பூட்டி இருந்த அவனது அறையைப் பார்த்தபடியே மொட்டை மாடிக்குப் போனவள்… அங்கு கைப்பிடிச்சுவரில் கை வைத்தபடி வெளியே வெறித்தபடி இருந்தவனைப் பார்த்தபடி அவனருகில் போக… கண்மணி வந்த அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த ரிஷி…

“வாங்க மேடம்… ரொம்ப நேரமா உங்களத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்… சீ…க்கிரமா வந்துட்டீங்க”

சொன்னவன் மீண்டும் திரும்பி வெளியே வெறிக்க ஆரம்பித்து விட…

ரிஷியின் அருகே வந்தவள்.. அவனைப் போல வெளியே பார்க்காமல்… அவனைப் பார்த்தபடி சுவரில் சாய்ந்து கொண்டவள்… கைகளைக் கட்டிக்கொண்டபடியே…

”எங்க அப்பாக்கு அந்த மாமரத் திண்டு… அவர் மருமகனுக்கு இந்த மொட்டை மாடி சுவர்…” கிண்டல் செய்தாள் கண்மணி…

“ஹ்ம்ம்ம்… நக்கல்… என்னை ஓட்டு… கிண்டல் பண்ணு அதென்ன என் முதலாளிய இழுக்கிற “ என்று தன் முதலாளியை விட்டுக் கொடுக்காமல்… அவர் மகளை முறைக்க…

இன்னும் கிண்டலாக இப்போதும் இதழ் வளைத்தவளை… அமைதியாகப் பார்த்தபடி நின்றவன்…

“அதெல்லாம் ஒரு சுகம்… உங்களுக்கெல்லாம் அது புரியாது… புரியவும் வேண்டாம்… எங்க மாதிரி… மரண அடி வாங்கினவங்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்” குரல் அவன் வார்த்தைகளுக்கு ஏற்ப… அவன் அனுபவித்த வேதனைகளுக்கு ஏற்ப அபிநயம் பிடித்து கரகரத்திருக்க… சட்டென்று தொண்டையைச் செறுமி… தன்னைச் சமாளித்து… அவளைப் பார்க்க…

ரிஷி சட்டென்று திகைத்து நின்றான்… கண்மணியின் பார்வையில்… ஒரு சிறு பார்வையில் இப்படி வெறுமையைக் காட்ட முடியுமா… அவன் திகைத்து நின்றபோதே… கண்மணி சட்டென்று மாறி… அவனையே பார்க்க

தன்னையே பார்த்தபடி நின்றவள் பார்த்த பார்வையில்… நாம் தான் அவளை வருத்தப்பட வைத்துவிட்டோமோ… என்று தோன்ற

இப்போது என்ன நினைத்தானோ… அவளைப் போலவே சுவரில் சாய்ந்தபடி திரும்பி நின்று அவள் பக்கவாட்டில் நின்றான்

இப்போது ரிஷியின் தோள் அவள் மீது பட்டும் படாமலும் உரச.. இருவருமே அதை உணர்ந்தாலும் விலகவெல்லாம் நினைக்கவில்லை…

அருகில் வைத்திருந்த டப்பாவை எடுத்தவள் அதைத் திறக்கப் போக… அவளிடமிருந்து வாங்கியவன்… இருவருக்கும் இடையே நிலவிய அமைதியான நிலையை மாற்ற முயன்றவனாக

“சும்மா சொன்னேன்… நானும் ரிதன்யாவும் வரும் போதே சாப்பிட்டுதான் வாங்கிட்டு வந்தோம்… ” அவன் சொன்னவுடன் இவளோ…

“ஆனால்… நான் சாப்பிடலயே” கண்மணியோ பாவமாக முகத்தை வைத்துச் சொல்ல… பார்த்துச் சிரித்தவன்…

“அதுனாலதான் நான் அப்படிச் சொன்னேன்... கொடு பாக்சை…” என்று திறந்து அதில் இருந்த சாப்பாடை அவளுக்கு ஊட்டி விட ஆரம்பிக்க… அவளும் வழக்கம் போல வாங்கிக் கொண்டாள்… அவனையும் சாப்பிடச் சொல்ல… மறுக்கவில்லை அவனும்… வாங்கிக் கொண்டான்…

சாப்பிட்டபடியே கண்மணி அவனைப் பார்க்க…

”என்ன பார்க்கிற… என்கிட்ட நீ எதையுமே எதிர்பார்க்கலைனு தெரியும்… பட் நான் ஊட்டி விட்டா உனக்கு பிடிக்குனு எனக்குத் தெரியும்… ” என்றவன்… அவளது விழி மின்னலில்…

“அப்படிப் பார்க்காத… அதிகமால்லாம் தெரியாது… ஜஸ்ட் எனக்குத் தெரிஞ்சது இது ஒண்ணு… ஆனால் கண்டிப்பா தெரிஞ்சுக்குவேன்…” இப்போது ரிஷி அவளைப் பார்க்கவில்லை… அதே நேரம் அவன் கவனம் முழுவதும் அந்த இட்லியை பிடுவதில் இருப்பது போலக் காட்டிக் கொண்டவன்…

”நீ இதைக் கூட என்கிட்ட எதிர்பார்க்கலை தான்… ஆனால் எனக்கு பிடிச்சுருக்கு…” என்று கடைசித் துண்டை அவளுக்கு ஊட்டியவனிடம் கண்மணியோ பதில் பேச வில்லை… அவள் கவனம் கணவனின் கண்களில் மட்டுமே இருக்க… வாயோ பேருக்கு கடைசித் துண்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தது…

இருவருமாகச் சாப்பிட்டு முடித்தவர்கள்.. கை அலம்பி விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து நிற்க

“ரிஷி” என்றாள் கண்மணி… அவனைப் பார்த்தபடியே… ஆதுரமான குரலில்

“ஹ்ம்ம்” என்றான் அவனும்… ஆனால் அதே நேரம் … சட்டென்றும் திரும்பிப் பார்த்தான்… ஏனென்றால்…

“ரிஷி, ரிஷி சார்… ரிஷிக்கண்ணா… ரிஷிம்மா… ரிஷிப்பா… ரிஷிக்கண்ணு… மிஸ்டர் ரிஷிகேஷ்… மிஸ்டர் ரிஷிகேஷ் தனசேகர்… மிஸ்டர் ஆர்கே..” என வித வித அழைப்புகளில் அவன் பெயரை அழைத்து... ரிஷியை தன் அழைப்பு மழையில் நனைய வைப்பாள் கண்மணி…

அதே போல் கண்மணி அவன் பெயரைச் சொல்லும் விதத்திலேயே அவள் எந்த மூடில் இருக்கின்றாள் என்று ரிஷியும் உணர்ந்து கொள்வான்…

“ரிஷி சார் “ என்றால் கிண்டல் மட்டுமே இருக்கும்

“ரிஷிக் கண்ணா “ என்றால்… அதில் இவன் மீது அவள் கொட்டிக் கொடுக்கும் அன்பு இருக்கும்

“ரிஷிமா” என்றால் அவனிடமிருந்து ஏதோ எதிர்பாக்கிறாள் என்று அர்த்தம்…

”ரிஷி” என்று அழைத்தால் தீவிரமாக பேசப் போகிறாள்… அப்படி சொல்வதை விட… மற்ற மூன்றாம் மனிதர்களைப் போல போல அவனும் ஒருவன்… என்ற ரீதியில் ஏதோ பொதுவாக ஒரு விசயம் பேசப் போகிறாள்… என்று சொல்லலாம்…

இப்படி ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ஒரு உணர்ச்சி இருக்கும்…

ஆக ரிஷியின் இந்தக் கணிப்புப் படி… ரிஷி என்று அவன் மனைவி இப்போது அழைத்திருக்க…. அடித்த எச்சரிக்கை ஒலியை… கவனமாக புரிந்து கொண்டவன்… வெளிக்காட்டிக் கொள்ளாமல்… ’என்ன’ என்பது போல மட்டும் பார்க்க

“நீங்க சந்தோசமா இருக்கீங்களா…” – அவனைப் பார்க்கவில்லை… கேள்வி கேட்டவளோ கணவனைப் பார்க்கவில்லை… அவள் அவனைப் பார்க்காமல் பேசுவதை அவள் கணவனால் தாங்க முடியவில்லை..

கண்மணியின் பார்வை தான் அவனின் ஜீவாதாரம்… எத்தனைக் கூட்டத்தில் இருந்தாலும்… தன்னை மட்டுமே அவள் கருவிழி நிரப்பியிருக்கும்… திருமணமான இத்தனை நாட்களில் ரிஷி கண்மணியிடம் கண்டது… உணர்ந்தது… அவளிடம் தான் காட்டிக் கொள்ளவில்லை… அதை அனுபவித்தான்… அவளிடம் காட்டிக் கொள்ளாமலேயே… கண்மணியின் பாசத்திற்கு… அவளின் அன்பிற்கு நட்ராஜ் தொடங்கி… அவள் தாத்தா பாட்டி வரை ஏங்கி இருக்க… அவளின் மொத்த உலகமுமாக இவன் மாறியது மற்றவர்களுக்கு எப்படியோ இவனுக்கு கர்வமாகத்தான் இருந்தது…

அப்படிப்பட்ட அவன் கர்வம் கொள்ளும் பார்வை இப்போது கிடைக்காமல் போக…

“என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது சொல்லு” நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்லி… கண்மணியைப் பார்க்க வைக்க…

மீண்டும் அவனைப் பார்த்தவளின் கூர் பார்வை கூட மலர் மழை பொழியும் பார்வையே… ரிஷியின் உயிர்க்கூட்டில் அது மீண்டும் ஜீவமழையை ஊற்ற… ரிஷி இப்போது தனக்குள் உயிர்த்தான்

“கேள்வி கேட்டால்… பதில் சொல்லனும் ரிஷிக் கண்ணா… கேள்வி கேட்கக் கூடாது”

“ஏன் டீச்சர் மட்டும் தான் கேள்வி கேட்கனுமா…” அவள் புறம் குனிந்து ரிஷி மென்குரலில் கேட்க… அவளோ முறைத்தாள்…

”ஒகே முறைக்காத… எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது கண்மணி…”

அவனே தொடர்ந்தான்…

“மகிளா சந்தோசமா இருக்கா… கண்டிப்பா எனக்குள்ளயும் அந்த சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது…”

விரக்தியாக இதழைச் சுழித்த கண்மணி…

“உண்மையைச் சொல்லப் போனால்… நான் உங்க சந்தோசத்தை ப்ரேக் பண்ண விரும்பலை ரிஷி… ரெண்டாவது விவாதம் பண்ற இடத்தில நான் இல்லை.. அப்படி விவாதம் பண்ணினால் தரையில் படுத்துட்டு விட்டத்தை பார்த்து எச்சில் துப்பின கதைதான் எனக்குப் பொருந்தும்… நல்லதே நடந்தது… அதோட விட்றலாம்… ரிஷின்ற வட்டத்துக்குள்ள மகிளா இருந்த போது நான் வெளிய இருந்தேன்… கேட்கிற உரிமை இருந்துச்சு… தைரியம் இருந்துச்சு… இப்போ” என்று நிறுத்த

“இப்போ உன் உரிமைக்கு என்ன குறைச்சல்.. ” புருவங்கள் சுருக்கியபடி பட்டென்று ரிஷி… கேட்டான் … அதே நேரம் அவன் குரலில் அப்படி ஒரு பதட்டம்… கண்மணி… பேசிய வார்த்தைகளில்…

அவனின் பதட்டம் புரிந்தவளோ… அவன் கை பற்றினாள் இதமாக…

”என் உரிமைக்கு இப்போ பிரச்சனை இல்லை… பிரச்சனை வரவும் விடமாட்டேன்..” அழுத்தம் கொடுத்து சொன்னவள்…

”அத விடுங்க……” என்றபடியே விட்ட வார்த்தைகளுக்கு வந்து நின்றாள்

”அந்த ரிஷின்ற வட்டத்துக்குள்ள இல்லல்ல அந்த ரிஷின்ற வட்டமே நானாகிப் போய்ட்டேன்… அதுனால வெளிய இருக்கிறவங்கள பற்றி நான் பேச விரும்பலை… எனக்கு உங்க சந்தோசம் மட்டுமே முக்கியம்… ஆனால் “ என்றவள் குரல் மெல்ல தளர…

பார்வையாலே கேள்வியாக நோக்கினான்…

“ஆனால் உங்க சந்தோசம் துக்கம்… இன்னும் வட்டத்துக்கு வெளிய நிற்குதேன்னுதான் வருத்தம்…” என்று நிமிர்ந்தவள்…

“சுத்தி வளைச்சுலாம் பேசல ரிஷி…” என்று அவனை விட்டு தள்ளி நின்றவள்…

“மகிளா விசயத்துல… நீங்க பண்ணினது மிகப்பெரிய தவறுதான்… உங்க நிலையை வைத்து… அவங்கள கைவிட்டது… அதுக்கு ஒரு காரணம் சொன்னது… பணம்… வசதி… உங்களோட வெற்றி தோல்வின்ற அநியாமான தராசுல ஒரு பொண்ணோட மனசை வச்சு … தப்பாவே எடை போட்டுடீங்க… ”

ரிஷி அதிர்ந்து பார்க்க… கண்மணி நிறுத்தவெல்லாம் இல்லை

“உங்கள ஹர்ட் பண்றதுக்காக சொல்லலை… உங்கள கஷ்டப்படுத்துற எந்த விசயத்திலும்… எனக்கு எப்போதுமே விருப்பம் இல்லை… விட்றலாம்… மகிளா முடிந்து போன விசயம்… அதைப் பற்றி அலசி ஆராய்ந்து நாம நம்ம உறவை கேள்விக் குறியாக்க விரும்பலை…”

“ஆனால் அதே நேரம்… மகிளா இப்போ சந்தோசமா இருக்கா… அப்படின்னு நீங்க நிம்மதியா இருக்கேன்னு சொல்றது எனக்கு கஷ்டமா இருக்கு ரிஷி… நம்ம ஒருத்தவங்கள விட்டு விலகி வந்துட்டோம்னா… அவங்க சந்தோசம் துக்கம் எப்படி நம்மள பாதிக்கும்… இன்னைக்கு மகிளா சந்தோசமா இருக்காங்க… நீங்க ஹேப்பி… நாளைக்கு…” என்று நிறுத்தியவள்

“சாரி… இதச் சொல்ல விரும்பல நான்.. மகிளா நல்லா இருக்கனும்… ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்… மகிளா அவங்க லைஃப்ல கஷ்டப்பட்டா அது உங்களையும் பாதிக்கும்னா…” என்ற கண்மணி அவனிடம் நிறுத்த

“கண்டிப்பா… என்னைப் பாதிக்கும் கண்மணி… “ என்றவனை கண்மணி இப்போது அதிர்ந்து பார்க்க…

“அவளோட மாமா பையனா… என்னைப் பாதிக்கும் கண்மணி… “ இலேசாக சொர்ணாக்காவாக மாறிக் கொண்டிருந்த கண்மணியை தன் புறம் இழுத்தவன்… அவளைக் முகத்தைச் சுட்டிக் காட்டியபடி

“இந்த வட்டத்துக்குள்ள இருந்து வெளிய வர மாட்டேன்…” என்று உறுதியோடு சொன்னவனிடம்…

“நான் தான் மேத்ஸ் டீச்சர்” குறும்பாகச் சொல்ல…

“ஹ்ம்க்கும்… இருக்கட்டும்… நான் அந்தக் கணக்குப் புலியோட…. புருசனாக்கும்” என்று தோரணையுடன் ரிஷி சொல்ல

அவன் சொன்ன தோரணையில் அவளை மீறி… அவன் தோள் சாய்ந்ந்தாள் கண்மணி… அவள் நெருக்கம் உணர்ந்த ரிஷி… இப்போது தொண்டையைச் செறும…

“ப்ச்ச்.. ரொம்ப பண்ணாதீங்க… எங்களுக்கும் எல்லாம் தெரியும்… கீப் டிஸ்டன்ஸ் பற்றி தெரியுமோ தெரியாதோ… இந்த ’ரிஷி’ ஸ்வாமிஜியைப் பற்றி தெரியும்…” என்றவள்… விலகியபடியே..

”ஆனால் நீங்க போட்ருக்க லிஸ்ட்லாம் என்கிட்ட செல்லுபடியாகாது… அதாவது நீங்க ஏதாவது சாதிக்கனும்… அப்புறம் நான் இன்னும் சின்னக் கொழந்தை” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து

“ஆமா… நான் சின்ன பாப்பான்னு உங்களுக்கு யார் சொன்னது… … எனக்கு 22 வயசு” என்ற போதே…

“யார் சொல்லனும்… நான் சொல்றேன் நீ குழந்தைதான்…” என்று ரிஷி புன்னகைக்க… இவளோ முறைக்க

“முறைக்காத… பல விசயங்கள்ள பொறுப்பா இருந்தாலும்… நீ ரவுடி ரவுடின்னு சொன்னாலும்… இன்னும் சில விசயங்கள்ள சின்னப் புள்ளதான்… ” அவன் நக்கலாகச் சிரிப்பை அடக்கியது கண்மணிக்கே புரிய

வேகமாக… தன்னையே மேலிருந்து கீழ் வரை சந்தேகமாகப் பார்த்தவளை… தலையில் செல்லமாகத் தட்ட… அவன் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவள்..

“நான் என் வயசுக்கு மீறிய பொறுப்பா இருக்கேன்னு… அவங்க குடும்பத்தைப் பார்த்துக்குவேன்னுதான் கணக்குப் போட்டு கணக்குப் புலிய ஒருத்தவங்க மேரேஜ் பண்ணாங்க… அவங்க யார்னு தெரியுமா மிஸ்டர் ரிஷிகேஷ் தனசேகர்” கண்மணியும் சரிக்கு சரியாக ரிஷிக்குப் பதில் கொடுக்க

இருவருமே சிரித்து விட்டனர் ஒரே நேரத்தில்…

“ரௌடி… ” உதடே அசையாமல் குறும்பாகச் சொன்னவன்…

“இது ஒண்ணு சொல்லிருங்க… நீங்க டாபிக்க டைவர்ட் பண்றீங்கன்னு நினைக்கிறேன் மிஸ்டர் ரிஷிகேஷ்… எனக்கு 22 வயசு… இன்னும் ரெண்டு மாதத்தில 23 … நான் சின்னப் பொண்ணா…”

”அப்புறம்… இந்த தகுதி விகுதின்னு சொல்ல வந்தீங்க நான் ரௌடினு வாய்ல தானே சொல்லிட்டு இருக்கீங்க… அதை செயல்ல உங்களுக்கு நான் காட்டிருவேன்”

“நான் சொல்லனும் உங்க தகுதி பற்றி… என்னைக்கு உங்களுக்கு சம்மதம் சொன்னேனோ… அது லிஸ்ட்ல இருந்து போயாச்சு… ஆமா… என்ன பிரச்சனை உங்களுக்கு… என் கூட குடும்பம் நடத்துறதுக்கும்… உங்க வாழ்க்கைல முன்னேறுறதுக்கும்” கண்மணி சர்வ சாதாரணமாக கேட்டு விட்டாள்…

வாயைப் பிளந்து நின்றவன் ரிஷியே

“என்னடி… மிரட்டுற.. திடீர்னு இப்டி பேசுனேனா… அடுத்தடுத்து பாயிண்ட் பாயிண்டா பேசுனா… நான் என்ன பண்ணுவேன்… கொஞ்சம் டைம் கொடு… நாங்களும் பேச பாயிண்ட் எடுக்க வேண்டாமா” யோசித்தவன்…

கண்மணியே இப்படி பேச வேண்டுமென்று என்றெல்லாம் நினைக்கவில்லை… அதே நேரம் கணவனைக் கிண்டல் செய்யவும் அவள் இப்படி பேச வில்லை… தானாகவே வந்தது… கேட்டும் விட்டாள்…

ரிஷி யோசித்தான் யோசித்தான்… யோசித்தபடியே இருக்க… கண்மணிக்கே பாவமாகப் போய்விட…

“வேணும்னா… இப்படி மாத்திக்குவோம்…”

“என்னன்னு” ரிஷி ஆவலாக மனைவியைப் பார்க்க

”நீங்க சின்னப் பையன்… இன்னும் வளரனும்னு” அவனைப் பங்கமாக இப்போது தான் கலாய்த்தாள் அவனது மனைவி…

ரிஷிக்குத்தான் இப்போது எங்காவது முட்டிக் கொள்ளலாம் போலத் தோன்றியது… ஆனால் அதே நேரம் கண்மணி சொன்னதை மறுத்து பேசினால்… அவள் அடுத்து என்ன பேசுவாளோ என்று தோன்ற…

“சரி அப்படியே வச்சுக்கலாம்… சாப்பிட்டதான… இப்போ இடத்தைக் காலி பண்ணு… இல்லை நீ என்னைக் காலி பண்ணிருவ” மொத்தமாய் நொந்த குரலில் சொன்னவனுக்கு தெரியவில்லை… இனிமேல் தான் அவனுக்கு ஆப்பு காத்துக்கொண்டு இருக்கின்றது என்று…

”அப்படியா… அப்படியா… நீங்க சின்னப் பையனா…” கண்மணி அவனை ஒரு மார்க்கமாக பார்க்க…

“என்னடி… வேற லெவல்ல இருக்க இன்னைக்கு நீ” படு பதவிசாக ரிஷி கேட்க

“நீங்க சின்னப் பையனா… கொஞ்சம் நல்லா யோசித்து சொல்லுங்க மிஸ்டர் ஆர்கே அவர்களே” என்றபடியே… தன் அலைபேசியை எடுத்தவள்… அதன் திரைகளை இயக்கியபடியே

“இதுல இருக்கிற வீடியோ… அப்படி சொல்லலயே ரிஷிக் கண்ணா”

பக்கென்று இருந்தது ரிஷிக்கு… படாரென்று அப்படி ஒரு வேகத்தில் மனைவியைப் பார்த்தான் ரிஷி… இப்படி ஒரு வார்த்தைகளை கண்மணியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை… அதே நேரம் கண்மணியிடம் இருப்பது… அப்படி என்ன வீடியோ… அது என்னவாக இருக்கும்

கல்லூரி நாட்களில்… அதிலும்… அந்த ஆட்டம் போட்ட நாட்களில் பார்ட்டி… நண்பர்கள் என குடித்து விட்டு என எத்தனை வீடியோவோ ஏன் இவனே தன்னைத்தானே எடுத்திருக்கிறானே…

அதில் ஏதாவது இருக்குமோ… எதைச் சொல்கிறாள்… குப்பென்று வியர்த்தது ரிஷிக்கு…

”ஏய்… காட்டு…” அவனையும் மீறி அவன் குரல் அவளிடம் உயர..

“ஹலோ… ஏன் ஏன்… இவ்ளோ டென்சன்… மடியில கனமிருந்தால் தான் வழியில பயம் இருக்கனும்… ரிஷிக்கண்ணா” கண்சிமிட்ட…

அவளது கிண்டல் பேச்சு… அவனுக்கு கொஞ்சம் படபடப்பைக் குறைக்கத்தான் செய்திருந்தது இப்போது…

“ரிதிம்மா போன்ல இருந்து சுட்டது… இந்த வீடியோ பார்த்தா இந்த பையன் சின்னப் பையன்னு சொல்லத் தோணலையே” அவன் முகத்திற்கு முன் அவள் மொபைலைத் தூக்கிக் காட்டி கண்மணி விளையாட…

தங்கையிடமிருந்து சுட்ட வீடியோ என்று மனைவி சொன்னதுமே ரிஷி முற்றிலும் இயல்பாகி இருக்க… இருந்தும் கண்மணியின் விளையாட்டில் கடுப்பாக ஆனவன்…

”என்ன வீடியோ… நான் பார்க்கனும்” என்று முகத்தைக் கடுப்பாகவே வைத்தபடி… தன் முன் அலைபேசியைக் காட்டி வம்பிழுத்துக் கொண்டிருந்த கண்மணியின் அலைபேசியை பறிக்கப் போக…

சட்டென்று கையை பின்னுக்கு இழுத்தவள்…

‘மிஸ்டர் ரிஷிகேஷ்… நீங்க… சின்னப் பையனா… இன்னும் டைம் இருக்கு” என்று கவனமாக சற்று தள்ளி நின்று கேட்க

“கண்மணி விளையாடாத… எனக்கு கோபம் வந்துச்சுனு வச்சுக்க “ என்ற போதே

பின்னால் போனபடியே

”கோபம் வந்தால்… என்ன பண்ணுவீங்க… சின்னப் பையன் இல்லேன்னு காட்டுவீங்களா… “ கண்மணி கேட்டபடியே பின்னால் செல்ல…

“என்ன வீடியோ… காட்டு… கடுப்பாக்குற நீ” என்று அவளை எட்டிப் பிடிக்க வேக அடிகளை எடுத்து வைக்க… கண்மணியும் வேகமாகப் பின்னால் போக … தண்ணீர் தொட்டியின் ஏணிப்படியில் இடித்து நின்றாள் கண்மணி…

ரிஷி இப்போது கண்மணியைப் பார்த்து…

“இடிச்சுக்காதடி.. விளையாடற நேரமா என்ன… மணி 11 ஆகுது…“ சொன்னபடியே அவளின் அருகே போக

வேகமாக படிகளில் ஏறி விட்டாள் கண்மணி…

விளையாட்டாக ஆரம்பித்து… அவளால் விட முடியாமல் போக… ரிஷிக்குத்தான் ’ஹைய்யோ’ என்றிருக்க… தானே கண்மணியின் விளையாட்டுத்தனத்தை நிறுத்த முடிவு செய்தவனாக

‘சரி… எனக்கு வேண்டாம்… நான் பார்க்கலை… நான் எதுக்கு பயப்படனும்… நீயே உன் செல்ல ரிதியோட சேர்ந்து பார்த்துக்க அந்த வீடியோவ… இப்போ இறங்கி வா… “ என்று கையை நீட்ட… கண்மணியும் அதற்கு மேல் அவனைக் கெஞ்ச வைக்க விரும்புவாளா என்ன!!!???…

இரண்டாம் படிக்கு இறங்கி வந்தவள்… அதில் அமர்ந்தபடி… வீடியோவை ஆன் செய்தபடி… பார்க்க ஆரம்பித்தவள்.. ரிஷியைத் தன் அருகே அழைக்க…

கண்மணி கையில் வைத்திருந்த வீடியோவைப் பார்க்க ஏதுவாக தண்ணீர் தொட்டியின் ஏணிப்படிக்கு பின்னால் இருந்த இடத்தில் வந்து நின்று… அவள் தோள்களின் பின்னால் வந்து பார்க்க…

அவனையுமறியாமல் அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன…

வீடியோ ஓட ஆரம்பிக்க…

அந்த வீடியோவில் … இருந்த காட்சி

ரிஷி… விக்கி… அவனைச் சுற்றி ஒரு சிறு கும்பல் என ஆரம்பித்த காட்சிகள்…

சில நொடிகளில்.. பாடலும் சேர்ந்தது … ரிஷியின் குரலில்

/*

ஆத்தாடி என்ன உடம்பு

அடி அங்கங்கே பச்ச நரம்பு

ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு

அதில் அடையாளம் சின்ன தழும்பு

*/

பாடல் வரிகளை ரிஷி பாட ஆரம்பித்தவனாக… தரை லோக்கல் நடனம் என்று சொல்வார்களே… அது போல இறங்கி மரணக் குத்தாட்டம் ரிஷி போட… அடுத்த சில நிமிடங்களிலேயே… அவனைச் பார்த்திருந்த மொத்தக் கூட்டமும்… ரிஷியைச் சுற்றி ஆட ஆரம்பித்து இருக்க… பாடல் முடியும் போதோ… அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே வந்து ரிஷி கைதட்டிக் கொண்டிருக்க… இவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக அந்த வீடியோ முடிந்திருந்தது…

ரிஷி… இப்போது கண்மணியிடமிருந்து மொபைலை வாங்கியவன்… அந்த வீடியோவை மீண்டும் முதலில் இருந்து பார்க்க ஆரம்பித்து… மீண்டும் மீண்டும் பார்த்தான்…

கையில் இருந்த புத்தகம் நோட்டை எல்லாம் விக்கியின் கையில் கொடுத்துவிட்டு தலையில் கைக்குட்டையை கட்டியபடி… முதல் மூன்று பட்டன்கள் திறந்திருந்த சட்டையை பின்னால் தள்ளி விட்டப்படி… கொஞ்சம் கூட யாருக்கும் பயப்படாமல் அவன் நடனமாட ஆயத்தமாகும் காட்சிகள்… தன்னை ராகிங்க் என்ற பெயரில் மிரட்டிய சீனியர் மகளிர் குழாமை குறி வைத்து ரிஷி மட்டும் தனியே ஆட ஆரம்பித்த காட்சிகள்… கடைசியில் அனைவரையும் ஆட வைத்து விட்டு… தள்ளி நின்று கை தட்டியபடி இவன் வேடிக்கை பார்க்கும் காட்சிகள்…

அந்த பழைய ரிஷி… நினைத்தாலும் இனி கிடைக்கமாட்டானே… ரிஷி தன்னையே மீண்டும் மீண்டும் பார்த்தான்… பார்த்துக் கொண்டே இருக்க…

கண்மணி அவனிடமிருந்து மொபைலை வாங்க கையை நீட்ட… அவளிடம் திருப்பிக் கொடுத்தவன் கண்கள்.. இலேசாக பளபளக்கத்தான் செய்தது …

அவன் கண்கள் பனித்திருந்ததில் கண்மணி பதறித்தான் போனாள்…

”ரிஷிம்மா… சாரிம்மா..” கண்மணி வேகமாக இறங்க…

தான் இருந்த சூழ்நிலையிலும் அவளது கைகளை பிடித்துக் கொள்ள… கண்மணியும் கவனமாக இறங்கி அவன் புறம் வந்திருந்தாள்…

“சாரி ரிஷி… இவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரிந்திருந்தால்… இந்த வீடியோவ காட்டியிருக்கவே மாட்டேன்… சாரி ரிஷி” அவன் முன் பரிதாப முகத்துடன் கண்மணி நின்றிருக்க…

”சேச்சேய் சேச்சேய்… உன்னை தப்பா நினைக்கலம்மா… இதுல நீ ஃபீல் பண்றதுக்கு… சாரி கேட்க என்ன இருக்கு… “ என்றவன்.. தன் கல்லூரி நினைவுகளுக்கு… குறிப்பாக அந்த வீடியோ எடுத்த தினத்திற்கு சென்றான்

“அந்த வீடியோ நான் காலேஜ் சேர்ந்து ஒன் வீக்ல எடுத்தது… “ என்றபடி ஆரம்பிக்க… கண்மணியோ

“வெயிட் வெயிட்… “ என்று அவன் சொல்வதைக் கேட்க வாகாக நின்று கொண்டு அவனை இப்போது சொல்லுமாறு ஊக்குவிக்க…

“கதைனா போதுமே… உனக்கு” என்ற போதே…

“ரியல் டைம் ஸ்டோரி… அதுவும் இண்ட்ரெஸ்ட்டிங் சீன்… நோட் பண்ணிக்கனும்… யூ நோ… என் கதைல எங்கயாவது நான் சொருகிருவேன்… ராயல்டிலாம் கேட்கக் கூடாது…” என்று சொன்னபோதே…

“ப்பா… இந்த கொசுத்தொல்லைங்க தாங்க முடியல… ரைட்டர் மோடுக்கு மாறினால் கொடுக்கிற ஆக்‌ஷன்லாம் இருக்கே… நோட்டு பேனா எடுத்துட்டு வர்றியா… என்று ரிஷி முறைக்க

“நோட் பேனாவா… ஒல்ட் பேஷன்… இருக்கவே இருக்கு மொபைல்” என்ற போதே

உண்மையிலேயே ரிஷி இப்போது முறைக்க… அமைதியாக அடங்கி அமர்ந்தாள் கண்மணி… ரிஷியும் ஆரம்பித்தான்

”ஃபர்ஸ்ட் ஒன் வீக்… ராகிங்லாம் இல்லை… எங்களுக்கு சீனியர்சும் தொல்லை கொடுக்கலை… ஜாலியா காலேஜ்ல டேஸ் போனது… ஆனா நெக்ஸ்ட் வீக்… சீனியர்ஸ் ஒவ்வொரு செட்டா வரச் சொல்லி ராகிங் பண்ணுவாங்க… அவங்க கூப்பிடும் போது ஃப்ரஷர்ஸ் எல்லாரும் அட்டெண்டண்ட்ஸ் போடனும்னு சொல்லி எங்க ஹாஸ்டல்ல சொல்லிட்டாங்க… நானும் விக்கியும் ஒரே ரூம்… அப்போ ரெண்டு பேரும் அவ்வளவா பேச மாட்டோம்… அவன் உன்னோட சேர்ந்த ஆளு…” என்ற போதே கண்மணி முறைக்க

“ஐ மீன்.. படிப்ஸ்… ரூல்ஸ்… அந்த வகையில… நமக்கு அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது… பாரேன்… என் நிலைமைய… காலேஜ்ல அவன் இருக்கிற வரை அவனோட ரூம்ல ஒண்ணா இருந்தேன்… அவன் போன பின்னால… கண்மணியோட ரூம்… “ என்று ரிஷி அவனையுமறியாமல் கண்சிமிட்ட…

“கண்மணியோடன்னு சொல்லாதீங்க… வாடகைக்கு இருந்தீங்கன்னு சொல்லுங்க” கண்மணி திருத்த

”ஹப்ப்பா… கோபம் வருது மேடத்துக்கு… ” என்று ரிஷியும் தொடர்ந்தான்

“அந்த ராகிங் நாளும் வந்தது… அவங்க கூப்பிட்ட இடத்துக்கு நாங்களும் போனோம்… ஒரு இருபது முப்பது பேரு இருந்தாங்க… பசங்க மட்டும் இருப்பாங்கன்னு போனா… சீனியர் அக்காஸ் …. சொர்ணாக்காலாம் இல்லை… எல்லாமே சூப்பர் ஃபிகர்… நமக்கு அது போதாதா” என்ற போதே… அவன் ரவுடியிடமிருந்து அடி வாங்காமால் இருப்பானா… அதே நேரம் அடி கொடுத்த இடத்தில் கண்மணியே தேய்த்து விடவும் செய்ய… அவளின் அன்பை அனுபவித்தவனாக… தன் பேச்சைத் தொடரவும் செய்தான் ரிஷி…

”நாம வந்த வேலைய கவனிப்போம்னு… அதாவது நம்ம வேலை என்ன.. சைட் அடிக்கிற வேலையை நான் பார்த்துட்டு இருக்க… அந்த அக்காங்க எல்லாம் எல்லாம் பாட்டு பாடச் சொல்லிட்டாங்க… திரும்பி விக்கிய பார்த்தால் கண்ணெல்லாம் சிவப்பு… கோபமா இருக்கானாம்… என்கிட்ட வேற என்ன சொல்றான்??… வாடா பிரின்ஸ்பால்ட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்னு வேற சொல்ல … விக்கி பிரச்சனை பண்ற மோடுக்கு வந்துட்டான்… … எனக்கு அங்க நடந்தது ஏதும் பெருசா தப்பா தெரியல அவன் முறைக்கிறத சீனியர்ஸ் நோட் பண்ண ஆரம்பிக்க… விக்கி விஜயகாந்த்தா மாறுகிற ஸ்டேஜ்ல இருக்க… வேற வழி இல்லாமல் உன் மாமா களத்துல இறங்கிட்டேன்” ரிஷி அவனையும் மீறி உற்சாகமாகச் சொல்ல ஆரம்பிக்க… கண்மணியின் கண்களிலோ அப்படி ஒரு குதூகலம்… கணவனின் உற்சாகத்தில்… அவனை விட ஒரு படி மேலேயே உற்சாகமாகி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

”எப்படியும் பாடறதுன்னு முடிவாகிருச்சு… அப்படியே நம்ம சீனியர்சையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவோம்னு நானும் முடிவோட இறங்கிட்டேன்… அதுல ஒரு பொண்ணு செம்ம ஃபிகர் கண்மணி… சுண்டுனா இரத்தம் வர்ற மாதிரி… அந்தப் பொண்ணப் பார்த்த உடனே ”ஆத்தாடி என்ன உடம்பு” இந்தப் பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது… பாடிட்டேன்” என்று தோளைக் குலுக்கியவன்

”கரெக்டா அந்த சீனியர் ஃபிகர… பார்த்து… அவங்கள சுத்தி வந்து பாட ஆரம்பிச்சதுதான் தெரியும்… முடிக்கும் போது… அவங்கள்ளாம் ஆடறாங்க… நான் வெளியில இருந்தேன்… ஆக செம்ம ஜாலியா முடிஞ்சது ராகிங்” என்று ரிஷி முடிக்க…

கண்மணி கீழ் உதட்டைக் கடித்து கண்கள் சுருக்கி… தன் கணவனை முறைத்துப் பார்த்தவள்

“பாட்டு பாடினீங்க சரி… அந்த சீனியர் பார்ட்டி என்ன சொன்னுச்சு… வொர்க் அவுட் ஆச்சா” என்று பல்லைக் கடித்தபடி கேட்டவள் முகத்தில் மனைவியாக கொலைவெறி இருந்ததோ…

ரிஷிதான் அவளின் முகத்தையே பார்க்கவில்லை… எங்கு பார்க்க… அவன்தான் மலரும் நினைவிற்கு போய்விட்டானே

“சீனியர் தானே… அந்தப் பொண்ணு மட்டுமா… மொத்த காலேஜும் ஐயா பின்னால தான்… ஒரே நாள்ல காலேஜ் ஃபேமஸ் ஆகிட்டேன்… எல்லா பொண்ணுங்களும் என் பின்னால..” டீஷர்ட் காலரைத் தூக்கி விட்டபடி பந்தாவாகச் சொன்னவன்

“பொண்ணுங்க மட்டும் இல்ல… பசங்களும்… ஹாஸ்டல்ல என்னை அவங்க ரூமுக்கே வரச்சொல்லி “ என்ற போதே…

கண்மணி…

”என்னது…” அவளையுமறியாமல் அதிர்ச்சியில் அவளுக்கு குரல் உயர… ரிஷி அவள் என்ன நினைத்து அதிர்ச்சி ஆகின்றாள்.. என புரிந்து கொண்டவனாக முறைத்தபடியே

“அடங்குறியா… சீனியர், சூப்பர் சீனியர்ஸ்லாம். எல்லாரும் ஒரே நாள்ல என் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க… அதுக்கப்புறம் எவனையும் சீனியர்னு சொல்ல மாட்டேன்… எல்லோரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன் … அப்புறம் என்ன… இந்த வீடியோவால காலேஜுக்கே என்னைத் தெரியும்… விக்கியும் என்னோட க்ளோஸ் ஆனதும் இந்த இன்ஸிடெண்ட்டுக்கு பின்னாலதான்” என்ற போதே அவன் முகம் மாறி இருந்தது

“என்னோட பாப்புலரை ஒழுங்கா யூஸ் பண்ணல கண்மணி… விக்கி அடிக்கடி சொல்வான்… என்ஜாய் பண்றதுக்கு யூஸ் பண்ணிட்டேன்னு… உனக்குள்ள லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கு… மக்கள ஈஸியா மேனேஜ் பண்றேன்னு சொல்வான்” என்ற போதே…

“குடும்பத்தையே மேனேஜ் பண்ணத் தெரியாதவனுக்கு என் நண்பன் என்ன பேர் வச்சுருக்கான் பாரு” என்று சோகமாக முடிக்க.. கண்மணியோ

”உண்மை அதுதான்… உங்க ஃப்ரெண்ட் கரெக்டாத்தான் சொல்லிருக்காங்க… உங்க பவர் உங்களுக்கே தெரியாது ரிஷி… ஒருநாள் பாருங்க… நீங்க யாருமே தொட முடியாத உயரத்துல இருப்பீங்க” என்று அவனையே பார்த்தபடி சொல்ல

“நான் எந்த உயரத்துக்கும் போனாலும்… இந்த வட்டத்துக்குள்ள இருக்கனும்” கண்மணியைப் பார்த்து சொன்ன வார்த்தைகளில் அப்படி ஒரு அழுத்தம் இருக்க… கண்மணி ஒரு நிமிடம் அவனையே பார்த்தபடி இருந்தவள்..

“நான் உங்கள விட்டு எங்க போகப் போகிறேன் ரிஷிக் கண்ணா… ரிஷி வேற கண்மணி வேறயா.. இந்த ரிஷிக்குள்ள தான் நான் எப்போதும் இருப்பேன்”

கண்மணியும் ஒரு மாதிரிக் குரலில் சொன்னவள்… திடீரென்று… எதையோ நினைத்தவளாக

“ரிஷிக்கண்ணா” கிட்டத்தட்ட கத்தினாள் என்றே சொல்ல வேண்டும்…

“ஏன் இப்படி கத்துற… பக்கத்துலதான நிற்கிறேன்…. சொல்லு” என்ற ரிஷி அவர்களுக்கு இடையே இல்லாத இடைவெளியை இருப்பதுபோல பாவித்து… அவள் அருகே வந்து நிற்பது போல பாவனை செய்ய…

“நான் உங்ககிட்ட இதுவரை எதுவுமே கேட்டதில்ல… நான் இப்போ ஒண்ணு கேட்கப் போகிறேன்… “ என்ற போதே…

ரிஷி… சுதாரித்தவனாக…

“என்ன கேட்கப் போற… பார்த்துக் கேளுடி… “ பரிதாபமாகக் அவளிடம் சொன்னவனைப் பார்த்து… கண்மணி சிரிக்க ஆரம்பித்து விட…

சுற்றி முற்றி பார்த்தான் ரிஷி…

“ஹவுஸ் ஓனரம்மா… இது உங்க வீடுதான்… உங்கள கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லைதான்… தைரியம் இல்லைதான்… அதுக்காக நடுராத்திரி இப்படி சிரிக்கிறதுலாம் ரொம்ப ஓவர்…” என்ற போதே

புரிந்து… தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளாக

“எனக்காக அந்தப் பாட்ட பாடுங்க ரிஷிம்மா.. ப்ளீஸ்… ஒரே ஒரு தடவை” என்று கண்கள் மின்ன உதடு குவித்துக் கெஞ்சியவளிடம்

“காமெடி பண்ணாத” என்று ரிஷி நிறுத்தி விட…

“எனக்கு அந்தப் பாட்டு வேணும்…” கண்மணி செல்லப் பிடிவாதம் பிடித்தாள் தன் கணவனிடம்… அவளின் செல்லம்… பிடிவாதம் எல்லாம் ரிஷி என்பவனிடம் மட்டுமே என்பது போலக் காட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி…

”ஏய் அந்தப் பாட்டெல்லாம் உன்னைப் பார்த்து பாடற பாட்டாடி… “ ரிஷி அந்தப் பாட்டின் வரிகள் உணர்ந்து சொல்ல…

“ஏன் உங்க உலக அழகி சீனியர்ஸ்க்கு மட்டும் தான் பாடுவீங்களா” கண்மணியின் கேள்வியில் தலையிலடித்துக் கொண்டவன்…

“அதெல்லாம் அப்படித்தான்… உனக்குலாம் அந்தப் பாட்டா… உன்னலாம் நான் வச்சுருக்கிற இடமே வேற” என்ற போதே…

“அப்போ எனக்கு ஏத்த பாட்டு பாடுங்க… இல்லையில்ல… வேற பாட்டுலாம் வேண்டாம்… எனக்கு இந்தப் பாட்டுதான் வேணும் எனக்கு” கண்மணி அடாத காட்டில் விடாத மழையாக மாறி இருக்க…

ரிஷியும் அவன் பிடிவாதத்திலேயே இருந்ததால்…

“லூசாடி நீ… “ என்று கடுப்பாகச் சொல்ல

”சரி விடுங்க.. உங்க கிட்ட ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நான் ஒண்ணு கேட்டேன்… நீங்க செய்யலை… ஓகே… நான் கெளம்பறேன்… 6 மணிக்குள்ள ஸ்கூல்ல இருக்கனும்…” சொன்னபடியே நகர்ந்தவளை… வேகமாக ரிஷி எட்டிப் பிடிக்க.. அவன் பிடித்த வேகத்தில் அவள் கைவளையல்கள் நொறுங்கி கீழே விழ..

“ஆ… ஆ” என்றாள் கண்மணி கைகளை உதறிபடியே… வலியில் கண்மணி முகத்தைச் சுருக்கினாள்…

கண்மணி அணிந்திருந்த வளையல் உடைந்து அதன் துண்டு அவள் மணிக்கட்டுப் பகுதியில் குத்தி கிழித்திருக்க… ரிஷியும் அதைக் கண்டு கொண்டவனாக…

“ப்ச்ச்… இரு இரு“ என்று அவள் கைகளில் இருந்த வளையல் துண்டை எடுத்தபடியே..

“வலிக்குதா” என்று நிமிர்ந்து பார்க்க…

“வலிலாம் ஒண்ணும் இல்லை… லைட்டா கீறி இருக்கு… விடுங்க” என்று அந்த இடத்தை தேய்த்தபடியே அவனை விட்டு விலக நினைக்க… ரிஷியோ பிடித்திருந்த அவள் கைகளை விட வில்லை…

”வா…” என்று இழுத்தபடி அறைக்குள் இழுத்துச் சென்றவன்… அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு…

“வளையலை எல்லாம் கழட்டு கண்மணி” என்றபடி முதலுதவி பெட்டியை எடுக்கப் போய்விட்டான்…

அவன் திரும்பி வந்தபோதோ…அவளோ அவன் சொன்னதைச் செய்யாமல் இருக்க… முறைத்தபடியே… அவள் முன் தரையில் அமர்ந்தவன்… தானே அவள் கரத்தில் இருந்த மற்ற வளையல்களை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு… மருந்து போட ஆரம்பித்தான்

ரிஷி பதறியதைப் பார்த்து… கண்மணி உள்ளுக்குள் ரசித்தாலும்…. அவன் செய்வது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றியது என்பதே உண்மை.. அதன் விளைவு

“ஒண்ணும் இல்ல ரிஷி… ஜஸ்ட் ஒரு சின்ன கீறல்… வளையல் உடைந்த கீறலுக்கு எல்லாம் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்களா என்ன…” என்றாள் சலித்தபடியே கண்மணி… கணவனைப் பார்க்க

“சின்ன கீறலா” என்று நிமிர்ந்தவன்… இப்போது அவன் கையைக் காட்டினான்…

“இந்த வடு எப்படி வந்ததுன்னு தெரியுமா… இதே மாதிரி சின்ன வளையல் கீறல்தான்” என்று சொல்லிவிட்டு அவளையே பார்க்க…

கண்மணி யோசித்தபடியே…

“நீங்களும் வளையல் போடுவீங்களா என்ன…” கண் சிமிட்டி குறும்புடன் கேட்க

“அடிங்.. உனக்கு நக்கல்தாண்டி… “

“சும்மா ரிஷிம்மா… இதுக்குலாம் கோவிச்சுக்கலாமா” என்று அவன் தலையைக் கோத… புன்னகைத்தவன்…

“ஒரு பொண்ணு என் கையப் பிடிச்சு இழுத்தா… அதுல வந்த வடு..” இப்போது ரிஷியின் பார்வை அவன் மனைவியை குறுகுறுப்புடன் நோக்க…

”நான் கேட்ட ரிஷியோட வரலாற்றுல… அதுக்கு சான்சே இல்லையே… ஒருவேளை நீங்க இழுத்திருக்கலாம்… ஒரு பொண்ணு உங்க கையப் பிடிச்சு இழுத்துச்சா… நம்பற மாதிரியே இல்லையே” என்று கணவனை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கண்மணி பந்தாட…

“என்ன பண்றது… நம்ம வரலாறு ஒரு சில பேர்கிட்ட மாறிருதே…” சொன்னபடியே எழ…

அவன் சொன்ன விதம் கண்மணியை அவள் விளையாட்டுத்தனத்தை விடுத்து யோசிக்க வைக்க… ரிஷி அவளைப் பார்த்துக் கொண்டே

“வளையல் குத்தியதுதானேன்னு சீரியஸா எடுத்துக்கலை… அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்த காயத்தை விட கொடூரமா இருக்க… விட்டுட்டேன்… சின்ன கண்ணாடித் துகள் படுத்திருச்சு… லைட்டா கத்தி வச்சு… நாலு தையல் போட்ட பின்னாடிதான் சரி ஆனது…” என்று சொன்னவன்…

“ஆனா என் பொண்டாட்டி அப்போதே என்னைப் போக விடாம தடுத்திருக்கான்னு… இப்போ தோணுது” என்று கண்மணியின் மேல் பார்வையைப் பதித்தபடியே ரிஷி சொல்ல…

“நானா…“ புரியாமல் விழித்தாள் கண்மணி… அவளுக்கு முதலில் புரியவில்லை… ஆனால் கொஞ்சம் யோசிக்க… அன்று திருவிழாவில் நடந்தது ஞாபகம் வந்தது…

அன்று இவள் மயங்கி விழுந்தபோது ரிஷியின் கைகளைப் பிடித்தது… ஆனால் அவளுக்கு மீண்டும் நினைவு வந்த போது… ரிஷியைப் பற்றிய ஞாபகங்கள் எல்லாம் இல்லை… அர்ஜூன் மட்டுமே அவள் ஞாபகத்தில் இருந்தவன்…

வேகமாக அவனது கையைப் பிடித்தவள்… இப்போது அந்தக் காயத்தை ஆராய….

“ஆறு வருசத்துக்கு முன்னாடி வந்த காயத்துக்கு… இப்போ மருந்து போடப் போறியா..” சலிப்போடு சொன்னானா… அன்றைய நாட்களின் வலிகள் நினைவில் வந்த வேதனையோடு சொன்னானா..

“அதுனாலதான்… இப்போலாம்… நீ கையைப் பிடிச்சா… நீ விட்டால் ஒழிய நானே விட்றதில்ல…” சொன்ன விதத்தில் கிண்டலோ குறும்போ இல்லை… மனதிலிருந்த வார்த்தைகள்… அதே தீவிரத்தோடுதான் இப்போது வெளிவர…

“சரி விடுங்க…” என்றபடி… பேச்சை மாற்ற முயன்றாள் கண்மணி… அதன் காரணமாக

“நாளைக்கு நான் ஊட்டிக்கு போகவா… வேண்டாமா” ரிஷிக்கு மட்டுமே… அவனுக்கு மட்டுமே உரித்தான கண்மணி… அவனிடம் மட்டுமே கண்மணி இந்த சிணுங்கல் குரலில் பேசுவாள்…

”வேண்டாம்னா… போகாமல் இருப்பியா???” ரிஷியின் குரல் தானாகவே கிசுகிசுப்பாக மாற…

வழக்கம் போல அவள் கணவன்… கேள்விக்கு கேள்வியையே திருப்பிக் கொடுக்க முறைப்பாக பாவனையை மாற்றினாள் மனைவி

“நான் உன்னை விட்டுட்டு போனதே இல்லையா என்ன!!??… கம்பெனி.. பெர்சனல்னு சென்னையை விட்டு எத்தனையோ முறை பொயிருக்கேனே”

“அது நீங்களா போனது… நான் போகலையே… அது மட்டும் இல்லை… ரித்விகா மறுபடியும் எப்போ பிரச்சனைய கிளப்புவாளோ… நீங்க எப்போ” என்ற போதே நிறுத்தி அவனைப் பார்க்க

”நான் எப்போ முருங்கை மரம் ஏறுவேனோ… அதானே” ரிஷி புன்சிரிப்போடு கேட்க… கண்களை ஒன்றுமே தெரியாத அப்பாவி போல விரித்தவள்…

“ஹ்ம்ம் “ வேகமாக தலை ஆட்டிய கண்மணி…

“அது மட்டும் இல்லை.. உங்கள இப்படி இங்க விட்டுட்டு… அங்க நான் மட்டும் எப்படி நிம்மதியா இருக்கிறது” விளையாட்டாகச் சொன்னாலும்… அவன் கண்மணியின் வருத்தம்… அவன் கண்ணின் மணிகள் கண்டு கொள்ளாமல் இருக்குமா…

“நீங்க ஊட்டிக்கு வந்துருக்கீங்களா…” மெல்ல கண்மணி அவனிடம் கேட்டாள் எதுவும் தெரியாதவள் போல…

“ஹ்ம்ம்… அடிக்கடி” பட்டென்று வந்தது ரிஷியிடமிருந்து…

“ஓ…” என்று யோசித்தவள் அடுத்த நொடியே

“பேசாமல் உங்களையும் கூட்டிட்டு போயிரலாம்னு நினைத்தேன்… சரி விடுங்க… ப்ச்ச் என்ன செய்யலாம்… எனக்கென்னமோ டூர் ப்ளான் மொத்தமும் கேன்சல் தான் போலன்னு தோணுது… ஸ்கூல் வரை போய்ட்டு திரும்பி வரத்தான் போகிறேன்” கன்னத்தில் கை வைத்தபடி அவனைப் பார்க்க

“என் பொண்டாட்டி இவ்ளோ ஃபீல் பண்ற ஆள் கிடையாதே… அவளே இவ்ளோ எமோசனல் ஆகுறான்னா… என்ன பண்ணலாம்..” ரிஷி சொன்னபடியே யோசிக்க…

”ரிதிய டூருக்கு அனுப்பிறலாமா” ரிஷி பொய்யாக கேட்டு கண்மணியைப் பார்க்க…

“நான் அப்படி சொல்லலையே… நான் எப்போ கேட்டேன் ரிதிய டூருக்கு அனுப்புங்கன்னு எப்போவாது கேட்ருக்கேனா…” கண்மணி இப்போது ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பேசிக் கொண்டிருந்தாள்…

நாளை காலையில் ரிஷியிடம் போட நினைத்த நாடகத்தை… நாடகம் என்று சொல்ல முடியாது… ரித்விகா கோபத்துடன் இருக்க… ரிஷியை விட்டுப் போக நினைப்பாளா என்ன… ஒன்று ரித்விகாவுடன் போவது… இல்லை ஊட்டி பிளானையே தவிர்ப்பது… என்று முடிவு செய்திருந்தாள் கண்மணி…

ஆக ரிஷியே அதற்கு பிள்ளையார் சுழி போட்டு முடித்தும் வைத்திருந்தான்

“கேடி.. நீ யாரு… நீயெல்லாம் பேசி காரியம் சாதிக்கிறவ கிடையாது… ரவுடி தானே… நாளைக்கு காலையில அந்தக் ஜூனியர் கேடியையும் எழுப்பிக் கூட்டிட்டு போ” சொல்லி பொய்யாக முறைக்க…

சந்தோஷமாகத் தலை ஆட்டினாள் கண்மணி…

ஒரு மாதிரியான சந்தோசமான மனநிலை இருவருக்குமே… இதற்கு மேல் அங்கிருந்து… அதை மாற்ற விருப்பமில்லை கண்மணிக்கு…

“சரி நான் கிளம்பறேன்” என்று சொன்னபடி ரிஷியைப் பார்க்க…

அவன் முகம் சட்டென்று மாற… அவன் சோக முக பாவனையில்… ’என்ன’ என்று கண்களிலேயே கண்மணி கேட்க…

’நீ போகிறேன் என்று சொன்னதால் தான்” என்றா ரிஷியால் சொல்ல முடியும்… அதனால் ல அப்படிச் சொல்லாமல் ரிஷி சட்டென்று மாற்றினான்…

“எனக்கு ஒரு ஹெல்ப்… கம்பெனி ப்ராஃபிட் ரெவின்யூ அனாலிசிஸ் பண்ணனும்” சொல்லி அவளை தன்னோடு இருக்கவும் வைத்தான்…

கண்மணியும்… சரியென்று தலை ஆட்ட… அவளை அங்கிருந்த மேஜையின் முன் இருந்த இருக்கையில் அமர வைத்தவன்… மடிக்கணியை திறந்து… அதில் இருந்த வரைபடங்களைக் காட்டினான்…

“இது லாஸ்ட் குவார்ட்டர் ரிசல்ட்… இது நெக்ஸ்ட் குவார்ட்டர்… “ என்று ஆரம்பித்து விளக்க ஆரம்பிக்க… இருவருமே அதில் மூழ்கினர்…

அவனின் விளக்கங்களை எல்லாம் கேட்டபடியே கண்மணியும் அதை ஆராய்ந்து சந்தேகங்களைக் கொண்டிருந்தாள்…

“இது என்ன ரிஷிம்மா… இந்த 3 மன்த்ஸ் இன்கம்.. இவ்ளோ குறைச்சலா இருக்கு… அதுக்கப்புறம் சார்ட் ஹையா மாறி இருக்கு… ஏன்… “ என்று கண்மணி அவள் சந்தேகத்தைக் கேட்க…

“அது ஒரு கால்குலேஷன் … பார்க்கலாம்… ஒரு எக்ஸ்பெக்ட் பண்ற ஒரு விசயம் நடந்தா… சார் அதுக்கு ஓகே சொன்னா… இந்த லாஸ் கண்டிப்பா நடக்கும்… கண்டிப்பா சொல்றேன் ” என்று ரிஷி சொல்ல… கண்மணி அதற்கு மேல் அவனை நச்சரிக்கவில்லை…

”ஓகே ரிஷி… நான் பார்த்துக்கறேன்… ஒரு ஹாஃப் அன் ஹவர் ஆகும்… இந்த வொர்க் முடிக்க… நீங்க தூங்குங்க…”

ரிஷியும் சரி என்று தலை ஆட்டி விட்டு தரையில் பாயை விரித்து… படுக்க…

கண்மணி லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்து… சுவரில் சாய்ந்தபடி… கணினியை மடியில் வைத்து இயக்க ஆரம்பிக்க….

“எத்தனை தடவை சொல்லிருக்கேன்… இப்படி மடியில வைக்காதன்னு… ” ரிஷி கோபமாகச் சொல்ல…

“மடிக்கணினியை மடில வைக்காமல்… எங்க வைப்பாங்க” கண்மணி விளையாட்டுத்தனமாகச் சொல்லி வைத்தாள்… ரிஷியும் விட்டுவிட்டான்…

அதன் பிறகு…. ரிஷி தூங்கவென்று நினைக்கவில்லை… ஆனால் அவனையும் மீறி கண்களில் தூக்கம் ஆட்கொள்ள தூங்கி விட்டான்…

கண்மணி அவன் சொன்ன வேலையை எல்லாம் முடித்து… திரும்பி அவனைப் பார்க்க… ரிஷி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்… அவன் எழும்பி விடாமல் மெல்ல எழுந்து மேஜையில் கணினியை வைத்து … மீண்டும் அவனருகே வந்தவள்

“ரிஷி” என்று மெதுவாக அழைக்க… ரிஷியோ அடித்துப் போட்டாற் போல தூங்கிக் கொண்டிருக்க… இவள் குரல் எல்லாம் கேட்குமா…

அவனே என்றாவதுதான் இப்படித் தூங்குவான்… எழுப்ப மனமில்லை கண்மணிக்கு… கதவை எப்படிப் பூட்டுவது… கீழே உள்ள வீடு போல… தானியங்கி திறப்பு வசதி கொண்டதல்ல இந்த அறை… என்ன செய்ய.. ரிஷியைத் தனியே விட்டுப் போகவும் மனம் இல்லை…

வேறு வழி இல்லாமல்… கதவை பூட்டி விட்டு வந்தவள்… இப்போது நாற்காலியில் வந்து அமர்ந்தவள்… கால்களை தூக்கி வைத்தபடி மேஜையில் கைகளை வைத்து அதில் தலை சாய்த்து… கணவனைப் பார்த்தபடியே கண்கள் திறந்திருந்தவள்… எப்போது தூங்கினாளோ… ஆனால் அலைபேசியின் அலார்ம் சத்தத்தில் அதிகாலையில் கண் விழித்த போதோ… கணவனின் ஒரு கரத்தின் வலிமையான புஜம் அவள் தலையணையாக மாறி இருக்க… அவனின் மறு கரமோ… மொத்தமாக அவளைச் சூழ்ந்து பாதுகாப்பாக இறுகப் பற்றியிருக்க… கண்மணியோ ரிஷியின் பரந்த மார்பில் முகம் பதித்திருந்தாள்…

/* உன்னோடு தான் என் ஜீவன்

ஒன்றாக்கினான் நம் தேவன்

நீ தானம்மா என் தாரம்

மாறாதம்மா என் நாளும்

இந்த நேசம் பாசம்

நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி

தினம் பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை நதி */

    31290
    22