”ஏன் மேகலை… இந்த வயசுல இந்த இதெல்லாம் தேவையா…. இதுல விரதம் வேற…” தன் மனைவியின் மேல் அக்கறை கொண்டவராக கடிந்து கொள்ள…
“உங்க ரெண்டு பேருக்காகவும் வேண்டிகிட்டது… நம்ம கார்த்தி வாழ்க்கைல நல்லது இவ்ளோ நடந்திருக்கு… ஆனால் இன்னும் வேண்டுதலை நிறைவேத்தல… எதுக்கு வேணும்னாலும் கடன் இருக்கலாம்… சாமிக்கு மட்டும் இருக்கக் கூடாது…”
-----
”அத்தை இவங்கதான் எங்களுக்கு லாஸ்ட் இயர் ப்ரஃபெஸரா இருந்தாங்க… இப்போ வேற ஊர்க் காலேஜ்ல வொர்க்பண்றாங்க… “ செல்வி தன் விரிவுரையளரை மேகலையிடம் அறிமுகம் செய்து வைத்திருக்க…
---
“உனக்கு பிடிச்ச வாழ்க்கைதானே… சந்தோஷமா இருக்கதானே… அப்போ எனக்கும் சந்தோஷம்” செல்வியின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி லதா தன் சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டவர்… மேகலாவிடம்
----
“அம்மா தாயே…என் ஃப்ரெண்டு அவ ஆசைப்பட்ட மாதிரி… சென்னைல… அவளோட ட்ரீம் காலேஜ்ல சீட் கிடைக்கனும்… சீட் மட்டுமல்ல… அங்கயும் என் ஃப்ரெண்ட் தான் டாப்பர்… கோல்ட் மெடலிஸ்ட்டா இருக்கனும்… இதுல ஏதாவது மாறுச்சு… அவ்ளோதான் பார்த்துக்க” என்று அம்மனுக்கே மிரட்டல் விடுத்தவள் கையில் மீதி இரு கருப்புக் கயிறு இருக்க…
“இதுவும் நான் ஒருத்தவங்களுக்காக வேண்டிகிட்டதுதான்… அவங்களுக்கான கரெக்டான கயிறுதான் வந்திருக்கு…. என்ன அவங்க கைலதான் கட்ட முடியாது…” ஆராதனா அந்தக் கயிறைத் தன்னோடு வைத்துக் கொள்ள…
---
“என்ன மேடம்… போனாப் போகுது… அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிற டீச்சர்னு அமைதியா போனா என்னென்னமோ சொல்றீங்க… தனா சொன்னப்போ கூட நம்பல… இப்போ புரியுது… காலேஜ்ல அவளைக் குத்திக் காமிச்சுட்டே இருப்பீங்களாமே… இப்போ காலேஜை விட்டுப் போன பின்னால கூடவா…. நல்லா இருக்குங்க உங்க நியாயம்… சின்ன புள்ள… கோயில்ல வச்சு என்ன வார்த்தை பேசுறீங்க…“ மேகலா படபடவென்று ஆரம்பித்திருக்க
---
“இவங்கள பத்தி எனக்கென்ன கவலை… செல்வி… உன்னை நினச்சுதான் … என்னமோ தெரியல… என்னோட ஆழ்ந்த அனுதாபம்மா… இந்தக் குடும்பத்தில இருந்து அவ்ளோ தூரம் போக மாட்டியோன்னு தோணுது… சிகரம் தொடுவேன்னு நெனச்சேன்… ஹ்ம்ம்.. நீ ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிகிட்டியோன்னு தோணுதும்மா”
---
“அடிப்பாவி… சும்மா கார்த்திக் அண்ணனைக் கிண்டல் பண்ணதுக்கு நடு ரோட்ல இறக்கி விட்டுட்டியாடி… புது டிசைன்ல செட் வந்திருக்குனு சொன்னதை நம்பி இறங்கினேன் பாரு..” வனிதாவும் பெரிதாகக் கோபப்படாமல் ஆராதனாவிடம் பேச
---
“வேற வழி இல்லை… ஏதாவது காரணம் சொல்லி ஊருக்கு போயிருவோமா… ஆனால் அவளைப் பார்க்க முடியுமா… ” மனம் காரணங்களை யோசிக்க ஆரம்பித்த போதே அவனுக்குள் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியிருக்க
‘’ஏன்… அவ காலேஜுக்கு போகக் கூடாது… AI டெக்னாலஜி பற்றி அவேர்னஸ் அண்ட் செமினார் கொடுக்கப் போகக் கூடாது மேடம் பையாலஜி க்ரூப் தான் இருந்தாலும் மொத்த காலேஜுக்கும் செமினார் கொடுப்போம்… நம்மாளையும் பார்ப்போம்…” என்றவன்… தனது அலைபேசியில்யில் இருந்த தனது நண்பனை உடனடியாக அழைத்தான்
---
“அம்மா அப்பா… அண்ணன்… இவங்கதான் என்னைத் தள்ளி வச்சுட்டாங்கன்னா… இன்னைக்கு என் தங்கச்சியும் தள்ளி வச்சுட்டா… “ திலகா தன்மேலேயே உருவான சுய பச்சாதபத்தில் அழ ஆரம்பித்திருக்க…
தாயிடம் வேகமாகச் சென்றவனை தள்ளி விட்ட திலகா…
“அப்படி என்னடா உனக்கு கோபம் என் அண்ணன் குடும்பத்து மேல அதுவும் என் அண்ணன் பசங்க மேல…” திலகா கோபத்தோடு அவனைப் பார்த்து கேட்டவள்…
----
”என்ன என் குடும்ப புத்தி… அப்படி என்ன கண்டீங்க எங்க குடும்பத்தோட புத்திய” திலகா ஆவேசமாக முத்துராமிடம் சண்டையிட ஆரம்பித்திருக்க
“ஐயோ அம்மா… அப்பா ஒரு ஃப்ளோல வாய் தவறிச் சொன்னதுக்கு…” செழியன் தாய் தந்தை இருவரின் இடையிலும் மாட்டியிருந்தான்
---
“அவ பைத்தியக்காரிடா… அதான்… இவளுக்காக இவ நல்லதுக்காக சொன்னா.. நம்மளையே எதிரி மாதிரி பார்க்கிறா பாருடா… இதுநாள் வரை இவ என் பொண்டாட்டியா வாழல… அந்த ராஜசேகரோட தங்கச்சியாத்தான் இருந்திருக்கா… அதுவே இப்போதான் எனக்குத் தெரிஞ்சிருக்கு…” என்ற போதே அவரின் குரல் உடைந்திருக்க…
---
“நீயே சொல்லு கமலி… வனிதா யாரு… உன்னை மாதிரிதான் அவங்களும் எனக்கு… தனாக்கு வந்த வரனை வனிதாக்கு மாத்தி விட்டுட்டேன்னு சித்தி கோபமாகிட்டாங்க… சித்திகிட்ட இருந்து இப்படி ஒரு பிஹேவியரை எதிர்பார்க்கலை…” செழியன் தன் சித்தியை நினைத்து வருத்தத்தோடு சொல்ல…