“இனி உன் புள்ளைக்கு இந்த வீட்ல இடமில்லை…” தன் கணவனின் கோபம் உணர்ந்தவராக… அவரிடம் சென்றார் மேகலா
“உங்க கோபம் புரியுதுங்க… நான் கார்த்திகிட்ட பேசுறேங்க… நான் பேசுனா அவன் கேட்பான்… நான் கொஞ்சம் விட்டுட்டேன்… அதுனாலதான் அவன் இந்த அளவுக்கு போயிட்டான்… நா… நான் சரிபண்ணிடறேன்…” மேகலா தழுதழுக்க…
----
மேகலாவுக்கே புரியவில்லை… மகன் இப்படியெல்லாம் இருக்க மாட்டேனே… பேச மாட்டானே… என்ன ஆயிற்று.. யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கார்த்திக் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை… அவன் கண்களில் நெருப்புப் பொறி பறந்திருக்க… கண்கள் கலங்கியவனாக தன் தந்தையைப் பார்க்க…
---
“அம்மா… வாங்கம்மா… எனக்குப் பசிக்குது…” கார்த்திக் தன் அன்னையைப் பார்க்க ராஜசேகர் அடுத்து யோசிக்கவெல்லாம் இல்லை…. கழுத்தைப் பிடித்து மகனை வெளிவாசலுக்கு கொண்டு வர முயற்சிக்க… அவனோ நகராமல் முரண்டு பிடிக்க மேகலா இருவரிடமும் மல்லுக்கட்ட
----
”என் மக… குடிகாரன் உனக்கு சாப்பாடு போடனுமா… என்னையே கழுத்தைப் பிடிச்சுட்டேல்ல…” ராஜசேகர் குரல் உடைந்திருந்தது….
கார்த்திக் என்ன நினைத்தானோ… சட்டென்று தங்கையின் கையை உதறியவனாக… தன் தாயிடம் போனவன்
---
“என்ன சித்தி…” செழியன் கடுப்போடு கேட்க… அவன் பொறுமை அவ்வளவுதான்…
“இல்ல அந்தப் பொண்ணு வெறும் ஃப்ரெண்டு மட்டும் தானா… “
செழியனின் பார்வையில் மாற்றம் வர ஆரம்பித்திருக்க
----
செழியன் தன் சித்தப்பாவையும் முறைத்தவனாக
“எனக்கும் பூஜாக்கும் இடையில இருக்கிறது ஒரு நல்ல நட்பு… இதுக்கும் மேல இனி பேச மாட்டீங்கன்னு நினைக்கிறேன்… ” என்றபடி நகன்றவன்… மீண்டும் அவர்களிடம் வந்தவனாக
---
“ஓ…. அங்க பாருங்க அந்த ஃபோட்டோல நான்… கமலிக்கா… தனா அத்தாச்சி எல்லோரும் இருக்கோம் பாருங்க…” என்று அனு சொல்ல… பூஜா நிமிர்ந்து பார்க்க… ஆராதனா… கமலி… அனு மூவருமாக சிரித்தபடி நின்றிருந்த புகைப்படம்…
---
“ஏண்டா… உன் மாமாக்கு ஹார்ட்ல ப்ளாக் எடுத்திருக்காங்கன்னு சொன்னா… நீ யாரைக் கேட்கிற…”
“ஏண்டா… அவர்க்குத்தான் ஆபரேஷன் முடிஞ்சிருச்சு… நல்லா இருக்கார்னு நீ சொன்னியே… அப்புறம் என்னடா விசாரிக்கிறது… இல்ல உன்கிட்ட விசாரிச்சு என்ன ஆகப் போகுது… என் பொண்டாட்டி என்ன பண்றான்னு தானே கேட்க முடியும்… வண்டி வண்டியா அழுதுருப்பாளே… அப்பாக்கு ஆபரேஷன்னு…” எனும் போதே
---
”நான் ராஜசேகர் தம்பி… அண்ணனைப் பார்க்கனும்…” என எப்படியோ அந்த செவிலியிடம் விசாரித்து அனுமதியை வேண்டியிருக்க
ஆராதனா அவன் அருகில் வந்தவளாக…
“சித்தப்பா… அப்பா மயக்கத்துல தான் இருக்காங்க… 2 மினிட்ஸ் பார்த்துட்டு வந்துருங்க”
---
“உன்னை யார் வரச்சொன்னது… அவருக்கு மட்டும் தெரிஞ்சது…” சுகுமாரை விட்டு சற்று தள்ளி நின்று மேகலா பல்லைக் கடித்துக் கொண்டு சுகுமாரைத் திட்ட
“அண்ணனை இந்த நிலமையில என்னால பார்க்க முடியலையே… அதைவிட… உங்களால நினைக்கும் போதுதான் மனசு தாங்கல… அண்ணன் இல்லாமல் இருந்துருவீங்களா… உங்களுக்கு எங்கண்ணன்னா உயிராச்சே… “ தன் அண்ணனை விட்டுவிட்டு மேகலாவின் அருகே இப்போது சென்றிருக்க
---
“உனக்கு நான் பணம் கொடுக்கனும்… ஆனா சித்தப்பா உன்கிட்ட பணம் கேட்க வேண்டிய நிலை… நான் என்னடா ஒண்ணும் இல்லாத நாதாரியா… முப்பாட்டன்லருந்து என் அப்பா சம்பாதித்த வரை எனக்கான சொத்து இருந்து என்ன பிரயோசனம்…”
“ப்ச்ச்… சித்தப்பா… இது ஹாஸ்பிட்டல்… இந்தாங்க… கிளம்புங்க” என்றபடி சுகுமாரும் அண்ணன் மகளிடம் இருந்து பணம் கிடைத்த அடுத்த நிமிடமே