அத்தியாயம்-8
"அந்த பையனோட பேர் கௌசிக். படிப்பு பீ.ஈ எம்.பீ.ஏ. பீ.ஈ சிவில் நம்ம ஹாசினி படிச்ச அதே காலேஜ்லதான் முடிச்சிருக்கான். ப்ளஸ்-டூலயே நல்ல மார்க் எடுத்து கவர்மண்ட் கோட்டால சீட் வாங்கி படிச்சிருக்கான். காலேஜ் டாப்பர். அதேமாதிரி எல்லா ஆக்டிவிடீஸ்லயும் ஃபர்ஸ்ட்டாம். அப்பறம் வேலைக்கு போயிட்டே எம்.பீ.ஏ..வ கரஸ்ல முடிச்சிருக்கான். அவனோட அப்பா 'ஹரிதா டிரான்ஸ்மிஷன்ஸ் பிரைவேட் லிமிடட் கம்பெனி' இருக்கு இல்ல, அதோட ஃபேக்டரில வேலை செய்யறாரு. அம்மா ஹவுஸ் வைஃப். ஒரே ஒரு தங்கை, பீஈ ஃபைனல் இயர் படிக்குது. அவங்க மதுரை பக்கம். கௌசிக்கோட தாத்தா காலத்துலயே இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க.
அவங்க அப்பா அவரோட வருமானத்தை வெச்சு பசங்கள நல்லபடியா படிக்கவெச்சிருக்காரு. கடன் கட்சி இல்லாம சொசைட்டில கௌரவமா வாழ்ந்துட்டு இருக்காங்க, மத்தபடி பெரிய வசதியெல்லாம் கிடையாது.
இப்ப இந்த பையன் வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு, லோன் போட்டு டபுள் பெட்ரூம் பிளாட் ஒண்ணு வாங்கியிருக்கான். ஸெகன்ட்ஸ்ல கார் ஒண்ணும் வாங்கியிருக்கான்.
படிக்கும்போதுல இருந்தே 'ஜீவன்'ல பார்ட் டைமா வேலை செஞ்சிட்டு இருந்திருக்கான். பையன் நல்ல டேலன்டட். ஒர்க்ல நல்லா டெடிகேட்டட். அதனால அவனை கெட்டியா பிடிச்சுகிட்டாங்க. இப்ப அவனுக்கு பிஃப்டி தொளசண்ட் பே பண்றாங்கன்னா பார்த்துக்கோங்க" என கௌசிக்கை பற்றிய தகவல்களை கருணாகரனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சத்யா.
'ஜீவன்' என்ற பெயரை கேட்டதும், "எந்த ஜீவன சொல்ற நீ, ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸா" என அவர் ஒரு அசூயையுடன் கேட்க, "ஆமாம் அத்தான்" என்றான் சத்யா.
"ப்ச்... அன்னைக்கே அந்த பையன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். சரியா ஞாபகத்துல வரல. ஏதாவது டெண்டர் ஓபன் பண்ணும்போது வந்திருப்பானோ?"
"ஆமாம் அத்தான்... இப்பலாம் அவன்தான் வரான். ரீசன்ட்டா நான் மட்டும்தான் போயிட்டு இருக்கேன்ல, அதான் உங்களுக்கு ஸ்ட்ரைக் ஆகலன்னு நினைக்கறேன்"
"ப்ச்... இவன மாதிரி இன்ஜினியர்ஸ் பத்து பேருக்கு சம்பளம் கொடுத்து நாம வேலைக்கு வெச்சிருக்கோம், இவ என்னடான்னா...
நம்ம இன்ஜினியர்ஸுக்கு மேக்சிமம் ட்வென்டடி ஃபைவ் கொடுக்கறோமா. அதுவும் ஒரு நாலு அஞ்சு வருஷமாவது எக்ஸ்பீரியன்ஸ் ஆனாதான்.
என்ன இவன் ஒரு எம்.பீ.ஏ கூட படிச்சிட்டு அட்மின்ல வேலை செய்யறான். அதான் இவ்வளவு அமௌண்ட் பே பன்றானுங்க.
ப்ச்... ஏன் சத்யா இந்த பொண்ணுக்கு புத்தி இப்படி போச்சு. நாம பார்த்தா எப்படிப்பட்ட மாப்பிள்ளையா பார்ப்போம்?"
அவர் ஏகத்துக்கும் வருந்த,
"என்ன அத்தான், இப்படி நாலையும் யோசிச்சு, அலசி ஆராய்ஞ்சா அப்பறம் ஏன் காதல்ல போய் மாட்டிக்க போறாங்க? இதெல்லாம் நம்ம பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமா இல்ல இருக்கு"
"ஓஹோ, உன்னோட காதல் அனுபவம் பேசுதா?"
"ஏன் அத்தான் பேசக்கூடாதா? இப்படி எல்லாத்தையும் யோசிச்சதாலதான நான்" என சொல்ல வந்ததை முடிக்காமல் அவன் வேதனையுடன் தடுமாற,