அத்தியாயம் 99-1
/* நீலம் கொண்ட கண்ணும் மேகம் கொண்ட நெஞ்சும் காலம்தோரும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே நீ இன்றி ஏது பூ வைத்த மானே இதயம் முழுதும் எனது வசம் */
நட்ராஜின் பழைய பட்டறை…
“ஒண்ணு…. ரெண்டு… மூணு….” தள்ளாடியபடியே ரிஷி தன் முன் நின்றவர்களை எண்ண ஆரம்பித்தவனாக… பின் அதை நிறுத்தியவன்…
“சாரி நான் கணக்குல கொஞ்சம் வீக்…”
“ஆனால் அதுனால் என்னை யாரும் ஏமாத்த முடியாது… ஏன்னா… என் பொண்டாட்டி ஸ்ட்ராங்க்… கணித டைகர்… மேத்ஸ் சிங்கம்” ராகமாக இழுத்தவன்
“டே..ய் வேலா…” ரிஷி அதட்டலாக இப்போது அழைக்க
“அண்ணாத்த” வேகமாக வேலன் அவன் முன் வந்து நிற்க
“நான் என்ன சொன்னேன்… யார்கிட்ட சொல்லச் சொன்னேன்…. “
“அக்காகிட்ட தான் சொன்னேன் அண்ணே…”
“அப்போ இந்த பீசுங்க எல்லாத்துக்கும் யார் கால்ஷீட் கொடுத்தது” என்று நட்ராஜில் ஆரம்பித்து…. நாராயணனிடம் வந்து… சற்று தள்ளி நின்ற விக்கி வரை கை காட்டிச் சொல்ல…
வேலன் அமைதியாக இருக்க
“நான் கேட்டது ஒரே ஒரு கால்ஷீட்… என் பொண்டாட்டி கால்ஷீட்… அவளைத் தவிர மத்த எல்லாம் வந்திருக்கு… இன்குலூடிங்க் தாட் அனாயி்ங் அர்ஜூன்” ரிஷியின் சுட்டு விரல் அர்ஜூனை காட்டியபடியே இருக்க..
அர்ஜூன் இப்போது முறைக்க
”என்னடா முறைப்பு… எப்போ பாரு ஒரே எக்ஸ்பிரஷன்… உனக்கு வேற எக்ஸ்பிரஷனே வராதா… அப்புறம் எப்படி ஹீரோவா ஆகிறது….ஹீரோவாகனும் ஹீரொவாகனும்னா எப்படி… நவரசம்… நவரசமும் காட்டனும்… ” என்ற போதே கையில் இருந்த கண்ணாடி கோப்பையை அர்ஜூன் பார்க்க
“என்ன இங்க பார்வை…. இது வேற ரசம்… இதைக் குடிக்க மட்டுமே முடியும்… காட்ட முடியாது ப்ரதர்“ ரிஷி நக்கலாகச் சொன்னபடியே… குடிக்கப் போனவன்… தன் அன்னை…. மாமனார்… நாராயணன் வைதேகியைப் பார்த்தவனாக… குடிக்காமல் அதைக் கீழே வைத்தவன்…. மதுக்குவளையையும் முன்னால் நின்றிருந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்தவனாக… பின் தினகர் வேலனைப் பார்த்து
“ப்ச்ச்… போகச் சொல்லுங்கடா இவங்களை எல்லாம்… நிம்மதியா குடிக்கக் கூட முடியல” எரிச்சலோடு தன் இடத்தில் வந்து உட்கார்ந்தவன்… மீண்டும் அவர்களை எல்லாம் பார்த்து… மீண்டும் விரல்களால் கோடு இழுத்தபடி
“க…ண்… மணி… இல்லம் டூ பவித்ரா இல்லம் வரை…” இழுத்தவன்…
“அத்தனை பேரும் ஆஜர்… பட் வேர் இஸ் மை கண்மணி… என் கண்ணின் மணி… வரச் சொல்லுடா அவளை…”
“டேய் தினா… இந்த உலகம் எலோருக்கும் வெறும்… வெறும் உருண்டையா இருக்கும்… ஆனால் என் உலகம் எப்படி இருக்கும் தெரியுமா……”
தினகர் பதில் சொல்லாமல் ரிஷியை அப்பாவியாகப் பார்க்க…
”பதில் தெரியுமா தெரியாதா…”
“தெரியாதுண்ணா… “
“தெரிஞ்சுக்கோ… என் உலகம்… ரெண்டு கண்ணு ஒரு மூக்கு… ரெண்டு கன்னம்…. அதுல அழகான குழி… அப்புறம் சங்கு கழுத்து… அப்புறம்… “ எனும் போதே…
”ரிஷி… இது என்ன கூத்து…” நட்ராஜ் அவன் முன் வர…
“வணக்கம் முதலாளி… “ வேகமாக தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிடு போட்டவன்…
“நான் வணங்கும் என் இதய தெய்வமே… என் வாழ்க்கைக்கு வரமளித்த நல்ல உள்ளமே…” என் ஆரம்பித்தவன் மீண்டும் தினகரிடம் திரும்பி
“ஒரு நிமிசம் நான் எங்க இருந்தேன்… சங்கு கழுத்து… அதுல ” சொல்லிக் கொண்டிருந்தவன் அடுத்த கணமே…
“என் உலகம்…. அது எங்கடா… என் கண்மணி எங்கடா “
“என் வரத்தை தவற விட்டுட்டேனே” என அழ ஆரம்பித்தவன்… அடுத்த நொடியே சரி ஆனவனாக… தன் தாயைப் பார்த்தவன்….
“அம்மா…. நீ வளர்த்த பிள்ளை சிறகிழந்த கிள்ளை…
மணியை இழந்த கேஷ்….. ரிஷிகேஷ்… “
இலட்சுமி முதன் முதலாக இப்படி குடி போதையில் மகனைப் பார்க்கிறார்… கோபம் பாதி… வருத்தம் பாதி… கவலை என என கலந்த கலவையாக நிற்க
”ஹேய் ரித்வி பாப்பா… ரிது தங்கம்… என் ரத்தத்தின் ரத்தங்களே…” என அவர்கள் அருகில் போனவனைப் பார்த்து ரித்வி பயந்து வேகமாக தள்ளிச் செல்ல…
“பாப்பு… ஏண்டா… அண்ணாவைப் பார்த்து பயமா… “ என்றபடியே அனைவரையும் மீண்டும் பார்த்தவன்…
“எனக்கு ஒரே ஒரு டவுட்… இன்னைக்கு எனக்கு கல்யாண நாள்…”
“போன வருசம் இதே நாள்…. இதே நேரம்….நானும் அவளும் மட்டுமே… ஆனால் இன்று அதே நாள் அதே நேரம்… அவளில்லையே….” ராகமாக இழுத்தவன்
”அன்று என் தேவதை என்னைத் தேடி வந்தாள்…”
“இன்று” என மதுக் கோப்பையை எடுத்தவன்
“வருவாளா….”
இப்போது… அவன் அருகில் விக்கி வந்தவனாக… அருகில் இருந்த பாட்டிலையும்… அவன் கையில் இருந்த குவளையையும் வாங்கியவன்… அதை முகர்ந்து பார்க்க… உண்மையான மதுதான்… கவலையோடு ரிதன்யாவின் அருகில் வந்தவன்….
“உண்மையிலேயே குடிச்சுருக்கான் ரிது… அது கோக்லாம் இல்ல” என்று ரிதன்யாவிடம் சொல்ல… ரிதன்யா முறைத்தாள் விக்கியை…
“உன் அண்ணன் குடிச்சா என்னை எதுக்குடி முறைக்கிற… அவனை முறை…” என்ற போதே….
“நண்பா… வா வா… கம்பெனி கொடு… நீதான் இப்போ குடிப்பேல…” ரிஷி விக்கியை அழைக்க... விக்கி முறைத்த போதே…
“தங்கச்சி தானே… ” என்றபடியே ரிதுவை நோக்கியவன்
“ரிதும்மா… பையன கல்யாணமானதுக்கு அப்புறம் இதுக்கு வச்சு செஞ்சுக்கோ… இப்போ என் நண்பனை டிஸ்டர்ப் பண்ணாத…. டேய் மச்சான்... என் நண்பா காலேஜ் டைம்ல நீ எனக்கு கம்பெனி கொடுக்காததுக்கு சேர்த்து இப்போ கொடு… ஆமா உனக்கு எப்படி மிக்ஸ் பண்ணனும்” என்று விக்கியிடம் சென்று கையைப் பிடித்து இழுக்க
“டேய் ரிஷி…” விக்கி நண்பன் இழுத்த இழுப்புக்கு வராமல் பல்லைக் கடிக்க… ரிஷியோ நண்பனாக இல்லை இப்போது கண்மணியின் கணவனாக மாறி இருந்தான்...
“உன்னாலதாண்டா…. உன்னால தான் எனக்கு இந்த நிலைமை… என்னைக்கு உன்ன உள்ள விட்டேனோ… அன்னைக்கே… அவ என்னை விட்டுட்டு போக ஆரம்பிச்சுட்டா… எனக்கும் அவளுக்கு ஒரு… ஒரு.. ஒரு பிரச்சனை கூட வந்ததே இல்லை… வந்த பிரச்சனை எல்லாத்துக்குமே நீதான் காரணம்… உன்னாலதாண்டா என்கூட ஒரு வாரமா பேசாம இருந்தா… உன்னாலதான் அன்னைக்கு அவ என்னை 3 மணி நேரம் பார்க்காம இருந்தா… இப்போ இப்போ” என ரிஷி விக்கியைத் தள்ளி விட…
விக்கியோ குற்ற உணர்வில் தலை குனிந்திருக்க… ரிதன்யாவின் அருகில் வந்தவன்
“என் பொண்டாட்டியை எவ்ளோ பேச்சு பேசிருப்ப…. உதாசீனப்படுத்திருப்ப… கடைசியில அடிக்கக் கூட செஞ்ச… நான் என்ன பண்ணினேன்… வேடிக்கை பார்த்துட்டு தானே இருந்தேன்… இன்னைக்கு என்னை வேடிக்கை பார்க்க வச்சுட்டு போயிட்டா… சந்தோசமா தங்கையே…. ஆனால் இந்த அண்ணன் ஃபீல் பண்ண மாட்டான்… ஏன்னா என் தங்கச்சி சந்தோசம் தான் என் சந்தோசம்… “
என்ற போதே அவன் தள்ளாட்டம் அதிகமாகி இருக்க…. அர்ஜூனுக்கும் அதற்கு மேல் அங்கு நிற்க இஷ்டம் இல்லை…
தினகரும் வேலனும் வந்து கண்மணியிடம் ரிஷியின் நிலையைச் சொல்லி அழைக்க போயிருந்த போது கண்மணி கண்டுகொள்ளவில்லை...… ஆனால் நாராயணன்தான் என்னவோ ஏதோ என்று வைதேகியையும் அர்ஜூனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்…
இப்போது அர்ஜூன் தன் தாத்தாவிடம்
“தாத்தா பாட்டி… வாங்க போகலாம்… இவன் அடிக்கிற கூத்தை எல்லாம் பார்க்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை…. கண்மணியே கண்டுக்கலை... நாம எதுக்கு இங்க நிற்கனும்” என அவர்களை அழைத்த போதே
அவன் முன் போய் நின்ற ரிஷி…
“ஹலோ... உன்னை யார் ப்ரதர் இங்க கூப்பிட்டது… சம்பந்தமே இல்லாமல் வந்து நின்னுகிட்டு… இப்போ பொறுமை வேற இல்லையா சாருக்கு… இரிட்டேட்டிங் ஃபெல்லோ… எனக்கு ஒரே ஒரு டவுட் தான் நான் கேட்கவா மிஸ்டர் அனாயிங் அர்ஜூன் அவர்களே”
"டேய்” அர்ஜூன் கோபத்தில் குரலை உயர்த்தியவனாக பார்த்து முறைத்தபோதே
“என்ன என்ன லுக்கு… என்ன பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தாலும் ஹீரோ ஆக முடியாது… உன்னைலாம்… அப்போவே தூக்கியிருக்கனும் சீன்லருந்து.... போனா போகுதுனு கால்ஷீட் கொடுத்து வச்சுருக்கோம்… சோ குடுக்கிற காசுக்கு மட்டும் கூவினா போதும்…. சரியா…”
“வெயிட் வெயிட்.. டவுட் டவுட்… அதை கேட்க விடு…” ரிஷி அப்போதும் அர்ஜூனை விடாமல் அவன் முன் நின்றவனாக
“நீ கிரீன் கார்ட் ஹோல்டரா… அமெரிக்க வாசியா…இல்லை இந்திய வாசியா… பிஸ்னஸ் டைகூன்னு சொல்ற…. என் பொண்டாட்டி பின்னால சுத்தறத தவிர என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதே… என்ன பில்டப் கொடுத்தாலும்… உன் பருப்பு இங்க வேகாது… சரியா… கண்மணினா ரிஷி… ரிஷினா கண்மணி… ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிரு…” அர்ஜூன் அடுத்த நொடி ரிஷியின் சட்டையை கொத்தாகப் பற்றியிருக்க… அவன் பொறுமை முற்றிலும் பறந்திருந்தது ரிஷியின் பேச்சுக்களால்
விக்கி வேகமாக ஓடிவந்தவனாக .... தன் நண்பனை விட்டு அர்ஜூனைப் பிடித்து இழுத்திருக்க…
“விக்கி… உன் ஃப்ரெண்ட் லிமிட் தாண்டிப் போயிட்டு இருக்கான்” அர்ஜூன் கோபாவேசத்தில் கத்த ஆரம்பிக்க…
ரிஷியோ அலட்சியமாக
“என் பொண்டாட்டிக்கு பிடிச்ச ஷர்ட்… கசக்கிட்டான்… ப்ச்ச்… சரி பரவாயில்லை... ஷர்ட்டா முக்கியம்... என் பேபிக்கு ரிஷிதான் முக்கியம்” தன் சட்டையைச் சரி செய்தனாக… அனைவரையும் பார்த்தவன்
”எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க… உங்க யார் கூடவும் பேசுற மனநிலைல நான் இல்ல… ஆமாம் புருசன் பொண்டாட்டிக்கு பிரைவசியே கொடுக்க மாட்டீங்களா என்ன… தெலுங்கு மூவி மாதிரி எல்லா சீன்லயும் அப்பியரன்ஸ் கொடுத்துற வேண்டியது…. உங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் டையாலாக் பேசிப் பேசியே எனர்ஜிலாம் வேஸ்டா போகுது… நான் பேசுற நாப்பது பக்க வசனத்துல முப்பத்தெட்டு பக்க வசனம் உங்களுக்காகவே போயிருது…”
”டேய் தினா… நீங்க சொன்னதுக்கு என்னடா சொன்னா உங்க மணி அக்கா… இந்த ஊர்க்கு வேணும்னா சொர்ணாக்காவா இருக்கலாம்… ஜில்லா ரவுடியா இருக்கலாம்… இந்த ரிஷிக்கு முன்னால அவ பந்தாலாம் செல்லாது… பயம் என் முன்னாடி வந்து நிற்கிறதுக்கு உங்க மணி அக்காவுக்கு… ”
என்றபடியே தரையில் அமர்ந்தும் விட… வேலனும் தினகரும் பதறி ஓடிப் போய் அவனைத் தூக்கப் போக…
“யாரும் என் பக்கத்துல வரக்கூடாது…. நான் இப்படியே உட்கார்ந்து என் பொண்டாட்டிக்காக யாகம்…. இல்லலல்ல அதுக்குப் பேர் என்ன ’தவம்’… ஹான் அந்த தவம் பண்ணப் போறேன்… அவ வந்தால் தான் இந்த இடத்தை விட்டு எழுந்துப்பேன்… யாரோ ஒரு ரிஷி எதுக்கோ பண்ணிய தவத்தைக் கலைக்க மேனகை வந்தாள்… ஆனால் இந்த ரிஷி மேனகைக்காகவே… சாரி அவன் கண்மணிக்காகவே தவம் இருக்கப் போகிறான்” என்றபடியே....
“யாருக்காக இது யாருக்காக…”
சொர்க்கமாக நான் நினைத்தது… நரக… ” -
நிறுத்தியவன்… ‘நோ மை கண்மணி… ஆல்வேஸ் மை பாரடைஸ்…” ரிஷி ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க… ரித்விகா தன் அண்ணனை பார்த்தபடியே மெல்ல விலகி… சற்று தள்ளிச் சென்றவள்… அலைபேசியில் தன் அண்ணியைத் தொடர்பு கொண்டிருந்தாள்…
“அண்ணி… ப்ளீஸ்ண்ணி… அண்ணாவைப் பார்க்க பாவமா இருக்கு… அவரையே அவர் அசிங்கப்படுத்திட்டு இருக்கார்… ப்ளீஸ்ண்ணி… வாங்கண்ணி” ரித்விகாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடி இருக்க…
“வை… நான் வர்றேன்” சொல்லியபடியே கண்மணி வைத்தும் விட… ரித்விகா இப்போது நிம்மதியாக தன் அண்ணனைப் பார்த்தாள்…
”என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதானய்யா சாமி
ஒன்றை உந்தன் மனம் கேட்டது அந்த ஒன்றும் வேறு இடம் போனது கையில் வரும் என பார்த்தது இன்று கை நழுவி ஏன் போனது
வழிக்கு வந்தது துணையா இல்லை வழுக்கி விட்டிடும் வினையா இதை என்னென்று சொல்வது சித்திர பதுமையே
ஓம்ஓம்ஓம் ஓம் ஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம்”
ரிஷி யாகம் வளர்ப்பது போல பாட ஆரம்பித்திருக்க…
“ரி…ஷி… ஏண்டா இப்படி பண்ணிட்டிருக்க… உனக்கு ஏண்டா இந்த பைத்தியகாரத்தனம் எல்லாம்… வீட்டுக்கு வாடா போகலாம்… “ இலட்சுமி அவன் அருகே அமர்ந்து அழுதபடியே அவனைக் கைப்பற்றி இழுக்க
“அவ வரனும்… அப்போதான் நான் இந்த இடத்தை விட்டு வருவேன்” ரிஷி பிடிவாதக் குரலில் தன் அம்மாவைப் பார்க்காமல் வெறித்த பார்வையோடு சொன்னவன்…
“போன வருசம் வந்தாள்ளா… நான் கூப்பிடாமலே என்னைத் தேடி வந்தாள்ளா… அதே மாதிரி இப்பவும் வருவா… வரனும்… வர வைப்பேன்…” எனும் போதே நட்ராஜின் கம்பெனிக்குள் கண்மணியின் கார் நுழைந்திருக்க…
அத்தனை பேரும் அதில் இருந்து இறங்கிய கண்மணியைப் பார்க்க… ரிஷியோ அவள் புறம் திரும்பவில்லை… மாறாக எழுந்தவன்…
”வந்தனம் என் வந்தனம் – நீ மன்மதன் ஓதிடும் மந்திரம் புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்”
அவள் முன் போய் நிற்க… கண்மணி கடுப்போடு இதழைச் சுழித்து அவனைப் பார்க்க…
”உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் சமர்ப்பணம்”
வருக வருக தானைத் தலைவியே !...
நட்ராஜின் தவப் புதல்வியே !...
நாராயணனின் ஒற்றைப் பேத்தியே !...
தனசேகரின் தங்க மருமகளே !...
ரிஷிகேஷின் தேவதை மனைவியே !...
கண்மணியே என் கண்ணின் மணியே!!
வருக வருக....
அவள் முன் தலை குனிந்து அவளை வரவேற்பது போல ரிஷி செய்து காட்ட...
கண்மணி ரிஷியோடு பேசாமல்… ஒரு முறைப்பை மட்டும் அவனுக்கு கொடுத்து விட்டு… மற்ற அனைவரையும் பார்த்தவள்…
“எல்லோரும் கிளம்புங்க…” எனச் சொல்ல…. அனைவரும் தயங்கியபடியே கண்மணியைப் பார்க்க…
“எல்லாரும் கிளம்புங்கன்னு சொல்றேன்ல” கண்மணி குரலை உயர்த்தி இருக்க…
“மேட்..ட..ம் சொல்றாங்கள்ள…. கெளம்புங்க கெளம்புங்க… எங்க மேடம் ரொம்பக் கோபக்காரங்க… கெளம்புங்க கெளம்புங்க… அவங்க பார்த்துப்பாங்க… “ ரிஷி கண்மணிக்கு ஒத்து ஊதினான்…
“அத்தை நீங்க போங்க… கெளம்புங்க… அப்பா நீங்களும்” கண்மணி தன் தந்தையிடமும்… இலட்சுமியிடம் சொல்ல.. ரிஷி இதற்கும் இப்போது பின்பாட்டு பாடினான்...
“அர்ஜூன் … நீங்களும்… தாத்தா பாட்டியை கூட்டிட்டுப் போங்க”...
“எஸ் பேபி… முதல்ல அவனை… அவனைக் கட் ப்ண்ணி விடு பேபி“ எனும் போதே கண்மணி ரிஷியை வெட்டும் பார்வை பார்க்க… வேகமாக கைகளால் தன் வாயைப் பொத்திக் கொண்டவன் பவ்யமாக மாறிக் கொண்டவனாக
”ஓகே அம்மு… ஓகே… அம்மு… ஐ ஆம் வெயிட்டிங் வித்தவுட் வேர்ட்ஸ்… நீ பேசு பேசு… எல்லோரையும் இடத்தைக் காலி பண்ணச் சொல்லு “ என்றவன்… அடுத்த நொடியே
“இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மை ரவுடிப் பொண்டாட்டி “ எனக் கைகளை நீட்ட… கண்மணியோ அவன் கைகளைத் தட்டி விட்டிருந்தாள் கோபத்துடன்…
இப்போது விக்கியோ ரிதன்யாவிடம்
“அம்மு… ரவுடி… பேபி… அடேங்கப்பா… என் நண்பன் காதல் மன்னனாத்தான் இருந்திருக்கான்… இருக்க மாட்டானா… பார்த்த ஃபர்ஸ்ட் நாள்ளயே சொர்ணாக்கான்னு பட்டப் பேர் வச்சவன் தானே… ”
அடுத்த நிமிடம் தன் வருங்காலக் கணவனை ரிதன்யா பார்வையாலே பஸ்பம் செய்திருந்தாள்…
“இங்க என்ன நடந்துட்டு இருக்கு… உங்களுக்கு கிண்டலா இருக்கா என்ன… என் அண்ணனைப் பாருங்க..” என்று அவனைத் திட்டிக் கொண்டிருக்க… மீண்டும் ரிஷியிடம் விக்கி கவனத்தை வைக்க
அங்கு ரிஷியோ …. வேலன் தினகரை கட்டிப் பிடித்துக் கொண்டபடி…
“என் தளபதிகளா… மணி அக்காவை… வர வச்சுட்டீங்கடா… என் தளபதிகளா… நாம ஜெயிச்சுட்டோம்டா…”
“ஜிங்குன மணி… ஜிங்குன மணி…”
“முறச்சுபுட்டா நெஞ்சில ஆணி…”
“அட அவ வந்தா என் பந்தா காலி…”
”ஆமாங்கோ…. ஆமோங்க”
ரிஷி இப்போது ஆட்டம் போட ஆரம்பித்திருக்க… வேலனும் தினகரையும் வேறு சேர்த்து தன்னுடன் ஆட வைத்திருக்க
“அண்ணாத்த… இப்போதான் மணி அக்கா பந்தாவெல்லாம் உங்க கிட்ட செல்லாதுன்னு சொன்னீங்க… ஆனால் இப்டி அந்தர் பல்ட்டி அடிச்சுட்டீங்களே” வேலனும் தினகரும் ரிஷியிடம் கேட்க… அவன் என்ன பதில் சொல்லும் நிலையிலா இருந்தான்….
கண்மணி இப்போது ரிஷியை கவனிக்காமல் விக்கி ரிதன்யாவைப் பார்த்தாள்… பேசவில்லை… பார்வை மட்டுமே…
அடுத்த நொடி… விக்கிதான் அங்கு நின்ற அனைவரிடம்
“யார் வரனுமோ வந்துட்டாங்க… அவ பார்த்துப்பா… வாங்க போகலாம்” எனும் போதே அர்ஜூன் ஆவேசமாக விக்கியிடம் பாய்ந்தான்
“இந்தப் பைத்தியக்காரனை நம்பி… இவளை விட்டுப் போகச் சொல்றியா விக்கி”
ஆடிக் கொண்டிருந்த ரிஷி… அதை நிறுத்தி…
“அதை யார் சொல்றது பாருடா விக்கி…. அட ஒரு பைத்தியமே பைத்தியம் என்கிறதே அடடே ஆச்சரியக்குறி “ ரிஷி இப்போது அடங்காமல் நக்கலாகப் பேசியவன்… அடுத்த நொடியே கண்மணியின் கடுகடுத்த பார்வையைப் பார்த்து பயந்த தோரணைக்கு தன்னை மாற்றியவனாக
“ஐயோ அம்மு… நான் பேசலை அம்மு…. பேசவே இல்லை… ஆனால் இவன் என்னைப் பேச வைக்கிறான்… இவனை அமெரிக்கா போகச் சொல்லு முதல்ல… இப்போ கூட ஒரி ஃபளைட் மேல பறக்கும்... இறக்கி ஏத்தி விட்றலாம்...”
ரிஷியின் இத்தனைக் கலாட்டாக்களுக்கு நடுவில்… எப்படியோ மற்ற அனைவரும் கிளம்பியிருக்க… நாராயணன் மட்டும் போக மனமில்லாமல் கண்மணியைப் பார்த்தவராக தயங்கி நின்றவர்….
“வெயிட் பண்றோம்டா… ரிஷியை வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு வா….” எனச் சொன்ன போதே…
“நீங்க போங்கன்னு சொல்றேன் தாத்தா…” என்றவள் நாராயணனை அதற்கு மேல் பார்க்கவில்லை… வைதேகியிடம் மட்டும் கண்சைகை காட்ட… வைதேகி நாராயணன் மற்றும் அர்ஜூனை அழைத்துக் கொண்டு கிளம்ப… அவர்கள் கிளம்பியதை கண்டு கொள்ளவில்லை கண்மணி… ரிஷியிடம் மட்டுமே இப்போது அவள் பார்வை இருக்க… ரிஷியோ
“வா வா அம்மு… இங்க ஓகே வா… இந்த இடம் ஓகே வா… நம்ம ஃபர்ஸ்ட் நைட் மாதிரி நான் கதை சொல்வேனாம்… நீ கேட்பியாம்… அது ரிஷி கதை…. இது ரிஷி-கண்மணி கதை… செம்ம இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்.. முக்கியமா… நோ சென்சார்… கம் கம்… மாமா ரொம்ப நேரமா வெயிட்டிங்…” என அவனருகில் கண்மணிக்காக இடம் விட்டு தள்ளி அமர.. கண்மணியோ ரிஷியின் அருகே செல்லாமல்… அங்கிருந்த காலி மதுப் பாட்டில்களைப் பார்த்தவள்… திறக்கப்படாமல் இருந்த இரண்டு பாட்டில்களையும் எடுத்து சுவற்றை நோக்கி எறிந்தபடி…. வேலன் தினகரை நோக்கி சென்றாள்…
“இதெல்லாம் யார் வாங்கிக் கொடுத்தது இவருக்கு….” இருவரையும் பார்த்து கோபமாகக் கேட்க
“ஐயோ மணி அக்கா… நாங்கள்ளாம் இல்லை… அது என்ன பேர்னு கூட எங்களுக்குத் தெரியாது… எவ்வளவோ சொன்னோம்… வேண்டாம்னு… அண்ணாத்த கேக்கவே இல்லை…. உங்ககிட்ட வந்து சொல்லி உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு… அந்த வேலையை மட்டும் தான் நாங்க பண்ணினோம்…” பயந்த குரலில் இருவருமே கண்மணியிடம் சொல்லிக் கொண்டிருக்க
”டேய் தளபதிகளா… நீங்க ஏண்டா பயப்பட்றீங்க…”
“ஏய் என்னடி… பச்சப் புள்ளங்களை மிரட்ற….. எங்க என்கிட்ட வந்து பேசு பார்க்கலாம்… மிரட்டு பார்க்கலாம்” ரிஷி அவளை மிரட்டி தன் பக்கம் வர வைக்க முயல… கண்மணி ஒரு அடி கூட நகரவில்லை தான் இருந்த இடத்தை விட்டு… மாறாக அங்கிருந்தபடியே… அவன் புறம் திரும்பியவளாக
”ஒழுங்கா இப்போ வீட்டுக்குப் போறீங்க… இவங்க ரெண்டு பேர் கூடயும்” எனும் போதே
“என்ன நீ மெரட்டுனா…. நாங்க பயந்துருவோமா என்ன… என் பக்கத்துல வரத் தைரியமில்லாமத்தானே… பத்தடி தூரம் தள்ளி நிக்கிற… எங்க உன் வீரத்தை எல்லாம் என் பக்கத்தில வந்து காட்டு பார்ப்போம்…” ரிஷி கண்மணியின் வார்த்தைகளை எல்லாம் மதிக்கவே இல்லை… அவளைத் தன் அருகில் வரவைப்பதிலேயே குறியாக இருக்க...
“உங்க ரெண்டு பேருக்கும் இவரைக் கூட்டிட்டு போக தெரியாதா என்ன???…. ரிஷி கிளம்புங்க… தேவையில்லாத பிரச்சனை பண்ணாதீங்க… உங்களையும் அசிங்கப்படுத்திக்காதீங்க… என்னையும் கோபப்படுத்தாதீங்க…”
“போக மாட்டேன்… போகவே மாட்டேன்.... போகலேன்னா என்ன பண்ணுவ… காட்டு உன் கோபத்தை… அதெல்லாம் எனக்கு ஜூஜூபி… ”
“வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெட்கமா
மன்மத மோகத்திலெ .ஏ .ஏ .ஏ.ஏ
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை இன்பம் தரும்
பதுமை இனிமை காண வா”
“ரிஷி... ஒழுங்கா என் கையால அடி வாங்காமல் கிளம்பிருங்க... குடிச்சதே தப்பு... இதுல கண்ட பாட்டு வேற... நான் சொன்னா கேட்பீங்கள்ள... கெளம்புங்க...” கண்மணி பல்லைக் கடித்திருக்க
“ஓ கேட்பேனே... நீ சொல்றதை மட்டும்தான் கேட்பேன் அம்மு... ஆனால் நான் இங்கயிருந்து போகனும்னா நீ வரனும்… நீ வா அப்போதான் போவேன்…” ரிஷி பிடிவாதமாக அமர்ந்திருக்க..
“அப்போ இங்கேயே கிடங்க…” என்றபடியே தான் இருந்த இடத்தில் இருந்தே நடக்க ஆரம்பித்திருக்க…
“உன்னை நான் சந்தித்தேன் … நீ ஆயிரத்தில் ஒருத்தி”
“உன்னை ஏன் சந்திதேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
“உன்னை ஏன் சந்திதேன்…
ஊமை நான் சிந்தித்தேன்…
ஒரு தீர்வு இல்லையா…”
ரிஷியின் குரல் தழுதழுத்திருக்க… கண்மணி நின்றிருந்தாள் இப்போது… தினகர் மற்றும் வேலனைப் பார்த்தவள்…
“ஆட்டோ கிடைக்குமானு பார்க்கிறீங்களா…” கண்மணியின் குரலும் மெலிதாக வந்திருக்க… அந்த இருளில் அவள் கண்ணீர் யாரும் அறியாமல் உருண்டோடி…. தரையில் தஞ்சமடைந்திருந்தது… அப்போதும் ரிஷியின் புறம் திரும்பாமலேயே நின்றாள்தான் கண்மணி…
“ஆட்டோலாம் வேண்டாம் அம்மு… நீ என்கூட வருவேன்னு தெரியும்… தேவியார் தங்களின் வாகனத்தில் தான் வந்தேன்…” இப்போது கண்மணி ரிஷியின் புறம் திரும்பி இருக்க… ரிஷி வேகமாக அவன் கைகளில் இருந்த அவள் ஸ்கூட்டியின் சாவியைக் காட்ட…
அவன் இருக்கும் நிலையில் அவனாலும் ஓட்ட முடியாது… வேறு வழியில்லை அவள் தான் ஓட்ட வேண்டும்… தான் கர்ப்பமாக இருக்கும் இந்த நிலையில் அவள் ஓட்டலாமா வேண்டாமா… தனக்குள் யோசித்தபடி நின்ற போதே…
“நான் ஓட்றேன் அம்மு… பத்திரமா உன்னையும் நம்ம குழந்தையையும் கொண்டு போய் சேர்க்க மாட்டேனா… என் உயிர் நீங்க தானே” ரிஷி எழுந்த போதே தள்ளாடி விழப் போக… கண்மணி வேகமாக ஓடி வந்து அவனைப் பிடித்திருக்க… ரிஷியின் கண்கள் அவளின் கண்களோடு கலந்ததுதான்… அதில் ஆயிரம் கேள்விகள்…
கண்மணி சட்டென்று அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தவளாக….
“வேலா… ஸ்கூட்டி எங்க இருக்கு…” வேலனிடம் திரும்ப…
“கேட்ல முன்னாடி இருக்குக்கா… எடுத்துட்டு வரவா…” என்றவனிடம் ரிஷி சாவியைக் கொடுக்காமல்…
“நோ நெவர்… அது என் பொண்டாட்டி ஸ்கூட்டி… என் பொண்டாட்டி இல்லை எனக்கு மட்டுமே உரிமை” எனும் போதே… கண்மணி அவனிடமிருந்த ஸ்கூட்டி சாவியைப் பறித்தவள்…
“நீ போய் எடுத்துட்டு வா” என வேலனிடம் சாவியைக் கொடுக்க… வேலன் ரிஷியைப் பார்க்க
“என் பொண்டாட்டியே பெர்மிஷன் கொடுத்துட்டாள்ள… அப்புறம் என்ன… போய் எடுத்துட்டு வா… அவளோட உரிமை எல்லாம் அவ ரிஷிக்கண்ணா கிட்ட மட்டும் தான்… அப்படித்தானே அம்மு” என்றவனை விட்டு கண்மணி விலகி நிற்கப் போக… ரிஷி மீண்டும் தள்ளாட… கண்மணி அவனை மீண்டும் பிடித்து நிறுத்தி இருந்தாள்… இப்போது அவனை விட்டு அவளும் விலகவில்லை… அவனும் தள்ளாடவில்லை….
வேலனும் அவளின் ஸ்கூட்டியை எடுத்து வந்து நிறுத்தியவன்… அவளின் ஹெல்மெட்டையும் அவளிடம் எடுத்துக் கொடுத்திருக்க…
“வா அம்மு உட்காரு…” ரிஷி வேகமாக முன்னால் அமரப் போக… கண்மணி அவனைப் பிடித்து நிறுத்தி பின்னால் அமர வைத்தவளாக… தன் முந்தானையை இடையில் செறுகிய போதே…
“நோ ரொமான்ஸ் அம்மு… பாப்பா இருக்குல…” என்றபடி அவள் இடை தெரிந்த பகுதியை மறைத்து அவள் புடவையை இழுத்து விட்டபடியே…
“நான் பக்கா ஜென்டில் மேன்தான் அம்மு… ஆனால் அது எல்லாம் மத்தவங்களுக்கு… யூ நோ ஆல் மை ஷேட்ஸ் அம்மு… பொண்டாட்டியா எச்சரிக்கையா இருக்கனும்ல… புவர் கேர்ள்“ என்று அவளைப் பார்த்து குறும்புக் கண்ணனாக கண்ணடிக்க…
“கைல என்ன வச்சிருக்கேன்னு தெரியுதுதானே…“ அவனிடம் ஹெல்மெட்டைக் காட்டியபடியே தலையில் மாட்டியவளிடம்…. ரிஷி பதிலேதும் சொல்லாமல்… வேலன் தினகரிடம் திரும்பியவனாக
“தம்பிங்களா… பைடா… பார்த்து போங்க… ட்ராஃபிக் ரூல்ஸ்லாம் பார்த்துப் போகனும்… என் தளபதினு காட்டனும் “ என்றபோதே கண்மணி பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க… அதை எதிர்பாராத ரிஷி ஆடி அவள் மீதே மோதியவன்… வேகமாக அவள் இடையைப் பிடித்து சமாளித்தவனாக
“ஏய்… ஏண்டி…இவ்ளோ ஃபாஸ்ட்டா போற… உனக்கு ஸ்பீடா போறது பிடிக்கும்தான்… அதுக்காக… நீ கன்சீவா இருக்கேன்றதை ஞாபகம் வச்சுக்க” ரிஷி பதறிச் சொல்ல… அவன் குரலில் தடுமாற்றம் என்பதே துளி கூட இல்லை… கண்மணி சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க…
அவனோ அப்போதும் நிலை தடுமாறித்தான் அமர்ந்திருந்தான்…. கண்மணி திரும்பி சாலையைப் பார்த்து ஓட்ட ஆரம்பித்தாள்…
”என் உயிர் ஒண்ணு உன் ரூபத்துல… இன்னொன்னு… உன் வயித்துல… பார்த்துப் போ… கன்சீவா இருக்க… அது மட்டும் ஞாபகம் வச்சுக்கோ…. ”
“அது உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சரி…” என்ற கண்மணி அதற்கு மேல் ஏதும் பேசாமல் பாதையில் மட்டும் கவனம் வைத்திருக்க….
ரிஷி சும்மா அமர்ந்து வந்திருப்பானா என்ன…
”அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி கண்மணி..... கண்மணி”
”ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி”
”கண்மணி என் கண்மணி”
கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ”
“கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு”
“கண்மணியே கண்மணியே சொல்லுறதைக் கேளு…” என அவன் அடுத்த பாடலை ஆரம்பித்த போதே
கண்மணி இப்போது வண்டியை நிறுத்தியவளாக…
“வீட்டுக்குப் போற வரை… வாயைத் திறக்கக் கூடாது… இல்லை… அப்டியே விட்டுட்டுப் போயிருவேன்” கண்மணி மிரட்டியிருக்க
வேகமாக அவள் தோளில் தலை சாய்த்தவன்… அவள் இடையை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டவனாக…
“ரை……………..ட் போலாம்… டேய் யாராவது பாட்டு போடுங்க… இல்லை பாட்டு பாடுங்க… அப்புறம் இருக்கு…. அதுலயும் ‘கண்மணி..” வார்த்தை வரவே வரக் கூடாது… நான் பார்த்துக்கிறேன் அம்மு… டேய் எவனாவது பாடுவீங்க… சொல்லிட்டேன் கண்மணி… நீ போ தங்கம் நம்ம ரூட்டைப் பார்த்து…” ரிஷி விசிலடித்து அவன் பேச்சை முடித்திருக்க…
கண்மணியும் இப்போது பைக்கை எடுத்திருந்தாள் …
“அம்மு… இன்னும் 2 மினிட்ஸ்ல ஸ்பீட் ப்ரேக் வரும் பாரு… ஸ்லோ பண்ணு…” ரிஷி பாடவில்லை… மாறாக அவளிடம் வழி சொல்லியபடியே வந்தான்… அவன் கையையும் அவள் இடையில் இருந்து எடுக்க வில்லை… கண்மணியின் தோள் வளைவில் அவன் தலை சாய்த்தபடி வந்ததையும் மாற்ற வில்லை…
“அடுத்து ஒரு பள்ளம் வரும்… ரைட்ல வந்து லெஃப்ட்ல போ… இந்த ஏரியாப் பற்றி உனக்கு ஏதும் தெரியாது… மாமா சொல்றதை மட்டும் ஃபாளோ பண்ணிக்கோ… ஆ… ஹான்… அந்த லெஃப்ட் தான்…
“அடுத்து செகண்ட் ரைட்… அப்ப்புறம் ஒரு யூ டேர்ன்..
“அப்டியே போனா ஒரு சின்ன சந்து… ஹான் வந்துருச்சு பாரு… அதுதான் ‘கண்மணி’ இல்லம்…” கண்மணிக்கே ’கண்மணி’ இல்லத்துக்கு வழி காட்டிக் முடித்திருந்தான் ரிஷி
அவனின் அழிச்சாட்டியங்களை எல்லாம் சகித்துக் கொண்டு… ’கண்மணி’ இல்லம் முன் வண்டியை நிறுத்தியவள்… வண்டியை விட்டு இறங்காமல்
“உள்ள போங்க…” என்று மட்டும் சொல்ல… ரிஷியும் பேசாமல் இறங்கியவனாக…
“பார்த்து போ அம்மு… போய்ட்டு போன் பண்ணு…” என்றவன்… ’கண்மணி’ இல்ல வாயிலை நோக்கிப் போகாமல்… எதிர் திசையில் போயிருக்க…
“கடவுளே… ரிஷி…” கண்மணி தலையிலடித்தபடி வேகமாக இறங்கி… அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள்…
“வீடு… அங்க இருக்கு… இந்தப் பக்கம் ஏன்போறீங்க” பல்லைக் கடித்துக் கொண்டு செல்ல
ரிஷியும் நின்றவனாக… திரும்பி வீட்டைப் பார்த்து
“’கண்மணி இல்லம்’…” வாசித்துக் காட்டியவன்…
“கொட்டை எழுத்துல எழுதியிருக்கே… அது தெரியாமலா இந்தப் பக்கம் போறேன்…” ரிஷி நக்கலாகக் கேட்க
“தெரியுதுதானே… அப்புறம் என்ன… ஏன் இந்தப் பக்கம் போறீங்க..” என கண்மணி கடுப்பாகக் கேட்க
“உனக்கு விசயமே தெரியாதா அம்மு” ரிஷி ரகசியக் குரலில் கண்மணியிடம் கேட்க
கண்மணி புரியாமல் விழிக்க
“இந்த வீட்டோட அக்ரிமெண்ட்ல ஃபர்ஸ்ட் கண்டிஷனே…. குடிச்சுட்டு உள்ள காலை வைக்கக் கூடாது… வீட்டுக்காரம்மா டெரர் பீஸ்… தெரியுமா…. நான் இப்படி… ஹான்.. இங்க உட்கார்ந்துட்டு…. போதை இறங்கின உடனே உள்ள போய்க்கிறேன்… இல்லைனா அந்த சொர்ணாக்கா என்னை வீட்டை விட்டு டைவர்ஸ் பண்ணிரும்” ரிஷி அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட… அமர்ந்ததோடு மட்டுமல்லாமல்…
“நீ போ… டைம் ஆகிருச்சு… உங்க மாளிகைக்கு ”
“மகாராணி மகாராணி மாளிகை மகாராணி… ” ரிஷியின் அட்டூழியங்கள் பாடல்களாக தொடர்ந்திருக்க…
அவனைக் கண்டுகொள்ளாமல்… தன் அலைபேசியை எடுத்தவளாக… தன் தந்தைக்கு போன் செய்தாள் கண்மணி…
/* கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
உன் தோளில் தானே பூமாலை நானே சூடாமல் போனால் வாடாதோ மானே இதயம் முழுதும் எனது வசம் */
கண்மணி என் கண்ணின் மணி 99-2 - சில துணுக்குகள்
கை அலம்பி விட்டு வந்தவள்…. அவன் முன் அமர்ந்தவளாக… சாதத்தை எடுத்து அவனுக்கு ஊட்டி விடப் போன போதே…
“நீ…” ரிஷி அவளைக் கேட்க…
---
“ரிஷி… ரிஷி…”அவனைக் கண்மணி பதறி எழுப்பி அமர வைத்தவளிடம் ரிஷி அவள் மீதே தொய்ந்து விழுந்திருக்க… வேகமாகத் தண்ணீரைப் புகட்டியவள்… அவன் முகத்தைத் துடைத்து விட்டவள் கண்களில் கண்ணீர் வந்திருக்க…
---
“என்னடி… என்ன முறைக்கிற…” அவளைத் தன்னோடு இழுத்தவன்… அதே வேகத்தில் அறைக்கதவையும் மூடி இருக்க… கண்மணி அவனை விட்டு விலகவெல்லாம் இல்லை…
---
“நான் திறக்க மாட்டேன்… அது யாரா இருந்தாலும் பரவாயில்லை… உன்னை என்னை விட்டுப் போக விட மாட்டேன்” ரிஷி அவளை தனக்குள் வலுக்கட்டாயமாக வசப்படுத்தி இருக்க
---
“என்ன … என்ன… எல்லோரும் ட்ராமா பண்றீங்களா… “
“யார் நீயா நாங்களா… புள்ளத்தாச்சி புள்ளைனு கூடப் பார்க்காமல் அவள சுத்த விட்டுட்டு இருக்க… ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனால் என்னடா பண்ணுவ…”
---
“என்ன கருமம்… அப்படி என்ன பண்ணிட்டேன்… என் பொண்டாட்டி… எங்க ஃபர்ஸ்ட் அனிவெர்சரி… என் பொண்டாட்டி அவ என்கிட்ட கேட்டதை நான் பண்ணியிருக்கேன்… இதுல என்ன எனக்கு அசிங்கம்… இல்லை இதுல நீங்க என்ன அசிங்கத்தைப் பார்த்துட்டீங்க… சொல்லப் போனால் நீங்க எல்லோரும் தான் அசிங்கப்படனும்… வெட்கப்படனும்… புருசன் பொண்டாட்டி தனியா இருக்கிற ரூம்ல அதுவும் இந்த நேரத்துல வந்து கதவைத் தட்டினதுக்கு… இப்படி அவங்க ரூம் முன்னாடி நிக்கிறதுக்கு…” என்றவன்
---
தன் தாயின் கைகளை உதறி விட்டு… வேக வேகமாக இறங்க ஆரம்பித்திருக்க…
“ரிஷி…” நட்ராஜ் அவன் பின்னே ஓட ஆரம்பித்திருக்க… இலட்சுமியோ தன் மகனை… அவன் நிலையை வெறித்தபடி அப்படியே நின்றிருந்தார்…
Semmmaaaaa
Rishi thanni adichana ila ah
Paya pulla telivu tan
Ellarum VAchi seiuran
Performence super thala
Analum romba kastama
Ini kanin mani kanmani ilathula tana
May be rishi kanmani convo is dream of rishi? 🤔🤔🤔
Super
Rishi pulambal kanmaniya mattum illama namakum kastama irukku.
Nice update kanmani car la varanu mention pannitu rishi ya kooti kitu scooty nu irukku
Appa enna oru emotions siss
kanmani future ha nenachu present ha painful mathitu irrukanga
yaru pavam nu theriyala siss
ரிஷி பேச்சு பார்த்து சிரிக்கிறாதா இல்ல கவலைப் படுரதான்னு தெரியல. It is really heart touching moments.எப்படி தாங்க முடிந்தது கண்மணியால்.I can't bearup it .சத்தியமா முடியலங்க.இது வெறும் கதை தான்னு மூளைக்கு தெரியுது.மணசுக்கு தெரியவே இல்லை.
செம அலம்பல் ரிஷி
Rk Vera level performance jii.. Could feel his pain..too much hurting.. Really unga heros always stick to our heart.. Every one are special especially unique in their life story.. Indhar, Bala, RRR, now Rk🔥jii.. Could feel Kanmani's pain too.. Rishi kanna va vittu RK is living as soul without breathe... How they reunite jii.. Eagerly waiting jii..
Rishi alaparaikal nice