அத்தியாயம் 98:
/*தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே*/
பவித்ர விகாஸ்:
“நான் வரலை ஆண்ட்டி…. ப்ளீஸ் என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க… என்னோட லைஃப்… என்னோட முடிவு… இதுல நான் யாருக்கு ஆன்சர் பண்ணனும்… யார் என்ன பஞ்சாயத்து பண்ணினாலும் என்னோட முடிவுல இருந்து நான் மாற மாட்டேன்… அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்… அப்புறம் என்னோட அப்பாவை மட்டும் நான் பார்க்கனும்… அவர்கிட்ட நேர்ல பேசனும் போல இருக்கு… ஒருநாள் உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்… அன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு வருகிறேன்..” சொன்னபடி வேறு ஏதும் பேசாமல் கிருத்திகாவின் அழைப்பை துண்டித்த கண்மணி… அலைபேசியை எரிச்சலோடு மெத்தையின் மீது வீசி எறிந்தவள்… அர்ஜூன்… நாராயணன்… வைதேகி என தன்னைச் சுற்றி நின்ற யாரையும் கண்டு கொள்ளாமல்… சன்னலில் அருகே போய் நின்று வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்க
”கண்மணி” கோபத்தோடு கத்தினார் வைதேகி…. கண்மணி சலனமின்றி திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…
பேத்தியை அதட்டிய தன் மனைவியை நாராயணன் முறைத்தபோதே….
“இவ பண்ணிட்டு இருக்கிறதெல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கச் சொல்றீங்களா… நமக்கு அவகிட்ட இவ்ளோதான் உரிமை… கேள்விலாம் கேட்கக் கூடாதுன்னு சொல்லாம சொல்றாளா…” வைதேகி குரல் கோபமும் … விரக்தியும் கலந்து வந்திருக்க…
“தாராளமா கேள்வி கேட்கலாம்… “ இப்போது கண்மணி அவர் புறம் திரும்பியாவளாக கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி இலகுவாக பேச ஆரம்பித்தபடி… தன் பாட்டியைப் பார்க்க… வைதேகியும் பேச ஆரம்பித்தார்….
“உன்னோட வாழ்க்கைதான்… இல்லைனு சொல்லல… ஏன் எங்களுக்கு கூட உன்கிட்ட கேள்வி கேட்க உரிமை இல்லாமல் இருக்கலாம்… ஆனால் உன் வயித்துல வளர்ற வாரிசு உன்னோடது மட்டும் இல்லையே… ரிஷிக்கும் சம்பந்தமானது.. அந்த குடும்பத்து வாரிசு…” எனும் போதே… வேகமாக கட்டிலில்ப் போய் அமர்ந்தவள் அடுத்து எதுவுமே பேசவில்லை… கண்மணியின் கண்கள் கோபத்தில் சிவந்திருக்க மூக்கு விடைத்தபடி அவள் அமர்ந்திருந்த விதமே வைதேகியை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்திருக்க…
“ஏய்… நீ சும்மா இருக்க மாட்டியாடி…. அம்மா… கண்மணி… அவ பேசுறதை எல்லாம் விட்டுத் தள்ளு… நான் இருக்கேண்டா உனக்கு… உன் முடிவு எதுனாலும் சப்போர்ட் பண்ண உன் தாத்தா இருக்கேண்டா” என நாராயணன் அவள் அருகில் அவளைச் சமாதானப்படுத்த… அர்ஜூன் ஏதும் பேசவில்லை… மௌனமாகவே அவர்கள் மூவரையும் பார்த்தபடி இருக்க… கண்மணியோ வைதேகியையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள்… அவள் கண்கள் வைதேகியிடமே இருந்தது…
வைதேகிக்கே அவள் பார்வை அச்சத்தை தந்திருக்க… இப்போது கண்மணி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்திருந்தாள்…
“பாட்டி… நான்… என் பிறப்பு… நான் வளர்ந்த விதம்… இதெல்லாம் பார்த்தும் இன்னும் இந்த வாரிசு… என் ரத்தம்… இந்த வார்த்தைலை எல்லாம் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு…” கேள்வி கேட்டபடியே… அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த தன் அன்னையின் இளம் வயது புகைப்படங்களைக் காட்டியவள்…
”இதோ… அந்த போட்டோல இருக்கிறவங்க வயித்துல பிறந்த வாரிசுனு… எல்லோரும் அவங்களை மாதிரியே தாங்கிக்கிட்டீங்களா… இல்லையே… வாரிசு… இரத்தம்… எல்லாம் சுத்த ஹம்பக்…” கண்ணில் இருந்து கண்மணியின் கன்னங்களி நீர் வழிந்தோட… வேகத்தோடு அழுந்தத் துடைத்தவள் அதே வேகத்தில் தன் கண்களின் ஊற்றையும் நிறுத்தியிருந்தாள்… அவள் குரலின் டெசிபல் அளவும் அதிகரித்திருந்தது
”சொல்லுங்க… இதோ இந்த மகாராணி பெத்த பொண்ணு தான் தெருவுல வளர்ந்தாளா… மண்ணுல புரண்டாளா…”
”வயித்துக்கு ஆன சாப்பாடு கிடைக்காம பசி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்த காலம் எனக்குத் தெரிஞ்சு மூணு வயசுக்கு பின்னால… அதுக்கு முன்னால கந்தம்மாள் பாட்டி எப்படி வளர்த்துச்சு எனக்குத் தெரியலை… கண்டிப்பா சந்தோசமா என்னை வளர்த்துருக்காது…அது மட்டும் நிச்சயம்”
“உங்கள விடுங்க… எங்க கெழவியை விடுங்க… என் அப்பா அவர் என்னை அவரோட வாரிசா பார்த்திருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேனே… அன்னைக்கு அவர் பார்க்கலையே… இப்போ வந்துட்டீங்க அவன் வாரிசு இவன் வாரிசுன்னு… உங்களுக்கு தேவைனா அது வாரிசு… இல்லைனா தேவையில்லாத ஜென்மம்… அப்படித்தானே… இன்னொரு தடவை குடும்ப வாரிசு… இவனுக்கு பதில் சொல்லனும்…. அவங்க குடும்பத்துக்கு பதில் சொல்லனும்னு சொன்னீங்க… நான் சொன்னாத்தானே அந்தக் குழந்தைக்கு அப்பா மத்த உறவெல்லாம்”
”கண்மணி…” வைதேகி உச்சஸ்தாயில் கத்த
“கத்தாதீங்க… இந்தப் பேச்சை எல்லாம் நிறுத்துங்க… சரியா… அம்மா அப்பா… இந்த உலகத்துக்கு இன்னொரு உயிரை அறிமுகப்படுத்துற ஊடகம் மட்டும்தான்… புரிஞ்சுக்கங்க… அந்த உயிருக்குனு தனி விதி இருக்கு… “ என்றவள்… தன் நெற்றியில் வலதுகை கட்டை விரலால் இடமிருந்து வலமாக கோடு போட்டுக் காட்டியவள்
”அதுக்கு என்ன தலைஎழுத்து எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்… நீங்க, நான் யார் என்ன நெனச்சாலும் அது நடக்காது… எக்ஸாம்பிள் உங்க பொண்ணே இருந்தாங்களே….. உங்க பொண்ணு அவங்க பொண்ணுக்காக என்ன என்ன ஆசை வச்சுருந்தாங்க… அதுல ஒண்ணு கூட அந்த பவித்ரா பெத்த பொண்ணுக்கு நடக்கலையே… கண்மணி எனக்கு என்ன என்ன விதியோ அதுதான் நடந்தது.. நடந்துட்டு இருக்கு… நடக்கவும் போகுது… இது எனக்கு மட்டும் இல்லை… என் வயித்துல இருக்கிற என்னோட குழந்தைங்….. குழந்தைக்குமே…”
”எந்த உறவும் எனக்கு கைவிலங்கா மாற விரும்பலை நான்… வழக்கம் போல எல்லா உறவையும் தள்ளி நின்னே வாழப் பழகிக்கிறேன்… நேத்து தாத்தா பாட்டி… அப்பா… இன்னைக்கு கணவன்… நாளைக்கு குழந்தையும்…” என்றவள்… எங்கோ வெறித்தவளாக… இதழ் வளைத்தபடி
“என் அம்மாவோட தொப்புள் கொடியை விட்டு விலகி விழுந்த போதே… இந்த சாபம் வாங்கிட்டு வந்திருப்பேன் போல… நான் பிறந்தப்போதும்… எனக்கு குழந்தை பிறக்கும் போதும்” கீழ் உதட்டை அழுந்தக் கடித்தவளின் இறுக்கமே…அவளின் நிலையை அனைவருக்கும் சொல்லி இருக்க…
“வைதேகி… என் பேத்தியை ஏன் இப்படி கஷ்டப்பட வைக்கிற” நாராயணன் தழுதழுத்திருக்க… அர்ஜூன் இத்தனை நேரம் அமைதியாகத்தான் இருந்தான்… இப்போது அவன் பேச ஆரம்பித்திருந்தான்
“எல்லா உறவையும் தள்ளி நிறுத்தின நீ… கணவன்ற உறவையும் தள்ளி வைக்கலையே… அப்படி தள்ளி வச்சுருந்தா இன்னைக்கு அது இன்னொரு உயிருக்கான கேள்விக் குறியா வந்திருக்காதே”
அமைதியாக அவனை வெறித்த கண்மணி…. “ஏன்ன்னு தெரியலையா…” அவனையே பார்த்தவள்… இப்போது சிரிக்க ஆரம்பித்தவளாக
“என்னோட வயது, அதுக்கான ஆசை… என்னோட இளமை,அதுக்கான தேடல்… ” அவள் சொல்லி முடிக்கவில்லை… அர்ஜூன் பல்லைக் கடித்தவனாக…. அவள் முன்னே வந்து நின்றிருக்க…
நேற்று ரிஷி அவளிடம் கேட்ட கேள்விகளின் அழுத்தம் தாங்காமல் இன்றைய பேச்சுக்கள் வெளிவந்திருந்தது கண்மணியிடம் இருந்து…. அர்ஜூனின் கோபம் எல்லாம் அவளை என்ன செய்துவிடும்… தன் முன் வந்து நின்றவனை அலட்சியப்படுத்தியவளாக
“கோபபடாதீங்க மிஸ்டர் அர்ஜூன்… ரிஷின்னு இல்லை… என்னை யார் மேரேஜ் பண்ணியிருந்தாலும் அவங்களுக்கான முடிவு இது தான்… சொல்லப் போனால் நீங்க புண்ணியம் பண்ணியிருப்பீங்க போல அர்ஜூன்… என்கிட்டயிருந்து தப்பிச்சுட்டீங்க… பாவம் அந்த ரிஷி மாட்டிட்டாரு… ஆக்சுவலா நீங்க சந்தோசப்படனும் அர்ஜூன்… மொத்ததுல நான் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணே கிடையாது”
“கண்மணி… உன்னோட பேச்சு எல்லை மீறிப் போய்ட்டு இருக்கு… நீ உன்னை மட்டும் அசிங்கப்படுத்திக்கலை… எங்க எல்லாரையும் ஹர்ட் பண்ற…” அர்ஜூன் நிதானாமாகச் சொன்னாலும் அவன் அழுத்தி சொன்ன விதமே அவன் கோபத்தைச் சொல்லி இருக்க
“இதுதான் நான்… இதுதான் கண்மணி… இந்த அரோகண்ட் குணம் தான் இந்தக் கண்மணியோட குணம்… என்னை யாரும் கன்வின்ஸ் பண்ணவும் முடியாது… அவங்க முடிவுகளை என் மேல திணிக்கவும் முடியாது… எங்க கெழவி சொல்ற மாதிரி… நான் அடங்காதவ… ஆடுகாளி… திமிர் புடிச்சவ… அகம் பிடிச்சவ… என்ன பேர்னாலும் இதுக்கு வச்சுக்கலாம்… போதுமா” கோபத்தில் உயர்ந்த் அவளின் குரல் அந்த அறை முழுவதும் எதிரொலித்திருக்க…
நாராயணன்.. வைதேகி… அர்ஜூன் மூவருமே அவளைப் பார்த்து சிலையாகி நின்றிருக்க… கண்மணியோ… தன் அருகில் உள்ள மேஜையில் இருந்த விவாகரத்து பேப்பர்களை எடுத்தவள் இயல்பாக நிதானமாக அதில் தன் பார்வையை ஓட விட ஆரம்பித்திருந்தாள்…
----
கிருத்திகா இல்லம்…
ரிதன்யா ஒரு மாதிரியான படபடப்போடு அமர்ந்திருந்தாள் தன் அன்னையின் அருகில்.. கண்மணியிடம் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று நேற்றிலிருந்தே தன்னைத் தயார்படுத்தி வந்திருந்தாள்…
தன் அண்ணணின் நேற்றைய சந்தோஷம்… அதற்கான காரணம்…. என ரிதன்யாவின் சந்தோசத்துக்கு அளவே இல்லை எனலாம்…
“அம்மா… பாருங்க இனிமேல எல்லா பிரச்சனையும் முடிஞ்சுரும்… நாம எல்லோரும் பேசினா கண்டிப்பா கண்மணி… ப்ச்ச்… அண்ணி வந்துருவாங்க… அவங்க யாரையும் கஷ்டபடுத்த நினைக்கவே மாட்டாங்க…” அன்னையிடம் சொன்ன ரிதன்யாவின் குரலில் அப்படி ஒரு நம்பிக்கை
நட்ராஜ்… இலட்சுமி… ரிதன்யா… இவர்களோடு விக்கியும் அவரது தாத்தா வேங்கட ராகவனும்… வந்திருக்க… இவர்கள்கள் அல்லாமல் நீலகண்டனும் அவரது வருகையை பதிவு செய்திருந்தார் ரிஷிகேஷுக்காக……
இவர்கள் அனைவரையும் விட கிருத்திகாவின் இல்லத்துக்கு வருகை தந்திருந்த முக்கியமான நபர்… கந்தம்மாள் தான்… மற்றவர்கள் அனைவரும்… ரிஷி கண்மணி இருவருக்குமான பிரச்சனையைப் பற்றி பேசி முடிவுக்கு வர வந்திருக்க… கந்தம்மாளோ கண்மணியைத் திட்டுவதற்கென்றே வந்திருந்தார் கிருத்திகாவின் வீட்டுக்கு…
”இங்க பாருப்பா… இவங்க எல்லாரும் சொல்றதைக் கேட்டுட்டு அவ வந்துருவான்னு நினைக்கிற… அவளை எல்லாம் அன்னைக்கே கால ஒடிச்சு என் வீட்ல போட்ருந்திருக்கனும்….” தன் அருகே நின்றிருந்த ரிஷியிடம் சொல்ல… ரிஷியோ அமைதியாக இருந்தான்
”வர மாட்டேன்னு சொன்னவளை கிருத்திகா மேடம் எப்படியோ பேசி வரவச்சிருக்காங்க… இதுல இவங்க வேற…. “ ரிஷியின் அருகில் நின்ற விக்கி தனக்குள் முண்முணுத்தபடி… பின்
”ஏண்டா… நீ இவங்கள விட்டு ஒரு பத்தடி தள்ளி நில்லேன்… ஏற்கனவே கண்மணிக்கு உன் மேல கோபம்… இதுல இவங்க பக்கத்தில வேற நிக்கிற… வரும்போதே அவளுக்கு டென்ஷனை ஏத்தனுமா” ரிஷியின் காதில் விக்கி முணுமுணுக்க…
”அன்னைக்கு அங்கயிருந்து அப்பா வீட்டுக்கு போறேன்னு வந்தா… இப்போ அம்மா வீட்டுக்கு போறேன்னு போயிட்டாளா என்ன… வரட்டும் இன்னைக்கு…” கந்தம்மாள் மட்டும் அங்கு பேசிக் கொண்டேயிருக்க…
“அம்மா… வாயை மூடிட்டு இருக்கியா… என் பொண்ணை ஏதாவது சொல்லிட்டு இருந்த…”நட்ராஜ் கந்தம்மாள் வாயை அடக்க…
“உனக்கு உன் பொண்ணைச் சொன்னா பொத்துகிட்டு வந்திருமே… புள்ளையா வளர்த்து வச்சுருக்க… கல்யாணம் பண்ணியும் அடங்கலை…” நட்ராஜிடம் ஆரம்பித்து ரிஷியிடம் முடித்து கழுத்தை நொடிக்க…
“பத்து வயசு வரை நீங்க வளர்த்த பேத்திதானே… வர்றாள்ள… அவகிட்டயே இங்க கேள்வியை எல்லாம் கேளுங்க..” ரிஷி கடுப்புடன் சொன்னபடி மீண்டும் அமைதி ஆகி விட
“கேட்பேன் தம்பி… கேட்பேன்… ஆனால் உனக்கென்ன ராசா கொறச்சல்… இந்தக் கழுதை வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு போவியா… சும்மா கெஞ்சிகிட்டு… விட்டுட்டுப் போய்ப்பாரு… அப்போ தெரியும் உன் மதிப்பு…. தானா தேடி வருவா… அப்டி வரலைனாலும் விடு… நீ மட்டும் ’ம்’னு ஒரு வார்த்தை சொல்லு… நானே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்” ரிஷியிடம் கந்தம்மாள் அறிவுரைகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவன் வாழ்க்கையின் பாதையையே மாற்ற யோசனைகள் சொல்ல… அடுத்த நொடி…
”கந்தம்மாள் பேத்தி மாதிரி… தேடினாலும் கிடைக்குமா… அவ ஒருத்திதானே இருக்கா” ரிஷி பவ்யமாகச் சொல்ல… கந்தம்மாள் அதற்கு மேல் பேசுவாரா என்ன… என்ன சொன்னால் கந்தம்மாள் வாயை மூடுவாரோ… அந்தப் பதிலைச் சொல்லி ரிஷி கந்தம்மாளின் பேச்சுக்களை நிறுத்தியிருக்க… அப்போது கிருத்திகாவின் அலைபேசிக்கு அர்ஜூனிடம் இருந்து அழைப்பு வந்திருக்க….
“ராஜ்… கண்மணி வந்துட்டா…” எனும் போதே நட்ராஜ் அங்கே இல்லை… அடுத்த நிமிடமே… மகளைப் பார்ப்பதற்காக வாயிலை நோக்கிச் சென்றவர்…. நாராயணன்… வைதேகி…. அர்ஜூன் என யாரையும் அவர் கண்டுகொள்ளவில்லை… அவர் கண்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர் மகள் மட்டுமே….
“தன் மகள் இன்னொரு உயிரைச் சுமக்கின்றாள்…” நேற்றிலிருந்து மகளைப் பார்க்கப் போகும் நேரத்திற்காகத் தவித்திருந்தவர்… மகளைக் கண்டவுடன் ஓடோடிப் போய் மகளை அணைத்துக் கொண்டவார்… உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தார்… மகளை உச்சி முதல் பாதம் வரை அலசியவர்…
”என்னடா இப்படி மெலிஞ்சு போயிட்ட…. சாப்பிடறியா இல்லையா… “ மகளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவர்…
“அப்பாகிட்ட கூட சொல்லலையேடா… உன் அம்மா இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா… அப்பாகிட்ட போன்ல பேசும் போதாவது சொல்லிருக்கலாமேடா” எனும் போதே… அவரிடமிருந்து விலகி…. அவர் கைகளைப் பற்றிக் கொண்டவள்…
“ப்பா…” என அவர் கைகளை தன் கைகளோடு வைத்து கொண்டபடியே… வேறு ஏதும் பேசாமல் அவரோடு சேர்ந்து உள்ளே போக… நாராயணனும் அர்ஜூனும் கடுப்பாக உள்ளே வந்தனர்… வைதேகியோ பேத்தியை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிய மனநிலையிலேயே தன் பேத்தியைத் தொடர்ந்தார்…
வரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தவள் திடிரென்று பின் அவளாகவே வந்து கிளம்புங்கள் என்று இவர்களைக் கிளப்பியும் கூட்டி வந்திருந்தாள்…
நட்ராஜ் என்ற ஒரு நபருக்காக மட்டுமே… அவர் பவித்ரா விகாஸுக்கு வர மாட்டான் என்பதால்… கிருத்திகா வீட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…
கண்மணி உள்ளே நுழைய… வேங்கட ராகவன்… இலட்சுமி… என அனைவரும் அவள் மேல் பாச மழையைப் பொழிய… கண்மணி அவர்களின் அன்பு மழை அனைத்தையும் அளவோடு வாங்கிக் கொண்டவள்.. கந்தம்மாளைப் பார்த்தாள்… கந்தம்மாளை மட்டுமே… அவர் அருகில் நின்ற ரிஷி என்ற ஒருவனை வேண்டுமென்றே தவிர்த்தாள்
அவளுக்கு மாறாக ரிஷி கண்மணியைப் பார்த்தபடியே இருக்க… அவள் கண்டு கொள்ளாவிட்டாலும்… தவிர்த்தாலும்… தவிப்போடு அவளைப் பார்த்தபடிதான் நின்றிருந்தான் ரிஷி….
“மசக்கையா இருக்கேன்னு சொன்னாங்க… எப்படி இருக்க…” கண்மணி பார்த்ததும்… வேண்டா வெறுப்பாக ஏதோ கேட்க வேண்டும் பேச வேம்டி, என்பதற்காக கந்தம்மாள் கேட்க…
“ஏன் நீ வந்து என்னை கொஞ்சி கொண்டாடப் போறியா என்ன… நான் என்னவா இருந்தால் உனக்கென்ன…” கண்மணி பட்டென்று சொல்ல…
“ஏண்டா ராசு… நான் நல்லபடியாத்தானே கேட்டேன் உன் பொண்ணுகிட்ட…. இவ்ளோ பட்டும் வாய் மட்டும் அடங்கமாட்டேங்குது இவளுக்கு…” அதோடு விட்டாரா என்ன… வைதேகி நாராயணனைப் பார்த்தபடியே
“சும்மாவே ஆடுவா… இதுல சலங்கை கட்டி விட்டா… ஆட்டத்துக்கு பஞ்சமா என்ன… அப்படியே அந்த புத்தி இரத்தத்துல ஓடுது… திமிரு… தலைக்கனம்… எல்லாம்”
கந்தம்மாளை ஏன் வரச் சொன்னீர்கள் என்ற கேள்வியைப் பார்வையால் கேட்டு கிருத்திகாவை கண்மணி முறைத்தபடியே பார்க்க…. கிருத்திகா பேச ஆரம்பித்த போதே
“அம்மா…. உன் பஞ்சாயத்து… சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்… எதுக்காக வந்திருக்கோம்னு கொஞ்சம் மனசுல வச்சுக்கிட்டு பேசு…” தாயை அடக்கியவர்…
“அம்மாடா… நீ இங்க வா… வந்து உட்காரு,… வந்ததில இருந்து நின்னுட்டு இருக்க” எனக் கண்மணியை தன் அருகே அமர அழைக்க..
“ஒரு நிமிசம்ப்பா…” என்றவள் அங்கு அமர்ந்திருந்த ரிதன்யாவை மட்டுமே இப்போது பார்த்திருந்தாள்… ரிதன்யாவுக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது போன்ற போன்ற உணர்வு… அதே நேரம் அவளையுமறியாமல் கனிவானப் பார்வையை கண்மணி மீது வீசியிருக்க…
“இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க” கூர்மையான பார்வையோடு ரிதன்யாவைப் பார்த்து கடினமானக் குரலில் கேட்க
“கண்மணி… அ..” என ரிதன்யா தடுமாற…
கிருத்திகாவிடம் திரும்பினாள் கண்மணி
”ஆன்ட்டி… இங்க பேசப் போறது என்னோட விசயம்… கண்டிப்பா நான் இருக்கேன்… அதுக்காகத்தான் வந்திருக்கேன்… அதே நேரம்… என்னைப் பிடிக்காதவங்க இங்க இருக்கக் கூடாது… அப்படி இவங்க இங்கதான் இருப்பாங்கன்னா… நான் இப்போதே கிளம்புகிறேன்… எனக்கு இவங்க முன்னால பேச இஷ்டம் இல்லை” கண்மணி பிடிவாதமான குரலில்… கடின முகத்தோடு சொல்ல…
ரிதன்யாவின் கண்களில் கண்ணீர் வெள்ளம் தோன்றி சட்டென்று அவள் பார்வையை மறைத்தாலும்… நொடியில் சுதாரித்து தன்னைச் சமாளித்துக் கொண்டவளாக… சூழ்நிலையைப் புரிந்து கொண்டவளாக… வேகமாக எழுந்தவள்…
“கார்ல வெயிட் பண்றேன்… என்னால பிரச்சனை வேண்டாம்” யாரையுமே பார்க்காமல்… அடுத்த நிமிடமே விருட்டென்று வெளியேறி இருக்க… மொத்த நபர்களும் அதிர்ந்திருக்க… ரிஷி கோபத்தோடு கண்மணியைப் பார்த்து பேச ஆரம்பித்த போதே… விக்கி நண்பனை அடக்கியிருந்தான்…
அதே நேரம் கண்மணியிடம் திரும்பியவனாக
“கண்மணி… அவ இப்போ” எனும் போதே
“ஹான் சாரி மிஸ்டர் விக்ரம்… ரிதன்யாவுக்குத்தான் என்னை பிடிக்காது… ஆனால் அவங்களை எனக்குப் பிடிக்கும்…” என்றவள்…
“என்னைப் பிடிக்காதவங்க மட்டும் இல்லை…. எனக்குப் பிடிக்காதவங்களும் இங்க இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்… யாரை சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… சோ நீங்களும்” என விக்கியைப் பார்த்தவள்.. வாசலை நோக்கி கைகாட்ட…
விக்கி கண்மணியிடம் ஏதுமே பேச வில்லை…
“டேய்… நான் போகிறேன்… ” ரிஷியைப் பார்த்துச் சொன்ன விக்கியின் முகம் அவமானத்திலா… கோபத்திலா… இருண்டிருக்க … இறுகிப் போய் நின்றிருந்த ரிஷியிடம்…
“இப்போ நாங்க முக்கியம் இல்லை… பேச வேண்டியது விசயத்தை மட்டும் பேசு..… அவளைச் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்ற வழியை மட்டும் பாரு…” என்றபடி வெளியேறி விட… ரிஷி அதன் பிறகு வாயையேத் திறக்கவில்லை… கண்மணியின் அகந்தையான திமிரான… இறுமாப்பான நடவடிக்கையே பார்த்தபடி இருக்க..
“அகம் பிடிச்ச கழுதை….” கந்தம்மாள் ரிஷியிடம் கருவிக் கொண்டிருந்த போதே…..
கந்தம்மாளைப் பார்த்த கண்மணி…
“கெழவி…. இந்த ரெண்டு ரூல்சுமே உனக்குப் பொருந்தும்… உனக்கும் என்னைப் பிடிக்காது… எனக்கும் உன்னைப் பிடிக்காது… ஆனாலும்… நீ போவியா என்ன… இந்த சூடு சொரணை இதெல்லாம் என்னன்னு இப்போ நான் சொன்னவுடனே போனாங்களே… அவங்களைப் பார்த்து கத்துக்கோ…” கந்தம்மாளை இளக்காரமகப் பார்த்தவள்… வந்ததில் இருந்து எப்படி ரிஷியை கண்டுகொள்ளவில்லையோ அதேபோல கந்தம்மாளிடம் பேசிய போதும் கண்டுகொள்ளவே இல்லை…
வேண்டுமென்றே ரிஷியைத் தவிர்த்தவளின் பார்வை அவானித் தாண்டி… நீலகண்டனிடம் வந்து நின்ற போதோ… அதில் எள்ளல் மட்டுமே…
“சார் நீங்க எதுக்கு வந்துருக்கீங்க… ரிஷிக்கு சப்போர்ட்டா பேசவா… ” நக்கலாகக் கேட்க
“என்னம்மா இப்படி பேசுற… வேற யாருக்காக நான் வருவேன்… என் மருமகனோட வாழ்க்கை எனக்கு முக்கியம்”
“ஓ… மருமகன்…. யாரு இந்த ரிஷியா… கேட்க நல்லா இருக்கே… என்ன சொன்னீங்க… மருமகனோட வாழ்க்கை முக்கியமா… அப்போ ஏன் சார் அந்த மருமகனுக்கு உங்க பொண்ணைக் கொடுக்கலை… அப்போ எங்க போச்சு இந்த அக்கறை… பாசம்…. பரிதவிப்பு எல்லாம்”
“நீங்களும் கெளம்புங்க… வாசல் கதவு திறந்துதான் இருக்கு” கண்மணி அடுத்த வார்த்தையைப் பேச ஆரம்பித்த போதே
“கண்மணி” ரிஷியிடமிருந்து குரல் வந்தது… அதுவும் கோபமாக…
கண்மணி ரிஷியைக் கண்டு கொண்டால்தானே… அவன் புறம் திரும்பினால் தானே… அதேநேரம் மகனின் கோபம் உணர்ந்தவராக இலட்சுமி சட்டென்று பேச ஆரம்பித்திருந்தார்… ரிஷியும் வேறு வழி இல்லாமல் அமைதி ஆகி இருந்தான்… இலட்சுமி கண்மணியைப் பார்த்து…
“கண்மணி… ரிது… விக்கி ஓகே… ஆனா இவர் என்னோட கூடப்பிறக்காத அண்ணன்… அவருக்கு எங்க குடும்பத்துல நடக்கிற எல்லா நல்லது கெட்டதுலயும் அவர் இல்லாம இருந்துது இல்லை…”
“ஓ… அப்படியா அத்தை… அப்போ உங்க பையனோட மேரேஜுக்கு இவர் எங்க போனார்… அப்போ வந்திருந்தார்னா… நானும் இப்போ அமைதியா இருந்திருப்பேன்” கண்மணி நக்கலாகச் சொன்னவள்… ஏதோ ஞாபகம் வந்தது போல
“இப்போ ஞாபகம் வந்திருச்சு…. இவர் பொண்ணு…. உங்க பையன் தான் வேணும்னு… போராட்டம் நடத்துச்சே… அப்போ நான் தலையிட்டேன்னு… இப்போ வந்துருக்கீங்களா மிஸ்டர் நீலகண்டன் சார்…”
கண்மணி எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்க… ரிஷியின் கோபமும் எல்லை மீற ஆரம்பித்திருந்தது… எப்போது வெடிக்கும் என்றே தெரியாத நிலை… இருந்தும் தன்னை போராடிக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க…
நீலகண்டன்… இப்போது…
“சரி… இப்படியும் வச்சுக்கம்மா… ரிஷிக்காக வரலை… ஆனால் என் பொண்ணுக்காக வந்தேன்னு…”
கண்மணியின் புருவம் சட்டென்று ஏறி இறங்கிய போதே
“என் பொண்ணோட வேதனையை இதோ இந்தப் பையன் புரிஞ்சுக்காததுனால தான் நீ அவரை மேரேஜ் பண்ணேன்னு சொன்னியாமே… என்னோட பொண்ணு பேரு அடிபடுதே… அதைக் கிளியர் பண்ண வேண்டாமா… அவளோட வாழ்க்கை முக்கியம் எனக்கு… உங்க சண்டைனால என் பொண்ணோட வாழ்க்கையும் பிரச்சனை ஆகுமோன்னு பயம்… அதுக்காக வந்தேன்“
கண்மணி இப்போது பேசவில்லை…. அதற்கு மேல் நீலகண்டனைக் கண்டுக் கொள்ளவும் இல்லை..
வேங்கட ராகவனைப் பார்த்தவள்…
”சாரி தாத்தா… என்னை மன்னிச்சுக்கங்க…. நான் ஒரு வார்த்தை சொன்னதுக்காக ரிதன்யாவை ஏத்துக்கிட்டீங்க… உங்க அளவுக்கு எனக்கு பெருந்தன்மையான குணம் கிடையாது தாத்தா… நீங்க சொல்றதை நான் கேட்ப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க..” இதற்கு முன்னர் பேசியபோது இருந்த அகங்காரம் திமிர் இப்போது அந்தக் குரலில் இல்லை… பவ்யம் மட்டுமே அந்தக் குரலில்…
கடைசியாக இலட்சுமியைப் பார்த்தவள்…
“சாரித்தை… உங்கள வந்து பார்க்க முடியலை… ஆனால் ரித்விகா கிட்ட கேட்டுக்கிட்டேன்” என்றபடி இலட்சுமி அருகில் வந்து அமர்ந்தும் விட… இலட்சுமி தன் மருமகளைத் தன் தோளோடு சேர்த்துக் கொண்டவராக… அமைதியாக இருக்க
அங்கு மிகப்பெரிய அமைதி நிலவி இருக்க… ரிஷி இப்போது ஆரம்பித்திருந்தான் …
“உன்னைப் பிடிக்காதவங்க இங்க இருக்கக் கூடாதுன்னு நீ நினைக்கிறியோ அதே மாதிரி நானும் நினைக்கலாம் தானே…” கண்மணியின் முன் வந்து நின்றாலும்… பார்வை அர்ஜூனிடம் இருக்க
“ஹான் தாராளமா… நீங்களும் சொல்லலாமே” என்றவள்… இலட்சுமியை விட்டு விலகி அமர்ந்தவளாக
“அர்ஜூன் இல்லைனா… நானும் கிளம்பிருவேன்… அவர் எனக்கு முக்கியம்…”
“உங்க தங்கை… அவங்களோட வருங்காலக் கணவர் முக்கியம்னா… நீங்க அதை முன்னாடியே சொல்லிருக்கனும் ரிஷி…. அவ்ளோ கோபம்னா நீங்களும் போகலாம் ரிஷி… இங்க யாரும் உங்ககிட்ட பேசனும்னு ஓடி வரலை… தாராளமா போகலாம் உங்க உயிர் தங்கை பின்னாடியே”
ரிஷி கோபத்தோடுஅவளைப் பார்க்க ஆரம்பித்த போதே
“ஆனால் போறதுக்கு முன்னால இதை எடுத்துட்டுப் போயிருங்க..”
”நேத்து நீங்க மறந்துட்டு போயிட்டீங்க… இதுல சைன் வாங்கத்தானே நேற்று நீங்க வந்தீங்க… உங்க ஆசைப்படியே சைன் போட்டு கொண்டு வந்திருக்கேன்… “ என அவள் பேசிக் கொண்டிருந்தபோதே… வேகத்தோடு அவளிடமிருந்து ரிஷி அந்தக் காகிதங்களை வாங்கியவன்… அதே வேகத்தோடு அதைக் கிழித்து.. சுக்கு நூறாக்கி… அவளிடம் நீட்ட
“என்கிட்ட எதுக்கு நீட்றீங்க…. நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா… நீங்க கிழிச்சதை வாங்கி குப்பைத் தொட்டியில போட்ற வேலை பார்க்க… அங்க போட்டுட்டு போங்க ரிஷி சார்…” அவனை அலட்சியபடுத்தியபடியே... அடுத்த நொடி அர்ஜூனிடம் திரும்பி
“அர்ஜூன்… ரிஷியோட லேப்டாப்பை கொடுக்கும் போது… இதோட சாஃப்ட் காப்பியையும் அதுல சேவ் பண்ணிக் கொடுத்திருங்க… ரிஷி கோபம் எல்லாம் போய்… அவரே பிரிண்டவுட் எடுத்துக்குவார்…” கண்மணி கூலாகச் சொல்ல… ரிஷியின் கை அவளை அறைவதற்காக கன்னத்தை நோக்கி உயர்ந்து அப்படியே நின்றிருக்க… அதே நேரம் வேகமாக இலட்சுமி… அவன் முன்னால் வந்து நிற்க…
“ம்மா… அடிக்க மாட்டேன் போங்க… அதுவும் அவ கன்சீவா இருக்கும் போது ” சொன்னவன்
“நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்… ஓவரா… பேசிட்டு இருக்கா… என் பொறுமையைச் சோதிக்கிறா…” என்றவன்
”ஏய் என்னடி இப்போ… என் கூட வாழப் பிடிக்கலை… என்னைப் பிடிக்கலை… அவ்ளோதானே… இதுதானே உன் ஆசை… இருந்துக்கோ… நான் உன்னையை டிஸ்டர்ப் பண்ணலை… ”
“ஆனால்… என் குழந்தை எனக்கு முக்கியம்…” ரிஷி ஆவேசத்துடன் பேச…
”அதுக்குதான் ரிஷி… இந்த பேப்பர்… உங்க கண்டிஷன்ஸ் எதுவுமே மாத்தலை…. நீங்க சொன்ன மாதிரியே எழுதி இருக்கேன்… கண்டிப்பா பொறுப்பா இருப்பேன்…” ரிஷியின் கோபம் அவனை ஆள ஆரம்பித்திருக்க…
“ஆன்ட்டி நான் இதுக்கு மேல இருந்தேனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… மிருகமா மாறினாலும் மாறியிருவேன்…”
”யாரும் எனக்காக ஏதும் பேச வேண்டாம்… யார் பேச்சையும் இவ கேட்க மாட்டா… அது எனக்குத் தெரியும்… “ அவனின் கோபம் எல்லை மீறி இருக்க… அதை அடக்கியதின் விளைவு ரிஷியின் குரல் மூச்சு வாங்க ஆரம்பித்திருந்தது…
வியர்த்திருந்த அவனது முகத்தைத் துடைத்த அவன் கைகளின் நடுக்கமே அவன் இயலாமையை பிரதிபலித்திருக்க… வைதேகி நாராயணன் அருகில் போனவன்
“நீங்க அவளைப் பார்த்துப்பீங்கன்னு தெரியும்… அவ உங்க கூட இருந்தா பாதுகாப்பா இருப்பான்னு நம்புறதுனால அவளை உங்ககிட்ட விட்டுட்டு போறேன்… ”
அதற்கு மேல் ஒரு வார்த்தை அவன் பேசவும் இல்லை… அங்கு நிற்கவும் இல்லை…
ரிஷி சென்று விட்டான்… இலட்சுமி கண்மணியையே பார்த்தபடி இருக்க… கண்மணி இப்போது அவர் முன் வந்து நின்றாள்…
“அத்தை” இலட்சுமியை அழைத்தபடி அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவள்…
“இங்க யாருக்குமே என்கிட்ட கேள்வி கேட்க உரிமை இல்லை…. ஆனால் நீங்க கேட்கலாம்…” என்றவளின் தலை தாழ்ந்திருக்க…
இலட்சுமி… அவளையேப் பார்த்தவர்…
“எனக்கு உன்கிட்ட கேட்க ஆயிரம் கேள்வி இருந்தது…. ஆனால் இப்போ இல்லை கண்மணி… நான் ரிஷிகிட்டயே பேசிக்கிறேன்… உடம்பை பார்த்துக்கோ… எப்போதுமே நீ முக்கியம்” என்று எழுந்தவர் அங்கிருந்து கிளம்பியும் இருந்தார்….
ரிஷி வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருக்க… எஞ்சி இருந்தது… நாராயணன் குடும்பமும்… நட்ராஜும் மட்டுமே
“தாத்தா… நான் நைட் வர்றேன்…” என்ற கண்மணி இப்போது நட்ராஜ் அருகே நின்றிருக்க… நாராயணன் வழக்கம் போல கண்மணியின் வார்த்தைகளுக்கு மறுப்பேதும் சொல்லாமல்… தன் மனைவி… பேரனோடு கிளம்பிச் சென்றிருக்க…
கிருத்திகா அமைதியாக கண்மணியின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர கண்மணியிடம் பேசவே இல்லை… கண்மணியும் கிருத்திகாவின் மௌனம் உணர்ந்தாள் தான்…. கிருத்திகாவின் மௌனத்தை உள்வாங்கிக் கொண்டவளாக
“காவேரி அக்கா… காவேரி அக்கா…” என சமையலறையைப் பார்த்து சத்தம் போட்டு அழைத்தபடியே அங்கு போக…. கண்மணி அழைத்த காவேரி அக்காவும் வந்திருக்க…
“காவேரி அக்கா… இன்னைக்கு நாம ரெண்டு பேரும் சமைக்கலாம்… என் அப்பாக்கு பிடிச்சதுதான் இன்னைக்கு நம்ம லஞ்ச் மெனு…”
---
மகளையே பார்த்தபடி இருந்த நட்ராஜ்… இப்போது கிருத்திகாவைப் பார்த்து…
“நீ ஏதாவது பேசி அவ மனசை மாத்தப் பாரு கிருத்தி… அவளுக்கு ரிஷியை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு மட்டும்தான் தெரியும்… அவ மனசுல ஏதோ இருக்கு… ஆனால் யார்கிட்டயும் சொல்ல மாட்டேங்கிறா… ரிஷிக்கும் இது தெரிஞ்சதுனாலதான்…புரிஞ்சதுனாலதான்… பொறுமையா போய்ட்டு இருக்காரு” வருத்தமான குரலில் சொல்ல…
”நான் பார்த்துகிறேன் ராஜ்… அவ யாரையும் பேசவிடாமலேயே ப்ளான் பண்ணி நைச்சியமா பேசி அனுப்பி விட்டுட்டா… அவ வந்ததே… உங்களப் பார்க்கிறதுக்காக மட்டுமே… எதுவும் காட்டிக்காமல் பேசுங்க..” என்றவள் யோசனையுடன் தன் அறைக்கும் சென்றிருந்தார்…
---
“எவ்ளோ நேரம் தான் ரிஷி… இப்படியே எவ்ளோ நேரம் உட்கார்ந்திருப்ப… வெயில் வேற… அட்லீஸ்ட் மரத்தடி நிழல்லயாவது போய் உட்காரு…” மாடிப்படியில் வெறித்தபடி அமர்ந்திருந்த ரிஷியைப் பார்த்து இலட்சுமி கேட்டபடியே…
“சாப்பிட வா ரிஷி… காலையிலயும் சாப்பிடலை… இப்போ மணி ரெண்டாகப் போகுது… அம்மா ஊட்டி விடவா” எனும் போதே
ரிஷியின் கண்களில் இருந்து நீர்த்துளி உருண்டோடி தரையில் விழுந்திருக்க… அவசர அவசமாக கண்களைத் துடைத்தபடி… சட்டென்று எழுந்தவன்… வேகமாக மாடி அறையை நோக்கிச் சென்றுவிட… இலட்சுமி மகனையே வெறித்தபடி பெருமூச்சு விட்டவராக நின்றிருந்தவர்… பின் வீட்டுக்குச் சென்று…. தட்டில் சாப்பாட்டைப் போட்டு வந்தவராக… மாடிக்கும் சென்றிருந்தார்…
--
/*கண்ணைவிட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே... என் கண்ணீரே…
வானம்விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே... என் கண்ணீரே…
மழையாய் அன்று, பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று, கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே
இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன்மனதோடு நான் நுழைப்பேனா
செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ
கீறினாயே*/
Some Snippets from கண்மணி... என் கண்ணின் மணி- 98-2
“ஏம்மா…. இந்த டைம்ல… அவளால சாப்பிட முடியாதா… ரொம்ப வாமிட் வருமா… சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வாமிட் பண்ணிட்டா அப்புறம் சாப்பாடு எப்படி தங்கும்… அவ பசியே தாங்க மாட்டா… அடிக்கடி சாப்பிடனும் தானே… அவ ஒரு ஆள்னா பரவாயில்ல…”
--
“நைட் தூங்கவே மாட்டா… கதை எழுதுறேன்னு அந்த லேப்டாப்பை வேற மடில தூக்கி வச்சுக்குவா… கேட்டா இப்படி எழுதுனாதான் வார்த்தை கொட்டும்னு டையலாக் வேற பேசுவா… மிரட்டி தூங்க வைக்கனும்…”
--
அவன் பேசினானா… புலம்பினானா… அவன் தாய்க்கே தெரியாத நிலை…
---
“ஆனாலும் உனக்கு ஓவர் நம்பிக்கைதான் ரிஷி… இங்க ஒரு குழந்தைக்கே இவ்ளோ பாடு பட்றீங்க.. குழந்தைங்களா..” என்ற போதே ரிஷி வெட்கச் சிரிப்புடன்… நெற்றிக் கேசத்தை தள்ளுவது போல வேறெங்கோ பார்த்தபடி சில நொடி தன் பார்வையை கிருத்திகாவிடமிருந்து விலக்கியவன்… தன்னைச் சமாளித்துக் கொண்டவனாக
“அது ஒரு ஃப்ளோல வந்திருச்சு ஆன்ட்டி… ” என்றவன்…
---
“சொல்லு மருது… ஓகே வா… போட்டோவே பார்த்தா எப்படி…. உனக்குத் தைரியம் இல்லைனா சொல்லு… நான் நம்ம சூரஜை வச்சு முடிச்சுக்கிறேன்…” என்ற போதே…. மருதுவின் கைகளில் கண்மணியின் புகைப்படம் சென்றிருக்க
---
“நம்பிட்டோம் அண்ணாத்த… நம்பிட்டோம்… ரிஷி அண்ணாத்த வேலன் தினகருக்காக அவங்கள விட்டு பிரிய முடியாமல் எங்க ஏரியால வீடு கட்றார்னு நம்பிட்டோம் அண்ணாத்த…”
---
“நான் வேணும்னா கண்மணி கிட்ட பேசவா மாமா… நான் சந்தோசமா இருக்கேன்னு அவகிட்ட சொல்லவா… எனக்காகத்தானே அவங்க உன்னை பழி வாங்கினாங்களாம்”
---
“அய்யோ அண்ணாத்த… மணி அக்காக்கு மட்டும் தெரிந்தால்… பின்னி பெடலை எடுத்துரும்… ஏற்கனவே சண்டை… இது வேறயா…” வேலனும் தினகரும் அலறி இருக்க…
Lovely update
Twins ah super
Ellam sariyagim