அத்தியாயம் 96-1
சத்யாவோடு அலைபேசியில் பேசியபடியே வந்து மனைவியைக் கவனிக்காமல்…. கதவைப் பூட்டியவனைப் பார்த்து முறைத்தாள் கண்மணி தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே…
அது ஏன் என்று தெரியவில்லை.. இப்போதெல்லாம் இப்படித்தான்... சுர்ரென்று கோபம் கண்மணிக்கு வந்திருந்தது… இருந்தாலும்… அடக்கிக் கொண்டவளாக…
“எப்போ பாரு… சத்யா… விக்கி… அம்மா… ரிது… ரித்வி அவன் இவன்… இதெல்லாம் போதாதுன்னு… முதலாளினு வேற… இவன் கண்ணுக்கு முன்னாடி நாம இருந்தாலும் நாம இருக்கோம்னு இவனுக்கு ஞாபகம் வரவே வராது” தனக்குள் முணங்கியபடியே… ரிஷியைப் பார்க்க… அவனும் அவளைப் பார்த்தபடியே… அலைபேசியை அங்கிருந்த மேஜையின் மீது வைத்தவன்… மீண்டும் அவளைப் பார்த்தான் தான்… ஆனால் அந்தப் பார்வையிலேயே அவனின் அடுத்த கட்ட நடவடிக்கை சொல்லாமல் இவளுக்குக் கடத்தப்பட்டும் விட…
”நீ மைண்ட் வாய்ஸ்ல பேசுறேன்னு சத்தமா பேசிட்டன்னு நினைக்கிறேன் அம்மு…”
கண்மணி முறைக்க..
“ஆல் வேர்ட்ஸ் ஐ ஹியர்ட்டி… ஏண்டி… என் கண்ணே நீதானே… என் மணியே நீதானே… கண்ணுக்கு முன்னாடி வேற வந்து நிக்கனுமா என்ன” என்றவன் அவள் அருகில் வந்தபடி…
“அம்மு” என ஆரம்பித்த போதே… வேகமாக கண்மணி அவன் கைகளைத் தட்டி விட்டவளாக…
”அம்முவாம்… அம்மு… இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..” உண்மையாகவே தனக்குள் முணுமுணுத்தபடி… கோப முகத்தோடே அவனைத் தள்ளி நிறுத்தியவள்… தானும் எழுந்தவளாக… முந்தானையைச் செருகியபடி… இடுப்பில் கைவத்தபடி…
“ஒழுங்கா குளிக்கப் போகனும்… சமத்தா திரும்ப வரனும்… அதே சமத்தோட அப்படியே அமைதியா தூங்கி்றனும்.. பெட்ஷீட்லாம் இன்னைக்குத்தான் துவச்சது… புதுசா ஃப்ரெஷ்ஷா போட்ருக்கேன்… ஒரு வாரத்துக்கு எப்படி போட்டேனோ அதே மாதிரி இருக்கனும்… சொல்றது புரியுயுதுதானே… இவ்வளவு சொல்லியும்… மவனே… அம்மு… செல்லம்னு பக்கத்துல வந்தீங்க… கொன்னுடுவேன்” என ரவுடி அவதாரம் தரித்திருக்க
ரிஷி ஒன்றுமே சொல்லாமல்… அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே துண்டை எடுத்துக்கொண்டு… குளியலறை நோக்கிச் சென்று விட… இவளும் மீண்டும் அமர்ந்து.. அவன் போகும் வரை… அவன் கண்ணை விட்டு மறையும் வரை அவனையே பார்வையால் தொடர்ந்தவள்… அவன் சென்ற பின்னால்… தனக்குள் சிரிக்க ஆரம்பித்தவள்..
“எங்கே அவனுக்கு கேட்டு விடுமோ” என்று வாயை மூடியும் கொண்டும் வேறு சிரித்தபடியே…
“என்ன பையன்… ரொம்ப அமைதியா போறான்… பயந்துட்டானோ பையன்… ரொம்ப மிரட்டிட்டோமோ… “ எழுந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்தவள்… அவனிடம் சொன்ன அதே வசனத்தை… தன் முகத்தைப் பார்த்தபடி தனக்கே சொல்ல…
“கொஞ்சம் பயப்பட்ற மாதிரிதான் இருக்கு… பையன் அதான் பயந்துட்டான்… இப்படியே மெயிண்டைன் பண்ணுவோம்… ஒரு பக்கமாவது டைப் பண்ண விட்றானா… இன்னைக்கு நாம நெனச்சதை எழுதி முடிக்கனும்” என்றபடி லேப்டாப்பை எடுத்தவள்… கதை எழுத ஆரம்பித்திருக்க… சில நிமிடங்களில் ரிஷியும் வந்திருக்க… அவனைக் கண்டு கொள்ளாமல் கதையில் மூழ்கியிருக்க… சட்டென்று அவளது மடிக்கணினி அவளின் மடியில் இருந்து இடம் பெயர்ந்திருக்க… அவளின் வெற்றிடையில் அவள் உணர்ந்தது தன்னவனின் ஈரக் கேசமும்… மீசையின் குறுகுறுப்பும்
கற்பனை உலகில் உலாவியிருந்தவளை நொடியில் நிஜ உலகத்திற்கு கொண்டு வந்திருந்தான் அவள் கணவன்…
ஆனாலும் கண்மணி அதை ஒத்துக் கொள்வாளா என்ன..
“ஹலோ ரிஷி சார்… நான் என்ன சொல்லி அனுப்பினேன்…… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…”
நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்…
“நீதானடி சொன்ன… ஒழுங்கா குளிக்கப் போகனும்… போனேன் தானே… திரும்ப வரனும்… வந்தேன் தானெ… அமைதியா தூங்கிறனும்… அதைத்தான் செய்யப்போறேன் இப்போ… அப்புறம் நீதானே சொன்ன… பெட்ஷீட்லாம் ஒரு வாரம் அப்படியே இருக்கனும்னு… அதான் உன் மடியிலேயே படுத்துட்டேன்…” என்றபடி.. அவள் இடையில் கைபோட்டபோதே
அவள் மூக்கை விடைத்துக் கொண்டு இவனை முறைக்க… அவனையுமறியாமல் அந்த கண்களுக்குள் அவனைத் தேட ஆரம்பித்தபடி
”ஏன் அம்மு இப்படி முறைக்கிற… மிரட்டினதுலாம் ஓகே தான்… ஆனால் முந்தானையை இடுப்புல சொருகின பாறேன்… அது அது அந்த இடம் தான் சிங்க் ஆகல… இதுல எதுவும் என்னோட ஃபால்ட் இல்லை… இருந்தாலும் பாரு அமைதியாத்தான் இருக்கேன்” சொன்னவனின் வார்த்தைககளுக்கு செய்கைகள் முரணாகித்தான் இருந்தன..
அவளையேப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவன்… அவள் கண்களில் இருந்த கோபத்தின் அளவு அதிகரிக்கும் விதத்தையும் பார்த்தபடியே
”இப்போலாம் அடிக்கடி என்னை முறைக்கிற… அதுவும் உண்மையிலேயே முறைக்கிற… இந்த மூக்குத்தி செட் ஆகலையோ…” அவளிடம் வேண்டுமென்றே வம்பிழுத்தவனிடம்…
”நான் எழுதனும்…” கண்மணி கடுப்பாகச் சொல்ல
“ப்ச்ச்… எழுதலாம்… எழுதலாம்… என்னைத் தூங்க வச்சுட்டு எழுது… யார் உன்னை டிஸ்டர்ப் பண்ணப் போறாங்க” என்றபடி அவளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு கண்களை மூட ஆரம்பித்திருக்க… அவன் இதழ்கள் ஒன்றும் செய்யாமலேயே கண்மணியை அவஸ்தைப்பட வைக்க ஆரம்பித்திருக்க
“இவன் பயந்தான்னு நீ நம்பினேல்ல கண்மணி…. இது உனக்கு வேணும்தான் கண்மணி… இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்…” என்று பாதியில் விட்ட அத்தியாயத்தைப் நினைத்தபடியே… தன்னையே தனக்குள் திட்டிக் கொண்டிருந்த போதே
“அம்மு” ரிஷி அவளை அழைத்திருக்க… அந்தக் குரலில் இருந்த மாற்றத்தில் கண்மணி வேகமாக அவனைப் பார்த்தாள் பதட்டத்தோடு… அவன் குரலில் சிறு மாற்றம் வந்தால் அவளால் தாங்க முடியுமா… அன்றும் இன்றும் என்றும்…. தாங்க மாட்டாதவளாக… அனைத்தையும் மறந்தவளாக அவன் மட்டுமே அவள் எண்ணமாகி இருக்க… அனிச்சையாகவே அவள் விரல்கள் அவன் தலைக்கேசத்தைக் கோத ஆரம்பித்திருக்க… அவர்களுக்கே அவர்களுக்கான நிமிடங்களும் தொடங்க ஆரம்பித்திருந்தது…
”எனக்கு ஒரே ஒரு வரம் தாண்டி வேணும்… என்னோட கடைசி மூச்சு… என்னோட கடைசி நொடி… இந்த மடில… இந்த முகத்தைப் பார்த்துக்கிட்டே சிரிச்சுட்டே போகனும்… ”
ரிஷியின் வார்த்தைகளில் கண்மணி இப்போது முறைத்திருக்க
“முறைக்காத… நம்ம வயசான காலத்துலதான்… “ என்றவனிடம் பதிலேதும் பேசாமல் எழும்பி உட்கார வைத்தவள்… அவன் தோளில் சாய்ந்து கொண்டபடி… அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டவள்…
“ஒரு சாங்க் இருக்கு ரிஷி… எனக்கு ரொம்பப் பிடிக்கும் ” ரிஷி மௌனமாக அவளின் பேச்சைக் கேட்க ஆரம்பித்திருக்க
”ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா… ” ஹீரோ பாடுவாரு…
ரிஷி சிரித்தபடி…
”ஹான் தெரியும் நம்ம தளபதி சாங்க் தான்… ஆனா பாரு நான் அப்போ செமையா ஓட்டுவேன்… எவ்ளோ பேராசை… ஒரு கோடி ராத்திரி வேண்டுமாம்… எனக்கு அவ்ளோ ராத்திரிலாம் வேண்டாம்” கண் சிமிட்ட
அவன் கைகளை இன்னும் இறுக்கக் கோர்த்துக் கொண்டவள்…. எதையோ நினைத்தபடி சிரித்தவளாக…
“அந்த லைனுக்கே பேராசைனு சொன்னா…. ஹீரோயின் பாட்ற லைன என்ன சொல்வீங்க….
இப்போது ரிஷியின் கண்களைப் பார்த்தபடியே
“பல கோடி பௌர்ணமிகள் பார்த்திடவே சம்மதமா” அவள் குரலில் அழகாக பாடிக் காட்டியவள்…
“ஒரு கோடி ராத்திரிகள்… பல கோடி பௌர்ணமிகள்… யாரோட பேராசை பெருசு” அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள்…
“ஒரு கோடி பௌர்ணமி கூட இல்ல… பல கோடியாம்… எப்போதுமே ஒரு பொண்ணோட காதலுக்கு முன்னால ஆணோட காதல் கொஞ்சம் வீக் தான்…” ரிஷி முறைத்தான் தான்… வெகமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன்…
”அம்மு… அப்போ நீ என்னை லவ் பண்றியா அம்மு… ரொம்ப நாளா எனக்கு இந்த சந்தேகம் இருந்துச்சு… இன்னைக்குத்தான் டவுட் கிளியராகியிருக்கு... அப்போ உண்மைதான் போல... டேய் ரிஷி... கண்மணி உன்னை லவ் பண்றாளாம்... நம்புடா ரிஷி.. ஆனாலும் டவுட் போக மாட்டேங்குதே... உண்மையா கண்மணி... ” மோட்டு வளையத்தைப் பார்த்து யோசித்தபடியெ பின் அவளைப் பார்த்து... தீவிரத்தொணியில் வம்பிழுத்தவனைப் பார்த்து கண்மணி பொய்க் கோபத்துடன் முறைத்தாலும்… அவள் முகம் சற்றே வாடித்தான் போயிருந்தது…
தாங்குவானா ரிஷி… அவளை மீண்டும் தன் தோளில் சாய்த்துக் கொண்டவனாக…
“அம்மு… சரி சரி…. சாரி சாரி… சும்மா ஒரு லுல்லாய்க்கு சொன்னா… உடனே மூஞ்சியத் தூக்கி வச்சுக்குவியே… இப்போ பாரு மாமா உன்னை… அதே பாட்டைப் பாடி கூலாக்குறேன்…”
”ப்ரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா” தன் கைவிரலுக்குள் சேர்ந்திருந்த அவன் கைவிரல்களில் அழுத்தம் தந்தவனாக… அவள் கண்களோடு கண்களில் கலந்து கேட்டவன் அவள் சம்மதத்திற்காக காத்திருக்க...
“பிரிந்தாலும் உன்னைச் சேரும் உயிர் வேண்டும் சம்மதமா” உணர்வுப் பூர்வமாகச் சொன்னவள்… அவனின் முகமெங்கும் தன் முத்த சம்மதங்களை வழங்கி இருக்க… அந்த நிமிடங்கள் தொடர்ந்து… முடிந்த போதோ…. அவளோடு கலந்து அவனோ களைத்திருக்க… கலைந்த படுக்கையோ அவர்களுக்கு அரணாகி இருந்தது…
கண் மூடி அவள் நினைவில் சுகிந்திருந்தவனின் நெஞ்சில் தான் நாடியை வைத்து அவன் முகத்தையேப் பார்த்தபடி இருந்தவள்…
“ரிஷி...” கண்மணி அழைக்க…
“ஹ்ம்ம்…”
“ரிஷிக் கண்ணா” சிணுங்கலாக அழைத்திருக்க
“எனக்கு ஒரு சந்தேகம்… நான் என் அம்மா மாதிரி இல்லைதானே… பிஷிக்கல் அப்பியரன்ஸ்… விடுங்க… அவங்க மாதிரி… படோபமா பிறக்கலை… வாழலை… லவ் மேரேஜ் பண்ணல… முக்கியமா என் அப்பா சொன்ன பையனை மேரேஜ் பண்ணினேன்…”
“ரி…ஷி.. “ இழுத்தபடியே…
“கேட்கறீங்களா…”
“கேட்குது சொல்லுடி…” காமம் கலைத்த இவள் கேள்விகளில் சிறு கோபம் அவன் குரலில்…
”அப்போ நான் என் அம்மா மாதிரி பாதியிலேயே உங்கள விட்டுப் போக மாட்டேன் தானே… “ அவள் முகம் வருங்கால நிச்சயத்தில் பிரகாசமாகி இருக்க…
“நாம ரெண்டு பேரும்… ஒரு 70 இல்லை 80 வருசம்… வாழுவோம் தானே…” என்றவளிடம்… அவள் பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகளினால் தன் முறைப்பை ரிஷி காட்ட
“லாஜிக் சரியாத்தானே இருக்கு ரிஷி… ஓ… 90 வருசம் வரை வாழுவோம்னு சொல்ல வர்றீங்களா…” அவன் கண்களைப் பார்த்து கண்சிமிட்டியபடியே…
“எனக்கும் ஒரு வரம் வேணும் ரிஷி…” அவள் ஆரம்பித்த அடுத்த நொடி அவளைப் பேச விடாமலேயே… மீண்டும் வரம் தர ஆரம்பித்திருந்தான் தன் கண்ணின் மணிக்கு அந்தக் கண்மணியின் ரிஷிக் கண்ணா!!!!
பவித்ர விகாஸில்... அந்த அறையின் கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த படுக்கை மட்டுமல்ல… அந்த அறையே அல்லோல்கலப்பட்டு அலங்கோலப்பட்டு கிடக்க……. அப்போதும் கண்மணியின் ஆவேசம் அடங்கவில்லை… அவள் மீதே அவளுக்கு வந்த அவளுக்கான கோபத்தை அவளால் அடக்க முடியவில்லை…
சுவற்றோடு சுவற்றாக சாய்ந்து… தன் முழங்காலில் முகம் வைத்து அழுதழுது சிவந்த முகத்தை இன்னும் சிவப்பாக்கியபடியே இருக்க…
“என்னை மன்னிச்சுடு ரிஷிக்கண்ணா…” மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளைச் சொல்லி அழ ஆரம்பித்தவளை தேற்றுவர்கள் யார்…. தேற்றுபவனும் ஆறுதல் தேடிக் கொண்டிருப்பானே… இவளைத் தேடிக் கொண்டிருப்பானே… யார் அவனைத் தேற்றுவார்கள்… சமாதானப்படுத்துவார்கள்
அவள் இப்படி நினைத்த போதே அவள் மனசாட்சி இதுதான் சமயமென்று வேகமாக அவள் முன் வந்து நின்ற போதே… அடுத்த நிமிடமே அதையும் பேசவிடாமல் தனக்குள் புதைத்துக்கொண்டவள்… என்ன நினைத்தாளோ… கண்ணீரைத் துடைத்தவளாக… மீண்டும் எழுந்தவளாக… அந்த அறையைச் சுத்தப்படுத்தி கட்டிலை சீர் செய்து… மீண்டும் கட்டிலின் மேல் அமர்ந்தவளை… யாராவது பார்த்திருந்தால் கண்டிப்பாக பைத்தியக்காரி என்றுதான் சொல்லி இருப்பார்கள்…
எத்தனை நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தாள் அவளே உணராத நில்லை… ஒரு கட்டத்தில் அந்த அறையின் உள்ளே அமர்ந்திருக்கவே கண்மணிக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க…
அது அவள் தாயின் அறைதான்… அன்று இதே அறையில் பவித்ராவின் கருவறையில் இருந்த போதும் மூச்சுக்காகப் போராடினாள்… இன்று அதே அறையில்… வித்தியாசம்… வளர்ந்து ஆளாகி… இவள் கருவறையில் அவள் குழந்தைகளோடு அதே போராட்டம் அனுபவித்தாள்…
வெளிக்காற்று வாங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற…. அறையை விட்டு வெளியேறி… கீழே தோட்டத்துக்கு வந்திருக்க…. அங்கு அர்ஜூன்
அலைபேசியில் யாருடனோ கோபக் குரலில் பேசிக் கொண்டிருந்தான்… தமிழ்… ஆங்கிலம் என இரண்டும் கலந்து…
“டூ வாட் ஐ சே…”
“போனை வைக்கிறேன்… ” என அவன் சொன்ன தொணியில் எதிர் முனையில் இருப்பரின் மேல் கோபத்தைக் காட்டுகிறானா…. அதிகாரத்தைக் காட்டுகிறானா… கண்மணியால் கண்டுபிடிக்க முடியவில்லை… ரிஷியின் சிறு மாற்றத்தையும் தன் உணர்வின் அளவீடுகளில் துல்லியமாகக் கண்டுபிடிப்பவளுக்கு அர்ஜூன் குரலின் மாறுபாடுகளை கணிப்பது சிரமமாகத்தான் இருந்தது…
“அர்ஜூன்” மெலிதாக ஒலித்த குரல்… இரவின் நிசப்தத்தில் சத்தமாகவே ஒலிக்க…சட்டென்று திரும்பினான் அர்ஜூன்…
அந்த முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி… ஆனாலும் நிமிடத்தில் சமாளித்தவனாக…. அவளைப் பார்த்தபடி…
“என்னடா… “ எனும் போதே
“தூக்கம் வரலை… அதான் சும்மா வாக் போகலாம்னு… நீங்க யார்கூட பேசிட்டு இருந்தீங்க… கோபமா பேசின மாதிரி இருந்தது”
“சேச்சே… பிஸ்னஸ் மீட்டிங்க்டா…” அவன் சொல்லும் போதே அவன் சொல்வது பொய் எனக் கண்மணிக்குப் புரிந்தது… அவன் தமிழில் பேசி இருக்காவிட்டால் கூட அவள் நம்பி இருப்பாள்… அமைதியானவள் வேறெதுவும் பேசவில்லை..
தன்னிடம் சொல்லப் பிடிக்கவில்லை என்றுதானே பொய் சொல்கிறான் அது தெரிந்தபின்னால் ஏனோ அதைப் பற்றி அவளும் விசாரிக்க வில்லை… தன் அறைக்கே திரும்பப் போக தீர்மானித்தவளாக மீண்டும் வீட்டை நோக்கிக் போக
“ஏய் என்னாச்சுடி… வாக் போகனும்தானே வந்த… அப்புறம் ஏன் திரும்ப போற” அர்ஜூன் வேகமாகக் கேட்க
“நான் தனியா இருக்கனும்னு தான் வந்தேன்…” கண்மணி எங்கோ பார்த்தபடி சொல்ல
“அங்க ரூம்ல மட்டும் யார் இருக்கா… ” அர்ஜூன் கேட்க
“ரிஷி… ரிஷியின் நினைவுகள்” என்றா அவனிடம் சொல்ல முடியும்… மௌனித்தவள்… தரையைப் பார்த்தபடி இருக்க… அர்ஜூன் அவளின் அருகில் நெருங்கி வந்தவனாக
“இப்படி இருக்காதடி… இது நீயா… உன்னைப் பார்க்கும் போதே அவ்ளோ கஷ்டமா இருக்கு…. எதை நினச்சு இவ்ளோ வேதனைப் பட்ற… உன்னைக் கஷ்டப்படுத்திகிற” எனும் போதே
“எப்போ யூ எஸ் போறோம்…” நிமிர்ந்த கண்மணி அவனைப் பார்த்துக் கேட்க…
”ஹ்ம்ம்… 2 டேஸ் ல ஸ்டார்ட் ப்ராஸஸ் ஸ்டார்ட் பண்ணிடறேன்… ரிஷி வேற நாளைக்கு லாயரோட வர்றான்னு பார்த்தி சொன்னான்… அவன் என்ன கலவரம் பண்ணப் போறான்னு தெரியல… பார்க்கலாம்… ஆனால் உனக்கு தொந்தரவே இல்லாமல் எல்லாத்தையும் முடிச்சுட்டு நான் உன்னை யு எஸ் கூட்டிட்டு போயிருவேன்.. இது ப்ராமிஸ் கண்மணி” அர்ஜூன் சொல்ல…. மற்றதெல்லாம் கவனிக்காதவளாக கண்மணி அவனைப் பார்த்து…
“நாளைக்கு அங்க பூமி பூஜைனு அப்பா சொன்னாங்க… ரிஷி எப்படி இங்க வருவார்” கண்மணி சந்தேகத்தோடு கேட்டபோதே… கூடவே சோகமும் அதில் இழையோடி இருக்க
“நாளைக்கு வருவானான்னு சந்தேகமா கேட்கிறியா இல்ல நாளைக்கு வரமாட்டானோன்னு சோகமா கேட்கிறியா” அவள் முகத்தைப் பார்த்தபடியே அர்ஜூன் கேட்க…கண்மணி அமைதியாக மீண்டும் மாறி இருக்க…
அர்ஜூனோ அவளையேப் பார்த்தபடி சில நிமிடங்களைக் கடத்தியவன்…
“முதல்ல நாளைக்கு பாட்டியோட போய் ஜுவல்லரி… “ என அவள் மூக்கைப் பார்த்துப் பேச ஆரம்பித்த போதே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்தவளாக
“ரித்விகிட்ட என்னோட மூக்குத்திய எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன்… இந்த வீக் மிட்ல இராஜம் மேடம் பார்த்தி மேரேஜ் இன்விடேஷன் வைக்க வர்றேன்னு சொல்லி இருக்காங்க… அவங்ககிட்ட ரித்விய கொடுக்கச் சொல்லிருக்கேன்... மேடம் வரும்போது கொண்டு வந்து தந்துருவாங்க” என விளக்கம் அளிக்க…
”ரித்விகிட்ட கொண்டு வரச் சொன்னியா” இது மட்டுமே அர்ஜூன் கேட்டுக் கொண்டவனாக… வீட்டுக்குள்ளே சென்றான்… சென்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் அவளிடம் வந்திருந்தான் கையில் பால் டம்ளரோடு…
“நீ ஒழுங்கா சாப்பிடலேன்னு பாட்டி சொன்னாங்க… இப்போ தூக்கம் வேற வரலனு சொல்ற… இதைக் குடி… ” என நீட்ட… அந்த பால் டம்ளரைப் பார்த்த போதே கண்மணிக்கு குமட்டிக் கொண்டு வருவது உணர்வு வந்திருக்க…
“எனக்கு வேண்டாம் அர்ஜூன்… “ எனும் போதே
“பசியோட இருந்தாலும் தூக்கம் வராதுடி… ஒழுங்கா குடி… அப்போதான் உன்னை விடுவேன்” அர்ஜூன் அவளைக் கட்டாயப்படுத்தியவனாக…. பால் டம்ளரை அவள் அருகே கொண்டு வர… கண்மணிக்கு எங்கு அவன் முன் வாந்தி எடுத்து விடுவோமோ என்ற பயம் வந்திருக்க.. அந்தப் பதட்டத்தோடு கைகளால் மறிக்க முயற்சிக்க… எதிர்பாராத விதமாக அவள் கைப்பட்டு அந்த டம்ளர் கீழே விழுந்து அதில் இருந்த பால் மொத்தமும் கீழே கொட்டியிருக்க…
”அ… ர்..ஜூ…ன்” என அவள் நிமிர்ந்த போதே… அவன் முகம் கர்ண கொடுரமாக மாறி இருக்க
“இ… இல்ல… அர்ஜூன்… தெரியாமல்” என்றவளிடம்…
ஏதும் பேச வேண்டாம்… கை மட்டும் காட்டியவனாக…. வேகமாக வீட்டுக்குள் சென்று விட… அவன் சென்ற விதமே அவன் அவள் மேல் கொண்ட கோபத்தின் அளவைக் காட்டியிருக்க… கண்மணி அவன் போவதையே வெறித்தபடி இருந்தபோதே… நாளைய பொழுது ஞாபத்துக்கு வந்திருக்க…
“உண்மையிலேயே ரிஷி வருவாரா… நான் நாளை அவரைப் பார்ப்பேனா..” அதை நினைத்த பூமி பூஜை ஞாபகத்துக்கு வர…
“முதன் முதலாக அவன் வாங்கும் சொத்து… அவர்களின் வருங்கால இல்லம்” கண்கள் கலங்க ஆரம்பித்திருக்க… அடுத்த நொடியே…
“நான் எதுக்கு அழ வேண்டும்… அவன் தான் இல்லாமல் தனியாளாக இந்த உலகை எதிர்கொள்ள வேண்டும் என்றுதானே இந்த பிரிவு… அவனுமே அவள் நினைத்தது போலவே தான் இருக்கின்றான்… அன்று அவன் அப்பாவின் தொழிற்சாலையை…இழந்த சொத்தை மீட்டெடுத்த போதும்… அவன் எதையும் தவிர்க்க வில்லையே… தன் ஓட்டத்தை எங்கும் நிறுத்தவில்லையே… இதோ நாளையும்… அவன் எந்தக் காரணத்துக்காகவும்… இவள் வரவில்லை என்ற போதும் எடுத்த காரியத்தை நிறுத்தவில்லையே…
அவன் சொல்வானே… மூன்றாம் பிறை பிடிக்கும் என்று… அவன் வாழ்வில் பௌர்ணமியாக முழு நிலவாக இருந்து தேய்ந்து போக நினைக்கவில்லை அவள் அவன் வாழ்க்கையில் மூன்றாம் பிறையாகவே இருக்க ஆசைப்பட்டாள்… குறை நிலவானாலும்… அதன் பின் அவன் வாழ்க்கை தொடர்ந்த வளர்பிறையாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறாள்… இதோ அவளில்லாத அவன் வளர்ச்சியையும் கண்கூடாக காண்கிறாளே….
மனம் சந்தோசப்படத்தானே வேண்டும்… அவள் சந்தோசப்பட்ட அடுத்த நொடியே… வயிறும் அதன் தேவையைச் சொல்ல… சந்தோஷமாகவேத் துள்ளளுடன் வீட்டுக்குள் ஓடினாள்…
---
”அரேஞ்ச் த மீட்டிங் இன் பெர்சன் “
---
“மே பி இன் நெக்ஸ்ட் மந்த் மிட்…” அர்ஜூன் வீடியோ கான்ஃப்ரென்ஸ் காலில் பேசிக் கொண்டிருக்கும் போதே… கதவு தட்டப்படும் ஓசை கேட்க… தன் பக்க சப்தத்தின் அளவை எதிர் முனை கேட்காதாவாறு ஓசையற்றதாக மாற்றியவன் பின் எழுந்து வந்து கதவைத் திறக்க… கண்மணிதான் நின்றிருந்தாள்…
கையில் கண்ணாடி டம்ளர் வேறு… அதில் கருப்பு நிற திரவம்…
தன் கோபத்தை இப்போதும் காட்டியபடியே இப்போதும் அவளைப் பார்க்க…
“ப்ளாக் காஃபி… உண்மையாவே பால் குடிக்கப் பிடிக்கலை…. எங்க கெழவி பழக்கிருச்சு…” அப்பாவியாக முகத்தை வைத்தபடி அர்ஜூனிடம் சொல்ல…
அர்ஜூன் இப்போதும் முறைப்பதைத் தொடர்ந்திருப்பானா என்ன…. சிரித்தபடியே
“ஏதோ… எதையாவது சாப்டேல்ல… அது போதும் எனக்கு… நீ பசியில இருக்கக் கூடாது அதுதான் எனக்கு வேண்டும்… சரியா… போய்த் தூங்கு.. குட் நைட்” எனும் போதே… அவள் கண்கள் அந்த அறையின் உள் நோட்டமிட…
“என்ன” அர்ஜூன்
“எனக்கு ஒரு லேப்டாப் வேண்டும்… எக்ஸ்ட்ரா லேப்டாப் ஏதாவது இருக்குமா… கதை எழுத மூடு இருக்கும் போதே எழுதனும்…” அவள் முகத்தில் தெரிந்த உற்சாகத்தில் அர்ஜூனும் முகம் மலர்ந்தவனாக…
“உனக்கு லேப்டாப் தானே வேணும்… நாளைக்கே வர வச்சுருவோம்… இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க”
“இல்லல்ல புதுசெல்லாம் வேண்டாம்… என்னோட லேப்டாப்பே… ரிஷி இப்போதான் வாங்கிக் கொடுத்தார்… நான் ரித்விகிட்ட சொல்ல மறந்துட்டேன்… ஆனால் எடுத்துட்டு வரச் சொல்லிருவேன்… நாளைக்கு லேப்டாப் அது பிரச்சனை இல்ல… இப்போ வேணும்… உடனே வேணும்…”
அவள் சொல்லி முடிக்கவில்லை… அடுத்த நிமிடம் அவள் கையில் அவனுடைய லேப்டாப் இருக்க… கண்மணி அவனிடம் வாங்கிக் கொண்டவளாக
“சாரி… மீட்டிங்… போயிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு” சந்தேகமாக இழுத்தபடியே கேட்டாலும்….
”இதுல எம் எஸ் வேர்ட் இருக்கா..” தனக்கான தேவை எதுவோ அதில் முக்கியமாக இருக்க
அர்ஜூன் முறைக்க…
“ஓகே… அதெல்லாம் இல்லாமல் லேப்டாப் இருக்குமா…. நாளைக்கு காலையில பத்திரமா தந்துறேன்… பாஸ்வேர்ட் என்ன… “ என்றவள்… அர்ஜூன் முகத்தைப் பார்த்தவளாக
“கெஸ்ட் மோட் இருக்கும்ல… நான் பார்த்துகிறேன்…” என்று அவனை விட்டுத் திரும்பியவள்…
“ச ச ச ச நி தா ச நி பா த…நி ச…” என்றபடியே
“நிவேதா” என்று முடித்திருந்த போது அர்ஜூனைப் பார்க்க… அர்ஜூனின் கண்கள் கோபத்தில் சிவக்க ஆரம்பித்த போதே..
”உரிமையா இருக்கிறவங்ககிட்டதான் கோபப்படுவாங்க… அதிகாரம் பண்ணுவாங்க… தோட்டத்தில நிவேதாகிட்டதானே பேசுனீங்க… அவ்ளோ கோபம் ஏன் அர்ஜூன் சார்… அப்போ ஏதோ ஒரு உரிமை இருக்குதானே… “
அடுத்த நிமிடம் சட்டென்று அறைக்கதவு சாத்தப்பட்டிருக்க
“யப்பா… என்ன ஒரு கோபம்… அம்மா நிவேதா…. எங்க அர்ஜூனை மலை இறக்க நீ தனி கோர்ஸ் போகனும் போல…” என்று தனக்குள் சொன்ன போதே… மீண்டும் கதவு திறக்கப்பட
“மணி 12 ஆகப் போது… அரை மணி நேரம் மட்டும் யூஸ் பண்ணு… ரொம்ப நேரம் லேப்டாப் யூஸ் பண்ணாத… சரியா…” அர்ஜூன் சொல்ல… அவனிடம் நல்ல பிள்ளை போல தலை ஆட்டி விட்டு வந்தவள்… எழுதி முடித்து லேப்டாப்பை மூடி வைத்து மணியைப் பார்க்க… மணி மூன்று…
”ஹையோ செல்லம்… இன்னைக்கு உனக்கு வார்த்தை அருவியா கொட்டுதே… உன்னால இப்படி எல்லாம் அதுவும் ரொமான்ஸ் எபி எழுத முடியுமா” தன்னையே கொஞ்சிக் கொண்டவள் படுத்த போது நிம்மதியான் உறக்கமும் வந்திருக்க…
அதே மூன்று மணி அளவில்… ரிஷியோ உறக்கத்தில் இருந்து விழித்திருந்தான்… சட்டென்று எழுந்து அமர்ந்தவன் மனதிலோ சஞ்சலம் மட்டுமே…
---
snippets from கண்மணி... என் கண்ணின் மணி- 96-2
டேய் எங்க இருக்க” விக்கி கேட்க ரிஷியும் சொல்ல…
“டேய் ரிஷி… வீட்டுக்கு போடா… நீ இப்படி தெருவுல நைட் தனியா நிற்கிறது எனக்குப் பயமா இருக்கு… நான் வந்துட்டு இருக்கேண்டா”
---
கோதை இருவரையும் நெட்டி முறித்தவர்… அவர்களை அனுப்பி விட்டு…
“லட்சுமி… புள்ளைங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போட்ரு… சும்மாவே நம்ம புள்ளைங்க அழகு… அதுலயும்… அண்ணன் அவங்களுக்காக எடுத்த நகைகளைப் போட்டதும் பார்க்கிறதுக்கு இரண்டு கண்ணே போதலை…. என் கண்ணே பட்ருச்சு… ஊர்க்கண்ணை விட நம்ம கண்ணுதான் கொள்ளிக் கண்ணு” என தன் மருமகள்களின் அழகைச் சிலாகித்து சொன்னவர்…
----
ரிஷி… சாதாரண காட்டன் வேஷ்டி… அடர் நிறச் சட்டை… இவ்வளவே அவன் அன்றைய தினத்திற்கு அணிந்திருந்தது….
இது கூட இலட்சுமி அவனை வற்புறுத்தியதால் தான்
---
“ஏண்டா… நான் சொல்றதை இதை மட்டும் பண்றியா… என்ன பண்றேனா நேரா பவித்ர விகாஸுக்குப் போ… உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வா… எல்லாம் சரி ஆகிவிடும்… உனக்கு எப்படியோ… எங்களுக்கு இந்த மூஞ்சிய பார்க்க சகிக்கல….”
---
அடுத்த சில நிமிடங்களில் காவல் துறையும் வந்திருக்க…. விக்கியை ரிஷி முறைக்க மட்டுமே முடிந்தது….
அடுத்த சில மணி நேரத்தில்… அந்தக் கொலையாளிகள்…. நட்ராஜைக் கொல்ல வந்ததைக் ஒப்புக் கொண்டும் இருக்க…
---
“ஏண்டா என்கிட்ட சொல்லல… ” மருதுவைப் பேச விடாமலேயே ரிஷி அவனை தாக்கிக் கொண்டிருந்தான்
“அந்த ஆதவன் அப்பா… ஹர்ஷித்… ஏன் விக்கி அண்ணன் பொண்ணு இந்த விசயத்தில் எல்லாம் துப்பு சொன்னேன்னு உன்னை நம்பினேன் பாரு…”
---
கண்மணி… ரித்வி… என் குடும்பம்.. இதெல்லாம் ஓகே தான்… ஆனால் அர்ஜூனுக்கு நட்ராஜ் பிடிக்காது அது மறுக்க முடியாத உண்மைதானே… நட்ராஜ் விசயத்தில் அர்ஜூனை நம்ப மறுத்த அதே சமயத்தில்…
---
அர்ஜூனின் அந்த ஃபோல்டர்களை திறந்திருக்க…
ஹர்ஷித்… யமுனா… ஆதவன் … என இவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள்…
யாரோ ஒருவனை ரிஷி நையப் புடைத்துக் கொண்டிருந்தது… அவனின் கையில் திராவகம் ஊற்றியது என அந்த வீடியோவே கொடூரமாக இருக்க…
---
கண்மணியின் புகைப்படங்கள்… அதிலும் மழையில் நனைந்தபடி… விதவிதமான கோணங்களில்…. தன்னை மறந்து… தன் மேனி… புடவை எதையுமே கண்டு கொள்ளாமல் அவள் அந்த மழையோடு மூழ்கிய தருணங்கள் என அந்த புகைப்படங்களைப் பார்த்த போதே தெரிய…
Nice update
Jii.. Nys to read R💕k jii.. Aadhavan ah kaanum nenache.. He'll be there in nxt ud.. Waiting jii..
குழந்தைகள்…confirmed 😀
Nice ud siss
Sis epi ya vida snippets aarvatha increase pannuthu.. Seekaram potrunga.. After long gap rk epi.. So nice to read.. Rocked
Kanmani Rishi lovely Lovely. .. romba naal apuram romantic emotional episode... Kanmani epo rishiya parkapora pavam rishi
Please next episode quick