ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அடுத்த எபி... Pre-final எபிசோட்...
அண்ட்... இந்தக் கதைல நான் சொல்ல வருகிற மெடிக்கல் டெர்ம் எல்லாமே கற்பனைகளின் உச்சம் மட்டுமே... ரியல் லைஃப்ல அப்படி நடக்க சான்சே இல்லை... அதே போல சூப்பர் ஃபெட்டஸ்(Superfetation) கான்செப்ட்டும் ஹீயுமன் பீயிங்க்ல ரொம்ப ரொம்ப ரேர்....0.001 % தான்...
ட்வின்ஸ்... ப்ரெக்னன்ஸி ரிஸ்க்...னு ரியல் லைஃப் சினாரியோஸை சொல்லி யாரையும் பயமுறுத்த விரும்பலை... அது என்னோட நோக்கமும் இல்லை... அதுனாலதான் ரியல் லைஃப்ல இல்லாத ஒண்ணை ஃபேண்டசி வைஸ் சூப்பர் ஃபெட்ட்ஸ் கான்செப்ட்டை சூஸ் பண்ணினேன்...
லைஃப்ல நடக்காத விசயத்தை வச்சு கதை எழுதும் போது... கற்பனையாவே மட்டும் இருக்கும்... படிக்கிற நாமும் கதையை கதையா பார்ப்போம்...
சோ கண்மணி ஏன் இப்படி நடந்துக்கிறா... நடந்துகிட்டா... அவளின் மருத்துவ அறிக்கையில் இருந்தது என்ன.... அதைத் தெரிந்து கொண்ட ரிஷியின் நிலைப்பாடு இனி என்ன...
பார்க்கலாம் இனி வரும் இறுதி அத்தியாயங்களில்...
நன்றி
பிரவீணா....
அத்தியாயம் 102-2
/* காலங்கள்தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் */
நாராயணன் ஏன் இரத்தம் கொடுக்க இந்தப் பக்கம் நட்ராஜை விட வில்லை என்பது அப்போதுதான் ரிஷிக்கும் புரிந்தது…
பவித்ராவின் ஞாபகச் சின்னங்கள்… அந்த அறையின் ஒவ்வொரு திசையிலும் பவித்ராவை ஞாபகப்படுத்தும் நினைவுச்சின்னங்கள்… புகைப்படங்கள்…
‘குணா’ மருத்துவமனையில் கடைசியாக பவித்ரா உயிர் நீத்த இடம்… இந்த மருத்துவமனை நிர்வாகம் நாராயணன் மேல் கோபமாக இருந்தது அந்த நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்ததால்… வழக்கு இழுத்துக் கொண்டே போயிருக்க… கடந்த வருடம் நாராயணனிடம் குணா குழுமமும் தானாகவே சமாதானத்துக்கு வந்திருந்தது… நாராயணனிடம் அடிபணிந்திருந்தது… ’அம்பகம்’ குழுமத்தின் மருத்துவமனையாகவும் மாறியிருந்தது குணா மருத்துவமனையும்…
நாராயணனின் வெகுநாளையக் கனவு இது… தன் மகளின் ஞாபகார்த்தமாக எங்கு அவள் இறந்தாளோ(லோ) அந்த இடத்தில் அவளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்க வேண்டும் என்பது... அதே போல் பவித்ராவின் நினைவுகள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்த நினைவகத்தையும் உருவாக்கி இருந்தார் அந்த மருத்துவமனையில்…
“அப்பா… சொல்றைதைக் கேளுங்க… ராஜ் சார் மேல எந்த தப்பும் இல்லை…” நாராயணனிடம் மீனாக்ஷி கெஞ்சிக் கொண்டிருந்தார்…. அந்த மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவர்… பவித்ரா பணி புரியும் போது பவித்ராவின் மருத்துவ தோழி…
“மீனாக்ஷி… எனக்கு இதை மட்டும் வாங்கிக் கொடுங்க…” நட்ராஜ் அவளிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்க
ரிஷியின் பொறுமை… கண்மணியிடம் மட்டுமே… மற்றவர்களிடம் இருக்குமா என்ன... ஒரே தாவலில் நாராயணனின் சட்டையைப் பிடித்திருந்தான்
“இன்னும் அடங்கலையா உனக்கு ரத்த வெறி…. உன் பொண்ணு போய் இத்தனை வருசம் ஆன பின்னாடியும் இவர் மேல இருக்கிற ஆத்திரம் குறையலையா… உன் பொண்ணை உயிருக்குயிரா காதலிச்சதைத் தவிர என்னத் தப்பு பண்ணினார்… காதலிச்ச பாவத்துக்கு வாழ்க்கையைத் தொலச்சது தான் பாக்கி… இப்பவும் அவர் மேல இவ்ளோ வன்மமா…” எனும்போதே நாராயணனும் ஆரம்பித்திருந்தார்…
இத்தனை நாட்கள் சாந்த சொரூபியாக வலம் வந்து கொண்டிருந்த நாராயணனின் ஆக்ரோஷத்தை முதன் முதலில் ரிஷி பார்க்க ஆரம்பித்தான்…
நாராயணன்… நட்ராஜ்… ரிஷி என மூன்று தலைமுறைகள் தங்களுக்குள் மோதிக் கொண்ட தருணம் என்றாலும்... மூவருமே அவரவர் எண்ணங்கள் கொடுத்த வேதனையில் தங்கள் நிலை மறந்திருந்தனர்… ஆக்ரோஷமும் மூர்க்கமும் மட்டுமே மூவரிடமும் குடிகொண்டிருந்தது… அவர்கள் மூவரையும் தன் அச்சில் சுழல வைக்கும் அவர்களின் ஒரே மையப்புள்ளி கண்மணியும் அங்கு இல்லை...
“என்னடா உனக்குத் தெரியும்…. அந்த வலி உனக்குத் தெரியுமா… 23 … 23 வருசம் கண்ணுக்கு கண்ணா புள்ளி மான் மாதிரி சுத்திட்டு இருந்த பொண்ணுடா என் பொண்ணு… ஒரே அடியா எல்லாம் முடிஞ்சுட்டுதே… இவனுக்காக… ஒரு தகுதியுமே இல்லாத இவனுக்காக…. எங்களை ஒரே நிமிசத்துல தூக்கி எறிஞ்சிட்டு போனவ… திரும்பி வரலையே… ஒரு ரெண்டு வருசம் இவன் கூட வாழந்திருப்பாளா என் பொண்ணு… அப்போ அவனுக்கே இவ்வளவு வலியும் வேதனையும்னா எங்களுக்கு… எங்க வேதனைக்கு யார் பதில் சொல்வா… புத்திர சோகம்னா என்னனு உனக்குத் தெரியுமா…. இல்லை இவனுக்குத் தெரியுமா? கோடி கோடியா பணம் இருக்கு... ஆனால் நிம்மதி... எங்ககிட்ட வீடு முழுக்க வேலை ஆட்கள் இருக்காங்க... ஆனால் உரிமையான வாரிசு இல்லையே... வாழ்க்கையைத் தொலச்சது யாரு? ஆனால் இவன் வாழ்க்கையைத் தொலச்சுட்டானா… பொண்டாட்டி போய்ட்டான்னு அதையே சாக்கா வச்சுட்டு… நான் இப்படித்தான் வாழுவேன்னு பொறுப்பில்லாமல்… குடிகாரனா வாழ்ந்து ஊரை ஏமாத்திட்டு…. வேஷம் போட்றவனுக்கு நீ சப்போர்ட்டா பேசுற… இதே இவன் செத்துப் போயிருந்தா என் பொண்ணு இந்த மாதிரி நடந்துருப்பாளா… சரி இவன் வாழ்க்கையைத்தான் சரி பண்ண முடியலை… பெத்த பொண்ண காப்பாத்தினானா… இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு… வக்காலத்து…”
“நிறுத்துங்க…”
“கண்மணி விசயத்துல அவர் தப்பு பண்ணியிருக்கலாம்… ஆனால் உங்க பொண்ணோட வாழ்ந்ததுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க… இன்னைக்கு பேத்தி பேத்தினு உருகுறவரு… பிறந்த உடனே உங்களோட வாரிசா எடுத்துட்டுப் போய் வளர்த்துக்கலாமே… அப்போ எது தடுத்துச்சு… இப்போ எது அவளைத் தூக்கி வச்சுக் கொண்டாடச் சொல்லுது… இங்க பாருங்க… உங்க பொண்ணு இறப்புக்கு என் முதலாளி காரணமில்லை… அவங்களோட மரணம் இயற்கையா நடந்தது… அதுக்கு என் முதலாளி எந்த விதத்தில பொறுப்பாவார்? இல்லை அதுக்கப்புறம் அவர் வாழ்ந்த வாழ்க்கைனால உங்களுக்கு ஏதும் அவமானக் கேடாகிருச்சா… இல்லைதானே… ”
“இவ்ளோ நாள் ஆகியும்… இவ்ளோ தூரம் வந்தும்… உங்களோட ஆணவம் அழியலை… இவர் வேண்டாம்…. ஆனால் இவர் பெத்த பொண்ணு மட்டும் வேணும்… என் முதலாளி அவர் பொண்ணுக்காக... அவ உங்ககிட்ட பிரச்சனை பண்ணியிருக்காரா… இல்லையே… ஆனால் உங்களுக்கு… அவர் மனைவி ஞாபகார்த்தமா அவர் கேட்கிற இதைக் கூடக் கொடுக்க மனசு வரலை… சொல்லப் போனால் அவரோட ஒரே உறவு அவர் பொண்ணே உங்க வீட்லதான் இருக்கு… உங்ககிட்ட கொடுத்துருக்காரு… சொல்லுங்க அவர் பெரிய மனுஷனா நீங்க பெரிய மனுஷனா..”
என்றவன்… வேகமாக நட்ராஜைத் தூக்கியபடி…
“மிஸ்டர் நாராயணன்… அவர் பொண்ணை உங்ககிட்ட பறிச்சிட்டார்னு நீங்க நெனச்சீங்கன்னா… அதுக்கு அவர் பரிகாரமும் பண்ணிட்டாரு… ஐ மீன் உங்க பேத்தியை நீங்களே உங்க பேத்தியாவே வச்சுக்கங்க… அவ யாருக்கும் இங்க தேவையில்லை...” என்றவன்…
“ஆனால் ஒண்ணு… அவ வயித்துல வளர்றது என்னோட வாரிசு… இதோ நிற்கிறாரே என் மாமா அவரோட பேரனோ பேத்தியோ… என் மாமாக்கு மட்டுமே அந்த வாரிசுக்கு முழு உரிமை... அந்த உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சு… உங்க யாரையும் உயிரோட விட மாட்டேன்…”
”உங்களுக்கு உங்க பேத்தி முக்கியம்னா எனக்கு என் குழந்தை முக்கியம்… அதை ஞாபகம் வச்சுக்கங்க”
“அப்புறம் உங்க பேத்திகிட்ட சொல்லி வைங்க… அவளுக்கு நான் வேண்டாம் தான்… என் குழந்தை என்கிட்ட வந்து சேருகிற வரைக்கும்… அவளை நான் என் கண்பார்வைலாதான் வைத்திருப்பேன்னு சொல்லிருங்க… அவளுக்குத் தகுதியே இல்லாதவன் நான்… அதுனால என் குழந்தையும் அவகிட்ட இருக்க வேண்டாம்… இன்னும் சொல்லப் போனால் அவளும் அதை விரும்ப மாட்டா… அப்புறம் இதையும் சொல்லிருங்க… தகுதி இல்லாத நாங்க இனி அவ பக்கமே வர மாட்டோம்னு… அவ அப்பாவைப் பத்தியும் கவலைபட வேண்டாம்னு சொல்லிருங்க… என் முதலாளியை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிருங்க ” என்றபடியே கையெடுத்துக் கும்பிட்டவனாக…
“என் மாமா உங்ககிட்ட விட்டுட்டு போகிறது… அவரோட பொண்ணை… அவ ப்ரைஸ்லெஸ் தான்… அவளுக்கு விலை இல்லைதான்… ஆனாலும் அவளுக்குப் பதிலா… இதை மட்டும் கொடுங்க… அவர் மனைவியோட கடைசித் தருணங்கள் கூட அவருக்கு கிடைக்காத வலியையும் வேதனையையும் ரொம்பக் கொடுமை… அட்லீஸ்ட் இந்த ஸ்டெதஸ்கோப், 1 பெர்செண்டாவாது அந்த வலியையும் வேதனையையும் குறைக்கும்… ப்ளீஸ்” சொன்னவன்… அதன் பின் அங்கு நிற்கவில்லை… அம்பகம் மருத்துவமனையை விட்டு தன் முதலாளியோடு வெளியேறியவன்… கண்மணி இல்லத்திற்குச் சென்றவன்… யாரையும் கண்டு கொள்ளாமல்… அன்னை… சகோதரிகள் என அவனைத் தேடி வந்து தேற்றியபோதும்… அவன் காயத்திற்கு மருந்திட வந்த போதும் தவிர்த்தவன்… மொட்டை மாடிக்குச் சென்றவன்… நிற்கக்கூட முடியாமல்… சுவற்றில் சாய்ந்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எல்லாம் வெறிக்க ஆரம்பித்திருக்க… கண்கள் மனைவியின் நினைவுகளில் கண்ணீரை கொண்டு வந்திருந்தது…
இன்று அவள் அவனைப் பார்த்து அவன் நண்பனிடம் அவள் சொன்ன வார்த்தைகள்… அவனை அலைபாய வைத்துக் கொண்டிருந்தது…
“உனக்கு என்னைப் பிடிக்காதாடி… என்னால அதை ஏத்துக்கவே முடிலையே… என்னை ஏண்டி இப்படி அழ வைக்கிற…” அவள் நினைவுகளில் அவன் கரைந்து கொண்டிருந்தான் ரிஷிகேஷ்….
----
“ஓய் ரிஷிக்கண்ணா… என்ன மொட்டை மாடி தரிசனம்…. அதுவும் இந்த லேட் நைட்ல” கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனின்… கைகளின் இடையில் புகுந்து அவனுக்குள் சிறைப்பட்டாற் போல நின்று கொண்டவளாக
”இப்படி நின்னுகிட்டு கவலையோட வெட்ட வெளியைப் பார்க்கிறது பழைய ரிஷி… தனசேகர் பையன் ரிஷி… ஆனால் இப்போ இருக்கிறது என் ரிஷிக்கண்ணா…. என்ன கவலை… அப்படியே கவலை இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லனும்” என்றவள் சுவற்றில் இருந்த அவன் கைகளை எடுத்து தன் இடையோடு சேர்த்துக் கொள்ள… இப்போது ரிஷி தன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவளைத் திருப்பி… தன்னோடு அணைத்துக் கொண்டவனாக… வானத்தைக் கைகாட்டியவன்
“ஏய் ரவுடி…”
“யெஸ் ரிஷிகண்ணா…”
“அங்க என்ன தெரியுது…” நட்சத்திரங்களைக் கைகாட்ட
“நட்சத்திரம் தெரியுது…”
“அது உனக்கு…”
“அப்போ ரிஷி சாருக்கு மட்டும் அங்க என்ன தெரியுது…”
“இந்தக் கண்மணியோட ரிஷிக்கண்ணாக்கு…” திருத்தியவனாக
“வானத்தில இருக்கிற ஒவ்வொரு நட்சத்திரமும்… அவனோட ரவுடி மட்டும் தான் தெரியுறா… நான் பார்த்துட்டு இருக்கேன்… சந்தோசமா பார்த்துட்டு இருக்கேன்” ரிஷி உணர்ச்சித் ததும்பலோடு சொல்ல
”அது எப்படிப்பா… உன் மூளை மட்டும் CG வொர்க் பண்ணி டிரீம் அடிக்குது…” எனும் போதே… செல்லக் கடுப்போடு அவள் தலையில் தட்டியவன்…
“ஏண்டி… எவ்ளோ எமோஷனலா டையலாக் சொல்லிட்டு இருக்கேன்… நீ கிண்டல் பண்ற… நீயெல்லாம் ஒரு ரைட்டர்… கதை எழுதுற… என்ன எழுதுறியோ… என்ன சீன் கிரியேட் பண்றியோ…” ரிஷி கடுப்படிக்க…
“ஓகே… ஓகே… நான் ரைட்டர்னு சொன்னதுனால… கொஞ்சம் ஹேப்பி மோட் ஆகிட்டேன்… சோ நானும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் ஆட் பண்ணி சொல்லவா…”
“இல்ல வேண்டாம்… எவ்ளோ எமோஷனலா நான் பேசிட்டு இருக்கேன்… நீ கிண்டல் பண்ணிட்டு இருக்க… போடி நான் ஃபீலிங்க்ஸா சொன்னதை எல்லாம்.. தூள் தூளாக்கிட்டு… இப்போ என்ன… நீ உன் மொக்கை ஸ்டோரி சீன்ஸ்லாம் என்கிட்ட ஓட்டுவ… போடி உன்னோட பில்டப்லாம் நான் கேட்க மாட்டேன் போ” ரிஷி முறுக்கிக் கொண்ட போதே… நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற தோரணையில் கண்மணி பேச ஆரம்பித்தாள்…
“அதோ அந்த நட்சத்திரம் அதுல நானும் என் ரிஷிக்கண்ணா மட்டுமே…. அப்புறம்… இங்க… நான் என் ரிஷிக்கண்ணா… அப்புறம் அது யாரு… அங்க பாருங்க ரிஷி… நம்ம கூட குட்டி ரிஷிக்கண்ணா…”
“அந்த நட்சத்திரம்… அதைப் பாருங்க குட்டி கண்மணியும் இருக்கா…” கண்மணி சொன்னபோதே…
“அட ஆமாம் அம்மு…. அங்க பாரு… அடுத்து மூணாவதா மறுபடியும் குட்டி கண்மணி… ஆனால் ரிஷி மாதிரி சாந்த சொரூபமா இருக்கா… அங்க பாரு… அந்த இன்னொரு குட்டி ரிஷிக்கண்ணாவை… அவன் அவங்க அம்மா மாதிரி ரவுடியா இருப்பான் போல…” ரிஷி ஆரம்பிக்க…
“ஹலோ… ரெண்டுதான்னு சொல்லியிருக்கேன்ல.. ரெண்டு குழந்தைகளை வச்சே ட்ரீம் பண்ணுய்யா…” கண்மணி அவனிடம் இன்னும் ஒன்றியிருக்க…. ரிஷியின் கரங்களும் அவளிடம் அவள் வார்த்தைகளில் இருந்த அந்நியோன்யத்தை உணர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்திருக்க…
“ஆனால் யார் வந்தாலும் உன் அம்முதான் உனக்கு முதல்ல இருக்கனும்…” கண்மணி இப்போது அவன் புறம் திரும்பியிருக்க
”அப்புறம் என்னை மட்டும்தான் அம்முனு கூப்பிடனும்… வேற யாருக்கும் அந்த உரிமை கிடையாது… நான் மட்டும் தான் உங்க அம்மு… எனக்கு வச்ச பேரை யார்க்கும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன்… நம்ம பொண்ணா இருந்தாலும்” என்ற கண்மணியிடம்
ரிஷியோ சற்று திணறியவனாக…
”ஒரு ஃப்ளோல கூப்பிட்ட வார்த்தைக்கெல்லாம் பொண்டாட்டியா ரைட்ஸ் போட்டு மிரட்ற… அப்போ என் பொண்ணை எப்படி கொஞ்சுறது…” யோசிக்க ஆரம்பித்த போதே… கண்மணி முகம் சுருக்க….. அதைப் பார்த்த போதே
“ஹையோ என் செல்லத்துக்கு என்ன ஆச்சு… ஆயிரம் பேர் வந்தாலும்… நீதாண்டி என் முதல் குழந்தை… நீதாண்டி என் அம்மு” ரிஷி சமாதானப்படுத்த ஆரம்பித்திருக்க… அப்போதும் சமாதானமடையாமல் இருக்க… ரிஷி இப்போது
“ஏய் அம்மு… அங்க பாரு…. ” ஒரு நட்சத்திரத்தைக் கைகாட்ட… கண்மணியும் வேகமாக அதைப் பார்க்க...
“என்னைத் திட்டிட்டு இருக்கடி…”
“எதுக்கு…” கண்மணி புரியாமல் கேட்க
“உன்னாலதான் வாமிட் எடுக்கிறேன்னு…” சொன்ன போதே கண்மணியின் முகம் புன்னகையில் விரிய
“ஹலோ… நம்ம கல்யாண நாளை விட்டுட்டு ரொம்ப தூரம் தாவிட்டீங்க பாஸ்…” கண்மணி வேகமாகச் சொல்ல…
”அது வேற இன்னும் வரலைல…. பரவாயில்ல… அதுக்குள்ள நாம பாப்பாவை ரெடி பண்ணிட்டோம் போலடி…” ரிஷி குறும்பாகச் சொன்ன போதே… கண்மணியின் கன்னங்களில் கன்னக்குழி ஆழமாக அவன் கண்களில் தெரிந்திருக்க… அதுவே அவள் சந்தோசத்தை அவனிடம் சொல்லியிருக்க… கண்மணி அந்த சந்தோசத்தோடே தொடர்ந்தாள்…
“எனக்கு நம்ம கல்யாண நாள்க்கு என்ன வேணும்னா… “
“ஹ்ம்ம்ம்… சொல்லு…” ரிஷியின் கரங்கள் அவளைத் தன்னோடு மென்மையாக அணைத்திருக்க
“வழக்கம் போல என் ரிஷிக்கண்ணா… எனக்கே எனக்கு…”
“அது சரி…. இதெல்லாம் ஒரு விசயமா… அதெல்லாம் கேட்காமல் உனக்கே உனக்குனு கிடைப்பான்… அதுலாம் டிஃபால்ட்டா நீ கேட்காமாலேயே கிடைக்கும்… அது என்ன சொல்வ… டெஸ்டினி்யா… “ சொன்னவன் கண்சிமிட்டியபடியே
“என் தலையெழுத்துனு சொல்லிக்கவேண்டியதுதான்…” ரிஷி பொய்யான சலிப்போடு சொல்லும் போதே அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாமலா இருப்பான்… சிரித்தபடியே சந்தோசமாக அவளிடம் அடிவாங்கியும் கொண்டான்….
“வலிக்குதுடி…. கொடுமைப்படுத்துறடி… இதுல அனிவெரிசரிக்கு கிஃப்ட் லிஸ்ட் வேற…”
எனும் போதே இன்னும் இரண்டு அடிகள் கூடுதலாக அவனுக்கு விழுந்திருந்தது…
கண்மணி யோசித்து யோசித்து… ஒவ்வொன்றாக அடுக்க ஆரம்பித்திருக்க…. நொடிகள்… நிமிடங்கள் கடந்திருக்க… அவளை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல்…
“ஏண்டி… ரெண்டு புள்ளைனு தானே சொன்ன… பத்து புள்ளைங்க எங்க இருந்து வந்தாங்க…” ரிஷி ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பார்த்து ஆ வென்று வாய் பிளந்து கேட்க…
இப்போது கண்மணியும் தன் பரிசு வரிசையினை நிறுத்தியவளாக…
“அது இப்போ இல்ல… ஐம் மீன் இந்த ஜென்மம் இல்லை… போன ஜென்மம் ரிஷிக்கண்ணா… அப்போ நமக்கு பத்து பிள்ளைங்க இருந்தாங்க… இப்போ மாதிரிலாம்… ஒண்ணு ரெண்டு அப்போ கிடையாதுல… வஞ்சகம் இல்லாமல் குழந்தை இருக்கும்… நமக்கு பத்துன்றதே கம்மிதான்… ” கண்மணி சலிப்போடு சொன்னாலும் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னவள்…
“போன ஜென்மம் மட்டும் இல்லை ரிஷி… அதோ அந்த நட்சத்திரம் பாருங்க... அதுக்கு முன்னால நாம இருந்த ஜென்மம்… “ என ஆரம்பித்தவள்… ஏழேழ்ய் ஜென்ம கணக்கையும் அன்றே காட்டும் ஆவலில் இருக்க… ரிஷி சுதாரித்தவனாக
“ஏண்டி ஏழு ஜென்மமும் ஒரே நாள்ளயா…. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா... ஏழு ஜென்மத்துக்கும் அட்வான்ஸ் போட்டு சொல்ற… ஆசை இருக்கலாம் பேராசை இருக்கக் கூடாது “
”ஹ்ம்ம்ம்… இந்தக் கண்மணியை இந்த ஜென்மத்தோட கட் பண்ணலாம்னு பார்த்தால் முடியாது போலருக்கே” ரிஷி போலியான வருத்ததோடு பெருமூச்சோடு சொன்னபோதே…
“வாய்ப்பே இல்ல ரிஷிக்கண்ணா…” கண்மணியும் பாவமாக முகத்தை வைத்தபடி சொல்ல… ரிஷியின் புன்னகையோ பெரிதாகி இருந்தது…
இப்போது ரிஷி… அவளிடம்…
”அம்மு” என இழுத்த போதே… அவன் குரல் கரகரப்பாகி இருக்க… கண்மணி உஷாராக அவனைப் பார்க்க
”இல்லடி தங்கம் டெர்ரர் லுக் விடாத… இப்போ ஒரு நட்சத்திரம் காட்டுவேன்… அது ஸ்பெஷல் நட்சத்திரம்” என இவன் ஆரம்பிக்க… கண்மணியும் பார்த்தவளாக…
“சொல்லுங்க… என்ன ஸ்பெஷல்” புரியாமல் கேட்க
“உனக்கு ஏதாவது தெரியுதா…” கண்மணி தெரியவில்லை என உதட்டைப் பிதுக்க
“ஹான் இந்த நட்சத்திரத்துல அதுதான் ஸ்பெஷல்… மத்த நட்சத்திரம்லாம் நமக்கு சிஜி வொர்க் போட்டு சீன் காட்டுச்சா… ஆனால் இது மட்டும் ஏன் காட்டலை… சொல்லு”
“ஏன்” கண்மணி அவனின் வலையில் தானாகவே விழ
“சொல்றேன் அம்மு… இந்த ஸ்டார் ஒரு ஸ்பெஷல் ஸ்டார்… டுடேஸ் ஸ்பெஷல் ஸ்டார்னு சொல்லலாம்… டெய்லி வரும்”
“ரிஷிக்கண்ணா… என்னமோ ப்ளான் பண்ணிட்டீங்க போல… சொல்லுங்க சொல்லுங்க… உங்க கதையை”
“இது இதுதான் என் பொண்டாட்டி… புத்திசாலி பொண்டாட்டி…. அதாவது இந்த ஸ்டாரைப் பார்த்தால் யார் கண்ணுக்கும் ஒண்ணும் தெரியாது… ஏன் என் பொண்டாட்டி கண்ணுக்கும் கூட ஒண்ணும் தெரியாது… ஆனால் அவ புருஷன் இந்த ரிஷிக்கண்னா கண்ணுக்கு மட்டும் எல்லாம் தெரியுமாம்… அதாவது இன்னைக்கு என்ன நடக்கும்னு அவன்கிட்ட மட்டும் சொல்லுமாம்… ரொம்ப ப்ரைவேட்டான ஸ்டார்…” அவளிடம் குனிந்து சொன்னபோதே அவனின் மூச்சுக் காற்று கணவனாக அவளிடம் தன் உரிமையைக் காட்ட… அந்த உரிமையில் அவளின் உணர்வுகள் அவனிடம் சாய ஆரம்பித்திருந்த போதும்
“என்ன சொல்லுது… சீட் பண்ணுது இந்த நட்சத்திரம் உங்க கூட சேர்ந்து...” சுதாரித்த குரலில் கேட்டவளாக கண்மணி விலக முயற்சித்த போதே…
அவளை மீண்டும் தன் வசம் கொண்டு வந்தவனாக
“அது என்ன சொல்லுதுனா… அது என்ன சொல்லுதுனா” என்றவன்… அங்கேயே அவளை தன் இதழ்களால் முற்றுகையிட்டவன்…. அடுத்த சில நிமிடங்களில் தங்கள் அறையிலோ… நட்சத்திரம் காட்டிய காட்சிகளை வார்த்தைகளால் விளக்காமல்… செயல் முறை விளக்கமாக அவன் மனைவிக்கு மட்டுமே காட்ட ஆரம்பித்திருந்தான்…
---
”ரிஷிக்கண்ணா… கைல அடிப்பட்ருக்கு… அதுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணாமல் என்ன சிரிப்பு… என்ன ட்ரீம்…” அதட்டிய குரலில்… ரிஷி சட்டென்று நினைவுகளில் இருந்து மீண்டு வேகமாக நிமிர்ந்து பார்க்க அவள் குரல் மட்டுமே… அது கூட நிஜமில்லை… நிஜம் உணர்ந்து மனம் கனக்க நின்றவன் பின்… தன் அறைக்குச் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு முதலுதவிப் பெட்டியை எடுத்தபடி வெளியே வந்தவன்… மாடிப் படியில் அமர்ந்தபடி… அவனுக்கு அவனாகவே அவன் காயத்திற்கு மருந்து போட ஆரம்பித்திருந்தான்…
மனமெங்கும் அவள் மனைவி தந்த வலி மட்டுமே நிறைந்திருக்க… கைகளில் வலி இல்லை… அவள் கொடுத்த வலியின் வேதனையை மறக்க… தன் வெறித்தனத்தை…. கோபத்தை எல்லாம் கையில் பட்ட காயத்தில் காட்ட ஆரம்பித்திருந்தான்… ஆனாலும் மனதின் வலியைத் தோற்கடிக்க அந்த காயத்திற்கு பலமில்லை…
“ரிஷிகேஷின் மனைவியாக எனக்கு என்ன பெருமை….” அவள் வார்த்தைகள் பளாரென்ற அறைகளாக மாறி அவன் கன்னத்தை பதம் பார்த்தாற் போல பிரமை…. அவனுக்குள் கோபமும் ஆத்திரமும் மட்டுமே…
“இதுக்கெல்லாம் எனக்கு ஒரு நாள் கண்டிப்பா பதில் சொல்வடி… நீ திரும்பி வரும்போது உன்னை அவ்ளோ ஈஸியா என்னோட வாழ விடுவேன்னு நெனைக்கிறியா…. நான் கெஞ்சுனதை விட பல மடங்கு உன்னைக் கெஞ்ச விடுவேன்… நீ இல்லாமல் நான் எப்படி இருக்க முடியாதோ…. அதே நிலைதான் உனக்கும்… அதை நீ காட்ட மாட்டீங்கற… ஆனால் அந்த நாள் வரும்… அப்போ இருக்கு உனக்கு…” தனக்குள் அவன் அவன் மனைவியிடம் சவால் விட்ட போதே…. அவன் மனசாட்சி நக்கலாகத்தான் சிரித்தது… அதைக் கண்டு கொள்ளும் நிலையிலும் அவன் இப்போது இல்லை….
“யாரும் தேவையில்லை எனக்கு…” திமிரோடு காயத்திற்கு மருந்திடப் போனவனால்… அதைச் செய்து முடிக்கமுடியவில்லை…. அவனுக்கே அவன் முழுமையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இன்னும் பல மடங்கு வேதனையைக் காயத்திற்கு தந்திருக்க… வேண்டுமென்றே அனுபவித்தான் ரிஷி…
என் காதல் தோற்று விட்டது… விரக்தியாக வாய் விட்டுச் சிரித்தான் ரிஷி…. மனைவியின் வார்த்தைகளை நினைத்து…
”4 மாத காலம் தானே இந்தக் காதல்…. எத்தனையோ வருடக் காதலை எல்லாம் கைவிட்டு வந்தவன் தானே… அந்த வலியை ஏற்றுக் கொண்டவன் தானே...இதற்கு பழகிக் கொள்ள மாட்டாயா…” அவனைப் பார்த்து சொல்லி விட்டாளே…
கணவனாகத் தோற்றுவிட்டேன்… அவளின் சரிபாதியாக அவள் என்னை ஏற்கவில்லை…. அவள் துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கவில்லை… அடுத்தடுத்து இந்த எண்ணங்கள் அவனைச் சூழச் சூழ அவை அனைத்தும் அசுரத்தனமாக அவனை துண்டு துண்டாக வெட்டியிருக்க… மனவலியும்… உடல்வலியும் அவனை பந்தாட ஆரம்பித்திருக்க… அவன் அரக்கனாக மாறப் போனத் தருணம்… அவனையுமறியாமல் வானத்தைப் பார்க்க… வானம் நட்சத்திரமே இல்லாமல் அவன் வாழ்க்கையைப் போல் வெறுமையாகக் காட்சி அளிக்க… அவன் மனமும் வெறுமையுடன் அதை நோக்கிய போதே… தூரத்தில் ஒரு நட்சத்திரம்… விடிவெள்ளி என்றும் அழைப்பார்கள்… அதைப் பார்த்த அந்த நொடி… ரிஷியின் மனதிலும் நம்பிக்கை துளிர்ந்தது….
”நம்பிக்கையுடன் காத்திருப்பேன்…
கோபத்துடன் காத்திருப்பேன்…
மோகத்துடன் காத்திருப்பேன்…
காதலோடு காத்திருப்பேன்…
என் கண்மணிக்காக மட்டுமே காத்திருப்பேன்…
சமயம் கிடைக்கும் போதெல்லாம்…
என் நம்பிக்கைக்காக சூறாவளியாகி போராடுவேன்…
கோபத்தையும் எரிமலையெனக் காட்டுவேன்..
நான் உன்னிடம் கொண்ட காதல் மழையையும்
உன்னிடம் மட்டுமே நான் ஏங்கும் மோகத் தூறலையும்
உன்னிடம் கொட்டும் நாளுக்காக மேகமென காத்திருப்பேன்...
நீ மீண்டும் என் கண்மணியாக
என் கண்ணின் மணியில் தோன்றும்
நொடிக்காகக் காத்திருப்பேனடி கண்மணியே
இந்த பூமியில் நான் வாழும் என் கடைசி நொடிகள் வரை..…”
----
அதன் பின் ரிஷி கண்மணியை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை… அதாவது தன் காதலை வேண்டி அவளிடம் போய் நிற்கவில்லை… அவர்கள் புதுமனை புகுவிழாவிற்கும் அவன் அழைக்கவில்லை… தன் தாய் மற்றும் ரித்விகாவை கண்மணியுடன் பேசவிட்டவன்… பழகவிட்டவன்… ரிதன்யாவையோ கண்மணியிடம் நெருங்கவிடவில்லை… விக்கியையும் ரிதன்யாவையும் கண்மணிக்குப் பிடிக்கவில்லை என்பதை விட… கண்மணி அவளது வெறுப்பைக் காட்ட இவர்கள் இருவரையும் பயன்படுத்திக் கொள்கிறாள் என ரிஷி புரிந்து கொண்டதால் விக்கி, ரிதன்யா இருவரையும் கண்மணியை விட்டு விலகி நிற்கச் சொல்லிவிட்டான் ரிஷி…
தன் வீட்டு விசேஷத்திற்கு அவளை அழைக்காமல் தவிர்த்த ரிஷியால்…. ரிதன்யாவின் நிச்சயதார்தத்திற்கு அப்படிச் செய்ய முடியவில்லை… காரணம் இவன் அழைக்கவில்லை என்றாலும்… வேங்கட ராகவன் அவளை அழைக்காமல் இருக்க மாட்டார்… அதுமட்டுமில்லாமல் கண்மணி இல்லாமல் அவர் குடும்பத்தில் எந்த ஒரு விழாவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட… வேறு வழியின்றி ரிஷி கண்மணியிடம் சென்றான்… அப்போதும் அவள் அவனிடம் முகம் காட்டவில்லை…
அவளைப் பார்த்தாலே கோபம்தான் முன்னுக்கு வந்து முதலில் நிற்கும் என்பதாலேயே அவன் அவளைப் பார்க்காமல் பேசாமல் தவிர்த்திருந்தான்… பார்க்காமல் தவிர்த்திருந்தான்…
அதே போல நாராயணனையும் தவிர்த்திருந்தான் ரிஷி… ஏனோ… அவரின் அந்தஸ்து வெறி அவரை விட்டு இன்னுமே போகவில்லையோ… அவரிடம் ஒட்டுதல் காட்டாமல் தன் மாமனாரோடு சேர்ந்து அவரை விலக்கி வைக்க பழகிக் கொண்டான்…..
ஆதவனின் வழக்கிலும் ஆதவனின் தாய்க்கு குறைந்தபட்ச தண்டைனை கிடைத்திருக்க… கண்மணியோ அந்த வழக்கில் எந்த ஒரு சிரமமுமின்றி வெளியே வந்திருந்தாள்…
அர்ஜூனும் குணமானவுடன் அமெரிக்கா சென்று விட்டான்… இருந்தாலும் மாதம் இருமுறை வந்து கண்மணியைப் பார்த்துச் சென்று கொண்டிருந்தான்… கண்மணிக்கான அவன் நிலைப்பாட்டில் இருந்தும் அவன் மாறவில்லை… குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதும்… கண்மணிக்காக அவன் மட்டுமே இருக்கின்றான் என அப்போதும் நம்பிக்கையுடன் நிவேதாவிடம் சொல்ல… கிட்டத்தட்ட விரக்தியின் விளிம்பிற்குச் சென்றிருந்தாள் நிவேதா…. அதுமட்டுமின்றி நிவேதாவும் அர்ஜூனிடமிருந்து விலகி வாழ ஆரம்பித்திருந்தாள்…
இதற்கிடையே நிவேதா சம்மதிக்கின்றாளோ இல்லையோ… அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ…. அவளின் திருமணத்தை எப்படியாவது விக்கியின் திருமணம் முடிந்தபின்னால் நடத்தி விட வேண்டுமென்று விக்கியின் குடும்பமும் திட்டமிட்டிருந்தனர்…
இந்த சூழ்நிலையில் ரிதன்யா தன் நிச்சயதார்த்தத்தை தன் அண்ணன் கட்டிய புது வீட்டில் தான் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ள…. அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரிஷியும் அவன் வீட்டிலேயே நிச்சயதார்த்த விழாவினை நடத்தினான்….
ரிதன்யா-விக்கி நிச்சயதார்த்ததிற்கு கண்மணி வருவாள் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் கண்மணியும் வந்திருக்க… ரிஷியும் அதை அவனுக்கு சாதகமாகப் பயன்படுத்தி.. கண்மணியின் வளைக்காப்பு விழாவையும் ஏற்பாடு செய்துவிட்டான்….
-----
இன்று…
”நலங்கு வைக்கிற நேரம் வந்துருச்சு… இலட்சுமி புள்ளையக் கூட்டிட்டு வா… ” வளைகாப்பு மேடையில் இருந்து இலட்சுமியிடம் யாரோ சொல்ல… கண்மணியை இலட்சுமி அழைக்க உள்ளே வந்திருக்க…
“அம்மா கண்மணி போலாமா…” என்றபடி இலட்சுமி அறைக்கு வந்தவர்… ரித்விகாவையும் ரிதன்யாவையும் அழைத்து கண்மணியை சீக்கிரம் சபைக்கு அழைத்து வரச்சொல்லி விட்டுச் சென்றிருக்க…
அப்போது
“அண்ணி… இது என்ன அண்ணி… பரு மாதிரி ஆனால் கண்ணாடியா தெரியுது“ கண்மணியின் கழுத்தில்… முகத்தில் ஆங்காங்கே கண்ணாடி முத்துக்கள் போன்று தென்பட்ட கட்டிகளைப் பார்த்து ரித்விகா கேட்க…
கண்மணியும் தன்னைக் கண்ணாடியில் பார்த்தபடியே…
“காலையில ரெண்டு தான் இருந்தது ரித்வி… இப்போ அதிகமாகியிருக்கு” என்றபடியே கண்மணி எழ… எழுந்த போதே நிலை தடுமாறி இருக்க… வேகமாக ரிதன்யா கண்மணியின் கைகளை பிடித்தவளாக…
“அண்ணி… உடம்பெல்லாம் சூடா இருக்கிற மாதிரி இருக்கு” சந்தேகமாகக் கேட்ட போதே…
“ரிஷி எங்க… சாமி கும்பிட்டப்போ பார்த்தது… அதுக்கப்புறம் பார்க்கவே இல்லை…. சத்யா ஏர்போர்ட்ல இருந்து ஃபேஃபியோ ஃபேமிலியைக் கூட்டிட்டும் வந்துட்டாரு…. சத்யா வந்ததிலருந்து ரிஷி எங்கே எங்கேனு கேட்டுட்டே இருக்கான்…. செல்லையும் எடுக்க மாட்டேங்கிறான்”
தனக்குள் பேசியபடியே இலட்சுமி உள்ளே வந்தார் மீண்டும்… வரும் போதே கார்லாவையும் அவள் தாயையும் கூடவே கூட்டி வந்திருந்தார்…
கார்லாவும் அவளது தாயும் நேரடியாகக் கண்மணியைத் தேடி… அவளைப் பார்க்க அவளது அறைக்கு வந்திருக்க… கண்மணியும் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே…
கண்மணிக்குத் திடிரென்று அனைத்து ஓய்ந்தார்ப் போல் உணர்வு… இதயத் துடிப்பு அதிகரித்து படபடப்பானார் போலவும் உணர்வு…. ஆனாலும் யாரிடமும் காட்டிக் கொள்ள வில்லை… இன்னும் சில மணி நேரத் துளிதான்… இந்த சடங்கெல்லாம் முடிந்து விடும்… ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே சக்தியை… உற்சாகத்தை திரட்டிக் கொண்டவளாக வெளியே வர… அவளின் உற்சாகத்துக்கு தீனி போடுவது போல… அவளின் பால்ய கால பள்ளி நண்பர்கள் முதல்… அவளுக்கு பிடித்த அவள் ஆசிரியர் பிரபா… விஜி… அவளது கணவன்… இன்னும் பல பேர்… அங்கிருக்க… கண்மணி அவர்களைப் பார்க்கும் முன்னர் வேகமாகத் தன் கணவனைத்தான் தேடினாள்… வெகு நாட்களுக்குப் பின் தன்னவனைத் தேட அவனோ அவள் கண்ணில் படவில்லை…
ரிஷியைத் தேடியபடியே… அங்கிருந்தவர்களிடம் எல்லாம் பேசி முடித்து மேடையில் வந்து அமர்ந்தவளின் கண்களுக்கு ரிஷியின் தரிசனம் மட்டும் கிடைக்கவே இல்லை…. வளைகாப்பு சடங்குகளும் ஆரம்பித்திருந்தது
கண்கள்… ரிஷியை மட்டுமே தேட ஆரம்பித்திருக்க… கண்மணியின் கவனம் முழுவதும் ரிஷியைத் தேடுவதிலேயே இருக்க…
அவள் தேடிய அவள் கணவனோ… ’அம்பகம்’ மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தான்… உயிருள்ள ஜடமாக கையில் மனைவியின் மருத்துவ அறிக்கைகளோடு…
திக்குத் தெரியாமல் திசை அறியாமல் தெருக்களில் நடக்க ஆரம்பித்திருந்தான் கண்மணியின் கணவன் ரிஷிகேஷ்…
அலைபேசியை மறந்திருந்தான்… தன் வாகனத்தை மறந்திருந்தான்… தன்னையும் மறந்திருந்தான்… மனமும் சோர்ந்து… கால்களும் சோர்ந்து… தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தவன் கைகளில் இருந்த காகிதங்கள் அத்தனையும் அவனை விட்டு பறக்க ஆரம்பித்திருக்க… அவை பறந்த திசையை நோக்கியபடி… அப்படியே அந்த இடத்தில் அமர்ந்தபடி ஆகாயத்தை வெறிக்க ஆரம்பித்திருந்தான்… அவன் நம்பிக்கை எல்லாம் உடைந்து அவன் வாழ்க்கை நிர்மூலமாகிப் போனது போல்… அந்த வானத்திலும் எந்த நட்சத்திரமும் தென்படவில்லைதான்…. ஆனால் தன் மேல் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலக வாழ்க்கைக்கே ஆதாரமான சூரிய நட்சத்திரத்தின் ஒளியினை அவன் அறியாமல் போனதுதான் வேதனை…
அதேநேரம்…
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
எங்கிருந்தோ வந்த வசனங்கள்… அவன் காதில் வந்து விழ… கண்களில் கண்ணீர் கோடுகள்…
/* காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே */
Mam early waiting for next ud.. soon please..