அத்தியாயம் 102-1
கண்மணி முன்னால் வேகமாகச் செல்வதைப் பார்த்த விக்கி…
“ஏண்டா… அவளைத் தொந்தரவு பண்ணிட்டே இருப்பியா..” என்று நண்பனைக் கடிந்தபடியே…
“முறைக்காத… அர்ஜூன் இப்போ 9த் ஃப்ளோர்ல வச்சுருக்காங்க… இப்போதான் மாத்தினாங்க… கண்மணி வேகமா போயிட்டு இருக்கா… அவ நேரா ஐசியுக்கு போகப் போறா” என விக்கி கண்மணியைப் பார்த்துச் சொல்லியபடியே… ரிஷியையும் இழுத்துக்கொண்டு கண்மணியைப் பின் தொடர்ந்தான் விக்கி…
கண்மணியும் அங்கிருந்த லிஃப்ட்டுக்குள் நுழைந்திருக்க… ரிஷியும் விக்கியும் அவள் பின்னேயே வேகமாக அவளோடு உள்ளே நுழைய… லிஃப்ட் பணியாளோ… கண்மணியைப் பார்த்தார் அனுமதி வேண்டி…
“மேடம்… சார் ரூம்க்குதானே” என்ற போதே
“ஹ்ம்ம்… அதுக்கு முன்னால… அவரை வெளிய போகச் சொல்லுங்க…” கண்மணி விக்கியைக் கைகாட்ட…
“சாரி மேடம்… உங்களுக்குத் தெரிஞ்சவங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்..” என்றபடி… விக்கியிடம் திரும்பியவன்
“சார்… இந்த லிஃப்ட் காமன் பெர்சன்ஸ் போற லிஃப்ட் கிடையாது… ஆத்தண்டிகேட் பெர்சன்ஸ் மட்டும் போறது… அந்த லெஃப்ட்ல இருக்கிற லிஃப்ட்ஸ் தான் நீங்கள்ளாம் போகனும்…” அந்த ஊழியர் தொழில் விசுவாசத்திற்கு பங்கம் ஏற்படாமல் சொல்லியும் முடித்து… தன் முதலாளி அம்மாவைப் பார்க்க… கண்மணியோ கைகளைக் கட்டியபடி அமைதியாக வேறு புறம் பார்த்து நிற்க… விக்கி ஒன்றும் சொல்லவில்லை… மௌனமாக வெளியேறப் போக…. ரிஷி இப்போது அவனைத் தடுத்தான்…
“ஒரு நிமிசம்டா…” விக்கியைத் தடுத்தவன்…. கண்மணியிடம் திரும்பி…
“என் ஃப்ரெண்டுன்றதுனால இந்த அவமானமா அவனுக்கு…” அன்றைய தினத்தின் மொத்த கோபமும் அவனிடம் மையம் கொள்ள ஆரம்பித்திருந்த நிமிடங்கள்…
“உங்க ஃப்ரெண்டா… ஓ சாரி… அதுனால விக்கியை அவமானப்படுத்துறேனா… “ கண்மணியின் இதழ் ஓரத்தில் நக்கல் சிரிப்பு மட்டுமே…
“விக்கி… த மாஸ் ஹீரோக்கு வந்த சோதனை… ரிஷி… கேவலம் இந்த புள்ளப்பூச்சியோட ஃப்ரெண்டுனு வெளிய போகச் சொன்னேனா… ”
“என்ன விக்கி சார்… நீங்க யாரு... உங்க கெத்து என்ன… உங்க பலம் என்ன… இவரோட உங்களை கம்பேர் பண்ணிட்டாரு… அவ்ளோ ஒர்த்தா உங்க ஃப்ரெண்டு…”
”கண்மணி…” ரிஷியின் குரல் வெளியே வருவதற்கு முன்னரே….
“ஷ்…ஷ்…” கண்மணி அவனை அடக்கியவளாக
“அன்னைக்கு இதே விக்கி மாடில பேசினப்போ அமைதியா இருந்தீங்கதானே… அப்போ இப்போதும் பேசக் கூடாது… சரியா… எனக்கும் இந்த விக்கிக்கும் ரொம்ப நாள் கணக்கு ஒண்ணு இருக்கு… அட்லீஸ்ட் இன்னைக்காவது பேசித் தீர்த்துக்கிறேன்… முதன் முதலா சந்திச்சதுலருந்து இப்போ வரைக்கும்… இது எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா ஓடிட்டு இருக்கிற கணக்கு… நீங்க கொஞ்சம் அமைதியா அப்படி தள்ளி நிற்கறீங்களா ரிஷிகேஷ்”
அவை ரிஷிகேஷுக்கான வார்த்தைகள் என்றாலும் பார்வை விக்கியிடம் தான் இருந்தது…
“அன்னைக்கு என்ன சொன்ன நீ… நான் இந்த ரிஷிக்கு பொருத்தமில்லாத ஆளா… அன்னைக்கு மிஸ்டர் ரிஷி வாயைத் திறக்கல…. ஆனால் இன்னைக்கு நீ கேட்ட அந்தக் கேள்விக்கு ஆதவன் விளக்கம் கொடுத்துட்டான்ல… இந்த புள்ள பூச்சி ரிஷிக்கு… பொண்ட்டாட்டியை யார் என்ன பேசினாலும்… அவகிட்ட கேவலமா நடந்துகிட்டாலும்… வாயை மூடிட்டு நிற்கிற… கையைக் கட்டிட்டு நிற்கிற… இந்த ரிஷிக்கு நான் பொருத்தமானவளா சொல்லுங்க மிஸ்டர் விக்கி…. ”
”அப்புறம்…” என்றவள் ரிஷியைப் பார்த்தபடி…
“நீங்க இந்த லிஃப்ட்ல வர்றதுக்கு.. அந்த தகுதி இருக்குனு ஃபீல் பண்ணியிருக்கலாம்.. அவ்ளோ பெரிய ஆள் தான் நீங்க… பணம் மட்டும் இல்லை… புத்தியும் இருக்கு… இதை விட பெரிய ஆளா கூட வருவீங்க… ஆனால் சில பேர் அடுத்தவங்க முதுகுல சவாரி செய்தே பெரிய ஆளா ஆக ட்ரை பண்ணினவங்க… அவங்களுக்கு சொன்னால் கூட புரியாது… ப்ச்ச்.. நான் உங்ககிட்ட போய் இதைச் சொல்றேன் பாருங்க… உங்க ஃப்ரெண்ட் பற்றி உங்களுக்குத் தெரியாதா?… ”
“இந்தப்பக்கம்… நாராயண குருக்களோட பேத்தி… அம்பகம் ட்ரஸ்ட்டோட ஒன் ஆஃப் தெ சேர் பெர்சன்… தி க்ரேட் நாராயணனோட மகள் பவித்ராவோட பொண்ணு.…”
“அந்தப்பக்கம்… நட்ராஜ்… ஆர் கே இண்டஸ்ட்ரீசோட ஓனர் நட்ராஜோட பொண்ணு…”
“இதுதான் இது மட்டும் தான் என்னோட பெருமை… உங்க ஃப்ரெண்டுக்கு அது இன்னும் புரியலைனு நினைக்கிறேன்… அப்புறம் நீங்க… நீங்க மீன்ஸ்… நீங்க அண்ட் உங்க வருங்கால மனைவி மிஸ் ரிதன்யா தனசேகர் ரெண்டு பேரும் ரொம்ப புத்திசாலிங்க… நான் யார்னு எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு எவ்வளவோ எச்சரிச்சீங்க… அந்த ஆதவனை விட நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டீசண்ட்டா சொன்னீங்க… அவன் சொன்ன புள்ளப் பூச்சிக்கும் நீங்க சொன்ன பொம்மைக்கும் பெரிய வித்தியாசம்லாம் இல்லை…” கண்மணி எகத்தாளமாகச் சொல்ல… ரிஷியின் முகம் தானாகவே தரையைப் பார்த்திருந்தது…
பேசிக் கொண்டிருப்பது கண்மணியா… கண்மணியின் இப்படி ஒரு முகத்தை… அதுவும் ஒரு வேலையாள் முன்பு தன்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றாளா… ரிஷிதான் செய்வதறியாது தவித்து நின்றான்…
“அதாவது.. ரிஷிகேஷோட மனைவி கண்மணின்னு சொல்ற அளவுக்கு ஒரு பெருமையும் இங்க இல்லை… “
விக்கி அதுவரைதான் பொறுத்திருந்தான்…
“என்ன… பணக்காரத் திமிரை எங்ககிட்டயே காட்றியா கண்மணி… உன்னையே உயிரா… எல்லாமா நினச்சவனுக்கு இதுதான் நீ கத்துக் கொடுக்கிற பாடமா… “ எனும் போதே… அவன் முன் சொடக்குப் போட்டவள்…
“உன் ஃப்ரெண்ட்தான் வாழ்க்கைப்பாடத்துல கால்குலேட்டிவ் பெர்சன்… என்னை அவர் வாழ்க்கைல இழுத்து… செண்ட்டம் வாங்கிட்டேன்னு பெருமையா சொன்னார்ல… அண்ட் நீங்க என்ன சொன்னீங்க… ரைட் சூனியக்காரினு… அப்புறம் என் பின்னாடி அலையுறதுக்கு அடிமைக் கூட்டம் வேணும்னு… ஹ்ம்ம்… அப்படித்தான் நான்… ஆனால் அந்த அடிமை எல்லாம் என் பேச்சை மட்டும் தான் கேட்கனும்… கண்டவன் பேச்சை எல்லாம் கேட்கக் கூடாது… எப்போ இந்த அடிமை என்னைப் பற்றி நீங்க தப்பா பேசும் போது வாயை மூடி… கையக் கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்துச்சோ… அப்போ என் அடிமை இல்லைதானே… எனக்கு அப்படிப்பட்ட உங்க ஃப்ரெண்ட் ரிஷி அடிமை தேவை இல்லைனு அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்… ” என்றவள்… சட்டென்று நிறுத்தி
“ப்ச்ச்… ” அலட்சிய நிதானக் குரலில் தன்னை மீட்டெடுத்தவள்…
“வெளில போறிங்களா விக்கி… போகும் போது… ப்ளீஸ்…” ரிஷியைக் கைகாட்ட…
“ஏய்… உன் புத்தியைக் காமிச்சுட்டேல்ல…” ரிஷியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு கோபப்பட ஆரம்பித்த போதே…
“கோபம் எதுக்கு விக்கி சார்… உங்க ஃப்ரெண்ட என்கிட்ட இருந்து காப்பாத்திட்டீங்கன்னு பெருமையா போங்க விக்கி சார்…” என்ற படியே
“டோர் க்ளோஸ் பண்ணுங்க…” அடுத்து விக்கி பேசுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்காமல்… வேலையாளைப் பார்த்து உத்தரவிட்டிருக்க… விக்கியும் ரிஷியோடு வெளியே வந்திருக்க… கண்மணி ரிஷியின் கண்முன்னரே உயரே உயரே போய்க் கொண்டிருந்தாள்… அவளை எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு அவள் போய்க் கொண்டிருக்க… சலனமின்றி வெளியே வந்தவனைப் பார்த்த விக்கி…
“டேய் ரிஷி… ரிஷி…” ரிஷியை உலுக்க…
“டேய்… நல்லா இருக்கேன்… ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்… நமக்கான லிஃப்ட் அங்க இருக்குடா… வா போகலாம்” எதுவுமே நடக்காதவன் போல ரிஷி விக்கியைப் பார்த்து இதழ் வளைந்த ஏளனத்தோடு சொல்ல… விக்கி.. கண்கலங்கியவனாக… நண்பன் படும் வேதனையைத் தாங்கமுடியாமல்
“டேய்… அவ அன்னைக்கு நாம பேசினதை… இல்லை நான் பேசினதை கேட்ருக்காடா…” விக்கி குற்ற உணர்ச்சியோடு சொன்னபோதே…
“ஆனால் நான் பேசினதை கேட்கலையேடா… ” சொன்னவன்…
“ஆனால் நான் உன்கிட்ட என்னோட காதலைச் சொல்லி இருக்கனும்னு நினைக்கிற அளவுக்கு முட்டாள் பொண்ணாடா அவ… விடு என் மேல இருந்த காதல் அவளை அந்த அளவுக்கு முட்டாளாகியிருக்கு போல ” ரிஷி விக்கியிடம் சொன்ன போதே விக்கி அதிர்ச்சிப் பார்வை பார்த்திருந்தான்
“இவ்வளவு தூரம் பேசியும்… அவளை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறானே..” இப்போது நண்பன் மேல் கோபம் வர… முறைத்த போதே
“உனக்கு கண்மணியைப் பற்றி எப்போதுமே தெரியாது… இப்போதும் தெரியலை…” நண்பனிடம் சொன்னபடியே... லிஃப்ட்டின் அருகில் வந்தவன்….
“நீ போடா… நான் வீட்டுக்கு போகிறேன்” சொன்ன போதே ரிஷியின் கண்கள் கலங்கியிருந்தது… அதை நண்பனிடம் மறைக்கவும் இல்லை… அப்போது… நிவேதா லிஃப்ட்டை விட்டு வெளியே வந்திருக்க… விக்கியும் ரிஷியும் அவளைப் பார்க்க…
“வீட்டுக்குப் போறேன் விக்கி… “ ரிஷி சொன்ன அதே பாவனையில் நிவேதாவும் சொல்லி முடிக்க
“ஏய் என்னாச்சு… இவ்ளோ நேரம் அங்க தானே அர்ஜூன் இருந்த… அர்ஜூன் ஏதாவது சொன்னாரா…. இல்ல கண்மணி ஏதாவது சொன்னாளா” என விக்கி கோப முகத்துடன் கேட்ட போது
“ப்ச்ச்… யாரும் ஏதும் சொல்லல… நானே வந்துட்டேன்… அர்ஜூன் உயிருக்கு ஆபத்தில்லை அது போதும் எனக்கு… வேற ஒண்ணும் வேண்டாம்” என்றவள் குரல் மெலிதாக கரைந்திருக்க… சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் கோடு வந்திருக்க… அடுத்த நிமிடமே… அவள் கைகளால் அது துடைக்கப்பட்டும் இருக்க… ரிஷியும் விக்கியும் அவளின் இந்த நிலையைப் பார்க்க முடியாமல் தவித்திருக்க…
“நிவேக்கா… சாரிக்கா… இப்படி ஒரு சூழ்நிலைல உன்னைப் பார்ப்பேன்னு நான் நினைக்கக் கூட இல்லை… இப்போ என்னாச்சு… ஒண்ணும் ஆகலைதானே… அப்புறம் என்ன… இவ்ளோ நாளா அர்ஜூனு என்ன பண்ணினாலும் பொறுத்துகிட்டதானே… அப்புறம் இப்போ மட்டும் என்னாச்சு… கவலைப்படாத” என்ற தீர்மானமான ரிஷியின் குரலில்… நிவேதாவுக்கு நம்பிக்கைதான் வந்திருக்க வேண்டும
மாறாக… கண்களை மூடித் திறந்த நிவேதா
“கண்மணியை அவர் இந்த ஜென்மத்தில மறக்க மாட்டார்னு நினைக்கிறேன் ரிஷி… அது கண்கூடா தெரிந்த பின்னால நான் இனிமேலும் அவரைத் தொந்தரவு பண்றது எந்த விதத்தில நியாயம் சொல்லு…”
விக்கி கவலையோடு ரிஷியையும் நிவேதாவையும் பார்க்க
ரிஷி பதிலேதும் சொல்லாமல்… சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவன்…
“கண்டிப்பா அர்ஜூனுக்கு உனக்கும் மேரேஜ் நடக்கும் நிவேக்கா… கண்மணியைப் பற்றி தெரியாது உனக்கு… கண்டிப்பா அவ அதை நடத்தி வைப்பா… அர்ஜூனை சம்மதிக்கவும் வைப்பா… சீக்கிரம் அது நடக்கும்” ரிஷி சொல்ல
“இதுல என்னோட காதல் எங்க இருக்கு ரிஷி… கண்மணி சொல்லி அர்ஜூன் என்னை மேரேஜ் பண்ணினார்னா எனக்கு என்ன மரியாதை சொல்லு… “
ரிஷி சிரித்தான்…
“அங்கேயும் கண்மணி கிட்ட அவர் வச்சிருக்கிற அன்பு தானே இருக்கு…”
“நிவேக்கா.. அர்ஜூன் கண்மணியை லவ் மட்டும் பண்ணியிருந்தார்னா…. கண்டிப்பா அந்த லவ் இந்நேரம் மாறி இருக்கும்… ஆனா அவர் லவ் பண்ணலை மட்டும் பண்ணலை… அதையும் மீறிய உரிமை… அவர் மட்டும் தான் கண்மணிக்கு பாதுகாப்பு… அரண்… சின்ன வயசுல இருந்தே அவருக்குள்ள அது பதிஞ்சிருச்சு… இப்போ அவர்கிட்ட காதல் இல்லை… ஆனால் உரிமை இருக்கு… காவல் இருக்கு… அது என்னைக்கு மாறுதோ அப்போ கண்டிப்பா தனக்கான வாழ்க்கையைத் தேடுவாரு… ”
“மிஸஸ் நிவேதா அர்ஜூன்…. இந்த வார்த்தையை நாங்க எல்லோரும் கேட்கிற காலம் சீக்கிரம் வரும்… அப்போ ரிஷியை நீங்க நெனச்சுப் பார்ப்பீங்க” என்றபடியே… நட்ராஜுக்கு தனது அலைபேசியில் அழைக்க ஆரம்பித்தான்…
அழைப்பு எடுக்கப்படாமல் போய்க் கொண்டிருக்க…
”டேய் எங்க மாமா எங்க இருக்காரு” ரிஷியின் குரலில் உடனடி பதட்டம் வந்திருக்க…
“அப்போவே ப்ளட் கொடுத்துட்டாரே… அங்க இல்லையே… கீழ உன்னைத் தேடி வந்திருப்பார்னு நினைத்தேன்… ஒரு வேளை வெளியே வெயிட் பண்ணிட்டு இருப்பார்டா” விக்கி சொன்ன பொதே… ரிஷி தலையை இடவலமாக ஆட்டியவனாக…. நாரயணனுக்கு அடித்தான்… அவரும் எடுக்காமல் இருக்க… யோசனையுடன் நிமிர்ந்தபோதே… அங்கிருந்த பவித்ராவின் புகைப்படம்… அவன் கண்களில் பட்டிருக்க… சட்டென்று தெளிந்தவனாக… வேகமாக ரிஷப்ஷனுக்கு ஓடியவன்…
“மேம் இங்க பவித்ரா மேடத்தோட ஃபோட்டோ மாட்டி இருக்கிற ஃப்ளோர் எந்த ஃப்ளோர்…” ரிஷி படபடப்புடன் கேட்டுக் கொண்டிருக்க… விக்கிக்கும் இப்போது நட்ராஜின் நிலை புரிந்தது
“எல்லா ஃப்ளோர்லயுமே மேடமோட ஃபோட்டோ இருக்கும்.. அப்புறம்… ” என இழுத்த போதே…
“இதுதான் பவித்ரா ஆண்ட்டி வேலை பார்த்த ஹாஸ்பிட்டலா…” விக்கி வேகமாக ரிஷியிடம் விசாரிக்க…
“அவங்களுக்குனு... மேடத்துக்குனு... ஏதாவது தனியா ரூம் இருக்கா…” ரிஷியின் முகம் வேர்த்திருந்தது....
“அப்படிலாம் இல்லை சார்… ஆனால் அவங்க மெமோரியல் ” எனும் போதே
“எங்க இருக்கு… எந்த ஃப்ளோர்… ரிஷி “ அவசரப்படுத்த….
“4த் ஃப்ளோர்…” அந்த பெண் சொன்னபோதே…
“டேய்… அங்கதான் ப்ளட் கொடுத்த இடமும்…” விக்கி முடிக்கவில்லை… ரிஷி வேகமாக… படிகளில் தாவி இருக்க… விக்கியும் அவன் பின்னாலேயே ஓட ஆரம்பித்திருந்தான்…
அங்கு சென்ற போதோ...
“முடியாது... நான் தர மாட்டேன்... இது... என் பவியோட இதயத் துடிப்பை எத்தனையோ தடவை கேட்ருக்கேன்... இது எனக்கு வேணும்... தர மாட்டேன்... இது போதும் எனக்கு... இப்போ என் பவி என்கூடவே இருக்கா...”
தரையில் அமர்ந்தபடி... பவித்ராவின் ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சோடு அணைத்தபடி... விடாமல்.. யாரும் பறிக்க முடியாமலும் பிடித்திருந்தார் நட்ராஜ்... நாராயணனின் அடி ஆட்கள் அத்தனை பேரும் அவரிடமிருந்து அதை வாங்கப் போராடிக் கொண்டிருக்க...
“மாமா” ரிஷியின் குரல் அந்த தளம் எங்கும் எதிரொலித்த அதேநேரம்... அவன் பார்வையோ நாராயணனை எரிக்க ஆரம்பித்திருந்தது...
----
கண்மணி என் கண்ணின் மணி 102-2 - சில துணுக்குகள்
“ஓய் ரிஷிக்கண்ணா… என்ன மொட்டை மாடி தரிசனம்…. அதுவும் இந்த லேட் நைட்ல” கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனின்… கைகளின் இடையில் புகுந்து அவனுக்குள் சிறைப்பட்டாற் போல அடைக்கலமாகி இருக்க…
”அது எப்படிப்பா… உன் மூளை மட்டும் CG வொர்க் பண்ணி டிரீம் அடிக்குது…” எனும் போதே… அவள் தலையில் தட்டியவன்…
“ஏண்டி… எவ்ளோ எமோஷனலா டையலாக் சொல்லிட்டு இருக்கேன்… நீ கிண்டல் பண்ற… நீயெல்லாம் ஒரு ரைட்டர்… கதை எழுதுற… என்ன எழுதுறியோ… என்ன சீன் கிரியேட் பண்றியோ…” ரிஷி கடுப்படிக்க…
---
“அது இப்போ இல்ல… போன ஜென்மம் ரிஷிக்கண்ணா… நமக்கு பத்து பிள்ளைங்க இருந்தாங்க… இப்போ மாதிரிலாம்… ஒண்ணு ரெண்டு அப்போ கிடையாதுல… வஞ்சகம் இல்லாமல் வாரிசு இருக்கும்… நமக்கு பத்துதான்… கம்மிதான்… ” கண்மணி சலிப்போடு சொன்னாலும் வெட்கப்பட்டுக்கொண்டே சொல்ல…
---
“அண்ணி… இது என்ன அண்ணி… பருவா“ அவள் கழுத்தில்… முகத்தில் ஆங்காங்கே கண்ணாடி முத்துக்கள் போன்று தென்பட்ட கட்டிகளைப் பார்த்து ரித்விகா கேட்க…
---
“ரிஷி எங்க… சாமி கும்பிட்டப்போ பார்த்தது… அதுக்கப்புறம் பார்க்கவே இல்லை…. சத்யா ஏர்போர்ட்ல இருந்து ஃபேஃபியோ ஃபேமிலியைக் கூட்டிட்டும் வந்துட்டாரு…. சத்யா ரிஷி எங்கே எங்கேனு கேட்டுட்டே இருக்கான்….”
---
ரிஷியைத் தேடியபடியே… அங்கிருந்தவர்களிடம் எல்லாம் பேசி முடித்து மேடையில் வந்து அமர்ந்தவளின் கண்களுக்கு ரிஷியின் தரிசனம் கிடைக்கவே இல்லை…. வளைகாப்பு சடங்குகளும் ஆரம்பித்திருந்தது...
--
திக்குத் தெரியாமல் திசை அறியாமல் தெருக்களில் நடக்க ஆரம்பித்திருந்தான் கண்மணியின் கணவன் ரிஷி…
”உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கலங்குதடி”
எங்கிருந்தோ வந்த வசனங்கள்… அவன் காதில் வந்து விழ… கண்களில் கண்ணீர் முத்துக்கள்…
Super
Such a stuff episode jii... Whoever but have to deserve.. Waiting jii...
Nice
Hoom enna tha solla
Inda Narayanan adangave
Nice update
Rishiya romba padura
Nice
Nice sis waiting for next ud
Nice.....
nice update sis