இதயம்-17
பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கையை நகர்த்திப் போட்டுக்கொண்டு கடலையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள் மல்லி.
இருளில், காட்சிகள் எதுவும், கண்களுக்கு தெரியாவிட்டாலும் தெளிவாக இருந்த வானத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. கடல் காற்று, இதமாக வருடிக் கொண்டிருந்தது.
அவை எதையும் ரசிக்கும் மனநிலையில்தான் இல்லை அவள்.
தலை வேறு 'விண் விண்' என்று வெடித்து விடுவது போல் வலிக்கவே கையில் வைத்திருந்த வலி நிவாரணி தைலத்தை எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டாள் மல்லி.
கையில் ஒரு கிண்ணத்துடன் வந்த ஆதி, “போதும் மல்லி! இப்பவே பாதி பாட்டிலை காலி பண்ணிட்ட. முகமெல்லாம் எரிச்சலில் வெந்து போயிடும்! கத்தரி வெயில் வேற”
அவன் அதட்டுவது போல்தான் சொன்னான். ஆனாலும் அதில் அவளிடம் அவன் கொண்ட அக்கறையே தெரிந்தது.
மாலையிலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்றைய பொழுதின் தொடர் அதிர்ச்சிகளால் துவண்டுதான் போயிருந்தாள் மல்லி. இரவு உணவைக் கூட பெயருக்குக் கொறித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.
“தலை வலி தாங்கமுடில மாம்ஸ்” தலையைப் பிடித்துக்கொண்டே அவள் சொல்ல, அவன் கையில் வைத்திருந்த கிண்ணத்தை அவளிடம் நீட்டினான் ஆதி.
அழகிய துண்டங்களாக வெட்டப்பட்டிருந்த மாம்பழங்கள் அதில் நிறைந்திருந்தது. அதன் இனிய மனம் அவளைத் தூண்ட, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டவள்.
“வாவ்! செம்மயா இருக்கு மாம்ஸ்! மாம்பழம் என்னோட ஃபேவரைட் தெரியுமா?”
ஒரு நிமிடத்திற்குள் அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையின் குதூகலிப்புடன் உற்சாகமானவளைப் பார்த்து ஆதியின் இறுக்கமெல்லாம் தளர்ந்து மின்னல் போன்ற புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவனது இதழ்களில்.
“இது படப்பைல இருக்கற நம்ம தோப்பிலிருந்து வந்த பங்கனப்பள்ளி மாம்பழம்” என அவன் பெருமையுடன் சொல்லிக்கொண்டே, அவளது பின்புறமாக வந்து நின்றுகொண்டு அவளது நெற்றிப்பொட்டுகளில் தனது கட்டை விரலை வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்க சங்கடத்துடன் நெளிந்தாள் மல்லி.
“ஷ்... இப்ப என்ன கிஸ்ஸா பண்ணிட்டேன்? இந்த சீன் போடுற!” என்றவன், “சும்மா இரு மல்லி! எனக்கு தலைவலி வரும்போதெல்லாம் முன்பு அம்மு இதுபோல் செய்வாள். தலைவலி நன்றாகக் குறையும்” என்று சொல்லிக்கொண்டே அவன் அதை தொடரவும் சில நிமிடங்களிலேயே அவளுடைய தலைவலி குறைந்திருந்தது.
“ஆமாம்! தலைவலி குறைந்திருக்கு தேங்க்யூ மாம்ஸ்!” என்றவள் அவன் அம்முவைப் பற்றி பேசியதில், ‘அவளது பிரிவு அவனை எந்த அளவிற்குப் பதித்திருக்கும்?’ என்ற எண்ணம் எழ.
“எனக்குத் தெரியும் மாம்ஸ்! அம்மு உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு! அவ அடிக்கடி சொல்லியிருக்கா! நீங்க அவளை ரொம்ப மிஸ் பண்றிங்க இல்ல?!” என அவனிடம் கேட்கக்கூடாத ஒரு கேள்வியை மல்லி கேட்டுவிட,
எப்படி அவன் தன்னை மறந்து அம்முவைப் பற்றிப் பேசினான் என்று அவனுக்கே புரியாமல், அதுவரை இருந்த சுமுகமான மன நிலை மாறி அவன் முகத்தில் கடுமை குடியேறி இருந்தது.
“ப்சு அவளை நான் ஒண்ணும் மிஸ் பண்ணல! ஒரு நொடி கூட எங்களைப் பற்றி நினைக்காமல் போயும் போயு