இதயம்-12
ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட, தேவா கொஞ்சம் மெலிந்திருந்ததுபோல் தோன்றியது மல்லிக்கு. அவன் அருகில் வரவும்தான் புரிந்தது அவளுக்கு, அதிக நேரம் ஜிம்மிலேயே செலவு செய்திருப்பான் போலும். அவ்வளவு பிட் டாக இருந்தான் முன்பைவிட.
மல்லியின் அருகில் வந்தவன், அவள் பேசத் தொடங்கும் முன்பே கிசுகிசுப்பாக, “எதுவாக இருந்தாலும், உள்ளே போய் பேசிக்கலாம்” என்றவாறு அவளது கையைப் பற்றிவாறு அவனது அலுவலக அறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
உள்ளே நுழையும்வரை அமைதியாக வந்த மல்லி, அங்கே வந்தவுடன் தனது கையை அவனிடமிருந்து விடிவித்துக்கொண்டு, கோவம் கலந்த குரலில், “நான் உங்களை எப்படி சார் கூப்பிடுறது தேவா! ஆதி! இல்ல, இது இல்லாமல் வேறு எதாவது பெயர் பாக்கி இருக்கா?” எனக் கேட்க,
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் ஆதி, “உன்னோட அம்மா உங்க அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க?”
“நான் என்ன கேட்டேன்; நீங்க சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் என்ன இப்படியெல்லாம் பேசறீங்க தேவா..ஆதி..ராஜன்?” என பல்கலைக் கடித்துக் கொண்டே, மல்லி சொல்ல,
“நான் கேட்டதற்கு முதலில் நீ பதில் சொல்லு” என அவன் அதிலேயே நிற்க,
அதற்கும் பல்கலைக் கடித்துக்கொண்டே மல்லி, “ம் என்னங்க ஏங்க இப்படித்தான் கூப்பிடுவாங்க” என்று கூற,
“என்னோட அம்மா என் அப்பாவை 'மாமா' ன்னு தான் கூப்பிடுவாங்க” என்ற ஆதி தொடர்ந்து.
“இதோ பாரு மல்லி! தொழிலில் வளர்ந்து, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், பேசிக்கலி நான் ஒரு கிராமத்தான் தான்.
வீட்டுல அம்மா, அப்பா முன்னாலலாம் இந்தப் பேர் சொல்லி கூப்பிடுவதெல்லாம் சரியா வராது.
நானும் உன்னைவிட வயதில் கொஞ்சம் பெரியவன்தான். அதனால நீயும் உங்கம்மா, இல்லன்னா எங்கம்மா கூப்பிடுவதுபோல அழைத்துப் பழகு” என அவன் முடிக்க,
அப்பொழுதுதான், அவன் என்ன சொல்ல வருகிறான், என்று பல்பு எரிந்தது மல்லிக்கு.
“என்ன ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க தேவா. நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்; நீங்க கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” என அவள் எகிற.
“யாருக்கு? எனக்கா புரியல? இன்னும் உனக்குத்தான் என்னைப் பற்றி சரியா புரியல.
இன்னும் இரண்டே நாட்களில் கல்யாணத்தை வெச்சுட்டு பேசற பேச்சையா நீ பேசற.
ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாராகற வழியைப் பாரு. அதோட; முக்கியமா சந்தோஷமா எல்லா சடங்குகளிலும் கலந்துக்கணும்; வந்திருக்கும் சொந்தக்காரங்க முன்னாடி இப்படி அழுதுவடியக் கூடாது” என மிரட்டலாகவே சொன்னான் ஆதி.
அதற்கு மல்லி, “நீங்கதான் ஆதியாச்சே! என்ன வேணாலும் செய்வீங்க எப்படி வேணாலும் மிரட்டுவீங்க” என்றவள், “நீங்கத்தானே அந்த வீராவின் கையை உடைத்தது?” எனக் கேட்க,
'ஆமாம்! நான்தான்! பிறகு வேறு என்ன செஞ்சிருக்கணும்னு சொல்ற அடிக்காம திட்டாம குணமா சொல்லியிருக்கணுமா?” என்றான் ஆதி திமிராக.
சிரிப்ப